நான் முன்பு டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன்! பெங்களூர் வந்து 1 வருடம் ஆகிறது. டெல்லியில் இருந்தபோது வருடத்திற்கு ஒரு முறை மதுரைக்கு வந்து போவதுண்டு! 2 நாள் பயணம்! அதிலும் வெயில் காலத்தில் அந்த tamil nadu express ல் வருவது இருக்கே..அடடா! நினத்தாலே பற்றிக் கொண்டு வருகிறது!! ஆனால் அந்த வெயிலிலும் எனக்கு சில சமயங்கள் கவிதை வந்ததுண்டு!!!!! [அய்யய்யோ! இப்போ எங்களுக்கு பத்திட்டு வருதேன்னு யாருப்பா சொல்றது?]

என் உள்ளே இருக்கும் ப்ரதீப் [அதான்பா மனசாட்சி!], நம்ம blog மக்களுக்கு இதைக் காமிடான்னு ஒரே அடம்! சரி தொலையிரான்னு உங்களுக்கு காட்றேன்! கவிதை சுமாரா இருந்தா நீங்க என்கிட்ட கோச்சுக்காம அந்த பயகிட்ட தான் கோச்சுக்கனும்! பாராட்டனும்னா மட்டும் என்கிட்ட சொல்லுங்க ஹிஹி...

அத்துவானக் காட்டில்
எப்போதாவது வரும் ரயிலைப் பார்த்து
கை அசைக்கிறான் அந்தச் சிறுவன் - தன்
கைகளால் பிடித்திருந்த கால்சட்டை
நழுவுவது தெரியாமல்!


இன்னைக்கு தான் இதை எழுதினேன்! ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது! இதை எழுதிட்டு ஒரு friend கிட்ட காட்டினேன்! அவங்க இந்தக் கவிதையை புரிஞ்சுகிட்ட விதமே வேற மாதிரி இருந்தது!

இதை எழுதும் போது நான் உணர்ந்தது!

1. வாழ்க்கை எத்தனை சின்ன விஷயங்கள் இப்படி ரசிக்கும்படியாய் இருக்கிறது!
2. அந்த சிறுவனுடைய உற்சாகம், குதூகலம் எல்லாம் நமக்கும் அல்லவா தொற்றிக் கொள்கிறது!

என் friend உணர்ந்தது அவர் எனக்கு சொன்னது

இப்படித் தான் இன்னைக்கு பலர் இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்றாங்க!


இந்தக் கவிதைக்கு மேலும் உள்ளடங்கிய அர்த்தம் கண்டுபிடித்து எனக்கு அனுப்புபவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, இந்தக் கவிதையின் இன்னொரு உள்ளடங்கிய அர்த்தமே பரிசாக வழங்கப் படும்!!

என்னடா blog எழுதி இவ்வளவு நாள் ஆச்சே, ஏதாவது எழுதனுமே..என் blog யையே நம்பி இருக்கும் கோடானு கோடி ரசிகர்களை [சரி, சரி!!] ஏமாத்தக்கூடாதேன்னு..சரி 1 வரி கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சே, அதைப் பத்தி யோசிப்போம்னு நேத்து office ல இருந்து bike [மீரா ஜாஸ்மீன்] ல போகும்போது யோசிச்சேன்! [இப்போ எல்லாம் bike
ல போகும் போது ம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!!!!]

So, asusual Airport road ல Leela Palace கிட்ட signal. Signal ல வேற என்ன பாக்க முடியும் சொல்லுங்க? அதான் இந்த bike கதை! நான் இன்னைக்கு blog எழுத உட்காரும்போது என்கிட்ட இருந்த ஒரே கதை இது தான்!! இதை மட்டும் எப்படி போட்றதுன்னு நினைச்சி சரி இன்னும் கொஞ்சம் கதைகளை யோசிப்போம்னு வந்தது தான் பாக்கி எல்லாம்!! [அதுவா வருதுப்பா!!]

1. (a). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவனைப் பார்த்து என்னுள் பேசிக் கொள்கிறேன், இவன் bike due கட்டி முடிச்சிருப்பானோ?!!!!!!!

1. (b). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவன் cell phone ல் சிரித்து சிரித்துப் பேசுகிறான். இவனுக்கு petrol விலை ஏறியது தெரியாதோ? என்று நான் நினைத்துக் கொள்கிறேன்!! [சமிபீத்திய petrol விலை உயர்வை [41.87/ltr] நம் கதையில் புகுத்தினா என்னான்னு புகுத்துனது]!!

2. நான் channel ஐ மாற்றியவுடன் என் நண்பன் எரிச்சலுடன் கத்துகிறான்! இந்த உலகில் எல்லா வளமும் இருந்தும் ஏன் அமைதி இல்லை என்று எனக்கு லேசாய் புரிகிறது!

வீட்டில் சேர்ந்து வாழும் 2 நண்பர்களிடம் ஒரு சாதரண TV க்காக அமைதி குறையும் போது உலகில் அமைதி ஏன் இல்லை என்கிற கேள்விக்கு இடமில்லை!! [ஐய்யோ! கசக்குதே!! அதாம்பா உண்மை கசக்குமாமே?]

3. நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்! waiter எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்!

ஒவ்வொருவரும் உண்மையாய் [??] காதலிப்பதால், யாருக்குக் கஷ்டம் என்பதே கரு!

4. அவள் எல்லாவற்றையும் களைத்து நிற்கிறாள்! எனக்கென்னவோ இன்னும் அவளுடைய கண்களே கவர்ச்சியாய் தெரிகின்றன!

கொஞ்சம் adultary ஆ தான் இருக்கு. but இதுல காமத்தை விட காதலைத் தான் நான் சொல்ல வர்றேன். அவள் பிறந்த மேனியா நின்னாலும் நம்ம ஆளு அவளோட கண்களின் கவர்ச்சியை ரசிக்கிறான்!! [யாருப்பா? யாரெல்லாம் அப்படி இருக்கீங்கோ, கை தூக்குங்க!!]

ஓடி விளையாடு பாப்பா - பாரதி

நான் மதுரையில் மஹால் [திருமலை நாயக்கர் மஹால்] 7 வது தெருவில் வசித்து வந்தேன்..சொந்த வீடு என்பதால் எனக்கும் மஹால் 7 க்கும் ஒரு அழுத்தமான உறவு இருக்கிறது. இன்றும் நான் மதுரை செல்லும்போதும் என்னை முதலில் நலம் விசாரிப்பது மஹால் 7 தான்..

அன்று போல் இன்று குழந்தைகள் வீதியில் விளையாடுவதில்லை, நாம் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்று வழக்கழிந்து போய் விட்டதில் எனக்கு ஒரு மிகப் பெரிய வருத்தம். அப்படியே ஒரு சிலர் விளையாடினாலும் cricket தவிர வேறு ஒன்றுமில்லை..இந்த இடத்தில் நான் என்னுடைய பால்ய பருவத்தினை நினைத்துப் பார்க்கிறேன் [frame மங்கலாகிறது..flashbackpa..]

எத்தனை விளையாட்டுக்கள், ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு season, ஒவ்வொரு season க்கும் ஒரு விளையாட்டு [டேய், ரெண்டும் ஒண்ணு தாண்டா!!]

