Jun
09

கடற்கரையில்
அலையின் அருகில்
ஒரு சிறுமி சிறு நீர் கழித்து எழுகிறாள்.
அவள் தாய் போல் அந்த இடத்தை
அலம்பி விட்டுச் செல்கிறது ஒரு கடலலை.
அன்று இரவு உப்பின் அளவை கணக்கெடுக்கும்போது
புதிதாய் சேர்ந்த உப்பை கண்டுகொள்ளுமா கடல்?


[photo courtesy: my wife]
0 Responses