வெண்சங்கு
மயிலிறகு
மோனநிலை
திவ்யம்!
------------------------------------------------------------
பச்சைப்புல்
பரந்த வானம்
பசிக்குச் சோறு
போதும்!
------------------------------------------------------------
ஒரே சத்தம்
ஒரே அமைதி
வழக்கமான இரவு
வாசலில் நிலவு
------------------------------------------------------------
தொட முடியாத வானம்
கால் நனைக்காத நீர்
என்ன வேடிக்கை
------------------------------------------------------------
புல்லில் பனி
வயிற்றில் பசி
அவரவர் எண்ணம்
------------------------------------------------------------
இந்தக் காற்று
எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
------------------------------------------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை காசு!
 
என் நண்பன் ஒருவனின் தம்பி இரு மாதத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்டான்! பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததும் வேலையும் தயார்! இந்த சமயத்தில் இப்படி ஒரு முடிவு! பரிட்சையில் தோல்வி அடைந்திருப்பான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பிறகு காதல் பிரச்சனை தான் என்றால் அதுவும் இல்லை. பிறகு?
 
வகுப்பில் படிக்கும் நண்பனுடன் ஒரு தகராறு! அந்த நண்பன் இவனிடம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டானாம். எத்தனையோ முறை இவன் அவனிடம் கெஞ்சி பார்த்திருக்கிறான் போல் இருக்கிறது. அவன் மசியவில்லை. உன் நட்பே வேண்டாம் போ என்று தூக்கி எறிந்து விட்டானாம். நான் இருக்கும்போது தான் என் அருமை உனக்கு தெரியவில்லை, நான் இறந்த போதாவது தெரிந்து கொள் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டான்!
 
நான் முதலில் அவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்டதும் வண்டி ஒட்டி விபத்துக்குள்ளாயிருப்பானோ  என்று நினைத்தேன். அத்தனை வேகமாய் வண்டி ஒட்டுவான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. தற்கொலை என்றதும் மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது. நல்ல துரு துறுவென்று இருந்த பையன். வழக்கம் போலவே, அவன் வீட்டின் கடைக்குட்டி. பயங்கர செல்லம். எப்போதும் அவனுக்கு கேட்டது கிடைத்தது.  மரணமும் அப்படியே!
 
இன்றைய இளைஞர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. எல்லாவற்றிலும் வேகம் என்பது ஒரு பக்கம் பிரமிக்க வைத்தாலும் அதே வேகத்தில் தப்பான முடிவுகளையும் எடுத்து விடுகிறார்கள். நிதானம் என்பது துளியும் இல்லாமல் போய் விட்டது. இத்தனை சின்ன விஷயங்களுக்கு எத்தனை பெரிய முடிவு! பரிட்சையில் தோற்றதால் இறப்பவர்களை நினைத்தே எனக்கு எரிச்சலாய் வரும்! நம் நாட்டில் இருப்பதெல்லாம் ஒரு கல்வி முறை, அதில் தோல்வி அடைந்ததால் சாவதா என்று!  ஒவ்வொரு முறை பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்த அடுத்த நாள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ரிசல்டும் சேர்ந்தே வருகிறது! என் நண்பர் ஒருவர் சொன்னார், யார் முதல் மார்க் வாங்குகிறார்கள் என்பதை விட, அடுத்த நாள் யார் வீட்டில் அழப் போகிறார்கள் என்று தான் எனக்கு பயமாக இருக்கிறது என்று! எத்தனை உண்மை! தேர்வுக்கு முன்னே, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சேர்த்து பள்ளியிலே கவுன்சிலிங் வைக்கலாமே? பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் எந்த மார்க் எடுத்தாலும் பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை ஆசுவாசப்படுத்தலாமே? இதனால் தற்கொலைகள் குறையலாமே? நல்ல யோசனை, செய்தால் நலம்! இல்லையென்றால் கன் கேட்டா பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்? பரிட்சையில் தோற்றதால் நான் சாக முடிவெடுத்திருந்தால் மாசா மாசம், நான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்! பாடமா சொல்லிக் கொடுக்கிறீர்கள், என்று சொல்லி, கடைசி வரை நான் தான் வாத்தியார்களை கொலையாய் கொன்றேன்! 

