"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா?" என்ற ஒரு பாடல். இந்த பாட்டில் தலைவருக்கு சில எக்ஸ்க்ளூசிவ் க்ளோசப் இருக்கும். மனிதர் அள்ளுவார். அமலாவும் அம்சமாய் இருப்பார். பாடலும் நல்ல பாடல் தான். இதை எல்லாம் மீறி, அந்தப் பாடலை பார்ப்பது மனதுக்கு மிகவும் வருத்தம் தரும் செயல். என்ன நினைத்து வைரமுத்து பாட்டின் பல்லவியில் சேலையை கொண்டு வந்தாரோ, பாட்டில் படாத பாடுபடுவது அமலா தான்!

[டூயட் பாடல்களில் அடிக்கடி ஆடைகள் மாறுவதுண்டு. என் சிறு வயதில் இந்த ஆடை மாற்றம் எப்படி நிகழ்கிறது என்று என் மனதில் கேள்வி எழும். சரி, மரத்தை சுற்றி பாடும்போது மரத்துக்கு பின்னால் மாற்றிக் கொள்வார்கள் போல என்று நானே நினைத்துக் கொண்டு சமாதானம் அடைந்து விட்டேன்! இந்தப் பாடலில் தான் உண்மையில் ஆடை மாற்றுவதை கொஞ்சமாவது காட்டி இருக்கிறார்கள்!]

ரஜினியின் அருகில் அமலா வந்தால் போதும், அவருடைய சேலையை மனிதர் சரேலென்று உருவி விடுகிறார். அதுவும் ஸ்டைலாக! என்ன ஒரு கதாநாயகத்தனம்!! உடனே அமலாவுக்கு இன்னொரு சேலை. மறுபடியும் உருவுகிறார். பாவம் அமலா. இதை படம் எடுக்கும்போது ரஜினிக்கோ, பாரதிராஜவுக்கோ, நடன இயக்குனருக்கோ "வெட்டவெளியில் வைத்து நாம் இப்படி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறோமே" என்று தோன்றி இருக்காதா? விளையாட்டுக்காகவாவது அமலா ரஜினியிடம், "சார் வைரமுத்து சாரை சட்டை, பேன்ட் வச்சி ஒரு பாட்டு எழுத சொல்லுங்க, அதுல நான் உங்க சட்டை பேண்ட்டை புடிச்சி இழுக்கிறேன்!" என்று சொல்லி இருப்பாரா? குழந்தைகள், பெண்கள் என்று ரஜினியின் படங்களை பார்க்காத ஆள் கிடையாது. இப்படி ஒரு காட்சியை படத்தில் எப்படி வைக்கலாம் என்று ரஜினியும் சரி, பாரதிராஜாவும் சரி, நடன இயக்குனரும் சரி யாருமே சிந்தித்திருக்க மாட்டார்களா? சரி, இது தான் நடன அமைப்பு என்றால், அந்த செயலுக்கு பொருத்தமானவர் படத்தின் வில்லன் தானே? ஒரு வேலை அவர் தான் படத்தில் கதாநாயகியின் அப்பா என்பதால் விட்டுவிட்டார்களா? இதில் கொடுமை என்னவென்றால் இதுவரை இந்தப் பாடலை பார்த்து நமக்கு எதுவுமே உறுத்தாது தான்!. அப்படி என்றால் தமிழ் சினிமா எவ்வளவு தூரம் நம்மை அழுக்காக்கி இருக்கிறது?

