வழக்கமான Coffee shop.

அஜய் Kapi Nirvana வுடன், ஸ்ருதி Crunche Frappe யுடன்.

ஸ்ருதி: என்ன ஆச்சு உனக்கு?

அஜய்: ஒன்னுமில்லையே...

பின்ன ஏன் reception ல தீப்திகிட்ட அப்படி சொன்னே?

நம்ம கல்யாணம் பண்ணப் போறதில்லைன்னு சொன்னேனே, அதுவா?

ம்ம்ம்..

கொஞ்ச நாளா அப்படித் தான் தோணுது.

(sarcastically) அப்போ என் வயித்தில வளர்ற குழந்தைக்கு என்ன பதில் சொல்லப் போற?

ம்ம்..Initial ல உன் பேர் மட்டும் போட்டுக்கோன்னு சொல்லப் போறேன்.

அடப்பாவி, இவ்வளவு easya முடிச்சிட்டியேடா...ஆமா, என்ன அய்யாக்கு திடீர்னு
இப்படி ஒரு ஞானம்?

எல்லாம் அனுபவம் தான்.

யாருக்கு?

யாருக்கோ..

டேய்...ஏன்னு சொல்லுடா!

லவ் பண்ணா கண்டிப்பா கல்யாணம் பண்ணனுமா என்ன?

இல்லையே, லவ் பண்ணலைன்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். நிறைய பேர் அப்படித் தான்பா பண்ணிக்கிறாங்க!

எனக்கு marriage மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சுன்னு சொல்றேன்.

ஓ, அப்போ Living together ஆ?

அதுக்கு கல்யாணமே பண்ணிடலாம்.

ஐய்யோ, அஜய், என்னை ஒரேடியா குழப்புற நீ?

simple டி, எனக்கு காலம் பூரா உன்னை லவ் பண்ணனும். Also, i don't want to miss our space.

what do you mean?

Marriage is a compromise. ஒத்துக்குறியா?

ஆமா, அதுக்கு?

I have one life, why to compromise?

நானும் தானேடா compromise பண்றேன்.

உனக்கும் சேர்த்துத் தான்டி பேசுறேன். Why you have to?

Because we love each other da...

இப்போ உனக்கு ஒரு நாய்குட்டியை ரொம்ப புடிக்குதுன்னு வச்சுக்கோ, அதை ஆசையா தடவிக் கொடுக்கலாம், கொஞ்சலாம். அதை விட்டுட்டு அதோட மென்னியை புடிச்சி அமுக்கிட்டு, லவ் பண்றேன்னு சொன்னா என்ன நியாயம்?

ம்ம்...point! So marriage மென்னியை புடிக்குதுன்ற?

மென்னியை மட்டுமா?

டேய்...(சிரிக்கிறாள்)

Let me explain...Its gonna be long...

நம்ம நாலு வருஷமா லவ் பண்றோம். இல்லையா?

தலையசைக்கிறாள்.

எங்க வீட்ல நானும் என் அண்ணனும், அவன் குடும்பத்தோட US போயி செட்டில் ஆயிட்டான். திரும்பி வர மாட்டான். நான் இங்கே தான் இருப்பேன். நான் இங்கே இருக்குறதால, எங்க அம்மா அப்பாவை நான் தான் கடைசி வரை பாத்துக்கனும். அதே மாதிரி, உங்க அம்மா அப்பாக்கு நீ ஒரே பொண்ணு. உங்க அப்பாக்கு Heart problem வேற. They are totally dependent on you. social setup படி, நீ என்னை கல்யாணம் பண்ணிட்டா, எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மா அப்பாவைத் தான் கவனிச்சுக்கனும். பொண்ணை கட்டிக் கொடுத்தாச்சு, கஷ்டமோ, நஷ்டமோ இனி நம்ம தான் நமக்குத் துணைன்னு அவங்க ஒதுங்கிடுவாங்க. How its fair?

