நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவது என் தலையாய பணியாய்க் கருதி..இதோ சிம்ரனுக்காக ஒரு Clerihew!

சின்ன இடையும்
சிக்கென்ற உடையும்
கடந்தகாலம்
சிம்ரனுக்கு..

எனக்குத் தெரியாதா? நான் சிம்ரனுக்கு எழுதினால் ஜோதிகாவுக்கு எழுது என்று அடுத்த comment போடுவீர்கள்..முந்தித் தருவது எந்தன் சிறப்பு!!

ஆதி முதல்
அந்தம் வரை
பாதி பயல் ஜொள்ளுவது
ஜோதிகா

யாருப்பா அது சினேகாவுக்கு எழுதச் சொல்றது? இனிமே நான் Clerihew பக்கம் தலை வச்சி படுத்தா என்னன்னு கேளுங்க!!



ஐய்யாயாயாயாயா!!

ஐம்பதாவது பதிவு!
[profile ல 45 காட்டினா நான் பொறுப்பில்லை..வேணும்னா எண்ணிப் பாத்துக்குங்கோ!! ஆமா!]

க்ளரிஹ¤ [Clerihew]

சென்ற வாரத்துக்கு முந்தின வார விகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில் க்ளரிஹ¤ [Clerihew!] என்ற ஒன்றை சுஜாதா அறிமுகப் படுத்தி இருந்தார்.

ஒரு க்ளரிஹ¤ என்பது எப்படி இருக்கு வேண்டுமென்றால்:

1. 4 வரி கவிதை
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்து
3. Rhyming ஆக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்!

அவ்வளவு தான்..எங்கே எழுதுங்கன்னுட்டார்! அவருக்கென்ன...

அவர் வாக்கு தான் நமக்கு வேத வாக்காச்சே..ஏற்கனவே 1 வரிக் கதைகள், Sudden Fiction கதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று பல அரிதாரங்களை பூசிக் கொண்டு சுற்றிய எனக்கு இது என்ன பெரிய விஷயமா...[ஆடாதடா..ஆடாதடா..மனிதா! ரொம்ப ஆடினென்னா அடங்கிடுவே மனிதா..!! ஆமா ஏன் இந்த பாட்டு இப்போ நினைவுக்கு வருதுன்னு புரியலையே!]

சரி ஒரு பிரபலமானவரை கேலி செய்ய வேண்டும், அவ்வளவு தானே..உடனே பத்மாசுரன் ஆகிவிட்டேன்..வரம் கொடுத்தவர் தலையிலேயே கையை வைத்தேன்!

விடிவு காலம் பிறக்காத
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

முடிஞ்சது க்ளரிஹ¤! சரி இதை நம்ம எங்கே விகடனுக்கெல்லாம் அனுப்புறது என்று நினைத்து தேசிகனாரை கனக்டினேன்.. [phone sir!] அவர்கிட்ட இதைப் பத்தி சொல்லி,
சார், நீங்க எப்படியும் சென்னை போய் சாரைப் பாப்பீங்கள்ல..இது சரியான க்ளரிஹ¤ ஆ என்று கேட்டு வாருங்கள் என்றேன்! அவரும் Big மனது பண்ணி சாரிடம் கேட்டு வந்தார். [சுஜாதாகிட்ட என் writing போயிருச்சாக்கும்! நான் லேசுபட்டவன் இல்லங்கானும்!!] சுஜாதா சார், "பரவாயில்லையே இந்த பிரதீப் பையன் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைய வச்சுட்டானேன்னு" சொல்லி, "என் நண்பர் தேசிகனின் நண்பர் பிரதீப் எழுதிய க்ளரிஹ¤ இது" என்று அடுத்த கற்றதும் பெற்றதுமில் வரும் என்று காலை, பகல், சாயந்திரம், இரவு என்று பல கனவு கண்டு கொண்டிருந்தேன்!

தேசிகன் சென்னையிலிருந்து திரும்பியதும், என்ன சார், என்னோட விஷயத்தை சார்கிட்ட சொன்னீங்களான்னு கேட்டேன்! அதுக்கு அவர், "சொன்னேன்..இது தப்புன்னு
சொல்லிட்டாரு..rhymingஆ இல்லையே..4 வரியும் rhyming [rhyming தமிழ் வார்த்தை என்னப்பா!??!] இருக்கனுமாம்" என்று சொல்லி இருக்கிறார். நான் துளி கவலை படனுமே..Never! எப்படியோ நம்ம எழுத்து சார் வரைக்கும் போயிருக்கேன்னு சந்தோஷப்பட்டேன்! [எனக்கென்னமோ, இந்த celebrities எல்லாம் வானத்துல இருந்து குதிச்சவாளோன்னு ஒரு சந்தேகம்!]

ரொம்ப ரொம்ப நன்றி தேசிகன்!!

சரி இப்போ அதை எப்படி சரி செய்வது?

கேட்டையே விளைவிக்கும்
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

[கேட்டு, ஓட்டு..எப்படி?..என்ன இது Software ல Programming Version மாதிரி upgrade பண்ணிட்டே இருக்கியேன்றேளா?]

சரி என்ன இப்போ rhyming ஆ இருக்கனும் அவ்வளவு தானே..current hot topic எது? அதை எடு..இதோ க்ளரிஹ¤!!

தொடாத இடம் தொட்டு
படாத பாடு படுகிறார்
மடாதிபதி
ஜெயந்திரர்!!

[அதுவா வருதுப்பா!]

அடுத்து ஒரு பெரிய பிரபலத்தைப் பற்றி..

நல்ல பெயர் எடுப்பான்
எல்லா புகழும் அடைவான்
இன்று யாருக்குமே தெரியாத
பிரதீப்

இதில் க்ளரிஹ¤ வின் இலக்கணம் பொருந்தியிருக்கிறதா என்று பார்ப்போம்.

1. 4 வரியில் இருக்கிறது
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்வது - இங்கு நான் என்னை பிரபலமானவனாய் காட்டியிருப்பதே கேலி செய்வதாகிறது!
3. ஓரளவுக்கு Rhymingஆகவும் இருக்கிறது..

என்ன இப்போ ஒத்துண்ட்டேளா?


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்றே ஆணுரை விளம்பரத்தை வெளியிடலாம் என்று நினைத்தேன்..

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை" பாட்டு ஞாபகத்திற்கு வருகிறது..ஆம்! நேற்று என் ப்ளாகில் மட்டும் ஏதோ Errorஆம். நாங்கள் எங்கள் Engineer களை கேட்டு விட்டு சொல்கிறோம் என்று Blogger.com காரர்கள் என்னை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாய் வெளியே அனுப்பி விட்டார்கள்!! அதனால் அதை இன்று பதிகிறேன்..இன்று என்னை உள்ளே விட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்!! நீங்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்தால் என்னை உள்ளே விட்டு விட்டார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்..

So, Start Camera! Action!!

இந்த விளம்பரத்திலும் வசனம் இல்லை..பின்னனி இசை மட்டும் தான்..

ஒரு வயதானவர் கவலையாய் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய மகன் அவரை கன்னாபின்னா என்று திட்டுகிறான்..[என்ன புரிஞ்சிருச்சா..முதல்ல கேளுங்கப்பா!!]அவர் கவலையாய் வீட்டை விட்டு வெளியே வருகிறார். தெருவில் மெல்ல நடந்து செல்கிறார்.

அவருடைய மகன் திட்டியது ஞாபகம் வருகிறது..[அவருடைய மகனின் முகம் close-up] வெறுத்து சிறிது தூரம் செல்கிறார்..தெருவின் அந்தப் பக்கத்துச் சுவரில் அந்த ஆணுரை விளம்பரம். அதையே ஏக்கமாய் பார்க்கிறார்!! அவருடைய மகன் திட்டியது ஞாபகம் வருகிறது..[அவருடைய மகனின் முகம் close-up]

இதை அன்னைக்கே உபயோகிச்சிருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலமை வந்துருக்குமா என்பது போல் பார்க்கிறார்!

அந்த சுவரின் விளம்பரத்தின் close-up!

இது கொஞ்சம் Naughty Advertisement வகையைச் சார்ந்தது..இந்த ஆணுரை உபயோகிச்சிருந்தா அந்த பையன் இருந்திருக்கவே மாட்டான்..ஆனா அவருக்கு வாரிசே இல்லாம போயிருக்குமே என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது..

இந்த விளம்பரத்துக்கு சொக்கலிங்க பாகவதர் தான் சரியானவர் என்று எனக்குப் படுகிறது..என்ன ப்ரயோஜனம்? இப்போ அவர் இல்லையே? பூர்ணம் விஸ்வநாதனைப் போட்டா? No No..இந்த மாதிரி விளம்பரத்துகெல்லாம் நம்ம காதல் மன்னன் தான் சரியா வருவாரு!! Yes!! My Choice is ஜெமினி கணேசன்!! எப்படி?

இப்போதைக்கு இது தான்..ஜுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!



SO, இந்த தடவை காரைப் பற்றிய விளம்பரங்கள்...

ஒரு புது கார் market க்கு வருது..அந்த கார் நிறுவனத்தினர் என் கையை காலா நினைச்சி [no..no..நீ ஏன் கைய காலா நினைக்கிறேன்னெல்லாம் கேட்க கூடாது!]ஒரு நல்ல விளம்பரம் பண்ணி குடுங்க சார்ன்றாங்க..நான் அப்படியே மேலே பாத்துட்டே சரி நாளைக்கு வாங்க பாக்கலாம்ன்றேன்!![இதெல்லாம் எனக்கே overa தெரியரதாலே..நேரா matterக்கு போவோமா?]

விளம்பரம் - I

ஷாட் 1:

இடம் : படுக்கை அறை
ஒரு கணவன் மனைவி. மனைவி தூங்கிக் கொண்டிருக்கிறாள். கணவன் டை மாட்டிக் கொண்டிருக்கிறான்.

ஷாட் 2:

இடம் : ஹால்
கணவன் shoe lase போட்டுக் கொண்டிருக்கிறான்.

ஷாட் 3:

கிளம்புகிறான். மனைவி தூக்கக் கலக்கத்துடன் வெளியே வருகிறாள். குழப்பத்துடன் அவனைப் பார்க்கிறாள்.

ஷாட் 4:

மனைவி : Where are you going?
கணவன் : To office.
[மனைவி புரியாமல் மணி பார்க்கிறாள். மணி 4:30 A M காட்டுகிறது]
கணவன் : [சிரித்துக் கொண்டே, கார் சாவியை தூக்கி போட்டுக் கொண்டே] ofcourse! after a longgggggggggggggggggg drive!!
மனைவி : அதிர்ச்சியுடன் அவனையே பார்க்கிறாள்.

ஷாட் 5:

தூரத்தில் கார் போகிறது..இன்னும் விடியவில்லை!


விளம்பரம் - II

ஷாட் 1:

ஒரு கணவன், மனைவி காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். மனைவி சுவாரஸ்யமாய் ஏதோ சொல்லிக் கொண்டே வருகிறாள்!! இங்கு எந்த வசனமும் இல்லை..பின்னனி இசை ஒலிக்கிறது..கணவன் காதலுடன் தன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் starring ஐ மென்மையாய் தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை! ஒரு பெருமிதம் தெரிகிறது. அதை ஒரு சிறு கர்வம் என்றும் சொல்லலாம்!!

ஷாட் 2:

காரை விட்டு இருவரும் இறங்கி வீட்டுக்குள் செல்கிறார்கள். கணவன் அந்த மயக்கம் கலையாமல் முன்னால் செல்கிறான்..மனைவி அவன் பின்னால் செல்கிறாள். கணவன் மனைவியிடம் திரும்பி..

கணவன் : நீ கார்ல இருந்த மாதிரி வீட்லேயும் இந்த மாதிரி அமைதியா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?

என்று கேட்டுக் கொண்டே அவளுடைய பதிலை கேட்காமல் தன் காரை நினைத்துக் கொண்டே அதே புன்னகையுடன் வீட்டுக்குள் செல்கிறான்!! மனைவி அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கிறாள்!!


அவ்வளவு தான்பா..நிறைய மனசுல இருக்கு..ஆனா இந்த வார்த்தை..வார்த்தை!! just kidding! இந்த 2 ரெண்டு தான் நான் யோசிச்ச பல concepts ல எனக்கு பிடிச்சது..பொறுக்கி எடுத்து போட்டேன்!!

ஆணுரை விளம்பரத்துக்கு ஒரு idea கிடைச்சுருக்கு..அடுத்த பதிவுல போட்றேன்!! அதுல இன்னும் நிறைய யோசிக்க வேண்டி இருக்கு!! வர்டா?!


எனக்கு எப்போதுமே நல்ல விளம்பரங்களில் ஈடுபாடு உண்டு! என்னைப் பொறுத்தவரை நல்ல விளம்பரங்கள் என்பது, அதைப் பார்த்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு சிறு புன்னகை, ஒரு புத்துணர்ச்சி, ஒரு சிறு சந்தோஷம், ஒரு புல்லரிப்பு ..[நான்: வானத்தை பாத்துகுட்டே.. நீங்க:சரி சரி]!!..சரியா சொல்லனும்னா ஒரு cuteness இருக்கனும்!

உதாரணத்துக்கு HUTCH விளம்பரம் போதும்..எதை அவங்க விக்கனுமோ, எதுக்காக விளம்பரம் பண்றாங்களோ அதை அவங்க அந்த விளம்பரத்தில் காட்டவே இல்லை..மிக அற்புதமான படைப்பு! இந்த மாதிரி விளம்பரங்களை உருவாக்குறவங்களைப் பத்தி நினைச்சி பாக்குறேன்..யோசிச்சுட்டே இருக்கனும்..எத்தனை புது விதமான சிந்தனைகளை விதைக்கனும்! இந்த software engineering ஐ விட நல்ல வேலையா இருக்கேன்னு தோனுது..[இக்கரைக்கு அக்கரை பச்சை!]

என்ன பையன் திடீர்னு advertisement ல தாவிட்டான்னு நீங்க நினைக்கிறீங்களா? சொல்றேன் சொல்றேன்!

அன்னைக்கு தெரியாத்தனமா என் கூட வேலை பார்ப்பவனிடம் இங்கே ad agencies எங்கே இருக்கு? உனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டேன்! அவன், அதுக்கு என்
friend ஒருத்தன் இருக்கான்..நான் அவன் address தர்றேன், ஆனா அதுக்கு முன்னாடி "பேனா" வுக்காக நீ ஒரு script எழுதுன்னுட்டான்..கடன்காரன்!! ஐய்யா அதுல என்னோட
திறமையை பாத்துட்டு அப்புறம் தான் address தருவாராம்!! [என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க?] புதுசா பள்ளிக்கூடத்துல சேர்றவன்கிட்ட ALGEBRA ல ஒரு கணக்கு போட
சொல்ற மாதிரி இருக்குப்பா...[தெரிஞ்சா நான் ஏண்டா schoolல சேர்றேன்!!] தவளை தன் வாயால் கெடும்ன மாதிரி வாயைக் கொடுத்து மாட்டிகிட்டாச்சு..நமக்கு இந்த மானம்
மாரியாத்தா..சூடு சூலாத்தா எல்லாம் இருக்கோல்லியோ? சரி கழுதை நம்ம யோசிச்சி பாப்போமேன்னு சவாலை ஏத்துகிட்டேன்!! [கட்டவிரல் காட்டி intervel எல்லாம் போடாம!!]

எதையும் மிகைப்படுத்திக் காட்டுவது தானே விளம்பரம்! இங்கே நான் யோசித்த சில..[சத்தியமாப்பா..]

IVth Std. A Section

Miss: சரி இன்னைக்கு பாடம் முடிஞ்சது!..இப்போ என்ன பண்ணலாம்?
[பசங்க ஆளாளுக்கு ஒரு விளையாட்டு பேரை சொல்றாங்க!]
ஒரு பையன்: [எழுந்து நின்று] Miss! Imposition எழுதலாம்!!
Miss: [Close up] அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்கிறாள்..
பையன்: [Close up] பெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டு தன்னுடைய impositionஐ தொடர்கிறான்!
[I will do my home work regularly என்று முடித்து அடுத்த lineக்குப் போகிறான்..தன்னுடைய பேனாவை பார்த்துக் கொண்டே...]
Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Make your mark!" இப்படி ஏதாவது..

Bank

1: ஒரு DD ஐ fill பண்ணிட்டு அதை சரி பார்த்துக் கொண்டிருக்கிறான்..
2: Sir! Pen please?
1: ஏன் சார், பாங்க் வந்தா பேனா கொண்டு வரனும்னு தெரியாதா?[முறைத்துக் கொண்டே கொடுக்கிறான்!]
2: எழுதி விட்டு ஒரு முறை அந்தப் பேனாவைப் பார்க்கிறான்..[Cut]
[அடுத்த முறை இருவரும் பாங்க்கில் சந்திக்கிறார்கள்..இருவரிடமும் பேனா!]
3: [2மவனிடம்] Sir! Pen please?
2: ஏன் சார், பாங்க் வந்தா பேனா கொண்டு வரனும்னு தெரியாதா?
[1மவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கொடுக்கிறான்]
3: எழுதி விட்டு ஒரு முறை அந்தப் பேனாவைப் பார்க்கிறான்..[Cut]

1 & 2 இருவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள்..3மவன் கடையில் அதே பேனாவை வாங்கி இவர்களைப் பார்த்து அசடு வழிகிறான்! இருவரும் தங்கள் பேனாவுடன் சிரித்துக்
கொள்கிறார்கள்...Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Your 6th Finger" இப்படி ஏதாவது..

Magic

[இதில் வசனமே இல்லை...நல்ல ஒரு ஜிங்கிள்ஸ் போடலாம்..]

அலுவலகம்

விளம்பரநாயகன் பேனாவை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்கிறான்..அவனுடைய boss தலையை ஆட்டி ஆட்டி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துப் போகிறார். அவனுக்கு
ஒன்றும் புரியாமல், இதற்கு முன் அவர் எப்படி வள் வள் என்று விழுவார் என்று நினைத்துப் பார்க்கிறான்..இன்று எப்படி இப்படி ஆனார் என்று யோசிக்கிறான்..[கையில்
பேனாவுடன்!][Cut]

வீடு

பேனாவை ஆட்டி ஆட்டி மனைவியிடம் ஏதோ சொல்கிறான்..அவள் தலையை தலையை ஆட்டுகிறாள்..மறுபடியும் அவளின் ருத்ரதாண்டவத்தை நினைத்துப் பார்க்கிறான்!
[கையில் பேனாவுடன்]

பேனாவை ஆட்டி ஆட்டி குழந்தையிடம் விளையாடுகிறான்..அது தலையை தலையை ஆட்டுகிறது..அது சதா எப்படி இவனிடம் அழுதது என்று நினைத்துப் பார்க்கிறான்!
[கையில் பேனாவுடன்]

ஒன்றும் புரியாமல் பேனாவை உற்றுப் பார்க்கிறான்!Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Start your magic"...இப்படி ஏதாவது..

