என் அழகு காணாமல்
இன்னும் தூங்குகிறார்களே
என்று முகம் சிவந்த வானம்

இதோ இதோ என் வாழ்வு
முடியப் போகிறது என்று
ஏங்கும் பனித்துளி

இதோ பூக்கப் போகிறேன்
என்று கண்ணாமூச்சி
காட்டும் சாலையோர பூக்கள்

carbon monoxide கலக்காத
கற்பு நெறி மாறாத காற்று

சோம்பல் சுருக்கி
சிறகு விரித்து
கூட்டம் கூட்டமாய்
விதவிதமான கோணங்களில்
இரை தேடிப்
பறக்கும் பறவைகள்

ஈரத்தலையை துணியால்
சுற்றி, முகமெலாம் மஞ்சள் பூசி
நெற்றி நிறைய பொட்டிட்டு
மாக்கோலமிடும் என்குலப் பெண்கள்

இத்தனை சுகங்களையும்
ஈடு கட்டிக் கொள்கிறது
இந்த சண்டாளத் தூக்கம்!


1 Response
  1. Anonymous Says:

    mm.. you are good in poem also. Please try to write a good poem.. that too about love.
    Yours-pavithra