சரி அவங்களை நம்ம கூடவே வச்சுக்கலாம்னா, அவங்க வீட்டை விட்டு வர மாட்டாங்க. Thats ok. அது அவங்க விருப்பம். காலம் பூரா கஷ்டப்பட்டு பாத்துப் பாத்து கட்டின வீட்டை விட்டுட்டு அவங்க வரணும்னு அவசியமும் இல்லை. So, அப்பா அம்மா எப்படி இருக்காங்களோ, என்ன பண்றாங்களோன்னு நீ தினம் தினம் கவலைப்பட்டுட்டே இருக்கணும்.

இது ஒரு பக்கம். நம்ம கதைக்கு வா. We both have huge career plans. Actually, You are more career oriented than me. ஆனா, கல்யாணம் ஆனா என்ன நடக்கும், கல்யாணம் ஆன அடுத்த மாசமே, எப்போ விசேஷம்னு ப்ரெஷர் போடுவாங்க. தொலையுதுன்னு பெத்துட்டா, முடிஞ்சதா? அப்போ தான் ஆரம்பம். எதுக்கு ரெண்டு பேர் சம்பாதிக்கனும்? நீ வீட்ல இருந்து குழந்தையை பாத்துக்கோன்னு ப்ரெஷர் போடுவாங்க. அப்புறம் நீ உன் career plans ஐ மூட்டை கட்டி பரண் ல போட்டுட்டு youtube ல வித விதமா டிஷ் பாத்து எனக்கும் என் குழந்தைகளுக்கும் செஞ்சு போடலாம்.

டேய், நீ சொல்றதெல்லாம் கேக்க பயமா தான் இருக்கு, ஆனா எனக்காக நீ இவ்வளவு யோசிக்கிறேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்குடா..

நான் அவ்வளவு நல்லவன்லாம் கிடையாது. இப்போ தான் நான் எனக்காகப் பேசப் போறேன். கல்யாணம் எதுக்கு? ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை எதுக்குத் தேவைப்படுது, Sex அப்புறம் நமக்கு ஒரு வாரிசு. வாரிசு விஷயத்துல எனக்கு இப்போதைக்கு எந்த interest யும் இல்லை. உனக்கும் அப்படித் தான். வாரிசுகளாப் பெத்து போட்டு already we have created enough damage. போதும். அப்புறம் Sex. அது கண்டிப்பா வேணும்.
90s la சினிமா பாட்டுல "கல்யாணத்தாலி கட்டிப்புட்டு கட்டிலில் ஆடு ஜல்லிக்கட்டு"ன்னு கலாச்சார காவலர்களா இருந்த பெண்கள், இப்போ, "உன்னால ஏய் மூடாச்சு, வா உரசிக்கலாம், ஜிகு ஜிகுன்னு ரவுடி பேபி"க்களா மாறிட்டீங்க. So, "அதுக்கு" கல்யாணம் கண்டிப்பா அவசியமே இல்லை.

வெக்கப்பட்டு சிரிக்கிறாள்.

So, கேவலம், தப்பு தப்பு, அது கேவலம் இல்லை, அப்படிப்பட்ட மகத்தான Sex க்காக எதுக்கு என்னோட சுதந்திரத்தை இழக்கனும். அப்புறம், எனக்கு எப்போ வேணா sports channel பாக்க முடியனும். friends கூட trip போக முடியனும். நான் இப்போ வாழ்ற மாதிரி என் life எப்பவும் இருக்கணும்.

சாக்ரடீஸ் கிட்ட ஒருத்தன் கேட்டானாம், "குருவே, கல்யாணம் பண்ணலாமா வேணாமா?"ன்னு, அவர் அதுக்கு, "பண்ணாலும் கவலைப்படுவே, பண்ணலைன்னாலும் கவலைப்படுவே, உன் இஷ்டம்னாராம்!". எதுக்கு அவ்வளவு effort எடுத்து கஷ்டப்படனும்?