இதை எல்லாம் அவன்கிட்ட சொன்னேன்..நல்லா இருக்குன்னான்..சரி இப்போ "காருக்காக" ஒரு விளம்பரம் செய்ன்னான்...

அது அடுத்த பதிவில்...



மடையா, மடையா..இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் எந்திருச்சுருக்கலாம்ல? இப்போ பாரு reserve பண்ண இவ்வளவு கூட்டம்..ஏதோ MNC Company ல இருக்கிறதாலே எப்போ போனாலும் ஒன்னும் சொல்ல மாட்றான்...என்னது? இதுவரைக்கும் இவ்வளவு கூட்டத்தை நம்ம பாத்ததே இல்லையே...வெளியே வரைக்கும் நிக்குது line...அப்பாடா இந்த தடவையாவது ஒரு பொண்ணு பக்கத்துல நிக்கலாமே, அது வரை சந்தோஷம்...[FREEZE!]

என் பேரு திலக்! எப்படியோ தட்டுத் தடுமாறி படிச்சி, கிழிச்சி இன்னைக்கு bangaloreல software engineer ஆயிட்டேன்! என் friend சென்னையிலிருந்து return வர என்னை train ticket reserve பண்ண சொன்னான்..அதான் இன்னைக்கு இங்கே..எனக்கு உலகத்துல என்னை அடுத்து பிடிச்சது...ஹிஹி..பொண்ணுங்க தான்! எத்தனை விதமான பெண்கள்! அவங்க என்ன செஞ்சாலும் அழகு தான்..என்ன சொல்றீங்க? இதோ ஒரு வழியா ஒரு பொண்ணு பின்னாடி நின்னாச்சு..[FREEZE OUT!!]

அடடா! form உள்ளே இருக்கே..இப்போ உள்ளே போனா இந்த இடம் போயிடும்..அப்புறம் இந்த பெரியவர் என் இடத்தை புடிச்சிருவாரு..NO WAY!! உள்ளே போனதும் form fill up பண்ணா போச்சு...என்ன பண்றா இவ, இந்த பொண்ணுங்களுக்கு cell ல நோன்ட்றதே வேலைப்பா...light blue chudi! இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கார் கூந்தலை விடுங்க..கூந்தலே இருக்கிறதில்லை..இதுக்கு பேரு தான் poney tail ஓ? ஓ! Specs ஆ? ஆனா எப்படி இருந்தாலும் பொண்ணுங்க..பொண்ணுங்க தான்..திரும்பி கூட பாக்கமாட்றாளே. ஆஹா..அந்த பொண்ணு சூப்பரா இருக்கே?! ஐய்யோ பின்னாடி போயி நின்னுட்டாளே, கொஞ்சம் lateஆ வந்திருக்கலாம்!! சே!! சரி கெடச்சதை வச்சி சந்தோஷப்படுவோம்!!

பாவம், நான் வச்சுருந்த bag அந்த பெரியவரை தொந்தரவு பண்ணியிருக்கு..முன்னாடி போட்டுகிட்டேன்! அவர் சிரிச்சார். வீணா அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரக்கூடாது ..! அதான் என் policy!

ஒரு வழியா கூட்டம் உள்ளே போச்சு! form கொண்டு வர போக, அந்த பெரியவர்கிட்ட எப்படி என்னோட இடத்தை பாத்துக்குங்கன்னு சொல்றதுக்கு english ல எப்படி சொல்றதுன்னு ஒரு தடவை சொல்லி பாத்துட்டு அவர்கிட்ட.. sir, can you please hold this place? let me get my form என்றேன். அவர் பதிலுக்கு தலையாட்டினார்னு நினைக்கிறேன்..மறந்துருச்சு!

form எடுத்துக் கொண்டு train timings பார்த்தால், எல்லாம் இங்கிருந்து கிளம்பும் train ஆக இருக்கிறது...எனக்கு chennailல இருந்து இங்கே வர்ற train தெரியனும். சரி முதல்ல போயி இடத்துல உட்கார்ந்து பக்கத்துல கேட்டுப்போம் என்று முடிவெடுத்தேன். [நான் form எடுத்தவுடன் எங்கள் மூவருக்கும் seat கிடைச்சுருச்சு]அந்த சாக்குல அவகிட்ட பேசுறதா plan..[புத்தி!] form fillup பண்ணிக் கொண்டே அவளுடைய formஐயும், அவள் formஐயும் [புரிஞ்சுச்சா?] கவனித்துக் கொண்டிருந்தேன். மாலதி ரகுராமன் என்று எழுதியிருந்தாள்! chennai க்கு போக fill பண்ணிக் கொண்டிருந்தாள் என்று ஞாபகம். நல்ல கலர்! கண்ணாடி போட்டிருந்தாலும் சிம்ரன் கடாட்சமாய் இல்லை என்றாலும் ஒரு homely look! எனக்கு OK ப்பா..[பசங்க எந்த ஒரு பொண்ணைப் பாத்தாலும் முதல்ல அவளை தன்னோட மனைவியாத் தான் நினைப்பாங்களா? இல்லை நான் தான் இப்படி இருக்கேனா?] சரி நான் என்னோட form fill பண்ணனுமே..வேண்டுமென்றே அந்த பெரியவரிடம் பேச்சைத் தொடங்கினேன்! [நமக்கு கொஞ்சம் பொண்ணுங்ககிட்ட starting trouble உண்டு!!]

நான் [அந்த பெரியவரிடம்] - sir, can you please tell me which train starts from chennai on this sunday night?
[அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் எனக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்..நம்ம மாலதி தான்..தோடா!]
மாலு [ஒரு செல்லம் தான்..] - u can come by this train! [என்று ஏதோ ஒரு train பேரை சொன்னாள்]
நான் - it starts from chennai @ night? right? [confirm பண்ணிக்கிறேனாம்? கள்ளன்டா நீ!]
மாலு - u want a train which starts from chennai @ night?
நான் - yes!
மாலு - ya. this starts @ 9:30 pm
நான் - thanks

அப்புறம் கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை..கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்லயா? அங்கே இங்கே பாத்துட்டு இருக்கும் போது, அங்கே reservation form தீந்து போயிருந்தது! எனக்கு தெரியும் அது counter ல போயி கேட்கனும்னு, சரி நம்ம போயி எடுத்து வைக்கலாமான்னு நினைச்சேன்..வேணாம், ரொம்ப build up பண்ண மாதிரி இருக்கும்னு விட்டுட்டேன்! அப்புறம் நானும் அந்தப் பெரியவர் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் அமைதி ஆனவுடன் மாலுவிடமிருந்து ஒரு கேள்வி!!

மாலு - Do you have any openings for freshers in your company? [என்னுடைய tagஐ காட்டி..]
[ரொம்ப நேரம் கேட்கலாமா, இல்லையா என்று அவள் தவித்தது போல் எனக்குத் தோன்றியது!!]
நான் - [over buildup யுடன்] Usually they take freshers in campus interviews. I dont have any idea about that.
மாலு - [பாவமாய்...]oh! ok..
நான் - R u searching? [அவ என்ன படிக்கிறான்னு தெரிஞ்சுக்கனும்ல?]
மாலு - No! Its for my friend. She is doing her BE in computers. She is in her last year.
நான் - What about you? [கேட்டுட்டாண்டா..]
மாலு - i am doing my medical
நான் - oh good! somebody is out of software engineer! i got bored of software engineers now. Every three person is software engineer in bangalore. hahaha[டேய்! இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை? அடங்குடா!!]


ஒரு டாக்டரை கட்டிகிட்டா நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது..

[இதற்குள் அந்தப் பெரியவருக்குப் பொருக்காமல்..]
அவர் - where r u from?
நான் - trichy
அவர் - oh! then do u know tamil then?
நான் - எனக்கு நல்லா தமிழ் தெரியும்! நான் தமிழ் தான்..[மூன்று தமிழர்கள் இவ்வளவு நேரம் english ல பேசியிருக்கோம்! கொடுமை..]
அவர் - திருச்சியில் எங்கே?
நான் - தில்லை நகர்.
அவர் - இங்கே என்ன பண்றே?
நான் - software engineer
அவர் - எங்கே?
நான் - IBM
அவர் - இப்போல்லாம் எல்லோரும் software ல தான் வேலை பாக்குறீங்க..இல்லையா?
நான் - [அவளையும் பார்த்து சிரித்துக் கொண்டே..]MCA, BE படிச்சவொன்னே நேரா bangalore தான்..bangalore is major target.
அவர் - nowadays call centers are in high boom..
[தமிழர்கள் என்று தெரிந்தும் அடிக்கடி english ல் தான் பேசுகிறோம்!]
நான் - ம்ம்..daily recruitement இருக்கு. நீங்க வந்தா கூட உங்களையும் எடுப்பான். [அவள் சிரிக்கிறாள்!! மழை!!]
அவர் - என்ன Qualification அதுக்கெல்லாம்?
நான் - +2 pass. that's it! [அவள் மறுபடியும் சிரிக்கிறாள்! மறுபடியும் மழை!!]
அவர் - இங்கே எங்க இருக்கீங்க?
நான் - ஜீவன் பீமா நகர்
அவர் - அட! நானும் அதுக்கு பக்கத்துல தான் இருக்கேன்..இந்த HAL இல்லை..

[நான் இல்லை என்பது போல் தலையாட்டினேன்! அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்! வயதாகிவிட்டால் பேச்சு ஒன்று தான் துணை போலும்!]

சிறிது நேரம் மழையே இல்லை..

அவர் - ஆமா, திருச்சியில மழை பெய்யுதா?
நான் - [ஆஹா..என்னடா இந்த கேள்வி வர்லையேன்னு நினைச்சேன்! ஒரு கூட்டமா தான்யா அலையுராங்க!]எங்கே சார், நல்லவங்க எல்லாம் இங்கே வந்துட்டோமா, அங்கே..மழையே இல்லை..[good timing! எனக்கே ரொம்ப புடிச்சது! ofcourse அங்கே மழை தான்!!]

அதுக்குள்ள முதல் row ல வந்துட்டோம்..


அந்தப் பெரியவர் கொஞ்சம் ஒதுங்கிக்கொண்டது போலத் தோன்றியது..நான் ஆரம்பித்தேன்..மாலு கூட தான்..இப்போ தான் பழகிட்டோமே..

நான் - இன்னைக்கு college இல்லையா?
மாலு - இல்லை..போகனும்! காலையில வந்தா free ஆ இருக்கும்னு வந்தேன்.
நான் - ஓஹோ..ஆமா இன்னைக்கு கூட்டம் ஜாஸ்தி. அப்புறம் அரை வைத்தியர் ஆயாச்சா? [அவள் முழிக்கிறாள்!]
நான் - 1000 பேரை கொன்னா அரை வைத்தியன்னு சொல்வாங்களே..அதான் கேட்டேன்!
மாலு - [சற்று யோசித்து] முக்கா வைத்தியன் ஆயாச்சு!
[ஒருவேளை எண்ணிப் பாத்துருப்பாளோ?]
நான் - நீங்க சென்னையா? [நதி மூலமும், ரிஷி மூலமும் தான் அறியக் கூடாதே தவிர..]
மாலு - சொந்த ஊரு சென்னை தான்..நான் இங்கே படிச்சிட்டு இருக்கேன்.
நான் - நான் ஜீவன் பீமா நகர்ல தான் இருக்கேன்! அந்த church பக்கத்துல..
மாலு - தெரியும்..நானும் அதுக்கு பக்கத்துல தான்..
[கவனிக்க, நான் பெரியவர்கிட்ட பேசும்போது கவனிச்சிருக்கா!]
நான் - அங்கே ஒரு hostel இருக்கே..[எங்கேன்னு தெரிஞ்சுக்கனும்லயா?]
மாலு - இல்லை..என் வீடு இங்கே தான்..அம்மா, அப்பா இங்கே settle ஆயிட்டாங்க..i was born here!
நான் - ஓஹோ..
மாலு - அப்பா, இங்கே HAL ல வேலை பாக்குறார்!
[நான் கேட்கவே இல்லையே!]
நான் - OK....

ticket reserve செய்ய எழுந்தோம்..மூவரும்!

என்னுடையது சீக்கிரம் முடிந்தது..ticket ஐ திருப்பி திருப்பி என்ன பார்க்கிறேன் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்..அவளுடன் சேர்ந்து போகலாம்னு தான்..அங்கே முடியிற மாதிரி இல்லை...

நான் - [மனமில்லாமல்!] Hey! see you pa!
மாலு - Bye!

ஐயோ! அவளுடைய friend க்கு வேலை வாங்கித் தருவதாய் அவள் mobile no. வாங்கியிருக்கலாமோ? சே!! waste டா நீ..நான் நின்று நின்று மெல்ல மெல்ல படியில்
இறங்கிக் கொண்டிருந்தேன்..அவள் கூப்பிடுவாள் என்ற நம்பிக்கையில்...இது சினிமா இல்லையே?!


climax

ஜார்ஜ்
வழக்கம்போல் எல்லா இளவட்டப் பசங்களையும், கூட்டம் நிறைந்த ஜனசந்தடிகளில் தன்னுடைய வெறுப்பை உமிழ்ந்தும், ஆங்கிலத்தில் [USELESS FELLOWS!!] எல்லோரையும் திட்டிக் கொண்டும், அந்த எல்லாக் கூட்டத்திலும் அங்கே இருந்த ஒருவரிடம் "அந்த ஊரில் மழை எப்படி?" என்றும் விசாரித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

மாலு
பொறுப்பாய் முழு வைத்தியர் ஆவதற்கு ஒவ்வொருவரையாய் எண்ணி எண்ணி கொன்று கொண்டிருக்கிறாள்! எப்போதாவது அந்தப் பையனின் ஞாபகம் அவளுக்கு வந்து தானாக
சிரித்துக் கொள்வதாய் நம்புவோமாக..

திலக்
அவளுக்குத் தான் நான் எங்கே வேலை பார்க்கிறேன் என்று தெரியுமே! எப்படியாவது நம்மைத் தேடி வருவாள் என்றும், தன் நண்பர்கள் HAL, HAL என்று அவனை ஓட்ட..அவன் bangalore medical colleges என்று google த்துக் கொண்டிருக்கிறான்..


Railway Reservation Center...அய்யோ! அதுக்குள்ள இவ்வளவு பெரிய lineஆ என்று நொந்தபடி வேறு வழியில்லாமல் அந்த lineல் நின்றேன். என்ன இவளைப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்றாளேன்னு நினைக்கிறீங்களா? sorry! ஒரு பொண்ணு தன்னைப் பத்தின விஷயத்தை அநாவசியமா யாருக்கும் சொல்லக் கூடாது! புரியுதா? ஒழுங்கா நான் சொல்றதைக் கேளுங்க!

கொஞ்ச நேரத்துல என் பின்னாடி ஒரு பையன் நின்னுட்டு இருந்தான்! சின்ன பையனா இருந்தான்! ஆனா சரியா பாக்கலை..நான் ரொம்ப நல்ல பொண்ணாக்கும்! ஒருவழியாய் கூட்டம் நகர்ந்து நகர்ந்து உட்கார இடம் கிடைத்தது..எனக்கு, என் பின்னால் நின்ற அந்தப் பையனுக்கு அப்புறம் அவர் பின்னால் இருந்த ஒரு old manக்கு!! அவன் உட்கார்ந்து அப்போது தான் கொண்டு வந்திருந்த reservation formஐ fill பண்ணிக் கொண்டிருந்தான்! திரும்பி திரும்பி அந்த train timings board ஐ பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவன் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது. சின்ன பையனாய் தெரிந்தான். பார்க்க கொஞ்சம் லட்சணமாய் இருந்தான்! ஒரு பெண் பக்கத்தில் இருக்கிறாள் என்ற உணர்வே இல்லாமல் அவன் இருப்பது போல் எனக்குத் தோன்றியது. பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டானோ?

அவன் [அந்த old man யிடம்] - sir, can you please tell me which train starts from chennai on this sunday night?
[அவர் முழிப்பதை பார்த்த நான்..]
நான் - u can come by this train என்று எனக்குத் தெரிந்த ஒரு train பேரை சொல்லி வைத்தேன்.
அவன் - it starts from chennai @ night? right?
நான் - u want a train which starts from chennai @ night?
அவன் - yes!
நான் - ya, this starts @ 9:30 pm.
அவன் - thanks!
அவ்வளவு தான்..அதற்குப் பிறகு அவன் பேசவே இல்லை.. இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா? அவன் கழுத்தில் ஒரு பெரிய software company யின் tag தொங்கிக் கொண்டிருந்தது என் கண்ணை ரொம்ப நேரமாய் உறுத்திக் கொண்டிருந்தது! அவளுக்காக, இவனோட officeல ஏதாவது opening இருக்கான்னு கேக்கலாமா என்று நினைத்தேன். எதுக்கு இதெல்லாம் நமக்கு, வழியிறான்னு நினைச்சுப்பான் என்று சும்மா இருந்தேன்! அவன் அவரிடம் [அதான் அந்த old man!] ஏதோ பேசிக் கொண்டிருந்தான்! எனக்கும் bore அடித்தது. அதான் பையன் ரொம்ப படுத்த மாட்றானே, கேட்டுப் பாக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன்!

நான் - Do you have any openings for freshers in your company?
அவன் - Usually they take freshers in campus interviews. I dont have any idea about that.
நான் - oh! ok..
அவன் - R u searching?
நான் - No! Its for my friend. she is doing her BE in computers. She is in her last year.
அவன் - oh! i c.
அவன் - What about you?
[அட பரவாயில்லையே பையன் கேள்வி எல்லாம் கேக்குறான்! என்று நினைத்துக் கொண்டு..]
நான் - i am doing my medical!
அவன் - oh good! somebody is out of software engineering! i got bored of software engineers now. Every three person is software engineer in bangalore.
[சிரிக்கிறான்..நல்லாவே இருக்கான்!! நானும் சிரிக்கிறேன்..]

கொஞ்ச நேரம் கழித்து அவர்..

