நானும் கவிதை போட்டிக்குத் தயார்!

இதோ என் கவிதை..

அன்பை நம்புவோம்; ஆசை அழியும்
இரக்கத்தை நம்புவோம்; ஈகை பெறுகும்
உண்மையை நம்புவோம்; ஊனுக்கு மதிப்பு
எளிமையை நம்புவோம்; ஏக்கம் தணியும்
ஒழுக்கத்தை நம்புவோம்; ஓங்கட்டும் நம் புகழ்

ஒரு பூச்சியின் வாழ்க்கை முடிந்து போயிருந்தது.
போன தடவை ஒரு கதை புடிக்காமல் பட்டென்று
புத்தகத்தை மூடியபோது..

பிடிக்காத கதை படித்து
பட்டென்று புத்தகம் மூடியதில்
சட்டென்று முடிந்தது - ஒரு
பூச்சியின் வாழ்க்கை

பதமான கதையாய் இல்லாவிட்டாலும்
இதமாய் புத்தகம் மூடியிருந்தால்..
வதமாகி இருக்காது ஒரு பூச்சி..

ஒரு பூச்சியின் உதிர்ந்த வாழ்வைப் பார்த்து எனக்கு உதித்த கவிதை இது. எனக்கு இது கவிதையாகப் பட்டது. உங்களுக்கு எப்படியோ தெரியாது. அப்படி
உங்களுக்கு கவிதையாய் பட்டால், இந்த நிகழ்வை மூன்று வடிவங்களில் எழுதி இருக்கிறேன். எந்த வடிவம் சரியானது? இல்லை இதை விட நல்ல வடிவத்தில் எழுதலாமா? கவிதை இப்படித் தான் எழுத வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறதா என்ன?

அந்நியன் : அஞ்சு பேர் விமர்சனம் எழுதுனா தப்பா?

வலை மக்கள் : பெரிய தப்பில்லீங்க

அந்நியன் : அஞ்சு பேர் அஞ்சு தடவை விமர்சனம் எழுதுனா?

வலை மக்கள் : சின்ன தப்பு மாதிரி தாங்க தெரியுது

அந்நியன் : அஞ்சு அஞ்சு பேரு அஞ்சு அஞ்சு தடவை அஞ்சு லட்சம் விமர்சனம் எழுதுனா?

வலை மக்கள் : பெரிய தப்புங்க..

அந்நியன் : அதான் டா இங்கே நடக்குது..

அந்நியனின் நரக தண்டனைக்கு பயந்து, என் விமர்சனத்தை இத்தோடு நிறுத்திக் கொ[ல்]ள்கிறேன்!!