எச்சரிக்கை: உங்களுக்குத் தலை சுத்தினா நான் பொருப்பல்ல!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன். அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்! எவ்வளவு பெரிய
கூட்டத்திலும் தான் தனித்தன்மை வாய்ந்தவன் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். சில சமயம் அவன் கிருக்கனோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். அப்படி ஒரேடியாய் நாம் முடிவு கட்டி விடவும் முடியாது! உங்களுக்கு எப்படி உணர்த்துவது என்று எனக்குப் புரியவில்லை! சரி அவன் செய்த சில எதிர்பாராத செயல்களை சொன்னால் உங்களுக்கு ஓரளவுக்கு புரியலாம்!

பஸ்ஸில் சென்று கொண்டிருப்பான்! திடீரென்று முன்னே இருப்பவரைக் கூப்பிட்டு ஸாரி சொல்வான். அவர் புரியாமல் விழிப்பார்! இவன் ஜன்னலை நோக்க ஆரம்பிப்பான்! அவர் திரும்பியதும் மறுபடியும் அவரை அழைத்து ஸாரி சொல்வான்! அவர் எதுக்குப்பா ஸாரி என்று பொறுமையிழந்து கேட்பார். அதற்கு அவன் இல்லை சார், உங்களுக்கு என்னை தெரியாது..ஆனா எனக்கு உங்களை நல்லாத் தெரியும். உங்களுக்கே தெரியாம நான் ஒரு தப்பு பண்ணிட்டு இருக்கேன்! எனக்கு அது தப்புன்னு தெரிஞ்சும் பண்றேன்! ஆனா என்னால பண்ணாம இருக்க முடியலை. நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க சார் என்பான். அவர்
பையைத் தடவி தன் பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். சே! சே! அந்த மாதிரி சீப்பான தப்பு இல்லை சார், நல்லா யோசிச்சு பாத்து உங்களுக்கு ஞாபகம் வர்றதுக்குள்ள நான் இறங்கிக்கிறேன் சார் என்று சொல்லி அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வான்! அவர் பாவம் தன் பெண்ணை லவ் பண்றானோ ரேஞ்சுக்கு யோசித்து பாவம் மண்டை காய்ந்து கொண்டிருப்பார்!

இப்படியே அவன் வேறொருவரிடம் பஸ்ஸில் ஸாரி கேட்டுக்கொண்டே இருந்ததில் வெறுத்துப் போய் அவர் சரிப்பா மன்னிச்சி விட்டுட்டேன். போதுமா என்றார். அதற்கு இவன் ஏன் சார் நான் தான் எந்தத் தப்பும் செய்யலையே, நீங்க எதுக்கு என்னை மன்னிக்கனும் என்று கேட்பான்! இப்படி படுத்துரதுக்குன்னே அந்த மாதிரி நோஞ்சான் ஆசாமிகளையே புடிப்பான்! பாவம் அவர்கள்...

இன்னொரு கொடுமையான விஷயம் பஸ்ஸில் யாராவது தூங்கிக் கொண்டே வந்தால் போதும், அவர்களை எழுப்பி ஏன் சார் நீங்க லாஸ்ட் ஸ்டாப்ல இறங்கப் போறீங்களா என்று கேட்பான்! ஆமா ஏன் கேட்குறீங்கன்னு அவர் கேட்டா, இல்லை எனக்கு உட்கார இடம் கிடைக்காதே நான் அடுத்த சீட்டுக்குப் போறேன்! என்று சொல்லி விட்டு அடுத்த சீட்டுக்கு போய் விடுவான், அவர் மறுபடியும் தூங்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் தட்டி எழுப்பி "தாங்க்ஸ் சார்" என்பான்! அதுக்கப்புறம் அவர் தூங்குவார்னு நினைக்கிறீங்க?

ரோட்டில் போகும் முன்பின் பார்க்காத பெண்ணிடம் உங்க பேர் என்ன என்று ஆரம்பிப்பான். அது உங்களுக்கு எதுக்குன்னு அந்த பொண்ணு கேட்டா "என்னங்க? பேர் தெரியாமயாடா லவ் பண்றேன்னு பசங்க கிண்டல் பண்றாங்கல்ல" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான்!! அவள் அதிர்வதைப் பார்த்து, ஐய்யய்யோ சும்மா சொன்னேங்க சத்தியமா நான் உங்களை லவ் பண்ணலை, அப்புறம் உங்க friend என்னை சும்மா விடுவாளா என்பான்! அவள் புரியாமல் இவனைப் பார்ப்பாள். என்னங்க இன்னுமா புரியலை, என்ன நீங்க போங்க!! என்பான். அவளும் மாலாவோட.... என்று இழுப்பாள்! அப்பா!!! இவ்வளவு நேரமா என்று
ஒரே போடாகப் போடுவான்! அப்படி அந்த பெண் சொல்லவில்லையென்றால் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது..அவன் 10 பெண்களிடம் கேட்டால் ஒரு ரெண்டு பெண் தான் இந்த பதிலைத் தரமாட்டார்களாம்..இப்படியே அவன் பல பேரை friend பிடித்து வைத்திருந்தான்னா பாத்துக்குங்க!

காலேஜில் யாராவது பெண் இவனை ராக்கி கட்ட வந்தால், அவள் வந்து பக்கம் நின்றவுடன் அவள் கண்ணோடு கண் வைத்து ஐ லவ் யு என்பான்!

இப்படிப் பட்ட ஒருவனோட வாழ்க்கையில திடீர்னு ஒர் அதிர்ச்சிகரமான விஷயம் நடந்தது!!

அட வாங்க சார், இவ்வளவு நேரமா வர்றதுக்கு..என்ன கதை முதல்ல இருந்தா..சொல்லிட்டா போச்சு!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன்.....அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்!...................................



0 Responses