அவர் - where are you from?
அவன் - trichy.
[அடப்பாவி..தமிழ்நாடா இவன்?]
அவர் - do you know tamil then?
அவன் - எனக்கு நல்லா தமிழ் தெரியும்!! நான் தமிழ் தான்..
[ofcourse, he will be knowing..this old man..oouff!]
அவர் - திருச்சியில் எங்கே?
அவன் - தில்லை நகர்.
அவர் - இங்கே என்ன பண்றே?
அவன் - software engineer
அவர் - எங்கே?
அவன் - IBM
அவர் - இப்போல்லாம் எல்லாரும் software ல தான் வேலை பாக்குறீங்க..இல்லையா?
அவன் - MCA, BE படிச்சவொன்னே நேரா bangalore தான்..bangalore is major target.
[அவன் என்னைப் பார்த்து சிரிக்கிறான்..நானும் சிரித்தேன்!! நம்ம பையன்! ;)]
அவர் - nowadays callcenters are in high boom.
அவன் - ம்ம்..daily recruitment இருக்கு, நீங்க வந்தா கூட உங்களையும் எடுப்பான்.
[நான் சிரித்தேன்!]
அவர் - என்ன Qualification அதுக்கெல்லாம்?
அவன் - +2 pass. that's it!!
[இதற்கும் சிரித்தேன்..அவன் பேசுவது பல காலமாய் பழகும் ஒருவரிடம் சரளமாய் பேசுவது போலிருந்தது..யாரோ ஒரு புது மனிதர் என்ற நினைப்பே அவனுக்கு இல்லை..]

அவர் - இங்கே எங்க இருக்கீங்க?
அவன் - ஜீவன் பீமா நகர்
அவர் - அட! நானும் அதுக்கு பக்கத்துல தான் இருக்கேன்..இந்த HAL இல்லை..
[இதற்குள் மேல் நான் அவர் பேச்சைக் கேட்கவில்லை!]

அவர் - ஆமா, திருச்சியில மழை பெய்யுதா?
[Is this a ready-made question of all old men??!!]
அவன் - எங்கே சார், நல்லவங்க எல்லாம் இங்கே வந்துட்டோமா, அங்கே, மழையே இல்லை..
[wow! what a timing!! கலக்குறான்..அவருக்குப் புரியலை..நான் கொஞ்சம் கூடவே சிரிச்சுட்டேன்னு நினைக்கிறேன்!]

ஒரு வழியாய் முதல் row ல் வந்து விட்டோம்.

அவன் - so, இன்னைக்கு college இல்லையா?
நான் - இல்லை, போகனும்! காலையில வந்தா free ஆ இருக்கும்னு வந்தேன்.
அவன் - அப்போ அரை வைத்தியர் ஆயாச்சா?
[ஐய்யோ, அவன் தமிழ் கொள்ளை அழகு!]
[நான் - முழிக்கிறேன்..]
அவன் - 1000 பேரை கொன்னா அரை வைத்தியன்னு சொல்வாங்களே! அதான் கேட்டேன்!
[சிரிக்கிறான்!]
நான் - [சிரித்துக் கொண்டே...] முக்கா வைத்தியர் ஆயாச்சு!
[பாவம் பயந்து விட்டான்..இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை]
அவன் - நீங்க சென்னையா?
நான் - சொந்த ஊரு சென்னை தான்..ஆனா அம்மா, அப்பா இங்கே settle ஆயிட்டாங்க..i was born here!
அவன் - oh..
நான் - அப்பா, இங்கே HAL ல வேலை பார்க்கிறார்!!
[ஐய்யய்யோ, இதெல்லாம் ஏன் இவன்கிட்ட சொல்றேன்..உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா?]
அவன் - ok..

மூன்று counter கள் காலி ஆனதும் மூன்று பேரும் எழுந்தோம். அவனுக்கு சீக்கிரம் முடிந்து விட்டது..
அவன் - Hey! see you pa!
நான் - Bye!

[அவன் போறான்...]


ஆய்த எழுத்தின் தாக்கத்தில் ஒரு கதை சொல்ல முயல்கிறேன்...

இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது..oh i am sorry..நீங்க கதை கேக்குறீங்களோ, என்னை introduce பண்ணிக்கிறேன்..என் பெயர் ஜார்ஜ். பெங்களூரில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவன். என்னோட பிள்ளங்களுக்காக train ticket reserve பண்ண இங்கே வந்திருக்கேன்..சரி கதைக்கு போலாம்...நான் என்ன சொல்லிட்டு இருந்தேன், ஆமா, இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது! காலையில் வந்தால் காலியாக இருக்கும், easyயா reserve பண்ணிட்டு போயிடலாம்னு நினச்சேன், ஆனா எப்படியோ கிளம்ப 9:00 மணி ஆயிடுச்சு..வெளியே வரைக்கும் Q நிக்குதே..சரி வேற வழி, இந்தப் பையன் பின்னாடி நிக்க வேண்டியது தான்..

ஒரு பெரிய bag தொங்குது அவன் பின்னாலே, அவன் அங்கே இங்கே ஆடும் போது எனக்கு பட்டது..நான் கையாலே கொஞ்சம் தடுத்தேன், பின்னால் திரும்பி என்னைப் பார்த்து sorry சொல்லிக் கொண்டே bagஐ முன்னாடி போட்டுக் கொள்கிறான்..சின்ன பையனா இருக்கான்..இங்கே MCA படிச்சுட்ருப்பான், வேற என்ன படிக்கிறாங்க இந்த காலத்து பசங்க..எல்லாரும் computer ஐ கட்டிட்டு அழறான்! ஆமா, என்னது? இந்த பையன் கையில form யே இல்லயே..ஒருவேளை இவன் friend உள்ளே இருப்பானோ? கொஞ்சம் உள்ளே சென்றவுடன் அவன் என்னிடம் திரும்பி, Sir, can you please hold this place? let me get my form என்றான். ஒஹோ முதல்ல இடத்தை புடிச்சி வச்சுட்டானா, புத்திசாலி பசங்க தான் என்று நினைத்துக் கொண்டே தலை ஆட்டி வைத்தேன். அவன் வருவதற்கும் எங்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைக்க சரியாக இருந்தது.

form fillup பண்ணிக் கொண்டிருந்தவன் திடீரென்று என்னிடம் sir, can you please tell me which train starts from chennai on this sunday night? நான் அவனிடம் தெளிவாய் கேட்டுத் தெரிந்து கொள்வதற்குள் அந்தப் பையனுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெண் (குத்துமதிப்பாய் 20 வயதுக்குள் இருக்கும்), u can come in this train என்று ஒரு train பேரை சொன்னாள்! அவன் ஒரு வழியாய் fill செய்து முடித்தான். இந்தப் பையன் பரவாயில்லை, அந்த பொண்ணு சொன்ன train பேரை எழுதிட்டு அவளுக்கு thanks சொன்னதோட சரி, அவகிட்ட பேசலை..எப்படா பொண்ணுங்க பேசுவாங்க, எப்படி bracket போடலாம் என்று இருப்பவர்கள் மத்தியில் இவன் கொஞ்சம் Gentle தான். அவனிடம் மெதுவா பேச்சு கொடுத்தேன், வயசாயிடுச்சுல்ல..சும்மா இருக்க முடியாது...

இவ்வளவு கூட்டம் இருக்கேன்னு அங்கலாய்த்தேன், அவன் அதற்கு coolஆ இல்லை, சீக்கிரம் முடிஞ்சுடும் இங்கே service நல்லா இருக்கும்..என்றான். கொஞ்சம் விட்டவுடன் அந்தப் பெண் அந்தப் பையனை பிடித்துக் கொண்டாள்..ஏதேதோ அவனைக் கேட்டாள், இவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து where are you from என்றேன், அதற்கு அவன் திருச்சி என்றான்...do you know tamil then? என்றேன்..எனக்கு நல்லா தமிழ் தெரியும் என்றான். என்னால் நம்ப முடியவில்லை. சில நேரங்களில் நம்முடைய ஆட்களை நமக்கு அடையாளம் தெரியாமல் போய் விடுகிறது. அவனுடைய வெள்ளைத் தோலைப் பார்த்து நான் ஏமாந்து விட்டேன், பிராமணனாய் இருப்பானோ என்னவோ..

நான் - திருச்சியில் எங்கே?
அவன் - தில்லை நகர்.
நான் - இங்கே என்ன பண்றே?
அவன் - software engineer
நான் - எங்கே?
அவன் - IBM
நான் - இப்போல்லாம் எல்லாரும் software ல தான் வேலை பாக்குறீங்க..இல்லையா?
அவன் - MCA, BE படிச்சவொன்னே நேரா bangalore தான்..bangalore is major target. [அவளைப் பார்த்து சிரிக்கிறான், இது என்ன அவளும் சிரிக்கிறாள்!!]
நான் - nowadays callcenters are in high boom.
அவன் - ம்ம்..daily recruitment இருக்கு, நீங்க வந்தா கூட உங்களையும் எடுப்பான். [அவள் சிரிக்கிறாள்!]
நான் - என்ன Qualification அதுக்கெல்லாம்?
அவன் - +2 pass. that's it!! [அட, இதுக்கும் ஒரு சிரிப்பா?]

கொஞ்சம் மெளனம்....அவரவர் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்...

நான் - ஆமா, திருச்சியில மழை பெய்யுதா? [Land Mark question! if you don't know what to talk? you can always start with this!!]அவன் - எங்கே சார், நல்லவங்க எல்லாம் இங்கே வந்துட்டோமா, மழையே இல்லை..[எனக்கு புரியலை..இதற்கும் ஏன் அவள் சிரிக்கிறாள்? இந்த முறை கொஞ்சம் கூட]

நாங்கள் முதல் rowல் இருந்தோம். அவன் ஏதோ அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான். இந்தப் பெண் குழந்தைகளுக்கு விவஸ்தயே இல்லை..எதுக்கெடுத்தாலும் கெக்கே புக்கேன்னு சிரிக்க வேண்டியது..அப்புறம் அவன் கண்ணடிக்கிறான், பின்னாடி வர்றான்..கையைப் பிடிச்சி இழுக்கிறான் என்பது.. சரி மிச்சத்தை அப்புறம் கேக்கலாம்..நான் டிச்கெட் reserve பண்ணிக்கிறேன்..

3 பேரும் 3 counter ல் நுழைந்தோம்..அவன் reserve செய்து விட்டு அவளிடம் மட்டும் see you pa! என்று சொல்லிக் கொண்டு என்னைப் பார்க்காமல் போகிறான்!!அவளும் சிரித்து வழி அனுப்புகிறாள்..[அதற்குள் சினேகமா? கலிகாலம்]


இரவு விளக்கணைத்து
போர்த்திக் கொள்ளும் போது
ஒரு நாளும்,
ஒரே முறையில்
கால்கள் போர்வைக்குள்
போவதில்லை...

மழைக்கு ஒதுங்கினோம்

மழைக்கு ஒதுங்கிய
உன்னை ரசித்துக் கொண்டிருக்கிறேன்!

இதோ நின்று விடுவேன்
என்று என்னை அழவைத்துக் கொண்டும்

இப்போதைக்கு நிற்க மாட்டேன்
என்று உன்னை எரிச்சலூட்டிக் கொண்டும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை!

2 நாட்கள் சென்னை சென்று குதியாட்டம் போட்டு வந்த களைப்புடன் பதியும் பதிவு இது! என் நண்பனின் தங்கை கல்யாணத்திற்கு எங்கள் சென்னை நண்பர்களை அழைக்கச் செல்கிறோம் என்ற ஜமுக்காளத்தில் i mean போர்வையில் இங்கிருந்து ஒரு 9 பேர் சென்றோம்.. சரி இனி over to சென்னை!

எனக்கும் சென்னைக்கும் ஏதோ ஜென்மாந்திர தொடர்பு இருக்கிறதென்று நினைக்கிறேன்! அல்லது, சினிமாவை எனக்குப் பிடிப்பதால் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கிறதோ என்னவோ! சென்னையில் இருக்கும் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தும் நான் பொறாமைப் படுவதுண்டு..அந்தப் பிச்சைக்காரன் கேட்டால் என்னை கயிதே, கஸ்மாலம், சாவுகிராக்கி என்று திட்டிக் கொண்டே தன் திருவோட்டாலேயே அடிப்பான் என்று நினைக்கிறேன்! [தயவு செய்து இதை யாரும் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!]

முதல் நாள் MGM, இரண்டாம் நாள் மகாபலிபுரம்..அவ்வளவு தான் எங்கள் plan..அந்த EAST COAST ROAD ல் கட்டிப்பிடித்து பைக்கில் செல்லும் ஜோடிகளைப் பார்க்கும் போது..ஹ¤ஹ¤ஹ¤ஹ¤ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! வேறென்ன பெருமூச்சு தான்..

1. நாங்கள் தங்கி இருந்தது திருவல்லிக்கேணி, சிறிய பெரிய தெரு [இது தான் தெருவின் பெயர்]வில் ஒரு லாட்ஜா, மேன்ஷனா இல்லை இல்லை ஒரு ஸ்டே ஹோம்..நன்றாகவே இருந்தது..குழாய் திறந்தால் கோபமாய் சீற்றத்துடன் தண்ணீரார் பாய்ந்தார். [சென்னையில் தண்ணிப் பஞ்சம்னு யாருப்பா சொல்றது..]தெருவில் இருந்து வெளியே வந்தால் ஒரு பெரிய பஜார். வலது பக்கம் நேராய் போனால் அண்ணா சாலை, இடது பக்கம் நேராய் போனால் மெரினா கடற்கரை! ஆஹா..

2. சென்னையில் ஏழை பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமுமின்றி செயல்படும் ஒரே ஆள் நம்ம சூரியன் சார் தான்! [நிலா மேடம் இல்லையா..அதான் சூரியன் சார்!] பிரிக்கிறார்! சார், சார் நான் பெங்களுரிலிருந்து ஊர் சுத்திப் பாக்க வந்துருக்கேன் சார், என்னை மட்டும் விட்ருங்க சார் என்று நாங்கள் கெஞ்சினாலும் அவர் காதில் போட்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லை! software engineer கள் அத்தனை பேரும் வியர்வை சொட்ட சொட்ட ஊர் சுற்றிப் பார்த்தோம்! என்னோட சென்னை நண்பன் எங்களுக்காக AC Tempo ஏற்பாடு செய்திருந்தான்!![எப்போ இருந்து நமக்கு வருது இந்தத் திமிரெல்லாம்?]

3. சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தவைகள்:
1. சினிமாவும், சினிமா சார்ந்த இடங்களும்.[ஹிஹி..புத்தி!]
2. விசாலமான சாலைகள்
3. எப்போதும் எங்கேயோ ஓடிக் கொண்டே இருக்கும் துறுதுறுப்பான மக்கள்[அப்படி எங்கே சார் போறீங்க?]
4. ஒவ்வொரு fly over லும் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான HORDINGS! [ப்ரியாமணி கொள்ளை அழுகு!]
5. இப்போது FM Radio! 4 to 5 FM radio இருக்கிறது! [இரவு 10 மணிக்கு "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" பாட்டு ஒலிக்கிறது!!!]
6. மிக முக்கியமாக பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடா! [கடல் இருந்தாலே அந்த ஊர் அழகு தான் இல்ல?]

4. இந்த முறை அண்ணா சாலை பக்கம் போகாததால் புதுப் படங்களின் விசாலமான கட் அவுட்களை பார்க்க முடியவில்லை..4 வருடத்திற்கு முன் project தேடி அலைந்து கொண்டிருந்த போது நண்பர்கள் அண்ணா சாலையின் ஒரு கம்பெனி விடாமல் ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் அங்கு வைத்திருக்கும் கட் அவுட்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பேன்! [எப்படி project கிடைக்கும் சொல்லுங்க?]

5. சென்னையைப் பார்த்தால் இந்தியாவின் பாதி நரிக்குறவர்கள், பிச்சைக்காரர்கள் இங்கு தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது! இங்கு நாம் சொந்த வீடு கட்ட யோசித்துக் கொண்டிருக்கிறோம், அங்கு பலருக்கு வாடகை வீடு கூட இல்லை..ஒரு கூடாரம் கூட இல்லாமல் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடக்கிறார்கள்! மறுநாள் வழக்கம் போல் எங்களுக்கு விடிந்து விட்டது..ஆனால் இவர்களுக்கு என்று விடியுமோ தெரியவில்லை!!

6. சென்னை சென்று கடலில் கால் நனைக்காமல் வருபவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று வள்ளுவர் ஒரு குறளில் சொல்கிறார்! [முழிக்காதீர்கள், துரதிர்ஷ்டவசமாய் அந்தக் குறள் நமக்கு கிடைக்கவில்லை! காலவெள்ளத்தில் அது அழிந்து விட்டதாக்கும்!!] அதனால் மகாபல்லிபுரம் சென்று கால் நனைக்க முயன்று உடல் முழுதும் நனைந்து திரும்பினோம்! [இயற்கை அன்னை கடலென்னும் சாம்பாரில் உப்பை சற்று அளவுக்கதிமாகவே போட்டு விட்டாள்! கவிதெ, கவிதெ!!]

7. மகாபலிபுரம் நான் திரைப்படங்களில் பார்த்த மாதிரி இல்லை. நான் என் கண்களின் வழி காண்பதை விட என் காமெரா கண்ணின் வழியே நிறைய பார்த்தேன்..அது கழுவி வந்தவுடன் தான் தெரியும்!! கல்லைக் குடைந்து குடைந்து மிக அற்புதமாய் பல சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள்! இளவரசியாரைப் போல எனக்கு அதன் வரலாறு தெரியவில்லை..கல்வெட்டுக்கள் ஒன்றும் கண்ணில் படவில்லை..அதைத் தொடாதீர்கள், இதை அசுத்தப்படாதீர்கள் போன்றவைகளைத் தவிர இதை யார் கட்டினார்கள், இதன் சிறப்பு என்ன ஒன்றும் இல்லை..கைடுகள் தங்களுக்குத் தெரிந்த கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

இன்று கணினியின் முன் உட்கார்ந்து நான் ஏதோ தட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மனம் வங்காள விரிகுடாவில் அலையாடிக் கொண்டிருக்கிறது...


வருடம் 2178. நியான் மாதம். காலை 8 மணி. வானத்தில், பறக்கும் காரில் signalக்காக காத்திருக்கும்போது ஜேஸ்145 ஜுரி146 யிடம் "நான் என் மனசை தொறந்து சொல்லிட்டேன்! அவ மனசுல என்ன இருக்குன்னு தான் புரியலை!" என்றான்!! signal சிவப்பையே காட்டிக் கொண்டிருந்தது!!

மேலே சொல்லப் பட்டிருப்பது ஒரு விஞ்ஞான ஒரு வரிக் கதை என்பது வருடம், மாதத்தின் பெயர் கொண்டு உங்களுக்குப் புரிந்திருக்கும்! ஆனால் இதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்குப் புரிகிறது! உங்களுக்கு என்ன புரிஞ்சதுன்னு பின்னூட்டமிடுங்கள்!

இப்போ நீங்க comment கொடுத்து தானே ஆகனும்! இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க!!

