வழி: மடிப்பாக்கம்->வேளச்சேரி->சைதாப்பேட்டை->நந்தனம்->ஆழ்வார்பேட்டை->ராயப்பேட்டை->விவேகானந்தர் இல்லம்.

நடமாடும் விளம்பரம்

வாழ்க தமிழ்!

ஏன் ஆக்சிடென்ட் நடக்காது?

சாலையோர ஓவியங்கள்

மரத்தை வச்சவன்..[போயி சேந்துருப்பான்!]

நகரம்

அசதி? வசதி? சுதி?

வறுமைக் கோட்டின் கீழ்...

தேசிங்கு ராஜா!

காரம்; பலகாரம்!

அணிவகுப்பு

தரை மேல் பிறக்க வைத்தான்...

ஆஞ்சினேயருக்கு இன்று ஒரே ஆனந்தம்!

பட்டம் பறக்கட்டும்

அலையோடு விளையாடி...

உறவுகள்

அறிமுகம்

சகோதரிகள் [எனக்கல்ல!]

வங்கக்கடல்

தனிமை

தோள் கண்டேன்; தோளே கண்டேன்!

சேப்பாக்கம்

வி. இல்லம்

பொழுது போச்சு...


ஜனநாயகத்தில் எனக்கு இருக்கும் ஒரே உருப்படியான உரிமை வாக்களிப்பது; அது இன்று என்னால் முடியவில்லை.
வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லையாம்; நான் ஏன் இந்த அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்கலாம் என்று பார்க்கிறேன்!
"எனி வாலண்டியர்ஸ்" தமிழில்! 

யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை வெளியில் சொல்லக்கூடாது;
ஐ டி கம்பனியில் அப்ரைசில் ரேட்டிங்கை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதை போல.
இரண்டையும் யாருமே கேட்பதில்லை!

ஒரு கதை எழுத வேண்டும்; சோம்பேறி தனமாய் இருக்கிறது! கருவை மட்டும் சொல்லி விடுகிறேன். 
ஒரு நல்ல சிறுகதைக்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!
[போகிற போக்கில் இன்று நான் வலைபதிந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று எழுதாமல் இருந்தால் சரி!!] 

"பாவப்பட்டு ஒருவனுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்தேன். வழியில் ஒரு விபத்தில் நான் தப்பிக்க அவன் இறந்து விட்டான்!" - சுபம்.

மடிப்பாக்கம் அடகு கடைகளாலும் டென்டல் கிளினிக்குகளாலும்  நிரம்பி வழிகிறது! என்ன காரணமாய் இருக்கும்?

முக்குக்கு முக்கு பல பெயர்களில் வீற்றிருக்கும் அம்மன் கோவில்களுக்கும், எல். ஆர். ஈஸ்வரிக்கும், + 2  ரிசல்ட் குறைவதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் படுகிறது!!

அரை கிலோ பொரிகடலை இன்று என்ன விலை தெரியுமா? முப்பத்தி மூன்று ரூபாய்! இதை எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதை வாங்கப் போய் தானே மேல் உள்ள அத்தனையும் பார்த்தது;கேட்டது;சிந்தித்தது!

நிலவு பல்லியின் வாலை ஒத்திருக்கிறது;
அது வெட்ட வெட்ட வளர்ந்து விடுகிறது!
[பொரிகடலை வாங்கினால் ஒரு கவிதை இலவசமாம்!]


சதா அழுது கொண்டே இருந்த
ஒரு குழந்தை தெய்வத்தை
விண்வெளியில் விட்டுச் சென்றது
ஒரு தாய் தெய்வம்

சுற்றிலும் இருள்!
ஆங்காங்கே மினுக்கும்
சிறு சிறு பொறிகளையும், பந்துகளையும்
வேகமாய் நகரும் வெளிச்சங்களையும் 
விநோதமாய் வேடிக்கை பார்த்தது குழந்தை

சுற்றிக் கொண்டிருக்கும் 
சில பந்துகளை
ஆள்காட்டி விரலால் அழுத்தி 
நிறுத்துவதும், மறுபடியும்
அதை சுற்றி விடுவதும்
வேடிக்கையாய் இருந்தது அதற்கு

தெரியாமல் சூரியனில் கை விட்டு
விரலை சுட்டுக் கொண்டது!
கோபத்தில் பலமாய் ஊதிப் பார்த்தது!
இருந்தும் அது அணையாததால்
பூமியிலிருந்து கடலை எடுத்து அதன்
மேல் ஊற்றித் தோற்றது

அடங்காத கோபத்தில் அருகிலிருந்த
செவ்வாயையும் புதனையும்
சூரியனில் எரிந்தது.
அது சூரியனில் புகுந்து 
சாம்பலாவது ஏனோ பிடித்திருந்தது அதற்கு

நேரம் போவதே தெரியாமல்
சுற்றி இருந்த மற்றவைகளையும் 
குழந்தை எரிந்தது; சூரியன் எறித்தது!

