ஓடி விளையாடு பாப்பா - பாரதி

நான் மதுரையில் மஹால் [திருமலை நாயக்கர் மஹால்] 7 வது தெருவில் வசித்து வந்தேன்..சொந்த வீடு என்பதால் எனக்கும் மஹால் 7 க்கும் ஒரு அழுத்தமான உறவு இருக்கிறது. இன்றும் நான் மதுரை செல்லும்போதும் என்னை முதலில் நலம் விசாரிப்பது மஹால் 7 தான்..

அன்று போல் இன்று குழந்தைகள் வீதியில் விளையாடுவதில்லை, நாம் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்று வழக்கழிந்து போய் விட்டதில் எனக்கு ஒரு மிகப் பெரிய வருத்தம். அப்படியே ஒரு சிலர் விளையாடினாலும் cricket தவிர வேறு ஒன்றுமில்லை..இந்த இடத்தில் நான் என்னுடைய பால்ய பருவத்தினை நினைத்துப் பார்க்கிறேன் [frame மங்கலாகிறது..flashbackpa..]

எத்தனை விளையாட்டுக்கள், ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு season, ஒவ்வொரு season க்கும் ஒரு விளையாட்டு [டேய், ரெண்டும் ஒண்ணு தாண்டா!!]

கண்ணாமூச்சி
ஓடி புடிச்சி
கல்லா மண்ணா
கோலி குண்டு
பம்பரம்
சிகரட் அட்டை, சோடா மூடி
காவியம்,
எரி பந்து
பாட்டி பாட்டி ஒன்னுக்கு!
ராஜா ராணி

கண்ணாமூச்சி:

எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதுல தெருவுல ராத்திரி current போனவுடனே விளையாடுவாங்களே!! அது! ice, ice னு தெருவெல்லாம் காட்டுக் கத்தல் தான். பாவம் அந்த பையன் நொந்து போவான்! நான் யாரும் நம்மளை அவ்வளவு சாதரணமா கண்டுபிடிச்சிரக் கூடாதுன்னு என் மூளையை கசக்கி, பிழிஞ்சி ஒரு இடத்துல ஒழிவேன். என் கூட பசங்க வருவாங்க..out ஆனவன் கண்ணை மூடிட்டு 1,2 எண்ணிட்டு இருப்பான். அவன் ready ஆன்னு கேப்பான். என் கூட வர்ற பசங்க ரெட்ட ரெடிம்பான்..எனக்கு
கோவமா வரும்.. ஏண்டா நீ கத்துனா நம்ம இங்கே தான் இருக்கோம்னு easy கண்டுபிடிச்சிருவான்லனு அவனைத் திட்டுவேன்! பல தடவை தனியா போய் ஒழிஞ்சி எவன் கைலயும் சிக்க மாட்டேன்! என்னடான்னு நானே வெறுத்துப் போய் வெளியே வந்தா, out ஆனவனை விட்டு எவனோ ஒருத்தன்..ப்ரதீப் 1, ப்ரதீப் 1 ன்னு கத்துவான்..நான் ஒன்னும் புரியாம என்னடா அவன் தானே out நீ என்னடா பண்றே ன்னு கேப்பேன்!! அதுக்கு அவன் coooooooool ஆ அது போன ஆட்டை நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேம்பான்! அப்புறம் என்ன பலி கடா மாதிரி போய் கண்ணைப் பொத்திட்டு 1,2 எண்ண வேண்டியது தான்..

கல்லா மண்ணா:

பல தடவை போய் நின்னதுக்கப்புறம் confusion வரும். இது கல்லு இல்லைடா இது cement, நீ out தான் என்பான் ஒருவன். ஒவ்வொரு தடவை ஒவ்வொரு rule..ரொம்ப கஷ்டம்பா!

கோலி குண்டு:

கடையில் போய் கோலி வாங்குவதே ஒரு சுவாரஸ்யமான் விஷயம் தான்! கோலி குண்டை வாங்கி கண்ணுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். ரஜினி தெரிந்தால் வாங்குவோம். [இன்றும் பார்க்கிறேன்..ரஜினியாவது, கமலாவது ஒரு மண்ணும் தெரியவில்லை!] தவறிப் போய் ஒருவனுடைய கோலி இன்னொருத்தனோட கோலியில பட்டுருச்சுன்னா போதும்..ஒரு ப்ரளயமே கிளம்பிடும்! டேய் ஏண்டா என் கோலி மேலே கொத்து வச்ச..ஒழுங்கா நீ ஒரு கொத்து வாங்கிக்கோ!! அவன் ஓட, இவன் தொரத்த..
கோலியில் இருண்டு விளையாட்டு உண்டு. 10,20 & பூந்தா. எனக்கு 10,20 தான் புடிக்கும். கோலி season வந்து விட்டால் போதும், தெருவெங்கும் குழி தான்..ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியை எறிய வேண்டும், straight ஆ குழியில் விழுந்தா 90 ல் இருந்து ஆடலாம், இல்லையென்றால் 10,20லிருந்து ஆட வேண்டும். கடைசியில் ஜெயித்தவனுக்கு தோற்றவன் பூரி போட வேண்டும்..நம்ம போட போட அவன் நம்ம கோலி குண்டை பதம் பார்ப்பான். ரத்தக் கண்ணீர் வரும்..நான் வழக்கம் போல்
பூரி தின்றதை விட போட்டது தான் அதிகம்!! :((

பம்பரம்:

அபீட்டா!!! கடைக்குப் போய் நல்லா திருப்பி திருப்பி பார்த்து, ஒரு பம்பரம் வாங்கி, ஈ ஆணி மாட்டி அந்த சிவப்பு கயிரால் அப்படி சுண்டி விட்டா..ஆஹா!! ஹெலிகாப்டர் தான் [மட்டைக்கு இன்னொரு பெயர்!] அபீட்டாவில் இரண்டு வகை உண்டு. சுத்தி விட்டு அபீட்டா எடுப்பது, மட்டை அபீட்டா எடுப்பது. ஒவ்வொருத்தனும் அபீட்டா எடுத்துட்டு குதிப்பான் பாருங்க..awesome game!