மூளைக்கு ரொம்ப வேலை கொடுத்து பாத்துட்டேன்! ஹ¤ஹ¤ம்..சார் கண்டுக்கவே மாட்றார்! மூளை சார், மூளை சார் எழுதி ஒரு வாரத்துக்கு மேலே ஆச்சு சார், என்னோட ரசிகர்களுக்கெல்லாம் என்னோட ப்ளாக் படிக்காம [இதையெல்லாம் கண்டிச்சி திட்றவங்க கமெண்ட்ஸ்ல போடாம எனக்கு தனியா மெயில் அனுப்பும்படி இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்!] சோறு தண்ணி இறங்காது சார்..இப்படி என்னன்னவோ சொல்லி பாத்துட்டேன்! நல்லா அடிச்சி போட்ட மாதிரி படுத்துருக்காரு! இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்த வாரம் என்னால எதுவும் புதுசா எழுத முடியலை..[யாருய்யா அங்கே கை கொட்டி சிரிக்கிறது?]

அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!
நம்ம ஆள் இப்படி சருக்கிட்டாரே என்று நினைப்பவர்க்கு ஒரு நல்ல செய்தி!!

புதுசா ஒன்னும் எழுதலையே தவிர, பழசான ஒன்னை புதுசா காப்பி அடிச்சி வச்சிருக்கேன்! பாரதியோட "வீணையடி நீ எனக்கு" பாட்டு..இது ரொம்ப ஈஸியா இருக்கே..நம்மளும் எழுதலாமேன்னு எழுதி பாத்தேன்! நிறைய எழுதலாம்னு நினச்சேன்..ஒன்னும் வர்லை! இது எப்பவோ எழுதுனது..[அதான் உங்களுக்குத் தெரியுமே, இந்த வாரம் மூளை சார் கோமால போயிட்டாருன்னு?] இதுல ஒரு basic concept உனக்கு அவ ஏதாவதா இருக்கனும், நீ அவளுக்கு ஏதாவதா இருக்கனும்! that's it...கவிதை ரெடி!!

அகரமடி நீ எனக்கு
சூடும் ஆரமடி நானுனக்கு

நிலவடி நீ எனக்கு
நீளும் இரவடி நானுக்கு

காமமடி நீ எனக்கு
கொல்லும் காதலடி நானுனக்கு

மழையடி நீ எனக்கு
மண்னின் வாசமடி நானுனக்கு

வித்தையடி நீ எனக்கு
வீழும் வேட்கையடி நானுனக்கு

அன்புச் சின்னமடி நீ எனக்கு
ஆசை முத்தமடி நானுனக்கு

வானமடி நீ எனக்கு
சுவாசமடி நானுனக்கு

எங்கே யாரையும் காணோம்?


எச்சரிக்கை: உங்களுக்குத் தலை சுத்தினா நான் பொருப்பல்ல!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன். அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்! எவ்வளவு பெரிய
கூட்டத்திலும் தான் தனித்தன்மை வாய்ந்தவன் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். சில சமயம் அவன் கிருக்கனோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். அப்படி ஒரேடியாய் நாம் முடிவு கட்டி விடவும் முடியாது! உங்களுக்கு எப்படி உணர்த்துவது என்று எனக்குப் புரியவில்லை! சரி அவன் செய்த சில எதிர்பாராத செயல்களை சொன்னால் உங்களுக்கு ஓரளவுக்கு புரியலாம்!

பஸ்ஸில் சென்று கொண்டிருப்பான்! திடீரென்று முன்னே இருப்பவரைக் கூப்பிட்டு ஸாரி சொல்வான். அவர் புரியாமல் விழிப்பார்! இவன் ஜன்னலை நோக்க ஆரம்பிப்பான்! அவர் திரும்பியதும் மறுபடியும் அவரை அழைத்து ஸாரி சொல்வான்! அவர் எதுக்குப்பா ஸாரி என்று பொறுமையிழந்து கேட்பார். அதற்கு அவன் இல்லை சார், உங்களுக்கு என்னை தெரியாது..ஆனா எனக்கு உங்களை நல்லாத் தெரியும். உங்களுக்கே தெரியாம நான் ஒரு தப்பு பண்ணிட்டு இருக்கேன்! எனக்கு அது தப்புன்னு தெரிஞ்சும் பண்றேன்! ஆனா என்னால பண்ணாம இருக்க முடியலை. நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க சார் என்பான். அவர்
பையைத் தடவி தன் பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். சே! சே! அந்த மாதிரி சீப்பான தப்பு இல்லை சார், நல்லா யோசிச்சு பாத்து உங்களுக்கு ஞாபகம் வர்றதுக்குள்ள நான் இறங்கிக்கிறேன் சார் என்று சொல்லி அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வான்! அவர் பாவம் தன் பெண்ணை லவ் பண்றானோ ரேஞ்சுக்கு யோசித்து பாவம் மண்டை காய்ந்து கொண்டிருப்பார்!

இப்படியே அவன் வேறொருவரிடம் பஸ்ஸில் ஸாரி கேட்டுக்கொண்டே இருந்ததில் வெறுத்துப் போய் அவர் சரிப்பா மன்னிச்சி விட்டுட்டேன். போதுமா என்றார். அதற்கு இவன் ஏன் சார் நான் தான் எந்தத் தப்பும் செய்யலையே, நீங்க எதுக்கு என்னை மன்னிக்கனும் என்று கேட்பான்! இப்படி படுத்துரதுக்குன்னே அந்த மாதிரி நோஞ்சான் ஆசாமிகளையே புடிப்பான்! பாவம் அவர்கள்...

இன்னொரு கொடுமையான விஷயம் பஸ்ஸில் யாராவது தூங்கிக் கொண்டே வந்தால் போதும், அவர்களை எழுப்பி ஏன் சார் நீங்க லாஸ்ட் ஸ்டாப்ல இறங்கப் போறீங்களா என்று கேட்பான்! ஆமா ஏன் கேட்குறீங்கன்னு அவர் கேட்டா, இல்லை எனக்கு உட்கார இடம் கிடைக்காதே நான் அடுத்த சீட்டுக்குப் போறேன்! என்று சொல்லி விட்டு அடுத்த சீட்டுக்கு போய் விடுவான், அவர் மறுபடியும் தூங்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் தட்டி எழுப்பி "தாங்க்ஸ் சார்" என்பான்! அதுக்கப்புறம் அவர் தூங்குவார்னு நினைக்கிறீங்க?

ரோட்டில் போகும் முன்பின் பார்க்காத பெண்ணிடம் உங்க பேர் என்ன என்று ஆரம்பிப்பான். அது உங்களுக்கு எதுக்குன்னு அந்த பொண்ணு கேட்டா "என்னங்க? பேர் தெரியாமயாடா லவ் பண்றேன்னு பசங்க கிண்டல் பண்றாங்கல்ல" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான்!! அவள் அதிர்வதைப் பார்த்து, ஐய்யய்யோ சும்மா சொன்னேங்க சத்தியமா நான் உங்களை லவ் பண்ணலை, அப்புறம் உங்க friend என்னை சும்மா விடுவாளா என்பான்! அவள் புரியாமல் இவனைப் பார்ப்பாள். என்னங்க இன்னுமா புரியலை, என்ன நீங்க போங்க!! என்பான். அவளும் மாலாவோட.... என்று இழுப்பாள்! அப்பா!!! இவ்வளவு நேரமா என்று
ஒரே போடாகப் போடுவான்! அப்படி அந்த பெண் சொல்லவில்லையென்றால் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது..அவன் 10 பெண்களிடம் கேட்டால் ஒரு ரெண்டு பெண் தான் இந்த பதிலைத் தரமாட்டார்களாம்..இப்படியே அவன் பல பேரை friend பிடித்து வைத்திருந்தான்னா பாத்துக்குங்க!

காலேஜில் யாராவது பெண் இவனை ராக்கி கட்ட வந்தால், அவள் வந்து பக்கம் நின்றவுடன் அவள் கண்ணோடு கண் வைத்து ஐ லவ் யு என்பான்!

இப்படிப் பட்ட ஒருவனோட வாழ்க்கையில திடீர்னு ஒர் அதிர்ச்சிகரமான விஷயம் நடந்தது!!

அட வாங்க சார், இவ்வளவு நேரமா வர்றதுக்கு..என்ன கதை முதல்ல இருந்தா..சொல்லிட்டா போச்சு!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன்.....அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்!...................................



மழை, மழைன்னு எழுதி எழுதி blog யே சொத சொதன்னு ஆயிடுச்சுப்பா!! ஒரு change க்கு கொஞ்சம் wague ஆ எழுதிக்கிறேன்!

எழுத ஆரம்பிக்கும்போது இதன் கரு என்னுடைய ஒரு நொடி எண்ணமாக இருந்தது..அது வளர்ந்து இந்த நிலையை எட்டி உள்ளது!

இது ஒரு வரிக் கதை இல்லை
இது sudden ficationa? இல்லை
இது ஒரு கட்டுரையா? இல்லை
இது சுயசரிதையா? இல்லை
ஒரு கவிதையை உரைநடை படுத்த முயற்சிக்கிறாயா? இல்லை!

நான் எழுதி இருக்கும் இந்த பத்திகளுக்கு என்ன பெயர் வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை..அதையும் உங்களிடமே விடுகிறேன்! பல எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!! ஏதாவது எழுதுங்கள் என்று!! அப்படி ஒரு முயற்சி தான் இது..

திடீரென்று அவனுக்கு அந்த பயம் வந்தது..அதை பயம் என்று சொல்ல முடியாது! அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. காலையில்
எழுந்து கண்ணாடி பார்க்கும் போது முதன்முதலாய் தோன்றியது அது. "அட, நம்ம hero மாதிரி இருக்கோமே" என்ற நினைவைத் தொடர்ந்து வந்தது அந்த நினைவு! அந்த கன நேர நினைவை அவனால் ஏனோ அலட்சியப்படுத்த முடியவில்லை. அதை மறுபடி மறுபடி யோசித்துப் பார்த்தான். அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டே இருந்ததால் அந்த நினைவு இவனிடம் நெருக்கமாகி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். இப்பொழுது
அதை நினைத்தால் அவனுக்கு எரிச்சல் வருகிறது. அவன் மீதே அவனுக்கு கோபம் வருகிறது..ஏன் தேவையில்லாததைப் பற்றி இவ்வளவு யோசித்தோம் என்று அவனே அவனைத் திட்டிக் கொள்கிறான்! ஏனோ அவன் படும் பாட்டை அவனுடைய மனசாட்சி ரசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கும் போது, "இல்லை, நாம் இதைப் பற்றி யோசிப்போம்" என்று எடுத்துக் கொடுத்து அவனை எரிச்சல் படுத்துமா? மனம் ஒரு குரங்கு என்று இதற்குத் தான் சொன்னார்களோ, அவனுக்கு என்னமோ அவன் மனம் ஒரு குரங்கல்ல..ஒரு குரங்குக் குடும்பமே தனக்கு மனமாய் வாய்த்திருப்பதாய் அவனுக்குப் பட்டது! அது தன் தோள்களிலும், தலையிலும் ஏறி உட்கார்ந்து தன்னைப் பார்த்து நகைப்பதாகத் தோன்றியது!

எனக்கு அது உறுதி, எனக்கும் கட்டாயம் அது நடக்கும் என்று தெரியும், ஏதோ நான் தெரியாமல் அதைப் பற்றி யோசிக்க ஆசைப்பட்டேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சினான். அது அவ்வளவு சீக்கிரத்திலா மசிந்து விடும். மாறாக இவனை நோக்கி எள்ளி நகையாடியது. ஏய், போச்சுடீ, அது உனக்கு நடக்கும்
பாரு..என்று அவனுக்கு பூச்சி காட்டியது. ஐய்யய்யோ அதற்குள் நாம் ஏதாவது உறுப்படியாய் செய்தாக வேண்டுமே என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது! அது அவனுடைய நிழல் வரை வந்து விட்டதாயும், ஒரு சிறிய காலத்திற்குள் அது அவனைப் பிடித்து விடுவதாயும் அவனுக்குத் தோன்றியது.

இதை 2 வகையாக முடிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது!!

முடிவு 1:

இனி இதை நம்மால் ஜெயிக்க முடியாது, ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவது தான் சரி என்று அவனுக்குப் பட்டது. இதுவும் அந்த குரங்குக் கூட்டத்திலிருந்த ஒரு குரங்கு தான் அவனுக்குச் சொன்னது..அது நல்ல குரங்கு போலும்!! வழியெங்கும் அந்தக் குரங்குகள் கும்மாளம் போட்டுக் கொண்டே வந்தன!! அவன் அந்த
நல்ல குரங்கை அந்த கூட்டத்தில் விடாமல் தேடிக் கொண்டிருந்தான்! ஆனால் அது எப்போதேனும் ஒரு முறை "வழியில் இருக்கும் அழுக்குப் பிச்சைக்காரனைப் பார்த்தோ, சாலை கடக்கும் வயதான கிழவியைப் பார்த்தோ இவனிடம் அவர்களுக்காக பரிதாபப்பட வந்து போய்க் கொண்டிருந்தது!! அது என்ன செய்யும், பாவம் அந்த ஒரு நல்ல குரங்கின் எதிரிகளாய் ஒரு கூட்டமே இருக்கிறதே.. சில சமயங்களில் அவை போடும் இரைச்சலில் நல்ல குரங்கு என்ன சொல்கிறது என்றே அவனுக்குப் புரிவதில்லை!! அவனுக்கு நல்ல குரங்கிடம் பிடிக்காத ஒரு விஷயம் அது சீக்கிரமே தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது!! இப்படி எல்லாம் அசை போட்டுக் கொண்டே அங்கு போய் சேர்ந்தவனுக்கு ஒரு ஆச்சர்யாம் காத்திருந்தது...

உங்களுக்கே இன்னேரம் புரிந்திருக்கும்.....ஆம், அந்த மனோதத்துவ நிபுணருக்கும் அது நேர்ந்திருந்தது!!

முடிவு 2:

அவன் அதுகளிடம் பேசிப் பேசி ஓய்ந்து விட்டான்! குரங்குகள் என்றைக்கு மனிதன் பேச்சைக் கேட்டது என்று அவனுக்கும் புரியத் தான் செய்தது..

ஒருநாள் திடீரென்று, ஒரு வேளை நமக்கு பைத்தியம் பிடிக்கிறதோ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது! "இல்லை, இல்லை..இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கப் போவதில்லை, இதுவும் அந்த குரங்குகளின் வேலை தான்!!" என்று அவன் நினைத்துக் கொண்டான்! அப்படி அவன் மீறி யோசித்தால் அது அவனை உண்மையிலேயே பைத்தியம் ஆக்கி விடும் என்று அவன் உறுதியாக நம்பினான்! ஆகவே நீங்களும் அதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இப்பொழுதெல்லாம், அந்த நினைவு வந்தாலே அவன் மாறாக "சிம்ரனை" யோசித்துக் கொள்வதாய் கேள்வி!!


இன்னொரு மழை நாள்!

நள்ளிரவு!

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

வழக்கம் போல் இன்றும் late ஆகி விட்டது. ஒரு வழியாய் சாலையில் என் வண்டியில் வழுக்கிக் கொண்டு என் வீடு சேர்ந்தேன். வண்டியை நிறுத்தியவுடன் தான் அது துல்லியமாய் கேட்டது! நான் என் வீட்டு கேட் நோக்கிப் போகிறேன். அந்த சத்தம் மிக நெருங்கி விட்டதாக உணர்வு. யாரோ ஒரு ப்ரகஸ்பதி நள்ளிரவு 12:00 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறான். என் வீட்டில் தற்போது கட்டட வேலை நடப்பதால் watch man என் வீட்டின் veranda வில் குடித்தனம் நடத்துகிறார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருகாமையில் தான் அந்தச் சத்தம் கேட்கிறது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. நான் என் கையிலிருந்த tube light ஐ [அதாங்க 2100!!] போடுவதற்கும் என் நண்பன் கதவைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது. அவன் மிகவும் எரிச்சலுடன் "டேய் first அதை off பண்றா! அப்போ இருந்து தூங்க விடாம!" அவன் veranda light போட்டவுடன் அந்த குட்டி கடிகாரத்தைக் கண்டு பிடித்தோம். அவன் அதை கையில் எடுத்தவுடன் அது கப்சிப் ஆகி விட்டது. [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] அவன் வெறுப்புடன் "நல்ல அலாரம்!" என்று இருந்த இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தோம்.

அவன் போய் தூங்கப் போய் விட்டான். நான் என் நனைந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு அப்பாடா என்று தூங்கப் போனேன். தலை சாய்த்ததும், அது வரை காத்திருந்தது போல அந்த சத்தம் மறுபடியும் ஆரம்பித்தது..அடடா, இது நம்மை தூங்க விடாது போலிருக்கிறதே என்று நான் எழுந்தவுடன் என் நண்பனும் எழுந்து விட்டான். மறுபடியும் veranda light போட்டு, அதை இந்த முறை நான் கையில் எடுத்தேன். [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] கையில் எடுத்தவுடன் மறுபடியும் அதே போல் சமத்தாய் கப்சிப்!! "இது ஆவுரதில்லை" என்றான் என் நண்பன். நீ உள்ளே கொண்டு வா, என்று சொல்லி இருவரும் சேர்ந்து battery ஐ எடுத்து விட்டோம். ஏதோ ஒரு சாதனை செய்தது போல இருவரும் சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றோம்! இருட்டில் அந்த கடிகாரம் என்னைப் பார்த்து "என் சத்ததை நிறுத்திட்டே இப்போ இந்த சத்ததை என்ன செய்வே?" என்று கேட்பது போலிருந்தது!! என்ன சத்தமா?

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

இதை நான் எழுத முக்கியமான இரு காரணங்கள்!

1. பேய் மழை தரும் சத்தத்தில் கூட நம்மால் நிம்மதியாய் தூங்க முடிகிறது, ஆனால் ஒரு சின்ன அலாரம் உண்டாக்கும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது.
2. அலாரம் watch man க்கு மிக அருகில் இருந்தாலும் அவரால் நிம்மதியாய் தூங்க முடிகிறது! உள்ளே fan சத்தத்துக்கு நடுவே படுக்கும் நம்மால் தூங்க முடியவில்லையே! [Important Note: இந்த வாக்கியத்தை படிக்கும் போது கண்டிப்பாய் சிவாஜி தோரணையில் படிக்கக் கூடாது!!!
]


ஒரு மழை நாள்!

