என் வீட்டிலிருந்து வெளியேறி சிறிது தூரம் நடந்து ஒரு இடது பக்கம் திரும்பி, இன்னும் சிறிது தூரம் நடந்து ஒரு வலது பக்கம் திரும்பி...அதே போல் மற்றொரு முறை செய்தால் நாயக்கர் வீடு! மதுரையில் பிறந்து வளர்ந்த நான், போன முறை மதுரை சென்ற போது என் நினைவு தெரிந்து 3வது முறையோ, 4வது முறையோ நாயக்கர் வீட்டுக்குச் சென்று வந்தேன்! வேலு நாயக்கர் பம்பாயை அல்லவா உலுக்கிக் கொண்டிருந்தார்! அவர் எங்கே இப்படி என்று முழிப்பவருக்கு, நான் சொல்வது வேலு நாயக்கரைப் பற்றி அல்ல, திருமலை நாயக்கரைப் பற்றி! [ஆஹா! என்ன ஹாஸ்யமா எழுதுறான் இந்தப் பையன்!] நான் சென்று வந்தது திருமலை நாயக்கரின் அரண்மனை! அரண்மனை என்ற வார்த்தை பெரிதாய் இருப்பதால் நாம் இந்தப் பதிவிற்காக அதை வீடு என்று வைத்துக் கொள்வோம்! [நாயக்கருக்கு என்ன கஷ்ட காலம் பாருங்கள்!]

அந்த வீட்டில் பல சரித்திரப் புகழ் மிக்க நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன..அதாவது 1994 ஆம் ஆண்டு பம்பாய் படத்தின் "கண்ணாலனே" பாட்டின் படப்பிடிப்பு நடந்த போது மணிரத்னம் ஒரு முறை என்னை பார்த்தால் போதும், அடுத்த அர்விந்த் சாமி நான் தான் என்று நினைத்தேன்! என் கஷ்ட காலமோ என்னமோ அன்று டியுஷனில் கணக்கு பரிட்சை இருந்ததால் தமிழ்நாடு பிழைத்தது...பிறகு கல்லூரிக் காலத்தில் நேருக்கு நேராய் சிம்ரனை தரிசிக்க முயன்று அந்த வீட்டு மதில் மேல் வந்தியத் தேவனை போல் ஏறிக் குதித்து [நல்ல வேளை அகழியை மூடி விட்டார்கள்!] அருகில் செல்லும்போது சே! ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு இத்தனை பாடா என்று கேனத்தனமான ஞானோதயம் பெற்று அந்த சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டவன்! இது தான் எனக்கும் நாயக்கரின் வீட்டுக்கும் உள்ள சரித்திரப் பின்னனி!

இதற்கு மேலும் என் சரித்திரத்தைக் கூறி உங்களை சித்தரவதை செய்ய விரும்பவில்லை..எங்கே, என் போட்டோகிராபி திறமையை பார்த்து வாயடைத்துப் போங்கள் பார்ப்போம்!!


இருவர் சேர்ந்தது பிடித்தாலும் முழுதாய் இந்தத் தூண்களை பிடிக்க முடியாது!

மற்றொரு சரித்திர நிகழ்வு...

விண்டோ ஏசீ?


ஒட்டடை அடித்தவன் நிலை என்ன ஆயிருக்கும்?



இது நடன நாட்டிய கலா மண்டபம்!

ஒளியை நிறம் பிரித்திருக்கிறார் நாயக்கர்!

பார்வதி தேவி என்று ஞாபகம்!

தங்கப்ப தக்கம்!