நேற்றிலிருந்து பெங்களூரிலும் என் blogன் ஆதிக்கம் தான்! என்ன முழிக்கிறீங்க..அதாங்க மழை!

மழை தான் எத்தனை அழகு...

1. சின்னக் குடையுடன் தன் அம்மாவுடன் நடந்து போகும் குழந்தை
2. சாலை சுத்தமாகி வழுக்கிக் கொண்டு போகும் வாகனங்கள்
3. தன் கழுத்தை வேகமாக சிலிர்த்துக் கொள்ளும் குட்டி நாய்
4. நனைந்தபடி சாலை ஓரத்தில் சூடாய் தேநீர் அருந்தும் மனிதர்கள்

[பரிட்சையில point point ஆ எழுதி பழகிடுச்சி..ஹிஹி!]

நான் office முடிஞ்சு cycle ல வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். அதான் மழை வந்துருச்சே so default ஆ கவிதையும் வருது.

மழை வந்து
போனதை இலைகள்
உணர்த்திக்கொண்டிருந்தன!


என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? இன்னைக்கு காலையிலே scv channel ல கண்ணுக்கு மை அழகு ஓடிட்டு இருந்தது! அதுல ஒரு வரி:

மழை நின்று போனாலும்
இலை சிந்தும் துளி அழகு!


அட இது நம்ம கவிதை மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். வைரமுத்து அளவுக்கு நான் யோசிக்கிறேனா? இல்லை எனக்கே தெரியாம வைரமுத்துகிட்டேஇருந்து copy அடிச்சிட்டேனான்னு தெரியலை..

இப்போதைக்கு WISE MEN THINK ALIKE அப்படின்னு வைச்சுக்குவோமா? ஹிஹி..

நேற்று என் blog நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். இரவு நேரமாகிவிட்டது. சரி நான் கிளம்புறேன் என்று நண்பரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
அவர் மழை பெய்யுதே குடை கொண்டு போங்க என்றார். அதற்கு நான் சொன்ன பதில்:

பெய்யெனப் பெய்யும் மழை!