ஜன்னலின் வழியே மெல்லிய சாரலோடு ஒரு குளிர் காற்று என் முகத்திலறைந்தது..கையில் சூடான coffee! அடிக்கடி பெயர் மறந்து போகும் வடநாட்டுக் கலைஞரின் சிதார் இசை டேப்பிலிருந்து காற்றில் தவழ்ந்தது. மழையின் பேரிரைச்சலுடன் அந்த சிதார் இசை கலந்தது, வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடிய இளம் காதலரை எனக்கு ஞாபகப் படுத்தியது. அது அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது..நான் நாற்காலியை ஆட்டிக் கொண்டே ஜன்னலின் வழியே மழை நனைக்கும் என் தெருவை ரசித்துக் கொண்டிருந்தேன்! "இங்கே நான் சுத்தம் செய்தால் உண்டு" என்று பொருமிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்யும் அம்மாவைப் போல் மழை பேரிரைச்சலுடன் தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தது.. என் வீட்டுக்கு சற்று தள்ளி ஒரு மார்க்கெட் இருப்பதால் ஜன்னல் வழியே வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பதே எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு...

எத்தனை விதமான் மனிதர்கள்? ஒருவர் கூட மற்றவரின் சாயலில் இல்லையே..நான் பார்த்த வரை, தனியே செல்லும் பெரும்பாலோர் தனக்குத் தானே பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு வேளை அவர்கள் பாடிக் கொண்டே போகிறார்களோ? ஜன்னலிலிருந்து பார்ப்பதால் எனக்கு அப்படித் தெரிகிறதோ என்னவோ? ஜன்னலில் நான் வேடிக்கை பார்க்க உட்கார்ந்து விட்டால் நான் கடவுள் என்று எனக்குத் தோன்றும். ஆண்டவன் நம்மை படைத்து விட்டு மேலே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் போல், அவர்களுக்குத் தெரியாமல் நான் அவர்களைப் பார்த்து கொண்டிருக்கிறேன்..கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு சிலர் மேலே பார்த்து கடவுளே என்பது போல் ஒன்றிரண்டு பேர் நான் பார்ப்பதை பார்ப்பார்கள். அவ்வளவு தான்..இந்த உவமைக்கு மிகப் பொருத்தமான் இடம் மொட்டை மாடி தான்!!

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் சிரிக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..2 பெண்கள் சேர்ந்து போனால் என் ஜன்னலைக் கடப்பதற்குள் அவர்கள் இரண்டு முறை "கழுக்" கென்று சிரித்து விடுவார்கள்! "இன்னைக்கு என்னடி லேட்டு" என்று கேட்டு விட்டு சிரிப்பார்களோ? எப்படியோ மழை, மழலை, கவிதை, தென்றல், இயற்கை, நிலவு இந்த வரிசையில் வருவது பெண்களின் சிரிப்பு! அது கவித்துவமானது..இந்த சிதார் இசைக்கும் அவர்களின் குறுநகை எழுப்பும் சத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.

குனிந்து மேலே பார்த்தேன்..வானம் எதிர் வீட்டுக் கண்ணன் வீட்டின் மொட்டை மாடியில் முடிந்து விடுவதைப் போலிருப்பதை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்..அதற்கு வானம் ஒரு இடிச்சிரிப்பு சிரித்து "அடேய் மடையா..நீ ஒரு வட்டத்திற்குள்ளிருந்து என்னைக் காண்கிறாய், நான் விசாலமானவன் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றது..மேலும் "கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" ஸ்டைலில் மேகங்கள் கங்கனம் கட்டிக் கொண்டு மழை ஊற்றிக் கொண்டிருந்தது..

தெருவில் செல்வோரில் பாதிக்கு மேற்பட்டோருக்கு மழையை பிடிக்கவில்லை..சிலர் புலம்பிக் கொண்டும், சிலர் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்..குழந்தைகள் மட்டும் தான் மழையை அனுபவிப்பதாகத் தோன்றியது. அவர்களின் முகத்தில் தான் மழையைக் கண்டதும் உற்சாகம் தெரிகிறது. மனிதன் தான் வளர்ந்ததும் எவ்வளவு மாறி விடுகிறான்!! எத்தனை தேவை இல்லாத பயங்கள் அவனைத் தொற்றிக் கொள்கிறது..மழையைக் கண்டதும் இவர்கள் நினைவுக்கு முதலில் வருவது VICKS, D-COLD தானோ? இந்தக் கவலையால் குழந்தைகளையும் இவர்கள் நனைய விடுவதில்லை.."டேய் வாடா இங்கே..தலை துவட்டு, அப்புறம் சளி புடுச்சுடும்" குழந்தைகளைக் கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும்..சளிக்கும் பிடிக்கிறது! எனக்குத் தெரிந்து மழையில் நனைந்ததால் இதுவரை எனக்கு சளி பிடித்ததில்லை..இன்றும் வழக்கம் போல மழையில் தொப்பலாய் நனைந்து தான் வந்தேன்..அம்மாவும் வழக்கம் போல அர்ச்சனை செய்தாள்! வாழ்வில் இப்படி எத்தனையோ எழுதாத சட்டங்கள் எல்லா வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறது.

மழையைப் பிடிக்காதவர்கள் அதனுடன் சமாதானம் பேசாமல் ஒரு கருப்புக் குடையுடன் மழையை எதிர்த்தால், மழை எப்படி சமாதானமடையும் சொல்லுங்கள்? "மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம், ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்!" என்ற வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வந்தது.. மனுஷன் ஒன்னு புதுசா யோசிக்க விட மாட்றாரே..எல்லாத்தையும் இப்படி யோசிச்சி எழுதி வச்சுட்டாரேன்னு அழுத்துக் கொண்டேன்! அட சிதார் இசை நின்னுருச்சே..அதுக்குள்ள "A" side முடிஞ்சுருச்சா என்ன? சரி நான் போய் "B" side வச்சுட்டு வந்த்ர்றேன்! no no..நான் வர்றதுக்குள்ள நீங்க இந்த நாற்காலியிலே உட்கார்ந்துட்டா? idea!! இங்க என்னைத் தவிர யாராவது உட்கார்ந்தா ஆயிரம் பாவம்!! டஸ் புஸ்...[க்ராஸ் போட்டுக் கொண்டே!!]

இளவரசியாரின் blog பார்த்தேன்..அட நம்மளும் படம் வரைவோமே, அதை ஏன் இவங்களை மாதிரி நாமளும் போடக்கூடாதுன்னு தோனுச்சு, அதன் விளைவு தான் இது...நான் எழுதியவைகளிலிருந்து என் கையெழுத்து நன்றாய் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள்! [டேய்
[computer ல எல்லார் கையெழுத்தும் நல்லா தா ன்டா இருக்கும்..இந்த dialogeம் friend கிட்ட இருந்து சுட்டது தான்..ஹிஹி] இன்று இங்கே நான் வரைந்த படங்களில் சிலவற்றைப் பாருங்கள்!

குறிப்பு: இது அத்தனையும் computer ல் Flash, Photoshop ல் வரைந்த படங்கள்..DIGITAL ART ம்பாங்களே அதே தான்..

Mickey

colorfulla இருக்கா?

Scenery

எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..

Mummy

என்ன ஒன்னும் புரியலையா? ஒருத்தி தன் கைல குழந்தை வச்சுட்டு நிக்கிறா, நான் வரைஞ்ச லட்சணம் அப்படி!

SadLady

online ல் picasso ஓவியங்களைப் பார்த்து copy அடித்தேன்..ஏதோ ஒரு சின்ன குழந்தை கிறுக்கியதைப் போலிருக்கிறது அந்த ஓவியம்! picasso இப்படிப் பட்ட
ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்!

Head-Picasso

இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..ofcourse copy தான்..

SisterWood


எப்படி? படம் காட்டிட்டோம்ல?


சமீபத்தில் அழகிய தீயே என்று ஒரு கவிதை பார்த்தேன்! ஆமாம், அது படம் அல்ல, கவிதை தான்..இயல்பான கவிதை.

காதல் எப்படி நமக்குத் தெரியாமல் உள்ளே சென்று ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ அதே போல் தான் இந்தப் படமும் என்னுள் எனக்கே தெரியாமல் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!

நான் இங்கு படத்தைப் பற்றி பேசப் போவதில்லை..அதனால் எனக்கு விளைந்த விளைவுகளால் நீங்கள் படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!

Disclaimers: இதே போன்று உங்களுக்கும் ஆகுமென்று கட்டாயமில்லை..நான் கொஞ்சம் over தான்..

படம் பார்த்த மறுநாள் வண்டியில் office சென்று கொண்டிருந்தேன்..என் தம்பியை bus stop ல் விட்டுச் செல்வது வழக்கம். படத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே stop ஐ கடந்து போய்க் கொண்டிருந்தேன்..அவன் பின்னால் உட்கார்ந்து கதறிக் கொண்டிருந்தான்!! சுய நினைவு திரும்பி அவனை இறக்கி விட்டதும், என்னை கை நீட்டி ஏதோ சொன்னான்..நல்லவேளை helmet மாட்டி இருந்ததால் சரியாய் காதில் விழவில்லை!

இன்னொருமுறை வேறு வண்டியில் உட்கார்ந்து கொண்டு சாவி ஏன் உள்ளே போக மாட்டேங்குது என்று முழிக்கும் போது, டேய் நம்ம வண்டி அங்கே இருக்கு, யாராவது பாத்துரப் போறான் எறங்குடா என்றான்.................வேறு யார் சாட்சாத் என் தம்பி தான்..

தம்பியுடையான் படைக்கஞ்சான்!

அந்தப் படம் என்னுள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திற்கு இந்த இரண்டு உதாரணம் போதுமென்று நினைக்கிறேன்! இனி நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் போல்..மீண்டும் ஒரு sudden fiction கதை..

சூலமங்களம் சகோதரிகள் பக்கத்து கோயிலிலிருந்து தலையில் தட்டி எழுப்பினார்கள்! விடிந்து விட்டதா? அதற்குள்ளா? இப்போ தானே படுத்தேன்..திடீரென்று
நேத்து ராத்திரி நடந்தது ஞாபகம் வந்தது!! நினைக்கவே குஜாலா இருக்கே..எப்படி நான் இப்படி எல்லாம் பண்ணேன்? நான் சாதுவாச்சே..நேத்து ராத்திரி நீ
பண்ண கூத்தைப் பாத்தா உன்னை யாராவது சாதுன்னு சொல்வாங்களாடா? என்று மனசாட்சி திட்டியது..

மனசாட்சி அன்னாத்தே, இதெல்லாம் உன்னை பக்கத்துல வச்சுட்டு செய்ய முடியாது..நீ கொஞ்சம் ஓரங்கட்டிரு, ஆமாம் என்றேன்!

எல்லாம் அவன் பண்ண வேலை, அவனுக்கு அது தான் வேலையே..தெய்வாதீனமா எனக்கு இப்படி ஒரு friend..திடீர்னு நேத்து evening phone பண்ணி டேய்,
ரொம்ப நாளா ஏங்கிகினு கிடந்தியே, இன்னைக்கு night ஒரு 12:30 க்கு அப்பால அத்தெ ஓட்டிட்டு வர்றேன்..உன்னோட தாகம் எல்லாம் இன்னைக்கோட close
இன்னா? என்றான்..அவனும் அவன் தமிழும்!! எனக்கு தலை கால் புரியவில்லை...office இருந்து சீக்கிரமே கிளம்பி, எல்லாம் ரெடி பண்ணனும்ல? ஹிஹி..

அவனுக்காக wait பண்ணி பண்ணி தூங்கி போயிட்டேன்..கதவு தட்டும் சத்தம்..தூக்கி வாரி போட்டது..அவன் தான்..என்னைப் பார்த்து குறும்பாய் சிரித்தான்..கீழே
தான் நிக்குது..ஜமாய்னான்!!! அப்பாடா, ஒரு 1 மணி நேரம் பெண்டு கழண்ட்ருச்சுப்பா....

சிகெரட் கையை சுட்டது, oh flashback முடிஞ்சுட்டதா என்று பாத்ரூம் நோக்கிப் போனேன்! மனசில் இன்னும் பட்டாம்பூச்சி பறந்தது!!

பாத்ரூமைத் திறந்தேன்..எல்லாவற்றிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது!! அந்த ஆண்டவானாப் பாத்து தான் எனக்கு தண்ணி லாரி ஓட்றவனை friend ஆ
அனுப்சிருக்காரு என்று ஒரு கும்பிடு போட்டு, "குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?" ஹிஹி..குஷி வந்துட்டா நான் பாடுவேன்.ஹிஹிஹி...

ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!

கவிதை எழுத சிறந்த களங்கள்
நிலவும், பெண்ணும்!

கவிதையும் பெண்ணும் ஒன்று!
நாம் கேட்கும் போது
அலட்டிக் கொள்வதும்
நாம் கேட்காத போது
அள்ளித் தருவதும்!

நல்ல கவிதை இல்லை என்று
நான் கிழித்துப் போட்டவைகளை
சேர்த்து வைத்திருந்தால்...

எப்படி கவிதை எழுதக் கூடாது
என்று எட்டாங்கிளாஸ்
பாடமாக்கியிருக்கலாம்!

என்னுடைய கவிதைகளை
படித்த தோழிகள், நான்
யாரையோ காதலிக்கிறேனென்றார்கள்!

இல்லை என்று மறுத்தும்...
என்னை யாரும்
காதலிக்கவில்லை!

சரியான வார்த்தைகள்
புணர்வதில் உருவாவது
ஒரு நல்ல கவிதை

நல்ல கவிதைகளை
படிக்கும் போது
வார்த்தைகள் மீது
எனக்கு கோபம் வரும்

வார்த்தைகள் எல்லோர்
பேச்சையும் கேட்பதில்லை
அது மகுடி ஊதும் பாம்பாட்டியிடம்
ஆடும் நாகம் போல் நல்ல கவிஞனிடமே
இசைந்து கொடுக்கிறது!

ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!

என் அழகு காணாமல்
இன்னும் தூங்குகிறார்களே
என்று முகம் சிவந்த வானம்

இதோ இதோ என் வாழ்வு
முடியப் போகிறது என்று
ஏங்கும் பனித்துளி

இதோ பூக்கப் போகிறேன்
என்று கண்ணாமூச்சி
காட்டும் சாலையோர பூக்கள்

carbon monoxide கலக்காத
கற்பு நெறி மாறாத காற்று

சோம்பல் சுருக்கி
சிறகு விரித்து
கூட்டம் கூட்டமாய்
விதவிதமான கோணங்களில்
இரை தேடிப்
பறக்கும் பறவைகள்

ஈரத்தலையை துணியால்
சுற்றி, முகமெலாம் மஞ்சள் பூசி
நெற்றி நிறைய பொட்டிட்டு
மாக்கோலமிடும் என்குலப் பெண்கள்

இத்தனை சுகங்களையும்
ஈடு கட்டிக் கொள்கிறது
இந்த சண்டாளத் தூக்கம்!


silsila என்று ஒரு ஹிந்தி படம்..அமிதாப் பச்சன் நடித்தது!

அதில் ஒரு அற்புதமான பாடலை ஜாவேத் அக்தர் இயற்றியுள்ளார்! அந்த பாடலின் இடையில் அமிதாப்பின் குரலில் கீழ்கண்ட கவிதை ஒலிக்கும்! Just Beautiful!!ஹிந்தியிலிருந்ததை எனக்குத் தெரிந்த வரை மொழி பெயர்த்துள்ளேன்! தவறிருந்தால், நீங்கள் எடுத்துரைத்தால் திருத்திக் கொள்வேன்!!

இதோ அந்தக் கவிதை...

நானும் என் தனிமை அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு!

நீ இங்கிருந்தால் எப்படி இருக்கும்
நீ இதைச் சொல்வாய்
நீ அதைச் சொல்வாய்

நீ இந்தப் பேச்சைக் கேட்டு ஆச்சிரியப்படுவாய்
நீ அந்தப் பேச்சைக் கேட்டு எவ்வளவு சிரிப்பாய்

நீ இங்கிருந்தால் இது நடந்திருக்கலாம்
நீ இங்கிருந்தால் அது நடந்திருக்கலாம்

நானும் என் தனிமையும் அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு

இது இரவா - அல்லது
உன் கூந்தல் விரிந்து கிடக்கிறதா?

இது நிலாவெளிச்சமா - அல்லது
உன் பார்வைகளால்
என் இரவு சலவை
செய்யப்பட்டுள்ளதா?

இது நிலவா - அல்லது
உன் வளையலா?

இது நட்சத்திரங்களா - அல்லது
உன் முந்தானையா?

காற்றின் அலையா - அல்லது
உன் மேனியின் நறுமணமா?

இது சருகுகளின் ஓசையானது
நீ ஏதாவது முனுமுனுத்ததுபோலுள்ளது

எத்தனை நாட்களாய் நான்
இதைப் பற்றி யோசிக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

எனக்கும் தெரியும் - நீ இல்லை
நீ எங்கும் இல்லை என்று!

ஆனால் இந்த இதயம் சொல்கிறது
நீ இங்கு தான் இருக்கிறாய்
இங்கு எங்கோ தான் இருக்கிறாய்

இதே நிலை இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது

தனிமையான இரவு - இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது

சொல்வதற்கு நிறைய உள்ளது - ஆனால்
யாரிடம் சொல்வேன்!

எத்தனை காலம் தான் - இப்படி
அமைதியாய் இருப்பது
இல்லை, இந்த அமைதியை சகிப்பது

இதயம் சொல்கிறது - உலகத்தின்
அத்தனை தடைகளையும்
கலைவோம்

உனக்கும் எனக்கும் இடையில்
உள்ள சுவரை இன்று உடைப்போம்

ஏன் இதயத்தில் வைத்து வெம்ப
வேண்டும்..

எல்லோருக்கும் சொல்வோம் - ஆம்
நாம் காதல் வசப்பட்டுள்ளோம்..
காதல் வசப்பட்டுள்ளோம்
காதல்...!

இப்போது இதே விஷயம் - இங்கும்
உள்ளது அங்கும் உள்ளது!

விஜயநகரத்துக்காரர் தன்னுடைய blogல் நான் எழுதிய பொதுவுடைமையை எதிர்த்து ஒரு நல்ல debate ஐ
தொடங்கி இருக்கிறார்! கலகம் பொறந்தாத் தான் நியாயம் பொறக்கும் என்கிற கதையாய்..

எல்லோரும் சந்தோஷமாய் இருக்கலாம் என்ற கொள்கையை பலர் எப்படி எதிர்க்கிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை! சரி அவருடைய கேள்விக்கு என்னால்
ஆன பதிலை சொல்கிறேன்! அதோடு என்னுடைய இரண்டாவது பகுதியையும் சேர்த்துக் கொள்கிறேன்!

