Oct
19

இரவு விளக்கணைத்து
போர்த்திக் கொள்ளும் போது
ஒரு நாளும்,
ஒரே முறையில்
கால்கள் போர்வைக்குள்
போவதில்லை...

மழைக்கு ஒதுங்கினோம்

மழைக்கு ஒதுங்கிய
உன்னை ரசித்துக் கொண்டிருக்கிறேன்!

இதோ நின்று விடுவேன்
என்று என்னை அழவைத்துக் கொண்டும்

இப்போதைக்கு நிற்க மாட்டேன்
என்று உன்னை எரிச்சலூட்டிக் கொண்டும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை!

1 Response
  1. Anonymous Says:

    Good poem.