கொல வெறி பாடல் உலகம் முழுதும் கொல வெறியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது வரை நானூறு விதமாய் அதை பாடி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். கண்ணதாசன், வாலி போன்றோர்கள் பல பாடல்களை எழுதி தமிழகத்தில் காலத்துக்கும் அழியாத பாடலை படைத்தததை, தனுஷ் ஒரே பாட்டில் உலகம் முழுதுக்குமாய் படைத்து விட்டார். ரஜினியின் மருகமன் தனுஷ் என்பது போய், தனுஷின் மாமனார் ரஜினி என்று ஆகிவிட்டது...

மருமகன் மாமனார்(க்)கு ஆற்றும் உதவிஇவன் மாமன்
எந்நோற்றான் கொல்எனும் சொல்!!"

உலகமே சரியென்று ஒப்புக்கொள்ளும் விஷயத்தை நான் எதிர்க்கவில்லை என்றால் அப்புறம் நான் உண்மையான வலைப்பதிவானாய் இருக்க முடியாது! அதன் விதிகளுக்கேற்ப, இந்தப் பாடலில் பெண்களை திட்டுவதால், பசங்களுக்கு பிடிப்பதில் ஆச்சரியமில்லை, பெண்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று நானே என்னை கேட்டுக் கொண்டேன். ஏதோ பெண்கள் தான் பசங்களை ஏமாற்றி விடுவது போலும், பசங்க ஒண்ணுமே தெரியாத அப்பாவிகள் போலவும், பாட்டு வருகிறது. பசங்களுக்காவது காதல் தோல்வி அடைந்தால் தம்மு, தண்ணி இருக்கிறது...பெண்கள் கர்சீப் வைத்துக் கொண்டு கப்சிப் ஆகிவிடுகிறார்கள்! பெண்களை பூமிக்கு ஒப்பிட்டதில் தப்பே இல்லை. ரொம்ப பெரிய மனசு...நம்மை திட்டுகிறார்களே என்று கூட உணராமல் தினமும் முகப்புத்தகத்தில் இந்தப் பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்! 

சரி, என்னை போன்ற பெண்ணியவாதி எங்கே இருக்க போகிறார்கள், வழக்கம் போல் நாமே இதற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பெண்கள் பார்வையில் ஒரு கொல வெறி பாடல் சமூகத் தேவை என்று உணர்ந்தேன். இது வரை அப்படி ஒரு வெர்ஷன் வந்திருக்கிறதா என்று சில நண்பர்களை கேட்டேன், இல்லை என்றார்கள். [ஆனால், வந்திருக்கிறது!] சரி அப்படி ஒரு உன்னதமான பாடலை எழுதி இதை கல் வெட்டில் பொறித்தால் நாளை வரும் சந்ததிகள் இதை படித்து புரிந்து நடந்துப்பாங்கல்ல! பெண்களின் சமூகத்துக்காக இத்தனை பாடு படும் எனக்கு இதற்காகவாவது நோபல் பரிசு தர வேண்டும்! ஒரு அழகான பாடத் தெரிந்த பெண் [white skin gal :-)] இதை பாடி வீடியோ எடுக்க முன் வந்தால் சொல்லுங்க...நானும் தனுஷ் மாதிரி அந்த வீடியோல ஒரு பங்கெடுத்துக்குறேன். இனி பாட்டு...

Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri  a da..

distance la god-u god-u
god-u made-u boys-u
boys-u follow gals-u gals-u
gals life-u gone-u

black-u skinu boy-e boy-e
boy heartum black-u
eyes-u eyes-u meet-u meet-u
i am future mom-u

hey, notes eduthukko, appadiye kerchief eduthukko

super di..ready 1, 2, 3, 4

what a change over di!

ok di, now tune change-u

kanla glassu...

only english

eye la glassu 
glass la coolu
looku fulla terroru
this love-u
if it fails-u
looksu next figure-u

1. 
loveu loveu they will tellu
its all-u for sexu
sexu sexu that is nextu
always love is firstu!

2. 
love-u love-u they will tell-u
its all-u to cheat-u
how-u how-u we will tellu-u
that is boys-u thougt-u

1 வது வரிகளில் சொல்லியிருப்பது அப்பட்டமான பெண்ணின் மனநிலை. இருந்தாலும் "செக்ஸ்" என்றெல்லாம் வரக் கூடாது என்று நினைத்தால் 2 வது வரிகளை எடுத்துக் கொள்ளலாம்.


godu why you made bad boysu
where are good guys-u?
this songu for poor galsu
we have less choice-u

Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri  a da..