1. நீங்க சொல்றதை நான் ஒத்துக்குறேன். எல்லாத்துக்கும் மனித உழைப்பு தேவை தான். எல்லோரும் ஒரே சமூகமா இருந்து உழைச்சா எல்லாத்துக்கு எல்லாம்
கிடைக்கும்ன்றது தான் என்னோட வாதம்! இப்போ நிறைய நிலம் சொந்தமா வச்சுருக்குறவங்க நிலத்துல பல பேர் கூலிக்கு வேலை செய்றாங்க! ஒன்னுமே
செய்யாம நிலம் வச்சுருக்குறவன் சந்தோஷமா இருக்கான்! நாள் பூரா கடுமையா வேலை பாக்குறவனுக்கு அதிகமா போனா கூலியா ஒரு 10 ரூபா கொடுப்பானா?
இந்த மனுஷன் அந்த நிலத்துக்கு சொந்தக்காரரை விட எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டான்? அவனும் 10 மாசம் தான்..இவனும் 10 மாசம் தான்..

2. ஆரம்பத்துல மனுஷனுக்கு என்னோட குடும்பம்னு ஒன்னும் இல்லை! எல்லோரும் ஒரு கூட்டமா சேர்ந்து வாழ்ந்தாங்க.."வால்கா முதல் கங்கை வரை" படிங்க!
அப்போ எல்லாரும் இஷ்டத்துக்கு sex வச்சுக்கிட்டாங்க! ஒருத்தனுக்கு ஒருத்திங்கிற conceptயே இல்லை..அதனால இவன் என் மகன் இவனுக்கு நம்ம சொத்து
சேக்கனும்ன்ற எண்ணமே இல்லை..கிடைச்சதை வச்சு வாழ்ந்தாங்க! ஆனா நீங்க சொல்றபடி ஒரு கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்கும் சண்டை இருக்கத்
தான் செய்தது..யார் வலியவர்கள், யார் யாரை அழிப்பது என்று பார்த்துக் கொண்டே தான் இருந்தார்கள். ஆனால் அன்று இருந்த மனித வர்கம் அல்ல
நாம்..நாகரிகம், கலாச்சாரம் என்ற ரீதியில் நாம் நிறைய முன்னேறி விட்டோம்? அப்படித் தானே?

3. இதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ராகுல்ஜி சொல்லும்போது, அன்று ஒரு தச்சனுக்கு தன்னுடைய பொருள்கள் சொந்தமாய் இருந்தன..ஒரு
குயவனுக்கு மண்பாண்டம் செய்ய உதவும் கருவிகள் அவனுக்குச் சொந்தமாய் இருந்தன என்று சொல்லி முடித்து விட்டார்! நீங்கள் சொல்வது போல் அப்போதும்
நிலக்கிழார்கள், ஜமிந்தார்கள் இருக்கத் தான் செய்தார்கள். இதை நான் ஒத்துக் கொள்கிறேன்! ஆனால் இயந்திரங்களால் சுதந்திரத் தொழிலாளர்களின் கை
எப்படிக் கட்டப்பட்டது என்பதை நான் விலக்கி இருக்கிறேன்! முதலாளித்துவத்திற்கு தொழில் வளர்ச்சி ஒன்றே காரணம் என்பதை விட, அதுவும் ஒரு முக்கிய
காரணம் என்று கொள்ளலாம் என்று தான் நினைக்கிறேன்!

4. வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு மக்கள் தொகையும் ஒரு காரணம் என்று நானே சொல்லி இருக்கிறேனே? மக்கள் தொகையை நீங்கள் கட்டுப்படுத்த
நினைத்தால் நீங்கள் பல மதங்களின் எதிரி ஆக வேண்டி வரும்! மக்களின் பல மூட நம்பிக்கைகளை போக்க வேண்டும்!

5. இதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது...இன்றும் அன்றாடத் தேவைகள் கூட இல்லாமல் உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நம் இந்தியாவையே
எடுத்துக் கொள்ளுங்கள். ராகுல்ஜி இந்த நூல் எழுதும் போது 1946 என்று சொன்னேன்..அப்போது அவர் ஏதோ குஜராத்திலோ, பீகாரிலோ [சரியாய் ஞாபகம்
இல்லை] சில கிராமங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 மாதங்கள் [அறுவடை சமயங்களில்..]தான் அந்த மக்களுக்கு தினமும் உணவு கிடைப்பதாகச்
சொல்கிறார்! மற்ற ஆண்டுகளில் அவர்கள் பட்டினியாய்த் தான் கிடந்தார்களாம்..இதை இறந்த காலத்தில் நடந்ததாய் எழுத வேண்டியதில்லை என்று நான்
நினைக்கிறேன்! சுதந்திரம் வாங்கி 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்றும் இந்தியாவில் பல கிராமங்கள் இப்படித் தான் இருக்கிறது..

6. அதே தான் நானும் சொல்றேன்! மண்ணாசை, உலக சந்தையில் தன்னுடைய நாடு தான் தன்னிகரற்று விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் போட்டி
போட்டுக் கொள்கின்றன..ஒரு சமயத்தில் அது உலகப் போராய் முடிகிறது!!

7. நல்லதங்காள் காலத்தில் பொதுவுடைமை இல்லை, அதனால் தான் விபச்சாரம் இருந்திருக்கிறது..கொஞ்சம் யோசியுங்கள், எந்தப் பெண் தன் காம
இச்சைக்காகவா விபச்சாரி ஆகிறாள்? அவளுக்குத் தேவை பணம்..எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் இருக்க இடம் என்று வரும்போது எப்படிப்பா
விபச்சாரம் இருக்கும்?

8. மறுபடியும் மறுபடியும் நீங்க நம்ம நாட்டைப் பத்தியே பேசுறீங்க..பொதுவுடைமையைப் பொறுத்த வரை, உலகமே ஒரு கூட்டுக் குடும்பம்..எல்லொரும்
உழைப்பது, தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பெறுவது, சந்தோஷமாய் வாழ்வது! எல்லோருக்கும் எல்லாம் சொந்தம்னு சொல்லும்போது எப்படி sir ஊழல்
இருக்கும்?

9. if women becomes financially independent, அப்புறம் எப்படி பெண்ணடிமை இருக்கும்? அவளுக்கும் ஒரு ஆணுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே
அளவு மரியாதை தான் தருவோம் என்று கொள்ளும்போது பெண்ணடிமை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து விடாதா? ஆணுக்குப் பெண் சலைத்தவளல்ல
என்று வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் வந்து விடாதா?

முடிவாக, இந்தியாவில் எங்கோ (1946)ல் ஒரு மாபெரும் பூகம்பம் வந்தது. நகரமே சுக்கு நூறானது..அதை மறுபடியும் நிர்மாணிக்க ஒரு தலைமுறை காலம்
ஆகும் என்று அரசு சொன்னது..ஏன்? அந்த நாட்டில் வேலை பார்க்க மக்கள் இல்லையா? தனிமங்கள் இல்லையா? TATA வின் ஒரு பெரிய தொழிற்சாலை
பக்கத்தில் தான் இருந்திருக்கிறது! பிறகு ஏன் இவ்வளவு காலம்? இங்கே அதற்கு முக்கிய காரணம் எல்லா சொத்துக்களும் ஒரு தனி மனிதனுக்கு சொந்தமாய்
இருப்பது. அவனுக்கு லாபம் இல்லையென்றால் அவன் எப்படி மற்றவர்க்கு கொடுப்பான்? அதனால் இவ்வளவு காலம் ஆகும்! இதே பொதுவுடைமை
இருந்திருந்தால், அது பொதுச்சொத்தாய் இருந்திருக்கும், அதிகம் போனால் சில மாதங்களுக்கும் இருந்ததை விட அழகான நகரமாய் மாற்றி இருக்க முடியும்!

முதலாளித்துவக் கொள்கை லாபத்தை மட்டுமே நோக்குகிறது என்பதை மேலே உள்ள உதாரணத்தின் மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்! இதற்கு நம்முடைய
அன்றாட வாழ்விலும் ஒரு உதாரணம் உள்ளது!!

உதாரணத்திற்கு உங்களுடைய அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை! மாதா மாதம் உங்களுக்கு 10,000 செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்! இப்படி
எத்தனை மாதங்கள் நீங்கள் உங்கள் தாய்க்கு மனமுவந்து செலவு செய்வீர்கள்! ஒரு கட்டத்தில் உங்களுக்கே வெறுப்பு ஏற்படும், இப்படி ஒன்றும் தேறாமல்
செலவு செய்வதற்கு அவர்கள் நிம்மதியாய் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நிச்சயமாகத் தோன்றும்! அதை நீங்கள் மற்றவரிடம் மறைத்தாலும் உங்கள்
உள்ளத்தில் தோன்றத்தான் செய்யும்! இது உங்கள் தவறல்ல, பணம், லாபம் என்ற அரக்கர்கள் உங்களை அப்படிச் செய்யத் தூண்டுகின்றன! முதலாளித்துவத்தில்
பணம் ஒன்று தான் கடவுளாய் இருக்கிறது! இதே பொதுவுடைமையில் முதியோர்களை அரசே காக்கும்..என்னுடைய பணம், நான் இவ்வளவு செலவழித்தேன் என்ற
பேச்சுக்கே இடம் இருக்காது!

பொதுவுடைமைக் கொள்கை உலகம் அத்தனையும் ஒரு கூட்டுக் குடும்பம் மாற்றி விடுகிறது. இங்கே எனது, உனது என்று இல்லாமல் நமது என்று
மாறிவிடுவதால்..எந்தப் பிரச்சனையுமே இருக்காது என்று நான் சொல்லவில்லை..முதலாளித்துவ சமுதாயத்தை விட பிரச்சனைகள் குறைச்சலாய் தான் இருக்கும்
என்று நம்புகிறேன்!!

சரி எத்தனையோ வெட்டி பேச்சு பேசியாச்சு..கொஞ்சம் உருப்படியா ஏதாவது பேசுவோம்னு நினைக்கிறேன்!

சமீபத்துல ராகுல்ஜியோட பொதுவுடைமை தான் என்ன? படிக்க நேர்ந்தது. 100 பக்கங்கள் கொண்ட புத்தகம் தான்..அதற்குள் எத்தனை விதமான
சிந்தனைகள்! எவ்வளவு ஆழமான கருத்துக்கள்! 1946ல் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்! ராகுல்ஜி என்பவர் விஞ்ஞானியாக இருந்து பிறகு சமுதாய
ஆராய்ச்சியில் இறங்கி விட்டார் என்று ஞாபகம். அவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை படித்தவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாய் தெரிந்திருக்கும்.
அது ஒரு மனித ஆராய்ச்சி நூல்! வால்கா நதியில் ஆரம்பித்து மனித வாழ்க்கையை சிறுகதைகளாக அற்புதமாய் தந்திருப்பார்!

நிற்க

பொதுவுடைமை தான் என்ன? என்ற புத்தகத்தில் இவர் முதலாளித்துவத்தையும், பொதுவுடைமைக் கொள்கையையும் ஒப்பிட்டு எது சிறந்தது, அது எப்படி என்று
என்னைப் போன்ற பாமரர்களுக்கும் புரியும்படி விளக்கி உள்ளார்!

பொதுவுடைமை தான் என்ன?

இந்த உலகில் எல்லோரும் சமமானவர்கள்! இந்த பூமியில் எல்லோருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் தாரளமாய் தான்
இருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்! அதனால் எல்லோருக்கும் உணவு, உடை, இடம், கல்வி போன்ற அடிப்படை
உரிமைகள் கிடைக்க வேண்டும்..[இதுல நீங்க cable tv எல்லாம் சேக்கக் கூடாது ஆமாம்..]

சொல்வதற்கு எவ்வளவு சுலபமாய் இருக்கிறது..ஆனால் இது நடப்பதென்பது பகலில் அதுவும் சரியாக 12 மணிக்கு காணும் கனவாக மட்டுமே இருக்கிறது என்பது
வருத்தமான் விஷயம் தான்..

முதலாளித்துவம்?

குறைந்த தகுதி உடையவன், பணம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன் சொந்த லாபத்திற்காக பிறர் உழைப்பை சுரண்டுவது முதலாளித்துவம்.

முதலாளித்துவம் எங்கே எப்போது தொடங்கியிருக்கும்? மனிதன் வேட்டை ஆடித் திரியும் போது தொடங்கி இருக்க வாய்ப்பில்லை..அப்போது கிடைத்ததை
எல்லோரும் சமமாகவே பகிர்ந்து உண்டார்கள்! பிறகு எங்கே? எப்படி? ஏன்?

என்று நீராவியினால் இயங்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டனவோ அன்று தொடங்கியது முதலாளித்துவம்!! அதுவரையில் ஒரு தச்சனுக்கோ, ஒரு
நெசவாளிக்கோ தன்னுடைய மூலப் பொருட்கள் சொந்தமாய் இருந்தது. அதை வைத்துக் கொண்டு அவனால் முடிந்ததை அவன் உற்பத்தி செய்து நிம்மதியாய்
வாழ்ந்து வந்தான்...இயந்திரங்களைக் கையாள மனிதன் கற்றவுடன் 4 பேர் செய்வதை ஒரே ஒருவன் அதே நேரத்தில் சிறப்பாய் செய்ய முடிந்தது!

உதாரணத்திற்கு

1 மனிதன் 4 மணி நேரத்தில் 12 கெஜம் துணி நெய்தால்தகுதி குறைந்த 1 மனிதன் இயந்திரத்தின் உதவியுடன் அதே 4 மணி நேரத்தில் 24 கெஜம் நெய்து விடுகிறான்!

முதலாளித்துவத்தால் வந்த வினைகள்

1. வேலை இல்லாத் திண்டாட்டம்
2. வறுமை
3. உலக மகா யுத்தங்கள்!
4. விபச்சாரம்
5. ஊழல்
6. பெண்ணடிமை

வேலை இல்லாத் திண்டாட்டம் உங்களுக்கு மேல் சொன்ன உதாரணத்திலிருந்து புரிந்திருக்கும்..4 பேர் செய்யும் வேலையை அவர்களை விட தகுதி குறைந்த
மனிதன் இயந்திரத்தின் உதவியால் அவர்களை விட வேகமாய் செய்து முடித்தான்..3 பேரின் வேலையை இயந்திரம் தன் ராட்சச கரங்களால் பறித்துக்
கொண்டது..

அதன் விளைவாய் வறுமை..பசி, பட்டினி!!!

இயந்திர ஆலைகளை இங்கிலாந்து முதலில் நிறுவியது..அப்போது உலக சந்தை மொத்தமும் அதன் கையில் இருந்தது..இங்கிலாந்தின் வளர்ச்சியைக் கண்ட
மற்ற ஐரோப்ப நாடுகள் மெல்ல தொழிற்சாலைகள் தொடங்க ஆரம்பித்தன..முதலில் உலக சந்தையில் நிறைய பொருள்கள் தேவைப்பட்டதால், தொழிற்சாலைகள்
வளர்ந்து கொண்டே இருந்தன..தொழிற்சாலைகள் பெறுகியதால், உற்பத்தி அதிகரித்தது..நாட்கள் செல்லச் செல்ல சந்தைகளின் தேவை குறையத் தொடங்கியது!
பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன..அங்கே வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேருக்கும் பசி, பட்டினி ஒன்றே சொந்தமானது!! இதற்கிடையில்
சந்தைகளுக்காக உலக நாடுகளிடையே பெரிய சண்டைகள் நிலவியது. அது உலக யுத்தத்தில் முடிந்தது..

"முதலாளித்துவம் இந்த உலகில் உள்ளவரை மகாயுத்தம் என்ற கத்தி உலகின் தலையில் எப்போதும் தொங்கிக் கொண்டே தான் இருக்கும்!!"

நாம் திரும்பிப் போக முடியுமா?

சரி இயந்திர வளர்ச்சியால் தான் இத்தனை பிரச்சனை.. நாம் இயந்திரங்களே இல்லாத நம் பழைய உலகிற்கே சென்று விடுவோம், அப்போது ஒரு பிரச்சனையும்
இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள், அது முடியவே முடியாது! ஏன் முடியாது?

1. மனிதன் என்று 4 கால்களால் நடப்பதை விட்டு 2 கால்களால் நடக்கத் தொடங்கினானோ, அன்றே இயந்திர வளர்ச்சி ஆரம்பித்து விட்டது.
2. இயந்திரங்களை 1, 2 நாட்களிலா கண்டு பிடிக்கிறார்கள்? விஞ்ஞானிகள் தம் வாழ்க்கை முழுதும் அர்ப்பணித்து நமக்கு பல அரிய கண்டுபிடிப்புகளை
தருகிறார்கள்! அதை எப்படி சுலபமாய் உதற முடியும்?
3. சரி அப்படிப் பட்ட அறிவாளிகளைக் கொன்று விடலாமா? அதுவும் முடியாது..அது அஹிம்சைக்கு எதிரானது.
4. சரி அவர்கள் கண்டுபிடிக்கட்டும், யாரும் உபயோகிக்க வேண்டாம், பிறகு அவர்களே வெறுத்து கண்டுபிடிப்பதை நிறுத்தி விடுவார்கள்! இங்கே நன்றாக
சிந்திக்க வேண்டும்..விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை அதிகம் யார் உபயோகிக்கிறார்கள்? முதலாளி வர்க்கத்தினர் தானே?
5. அவர்கள் சொல்வது போல் எல்லாம் துறந்து பழைய காலத்திற்கே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்..அன்று இருந்த மக்கள் தொகை என்ன? இன்று
உள்ள மக்கள் தொகை என்ன? அது ஒரு பெரிய பிரச்சனையாய் இராதா?

இந்த அனைத்துக் காரணங்களைக் கொண்டு பார்க்கும் போது கற்காலத்திற்கு செல்வது இயலாது என்பது தெளிவாகிறது!

இந்த அனைத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கை எவ்வாறு வழி காட்டுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!!

கும்பகோணம் - கோயில்களுக்குப்
பெயர் பெற்றதாம்!

வீதிக்கு வீதி தெய்வமாம்!

அந்தப் பள்ளிக்கூடத் தெருவில்
கோயில் இல்லையா - அல்லது
தெய்வமே இல்லையா?

பள்ளிக்கூடத்தின் தீ அணைந்து விட்டது - விடாமல்
எரிந்து கொண்டிருக்கிறது
பெற்றோர்களின் வயிறு!

சில நாட்களாய் கருகிய வாசனையையே
சுவாசிப்பதாய் தோன்றுகிறது

அந்தக் கொடிய புகையை
நினைத்தே கண்கள் கலங்குகின்றன

உயிருக்குப் போராடும்
ஓசையே செவிகளில் ஒலிக்கிறது

குழந்தைகளைக் கதறவிட்டு விட்டு
தப்பித்து ஓடும் ஆசிரியர்களே
கண்களுக்குத் தெரிகிறார்கள்

மன்னிப்பது மனிதத் தன்மையாம்!
மன்னிக்கவும்! என்னால் அந்தக் கொடும்
தீயை மன்னிக்கவே முடியாது!

