ஆய்த எழுத்தின் தாக்கத்தில் ஒரு கதை சொல்ல முயல்கிறேன்...

இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது..oh i am sorry..நீங்க கதை கேக்குறீங்களோ, என்னை introduce பண்ணிக்கிறேன்..என் பெயர் ஜார்ஜ். பெங்களூரில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவன். என்னோட பிள்ளங்களுக்காக train ticket reserve பண்ண இங்கே வந்திருக்கேன்..சரி கதைக்கு போலாம்...நான் என்ன சொல்லிட்டு இருந்தேன், ஆமா, இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது! காலையில் வந்தால் காலியாக இருக்கும், easyயா reserve பண்ணிட்டு போயிடலாம்னு நினச்சேன், ஆனா எப்படியோ கிளம்ப 9:00 மணி ஆயிடுச்சு..வெளியே வரைக்கும் Q நிக்குதே..சரி வேற வழி, இந்தப் பையன் பின்னாடி நிக்க வேண்டியது தான்..

ஒரு பெரிய bag தொங்குது அவன் பின்னாலே, அவன் அங்கே இங்கே ஆடும் போது எனக்கு பட்டது..நான் கையாலே கொஞ்சம் தடுத்தேன், பின்னால் திரும்பி என்னைப் பார்த்து sorry சொல்லிக் கொண்டே bagஐ முன்னாடி போட்டுக் கொள்கிறான்..சின்ன பையனா இருக்கான்..இங்கே MCA படிச்சுட்ருப்பான், வேற என்ன படிக்கிறாங்க இந்த காலத்து பசங்க..எல்லாரும் computer ஐ கட்டிட்டு அழறான்! ஆமா, என்னது? இந்த பையன் கையில form யே இல்லயே..ஒருவேளை இவன் friend உள்ளே இருப்பானோ? கொஞ்சம் உள்ளே சென்றவுடன் அவன் என்னிடம் திரும்பி, Sir, can you please hold this place? let me get my form என்றான். ஒஹோ முதல்ல இடத்தை புடிச்சி வச்சுட்டானா, புத்திசாலி பசங்க தான் என்று நினைத்துக் கொண்டே தலை ஆட்டி வைத்தேன். அவன் வருவதற்கும் எங்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைக்க சரியாக இருந்தது.

form fillup பண்ணிக் கொண்டிருந்தவன் திடீரென்று என்னிடம் sir, can you please tell me which train starts from chennai on this sunday night? நான் அவனிடம் தெளிவாய் கேட்டுத் தெரிந்து கொள்வதற்குள் அந்தப் பையனுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெண் (குத்துமதிப்பாய் 20 வயதுக்குள் இருக்கும்), u can come in this train என்று ஒரு train பேரை சொன்னாள்! அவன் ஒரு வழியாய் fill செய்து முடித்தான். இந்தப் பையன் பரவாயில்லை, அந்த பொண்ணு சொன்ன train பேரை எழுதிட்டு அவளுக்கு thanks சொன்னதோட சரி, அவகிட்ட பேசலை..எப்படா பொண்ணுங்க பேசுவாங்க, எப்படி bracket போடலாம் என்று இருப்பவர்கள் மத்தியில் இவன் கொஞ்சம் Gentle தான். அவனிடம் மெதுவா பேச்சு கொடுத்தேன், வயசாயிடுச்சுல்ல..சும்மா இருக்க முடியாது...

இவ்வளவு கூட்டம் இருக்கேன்னு அங்கலாய்த்தேன், அவன் அதற்கு coolஆ இல்லை, சீக்கிரம் முடிஞ்சுடும் இங்கே service நல்லா இருக்கும்..என்றான். கொஞ்சம் விட்டவுடன் அந்தப் பெண் அந்தப் பையனை பிடித்துக் கொண்டாள்..ஏதேதோ அவனைக் கேட்டாள், இவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து where are you from என்றேன், அதற்கு அவன் திருச்சி என்றான்...do you know tamil then? என்றேன்..எனக்கு நல்லா தமிழ் தெரியும் என்றான். என்னால் நம்ப முடியவில்லை. சில நேரங்களில் நம்முடைய ஆட்களை நமக்கு அடையாளம் தெரியாமல் போய் விடுகிறது. அவனுடைய வெள்ளைத் தோலைப் பார்த்து நான் ஏமாந்து விட்டேன், பிராமணனாய் இருப்பானோ என்னவோ..