கண்ணாமூச்சி
ஓடி புடிச்சி
கல்லா மண்ணா
கோலி குண்டு
பம்பரம்
சிகரட் அட்டை, சோடா மூடி
காவியம்,
எரி பந்து
பாட்டி பாட்டி ஒன்னுக்கு!
ராஜா ராணி

கண்ணாமூச்சி:

எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதுல தெருவுல ராத்திரி current போனவுடனே விளையாடுவாங்களே!! அது! ice, ice னு தெருவெல்லாம் காட்டுக் கத்தல் தான். பாவம் அந்த பையன் நொந்து போவான்! நான் யாரும் நம்மளை அவ்வளவு சாதரணமா கண்டுபிடிச்சிரக் கூடாதுன்னு என் மூளையை கசக்கி, பிழிஞ்சி ஒரு இடத்துல ஒழிவேன். என் கூட பசங்க வருவாங்க..out ஆனவன் கண்ணை மூடிட்டு 1,2 எண்ணிட்டு இருப்பான். அவன் ready ஆன்னு கேப்பான். என் கூட வர்ற பசங்க ரெட்ட ரெடிம்பான்..எனக்கு
கோவமா வரும்.. ஏண்டா நீ கத்துனா நம்ம இங்கே தான் இருக்கோம்னு easy கண்டுபிடிச்சிருவான்லனு அவனைத் திட்டுவேன்! பல தடவை தனியா போய் ஒழிஞ்சி எவன் கைலயும் சிக்க மாட்டேன்! என்னடான்னு நானே வெறுத்துப் போய் வெளியே வந்தா, out ஆனவனை விட்டு எவனோ ஒருத்தன்..ப்ரதீப் 1, ப்ரதீப் 1 ன்னு கத்துவான்..நான் ஒன்னும் புரியாம என்னடா அவன் தானே out நீ என்னடா பண்றே ன்னு கேப்பேன்!! அதுக்கு அவன் coooooooool ஆ அது போன ஆட்டை நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேம்பான்! அப்புறம் என்ன பலி கடா மாதிரி போய் கண்ணைப் பொத்திட்டு 1,2 எண்ண வேண்டியது தான்..

கல்லா மண்ணா:

பல தடவை போய் நின்னதுக்கப்புறம் confusion வரும். இது கல்லு இல்லைடா இது cement, நீ out தான் என்பான் ஒருவன். ஒவ்வொரு தடவை ஒவ்வொரு rule..ரொம்ப கஷ்டம்பா!

கோலி குண்டு:

கடையில் போய் கோலி வாங்குவதே ஒரு சுவாரஸ்யமான் விஷயம் தான்! கோலி குண்டை வாங்கி கண்ணுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். ரஜினி தெரிந்தால் வாங்குவோம். [இன்றும் பார்க்கிறேன்..ரஜினியாவது, கமலாவது ஒரு மண்ணும் தெரியவில்லை!] தவறிப் போய் ஒருவனுடைய கோலி இன்னொருத்தனோட கோலியில பட்டுருச்சுன்னா போதும்..ஒரு ப்ரளயமே கிளம்பிடும்! டேய் ஏண்டா என் கோலி மேலே கொத்து வச்ச..ஒழுங்கா நீ ஒரு கொத்து வாங்கிக்கோ!! அவன் ஓட, இவன் தொரத்த..
கோலியில் இருண்டு விளையாட்டு உண்டு. 10,20 & பூந்தா. எனக்கு 10,20 தான் புடிக்கும். கோலி season வந்து விட்டால் போதும், தெருவெங்கும் குழி தான்..ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியை எறிய வேண்டும், straight ஆ குழியில் விழுந்தா 90 ல் இருந்து ஆடலாம், இல்லையென்றால் 10,20லிருந்து ஆட வேண்டும். கடைசியில் ஜெயித்தவனுக்கு தோற்றவன் பூரி போட வேண்டும்..நம்ம போட போட அவன் நம்ம கோலி குண்டை பதம் பார்ப்பான். ரத்தக் கண்ணீர் வரும்..நான் வழக்கம் போல்
பூரி தின்றதை விட போட்டது தான் அதிகம்!! :((

பம்பரம்:

அபீட்டா!!! கடைக்குப் போய் நல்லா திருப்பி திருப்பி பார்த்து, ஒரு பம்பரம் வாங்கி, ஈ ஆணி மாட்டி அந்த சிவப்பு கயிரால் அப்படி சுண்டி விட்டா..ஆஹா!! ஹெலிகாப்டர் தான் [மட்டைக்கு இன்னொரு பெயர்!] அபீட்டாவில் இரண்டு வகை உண்டு. சுத்தி விட்டு அபீட்டா எடுப்பது, மட்டை அபீட்டா எடுப்பது. ஒவ்வொருத்தனும் அபீட்டா எடுத்துட்டு குதிப்பான் பாருங்க..awesome game!

சிகரட் அட்டை, சோடா மூடி:

இந்த season வந்துட்டா போதும், தெருவுல ஒருத்தனும் வீடு கட்ட முடியாது. எல்லா தட்டைக் கல்லும் பசங்க வீட்டில் தான் இருக்கும். [bero வுக்கு அடியில்] ஒவ்வொரு அட்டைக்கும் ஓவ்வொரு மார்க். berkely தான் அதிகம் என்று நினைக்கிறேன். அதே போல் தான் சோடா மூடியும்..torino மூடி என்றால் 2 அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது..

காவியம்:

இது பல பேருக்குத் தெரியுமோ, தெரியாதோ..நான் படித்த school ல் இது ரொம்ப பிரபலம், இதை எங்கள் தெருவுக்கு கொண்டு வந்ததில் எனக்கும் என் தம்பிக்கும் நிறைய பங்கு உண்டு! இதில் out ஆனவன் குனிந்து கொள்ள வேண்டும், மற்ற எல்லோரும் அவனைத் தாண்டுவோம். தாண்டும்போது சும்மா தாண்டக்கூடாது..கிழ் கண்டவற்றை சொல்லிக் கொண்டே தாண்ட வேண்டும்: [இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்!]

1. காவியம்
2. மணிக்காவியம்
3. லாகு
4. லாகத்தின் கொக்கு [இதைச் சொல்லும்போது தலையில் கைகளால் கொம்பு போல் வைத்துக் கொள்ளவேண்டும்]
5. லட்சத்தின் மண்வாரி [தாண்டி விட்டு கால்களால் மண் வாரி இறைக்கணும்! இல்லைன்னா outபா!!]
6. சூடா, ஸ்ட்ராங்கா? [இதைச் சொல்வதற்கு முன் குனிந்து நிற்பவனிடம் இதைக் கேட்க வேண்டும், அவன் சூடு என்றால் தாவிக் கொண்டே அவன் பின்னால் எத்த வேண்டும், ஸ்ட்ராங்கென்றால் அவன் மீது உட்கார்ந்து தாவ வேண்டும்..அப்பா! என்ன rule பா]
மற்றபடி வேறு எந்த இடத்திலும் தாவுபவனுடைய கால்கள் குனிந்து இருப்பவன் மேல் படக்கூடாது. பட்டால் out! இது தான் basic rule! என்ன விளையாடுவோமா? ;)


எரிபந்து, cricket :

இந்த மாதிரி விளையாட்டுக்களில் சோலைக் கருது பெரும் பங்கு வகிக்கும்..யார்கிட்ட பந்து வாங்க பணம் இருக்கு சொல்லுங்க..பசங்க நல்லா சுள்ளு சுள்ளுன்னு அடிப்பாங்க..இப்போ நெனைச்சாலும் வலிக்குதுப்பா!!

