கும்பகோணம் - கோயில்களுக்குப்
பெயர் பெற்றதாம்!

வீதிக்கு வீதி தெய்வமாம்!

அந்தப் பள்ளிக்கூடத் தெருவில்
கோயில் இல்லையா - அல்லது
தெய்வமே இல்லையா?

பள்ளிக்கூடத்தின் தீ அணைந்து விட்டது - விடாமல்
எரிந்து கொண்டிருக்கிறது
பெற்றோர்களின் வயிறு!

சில நாட்களாய் கருகிய வாசனையையே
சுவாசிப்பதாய் தோன்றுகிறது

அந்தக் கொடிய புகையை
நினைத்தே கண்கள் கலங்குகின்றன

உயிருக்குப் போராடும்
ஓசையே செவிகளில் ஒலிக்கிறது

குழந்தைகளைக் கதறவிட்டு விட்டு
தப்பித்து ஓடும் ஆசிரியர்களே
கண்களுக்குத் தெரிகிறார்கள்

மன்னிப்பது மனிதத் தன்மையாம்!
மன்னிக்கவும்! என்னால் அந்தக் கொடும்
தீயை மன்னிக்கவே முடியாது!

இனி யாரும் என்னிடம் "அக்னி பகவான்"
என்று சொல்லி வராதீர்கள்!

0 Responses