Sep
24

மூளைக்கு ரொம்ப வேலை கொடுத்து பாத்துட்டேன்! ஹ¤ஹ¤ம்..சார் கண்டுக்கவே மாட்றார்! மூளை சார், மூளை சார் எழுதி ஒரு வாரத்துக்கு மேலே ஆச்சு சார், என்னோட ரசிகர்களுக்கெல்லாம் என்னோட ப்ளாக் படிக்காம [இதையெல்லாம் கண்டிச்சி திட்றவங்க கமெண்ட்ஸ்ல போடாம எனக்கு தனியா மெயில் அனுப்பும்படி இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்!] சோறு தண்ணி இறங்காது சார்..இப்படி என்னன்னவோ சொல்லி பாத்துட்டேன்! நல்லா அடிச்சி போட்ட மாதிரி படுத்துருக்காரு! இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்த வாரம் என்னால எதுவும் புதுசா எழுத முடியலை..[யாருய்யா அங்கே கை கொட்டி சிரிக்கிறது?]

அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!
நம்ம ஆள் இப்படி சருக்கிட்டாரே என்று நினைப்பவர்க்கு ஒரு நல்ல செய்தி!!

புதுசா ஒன்னும் எழுதலையே தவிர, பழசான ஒன்னை புதுசா காப்பி அடிச்சி வச்சிருக்கேன்! பாரதியோட "வீணையடி நீ எனக்கு" பாட்டு..இது ரொம்ப ஈஸியா இருக்கே..நம்மளும் எழுதலாமேன்னு எழுதி பாத்தேன்! நிறைய எழுதலாம்னு நினச்சேன்..ஒன்னும் வர்லை! இது எப்பவோ எழுதுனது..[அதான் உங்களுக்குத் தெரியுமே, இந்த வாரம் மூளை சார் கோமால போயிட்டாருன்னு?] இதுல ஒரு basic concept உனக்கு அவ ஏதாவதா இருக்கனும், நீ அவளுக்கு ஏதாவதா இருக்கனும்! that's it...கவிதை ரெடி!!

அகரமடி நீ எனக்கு
சூடும் ஆரமடி நானுனக்கு

நிலவடி நீ எனக்கு
நீளும் இரவடி நானுக்கு

காமமடி நீ எனக்கு
கொல்லும் காதலடி நானுனக்கு

மழையடி நீ எனக்கு
மண்னின் வாசமடி நானுனக்கு

வித்தையடி நீ எனக்கு
வீழும் வேட்கையடி நானுனக்கு

அன்புச் சின்னமடி நீ எனக்கு
ஆசை முத்தமடி நானுனக்கு

வானமடி நீ எனக்கு
சுவாசமடி நானுனக்கு

எங்கே யாரையும் காணோம்?


0 Responses