ராஜா ராணி:

இது indore game பா! எல்லோரும் round ஆ உட்கார்ந்து சீட்டில் ராஜா 10,000, ராணி 5000, போலிஸ் 100, திருடன் 0, மந்திரி, சேனாதிபதி, சேவகன்..எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தார் போல் சீட்டு! சீட்டைக் குலுக்கிப் போட்டு ஆளுக்கு ஒன்றை எடுத்து தான் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் போலீசோ அவன் திருடனைக் கண்டுபிடிக்கனும். அப்பா, இதுக்கு .net programming எவ்வளவோ easy!! எவனைப் பாத்தாலும் திருட்டுப் பயலாத் தான் தெரிவாங்க!!

இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்..எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே எழுதியிருக்கிறேன்! வீதி முழுதும் ice, ice, காவியம், சோடா மூடிகளின் சிதறல்கள், அபீட்டா போன்ற சத்தங்கள் இனி நமக்குக் கிடைக்குமா? அப்படி ஒரு season வரவே வராதா? நம் குழந்தைகள் 5 வயதிலேயே தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே cartoon network தான் பார்க்குமா? வீடியோ கேம்ஸ் என்ற பெயரில் A K 47ல் பல பேரை சுட்டு வீழ்த்தித் தான் வளருமா?

காலம் மாறுகிறதாம்..இப்படியா மாற வேண்டும்..வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே..அது சுழன்று மறுபடியும் இதே இடத்திற்கு வராமல் போய் விடுமா?

எனக்கு இன்று ஒரு உண்மை புரிகிறது..உண்மை பல சமயம் கசக்கத் தான் செய்கிறது!

நான் school க்கு போவதைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லி இருந்தேன். May 15ம் நாள் அரசாங்கத்திலிருந்து விடப்பட்ட விஞ்ஞான் ரயில் பெங்களூர் cantt station க்கு வந்தது. அது ஒரு வாரம் பெங்களூரில் நின்றதாய் ஞாபகம்! சரி இதை சாக்காய் வைத்துக் கொண்டு நம்முடைய வேலையைச் செய்வோமே, நம்முடைய கொள்கையைப் பரப்புவோமே என்று நாங்கள் ஒரு 10 பேர் கிளம்பிவிட்டோம். பத்திரிக்கைகளுக்கும் சொல்லி இருந்தோம். யாரும் அங்கே வரவில்லை. மறுநாள் எங்களுக்கு DECCAN HERALD ல் இருந்து phone வந்தது. அவர்கள் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றார்கள். ஒரு வழியாய் நேற்றைய இதழில் போட்டிருந்தார்கள்.
நான் யார், நீ யார் என்று பாட்டு மட்டும் தான் பாடலை! என்ன புரியலையா? என்னோட ஞாபக மறதியை சொல்றேங்க!! நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் வளந்துட்டே இருக்கு :( அப்படி என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? சொல்றேன், ஞாபக படுத்திக்க வேண்டாமா [அட ராமச்சந்திரா!!]

நேத்து காலையில ஆபிஸ் கிளம்புறேன்! நேத்து என்னோட collegue க்கு last day in the office. So, எங்க team ல இருந்து ஒரு shirt வாங்கி கொடுத்தோம். நான் தான் வாங்கினேன்! சரி அதை மறக்காம கொண்டு போயிரனும்னு மனசுல நெனைச்சுகிட்டேன்! [அப்போ ஞாபக மறதி என்னைப் பார்த்து சிரிச்சுட்டு இருந்துருக்கும்]..என்னோட மீரா ஜாஸ்மீனை [என்னோட bike க்கு நான் வச்ச பேரு..ஹிஹி]start செய்தேன்! கொஞ்ச தூரம் போனவுடன் தெய்வாதீனமாய் ஞாபகம் வந்து விட்டது..அய்யய்யோ bag!!

So, ஞாபக மறதியை பார்த்து நான் அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே என் bag ஐ எடுத்துக் கொண்டேன். [அது அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தது!] வண்டி எடுத்து பாதி தூரம் வந்து விட்டேன். அய்யய்யோ!! BATCH ஐ காணோமே?!! BACK TO PAVILION!! தலையைக் குனிந்து கொண்டே போனேன்..ஞாபக மறதியுடன் சேர்ந்து நண்பர்களும் சிரித்தனர். [எல்லாம் தலை எழுத்து!] அப்பாடா இப்போ எல்லாம் இருக்கு..atlast ஆபிஸ் வந்து சேர்ந்தேன்!!

மாலை 6 அடி அடித்து ஒரு அறை விட்டிருந்தது! [மணி 6:30 ன்னு சொல்ல மாட்டீங்களோ?] programming கடையை மூட்டை கட்டி வீட்டுக்கு புறப்பட்டேன்! [அதே ஞாபக மறதி! அதே சிரிப்பு..என் காதில் விழனுமே?] 7 மணிக்குள் வீட்டுக்குள் இருந்தேன். வழக்கம் போல TV தான். என் நண்பன் வந்தான். "உனக்கு KPN நம்பர் தெரியுமா? நாளைக்கு மதுரைக்கு டிக்கட் கிடைக்குமான்னு கேக்கணும்." அதுக்கு sir, அட நான் தாங்க..உனக்கு indra nagar kpn number வேணுமா, madiwala kpn number வேணுமா என்றேன்? [ஞாபக மறதி தண்ணி குடிச்சுட்டு இருந்தது போல..சிரிச்சு புரையே ஏறிடுச்சு!!] இரு என் cell phone ல இருக்கு என்று எடுக்க போனேன்!

சட்டையில தேட்றேன்? இல்லை!..பேண்ட்ல தேட்றேன்? இல்லை! வீடு பூரா தேட்றேன்? இல்லை! இல்லை!! இல்லை!!! cell ஐ மறந்து office ல வச்சுட்டேன்னு நெனக்கிறேன் என்றேன்.. ஏன் டா? cell number மறந்துட்டேன்னு சொன்னா OK, செல்லயே ஒருத்தன் மறப்பானா? [அதான் மறந்துட்டேனே?] ஆபிஸ் ல தான் வச்சியா என்று ஒருத்தன் குண்டைத் தூக்கிப் போட்றான்..வேற எங்கே போனே? கடைசியில யார் கூட பேசின? கடைசியா எப்போ பாத்த? [இவ்வளவு ஞாபகம் இருந்தா ஏன்பா விட்டுட்டு
வர்றேன்!?]

