என்னடா blog எழுதி இவ்வளவு நாள் ஆச்சே, ஏதாவது எழுதனுமே..என் blog யையே நம்பி இருக்கும் கோடானு கோடி ரசிகர்களை [சரி, சரி!!] ஏமாத்தக்கூடாதேன்னு..சரி 1 வரி கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சே, அதைப் பத்தி யோசிப்போம்னு நேத்து office ல இருந்து bike [மீரா ஜாஸ்மீன்] ல போகும்போது யோசிச்சேன்! [இப்போ எல்லாம் bike
ல போகும் போது ம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!!!!]

So, asusual Airport road ல Leela Palace கிட்ட signal. Signal ல வேற என்ன பாக்க முடியும் சொல்லுங்க? அதான் இந்த bike கதை! நான் இன்னைக்கு blog எழுத உட்காரும்போது என்கிட்ட இருந்த ஒரே கதை இது தான்!! இதை மட்டும் எப்படி போட்றதுன்னு நினைச்சி சரி இன்னும் கொஞ்சம் கதைகளை யோசிப்போம்னு வந்தது தான் பாக்கி எல்லாம்!! [அதுவா வருதுப்பா!!]

1. (a). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவனைப் பார்த்து என்னுள் பேசிக் கொள்கிறேன், இவன் bike due கட்டி முடிச்சிருப்பானோ?!!!!!!!

1. (b). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவன் cell phone ல் சிரித்து சிரித்துப் பேசுகிறான். இவனுக்கு petrol விலை ஏறியது தெரியாதோ? என்று நான் நினைத்துக் கொள்கிறேன்!! [சமிபீத்திய petrol விலை உயர்வை [41.87/ltr] நம் கதையில் புகுத்தினா என்னான்னு புகுத்துனது]!!

2. நான் channel ஐ மாற்றியவுடன் என் நண்பன் எரிச்சலுடன் கத்துகிறான்! இந்த உலகில் எல்லா வளமும் இருந்தும் ஏன் அமைதி இல்லை என்று எனக்கு லேசாய் புரிகிறது!

வீட்டில் சேர்ந்து வாழும் 2 நண்பர்களிடம் ஒரு சாதரண TV க்காக அமைதி குறையும் போது உலகில் அமைதி ஏன் இல்லை என்கிற கேள்விக்கு இடமில்லை!! [ஐய்யோ! கசக்குதே!! அதாம்பா உண்மை கசக்குமாமே?]

3. நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்! waiter எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்!

ஒவ்வொருவரும் உண்மையாய் [??] காதலிப்பதால், யாருக்குக் கஷ்டம் என்பதே கரு!

4. அவள் எல்லாவற்றையும் களைத்து நிற்கிறாள்! எனக்கென்னவோ இன்னும் அவளுடைய கண்களே கவர்ச்சியாய் தெரிகின்றன!

கொஞ்சம் adultary ஆ தான் இருக்கு. but இதுல காமத்தை விட காதலைத் தான் நான் சொல்ல வர்றேன். அவள் பிறந்த மேனியா நின்னாலும் நம்ம ஆளு அவளோட கண்களின் கவர்ச்சியை ரசிக்கிறான்!! [யாருப்பா? யாரெல்லாம் அப்படி இருக்கீங்கோ, கை தூக்குங்க!!]

1 Response
  1. Anonymous Says:

    hai