சமீபத்தில் பார்த்த சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் "ஆண்மை" பற்றியது. ஒரு குடும்பத்தில் ஆண் என்பவன் எப்படி இருக்க வேண்டும், இப்போது எப்படி இருக்கிறான் போன்றவைகளை அலசினார்கள்.  அதில் ஒரு பகுதியில் ஆண்வர்க்கம் நிறைந்த சினிமாவில் பெண்களை எப்படி காண்பிக்கிறார்கள் என்று அலசினார்கள். பெண்களை போகப் பொருளாய் காட்டுவது, ஐட்டம் டான்ஸ், பாடல் வரிகளில் தந்தூரி சிக்கன், லெக்பீஸ், நாட்டுக்கட்டை என்றெல்லாம் வருவதை சொல்லி ஷாருக், சல்மான், அக்ஷய் என்று எல்லா ஹீரோக்களின் சில படங்களின் வீடியோ கிளிப்ஸ்களை காட்டினார்கள். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆமீர்கானையும் விட்டுவைக்கவில்லை. "என் படமும் இதில் இருக்கிறது, அப்போது தெரியவில்லை, ஆனால் இப்போது அதை நினைத்து வெக்கப்படுகிறேன்" என்று சொன்னார். சினிமா போன்ற மீடியாவில் எதை காண்பிக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தான் உணர்வதாக சொன்னார்.

எனக்கு வருத்தம் என்னவென்றால் மிகச் சில நடிகைகளை தவிர மற்றவர்கள் இவ்வாறான காட்சிகளுக்கு கேள்வி எழுப்புவதே இல்லை! பழம்பெரும் நடிகை பானுமதியை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஞாபகத்தில் இருப்பது வரை சொல்கிறேன். ஏதோ ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி! எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை இட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை காப்பாற்ற வேண்டும். ஒரு டேக், இரண்டு டேக், மூன்று டேக் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அலுத்துப் போன பானுமதி எம்ஜிஆரிடம், "மிஸ்டர். ராமச்சந்திரன், நீங்க ரெண்டு பேரும் கத்திச்சண்டை போட்டுட்டே இருக்கீங்க. ஆனா என்னை இன்னும் காப்பாத்த மாட்டேங்கிறீங்க. பேசாம அந்த கத்தியை என்கிட்டே கொடுங்க. நானே என்னை காப்பாத்திக்கிறேன்!" என்றாராம். நம் தமிழ் சினிமாவுக்கு சில பானுமதிக்கள் வேண்டும்.
7 Responses
  1. sam Says:

    Vetti kattum Aanukkorunu... oru paattu eludhi picturize pannadhaan... people will realize.


  2. ak Says:

    seeing few changes in you Mr.Ra.... fan....i like the way u criticise ur Thalaivar tooooo....

    Hope there is no link of Sathya DAAAAA post with this....


  3. yes sam.

    ak,


    yaar pannalum thappu thappu thaane..rajiniyin nadippukku naan rasigan..avarudaya kolgaikku alla...


  4. I think we cannot conclude he is male chauvinist, by his on screen roles. can we also conclude he is mother-lover or will kill/avenge anyone who touches his daughter/sister?(remember the simbu controversy)... so, on screen role won't reflect his personal characters (the same rational is applicable for someone concluding he will be a good political leader).

    on the other side, an on screen womenizer is accepted (totally biased)! can we also conclude he is a real life womenizer or a pro-vaishnavite or a narcissist?

    I am not disagreeing on your opinion that Rajini could have taken better roles, but disagreeing with the way his real-life character based on his on-screen roles!


  5. krishna

    nija vaazhkayilum avar appadi iruppathaal thaan antha mathiri padangalaye seithaar, ithu director sonnathu, naan enna seivennu ellam avar saaljaappu solla mudiyathu. avar sonnaa ellame maatha mudiyum!

    just an example, rajinis daughters r safely behind camerea but kamal's daughters r before camera and shruthi is doing all glamoures roles in the same industry where kamal has a god image!

    ithai pathi neriyya pesalam krishna...


  6. Pradeep, his daughters are not on screen, but they r still in media. Letting the daughter to do glamorous role is different. On the other side, rajini's wife is a successful entrepreneur, but kamal's wife(s) were not. Also being an on screen womenizer equally spoils the crowd, but that view is never criticized here!


  7. i think we should get into a conf call to resolve this :-)