Image hosted by Photobucket.com

மறுபடியும் அவள் தான். அவனுக்கு பெருமை தாங்க முடியவில்லை. இருக்காதா பின்னே, இன்றைய இளஞர்களின் கனவு தேவதை ஒரு நாளைக்கு இத்தனை தடவை இவனுக்கு ஃபோன் செய்தால், யாரா இருந்தாலும் இப்படி ஒரு மிதப்பிலே இருக்கத் தானே செய்வாங்க!

சொல்லு! [கவனிக்க: ஒருமையில வந்து ரொம்ப நாளாச்சு!] என்றான்.
ஒன்னுமில்லை, ஷாட் முடிஞ்சது. சும்மா தான் பண்ணேன். நீ என்ன பண்றே? என்றாள்.
சத்தியமா உன்னை நினைக்கலை, என் வேலைய பாத்துட்டு இருக்கேன்!!
இது தான்டா, எனக்கு உன்கிட்ட புடிச்சதே, எத்தனை பேரு எனக்கு ஃபோன் பண்ணி ஜொள்ளு விட்றான் தெரியுமா?
உன்னால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது? இப்படி இருக்குறவன் எனக்கு ஏன் ஃபோன் பண்ணே?
காதல் படம் பார்த்தேன், நல்லா நடிச்சிருந்தே, உன்னை பாராட்டனும்னு தோனுச்சு!
எப்படியோ உன் நம்பர் கிடைச்சது. சரி பண்ணிப் பாப்போமேன்னு பண்ணினேன். இதை நான் உன்கிட்டா 10789 தடவை சொல்றேன்.
நான் உன்னை ரொம்ப படுத்துறேனோ?
சே, சே! காதல் சந்தியா கிட்ட பேச கசக்குதா என்ன?
உன்கிட்ட பேசுறேன்னா அம்மா கூட ஒன்னும் சொல்ல மாட்றாங்க. அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தேல்லே, அம்மாக்கும் உன்னை ரொம்ப புடிச்சு போச்சு! அது எப்பிட்றா, பொண்ணு..அம்மான்னு சகட்டு மேனிக்கு எல்லாத்தையும் மயக்கிட்றே?
எனக்கு என்னமோ நான் பிரபலாமானவன் மாதிரியும் நீ என்னோட ரசிகை மாதிரியும் தோனுது!
நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உன் ரசிகை தான்!
டேய் ஆபிஸுக்கு லேட் ஆகலை?
யாரு க்ராஸ்டாக்? என்றான்.
எனக்கு ஒன்னும் கேக்கலையே என்றாள்.
எந்திரிப்பா, ஆபிஸுக்கு போகனும்ல?
அட இது அம்மாவாச்சே, இங்கே எங்கே வந்தா?

தம்பி டேய்! எந்திரி மணி பாத்தியா? என்று கடிகாரத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. அவன் கையில் செல்ஃபோன் இல்லை. 8:30 மணி வெயில் சுல்லென்று முகத்தில் அடித்து உண்மை சுடும் என்றது!!

சந்தியாவின் நம்பரை ஒரு முறை மனதுக்குள் சொல்லிக் கொண்டான்! இன்னைக்கு எப்படியாவது ஃபோன் பண்ணிடனும்!

இரவு மணி 8:37 நிமிஷம், 36 நொடி! நம்பரை அடித்தான். வயிற்றை ஏதோ செய்தது..

கேன் ஐ டாக் டு சந்தியா? சந்தியா இருக்காங்களா?
சந்தியா தான் பேசுறேன்.
[வயிறு ஜிவ்வென்றது!]
எல்லாரும் சொல்றது தான். மேடம் நான் உங்க ரசிகன். என் பேர் கூட முருகன் தான். நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க!
தேங்க்ஸ் ங்க! [சலிப்புடன்!]
நான் ஆர்ஸ்ல மார்க்கெட்டிங் எக்ஸியுக்யுட்டா இருக்கேன்!
ஓ!
என்ன உங்க அடுத்த படம் வரலையா?
மலையாளத்துல ஒரு படம் முடிச்சுட்டு இன்னைக்குத் தான் வந்தேன்.
உங்க அடுத்த படம் யார் கூட?
ரோஜா கம்பைன்ஸ்க்காக ஒரு படம் பண்றேன்!
யார் டைரக்டர்?
சசி!
உங்க வீடு எங்கே மேடம்?
வடபழனி
ஒகே மேடம்! பாய்!
ஓகே!
டொக்..

முதல் முறையே அவளைக் கவர நாள் முழுவதும் பேசிப் பார்த்து வைத்திருந்தது மறந்ததை நினைத்து அவனைத் திட்டிக் கொண்டான்!

இன்னைக்கு 39வது ஜொள்ளு என்று ஃபோனை ஆஃப் செய்தாள் காதல் சந்தியா!