சரி phone பண்ணி பார்த்தேன்..ring போயிட்டே இருக்கு! யாரும் எடுக்கலை! எனக்கோ வயித்தைக் கலக்குது. என் நண்பன் customer care க்கு போன் பண்ணி எந்த route ல இருக்குன்னு கேட்டுட்டு இருக்கான்! அந்த பொண்ணோ நீங்க first police ல complaint கொடுத்துட்டு FIR எடுத்துட்டு வாங்க நம்ம block பண்ணிடலாம்ன்றா! [ஞாபக மறதிக்கு வயித்து வலியே வந்துருக்கும் சிரிச்சி சிரிச்சி!] ஆபிஸ்ல தான் இருக்கனும்னு நெனச்சு என்னோட collegue க்கு phone போட்டேன்! [2 nd paraல வந்தாரே..அவர் தான்!] அவன் என் desk ல தான் இருந்தான்..இங்கே ஒன்னும் இல்லையேடா உன் desk லன்னான்! சரி நான் பாத்துக்கிறேன், bye என்றேன்..அதுக்கு sir, cool மச்சி என்றான்! [என்னடா cool? உன் cell ஐ நீ தொலச்சிருந்தா தெரியும்..அடிங்...] சரி அங்கே எங்கேயாவது கிடந்தா ring அடிச்சி அப்புறம் இவனுக்கு phone பண்ணி கேக்கலாம்னு என்னோட number க்கு ring அடிச்சேன்..அப்புறம் இவனுக்கு phone பண்றேன்..இல்லைடா மச்சி இங்கே ஒன்னும் கேக்கலை..ok டா..cool மச்சி [டேய் என்னை கொலைகாரன் ஆக்காதேடா!] அதுக்குள்ள என் brother entry! பசங்களக்கு ஒரே ஜாலி தான்..உன் தம்பி வந்துட்டாண்டி..போச்சுடி!! [அப்பா ராசா, எப்பிட்றா..எப்பிட்றா?] எல்லாம் சொன்னேன். office போய் பாக்க வேண்டியது தானேடா? போடா என்று விரட்டினான்!

சரி நம்ம மீரா ஜாஸ்மீன் மேல என் பாரத்தை போட்டு office கிளம்பினேன்...ஊர்ல எல்லாருமே airport road ல தான் இருக்குற மாதிரி அப்படி ஒரு traffic. என்னடா ring பண்ணியும் எடுக்கலை, ring அடிச்சிருந்தாலும் அவனுக்கு கேட்ருந்துருக்குமே? அப்படின்னா அங்கே இல்லையா? யார் எடுத்துருப்பா? நாளைக்கு whole office ஒரு mail அடிக்கனும்..என்னோட cell [2100] tube light தன்னோட தாடைக்கு கீழே வச்சுக்கிட்டு நான் ring அடிச்சாலும் எடுக்காம் பழைய காலத்து நம்பியார் மாதிரி சிரிப்பதாக கற்பனை செய்து கொண்டேன். சரி இனி அது கிடைக்கப் போறதுல்ல..6000/= போச்சே, சரி விடு ஒரு வருஷம் use பண்ணிட்டேல்லே..இப்போ அது வெறும் 4000/= கிடைக்குதுன்னு பேசிக்கிறாங்க..அதுக்கு போய்! அய்யோ அம்மா அப்பா திட்டுவாங்களே..சரி விடு இனிமே நீ சுதந்திரமா திரியலாம்..பேசாம landline வாங்கிட வேண்டியது தான்..ப்ரச்சனையே இல்லை! [green signal!]

office:

என் desk ல சுத்தி முத்தி பார்க்கிறேன்..போச்சு, போச்சு எனக்கு கிடைக்காது..அது இல்லை..தேடாதே! [தருமி range க்கு எனக்குள்ள புலம்பிட்டே..] என்னோட ட்ராவைத்தொறந்தேன்! 8 missed calls உடன் என் cell phone என்னைப் பார்த்து சிரித்தது! என் வயிற்றில் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், தேன் எல்லாம் கலந்து வார்த்தது போல் இருந்தது!!! என் collegue தன் cell phone ல் பேசிக் கொண்டிருந்தான்..இங்கே தான் டா இருக்கு ன்னேன்..எனக்கு கேக்கலையேன்னான்! desk ல் ஒரு JUMBO HEADPHONE கிடந்தது! நான் ok டா cool மச்சி என்றேன்!! [ஹிஹி..அதான் cell கிடைச்சிருச்சுல்ல]

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது அய்யய்யோ இன்னைக்கு bag கொண்டு வரனும்னு நெனெச்சேனே, மறந்துட்டேனே என்று திரும்பினால்...

ஞாபக மறதி கால் மேல் கால் போட்டுக் கொண்டு தன்னுடைய trade mark சிரிப்பை உதிர்க்கிறது!!

போன வாரம் ஒரு விஷேசத்திற்காக மதுரை சென்றிருந்தேன். அந்த விஷேசத்திற்கு போவதை விட ஆய்த எழுத்து படத்திற்கு போகலாம் என்ற எண்ணமே என் மனதில் நிறைந்திருந்தது! வழக்கமாய் மனிரத்னம் படம் அம்பிகையில் தான் போடுவார்கள்! இந்த முறை அபிராமி!! அம்பிகையில் படம் பார்த்த சுவாரஸ்யம் இங்கு கிடைக்கவில்லை! இனி படத்தின் விமர்சனம்!!

மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட மூன்று பேர் எப்படி சமுதாயத்தை சார்ந்து இருக்கிறார்கள் என்பதை சொல்வதால் படத்தின் பெயர் ஆய்த எழுத்து!

கதை :

இன்ப சேகரன் ஒரு ரவுடி. மைக்கேல் வசந்த் சமுதாய நோக்கம் உள்ள ஒரு இளைஞர். அர்ஜுன் வெளிநாட்டு மோகம் கொண்ட தற்கால வாலிபன்! இவர்கள் மூவரும் ஒரு பாலத்தில் சந்திக்கிறார்கள்! எப்படி? bike ல் சென்று கொண்டிருக்கும் மைக்கேலை இன்பா துப்பாக்கியால் சுடுகிறார், அர்ஜுன் அவரை காப்பாற்றுகிறார்! The beauty is மூவரின் கோணத்திலிருந்து கதை சொல்லப் பட்டிருப்பது! அருமை!! Flash Back என்றவுடன் frame ல் character ன் focus மங்குவதும், tortoise சுருள் சுழல்வதும் போயே போச்சு! [ஒன்று கவனித்திருக்கிறீர்களா? எப்பொழுதும் ஒரு character தன்னுடைய Flash Back ஐ சொல்லும்போது கேட்பவரை பார்க்காமல் மெல்ல நடந்து வந்து ஜன்னலயோ இல்லை நம்மையோ பார்த்து தான் பேச ஆரம்பிப்பார்!!] Flash Back சொல்வதில் நம்மவர்கள் கரை கண்டு விட்டார்கள்! அலைபாயுதே, விருமாண்டியைத் தொடர்ந்து
இப்பொழுது ஆய்த எழுத்து! HATS OF MANI!

1. மாதவன் : [இன்ப சேகரன்]

மனிரத்னம் சொல்வது போல் இவரை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டி இருக்கிறார்! மைக்கேலை சுடும் போது அந்த tension கொஞ்சம் கூட இல்லாமல் அவருடைய மனைவியின் தொல்லை பற்றி புலம்புவது அருமை! சசியிடம் [மீரா ஜாஸ்மீன்] காதல் கொள்ளும்போதும், அடுத்த நிமிடமே அவரை வீட்டை விட்டு விரட்டும் போதும் மாதவன் இன்ப சேகரனாகவே வாழ்ந்திருக்கிறார்! மற்றபடி இந்த பாத்திரம் அவ்வளவாக பாதிப்பதாகத் தெரியவில்லை!