எனக்கு என்னமோ, நம் வீட்டு குழந்தைகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டது போல் தோன்றுகிறது. பெற்றோர்களிடம் பேசும் குழந்தைகள் அருகி வருகிறார்கள். குழந்தையாய் இருக்கும்போது அவர்கள் தொன தொணத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதோடு சரி, பிறகு சற்று வளர்ந்தவுடன் டீவி, ப்ளே ஸ்டேஷன்,  அப்புறம் எப்போதும் கைபேசியில் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தனியாய் இருக்கும்போதும் தனியாய் இருப்பதில்லை. தன் நண்பர்களுடன் கலந்துரையாடலில் தான் இருக்கிறார்கள். கைபேசியை இழந்தால் அவர்களின் மூச்சு முட்டுகிறது!  கணினியில் வன்முறையான விளையாட்டுக்கள்! அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் முகநூலின் வழி தான் நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையில்லாமல் போய் விடுகிறார்கள்.  பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஒரு கட்டத்துக்கு me நண்பர்களாய் பார்க்கத் தவறி விடுகிறார்கள். கால ஓட்டத்தில், அவர்களுக்கு இளைப்பாறவே நேரம் இருப்பதில்லை, இதில் குழந்தைகளுக்கு எங்கு நேரம் ஒதுக்குவது?  அதனால், நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தவுடன் வீடு என்பதே அவர்களுக்கு சத்திரமாய் ஆகி விடுகிறது. பெற்றோர்கள் ஏதாவது கேட்டாலும் ஒரு இரண்டு வரிகளில் ஒரு பதில். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தங்கள் மகன் மாடியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் நண்பன் வீட்டுக்கு வந்து சொன்ன போது தான் பெற்றோர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்றால் என்ன ஒரு கொடுமை! அப்படி என்றால் அவன் அவனுடைய பெற்றோர்களை எந்த இடத்தில் வைத்திருந்திருப்பான்! ஐந்து நிமிடத்திற்கு முன் மேலே சென்ற மகன் நிரந்தரமாய் மேலே செல்லும் அளவுக்கு மனம் வெறுத்துப் போயிருக்கிறான் என்பதை கூட அறிய முடியாத நிலையில் பிள்ளைகள் பெற்றோர்களை வைத்திருக்கிறார்களா?

அமெரிக்காவில் இருந்த என் நண்பனால் விசா பிரச்சனையின் காரணமாக ஈமச் சடங்குக்குக் கூட வர முடியவில்லை!

இன்னொரு கொடுமை, மகனை இழந்த சோகத்தில் அந்தத் தாயும் சென்ற மாதம் இயற்கை எய்தினார்! என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல?


 

இன்று ஏதாவது எழுதியே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இன்று ஏதாவது ஒன்றை படித்தே தீர்வதே என்று நீங்கள் கங்கணம் கட்டி உட்கார்ந்திருந்தால் இதை படிக்கலாம்!

தினமும் ஏதாவது எழுதலாம் என்று தான் மடிக்கணினியை போடுகிறேன். ஆனால், கணினியை போட்டதும், ஜி மெயில், முகப்புத்தகம், அதில் நண்பர்களுடன் அரட்டை  என்று அழிகிறேன். சொல்லப்போனால் அன்புக்கு நான் அடிமை என்று சொல்வதை போல் அரட்டைக்கு நான் அடிமை! இது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல. இணையத்தில் என் வலது கால் வைத்ததும் தொடங்கிய பழக்கம். அப்போது யாஹு, இப்போது யார் யாரோ! டெல்லியில் வேலையில் இருந்த போது, எப்படியாவது கோதுமை நிறத்தில் ஒரு பஞ்சாபி பெண்ணை திருத்தி விட [கரெக்ட் பண்ண] நினைத்தேன்! என்னை அரட்டை குருவாக ஏற்றுக் கொண்டு டில்லி பையன் ஒருவன் என் ஆசிகளுடன் ஒரு ஃபிகரை திருத்தி ஊர் சுற்றினான். நான் கடுப்பாகித் தேடியதில், என் கெரகம் வந்து மாட்டியதெல்லாம், நம் தமிழ்நாட்டு பெண்கள் தான். எல்லோரும் என்னை திருத்தி விட்டார்கள் [இது மேல் சொன்ன திருத்தல் அல்ல!]  அவர்களை கூட்டிக் கொண்டு ஊர் சுற்ற முடியவில்லையே தவிர, அவர்களில் சிலருடன் இன்றும் நல்ல நட்பில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. [நான் நல்ல பையங்க!] (வாய்ப்பு கிடைக்கிற வரை எல்லா பயலும் நல்ல பயங்க தான்!!)