இடம்: லக்கேஜ் செக்ஷன் - பெங்களூர் சிட்டி ஜங்க்ஷன்

நான் - சார், வண்டியை பேக் பண்ணனும்.
அவர் - எங்கே போகனும்?
நான் - சென்னை
அவர் - சென்னைக்கெல்லாம் பேக் பண்ணத் தேவையில்லை. உங்ககிட்ட பணம் நிறைய இருந்தா சொல்லுங்க பேக் பண்ணலாம்.
நான் - அய்யோ அப்படி எல்லாம் இல்லை சார்.
அவர் - அப்போ இந்த ஃபாரத்தை ஃபில் பண்ணி வண்டியை ரயில்ல ஏத்துங்க.

என்ன தான் படித்தவர்களாக இருந்தாலும் அரசாங்க விண்ணப்பத்தை ஒரே முறையில் யாரிடமும் கேட்காமல் பூர்த்தி செய்வது என்பது கஷ்டம் தான் போலும். ஒரு விண்ணப்பத்தில் எழுதி அடித்து, இன்னொரு விண்ணப்பத்தை அந்த அரசாங்க அதிகாரியிடம் வாங்கிக் கொண்டேன். இந்த முறை விண்ணப்பத்துடன் முறைப்பையும் இலவசமாக தந்தார்!

வாங்கி பூர்த்தி செய்து உள்ளே போகும்போது அந்த முறைத்தவர் மட்டும் இருந்தார். அந்த முதல் நபர் இல்லை. அவர் ரிடையர்ட் ஆக இன்னும் 5 நாள் இருக்கும் என்று தோன்றியது. குல்லாய் அணிந்து வெள்ளை தாடி வைத்திருந்தார். நல்ல வாட்டசாட்டமாய் இருந்தார். இப்படி எல்லாம் அவரை வர்ணித்து நேரத்தை வீணாக்கப் போவதில்லை. நேரா விஷயத்துக்கு வர்றேன்.

அவர் - வண்டி மதிப்பு என்ன?
நான் - 46,000 வாங்கினேன்.
அவர் - இந்த பணத்துக்கு இன்சுரன்ஸ் போட்டா நிறைய பணம் கட்ட வேண்டி வரும்.
நான் - இல்லை, நான் போன வருஷம் வாங்கும்போது அந்த விலை.
அவர் - அப்போ, இப்போ ஒரு 10,000 ரூபாய் இருக்குமா?
நான் - நோ, நோ..36,000 இருக்கும்.
அவர் [மறுபடியும்!] - அந்த விலைக்கு கணக்கு போட்டா 650 ரூபாய் வருது. நான் அட்ஜஸ் பண்ணி போட்றேன்.
நான் [சந்தேகத்துடன்!] - இல்லை பரவாயில்லை, என்ன வருதோ போடுங்க, நான் கட்டிர்றேன்.
அவர் [நான் சொல்வதை கேட்காமல்] - 400 ரூபாய் வருது, 450 கொடுங்க!
நான் - ஆனா நீங்க 400 ரூபாய் தானே ரசீத்ல எழுதி இருக்கீங்க?
அவர் - நான் அட்ஜஸ் பண்ணியிருக்கேன்ல?
நான் - நான் உங்களை அட்ஜஸ் பண்ண சொல்லவே இல்லையே சார். என்ன வருதோ அதைப் போடுங்க, நான் பணம் கட்ட தயாரா இருக்கேன். ஸாரி எனக்கு லஞ்சம் கொடுக்க இஷ்டமில்லை. தயவு செய்து லஞ்சம் வாங்காதீங்க!
அவர் - [தலை தாழ்த்திக் கொண்டு] சரி சரி 400 ரூபாய் கொடுத்துட்டு போங்க..[அவரால் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை!]

ஒரு வழியாய் ரசீதை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏற்றச் சென்றேன். ரயிலில் வண்டியை ஏற்ற ஒரு பலகை கூட இல்லை..4 பேர் அந்த வண்டியை ஆளுக்கு ஒரு கை தூக்கி ரயிலில் வைத்து விட்டு ம்ம்..கொடுங்க சார் என்று ஏதோ கொடுத்து வைத்தது போல் கேட்டார்கள். தலையெழுத்து என்று ஒரு 20 ரூபாய் நோட்டை நீட்டினேன். என்னா சார், சைக்கிளா தூக்கி வச்சோம், 100 குடு சார் என்றான் ஒருவன், இத்தனை பேரு எப்படி இந்த 20 ரூபாய் எடுத்துக்குறது என்று சட்டம் பேசினான். 4 பேரு கையை கொடுத்துட்டு 100 ரூபா கேட்டா எப்படி என்று சண்டைக்கு போனேன். வேணும்னா இதை வாங்கிக்குங்க என்றேன். அதற்கு அவர்கள் போ சார், போ..என்றார்கள். கடைசி வரை அந்த 20 ரூபாயை அவர்கள் வாங்கவில்லை. மகனே, 20 ரூபாயா நீட்றே, நாளைக்கு உன் வண்டிய பாரு என்பது போல எல்லோரும் ஒரு பார்வை பார்த்தனர்.