2. சூர்யா : [மைக்கேல் வசந்த்]

சூர்யா ஒரு ideal character ஆக வருகிறார். இந்த சமுதாயத்தில் கண்டிப்பாய் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிற அதற்காக போராடுகிற ஒரு brilliant character.

மாதவன் இவரை மிரட்டும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது! இஷா தியோலிடம், உனக்கு என்னை பிடிச்சிருந்தா straight ஆ பெட்டி தூக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்துரு, கல்யாணம் எல்லாம் சும்மா, society க்காக பண்ணிக்கிறது. நம்ம தான் society க்காக எதுவுமே பண்றதில்லையே, அப்புறம் இதை மட்டும் ஏன் பண்ணனும் என்ற வசனம் நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! [அவர் கேக்குறது நியாயம் தானே?]. நான் சூர்யாவில் என்னைப் பார்த்தேன்..நோ நோ, personality wise ஆ இல்லை, thought wise ஆ. அவர் கேக்குற கேள்விகளைத் தான் நான் எனக்குள்ள கேட்டுட்டு இருக்கேன்! அவர் படத்துல வர்ற hero, 3 தடவை சுட்டாலும் சாக மாட்றாரு..நான் அப்படி இல்லயே, பொம்மை
துப்பாக்கி காட்டினாலே மயங்கி விழுந்துருவேன்!

நிற்க

நான் election ல நிக்க போறேன், என்கூட யாரு நிக்கிறது என்று கேட்கும் போது, எல்லோரும் பின் வாங்குகிறார்கள். அதற்கு சூர்யா,
நான் ஏதாவது தப்பு பண்றேனா?

நம்ம எல்லாரும் america scolarship வாங்கிட்டு போயிடுவோம், அவனுக்கு software எழுதுவோம், soap வித்துக் கொடுப்போம், ஆனா நம்ம நாட்டுக்கு ஒன்னும் செய்ய மாட்டோம்!!!??
மத்தவங்களுக்கு எப்படியோ, என் தலையில் ஓங்கி சம்மட்டியால அடிச்ச மாதிரி இருந்தது!

3. சித்தார்த் : [அர்ஜுன்]

உடலால் இந்தியாவிலும், உள்ளத்தால் அமெரிக்காவிலும் வாழ்பவர். ஏண்டா, நேத்து night தண்ணி போட்டியா? என்று அப்பா கேட்க, பாக்கு போட்டேனே?!என்பது மனிரத்னம் நச்! சூர்யாவுடன் அரசியலில் ஈடுபடும் போது, ஏண்டா இந்த கருமம் எல்லாம் உனக்கு?என்று அப்பா கேட்க, நாளைக்கு நான் மந்திரி ஆயிட்டா நீங்க என்னை இப்படி எல்லாம் திட்ட முடியாதுப்பா! என்பதும்..[அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே?!] இப்படி அங்கங்கே சில நச்கள்! மற்றபடி பையன் அசத்தியிருக்கானே என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை..character ன் scope அப்படி!


மீரா : [சசி]

அழகாய் இருக்கிறார். மற்றபடி இவருக்கும் அதிக வேலை இல்லை!

இஷா : [கீதா]

சூர்யாவின் தங்கைகள் இழுத்து போர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். இஷா மட்டும் வீட்டில் தொப்புள் தெரிய வலம் வருகிறார்! மனி சார், நீங்களுமா? [எல்லாம் இந்த commercial கருமாந்திரம் பண்ற வேலை!]

த்ரிஷா : [மீரா]

இந்த கால Hi-Fy பெண்ணாய் வருகிறார். சித்தார்த் காதலி சொல்லும்போது, நான் சிவகாசி போறேன், எனக்கு கல்யாணம் ஆகப் போகுது என்று சொல்கிறார், ஆனால் சித்தார்த்துடன் நல்லா சுத்துறார், முத்தம் கொடுக்கிறார், மேலே விழுந்து புரள்கிறார்! மனி சார், நீங்க என்ன சொல்ல வர்றீங்க? city ல இருக்கிற பொண்ணுங்க இப்படித்
தான் இருக்காங்கன்னு சொல்றீங்களா? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை சார் :( ஏன் சார் வயத்துல tamerind ஐ கலக்குறீங்க!

பாரதிராஜா : [செல்வ விநாயகம் ]

என் இனிய தமிழ் மக்களே..[அடச்சே! இவர் பெயர் சொன்னாலே அடுத்து இது தான் வருது!] மனி சார், இந்த character க்கு இவர் தான் பொருத்தமானவர்னு நீங்க ஏன், எப்படி நினைச்சீங்க? நாசர், ரகுவரன், ப்ரகாஷ் ராஜ் எல்லாம் assault ஆ பண்ணி இருப்பாங்களே? அப்படி என்ன நடிக்க மாட்டேன் என்று சொன்னவரை அடம்பிடித்து கொண்டு வைத்து நடிக்க வைப்பது? எனக்குப் புரியலை. எனக்கு அவர் ஒன்னும் செல்வ விநாயகமா தெரியலை, பாரதிராஜாவா தான் தெரிஞ்சார்!

ரவி K சந்திரன் : [ஒளிப்பதிவு]

மூன்று பேருக்கு மூன்று கலர் கொடுத்திருக்கிறார்.

மாதவன் - சிவப்பு
சூர்யா - பச்சை
சித்தார்த் - நீலம்

நான் tv ல் பார்க்கும் போது தெரிந்த வண்ண வித்தியாசங்கள் எனக்கு படத்தில் அவ்வளவாய் தெரியவில்லை..ஒரு வேளை நான் கவனிக்கத் தவறி விட்டேனோ என்னவோ? anyway ரொம்ப அருமையாய் செய்திருக்கிறார்!

A R ரஹ்மான் : [இசை]

அப்பாடா, இந்த படத்துல கொஞ்சம் background music தனியா போட்ருக்காருப்பா! இல்லைன்ன மனுஷன் பாட்டையே music ஆ போட்டு கொள்வாரு! ஆனா ரஹ்மான் சார், இன்னைக்கு கூட என்னால மெளன ராகம், நாயகன், தளபதி போன்ற படங்களின் background music மறக்க முடியலை..ஆனா ரோஜா க்கப்புறம் உங்க background music மனசுல ஒட்ட மாட்டேங்குதே..ஏன் சார்?


மொத்தத்தில் ஆய்த எழுத்தில் உயிர் இல்லை!!

நான் இவ்வளவு நாள் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காததற்கு உங்க கைய காலா நெனச்சு [ஏன் நீ கைய காலா நெனைக்கிறே? அப்போ காலை என்னவாநெனைப்பே?....அடடா இதுக்குத் தான்யா நான் மன்னிப்பு கேக்குறதில்லை!! ஆளை விடுங்க!]

இப்பொழுதெல்லாம் என்னால் ரோட்டில் following எல்லாம் செய்ய முடியவில்லை!