இனி யாரும் என்னிடம் "அக்னி பகவான்"
என்று சொல்லி வராதீர்கள்!

சுஜாதா குமுதத்தில் சின்ன சின்ன சிந்தனைகளில் குட்டிக் கதைகள், ஹைக்கூ, 1 வரிக் கதைகள், 55 வரிக் கதைகள், sudden fiction கதைகள் பற்றி விளக்கி நம்மையும் முயற்சி செய்யச் சொன்னார்...1 வரிக் கதைகளைப் பொறுத்தவரை கொஞ்சம் நான் முயற்சி செய்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் sudden fiction கதைகளிலும் என் கால்களை பதித்திருக்கிறேன்..அதன் விளைவு கீழே!

நான் கண் விழிக்கவும், கடிகாரத்தின் குருவி 8 முறை கூவவும் சரியாக இருந்தது. கலைந்த கூந்தலை அள்ளி முடிந்தேன். அவரை விலக்கி என் முந்தானையை எடுத்துக் கொண்டேன், மெல்ல முனங்கினார்..நேத்தும் தூங்க 2 மணி ஆயிடுச்சு, daily இதே கதை தான்..sir க்கு மூடு வந்துட்டா அவ்வளவு தான்...இந்த மனுஷனுக்குத் தான் என் மேல எம்புட்டு பிரியம், எல்லா ஆம்பளங்களும் இப்படியா இருக்காங்க? இவர் தான் office விட்டா வீடு, வீடு விட்டா office னு இருக்காரு..இந்த areaல அந்த மாதிரி பொண்ணுங்களுக்கா குறைச்சல், தலை எடுத்து பாக்க மாட்டாரே..அட இன்னைக்கு சனிக்கிழமையா? அப்போ இன்னைக்கும் இதே கூத்து தான். அப்படி என்னத்தக் கண்டாரோ அவருக்குத் தான் வெளிச்சம்.

ஒரு வழியாய் அவரை எழுப்பி office அனுப்பி வைத்தேன்.."5 மணி, 5 மணி..ரெடியா இரு, ரெடியா இரு..சினிமா போறோம்!" எனக்கு சிரிப்பு தான் வருது. அன்னைக்கு வேலை நல்லா ஓடுச்சி! அவரோட நெனப்பாவே வேலை செஞ்சதாலே அலுப்பே இல்லை..ஒரு வழியாய் 4, 4:30 போல நல்லா ஒரு குளியல் போட்டுகிட்டு [அவருக்கு அவர் வரும்போது குளிச்சி freshஆ இருக்கணும்..ஹிஹி] ஜம்முன்னு ரெடியாகி wait பண்ணிட்டு இருந்தேன்..மணி 5:00 ஆச்சு, காணோம், 6 ஆச்சு காணோம், சரி office ல வேலையா இருப்பாரோன்னு TV ஐ போட்டு உட்கார்ந்தேன்..9 மணி வரை வரவே இல்லை..office போன் போட்டா அவருக்கு பிடிக்காது..சரி வர்றப்ப வரட்டும்னு பேசாம இருந்தேன்..

10 மணி வாக்கில் சொக்கு வந்தான், எக்கோவ், உன் sir க்கு கொஞ்சம் change வேணுமாம், புதுப் பொண்ணு டீனா கிட்ட போயிட்டாரு, பெரியக்கா இந்த பார்ட்டியை அனுப்சுருக்கு..என்று இயந்திரத்தனமாய் சொல்லி விட்டு நகர்ந்தான்..புதுசாய் வந்தவன், சட்டை பொத்தான்களை கழற்றியபடி உள்ளே நுழைந்தான்..

sudden fiction கதையின் இலக்கணமே மொத்த கதையும் கடைசி ஒரு வரியில் தான் இருக்கும்..ஒரு எதிர்பாராத திருப்பம்..அட இதையா சொல்ல வர்றான், எதிர்பார்க்கவே இல்லையேன்னு தோனனும்..

என் கதையில் உங்களுக்கு ஆரம்பத்திலேயே இது தான் என்று புரிந்திருந்தால், என் கதை புட்டுகிச்சின்னு அர்த்தம்..

ழகாகவும் அதே சமயம் ரவாரத்துடன், யல்பாய் ஒரு டுபாட்டுடன், ற்சாகத்துடனும் க்கத்துடனும்,

ழுத்தாணி கொண்டு டு பதித்து, ய்யா என்று கதறுவோரை கருதாது..ரே மனதுடன் office ல் பி அடித்து

ஒளவை பாடிய தமிழை நானும் பாடி...["ஓள" னாலே ஒளவை தானா? அந்தப் பாட்டிய விட்றுங்கப்பா!!]

இதோ இருக்கிறேன் இன்னும் உங்களின் இரக்கத்தின் விளைவாய், என்னுடைய

25 வது பதிவு!!!!!!!!!!

வாழ்த்துங்கள் வளருகிறேன்!
திட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!!


·துடன் என் இன்றைய பதிவை முடித்துக் கொள்கிறேன்...

காய்ச்சல்! இதைப் பற்றி S. ராமகிருஷ்ணன் தன்னுடைய துணையெழுத்தில் மிக அழகாக எழுதி இருந்தார்! இதை நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அவர் முந்திக் கொண்டார்.

என்னைப் பொறுத்தவரை காய்ச்சல் நம்மை கஷ்டப்படுத்துவதோடு ஒரு சிறு சந்தோஷத்தையும் தரத் தான் செய்கிறது.

குழந்தையாய் இருந்தால் school க்குப் போகத் தேவையில்லை
இளைஞர்கள் college க்குப் போகத் தேவையில்லை [ஆனால் co-ed ல் படிக்கும் மாணவர்களுக்கு இது எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் என்று தெரியவில்லை..ஒரு நாள் கடலை மிஸ் ஆகுதுல்லே?]
குடும்பத் தலைவர்கள் office போகத் தேவையில்லை
குடும்பத் தலைவிகள் சமைக்கத் தேவையில்லை, துணி துவைக்கத் தேவையில்லை, பாத்திரம் கழுவத் தேவையில்லை etc.,[அட பெண்களுக்குத் தான் நிறைய வேலை இருக்கிறது!]

எல்லோருக்கும் rest!

நான் இங்கு என்னுடைய பள்ளிப் பருவத்தில் வந்த காய்ச்சல் நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்! எனக்கு எப்போதாவது தான் காய்ச்சலே வரும்..அதிலும் school க்கு லீவு போடுவது மிகவும் குறைவு. அப்படி எப்போதாவது வரும் போது அம்மா "நீ இன்னைக்கு school க்கு போகாதே, போயி படுத்துக்கோ" என்று சொல்வாள்!. என் தம்பி என்னை பொறாமையாய் பார்ப்பான்! வழக்கமாய் school க்கு 9:30 மணிக்கு கிளம்புவோம். இன்று அவன் மட்டும்..

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்


சிலோன் ரேடியோவில் பாடிக் கொண்டிருக்கும்..அப்பாடா இன்னைக்கு நம்ம school க்கு போக வேண்டியதில்லை..இவன் இப்போ போனா சாயங்காலம் வருவான்! பாவம் என்று நினைப்பேன்! அம்மா அரிசிக் கஞ்சி கொடுப்பாள்..ஆஹா அதை சாப்பிடுவதற்காகவே தினமும் காய்ச்சல் வரலாம்! சாப்ட தட்டை, டம்ளரை அங்கேயே, அப்படியே வச்சுடலாம்..[அன்னைக்கு மட்டும்!]
அப்படியே போர்வை போர்த்திட்டு படுத்தா நம்ம உடம்பு சூடு போர்வை பூரா பரவி கம்முன்னு இருக்கும்.

குக்கர் விசில் போட்டு ஒரு 12 மணிக்கு எழுப்பி விடும்! குழம்பு, ரசம் வாசனை வீடு பூரா பரவி இருக்கும். அம்மா யாரோ பழம் விக்கிற அம்மாகிட்ட கதை அளந்துட்டு இருப்பா! அம்மாக்கு டெய்லி லீவு தான்..ஜாலி, நாள் பூரா கதை அளந்துகிட்டு இருக்காளேன்னு பொறாமையா இருக்கும்..[அவள் ஞாயிற்றுக்கிழமையும் லீவில்லாம சமைக்கனும் என்பதை மறந்து!]

மெல்ல வெளியே எட்டிப் பார்ப்பேன். தெருவில் சூரியனின் ஆதிக்கத்தைத் தவிர வேறு எதுவுமே இருக்காது. ஓஹோ மத்தியானம் 12 மணிக்கு நம்ம தெரு இப்படித் தான் இருக்குமான்னு நினைத்துக் கொள்வேன்!

தூரத்தில் ஒரு பழக்கப் பட்ட குரல்:

ஈயம்பித்தாளைக்குப் பேரிச்சம்பழம் அச்சு வெள்ளம்
நிலக்கடலைப் பருப்பு பட்டானி வேர்க்கடலை
....


இப்படி பாடிக் கொண்டே ஒரு கிழவர் வந்து கொண்டிருப்பார்! சூரியனின் ஆதிக்கத்துடன் அவருடைய ஆதிக்கமும் சேர்ந்து கொள்ளும். அது அந்த 12 மணிக்கு மேலும் அழகு சேர்க்கும். அவர் என்ன தான் சொல்கிறார், என்ன தான் விற்கிறார் என்று எனக்கு ஒன்றும் புரியாது. யாரும் அவரிடம் இது வரை பேரம் செய்து பார்த்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை.

அதற்குள் அம்மா "டேய் ஏன் டா வெயில்லே நிக்கிற, போயி படு" என்பாள்! அந்த பழம் விக்கிற அம்மா ரொம்ப கரிசனையோடு "ஏன் ராசா காய்ச்சலா? போய் படுத்துக்கோ ராசா" என்பாள். நான் ஒன்றும் பேசாமல் என் கசக்கும் வாயை மறுபடியும் உணர்ந்து பேசாமல் வேடிக்கை பார்ப்பேன்!

அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..
அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..

பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..
பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..

ஐச், ஐச் [அது ice!!]


இப்படி பலர் என்னைக் கடந்து போய் கொண்டிருப்பார்கள். தூரத்தில் மறுபடியும் ஒரு குக்கர் சத்தம் போடும்!! அய்யய்யோ school ல் என்ன நடக்கிறதோ என்று வேண்டாத நினைவும் அடிக்கடி வந்து போகும்! காய்ச்சல் அழுத்தமாய் என்னைத் தள்ளும், கால்கள் சோர்ந்து போகும்..எனக்கு காய்ச்சல் இல்லாத போது எப்படி இருந்தேன் என்று எனக்கு மறந்து போகும்! "டேய் வந்து கஞ்சி
குடிச்சிட்டு படு" என்று அம்மாவின் குரல் அவள் என்னைக் கூப்பிடுகிறாளா இல்லை காய்ச்சலைக் கூப்பிடுகிறாளா என்று எனக்குக் குழப்பம்!!

சாப்பிட்டு படுத்தால், தூக்கத்தில் மதியம் சாப்பிட வந்த அப்பா நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதை உணர முடியும். இப்போது தான் படுத்த மாதிரி இருக்கும், என் தம்பி school முடிந்து வந்திருப்பான்! சே, நாமும் இன்று லீவு போடாமல் இருந்திருந்தால், இன்னேரம் நாமும் வீட்டுக்கு வந்திருக்கலாமே என்று தோன்றும். நாளைக்கு என்ன என்ன test இருக்கோ, home work
இருக்கோ என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்.

தெருவெங்கும் நண்பர்களின் விளையாட்டு இரைச்சல் கேட்கும் போதும். . .
அம்மா நான் விளையாடப் போறேன் என்று தம்பி ஓடும் போதும். . .

காய்ச்சல் மீது எனக்கு வெறுப்பு வரும்...முதன் முறையாய்!!

நான் முன்பு டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன்! பெங்களூர் வந்து 1 வருடம் ஆகிறது. டெல்லியில் இருந்தபோது வருடத்திற்கு ஒரு முறை மதுரைக்கு வந்து போவதுண்டு! 2 நாள் பயணம்! அதிலும் வெயில் காலத்தில் அந்த tamil nadu express ல் வருவது இருக்கே..அடடா! நினத்தாலே பற்றிக் கொண்டு வருகிறது!! ஆனால் அந்த வெயிலிலும் எனக்கு சில சமயங்கள் கவிதை வந்ததுண்டு!!!!! [அய்யய்யோ! இப்போ எங்களுக்கு பத்திட்டு வருதேன்னு யாருப்பா சொல்றது?]

என் உள்ளே இருக்கும் ப்ரதீப் [அதான்பா மனசாட்சி!], நம்ம blog மக்களுக்கு இதைக் காமிடான்னு ஒரே அடம்! சரி தொலையிரான்னு உங்களுக்கு காட்றேன்! கவிதை சுமாரா இருந்தா நீங்க என்கிட்ட கோச்சுக்காம அந்த பயகிட்ட தான் கோச்சுக்கனும்! பாராட்டனும்னா மட்டும் என்கிட்ட சொல்லுங்க ஹிஹி...

அத்துவானக் காட்டில்
எப்போதாவது வரும் ரயிலைப் பார்த்து
கை அசைக்கிறான் அந்தச் சிறுவன் - தன்
கைகளால் பிடித்திருந்த கால்சட்டை
நழுவுவது தெரியாமல்!


இன்னைக்கு தான் இதை எழுதினேன்! ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது! இதை எழுதிட்டு ஒரு friend கிட்ட காட்டினேன்! அவங்க இந்தக் கவிதையை புரிஞ்சுகிட்ட விதமே வேற மாதிரி இருந்தது!

இதை எழுதும் போது நான் உணர்ந்தது!

1. வாழ்க்கை எத்தனை சின்ன விஷயங்கள் இப்படி ரசிக்கும்படியாய் இருக்கிறது!
2. அந்த சிறுவனுடைய உற்சாகம், குதூகலம் எல்லாம் நமக்கும் அல்லவா தொற்றிக் கொள்கிறது!

என் friend உணர்ந்தது அவர் எனக்கு சொன்னது

இப்படித் தான் இன்னைக்கு பலர் இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்றாங்க!


இந்தக் கவிதைக்கு மேலும் உள்ளடங்கிய அர்த்தம் கண்டுபிடித்து எனக்கு அனுப்புபவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, இந்தக் கவிதையின் இன்னொரு உள்ளடங்கிய அர்த்தமே பரிசாக வழங்கப் படும்!!

என்னடா blog எழுதி இவ்வளவு நாள் ஆச்சே, ஏதாவது எழுதனுமே..என் blog யையே நம்பி இருக்கும் கோடானு கோடி ரசிகர்களை [சரி, சரி!!] ஏமாத்தக்கூடாதேன்னு..சரி 1 வரி கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சே, அதைப் பத்தி யோசிப்போம்னு நேத்து office ல இருந்து bike [மீரா ஜாஸ்மீன்] ல போகும்போது யோசிச்சேன்! [இப்போ எல்லாம் bike
ல போகும் போது ம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!!!!]

So, asusual Airport road ல Leela Palace கிட்ட signal. Signal ல வேற என்ன பாக்க முடியும் சொல்லுங்க? அதான் இந்த bike கதை! நான் இன்னைக்கு blog எழுத உட்காரும்போது என்கிட்ட இருந்த ஒரே கதை இது தான்!! இதை மட்டும் எப்படி போட்றதுன்னு நினைச்சி சரி இன்னும் கொஞ்சம் கதைகளை யோசிப்போம்னு வந்தது தான் பாக்கி எல்லாம்!! [அதுவா வருதுப்பா!!]

1. (a). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவனைப் பார்த்து என்னுள் பேசிக் கொள்கிறேன், இவன் bike due கட்டி முடிச்சிருப்பானோ?!!!!!!!

1. (b). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவன் cell phone ல் சிரித்து சிரித்துப் பேசுகிறான். இவனுக்கு petrol விலை ஏறியது தெரியாதோ? என்று நான் நினைத்துக் கொள்கிறேன்!! [சமிபீத்திய petrol விலை உயர்வை [41.87/ltr] நம் கதையில் புகுத்தினா என்னான்னு புகுத்துனது]!!

2. நான் channel ஐ மாற்றியவுடன் என் நண்பன் எரிச்சலுடன் கத்துகிறான்! இந்த உலகில் எல்லா வளமும் இருந்தும் ஏன் அமைதி இல்லை என்று எனக்கு லேசாய் புரிகிறது!

வீட்டில் சேர்ந்து வாழும் 2 நண்பர்களிடம் ஒரு சாதரண TV க்காக அமைதி குறையும் போது உலகில் அமைதி ஏன் இல்லை என்கிற கேள்விக்கு இடமில்லை!! [ஐய்யோ! கசக்குதே!! அதாம்பா உண்மை கசக்குமாமே?]

3. நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்! waiter எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்!

ஒவ்வொருவரும் உண்மையாய் [??] காதலிப்பதால், யாருக்குக் கஷ்டம் என்பதே கரு!

4. அவள் எல்லாவற்றையும் களைத்து நிற்கிறாள்! எனக்கென்னவோ இன்னும் அவளுடைய கண்களே கவர்ச்சியாய் தெரிகின்றன!

கொஞ்சம் adultary ஆ தான் இருக்கு. but இதுல காமத்தை விட காதலைத் தான் நான் சொல்ல வர்றேன். அவள் பிறந்த மேனியா நின்னாலும் நம்ம ஆளு அவளோட கண்களின் கவர்ச்சியை ரசிக்கிறான்!! [யாருப்பா? யாரெல்லாம் அப்படி இருக்கீங்கோ, கை தூக்குங்க!!]

ஓடி விளையாடு பாப்பா - பாரதி

நான் மதுரையில் மஹால் [திருமலை நாயக்கர் மஹால்] 7 வது தெருவில் வசித்து வந்தேன்..சொந்த வீடு என்பதால் எனக்கும் மஹால் 7 க்கும் ஒரு அழுத்தமான உறவு இருக்கிறது. இன்றும் நான் மதுரை செல்லும்போதும் என்னை முதலில் நலம் விசாரிப்பது மஹால் 7 தான்..

அன்று போல் இன்று குழந்தைகள் வீதியில் விளையாடுவதில்லை, நாம் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்று வழக்கழிந்து போய் விட்டதில் எனக்கு ஒரு மிகப் பெரிய வருத்தம். அப்படியே ஒரு சிலர் விளையாடினாலும் cricket தவிர வேறு ஒன்றுமில்லை..இந்த இடத்தில் நான் என்னுடைய பால்ய பருவத்தினை நினைத்துப் பார்க்கிறேன் [frame மங்கலாகிறது..flashbackpa..]