நான் - திருச்சியில் எங்கே?
அவன் - தில்லை நகர்.
நான் - இங்கே என்ன பண்றே?
அவன் - software engineer
நான் - எங்கே?
அவன் - IBM
நான் - இப்போல்லாம் எல்லாரும் software ல தான் வேலை பாக்குறீங்க..இல்லையா?
அவன் - MCA, BE படிச்சவொன்னே நேரா bangalore தான்..bangalore is major target. [அவளைப் பார்த்து சிரிக்கிறான், இது என்ன அவளும் சிரிக்கிறாள்!!]
நான் - nowadays callcenters are in high boom.
அவன் - ம்ம்..daily recruitment இருக்கு, நீங்க வந்தா கூட உங்களையும் எடுப்பான். [அவள் சிரிக்கிறாள்!]
நான் - என்ன Qualification அதுக்கெல்லாம்?
அவன் - +2 pass. that's it!! [அட, இதுக்கும் ஒரு சிரிப்பா?]

கொஞ்சம் மெளனம்....அவரவர் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்...

நான் - ஆமா, திருச்சியில மழை பெய்யுதா? [Land Mark question! if you don't know what to talk? you can always start with this!!]அவன் - எங்கே சார், நல்லவங்க எல்லாம் இங்கே வந்துட்டோமா, மழையே இல்லை..[எனக்கு புரியலை..இதற்கும் ஏன் அவள் சிரிக்கிறாள்? இந்த முறை கொஞ்சம் கூட]

நாங்கள் முதல் rowல் இருந்தோம். அவன் ஏதோ அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான். இந்தப் பெண் குழந்தைகளுக்கு விவஸ்தயே இல்லை..எதுக்கெடுத்தாலும் கெக்கே புக்கேன்னு சிரிக்க வேண்டியது..அப்புறம் அவன் கண்ணடிக்கிறான், பின்னாடி வர்றான்..கையைப் பிடிச்சி இழுக்கிறான் என்பது.. சரி மிச்சத்தை அப்புறம் கேக்கலாம்..நான் டிச்கெட் reserve பண்ணிக்கிறேன்..

3 பேரும் 3 counter ல் நுழைந்தோம்..அவன் reserve செய்து விட்டு அவளிடம் மட்டும் see you pa! என்று சொல்லிக் கொண்டு என்னைப் பார்க்காமல் போகிறான்!!அவளும் சிரித்து வழி அனுப்புகிறாள்..[அதற்குள் சினேகமா? கலிகாலம்]


இரவு விளக்கணைத்து
போர்த்திக் கொள்ளும் போது
ஒரு நாளும்,
ஒரே முறையில்
கால்கள் போர்வைக்குள்
போவதில்லை...

மழைக்கு ஒதுங்கினோம்

மழைக்கு ஒதுங்கிய
உன்னை ரசித்துக் கொண்டிருக்கிறேன்!

இதோ நின்று விடுவேன்
என்று என்னை அழவைத்துக் கொண்டும்

இப்போதைக்கு நிற்க மாட்டேன்
என்று உன்னை எரிச்சலூட்டிக் கொண்டும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை!

2 நாட்கள் சென்னை சென்று குதியாட்டம் போட்டு வந்த களைப்புடன் பதியும் பதிவு இது! என் நண்பனின் தங்கை கல்யாணத்திற்கு எங்கள் சென்னை நண்பர்களை அழைக்கச் செல்கிறோம் என்ற ஜமுக்காளத்தில் i mean போர்வையில் இங்கிருந்து ஒரு 9 பேர் சென்றோம்.. சரி இனி over to சென்னை!

