ஐய்யாயாயாயாயா!!

ஐம்பதாவது பதிவு!
[profile ல 45 காட்டினா நான் பொறுப்பில்லை..வேணும்னா எண்ணிப் பாத்துக்குங்கோ!! ஆமா!]

க்ளரிஹ¤ [Clerihew]

சென்ற வாரத்துக்கு முந்தின வார விகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில் க்ளரிஹ¤ [Clerihew!] என்ற ஒன்றை சுஜாதா அறிமுகப் படுத்தி இருந்தார்.

ஒரு க்ளரிஹ¤ என்பது எப்படி இருக்கு வேண்டுமென்றால்:

1. 4 வரி கவிதை
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்து
3. Rhyming ஆக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்!

அவ்வளவு தான்..எங்கே எழுதுங்கன்னுட்டார்! அவருக்கென்ன...

அவர் வாக்கு தான் நமக்கு வேத வாக்காச்சே..ஏற்கனவே 1 வரிக் கதைகள், Sudden Fiction கதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று பல அரிதாரங்களை பூசிக் கொண்டு சுற்றிய எனக்கு இது என்ன பெரிய விஷயமா...[ஆடாதடா..ஆடாதடா..மனிதா! ரொம்ப ஆடினென்னா அடங்கிடுவே மனிதா..!! ஆமா ஏன் இந்த பாட்டு இப்போ நினைவுக்கு வருதுன்னு புரியலையே!]

சரி ஒரு பிரபலமானவரை கேலி செய்ய வேண்டும், அவ்வளவு தானே..உடனே பத்மாசுரன் ஆகிவிட்டேன்..வரம் கொடுத்தவர் தலையிலேயே கையை வைத்தேன்!

விடிவு காலம் பிறக்காத
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

முடிஞ்சது க்ளரிஹ¤! சரி இதை நம்ம எங்கே விகடனுக்கெல்லாம் அனுப்புறது என்று நினைத்து தேசிகனாரை கனக்டினேன்.. [phone sir!] அவர்கிட்ட இதைப் பத்தி சொல்லி,
சார், நீங்க எப்படியும் சென்னை போய் சாரைப் பாப்பீங்கள்ல..இது சரியான க்ளரிஹ¤ ஆ என்று கேட்டு வாருங்கள் என்றேன்! அவரும் Big மனது பண்ணி சாரிடம் கேட்டு வந்தார். [சுஜாதாகிட்ட என் writing போயிருச்சாக்கும்! நான் லேசுபட்டவன் இல்லங்கானும்!!] சுஜாதா சார், "பரவாயில்லையே இந்த பிரதீப் பையன் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைய வச்சுட்டானேன்னு" சொல்லி, "என் நண்பர் தேசிகனின் நண்பர் பிரதீப் எழுதிய க்ளரிஹ¤ இது" என்று அடுத்த கற்றதும் பெற்றதுமில் வரும் என்று காலை, பகல், சாயந்திரம், இரவு என்று பல கனவு கண்டு கொண்டிருந்தேன்!

தேசிகன் சென்னையிலிருந்து திரும்பியதும், என்ன சார், என்னோட விஷயத்தை சார்கிட்ட சொன்னீங்களான்னு கேட்டேன்! அதுக்கு அவர், "சொன்னேன்..இது தப்புன்னு
சொல்லிட்டாரு..rhymingஆ இல்லையே..4 வரியும் rhyming [rhyming தமிழ் வார்த்தை என்னப்பா!??!] இருக்கனுமாம்" என்று சொல்லி இருக்கிறார். நான் துளி கவலை படனுமே..Never! எப்படியோ நம்ம எழுத்து சார் வரைக்கும் போயிருக்கேன்னு சந்தோஷப்பட்டேன்! [எனக்கென்னமோ, இந்த celebrities எல்லாம் வானத்துல இருந்து குதிச்சவாளோன்னு ஒரு சந்தேகம்!]

ரொம்ப ரொம்ப நன்றி தேசிகன்!!

சரி இப்போ அதை எப்படி சரி செய்வது?

கேட்டையே விளைவிக்கும்
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

[கேட்டு, ஓட்டு..எப்படி?..என்ன இது Software ல Programming Version மாதிரி upgrade பண்ணிட்டே இருக்கியேன்றேளா?]

சரி என்ன இப்போ rhyming ஆ இருக்கனும் அவ்வளவு தானே..current hot topic எது? அதை எடு..இதோ க்ளரிஹ¤!!

தொடாத இடம் தொட்டு
படாத பாடு படுகிறார்
மடாதிபதி
ஜெயந்திரர்!!

[அதுவா வருதுப்பா!]

அடுத்து ஒரு பெரிய பிரபலத்தைப் பற்றி..

நல்ல பெயர் எடுப்பான்
எல்லா புகழும் அடைவான்
இன்று யாருக்குமே தெரியாத
பிரதீப்

இதில் க்ளரிஹ¤ வின் இலக்கணம் பொருந்தியிருக்கிறதா என்று பார்ப்போம்.

1. 4 வரியில் இருக்கிறது
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்வது - இங்கு நான் என்னை பிரபலமானவனாய் காட்டியிருப்பதே கேலி செய்வதாகிறது!
3. ஓரளவுக்கு Rhymingஆகவும் இருக்கிறது..

என்ன இப்போ ஒத்துண்ட்டேளா?


3 Responses
  1. Anonymous Says:

    Medhai endrunnai karudhi
    Theyvai Ilaathathai Ezhudhi
    Velai Ilaathathai Niroobi - Idhuve
    Pedhai ezhuthaalarin niyathi.

    (Nijamaave andha jeyendrar clerihew nalla irundhadhu.. idupola innum nirya try pannunga
    with regards -Pavithra. After reading your blog I became fan of you sir. I tried a clerihew on you which is at the top)


  2. Anonymous Says:

    Respected sir,
    why there is no comment from you for my comment on your clerihew? why so delay..Guru girunnu solli thappikka paakkaatheenga.. i am your fan and accept me as your fan