தலைப்பே சொல்லிவிட்டது.

சாலைக் குறிகளைப் பற்றி 10 கேள்விகள். கண்டிப்பாய் 10 கேள்விக்கும் சரியான விடை கொடுக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால், அடுத்த பரிட்சை, சாலை விதிகளைப் பற்றியது. 35 மைல் வேகத்தில் செல்லும் வண்டியை ப்ரேக் பிடித்தால் எத்தனை அடிகள் தள்ளி நிற்கும்? விர்ஜினியாவில் காரோட்டும் போது அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவு என்ன? இப்படியாக ஒரு 26 கேள்விகள். இதில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும். பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலத்தில் வொர்க் புக் என்று ஒன்று கொடுப்பார்களே, அதைப் போல் ஒன்று கொடுத்து படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, அப்புறம் ட்ரைவிங் கத்துத் தர்றேன் என்று அனுப்பி விட்டார்கள். நானும் இதெல்லாம் சப்பை மேட்டர் என்று நினைத்து, அந்த புக்கை அப்படியே சில முறை புரட்டி விட்டு, இணையத்தில் உள்ள மாதிரி தேர்வில் ஒவ்வொரு முறையும் அநாயசமாய் நூற்றுக்கு நூறு வாங்கி அதே கெத்துடன் போன வாரம் தேர்வெழுதி, அநியாயமாய் ஃபெயில் ஆனேன்!

விடுங்க சகா, இதெல்லாம் இங்கே சகஜம்...அப்படியே தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும் என்று இங்கு அனுபவம் உள்ளவர்கள் அறிவுரை கூறினார்கள். நான் சென்னையிலிருந்து வரும்போது காருக்கான லைசன்சை எடுத்துக் கொண்டு தான் வந்தேன். எல்.எல்.ஆர். எடுக்க இப்படித் தான் ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. நானும் தலையில் எண்ணையெல்லாம் தடவி உச்சி எடுத்து நெத்தியில் விபூதி குங்குமம் எல்லாம் இட்டுக் கொண்டு தேர்வெழுத போய் சேர்ந்தேன். என்னை ஒரு கணினிக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். திக் திக் என்றது. 10 பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே ஒருவர் கணினியில் என்னவோ செய்து எல்லா கேள்விகளையும் கொண்டு வந்தார். நான் முதல் கேள்வி படித்து நான்கில் எது விடை என்று தேடிக் கொண்டிருந்த போது வேறு பத்து பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே அவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் தட்டிக் கொண்டே போனார். 5 நிமிடத்தில் கணினி பச்சைக் கலரில் நான் தேர்வில் வெற்றி பெற்றதாக முட்டாள்தனமாய் என்னை வாழ்த்தியது. அந்த பத்து பேருடன் நானும் சேர்ந்து கொண்டு, சார் நான்ல எழுதனும், நீங்க என்று இழுத்தேன். நீங்க எழுதுவீங்க, அப்புறம் ஃபெயில் ஆவீங்க, அப்புறம் மறுபடியும் வரணும்? எதுக்கு சார்? டைம் வேஸ்ட் தானே என்றார். நீங்களே சொல்லுங்கள்? நம் இந்தியர்களைப் போல் அமேரிக்கர்கள் எப்போது நேரத்தின் மதிப்பை உணரப் போகிறார்கள்? ஹைய்யோ ஹைய்யோ!!