இடம் : சென்னை சென்ட்ரல்

ஒரு போலிஸ் தூரத்தில் அமர்ந்திருக்கிறார். யாரோ ஒருவன் நான் அங்கு சென்றவுடன் உங்க வண்டியா, ஒரு 30 ரூபா கொடுங்க என்ட்ரி பாஸ் போடனும் என்கிறான். அவனிடம் ரயில்வே ஊழியன் என்ற எந்த அடையாளமும் இல்லை. வேறு வழியின்றி கொடுத்தவுடன் வண்டியை இறக்கிவிட்டு பெட்ரோல் இருக்கா சார்? ஒரு சொட்டு இருந்தாலும் 2500 ரூபா ஃபைன் என்று பயமுறுத்துகிறான். நானும் பெட்ரோல் ரிசர்வில் இருந்ததால் எடுக்கவில்லை.

வண்டியைப் பார்த்தேன். இடது பக்க கண்ணாடியைக் காணவில்லை. வண்டி ஸ்டார்ட் ஆகாத படி வயரை புடுங்கி விட்டிருந்தார்கள்!! அந்த நேரத்தில் அன்பே சிவம் படத்தில் மாதவன் கமலிடம் பேசும் காட்சி ஞாபகம் வந்தது..

"இப்பொ எல்லாம் மனுஷனுக்கு பசிச்சா மனுஷனையே அடிச்சு சாப்பிட்றான் சார்! எனக்கும் தான் பசிக்குது!" என்பார் அப்பாவியாய்! அதே நிலையில் நானும் நின்று கொண்டிருந்தேன். இதெல்லாம் சும்மா விடாதீங்க, கம்ப்ளயன்ட் பண்ணுங்க என்றார் ஒரு பிராமண பெரியவர். அதற்கு அந்த பையன் சார், நான் சொல்றதைக் கேளுங்க, முதல்ல வெளியே போக பாருங்க..இதுல எல்லாம் மாட்டுனீங்கன்னா தேவையில்லாத பிரச்சனை தான் வரும் என்றான். வண்டியில் பெட்ரோலும், அந்த 2500 ரூபாய் ஃபைனும் என் கண் முன்னே வந்து சென்றது..என் மீதே எனக்கு வெறுப்பாய் இருந்தது..

அந்தப் போலீஸ் அந்தப் பையனிடம் நீயே பார்த்து முடிச்சுடு என்று எஙகளை விட்டு விட்டார். வெளியே வந்தவுடன் அந்தப் பையனுக்கு 300 ரூபாய் அழ வேண்டி இருந்தது! சே! பெட்ரோல் இல்லையென்றால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கி இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாலும், அப்படி என்ன செய்து விட முடியும் என்னால் என்ற உண்மையும் உணர்ந்தேன். 2500 என்று வரும்போது நானும் என் நேர்மையை கை விட வேண்டி இருக்கிறது. நிச்சயமாக 2500 தானா என்று கூட எனக்குத் தெரியாது. இந்த மாதிரி இடங்களில் நம்மை அறியாமல் ஒரு பயம் வந்து தொற்றிக் கொள்வது இயற்கை ஆகிவிட்டது!

இவர்களைப் பற்றி புகார் கொடுக்கப் போனால் அங்கேயும் ஒரு ஏஜன்ட் வந்து சார், நீங்களா புகார் கொடுக்கனும்னா லேட் ஆகும், எனக்கு ஒரு 50 ரூபா தள்ளினீங்கன்னா காரியம் ஜரூரா நடக்கும் என்று சொன்னால் கூட ஆச்சர்யமில்லை!!

அல்லாருக்கும் வண்க்கம்பா! இன்னாடா இம்மா நாளா இவனக் காணோமேன்னு நீங்க ஜாலியா இருக்கீங்க! வுடுவானா இந்த பிரதீப்பு..தோ! வன்ட்டான்ல வரிஞ்சி கட்டிகினு!! இன்னாடா நல்லா பேசிகினு இருந்த பய இப்படி பாழாப்பூட்டானேன்னு பாக்குறுங்கீளா? சொல்றேன், சொல்றேன்!! அதுக்கு தானே வந்துகுனே இருக்கேன்!

கஜினி முகமது 18 முறை முயன்று வென்றதைப் போல் நானும் பல முறை முயன்று ஒரு வழியாய் சென்னை மண்ணில் விழுந்து விட்டேன்! பட்டணத்தில் பிழைக்க வருவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கிராமத்தில் விவசாயம் படுத்து பட்டணத்திற்கு பிழைக்க வரும் ஒரு குடியானவனைப் போலில்லாமல் சாஃப்ட்வேர்கள் செழித்து வளரும் பெங்களூரை விட்டு நான் சென்னைக்கு பிழைக்க வந்தது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக்கும்.

நிக்க சொல்ல..[நிற்க தான் சென்னைத் தமிழில்]

இப்போ நான் சென்னை காக்னிஸன்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் ல குப்பை கொட்டிகினு இருக்கேன்! அம்புட்டு தான்ப்பா...

அப்பாடா வேர்க்கிறது!