எனக்கும் சென்னைக்கும் ஏதோ ஜென்மாந்திர தொடர்பு இருக்கிறதென்று நினைக்கிறேன்! அல்லது, சினிமாவை எனக்குப் பிடிப்பதால் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கிறதோ என்னவோ! சென்னையில் இருக்கும் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தும் நான் பொறாமைப் படுவதுண்டு..அந்தப் பிச்சைக்காரன் கேட்டால் என்னை கயிதே, கஸ்மாலம், சாவுகிராக்கி என்று திட்டிக் கொண்டே தன் திருவோட்டாலேயே அடிப்பான் என்று நினைக்கிறேன்! [தயவு செய்து இதை யாரும் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!]

முதல் நாள் MGM, இரண்டாம் நாள் மகாபலிபுரம்..அவ்வளவு தான் எங்கள் plan..அந்த EAST COAST ROAD ல் கட்டிப்பிடித்து பைக்கில் செல்லும் ஜோடிகளைப் பார்க்கும் போது..ஹ¤ஹ¤ஹ¤ஹ¤ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! வேறென்ன பெருமூச்சு தான்..

1. நாங்கள் தங்கி இருந்தது திருவல்லிக்கேணி, சிறிய பெரிய தெரு [இது தான் தெருவின் பெயர்]வில் ஒரு லாட்ஜா, மேன்ஷனா இல்லை இல்லை ஒரு ஸ்டே ஹோம்..நன்றாகவே இருந்தது..குழாய் திறந்தால் கோபமாய் சீற்றத்துடன் தண்ணீரார் பாய்ந்தார். [சென்னையில் தண்ணிப் பஞ்சம்னு யாருப்பா சொல்றது..]தெருவில் இருந்து வெளியே வந்தால் ஒரு பெரிய பஜார். வலது பக்கம் நேராய் போனால் அண்ணா சாலை, இடது பக்கம் நேராய் போனால் மெரினா கடற்கரை! ஆஹா..

2. சென்னையில் ஏழை பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமுமின்றி செயல்படும் ஒரே ஆள் நம்ம சூரியன் சார் தான்! [நிலா மேடம் இல்லையா..அதான் சூரியன் சார்!] பிரிக்கிறார்! சார், சார் நான் பெங்களுரிலிருந்து ஊர் சுத்திப் பாக்க வந்துருக்கேன் சார், என்னை மட்டும் விட்ருங்க சார் என்று நாங்கள் கெஞ்சினாலும் அவர் காதில் போட்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லை! software engineer கள் அத்தனை பேரும் வியர்வை சொட்ட சொட்ட ஊர் சுற்றிப் பார்த்தோம்! என்னோட சென்னை நண்பன் எங்களுக்காக AC Tempo ஏற்பாடு செய்திருந்தான்!![எப்போ இருந்து நமக்கு வருது இந்தத் திமிரெல்லாம்?]

3. சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தவைகள்:
1. சினிமாவும், சினிமா சார்ந்த இடங்களும்.[ஹிஹி..புத்தி!]
2. விசாலமான சாலைகள்
3. எப்போதும் எங்கேயோ ஓடிக் கொண்டே இருக்கும் துறுதுறுப்பான மக்கள்[அப்படி எங்கே சார் போறீங்க?]
4. ஒவ்வொரு fly over லும் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான HORDINGS! [ப்ரியாமணி கொள்ளை அழுகு!]
5. இப்போது FM Radio! 4 to 5 FM radio இருக்கிறது! [இரவு 10 மணிக்கு "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" பாட்டு ஒலிக்கிறது!!!]
6. மிக முக்கியமாக பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடா! [கடல் இருந்தாலே அந்த ஊர் அழகு தான் இல்ல?]

