நான் school க்கு போவதைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லி இருந்தேன். May 15ம் நாள் அரசாங்கத்திலிருந்து விடப்பட்ட விஞ்ஞான் ரயில் பெங்களூர் cantt station க்கு வந்தது. அது ஒரு வாரம் பெங்களூரில் நின்றதாய் ஞாபகம்! சரி இதை சாக்காய் வைத்துக் கொண்டு நம்முடைய வேலையைச் செய்வோமே, நம்முடைய கொள்கையைப் பரப்புவோமே என்று நாங்கள் ஒரு 10 பேர் கிளம்பிவிட்டோம். பத்திரிக்கைகளுக்கும் சொல்லி இருந்தோம். யாரும் அங்கே வரவில்லை. மறுநாள் எங்களுக்கு DECCAN HERALD ல் இருந்து phone வந்தது. அவர்கள் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றார்கள். ஒரு வழியாய் நேற்றைய இதழில் போட்டிருந்தார்கள்.
0 Responses