silsila என்று ஒரு ஹிந்தி படம்..அமிதாப் பச்சன் நடித்தது!

அதில் ஒரு அற்புதமான பாடலை ஜாவேத் அக்தர் இயற்றியுள்ளார்! அந்த பாடலின் இடையில் அமிதாப்பின் குரலில் கீழ்கண்ட கவிதை ஒலிக்கும்! Just Beautiful!!ஹிந்தியிலிருந்ததை எனக்குத் தெரிந்த வரை மொழி பெயர்த்துள்ளேன்! தவறிருந்தால், நீங்கள் எடுத்துரைத்தால் திருத்திக் கொள்வேன்!!

இதோ அந்தக் கவிதை...

நானும் என் தனிமை அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு!

நீ இங்கிருந்தால் எப்படி இருக்கும்
நீ இதைச் சொல்வாய்
நீ அதைச் சொல்வாய்

நீ இந்தப் பேச்சைக் கேட்டு ஆச்சிரியப்படுவாய்
நீ அந்தப் பேச்சைக் கேட்டு எவ்வளவு சிரிப்பாய்

நீ இங்கிருந்தால் இது நடந்திருக்கலாம்
நீ இங்கிருந்தால் அது நடந்திருக்கலாம்

நானும் என் தனிமையும் அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு

இது இரவா - அல்லது
உன் கூந்தல் விரிந்து கிடக்கிறதா?

இது நிலாவெளிச்சமா - அல்லது
உன் பார்வைகளால்
என் இரவு சலவை
செய்யப்பட்டுள்ளதா?

இது நிலவா - அல்லது
உன் வளையலா?

இது நட்சத்திரங்களா - அல்லது
உன் முந்தானையா?

காற்றின் அலையா - அல்லது
உன் மேனியின் நறுமணமா?

இது சருகுகளின் ஓசையானது
நீ ஏதாவது முனுமுனுத்ததுபோலுள்ளது

எத்தனை நாட்களாய் நான்
இதைப் பற்றி யோசிக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

எனக்கும் தெரியும் - நீ இல்லை
நீ எங்கும் இல்லை என்று!

ஆனால் இந்த இதயம் சொல்கிறது
நீ இங்கு தான் இருக்கிறாய்
இங்கு எங்கோ தான் இருக்கிறாய்

இதே நிலை இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது

தனிமையான இரவு - இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது

சொல்வதற்கு நிறைய உள்ளது - ஆனால்
யாரிடம் சொல்வேன்!

எத்தனை காலம் தான் - இப்படி
அமைதியாய் இருப்பது
இல்லை, இந்த அமைதியை சகிப்பது

இதயம் சொல்கிறது - உலகத்தின்
அத்தனை தடைகளையும்
கலைவோம்

உனக்கும் எனக்கும் இடையில்
உள்ள சுவரை இன்று உடைப்போம்

ஏன் இதயத்தில் வைத்து வெம்ப
வேண்டும்..

எல்லோருக்கும் சொல்வோம் - ஆம்
நாம் காதல் வசப்பட்டுள்ளோம்..
காதல் வசப்பட்டுள்ளோம்
காதல்...!

இப்போது இதே விஷயம் - இங்கும்
உள்ளது அங்கும் உள்ளது!

0 Responses