தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் போல்..மீண்டும் ஒரு sudden fiction கதை..

சூலமங்களம் சகோதரிகள் பக்கத்து கோயிலிலிருந்து தலையில் தட்டி எழுப்பினார்கள்! விடிந்து விட்டதா? அதற்குள்ளா? இப்போ தானே படுத்தேன்..திடீரென்று
நேத்து ராத்திரி நடந்தது ஞாபகம் வந்தது!! நினைக்கவே குஜாலா இருக்கே..எப்படி நான் இப்படி எல்லாம் பண்ணேன்? நான் சாதுவாச்சே..நேத்து ராத்திரி நீ
பண்ண கூத்தைப் பாத்தா உன்னை யாராவது சாதுன்னு சொல்வாங்களாடா? என்று மனசாட்சி திட்டியது..

மனசாட்சி அன்னாத்தே, இதெல்லாம் உன்னை பக்கத்துல வச்சுட்டு செய்ய முடியாது..நீ கொஞ்சம் ஓரங்கட்டிரு, ஆமாம் என்றேன்!

எல்லாம் அவன் பண்ண வேலை, அவனுக்கு அது தான் வேலையே..தெய்வாதீனமா எனக்கு இப்படி ஒரு friend..திடீர்னு நேத்து evening phone பண்ணி டேய்,
ரொம்ப நாளா ஏங்கிகினு கிடந்தியே, இன்னைக்கு night ஒரு 12:30 க்கு அப்பால அத்தெ ஓட்டிட்டு வர்றேன்..உன்னோட தாகம் எல்லாம் இன்னைக்கோட close
இன்னா? என்றான்..அவனும் அவன் தமிழும்!! எனக்கு தலை கால் புரியவில்லை...office இருந்து சீக்கிரமே கிளம்பி, எல்லாம் ரெடி பண்ணனும்ல? ஹிஹி..

அவனுக்காக wait பண்ணி பண்ணி தூங்கி போயிட்டேன்..கதவு தட்டும் சத்தம்..தூக்கி வாரி போட்டது..அவன் தான்..என்னைப் பார்த்து குறும்பாய் சிரித்தான்..கீழே
தான் நிக்குது..ஜமாய்னான்!!! அப்பாடா, ஒரு 1 மணி நேரம் பெண்டு கழண்ட்ருச்சுப்பா....

சிகெரட் கையை சுட்டது, oh flashback முடிஞ்சுட்டதா என்று பாத்ரூம் நோக்கிப் போனேன்! மனசில் இன்னும் பட்டாம்பூச்சி பறந்தது!!

பாத்ரூமைத் திறந்தேன்..எல்லாவற்றிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது!! அந்த ஆண்டவானாப் பாத்து தான் எனக்கு தண்ணி லாரி ஓட்றவனை friend ஆ
அனுப்சிருக்காரு என்று ஒரு கும்பிடு போட்டு, "குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?" ஹிஹி..குஷி வந்துட்டா நான் பாடுவேன்.ஹிஹிஹி...

0 Responses