அப்போது யாஹு ஒன்றை வைத்தே அந்த அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். இப்போது நினைத்தாலும் ஒரே கிளுகிளுப்பாய் இருக்கிறது. நாள் பூராவும் யாஹுவில் அரட்டை அடிப்பேன். எத்தனை பெண் நண்பர்கள் என்று எனக்கே தெரியாது! என் கூடவே வேலை பார்த்த ஒருவன், ஒரு பெண் பேரை வைத்துக் கொண்டு சில நாள் என்னை கலாய்த்தான். அப்போதாவது திருந்துவேன் என்று அவன் நினைத்திருப்பான். அரட்டையில இதெல்லாம் சாதரணமப்பா என்பது போல் துடைத்து போட்டுக் கொண்டு மெயின்டைன் செய்தேன்! யாஹூக்கே அப்படி என்றால்,  இப்போ என்னடா என்றால் ஜி டாக் [நாய் அல்ல!], முகப்புத்தகம், ஸ்கைப், கூகுள் ப்ளஸ் என்று எல்லாவற்றிலும் அரட்டை ஆரம்பமாகிவிட்டது. இன்விசிபில் மோடில் இருந்தாலே எட்டு பேர் பேசுகிறார்கள்! ம்ம்...அது வாலிப வயசு என்பதால் அப்படி அலைந்தேன் [அதுவும் குறிப்பாய் டெல்லியில் அலைந்ததால்...ஹிஹி...]! சில நாட்களில் சி, சி, இந்த பழம் புளிக்கும் கதையாய் ஆன பிறகு அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்தாயிற்று! இப்போது திடீரென்று அந்தக் கொம்பு முளைத்தது! இந்தக் காலத்து பசங்க [நான் எந்தக் காலம்! அய்யோ, வயசாயிடுச்சே!]  எப்படி அரட்டை அடிக்கிறார்கள், எந்த சைட் ஹிட் என்று பார்க்க நினைத்தேன். கூகுளிடம் குலைந்தேன். சேட் [அரட்டை] என்று நான் போட்டதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் [மறுபடியும் ஒரு அடைப்புக்குறியா! முருகா..] "chat with strangers" என்று அதுவே சொல்லிக் கொடுத்து இங்கு போ என்றது!  அட இதை இதை தானே நான் எதிர்பார்க்குறேன் என்று அது சொன்ன லிங்கில் க்ளிக்கினேன். அந்த லிங்க் www.omegle.com

வழக்கமாய் பெரும்பான்மையான அரட்டை இணையதளங்கள் எல்லாம் உங்களை தங்களுடைய இணையதளத்தில் சேரச் சொல்வார்கள். அதற்கு உங்கள் ஜாதகம் வரை கேள்வி கேட்பார்கள். அதிலேயே நமக்கு பாதி தாவு தீர்ந்துவிடும். பிறகு தான் உள்ளே விடுவார்கள். இன்னும் சில, ஒரு நிக் நேம் வைத்துக் கொண்டு பேசு என்பார்கள். சரி இது பரவாயில்லையே என்று செட் செய்து உள்ளே நுழைந்தால் எல்லாம் பொது அறைகள் [பப்ளிக் ரூம்ஸ்] தான் இருக்கும். வழக்கமாய் அங்கு வருபவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள். நம்மை ஒருத்தன் கூட சீண்ட மாட்டான்! அட சை, என்றும் நாமும் பீலிங்காகி யு ட்யுபில் ஷகீலா படம் பார்த்து விட்டு தூங்கி விடுவோம்! இந்த omegle ல் விசேஷம் என்னவென்றால் உள்ளே போனதும், உனக்கு எந்த மாதிரியான விருப்பங்கள் என்று சொல்லு என்று கேட்கிறார்கள். அதை கூட நீங்கள் கொடுத்தால் கொடுக்கலாம், இல்லையென்றால் அப்படியே அரட்டையை ஆரம்பிக்கலாம். அப்படி நீங்கள் கொடுத்தால் உங்களை போல அதே விஷயத்தில் விருப்பமானவரை உங்களுடன் பேச வைக்கும். அது ஆனாய் இருக்கலாம், உங்கள் முன்னோர் புண்ணியம் செய்திருந்தால் பெண்ணாகவும் இருக்கலாம், உங்கள் முன்னோர் பாவம் செய்திருந்தால் பெண் என்று ஆண் ஒருவன் போய் சொல்லி உங்களை கலாய்க்கலாம்!! ஒரு வேலை பெண்ணே இருந்தால், அப்புறம் அப்படியே மானே, தேனே, பொன்மானே என்று போட்டுக் கொள்ள வேண்டியது தான். இங்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் வெறும் பேச்சோடு நிற்காமல் வீடியோ அரட்டை வசதியும் உண்டு.