எத்தனை விளையாட்டுக்கள், ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு season, ஒவ்வொரு season க்கும் ஒரு விளையாட்டு [டேய், ரெண்டும் ஒண்ணு தாண்டா!!]

கண்ணாமூச்சி
ஓடி புடிச்சி
கல்லா மண்ணா
கோலி குண்டு
பம்பரம்
சிகரட் அட்டை, சோடா மூடி
காவியம்,
எரி பந்து
பாட்டி பாட்டி ஒன்னுக்கு!
ராஜா ராணி

கண்ணாமூச்சி:

எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதுல தெருவுல ராத்திரி current போனவுடனே விளையாடுவாங்களே!! அது! ice, ice னு தெருவெல்லாம் காட்டுக் கத்தல் தான். பாவம் அந்த பையன் நொந்து போவான்! நான் யாரும் நம்மளை அவ்வளவு சாதரணமா கண்டுபிடிச்சிரக் கூடாதுன்னு என் மூளையை கசக்கி, பிழிஞ்சி ஒரு இடத்துல ஒழிவேன். என் கூட பசங்க வருவாங்க..out ஆனவன் கண்ணை மூடிட்டு 1,2 எண்ணிட்டு இருப்பான். அவன் ready ஆன்னு கேப்பான். என் கூட வர்ற பசங்க ரெட்ட ரெடிம்பான்..எனக்கு
கோவமா வரும்.. ஏண்டா நீ கத்துனா நம்ம இங்கே தான் இருக்கோம்னு easy கண்டுபிடிச்சிருவான்லனு அவனைத் திட்டுவேன்! பல தடவை தனியா போய் ஒழிஞ்சி எவன் கைலயும் சிக்க மாட்டேன்! என்னடான்னு நானே வெறுத்துப் போய் வெளியே வந்தா, out ஆனவனை விட்டு எவனோ ஒருத்தன்..ப்ரதீப் 1, ப்ரதீப் 1 ன்னு கத்துவான்..நான் ஒன்னும் புரியாம என்னடா அவன் தானே out நீ என்னடா பண்றே ன்னு கேப்பேன்!! அதுக்கு அவன் coooooooool ஆ அது போன ஆட்டை நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேம்பான்! அப்புறம் என்ன பலி கடா மாதிரி போய் கண்ணைப் பொத்திட்டு 1,2 எண்ண வேண்டியது தான்..

கல்லா மண்ணா:

பல தடவை போய் நின்னதுக்கப்புறம் confusion வரும். இது கல்லு இல்லைடா இது cement, நீ out தான் என்பான் ஒருவன். ஒவ்வொரு தடவை ஒவ்வொரு rule..ரொம்ப கஷ்டம்பா!

கோலி குண்டு:

கடையில் போய் கோலி வாங்குவதே ஒரு சுவாரஸ்யமான் விஷயம் தான்! கோலி குண்டை வாங்கி கண்ணுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். ரஜினி தெரிந்தால் வாங்குவோம். [இன்றும் பார்க்கிறேன்..ரஜினியாவது, கமலாவது ஒரு மண்ணும் தெரியவில்லை!] தவறிப் போய் ஒருவனுடைய கோலி இன்னொருத்தனோட கோலியில பட்டுருச்சுன்னா போதும்..ஒரு ப்ரளயமே கிளம்பிடும்! டேய் ஏண்டா என் கோலி மேலே கொத்து வச்ச..ஒழுங்கா நீ ஒரு கொத்து வாங்கிக்கோ!! அவன் ஓட, இவன் தொரத்த..
கோலியில் இருண்டு விளையாட்டு உண்டு. 10,20 & பூந்தா. எனக்கு 10,20 தான் புடிக்கும். கோலி season வந்து விட்டால் போதும், தெருவெங்கும் குழி தான்..ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியை எறிய வேண்டும், straight ஆ குழியில் விழுந்தா 90 ல் இருந்து ஆடலாம், இல்லையென்றால் 10,20லிருந்து ஆட வேண்டும். கடைசியில் ஜெயித்தவனுக்கு தோற்றவன் பூரி போட வேண்டும்..நம்ம போட போட அவன் நம்ம கோலி குண்டை பதம் பார்ப்பான். ரத்தக் கண்ணீர் வரும்..நான் வழக்கம் போல்
பூரி தின்றதை விட போட்டது தான் அதிகம்!! :((

பம்பரம்:

அபீட்டா!!! கடைக்குப் போய் நல்லா திருப்பி திருப்பி பார்த்து, ஒரு பம்பரம் வாங்கி, ஈ ஆணி மாட்டி அந்த சிவப்பு கயிரால் அப்படி சுண்டி விட்டா..ஆஹா!! ஹெலிகாப்டர் தான் [மட்டைக்கு இன்னொரு பெயர்!] அபீட்டாவில் இரண்டு வகை உண்டு. சுத்தி விட்டு அபீட்டா எடுப்பது, மட்டை அபீட்டா எடுப்பது. ஒவ்வொருத்தனும் அபீட்டா எடுத்துட்டு குதிப்பான் பாருங்க..awesome game!

சிகரட் அட்டை, சோடா மூடி:

இந்த season வந்துட்டா போதும், தெருவுல ஒருத்தனும் வீடு கட்ட முடியாது. எல்லா தட்டைக் கல்லும் பசங்க வீட்டில் தான் இருக்கும். [bero வுக்கு அடியில்] ஒவ்வொரு அட்டைக்கும் ஓவ்வொரு மார்க். berkely தான் அதிகம் என்று நினைக்கிறேன். அதே போல் தான் சோடா மூடியும்..torino மூடி என்றால் 2 அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது..

காவியம்:

இது பல பேருக்குத் தெரியுமோ, தெரியாதோ..நான் படித்த school ல் இது ரொம்ப பிரபலம், இதை எங்கள் தெருவுக்கு கொண்டு வந்ததில் எனக்கும் என் தம்பிக்கும் நிறைய பங்கு உண்டு! இதில் out ஆனவன் குனிந்து கொள்ள வேண்டும், மற்ற எல்லோரும் அவனைத் தாண்டுவோம். தாண்டும்போது சும்மா தாண்டக்கூடாது..கிழ் கண்டவற்றை சொல்லிக் கொண்டே தாண்ட வேண்டும்: [இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்!]

1. காவியம்
2. மணிக்காவியம்
3. லாகு
4. லாகத்தின் கொக்கு [இதைச் சொல்லும்போது தலையில் கைகளால் கொம்பு போல் வைத்துக் கொள்ளவேண்டும்]
5. லட்சத்தின் மண்வாரி [தாண்டி விட்டு கால்களால் மண் வாரி இறைக்கணும்! இல்லைன்னா outபா!!]
6. சூடா, ஸ்ட்ராங்கா? [இதைச் சொல்வதற்கு முன் குனிந்து நிற்பவனிடம் இதைக் கேட்க வேண்டும், அவன் சூடு என்றால் தாவிக் கொண்டே அவன் பின்னால் எத்த வேண்டும், ஸ்ட்ராங்கென்றால் அவன் மீது உட்கார்ந்து தாவ வேண்டும்..அப்பா! என்ன rule பா]
மற்றபடி வேறு எந்த இடத்திலும் தாவுபவனுடைய கால்கள் குனிந்து இருப்பவன் மேல் படக்கூடாது. பட்டால் out! இது தான் basic rule! என்ன விளையாடுவோமா? ;)


எரிபந்து, cricket :

இந்த மாதிரி விளையாட்டுக்களில் சோலைக் கருது பெரும் பங்கு வகிக்கும்..யார்கிட்ட பந்து வாங்க பணம் இருக்கு சொல்லுங்க..பசங்க நல்லா சுள்ளு சுள்ளுன்னு அடிப்பாங்க..இப்போ நெனைச்சாலும் வலிக்குதுப்பா!!

ராஜா ராணி:

இது indore game பா! எல்லோரும் round ஆ உட்கார்ந்து சீட்டில் ராஜா 10,000, ராணி 5000, போலிஸ் 100, திருடன் 0, மந்திரி, சேனாதிபதி, சேவகன்..எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தார் போல் சீட்டு! சீட்டைக் குலுக்கிப் போட்டு ஆளுக்கு ஒன்றை எடுத்து தான் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் போலீசோ அவன் திருடனைக் கண்டுபிடிக்கனும். அப்பா, இதுக்கு .net programming எவ்வளவோ easy!! எவனைப் பாத்தாலும் திருட்டுப் பயலாத் தான் தெரிவாங்க!!

இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்..எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே எழுதியிருக்கிறேன்! வீதி முழுதும் ice, ice, காவியம், சோடா மூடிகளின் சிதறல்கள், அபீட்டா போன்ற சத்தங்கள் இனி நமக்குக் கிடைக்குமா? அப்படி ஒரு season வரவே வராதா? நம் குழந்தைகள் 5 வயதிலேயே தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே cartoon network தான் பார்க்குமா? வீடியோ கேம்ஸ் என்ற பெயரில் A K 47ல் பல பேரை சுட்டு வீழ்த்தித் தான் வளருமா?

காலம் மாறுகிறதாம்..இப்படியா மாற வேண்டும்..வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே..அது சுழன்று மறுபடியும் இதே இடத்திற்கு வராமல் போய் விடுமா?

எனக்கு இன்று ஒரு உண்மை புரிகிறது..உண்மை பல சமயம் கசக்கத் தான் செய்கிறது!

நான் school க்கு போவதைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லி இருந்தேன். May 15ம் நாள் அரசாங்கத்திலிருந்து விடப்பட்ட விஞ்ஞான் ரயில் பெங்களூர் cantt station க்கு வந்தது. அது ஒரு வாரம் பெங்களூரில் நின்றதாய் ஞாபகம்! சரி இதை சாக்காய் வைத்துக் கொண்டு நம்முடைய வேலையைச் செய்வோமே, நம்முடைய கொள்கையைப் பரப்புவோமே என்று நாங்கள் ஒரு 10 பேர் கிளம்பிவிட்டோம். பத்திரிக்கைகளுக்கும் சொல்லி இருந்தோம். யாரும் அங்கே வரவில்லை. மறுநாள் எங்களுக்கு DECCAN HERALD ல் இருந்து phone வந்தது. அவர்கள் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றார்கள். ஒரு வழியாய் நேற்றைய இதழில் போட்டிருந்தார்கள்.
நான் யார், நீ யார் என்று பாட்டு மட்டும் தான் பாடலை! என்ன புரியலையா? என்னோட ஞாபக மறதியை சொல்றேங்க!! நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் வளந்துட்டே இருக்கு :( அப்படி என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? சொல்றேன், ஞாபக படுத்திக்க வேண்டாமா [அட ராமச்சந்திரா!!]

நேத்து காலையில ஆபிஸ் கிளம்புறேன்! நேத்து என்னோட collegue க்கு last day in the office. So, எங்க team ல இருந்து ஒரு shirt வாங்கி கொடுத்தோம். நான் தான் வாங்கினேன்! சரி அதை மறக்காம கொண்டு போயிரனும்னு மனசுல நெனைச்சுகிட்டேன்! [அப்போ ஞாபக மறதி என்னைப் பார்த்து சிரிச்சுட்டு இருந்துருக்கும்]..என்னோட மீரா ஜாஸ்மீனை [என்னோட bike க்கு நான் வச்ச பேரு..ஹிஹி]start செய்தேன்! கொஞ்ச தூரம் போனவுடன் தெய்வாதீனமாய் ஞாபகம் வந்து விட்டது..அய்யய்யோ bag!!

So, ஞாபக மறதியை பார்த்து நான் அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே என் bag ஐ எடுத்துக் கொண்டேன். [அது அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தது!] வண்டி எடுத்து பாதி தூரம் வந்து விட்டேன். அய்யய்யோ!! BATCH ஐ காணோமே?!! BACK TO PAVILION!! தலையைக் குனிந்து கொண்டே போனேன்..ஞாபக மறதியுடன் சேர்ந்து நண்பர்களும் சிரித்தனர். [எல்லாம் தலை எழுத்து!] அப்பாடா இப்போ எல்லாம் இருக்கு..atlast ஆபிஸ் வந்து சேர்ந்தேன்!!

மாலை 6 அடி அடித்து ஒரு அறை விட்டிருந்தது! [மணி 6:30 ன்னு சொல்ல மாட்டீங்களோ?] programming கடையை மூட்டை கட்டி வீட்டுக்கு புறப்பட்டேன்! [அதே ஞாபக மறதி! அதே சிரிப்பு..என் காதில் விழனுமே?] 7 மணிக்குள் வீட்டுக்குள் இருந்தேன். வழக்கம் போல TV தான். என் நண்பன் வந்தான். "உனக்கு KPN நம்பர் தெரியுமா? நாளைக்கு மதுரைக்கு டிக்கட் கிடைக்குமான்னு கேக்கணும்." அதுக்கு sir, அட நான் தாங்க..உனக்கு indra nagar kpn number வேணுமா, madiwala kpn number வேணுமா என்றேன்? [ஞாபக மறதி தண்ணி குடிச்சுட்டு இருந்தது போல..சிரிச்சு புரையே ஏறிடுச்சு!!] இரு என் cell phone ல இருக்கு என்று எடுக்க போனேன்!

சட்டையில தேட்றேன்? இல்லை!..பேண்ட்ல தேட்றேன்? இல்லை! வீடு பூரா தேட்றேன்? இல்லை! இல்லை!! இல்லை!!! cell ஐ மறந்து office ல வச்சுட்டேன்னு நெனக்கிறேன் என்றேன்.. ஏன் டா? cell number மறந்துட்டேன்னு சொன்னா OK, செல்லயே ஒருத்தன் மறப்பானா? [அதான் மறந்துட்டேனே?] ஆபிஸ் ல தான் வச்சியா என்று ஒருத்தன் குண்டைத் தூக்கிப் போட்றான்..வேற எங்கே போனே? கடைசியில யார் கூட பேசின? கடைசியா எப்போ பாத்த? [இவ்வளவு ஞாபகம் இருந்தா ஏன்பா விட்டுட்டு
வர்றேன்!?]

சரி phone பண்ணி பார்த்தேன்..ring போயிட்டே இருக்கு! யாரும் எடுக்கலை! எனக்கோ வயித்தைக் கலக்குது. என் நண்பன் customer care க்கு போன் பண்ணி எந்த route ல இருக்குன்னு கேட்டுட்டு இருக்கான்! அந்த பொண்ணோ நீங்க first police ல complaint கொடுத்துட்டு FIR எடுத்துட்டு வாங்க நம்ம block பண்ணிடலாம்ன்றா! [ஞாபக மறதிக்கு வயித்து வலியே வந்துருக்கும் சிரிச்சி சிரிச்சி!] ஆபிஸ்ல தான் இருக்கனும்னு நெனச்சு என்னோட collegue க்கு phone போட்டேன்! [2 nd paraல வந்தாரே..அவர் தான்!] அவன் என் desk ல தான் இருந்தான்..இங்கே ஒன்னும் இல்லையேடா உன் desk லன்னான்! சரி நான் பாத்துக்கிறேன், bye என்றேன்..அதுக்கு sir, cool மச்சி என்றான்! [என்னடா cool? உன் cell ஐ நீ தொலச்சிருந்தா தெரியும்..அடிங்...] சரி அங்கே எங்கேயாவது கிடந்தா ring அடிச்சி அப்புறம் இவனுக்கு phone பண்ணி கேக்கலாம்னு என்னோட number க்கு ring அடிச்சேன்..அப்புறம் இவனுக்கு phone பண்றேன்..இல்லைடா மச்சி இங்கே ஒன்னும் கேக்கலை..ok டா..cool மச்சி [டேய் என்னை கொலைகாரன் ஆக்காதேடா!] அதுக்குள்ள என் brother entry! பசங்களக்கு ஒரே ஜாலி தான்..உன் தம்பி வந்துட்டாண்டி..போச்சுடி!! [அப்பா ராசா, எப்பிட்றா..எப்பிட்றா?] எல்லாம் சொன்னேன். office போய் பாக்க வேண்டியது தானேடா? போடா என்று விரட்டினான்!

சரி நம்ம மீரா ஜாஸ்மீன் மேல என் பாரத்தை போட்டு office கிளம்பினேன்...ஊர்ல எல்லாருமே airport road ல தான் இருக்குற மாதிரி அப்படி ஒரு traffic. என்னடா ring பண்ணியும் எடுக்கலை, ring அடிச்சிருந்தாலும் அவனுக்கு கேட்ருந்துருக்குமே? அப்படின்னா அங்கே இல்லையா? யார் எடுத்துருப்பா? நாளைக்கு whole office ஒரு mail அடிக்கனும்..என்னோட cell [2100] tube light தன்னோட தாடைக்கு கீழே வச்சுக்கிட்டு நான் ring அடிச்சாலும் எடுக்காம் பழைய காலத்து நம்பியார் மாதிரி சிரிப்பதாக கற்பனை செய்து கொண்டேன். சரி இனி அது கிடைக்கப் போறதுல்ல..6000/= போச்சே, சரி விடு ஒரு வருஷம் use பண்ணிட்டேல்லே..இப்போ அது வெறும் 4000/= கிடைக்குதுன்னு பேசிக்கிறாங்க..அதுக்கு போய்! அய்யோ அம்மா அப்பா திட்டுவாங்களே..சரி விடு இனிமே நீ சுதந்திரமா திரியலாம்..பேசாம landline வாங்கிட வேண்டியது தான்..ப்ரச்சனையே இல்லை! [green signal!]

office:

என் desk ல சுத்தி முத்தி பார்க்கிறேன்..போச்சு, போச்சு எனக்கு கிடைக்காது..அது இல்லை..தேடாதே! [தருமி range க்கு எனக்குள்ள புலம்பிட்டே..] என்னோட ட்ராவைத்தொறந்தேன்! 8 missed calls உடன் என் cell phone என்னைப் பார்த்து சிரித்தது! என் வயிற்றில் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், தேன் எல்லாம் கலந்து வார்த்தது போல் இருந்தது!!! என் collegue தன் cell phone ல் பேசிக் கொண்டிருந்தான்..இங்கே தான் டா இருக்கு ன்னேன்..எனக்கு கேக்கலையேன்னான்! desk ல் ஒரு JUMBO HEADPHONE கிடந்தது! நான் ok டா cool மச்சி என்றேன்!! [ஹிஹி..அதான் cell கிடைச்சிருச்சுல்ல]

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது அய்யய்யோ இன்னைக்கு bag கொண்டு வரனும்னு நெனெச்சேனே, மறந்துட்டேனே என்று திரும்பினால்...

ஞாபக மறதி கால் மேல் கால் போட்டுக் கொண்டு தன்னுடைய trade mark சிரிப்பை உதிர்க்கிறது!!