இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கடந்த இரு நாட்களாக மிகுந்த மன உளைச்சலாய் இருக்கிறது. அதை பற்றி சிந்திக்கவே வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், நம்மை சுற்றி உள்ளவர்கள் விட மாட்டேன் என்கிறார்கள். டில்லி உயிரியல் பூங்காவில் நடந்ததை தான் சொல்கிறேன். முதலில் ஒரு செய்தியாய் அதை வாசித்ததாய் ஞாபகம். அதை கற்பனை செய்யவே என்னால் முடியவில்லை. பிறகு அந்த குரூர நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் கைபேசியில் எடுத்த புகைப்படத்தை இணையம் எங்கும் வெளியிட்டார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. இப்போது அந்தப் படத்தை எடிட் செய்து அதோடு சேர்த்து, தாய்லாந்தில் புலிகள் சரணாலயத்தில் வாழும் சாதுப் புலிகளுடன் தாங்கள் எடுத்த செல்பீக்களை  போட்டு, "நான்னா புலியே மிரளும்!" என்று பஞ்ச் ஜோக் அடிக்கிறார்கள். இதில் நம் மீடியாவின் சேவை இருக்கிறதே!!! "பையனை அடித்துக் கொன்ற புலியை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது!" என்று ஒரு செய்தி!! அடப்பாவிகளா! உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? எல்லாமே உங்களுக்கு ஜோக், நியுஸ் தானா?

முதலில், ஒரு சக மனிதன் சாகும் தருவாயில் இருக்கும்போது எப்படி கைபேசியில் அதை படம் பிடிக்க முடிகிறது என்று யோசித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.  சரி, ஒரு வெள்ளை புலியை பார்க்கும்போது அங்கிருப்பவர்கள் கையில் கைபேசியை வைத்து படம் பிடித்துக் கொண்டிருந்திருப்பார்கள் அப்போது இந்த சம்பவம் நடந்தவுடன் அதையும் படம் பிடித்திருப்பார்கள் என்று நானே என்னை தேற்றிக் கொண்டேன். ஆனால் நேற்று தான் நான் என்னைத் தேற்றிக் கொண்டது முற்றிலும் தவறு என்று புரிந்து கொண்டேன். மனிதர்கள் நான் நினைத்ததை விட கொடூரமானவர்களாகவே இருக்கிறார்கள். நேற்றிலிருந்து இணையத்தில் அதன் வீடியோ உலா வரத் தொடங்கி இருக்கிறது. அதை ஏதோ புது ரஜினி படம் போல் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் அந்தப் பையனை அடித்துக் கொன்ற புலி கொடூரமானதா, அதை வீடியோ எடுத்தவர்கள் கொடூரமானவர்களா, அல்லது அதையும் பார்த்து விட்டு எல்லோருக்கும் பகிர்பவர்கள்  கொடூரமானவர்களா?

வீடியோ எடுக்கும்போதும், அதை பகிரும்போதும், அத்தகையை தருணத்தில் நாம் அவன் இடத்தில் இருந்தால் நம்முடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யாருக்கும் தோன்றாதா? பத்து நிமிடம் அந்தப் புலி அந்தப் பையனின் அருகில் நின்று அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு அங்கிருப்பவர்கள் சத்தம் எழுப்பியதை தொடர்ந்து அது ஆவேசமாகி அந்தப் பையனை கொன்றது என்று படித்தேன். அந்த கொடிய தருணத்தை எப்படி இவர்களால் படம் பிடிக்க முடிகிறது என்று எனக்கு புரியவேயில்லை. சரி இப்போது அதை பகிர்வதால் யாருக்கு என்ன நன்மை, அதில் என்ன கிடைத்து விடப் போகிறது? அப்படி என்ன ஒரு குரூர சந்தோசம்? என் மனதில் ஆயிரம் கேள்விகள். ஒரு வேளை இது ஒரு உப்பு பெறாத  விஷயம், நான் தான் ஓவர் ரியாக்ட் செய்கிறேனா, ஒன்றுமே புரியவில்லை. அணுகுண்டுக்கு வழி சொன்ன ஐன்ஸ்டீன் கூட அன்பையும் மனிதத்தையும் தான் பேசினார். Great Dictator ல் வரும் சாப்ளினின் கடைசி காட்சி நினைவுக்கு வருகிறது.

"I’m sorry, but I don’t want to be an emperor. That’s not my business. I don’t want to rule or conquer anyone. I should like to help everyone - if possible - Jew, Gentile - black man - white. We all want to help one another. Human beings are like that. We want to live by each other’s happiness - not by each other’s misery. We don’t want to hate and despise one another. In this world there is room for everyone. And the good earth is rich and can provide for everyone. The way of life can be free and beautiful, but we have lost the way.

Greed has poisoned men’s souls, has barricaded the world with hate, has goose-stepped us into misery and bloodshed. We have developed speed, but we have shut ourselves in. Machinery that gives abundance has left us in want. Our knowledge has made us cynical. Our cleverness, hard and unkind. We think too much and feel too little. More than machinery we need humanity. More than cleverness we need kindness and gentleness. Without these qualities, life will be violent and all will be lost...."