நன்றும் இன்றே செய் என்பது சான்றோர் வாக்கு! நாட்குறிப்புகளை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். பார்க்கலாம்..இது எத்தனை நாட்கள் என்று...

நேற்று இரவு தாமதமாய் தூங்கியதால் இன்று காலை தாமதமாய் எழுந்தேன். அதற்காக எட்டு மணிக்கு எழுந்தேன் என்று என்னை தவறாய் நினைத்து விடாதீர்கள். பத்து பத்தரைக்கு தான் எழுந்தேன்! அலுவலகம் போகவில்லை. சில நாட்கள் விடுப்பில் இருந்ததால், டீமிலிருந்து விடுவித்து விட்டார்கள். அடுத்த ப்ராஜக்ட் கிடைக்கும் வரை கொஞ்சம் வெட்டி தான்! வீட்டிலிருந்தே மெயில் பார்த்தேன். மதியம் ஒரு மணி வாக்கில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றேன். இப்படி வெட்டியாய் இருப்பதால், இதெல்லாம் சாத்தியமாகிறது! மகிழ்ச்சி! 

கி. ராஜநாராயணின் "கதவு" சிறுகதை படித்தேன். அருமை! அவரின் புகைப்படங்களுடன் கூடிய அவரின் சரிதம் ஒன்றை படித்தேன், நடிகர் சிவக்குமாரின் டைரிக் குறிப்புகளை படித்தேன் [இது நினைவுக்கு வர நான் படாத பாடு பட்டேன்!], அட இப்படி எல்லாம் எழுதினால் எழுத்தாளர் ஆகி விடலாம் போலிருக்கிறதே என்று ஒரு யோசனை முளைத்தது. [சிவக்குமார் பாவம், அவரை திட்டாதீர்கள்]

பிறகு....

.....

......

...... [பொறுங்கள், யோசிக்கிறேன்!]

மறந்து விட்டது! ஆ! ஐந்து மணிக்கு வீடு வந்தேன். தேநீர் குடித்தேன். ரசம் வைத்தேன்! [இன்றிலிருந்து நான் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை தொடங்கி இருக்க வேண்டாம்!] சப்பென்று இருந்தது. கலைஞர் டீவியில் அருந்ததி பார்த்தேன். அனுஷ்கா இருக்கும் காலத்தில் நாம் இருப்பது நமக்கு எவ்வளவு பெருமை! திடீரென்று படம் வரைய வேண்டும் போலிருந்தது. கொஞ்சம் கிறுக்கினேன். பிகாசோ அளவுக்கு இல்லையென்றாலும் பிரதீப் அளவுக்கு வந்தது! என்ன ஒன்று பல்லைக் காட்டி சிரிக்கும் போட்ரேட்டுகள் வரைந்தால் பிசாசுகள் போல் ஆகி விடுகிறது! பசித்தது. நான் செய்த ரசத்தை நானே சாப்பிட்டேன். தாஸ்தாவெஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" டைட்டில் ஞாபகம் வந்தது!

கடைசியாய் என் மனைவி எடுத்த என்னுடைய அருமையான புகைப்படம் ஒன்றை முகப்புத்தகத்தில் ஓட்டினேன். இன்றைய நாள் இனிய நாள்!

பின் குறிப்பு:

இது எழுதி முடித்ததும் ஒன்று விளங்கியது. இரவில் நாட்குறிப்பு எழுத பகலில் நடந்தவைகளை எல்லாம் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி என் மூளையை வறுத்த எனக்கு இஷ்டமில்லை [பல்லிருக்குறவன் பக்கோடா சாப்பிடுவான்!] அதனால், இனிமேல் நாட்குறிப்புகள் எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்!! 
சாருவின் EXILE நாவல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். காமராஜர் அரங்கம் விசாலமாய் ஜம்மென்று இருக்கிறது. என் டூ வீலரை பார்க் பண்ணும்போது பார்க்கிங் ஏரியாவை பார்த்தேன். அங்கே ஏற்கனவே பார்க் பண்ணியிருந்த இன்னோவா கார்கள் சின்ன நாய்க்குட்டி சைசில் தெரிகின்றன! அத்தனை விசாலமான ஏரியா. என் வீட்டு பார்க்கிங்கில் என் சான்ட்ரோவை நிறுத்துவது ஏதோ தண்ணி லாரியை நிறுத்துவது போலிருக்கிறது! காமராஜர் அரங்கம் கலைஞர் ஆட்சியில் கட்டப்படவில்லையோ என்னமோ, இன்னும் அம்மாவின் கண்களை உறுத்தாமல் அது காமராஜர் அரங்கமாகவே இருக்கிறது!