1. ஜாலியாய் பாட்டு பாடிக் கொண்டே போக முடியவில்லை!
2. ரோட்டில் என்னைக் கடந்து போகும் பெண்களை sight அடிக்க முடியவில்லை!
3. ரோட்டில் இருக்கும் hordings ல் சிம்ரன் icecreammmmmmmmmmmmmmmm ஐ ரசிக்க முடியவில்லை!
4. ரோட்டில் traffic அதிகமானால் platformல் தூக்கி வைத்துக் கொண்டு போக முடியவில்லை!
5. என் எண்ணம் எல்லாம் ஒன்றை சுற்றியே வலம் வந்து கொண்டிருப்பதால் எதையுமே யோசிக்க முடியவில்லை!

என்ன தலையை பிச்சுக்கலாம் போல இருக்கா? cycle ல் office வந்து கொண்டிருந்த நான் இன்று SPLENDOR + ல் வரத் தொடங்கி விட்டேன்!! எனக்கு bike ஓட்டி பழக்கம் இல்லை..நாமே வாங்கி பிறகு கற்றுக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். ஏதோ என் உழைப்பின் புண்ணியத்தில் இன்று ஒரு splendor + வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்டேன்! [எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!] so, நான் currentஆ எந்த gear ல இருக்கேன்னு தெரிய மாட்டேங்குது! ஓட்ட ஓட்ட பழகிடும்..அப்புறம் பழைய படி மேலே சொன்ன எல்லாத்தையும் செய்வேன்ற நம்பிக்கையுடன்..

நான் இப்போ DELL ல் வேலை செய்கிறேன். ஒரு software engineer cycle ல் வருகிறான் என்றால் அது நான் ஒருவனாகத்தான் இருக்கும்! எல்லோரும் என்னை பாராட்டத்தான் செய்கிறார்கள், ஆனால் யாரும் என் வழி நடப்பதில்லை..நம்ம யாரு நம்ம போய் cycle ல வருவதாவது, என் status என்னாகுறது என்று நினைக்கிறார்களோஎன்னவோ! என் வீட்டில் இருந்து office ற்கு 20 நிமிட பயணம் தான். என்னைப் பொறுத்த வரை software engineers இந்த மாதிரி walking, cycling என்று ஏதாவது கட்டாயம் செய்ய வேண்டும்..நம்மிடம் உடல் உழைப்பு என்பதே இல்லையே, அதனால் தான் 40 வயதில் heart attack வருகிறது..software engineers க்கே உரிய முதுகு வலி ஒரு பக்கம்!

DELL ல் இன்னும் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதால் அங்கு எப்பொழுதும் கூலி ஆட்கள் இருப்பார்கள்! அவர்களும் cycle ல் தான் வருவார்கள், அவர்களின் பக்கத்தில் cycle வைத்து, அவர்களில் ஒருவனாக அவர்கள் என்னைப் பார்த்து மகிழ்வதை எல்லாம் விலையாக கொடுத்துத் தான் இந்த SPLENDOR +..46,000 ரூபாயை விட இது தான் எனக்கு விலை அதிகமாக படுகிறது!

நேற்றிலிருந்து பெங்களூரிலும் என் blogன் ஆதிக்கம் தான்! என்ன முழிக்கிறீங்க..அதாங்க மழை!

மழை தான் எத்தனை அழகு...

1. சின்னக் குடையுடன் தன் அம்மாவுடன் நடந்து போகும் குழந்தை
2. சாலை சுத்தமாகி வழுக்கிக் கொண்டு போகும் வாகனங்கள்
3. தன் கழுத்தை வேகமாக சிலிர்த்துக் கொள்ளும் குட்டி நாய்
4. நனைந்தபடி சாலை ஓரத்தில் சூடாய் தேநீர் அருந்தும் மனிதர்கள்

[பரிட்சையில point point ஆ எழுதி பழகிடுச்சி..ஹிஹி!]

நான் office முடிஞ்சு cycle ல வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். அதான் மழை வந்துருச்சே so default ஆ கவிதையும் வருது.

மழை வந்து
போனதை இலைகள்
உணர்த்திக்கொண்டிருந்தன!


என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? இன்னைக்கு காலையிலே scv channel ல கண்ணுக்கு மை அழகு ஓடிட்டு இருந்தது! அதுல ஒரு வரி:

மழை நின்று போனாலும்
இலை சிந்தும் துளி அழகு!


அட இது நம்ம கவிதை மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். வைரமுத்து அளவுக்கு நான் யோசிக்கிறேனா? இல்லை எனக்கே தெரியாம வைரமுத்துகிட்டேஇருந்து copy அடிச்சிட்டேனான்னு தெரியலை..

இப்போதைக்கு WISE MEN THINK ALIKE அப்படின்னு வைச்சுக்குவோமா? ஹிஹி..

நேற்று என் blog நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். இரவு நேரமாகிவிட்டது. சரி நான் கிளம்புறேன் என்று நண்பரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
அவர் மழை பெய்யுதே குடை கொண்டு போங்க என்றார். அதற்கு நான் சொன்ன பதில்:

பெய்யெனப் பெய்யும் மழை!

நேற்று office விட்டு போகும் பொழுது cycyle ல் யோசித்துக் கொண்டே சென்றேன். ஒரு வரி கதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

சுஜாதா ஒரு example கதை சொல்வார்:


உலகில் கடைசி மனிதன் மட்டும் உயிரோடிருந்தான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது!!


ஒரு வரியில் எத்தனை அழகான ஒரு திகில் கதை. இப்படி நம்மளும் எழுதிப்பாக்கலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இங்கே: [உங்க தலையெழுத்தை யாரால மாத்த முடியும்? ஹிஹி..]


அதே முதியோர் இல்லம். அன்று என் அப்பா! இன்று நான் அப்பா!!


வாயில் நுரை பொங்கி வழிகிறது. அவள் அப்படிச் செய்திருக்க கூடாது என்று எண்ணிக் கொண்டே சாகிறேன்!


உள்ளே சென்றவன் வெறுப்புடன் வருகிறான். நான் எத்தனாவதாக நிற்கிறேன் என்று ஏழாவது முறையாக எண்ணிக் கொண்டேன்.


இந்த மூன்று கதைகளில் மூன்று களங்களைக் கையாண்டிருக்கிறேன் [அப்படி நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியுதா?]

1. சோகம்
2. தோல்வி
3. நம்பிக்கை

இதில் எவ்வளவு குறை இருக்கிறதோ, அவ்வளவுக்கு உங்கள் பாராட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்! இதில் நீங்கள் புதுசாய் ஏதாவது உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள்![ஹிஹி..]

நேற்று AID group ல் ஒரு கூட்டம் இருந்தது. திரு. பாமரன் அவர்கள் வந்திருந்தார். நீங்கள் எல்லோரும் பாமரனைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனை, சமுதாய முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு போன்ற நல்ல எண்ணங்களைக் கொண்ட குறைந்த பேர்களில் அவரும் ஒருவர்.
அவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.

நான் அவருடைய படைப்புகளை நிறைய படித்ததில்லை. அவருடைய சினிமா விமர்சனங்களை சிலவற்றை படித்திருக்கிறேன். பாலச்சந்தரையும்,
மணிரத்னத்தையும் திட்டும் ஒரே மனிதர்! இதனாலேயே அவர் பிரபலம் ஆகிவிட்டதாக அவரே கூறுகிறார். 'நான் யாரையாவது பாராட்டி எழுதுனா
பத்திரிக்கையில போட மாட்டாங்க' என்கிறார்.

