மழை, மழைன்னு எழுதி எழுதி blog யே சொத சொதன்னு ஆயிடுச்சுப்பா!! ஒரு change க்கு கொஞ்சம் wague ஆ எழுதிக்கிறேன்!

எழுத ஆரம்பிக்கும்போது இதன் கரு என்னுடைய ஒரு நொடி எண்ணமாக இருந்தது..அது வளர்ந்து இந்த நிலையை எட்டி உள்ளது!

இது ஒரு வரிக் கதை இல்லை
இது sudden ficationa? இல்லை
இது ஒரு கட்டுரையா? இல்லை
இது சுயசரிதையா? இல்லை
ஒரு கவிதையை உரைநடை படுத்த முயற்சிக்கிறாயா? இல்லை!

நான் எழுதி இருக்கும் இந்த பத்திகளுக்கு என்ன பெயர் வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை..அதையும் உங்களிடமே விடுகிறேன்! பல எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!! ஏதாவது எழுதுங்கள் என்று!! அப்படி ஒரு முயற்சி தான் இது..

திடீரென்று அவனுக்கு அந்த பயம் வந்தது..அதை பயம் என்று சொல்ல முடியாது! அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. காலையில்
எழுந்து கண்ணாடி பார்க்கும் போது முதன்முதலாய் தோன்றியது அது. "அட, நம்ம hero மாதிரி இருக்கோமே" என்ற நினைவைத் தொடர்ந்து வந்தது அந்த நினைவு! அந்த கன நேர நினைவை அவனால் ஏனோ அலட்சியப்படுத்த முடியவில்லை. அதை மறுபடி மறுபடி யோசித்துப் பார்த்தான். அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டே இருந்ததால் அந்த நினைவு இவனிடம் நெருக்கமாகி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். இப்பொழுது
அதை நினைத்தால் அவனுக்கு எரிச்சல் வருகிறது. அவன் மீதே அவனுக்கு கோபம் வருகிறது..ஏன் தேவையில்லாததைப் பற்றி இவ்வளவு யோசித்தோம் என்று அவனே அவனைத் திட்டிக் கொள்கிறான்! ஏனோ அவன் படும் பாட்டை அவனுடைய மனசாட்சி ரசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கும் போது, "இல்லை, நாம் இதைப் பற்றி யோசிப்போம்" என்று எடுத்துக் கொடுத்து அவனை எரிச்சல் படுத்துமா? மனம் ஒரு குரங்கு என்று இதற்குத் தான் சொன்னார்களோ, அவனுக்கு என்னமோ அவன் மனம் ஒரு குரங்கல்ல..ஒரு குரங்குக் குடும்பமே தனக்கு மனமாய் வாய்த்திருப்பதாய் அவனுக்குப் பட்டது! அது தன் தோள்களிலும், தலையிலும் ஏறி உட்கார்ந்து தன்னைப் பார்த்து நகைப்பதாகத் தோன்றியது!

எனக்கு அது உறுதி, எனக்கும் கட்டாயம் அது நடக்கும் என்று தெரியும், ஏதோ நான் தெரியாமல் அதைப் பற்றி யோசிக்க ஆசைப்பட்டேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சினான். அது அவ்வளவு சீக்கிரத்திலா மசிந்து விடும். மாறாக இவனை நோக்கி எள்ளி நகையாடியது. ஏய், போச்சுடீ, அது உனக்கு நடக்கும்
பாரு..என்று அவனுக்கு பூச்சி காட்டியது. ஐய்யய்யோ அதற்குள் நாம் ஏதாவது உறுப்படியாய் செய்தாக வேண்டுமே என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது! அது அவனுடைய நிழல் வரை வந்து விட்டதாயும், ஒரு சிறிய காலத்திற்குள் அது அவனைப் பிடித்து விடுவதாயும் அவனுக்குத் தோன்றியது.

இதை 2 வகையாக முடிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது!!

முடிவு 1:

இனி இதை நம்மால் ஜெயிக்க முடியாது, ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவது தான் சரி என்று அவனுக்குப் பட்டது. இதுவும் அந்த குரங்குக் கூட்டத்திலிருந்த ஒரு குரங்கு தான் அவனுக்குச் சொன்னது..அது நல்ல குரங்கு போலும்!! வழியெங்கும் அந்தக் குரங்குகள் கும்மாளம் போட்டுக் கொண்டே வந்தன!! அவன் அந்த
நல்ல குரங்கை அந்த கூட்டத்தில் விடாமல் தேடிக் கொண்டிருந்தான்! ஆனால் அது எப்போதேனும் ஒரு முறை "வழியில் இருக்கும் அழுக்குப் பிச்சைக்காரனைப் பார்த்தோ, சாலை கடக்கும் வயதான கிழவியைப் பார்த்தோ இவனிடம் அவர்களுக்காக பரிதாபப்பட வந்து போய்க் கொண்டிருந்தது!! அது என்ன செய்யும், பாவம் அந்த ஒரு நல்ல குரங்கின் எதிரிகளாய் ஒரு கூட்டமே இருக்கிறதே.. சில சமயங்களில் அவை போடும் இரைச்சலில் நல்ல குரங்கு என்ன சொல்கிறது என்றே அவனுக்குப் புரிவதில்லை!! அவனுக்கு நல்ல குரங்கிடம் பிடிக்காத ஒரு விஷயம் அது சீக்கிரமே தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது!! இப்படி எல்லாம் அசை போட்டுக் கொண்டே அங்கு போய் சேர்ந்தவனுக்கு ஒரு ஆச்சர்யாம் காத்திருந்தது...

உங்களுக்கே இன்னேரம் புரிந்திருக்கும்.....ஆம், அந்த மனோதத்துவ நிபுணருக்கும் அது நேர்ந்திருந்தது!!

முடிவு 2:

அவன் அதுகளிடம் பேசிப் பேசி ஓய்ந்து விட்டான்! குரங்குகள் என்றைக்கு மனிதன் பேச்சைக் கேட்டது என்று அவனுக்கும் புரியத் தான் செய்தது..

ஒருநாள் திடீரென்று, ஒரு வேளை நமக்கு பைத்தியம் பிடிக்கிறதோ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது! "இல்லை, இல்லை..இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கப் போவதில்லை, இதுவும் அந்த குரங்குகளின் வேலை தான்!!" என்று அவன் நினைத்துக் கொண்டான்! அப்படி அவன் மீறி யோசித்தால் அது அவனை உண்மையிலேயே பைத்தியம் ஆக்கி விடும் என்று அவன் உறுதியாக நம்பினான்! ஆகவே நீங்களும் அதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இப்பொழுதெல்லாம், அந்த நினைவு வந்தாலே அவன் மாறாக "சிம்ரனை" யோசித்துக் கொள்வதாய் கேள்வி!!


0 Responses