அலுவலகத்தில் இருக்கும் ஒரு புண்ணியவான் மூலம் நூலகம் ஒன்றில் சேர்ந்து விட்டேன். ஒரு ஐடி கார்டையும், அட்ரஸ் ப்ரூஃபையும் கொடுத்தால் அந்த அழகான பெண் சிரித்துக் கொண்டே பைசா செலவில்லாமல் யாரையும் மெம்பர் ஆக்கி விடுகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரயில்வே ஸ்டேஷனில் எடை பார்க்கும் போது வரும் அட்டையை போல் (பார் கோட் இருக்கிறது) அது இருக்கிறது. அந்த அட்டை ஒன்றுக்கு புத்தகமோ, ஒலி புத்தகமோ, பத்திரிக்கையோ, சீடீயோ, டீவிடீயோ இப்படியாக ஐம்பது எண்ணிக்கைகளை அள்ளிக் கொள்ளலாம். புத்தகங்களை நான்கு வாரங்கள் வரையும், டீவிடீக்களை இரண்டு வாரங்கள் வரையும் வைத்துக் கொள்ளலாம். அதோடு, நூலகத்தில் இணைய வசதி இலவசம். கணினி வகுப்புகள் இலவசமாய் நடக்கின்றன. நான் சேர்ந்த நூலகத்திற்கு கிட்டத்தட்ட பத்து கிளைகள் இருக்கின்றன. ஒரு கிளையின் புத்தகத்தை இன்னொரு கிளையிலும் திருப்பிக் கொடுக்கலாம். ரொம்ப அசதியாய் இருந்தால் மொபைல் புத்தக வாகனமும் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை அது குறிப்பிட்ட இடங்கள் வந்து போகும். நூலகம் சென்று திருப்பிக் கொடுக்க அலுப்பாய் இருந்தால், அதில் திருப்பிக் கொடுத்து விடலாம். இதையெல்லாம் தவிர்த்து இணையத்திலும் நீங்கள் திருப்பிக் கொடுக்கும் தேதியை நீட்டிக் கொள்ளலாம். நீங்கள் தேடும் புத்தகம் அந்த நூலகத்தில் இல்லாமல் வேறு கிளையில் இருந்தால் அதை நீங்கள் விண்ணப்பித்து தருவித்துக் கொள்ளலாம். சரி, நீங்கள் சொல்லும் புத்தகம் எந்தக் கிளையிலும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை புதிதாய் வாங்கி உங்களுக்குத் தருகிறார்கள். எத்தனை வசதி பாருங்கள்! படிப்பவர்களை கொண்டாடுகிறார்கள்.

ஒரு சின்ன உதவி, தமிழில் இத்தனை நாட்களாய் படித்து வந்ததால் (அதுவும் கொஞ்சம் தான்!) ஆங்கிலத்தில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தமிழில் நம்ம வாத்தியார் கையை பிடித்து நடப்பது போல் ஆங்கிலத்தில் விறு விறு வென்று போகும் வாத்தியார்களின் பெயர்கள் வேண்டும். ஆங்கிலத்தில் எனக்கு பிடித்தது என்று சொல்வதை விட எனக்கு புரிந்தது ஆர்.கே. நாராயணன், ரஸ்கின் பாண்ட், சேதன் பகத். எல்லாம் நம்ம ஊர் எழுத்தாளர்கள் தான். சிட்னி ஷெல்டனின் ஒரு நாவல் படித்திருக்கிறேன். எளிதாய் விறு விறுவென்று இருந்தாலும் எனக்கு அவ்வளவாய் ஈர்க்கவில்லை. நிறைய சிறுகதைகள் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆங்கில கவிதைகளும் படிக்க வேண்டும். ஆனால் அது எந்த அளவுக்குப் புரியும் என்று தெரியவில்லை...கொஞ்சம் கோடு போட்டீர்கள் என்றால் நான் ரோடு போட முயற்சிக்கிறேன்.

உரைநடை சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

4 Responses
  1. Anonymous Says:

    you can start with Sydney Sheldon, Jeffrey Archer


  2. Unknown Says:

    anna licence kudiya seikaram vanga en vazhuthukal......
    vishnu


  3. KRICONS Says:

    பிரதீப்,
    எந்த முக்கியமான வேலையில் இருந்தாலும் SMS வந்தால் எடுத்து படிப்பது என் வழக்கம். ஆச்சரியம் இந்த பதிவை படிக்கும் போது வந்த SMSயை பதிவை படித்து முடித்த பிறகு தான் படித்தேன்...


  4. vishnu,

    ellam unga aasirvaatham!

    KRICONS,

    pullarikkuthunga...romba nandri!