வழக்கம் போல் இந்திய நேரந்தவறாமை விதியின் படி விழா சற்று தாமதமாய் தொடங்கியது. நான் போய் அமர்ந்தவுடன், கொலைவெறி பாட்டு ஒலித்தது. பிறகு இச்சு இச்சு இச்சு குடு பாடல். விழாவில் யாரும் யாருக்கும் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு கூட்டமே சென்று மேடையில் அமரவில்லை. மேடையில் இருப்பதால் பேசி முடித்ததும் தான் போகவேண்டும் என்று இல்லை என்று சாரு மேடையில் அமர்ந்திருப்பவருக்கு சொல்லி விட்டார். இப்படி ஒரு இலக்கிய விழாவுக்கான எந்த வித மேடைச் சம்பிரதாயமுமில்லாமல் இருந்தது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. விதிமுறைகளை உடைப்பதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான்!

விழாவை சாருவே தொகுத்து வழங்கினார். வாழ்த்துரை வழங்க வாலி அவர்களும், நாவல் திறனாய்வு செய்ய இந்திரா பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தனர். இருவரையும் சாரு எந்த வித முன் பின் அணிந்துரைகள் சேர்க்காமல் வெறும் அவர்களின் பெயரை சொல்லியே பேசியது வித்தியாசமாய் இருந்தது. அப்படி எந்த ஒரு மேடை அலங்காரமும் இல்லாமல் அவர் சாதரணமாய் பேசியது நன்றாகவே இருந்தது. ஆனால் அவரே சொன்னது போல், அவருக்கு சரியாய், கோர்வையாய் பேச வரவில்லை. அவர் ஒரு பேச்சாளர் இல்லை என்பதால் மன்னிக்கலாம்! வாலி வாழ்த்துரை வழங்கினார். எண்பது வயதிலும் அவரின் குரல் வளம் அருமை! இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் அதே அளவு வயதுள்ள இந்திரா பேசும்போது எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு பேசியது போல் குளறிப் போயிருந்தது. ஆனால் வாலியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் பாடல் வரிகள் போல் இளமையாய் இருந்தது. வாலி சுவாரஸ்யமான பேச்சாளர். அபாரமான ஞாபக சக்தி அவருக்கு. அவரின் வாழ்க்கையில் நடந்த இரு நிகழ்ச்சிகளை சொன்னால் போதும், அந்த விழா சூடு பிடித்து விடும். சாருவை பற்றி நிறைய விமர்சனங்கள் இருப்பதை பற்றி பேசும்போது எவன் ஒருவன் விமர்சனத்துக்கு உள்ளாகிறானோ, அவனே அறிவாளி என்றார். மரவட்டையையும், மண்புழுவையும் எவனும் விமர்சிக்க மாட்டான். நல்ல பாம்பை தான் விமர்சிப்பான் என்றார்!

இந்திரா பார்த்தசாரதி பேசும்போது தனக்கு இத்தனை பெரிய கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. எப்போதும் தான் பேசும் இலக்கிய விழாக்களில் இருபது, முப்பது பேர் தான் இருப்பார்கள் என்றார். நாவலைப் பற்றி சொல்லும்போது சுருக்கமாய் இது ஒரு சாப்ஃட் போர்ன் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. இது ஹாட் போர்ன் என்றார். படிக்க இஷ்டமிருந்தால் படியுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள் என்றார். 

மதன் சிறிது நேரம் பேசினாலும் மிக நன்றாய் பேசினார். இப்படி ஒரு நாவல் வெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கத்தில் வைக்க ஒரு தைரியம் வேண்டும் என்றார். இப்படிப் பட்ட நாவல்கள் பத்திரிக்கையில் தொடராக வருவது சாத்தியமில்லை. ஏனென்றால் ரசனை அல்லாத, தைரியம் அல்லாதவர்களே எந்த ஒரு துறையிலும் உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்களால் இத்தகைய நாவல்களை எல்லாம் கொண்டு வர முடியாது என்றார். இந்த நாவலில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருப்பதாக சொன்னார். 