இப்படியே நேரம் செல்ல - 
அண்டவெளியில் விளையாடிக் களைத்து
அம்மாவை தேடி அழுதது 
குழந்தை தெய்வம்

இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இத்தனை சீக்கிரம் வலை பதிவேன் என்று! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான் போங்கள் (போங்கள் என்று அடித்தால் பொங்கல் என்று வருகிறது!)  சாப்டுங்க!!

பூனை நடை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமை நடை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த சமயத்தில் சென்னையில் இருந்தால் பார்க்கலாம்! "ஆலிவ் ரிட்லே" என்ற கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் நேரம் இது! [இது தான் சென்னை! புதிதாய் ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும், இப்போ ஆமை!] அதாவது டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை! கடலில் மேட்டரை முடித்துக் கொண்டு [ஆஹா, இந்தப் பையன் இந்த மாதிரி விஷயத்தை எத்தனை நாசூக்கா எழுதுறான்!] சமர்த்தாய் கடற்கரையில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. கடல் ஆமைகள் குளிர்ந்த நீரைத் தவிர்த்து உலகெங்கும் சுற்றித் திரிகின்றன. இந்த வகை ஆமைகளை ஆஸ்திரேலியாவில் பார்த்திருக்கிறார்கள். இவைகள் செப்டம்பர் சமயத்தில் இனப் பெருக்கம் செய்ய இந்தியக் கடல் எல்லைக்குள் வருகின்றன. பெரும்பாலும் சென்னை, ஒரிசா ஆகிய நகரங்களின் கடற்கரைகளில் முட்டையிடுகின்றன.


Students sea turtle conservation network (மேலும் விபரங்களுக்கு: http://sstcn.org/) என்னும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் இரவு பகலாக இதற்காக உழைக்கிறார்கள். ஆமைகள் முட்டையிட இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் வருகிறது. முட்டைகளை மண்ணில் தோண்டி புதைத்துச் சென்று விடுகின்றன. அதன் பிறகு குஞ்சு பொறித்ததா, குட்டி வெளியே வந்ததா என்று எந்தக் கவலையுமில்லாமல் கடலுக்குள் சென்று விடுகின்றன..இந்தக் குட்டிகள் கடலில் சென்று தன் தாயை கண்டு பிடித்து சேர்ந்து கொள்ளும்! (நம்பி விட்டீர்களா? இது என்ன நம் தமிழ் சினிமாவா?) அந்த முட்டைகளை இவர்கள் ஒவ்வொன்றாய் கண்டெடுத்து, நாய், நரி, மனிதர்கள் (அதை காசாக்கவும் சிலர் இருக்கிறார்களே) என்று பலதரப்பிடமிருந்து காப்பாற்றி ஒரு குஞ்சு பொரிப்பகம் கட்டி பாதுகாப்பாய் வைக்கிறார்கள். குஞ்சு வெளியே வர நாற்பத்தைந்து நாட்கள் ஆகின்றன. ஒரு தடவைக்கு நூற்றுக்கணக்கில் ஆமைகள் வெளி வருகின்றன. அவைகளை மாலை வெளிச்சம் மங்கியதும் கடலில் கொண்டு போய் விடுகிறார்கள். முட்டையிலிருந்து வந்த சில நிமிடங்களில் துரு துருவென வெளிச்சத்தை நோக்கி அது ஓடுவதை பார்க்கவே கண் கொள்ளாக்  காட்சியாக இருக்கிறது! இப்படி ஆயிரம் ஆமைகுட்டிகளை கடலுக்குள் விட்டால் அதில் ஒன்றிலிருந்து ஐந்து தான் கடலோரத்தில் இதற்காகவே காத்திருக்கும் மீன்களுக்கு உணவாகாமல், வலையில் மாட்டிக் கொள்ளாமல், கப்பலின் அடியில் சிக்காமல் எல்லா வித ஆபத்துக்களையும் கடந்து பெரிதாய் வளருமாம்! அது தான் பெரிய சோகம்.