முதலில் வெறும் அரட்டையில் நுழைந்தால், இந்தத் தளமே தோராயமாய் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. அதாவது, இப்போது உங்களுடன் ஒரு அன்னியர் இருக்கிறார். பேசுங்கள் என்று சொல்கிறது. உங்களுக்கு அவர் அன்னியர், அவருக்கு நீங்கள் அன்னியர். முக்கால் வாசி பேர் முதலில் கேட்பது A S L அதாவது A என்றால் ஏஜ் - வயது, S என்றால் செக்ஸ் - பாலினம், L என்றால் லொக்கேஷன் - இருப்பிடம். இது தான் அரட்டையின் அரிச்சுவடி. பரவாயில்லை, நான் பேசும் நாளிலிருந்து அது வழக்கொழிந்து போகாமல் இன்னமும் இருக்கிறது. மற்ற அரட்டை இணையதளங்களில் யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், இங்கே அந்த வேலையை இணையதளமே செய்கிறது! அது தான் இந்த இணையதளத்தின் சிறப்பு! இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்தது. உலகின் எந்த மூலையில் இருந்து ஒருவர் பேசப் போகிறார் என்கிற உணர்வே எதிர்பார்ப்பை கூட்டுகிறது ஒரு வேளை பெயர் எதுவும் வராமல் வெறும் அன்னியர் என்று தோன்றுவதால் அத்தகைய எதிர்பார்ப்பு ஏற்படுகிறதோ என்னமோ! இணைய தளத்தின் சிறப்பு, இதை மிக எளிமையாய், அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள். நீங்கள் பேசிக் கொண்டுருக்கும் நபர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இரண்டு முறை "எஸ்கேப்" பட்டனை அழுத்தினால் அந்த நபர் உங்கள் வாழ்க்கையிலிருந்தே அவுட்! மீண்டும் அவரை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அடுத்த நபர், அடுத்த நபர் என்று உங்களுக்கு பிடிக்கும் வரை பேசிக் கொண்டே இருக்கலாம்! நல்ல டைம் பாஸ்! இதில் பேசும்போது தான் உலகம் எத்தனை சுருங்கி விட்டது என்று தோன்றுகிறது! எனக்கு இந்த இனையதளம் மிகவும் பிடித்து விட்டது. இது ஏன் முகப்புதகம் அளவுக்கு பிரபலமாய் இல்லை என்று தோன்றுகிறது. 

இப்போது வீடியோ அரட்டை. 

கவனம், குழந்தைகள், மெல்லிய இதயம் படைத்தவர்கள் முன் முன் இதை திறக்காமல் இருப்பது நல்லது! பயப்படாதீர்கள் வெட்டு குத்து எல்லாம் நடக்கவில்லை!!

மேல் சொன்ன அதே முறை தான் இங்கு அரட்டை அடிப்பதற்கும்! இந்த இணையதளத்தில் தற்சமயம் இணைந்து, வீடியோவில் யார் எல்லாம் இருக்கிறார்களோ அவர்களில் யாரையோ தோராயமாய் உங்களுக்கு காட்டுகிறது. இங்கு தான் காமம் கொப்பழிக்கிறது.  வீடியோவில் இருப்பவர்களில் பாதி ஆண்கள் சுயமைதுனம் செய்த படி அமர்ந்திருக்கிறார்கள்! சிலர் நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறார்கள் [பெண்கள் உட்பட!]  சிலர் உறவு கொண்டிருக்கிறார்கள்!! சிலர் தொலைக்காட்சியில் பலான படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!! பலர் வெகு ஜாக்கிரதையாய் தங்கள் முகத்தை காட்டாமல் மறைத்துக் கொள்கிறார்கள். இப்படி பல்வேறு மனிதர்களை பார்க்கையில் பலான படங்களை விட கிக் அதிகமாய் தான் இருக்கிறது :-) அதனால் தான் இணையத்தில் போர்ன் வீடியோவை விட ஸ்காண்டல் வீடியோக்கள் கொடி கட்டிப் பறக்கின்றன! ஆனால் மக்கள் அதைப பற்றி கவலைப்படவேயில்லை. பிடிச்சா பாரு,  பிடிக்கவில்லையா, எஸ்கேப்! 

மனிதன் தன அடையாளத்தை மறைத்துக் கொண்டால் எப்படி எல்லாம் ஆகி விடுகிறான் என்பதற்கு ஒரு உத்தம உதாரணம் இந்த இணையதளம்!  என்னை பொறுத்தவரை உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும், கொலை, தற்கொலை, கற்பழிப்புகளுக்கும், ஆயுதங்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு சரிசமமான இடத்தை காமெராவுக்கும் கொடுக்கப் பட வேண்டும்!