இவர்களை தவிர வெற்றி மாறன், ஞானி போன்றோரும் வந்திருந்தார்கள். சாரு சிறப்புரை என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  பெரும்பாலும் அவரின் வலைதளத்தில் இருக்கும் சுய புலம்பல்களாய் இருந்தது. ஒன்று கவனித்தேன். சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புகழ்வார் போலிருக்கிறது! வாலி ஒரு முறை அவரைப் பற்றி விகடனில் எழுதியவுடன் அவரிடம் நட்பு வைத்துக் கொண்டார். ஆனால் அவரை அறிமுகம் செய்கிறேன் என்று அவர் பேசியதிலிருந்தே, வாலியை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. இச்சு இச்சு குடு படலை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். ஆனால் வாலியின் வேறு எந்த நல்ல பாடலையும் அவரால் மேற்கோள் காட்ட முடியவில்லை. தளபதியில் எதோ ஒரு பாட்டு என்று பாதியில் விட்டு விட்டார். ஞானியை அவ்வளவு திட்டியவர், இன்று அவர் வந்தார் என்றதும் தனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு இருந்தது உண்மை, ஆனால் அவரை போல் எழுத்தாளர் இல்லை என்று பேசுகிறார். ஜெயமோகன் வந்திருந்தால் அவரையும் பாராட்டி இருப்பாரோ என்று தோன்றியது! 

என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது, தான் ஐரோப்பா சென்றது பற்றி, தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்பது பற்றி, கேரளாவில் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி, உத்தம தமிழ் எழுத்தாளனைப் பற்றி, சினிமாவில் இவரை யாருமே கண்டு கொள்ளாதது பற்றி இவர் பேசாமல் இருப்பது நலம். இதை செய்தால் போதும் இவர் உலகம் போற்றும் பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இரு வாரங்களுக்கு முன் நடந்த எஸ். ரா வின் இலக்கிய சொற்பொழிவுக்கு நான் சென்றேன் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாள், சற்று தாமதமாய் சென்றேன். கடைசி வரிசையில் ஒரு மனிதரின் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாய் இருந்தது. அமரலாமா என்று கேட்டேன். அவர் தலையாட்டினார். பார்த்தால் அவர் சாரு! அட, இவர் பக்கத்திலா நாம் அமரப் போகிறோம் என்று அமர்ந்தேன். நான் ஒரு வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தேன். [இலக்கிய விழா என்பதற்காக அல்ல, வெயில் காலத்தில் அதை அவ்வளவாய் போட முடிவதில்லை, அதனால் மழை காலத்தில் அந்த உடையை தேர்ந்தெடுத்தேன்] அவர் என்னை பார்த்தார் என்று நினைக்கிறேன். எஸ். ரா. பேச ஆரம்பித்து விட்டதால் நான் இவரிடம் எதுவும் பேசாமல் அவரின் பேச்சை கேட்க ஆரம்பித்தேன். அன்று விழா முடிந்ததும் இதைப் பற்றி என் மனைவியிடம் சொன்னேன். நீங்கள் அவரிடம் பேசவில்லையா என்று கேட்டாள்! அவரிடம் நான் என்ன பேசினாலும், நாளை வலைதளத்தில் குர்தா அணிந்து கொண்டு ஒருத்தன் வந்தான், என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டான் என்று பதிவிடுவார். இது எனக்குத் தேவையா என்றேன். இன்று விழாவில் திடீரென்று குர்தா அணிந்து கொண்டு ஒருவன் ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வந்தார், அது அவருக்கு மிகவும் ஆபாசமாக இருந்தது. ஏன் இந்த உடை என்று கேட்டேன், அதற்கு இலக்கிய விழா என்றார்கள், அதனால் அப்படி வந்தேன் என்று பதில் சொன்னார் என்று கூறி கலாய்த்தார். அன்று அப்படி இன்னொரு ஆள் வந்திருந்தாரா, அல்லது என்னை நினைத்து மற்றதெல்லாம் அவரே இட்டுக் கட்டி சொன்னாரா தெரியவில்லை. ஆஹா, நாம் எதுவுமே பேசாமலேயே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தேன்!!