நம் உள்ளங்கையில் தங்கி விடும் அளவுள்ள இவைகளா அலைகள் ஆர்ப்பரிக்கும் இத்தனை பெரிய கடலில் வாழப் போகிறது என்று நமக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் நம் கண் முன்னே கடல் ஒரு தாயை போல் அவைகளை உள்வாங்கிக் கொள்கிறது. சற்று முன் அங்கே நூறு குட்டி ஆமைகள் இருந்த சுவடே இல்லை. காவலர்கள் துரத்தி வந்த திருடனை வீட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு எதுவுமே தெரியாதது போல் கதவடைத்துக் கொள்கிறது கடல்! கண் விழித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. கை பிடித்து கூட்டிப் போக தாயும் கூட இல்லை. பல வருடங்கள் பழகிய நண்பனை போல கடலை நோக்கி அவைகள் ஓடுகின்றன. இயற்கையில் தான் எத்தனை விதமான ஆச்சர்யங்கள்! வாழ்நாளில் எல்லோரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று!


தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம். இவ்வளவு சீக்கிரம் ஒரு பதிவுடுவேன் என்று நினைக்கவில்லை. அதுவும் மிகச் சரியான நேரத்தில், மிக அருமையான பதிவு இது. தேர்தலைப் பற்றிய ஒரு ஆவணக் குறும்படம்! தேர்தல் களை கட்டியிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு குறும்படத்தில் வேலை செய்தது மனதுக்கு இதமாய் இருந்தது. அதுவும் டுபுக்காருடன் வேலை பார்ப்பது என்றால் கசக்குமா? முதலில் படத்தைப் பாருங்கள், பிறகு சொல்கிறேன்.


நான் இதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. படமே எல்லாம் சொல்லிடுச்சு. என்ன உடனே ஓட்டு போடணும்னு கை அறிக்குதா? இதை தானே எதிர் பார்த்தோம். படம் ரொம்ப நல்ல வந்துருக்கே, நீ வேலை பாத்தேன்னு சொல்றே, எப்படின்னு தானே முழிக்கிறீங்க? சொல்லிடறேன்! நான் இந்தப் படத்துல அப்படி ஒன்னும் பிரதானமா வேலை பாக்கலை! [அதானே கேட்டேன்!] ராமருக்கு அணில் உதவின மாதிரின்னு வச்சுக்கலாம். படம் எல்லாம் முடிஞ்சு டைட்டில் கார்ட்ல என் பேரை பாத்தீங்களா? அதுக்கப்புறம் தான் என் வேலையே வருது! மை வச்ச கை ஒன்னு வருதே? பாத்தீங்களா? என்ன பாக்கவே இல்லையா? ஹலோ, அது தாங்க நான் போட்ட படம்! 

அதாவது, டுபுக்கார் அவரை உன்னால் முடியும் தம்பி கமல்ன்னு அடிக்கடி சொல்லிக்கிறாரே, ஏன் இவருக்கு இந்த விளம்பரம்னு நெனைசுருக்கேன், அவர் கூட வேலை பாக்கும் போது தான் அது தெரியுது! கமல் மாதிரி தான் வேலை வாங்குறாரு! அவ்வளவு டீடைலிங்! லண்டன்ல உக்காந்துட்டு அந்த விரல் மேல என்ன ஒரு கரை, அந்தக் கலர் இல்லையே இதுன்னாரு! உங்களுக்கு பார்வையே இல்லை; ஜோதின்னு சொன்னேன்! எப்படியோ, என்னையும் ஒரு ஆளாய் மதித்து, ஏதோ நான் ஸ்கூல் படிக்கும் போது டிராமால ஒரு ராணி வருவா, அதுக்கு சாவரி போட்ருக்கேன்னு சொன்னதை கேட்டுட்டு எனக்கு இவ்வளவு பெரிய ரோல் கொடுத்துருக்காரு!  எதோ என்னால முடிஞ்சதை செஞ்சுருக்கேன். உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்குறேன்னு காதல் பட டைரக்டர் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கார், மைன்ட்லையும் வச்சுருக்காரு! பாப்போம்!

Jokes apart, படத்தை பார்த்து விட்டு, தங்களின் மேலான கருத்துக்களை சொன்னால் தன்னியர்களாவோம்! எனக்கு கமெண்ட் போடுகிறீர்களோ இல்லையோ, ஒழுங்காய் சென்று ஓட்டாவது போடுங்கள்! சொல்ல மறந்துட்டேன், இந்த குறும்படத்தை தங்களின் வலைதளத்தில், ட்விட்டரில், ஃ பேஸ்புக்கில் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம்!