அவருக்கு எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி! Being a Software Engineers, சமூக நலனைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் வேலை செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். Software Engineers எத்தனை பேர் இன்னைக்கு society பத்தி யோசிக்கிறாங்க என்று சாடினார். [வழக்கம் போல!]

என்னைப் பொறுத்த வரை நான் சமூக சேவை செய்வதாயும், என்னை எல்லோரும் புகழ வேண்டும் என்றோ நான் நினைத்ததே இல்லை. நான் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய சமூக கடமையைத் தான் செய்கிறேன்! சமூக சேவைக்கும் சமூக கடமைக்கும் வானத்திற்கும், பூமிக்குமான வித்தியாசம் இருக்கிறது! என்னைப் பொறுத்தவரை சமூக கடமை செய்யாத எல்லோரும் குற்றவாளிகளே ஆவர்!

ஜாதியை அறவே ஒழிப்பது
மதச் சண்டை
எல்லோருக்கும் கல்வி [இன்று உள்ள கல்வி முறையை மாற்றி அமைப்பது!]
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது
நல்ல வேலை வாய்ப்பு
ஏழ்மையை ஒழிப்பது
சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக் கொள்வது

இப்படி பல வேலைகள் நமக்கு இருக்கிறது! ஆனால் நமக்கு weekend வந்தவுடன் vcd ல் 4 படம் பாக்கணும், bar, pub போய் நல்லா தண்ணி அடிக்கணும்.

கொஞ்சம் யோசிங்கப்பா! [பாமரனின் பேச்சு கேட்டவுடனே நானும் அவரை மாதிரி ஆயிட்டேனோ?]

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்!

பல சிந்திக்கும்படியான விஷயங்களை அவர் பேசினார். மணிரத்னம், பாலச்சந்தர், மதன், ஷங்கர், சுஜாதா, வாலி, வைரமுத்து, சேரன் எல்லோரையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார்.

1. பம்பாய் படத்தில் முஸ்லீம்களைக் கொல்வதெல்லாம் close-up shot ஆக இருப்பதாகக் கூறினார். படம் பார்க்கும் மக்கள் அந்த கலவரக் காட்சியின் போது 'ஓம் காளி' என்று ஆக்ரோஷமாய் கத்துவதாயும் இதெல்லாம் மக்களை தூண்டி விடுவதாகவும் சொன்னார். இதை தொடர்ந்து கோவையில் கலவரம், குண்டு வெடிப்பு
பற்றிச் சொன்னார். "இப்படி சண்டை போடாதீங்க என்று சொல்ல அப்போ அர்விந்த சாமியோ, மணிரத்னமோ வர்லியே" என்றார்.

2. 'கன்னத்தில் முத்தமிட்டால்' விடுதலைப் புலிகள் பற்றிய படம் தான்..அது எப்படி வெளியே வந்தது. ஏன் 'குற்றப்பத்திரிக்கை' வெளியே வரவில்லை.
மணிரத்னத்துக்கு ஒரு நியாயம், செல்வமணிக்கு ஒரு நியாயமா என்று கேட்டார்!அது சிறந்த படம் என்று விருது கொடுக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள்
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டார்.

3. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, முதலமைச்சர் என்றால் கடத்துவது [தேசிய கீதம்], பிரதமர் என்றால் காப்பாற்றுவது [மாநகர காவல்..பல படங்கள்!]என்ற ஒரு formula வைத்துள்ளார்கள் என்றார்.

4. Basically விஷயம் தெரிந்து கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றார்!

5. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, அறிவோடும் இருக்கணும் இல்லைன்னா ரஜினி மாதிரி ஆயிடும்ன்றார் :)

6. வேலை மட்டும் செய்தால் போதாது, நாம் நிறைய படிக்க வேண்டும் என்றார். நமக்கு உலக வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

7. அவருடைய 3 புத்தகங்களை [புத்தர் சிரித்தார், தெருவோர குறிப்புகள், சாட்டிலைட் சனியன்களுக்கு] எங்களுக்கு தண்டனை என்று சொல்லி கொடுத்தார்.

8. முடிந்தால் ஒரு net magazine ஆரம்பிக்கச் சொன்னார்!

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான கூட்டமாய் அமைந்தது.

வானம் தரையிலும் பூமி வானத்திலும்
ஒன்றும் நிலை மாறவில்லை

சூரியன் குளிர்வதாயோ சந்திரன் சுடுவதாயோ
எனக்குத் தோன்றவில்லை

வெல்லம் கசக்கவோ வேம்பு இனிக்கவோ
அப்படி ஏதும் சங்கதியில்லை

நான் நிற்பதாயும் தரை நடப்பதாயும்
அப்படி ஏதும் தடயமில்லை

இரவென்னைக் கொல்லவில்லை - பாவம்
அந்த நிலவென்னைக் கொல்லவில்லை

எனக்கும் சந்தேகம் தான் - ஆனால்
நீ நம்பித்தான் ஆகனும்

சத்தியமாய் நான் உன்னைக் காதலிக்கிறேன்!

Labels: | | edit post
ஊர் மக்களுக்கு ஓர் நற்செய்தி [It depends!].. டம டம...

அதாகப்பட்டது இருமல் நோய் முற்றி ஊருக்கு ஓடிப்போன உங்கள் ப்ரதீப் ஒரு பயனும் இல்லாமல் போன படியே திரும்பி வந்துவிட்டேன்!!

கொள்ளு..கொள்ளு..[இருமுறேங்க..நீங்க வேற]

அந்த 5 நாட்கள் :

மதுரை, கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்து வழிகிறது! நாம் இங்கே தான் 21 ஆண்டுகளாய் இருந்தோமா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. நான் சிறுவனாய் இருந்த போது, "வெயில் காலம் வேற வருது" என்று புலம்பும் பெருசுகளை கண்டால் எனக்கு வியப்பாய் இருக்கும்..அப்படி என்ன இங்கே வெயில் அடிக்கிறது, இது இப்படி அலுத்துக்குது என்று நினைப்பேன்..மற்றும் எனக்கு துளி அளவு கூட வேர்க்காது [இது வரமா சாபமா தெரியவில்லை!] நான் முதலில் வெயிலை உணர்ந்தது டெல்லியில் தான்..இரவு 9 மணிக்கு office விட்டுக் கிளம்பி bus stop வந்தால், ஒரு அற்புதமான உஷ்ணக் காற்று உங்களை காதலுடன் தழுவும்!! உடல் முழுதும் பிசு பிசுன்னு..கொடுமையா இருக்கும்..வீட்டுக்கு போனவுடனே குளிக்கனும்..எல்லோர் வீட்டிலும் Air Cooler இருக்கும். [எங்கள் வீட்டில் அப்போது இல்லை!] நான் ஏன் இதெல்லாம் சொல்றேன்னா மதுரையிலும் இனி Air Cooler இல்லாமல் கஷ்டம் என்று தோன்றுகிறது..என்னடா இப்படி வெயில் அடிக்குதுன்னு பசங்ககிட்ட பேசவும் பயம்மா இருக்கு.."தோடா bangalore போனவுடனே இவனுக்கு மதுரை வெயில் தாங்கமுடியலை..அடங்குடா" என்று சொல்வார்களோ என்று தோன்றுகிறது. அவர்கள் சொல்வதும் நியாயம் தானே..ஓவரா film காட்டக்கூடாதுல்ல..