அப்புறம், கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் ன்னு ஆண், பெண்ணோட personality யே change ஆகுது கவனிச்சியா? காதலியா இருக்கும் போது, தேவதை, baby, அம்மு, செல்லம், sweet heart ன்னு சொன்னவன் எல்லாம், கல்யாணத்துக்கு அப்புறம், ராட்சசி, டார்ச்சர் னு பொண்டாட்டிக்கு வேற பேர் வச்சுட்றான். பசங்க பேர் வைக்கிறதோட சரி, நீங்க முதுகுல நாலு வைக்கிறீங்க. நம்ம ஆளு வீட்டுக்குப் போகவே பயப்பட்றான். காதல் எல்லாம் எங்கேயோ தொலைஞ்சி போயி வாழ்க்கை Non bailable offense mathiri ஆயிடுது. என் cousin விமல் தெரியும்ல? கல்யாணதுக்கு முன்னாடி "அவ ஒரு பார்வையால என்னைக் கொல்றாடா!" ன்னு feel பண்ணிட்டு இருந்தான். இப்போ literal ஆ "கொல்றாடா!!" ன்னு நிஜம்மா feel பண்றான். Jokes apart.
அந்தக் காதல் எங்க போச்சு? கல்யாணம் அப்படி என்ன பண்ணுது? லவ் மேரேஜ் இப்படின்னா அரேஞ்ச்ட் மேரேஜ் பத்தி சொல்லத் தேவையில்லை. எத்தனையோ cases பாத்துட்டேன். எல்லாரும் விதியேன்னு தான் வாழ்றாங்க. Diversion க்கு குழந்தைகள் இருக்குறதால, நிறைய Divorces நடக்கலைன்னு சொல்லலாம். அது கூட இப்போ கூடிப் போச்சு. இதைப் பத்தி எல்லாம் நிறைய யோசிச்சேன். நம்ம விஷயத்துல அப்படி நடக்கக்கூடாதுன்னு தோணுச்சு. நம்ம கடைசி வரை காதலர்களா இருக்கனும்னு தோனுச்சு.
நீ சொல்றதுல point இருக்கு. ஆனா கல்யாணமும் வேணாம், Living together யும் இல்லைன்ற? Then what's your idea?

அங்கே தானே வர்றேன். Its like "Living together, but being apart" i mean my idea is "Committed Apart!"

Committed Apart. Wow, interesting.

இல்லை? அதுக்கு என்ன பண்ணனும், படம் முடிஞ்சதும் நீ உன் வீட்டுக்கு போகனும், நான் என் வீட்டுக்குப் போகனும். நீ உன் வாழ்க்கையை வாழனும், நான் என் வாழ்க்கையை வாழனும். நான் எங்க அம்மா அப்பாவோட இருக்கலாம், நீ உங்க அம்மா அப்பாவோட இருக்கலம். உனக்கு மாமியார் தொல்லை இல்லை, எனக்கு பொண்டாட்டி தொல்லை இல்லை. நம்ம இப்போ மீட் பண்ற மாதிரி டெய்லி மீட் பண்ணி டைம் spend பண்ணலாம்.
அப்போ sex?

(கொஞ்சலுடன்) என் Rowdy baby, ஒன்னுமே தெரியாது?! இப்போ நம்ம பண்ணாமலா இருக்கோம்? இதே மாதிரி hook up பண்ண வேண்டியது தான். திருட்டு மாங்கா ருசியே தனி தானே..

அப்போ நீ propose பண்ற system, problem யே இல்லை, fool proof னு சொல்றியா?

Problem is everywhere.

Every problem has got a solution.

And every solution will have its own problem.

ம்ம்...எல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனா இதெல்லாம் நடக்குமா? parents எப்படிடா accept பண்ணுவாங்க?

Parents love marriage accept பண்ணுவாங்களா? அதுக்கே ஆயிரம் பஞ்சாயத்து பண்ணி தானே ஆகனும். இது புது idea, பத்தாயிரம் பஞ்சாயத்து பண்ணனும். அவ்வளவு தான். நீ convience ஆயிட்டெல்லே? உங்க அப்பாகிட்ட நான் பேசுறேன், correct புரியவச்சுட்டோம்னு வை, "இந்த மாதிரி idea எல்லாம் எங்க காலத்துல இல்லாம போச்சேன்னு!" புலம்புவார் பாரு...Actually not only your father...
இருவரும் சிரிக்கிறார்கள்.

Parents ok, நம்மளைப் பெத்த குத்தத்துக்கு இதெல்லாம் சகிச்சிகிட்டாலும், what about society டா?

Committed Apart ஓட Tagline என்ன தெரியுமா? Fuck the society!

மறுபடியும் சிரிக்கிறார்கள்.


0 Responses