4. இந்த முறை அண்ணா சாலை பக்கம் போகாததால் புதுப் படங்களின் விசாலமான கட் அவுட்களை பார்க்க முடியவில்லை..4 வருடத்திற்கு முன் project தேடி அலைந்து கொண்டிருந்த போது நண்பர்கள் அண்ணா சாலையின் ஒரு கம்பெனி விடாமல் ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் அங்கு வைத்திருக்கும் கட் அவுட்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பேன்! [எப்படி project கிடைக்கும் சொல்லுங்க?]

5. சென்னையைப் பார்த்தால் இந்தியாவின் பாதி நரிக்குறவர்கள், பிச்சைக்காரர்கள் இங்கு தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது! இங்கு நாம் சொந்த வீடு கட்ட யோசித்துக் கொண்டிருக்கிறோம், அங்கு பலருக்கு வாடகை வீடு கூட இல்லை..ஒரு கூடாரம் கூட இல்லாமல் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடக்கிறார்கள்! மறுநாள் வழக்கம் போல் எங்களுக்கு விடிந்து விட்டது..ஆனால் இவர்களுக்கு என்று விடியுமோ தெரியவில்லை!!

6. சென்னை சென்று கடலில் கால் நனைக்காமல் வருபவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று வள்ளுவர் ஒரு குறளில் சொல்கிறார்! [முழிக்காதீர்கள், துரதிர்ஷ்டவசமாய் அந்தக் குறள் நமக்கு கிடைக்கவில்லை! காலவெள்ளத்தில் அது அழிந்து விட்டதாக்கும்!!] அதனால் மகாபல்லிபுரம் சென்று கால் நனைக்க முயன்று உடல் முழுதும் நனைந்து திரும்பினோம்! [இயற்கை அன்னை கடலென்னும் சாம்பாரில் உப்பை சற்று அளவுக்கதிமாகவே போட்டு விட்டாள்! கவிதெ, கவிதெ!!]

7. மகாபலிபுரம் நான் திரைப்படங்களில் பார்த்த மாதிரி இல்லை. நான் என் கண்களின் வழி காண்பதை விட என் காமெரா கண்ணின் வழியே நிறைய பார்த்தேன்..அது கழுவி வந்தவுடன் தான் தெரியும்!! கல்லைக் குடைந்து குடைந்து மிக அற்புதமாய் பல சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள்! இளவரசியாரைப் போல எனக்கு அதன் வரலாறு தெரியவில்லை..கல்வெட்டுக்கள் ஒன்றும் கண்ணில் படவில்லை..அதைத் தொடாதீர்கள், இதை அசுத்தப்படாதீர்கள் போன்றவைகளைத் தவிர இதை யார் கட்டினார்கள், இதன் சிறப்பு என்ன ஒன்றும் இல்லை..கைடுகள் தங்களுக்குத் தெரிந்த கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

இன்று கணினியின் முன் உட்கார்ந்து நான் ஏதோ தட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மனம் வங்காள விரிகுடாவில் அலையாடிக் கொண்டிருக்கிறது...


வருடம் 2178. நியான் மாதம். காலை 8 மணி. வானத்தில், பறக்கும் காரில் signalக்காக காத்திருக்கும்போது ஜேஸ்145 ஜுரி146 யிடம் "நான் என் மனசை தொறந்து சொல்லிட்டேன்! அவ மனசுல என்ன இருக்குன்னு தான் புரியலை!" என்றான்!! signal சிவப்பையே காட்டிக் கொண்டிருந்தது!!

மேலே சொல்லப் பட்டிருப்பது ஒரு விஞ்ஞான ஒரு வரிக் கதை என்பது வருடம், மாதத்தின் பெயர் கொண்டு உங்களுக்குப் புரிந்திருக்கும்! ஆனால் இதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்குப் புரிகிறது! உங்களுக்கு என்ன புரிஞ்சதுன்னு பின்னூட்டமிடுங்கள்!

இப்போ நீங்க comment கொடுத்து தானே ஆகனும்! இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க!!