சிகரட் அட்டை, சோடா மூடி:

இந்த season வந்துட்டா போதும், தெருவுல ஒருத்தனும் வீடு கட்ட முடியாது. எல்லா தட்டைக் கல்லும் பசங்க வீட்டில் தான் இருக்கும். [bero வுக்கு அடியில்] ஒவ்வொரு அட்டைக்கும் ஓவ்வொரு மார்க். berkely தான் அதிகம் என்று நினைக்கிறேன். அதே போல் தான் சோடா மூடியும்..torino மூடி என்றால் 2 அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது..

காவியம்:

இது பல பேருக்குத் தெரியுமோ, தெரியாதோ..நான் படித்த school ல் இது ரொம்ப பிரபலம், இதை எங்கள் தெருவுக்கு கொண்டு வந்ததில் எனக்கும் என் தம்பிக்கும் நிறைய பங்கு உண்டு! இதில் out ஆனவன் குனிந்து கொள்ள வேண்டும், மற்ற எல்லோரும் அவனைத் தாண்டுவோம். தாண்டும்போது சும்மா தாண்டக்கூடாது..கிழ் கண்டவற்றை சொல்லிக் கொண்டே தாண்ட வேண்டும்: [இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்!]

1. காவியம்
2. மணிக்காவியம்
3. லாகு
4. லாகத்தின் கொக்கு [இதைச் சொல்லும்போது தலையில் கைகளால் கொம்பு போல் வைத்துக் கொள்ளவேண்டும்]
5. லட்சத்தின் மண்வாரி [தாண்டி விட்டு கால்களால் மண் வாரி இறைக்கணும்! இல்லைன்னா outபா!!]
6. சூடா, ஸ்ட்ராங்கா? [இதைச் சொல்வதற்கு முன் குனிந்து நிற்பவனிடம் இதைக் கேட்க வேண்டும், அவன் சூடு என்றால் தாவிக் கொண்டே அவன் பின்னால் எத்த வேண்டும், ஸ்ட்ராங்கென்றால் அவன் மீது உட்கார்ந்து தாவ வேண்டும்..அப்பா! என்ன rule பா]
மற்றபடி வேறு எந்த இடத்திலும் தாவுபவனுடைய கால்கள் குனிந்து இருப்பவன் மேல் படக்கூடாது. பட்டால் out! இது தான் basic rule! என்ன விளையாடுவோமா? ;)


எரிபந்து, cricket :

இந்த மாதிரி விளையாட்டுக்களில் சோலைக் கருது பெரும் பங்கு வகிக்கும்..யார்கிட்ட பந்து வாங்க பணம் இருக்கு சொல்லுங்க..பசங்க நல்லா சுள்ளு சுள்ளுன்னு அடிப்பாங்க..இப்போ நெனைச்சாலும் வலிக்குதுப்பா!!

ராஜா ராணி:

இது indore game பா! எல்லோரும் round ஆ உட்கார்ந்து சீட்டில் ராஜா 10,000, ராணி 5000, போலிஸ் 100, திருடன் 0, மந்திரி, சேனாதிபதி, சேவகன்..எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தார் போல் சீட்டு! சீட்டைக் குலுக்கிப் போட்டு ஆளுக்கு ஒன்றை எடுத்து தான் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் போலீசோ அவன் திருடனைக் கண்டுபிடிக்கனும். அப்பா, இதுக்கு .net programming எவ்வளவோ easy!! எவனைப் பாத்தாலும் திருட்டுப் பயலாத் தான் தெரிவாங்க!!

இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்..எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே எழுதியிருக்கிறேன்! வீதி முழுதும் ice, ice, காவியம், சோடா மூடிகளின் சிதறல்கள், அபீட்டா போன்ற சத்தங்கள் இனி நமக்குக் கிடைக்குமா? அப்படி ஒரு season வரவே வராதா? நம் குழந்தைகள் 5 வயதிலேயே தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே cartoon network தான் பார்க்குமா? வீடியோ கேம்ஸ் என்ற பெயரில் A K 47ல் பல பேரை சுட்டு வீழ்த்தித் தான் வளருமா?

காலம் மாறுகிறதாம்..இப்படியா மாற வேண்டும்..வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே..அது சுழன்று மறுபடியும் இதே இடத்திற்கு வராமல் போய் விடுமா?

எனக்கு இன்று ஒரு உண்மை புரிகிறது..உண்மை பல சமயம் கசக்கத் தான் செய்கிறது!

4 Responses
  1. Anonymous Says:

    hi pratheep
    romba nalla irunthathu intha blog
    sorry itha neenga romba naal munnadi eludhi irupeenga
    but indha generation la ithellam solli thara aal illa
    school vitta tution, special class ippadiye poyidudhu
    naan unga ipod blog than mudhalla parthen appuram ellathayum padikka arambichuten
    nice work


  2. Anonymous Says:

    Priya GM :

    Pradeep,
    This is a very nice article...
    after reading this...I also got remember all my childhood days/games....gilli vilayaata marandutheenga ithula....
    I hope this article came before 2 years back...
    But still i thought sending comments to this....b'coz ennoda pazhaya naatkal ellaam nyaabagam vanduthuchu.....


  3. good work man... Apdiyea cheran padathula vara gnabagam varuthey gnabagam varuthey nu padalam pola irukku.......