இதில்

கொத்தனார் வேலை பார்ப்பவர்கள்
ரோடு போடுபவர்கள்
சாலைகளில் ஏதோ ஒரு department க்காக குழி வெட்டுபவர்கள்
bus drivers & conductors
tea கடையில் வேலை பார்ப்பவர்கள்

இப்படிப் பலரை நான் நினைத்துப் பார்க்கிறேன்..ஏனோ முதன் முறையாய் எனக்கும் வேர்க்கிறது. நடமாடும் தெய்வங்கள்!!

கதிரவனே உனக்கொரு வேண்டுகோள்!
உழைப்பால் தம் உயிர் வளர்ப்பவர்களை விட்டு விட்டு
ஊழல் செய்தே உயிர் வளர்ப்பவர்களை மட்டும்
உன் செங்கதிர்களால் சாடு!!


[நானும் செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி சொல்லிட்டுத் தான் இருக்கேன், நீ எங்கே கேக்குற?]

சரி கொஞ்சம் நிழல்ல உட்கார்ந்து பேசுவோமா? வாங்க..

இருமலுக்காக நான் எடுத்துக்கொண்ட கை வைத்தியங்கள்:

1. ஆட்டுக்கால் சூப்
2. சாதம் வெந்த தண்ணியில் குந்தப்பானை போட்டு ஒரு glass
3. கொலக்கட்டையும் அதைச் சார்ந்த பானமும்
4. வால் மிளகும், பொரிகடலையும் சேர்ந்து மெல்லச் சொன்னார்கள். [குமட்டிக் கொண்டு வந்தது!]
5. பங்கரபான் பைரி [தமிழ்ல என்னன்னு தெரியலை! its a kind of வடை with தோசைப்பொடி]
6. பலாப்பழம்
7. காலையில் எழுந்தவுடன் ரெண்டு காதையும் இழுத்து விட்டுக்கச் சொன்னாங்க [அதை நான் செய்யவே இல்லை..யாருக்குப்பா ஞாபகம் இருக்கு!]
8. மஞ்சள், மிளகு போட்டு பால்!

என்னப்பா இப்போ இரும மாட்ரேன்னு வீட்லே யாராவது கேட்டா, கேட்டவுடனே ஞாபகம் வந்து இருமுவேன்..ஹிஹி..

இதுக்கெல்லாம் மசியாம கடைசியா doctor கிட்ட போனேன்..அவர் ஒரு ஊசி போட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்..மறுநாள் பூரா நான் இருமவே

இல்லை..ஆனா இப்போ மறுபடியும் வந்துருச்சு!! : (

மதுரை:

1. வழக்கமான "எப்போப்பா வந்தே..உங்க அப்பா சொல்லிட்டே இருந்தாரு" நல்லா இருக்கியா? நல்லா பெருத்துட்டே..இன்னும் என்ன, உங்க அப்பாட்ட சொல்லி பொண்ணு பார்த்துர வேண்டியது தானே"!!
2. எல்லா சொந்தக்காரர்களின் வீட்டிலும் இதே கேள்வி, இதே பேச்சு!
3. 5 நாளும் நான் TV பார்த்தே அழிந்தேன்.
4. நிறைய oneway ஆக்கி இருக்கிறார்கள்..எப்படி போவது எப்படி வருவது என்றே தெரியவில்லை.
5. ஒரு வழியாக திருமலை நாயக்கர் மஹாலை புதிப்பிக்கிறார்கள் [8 கோடி செலவில்]..தொல்பொருள் ஆய்வாளர்கள் கையில் சென்று விட்டதாம்.
6. நிறைய புதுப் புதுக் கட்டங்கள் எழும்பி விட்டன..எல்லாம் புது விதமாய் மாறுவதில் மகிழ்ந்தாலும், இனி அதை பழைய படி பார்க்க முடியாது என்று நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது..[இதை ஒரு நல்ல சிறுகதைக்கு கருவாக வைக்கலாம் என்று நினைக்கிறேன்!]

இது தான் என் 5 நாள் மதுரை புராணம்..ரொம்ப படுத்திட்டேனோ? சரி அப்புறம் பாக்கலாம்..
விருமாண்டியில் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது..ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கொத்தாலத் தேவர், விருமாண்டி உண்டு..நான் 5 நாள் leave ல மதுரை போறேன்..so no blogs for 5 days!! :(( அதை விருமாண்டி கதையோட்டத்தில் சொன்னால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இது..!

கொத்தாலத் தேவர் :

அந்த பயலைப் பத்தி பேசவே நாக்கு கூசுது! யாருன்னு கேக்குறீகளா, அதான் விருமாண்டி..விருமாண்டி!

Blog எழுதுறேன்னு எத்தனை பேரை கொன்றுப்பான்..அவனும் அவன் எழுத்தும். மனசுல சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு நெனைப்பு!
இவனை எல்லாம் படிக்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லனும்..அதாங்க அந்த சாமியே தண்டனை கொடுத்துருச்சு..1 மாசமா இருமிட்டு இருக்கானே, அவனுக்கு குணமாகுதா? bangalore ல தானப்பா இருக்கான். இங்கே இல்லாத doctor ஆ? போனானே, பெரிய ஆஸ்பத்திரிக்குத் தான் போனான்..doctor ஐ பார்த்தான்..அந்த பொம்பளை doctor ம் அவ கழுத்துல கிடந்ததை, அது என்ன கருமம்..என்னவோ scope ம்பாய்ங்க..வாயிலே நுழைய மாட்டேங்குது, கழுதை!! அதை எல்லம் எடுத்து அவன் நெஞ்சுல வச்சு மூச்சை இழுத்து விடு, அங்குட்டு திரும்பு, இங்குட்டு திரும்புன்னா..1 மாசமா இருக்குன்னு சொன்னவுடனே அந்தப் புள்ள நீ எதுக்கும் x-ray, blood test பண்ணிக்கோன்னு ஒரு போடு போட்டுச்சு..நம்ம ஆள் கிட்டத் தான் ஊரை அடிச்சி சேத்து வைச்ச காசு இருக்கே..சரி எதுக்கு வம்புன்னு எடுத்தான்..அவ சாதரணமா report வாங்கி பாத்துட்டு, ஒண்ணுமில்லை..அலர்ஜியா இருக்கும்னா!! நம்ம பயலுக்கு ஒண்ணும் இல்லயேன்னு சந்தோஷப்பட்றதா, இல்லை 500 செலவழிக்க வச்சுட்டு இப்ப இப்படி சொல்றாலேன்னு வருத்தப்பட்றதான்னு தெரியலை..இதோ அவ எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரை கூட தீந்து போச்சு..இன்னும் இருமிட்டு தானேப்பு இருக்கான்..

தோ, இப்போ ஐய்யா leave போட்டு ஊருக்கு போறாராம்..தன்னை குணப்படுத்திக்க..இவன் எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்னங்க? blog எழுத முடியாதேன்னுகவலையாம் இவருக்கு..ரொம்ப முக்கியம்!! இவன் blog படிக்கலைன்னா நமக்கு தூக்கம் வராதா? சோறு தண்ணி இறங்காதா? போப்பு!! உன்னை மாதிரி ஆயிரம் பேரை பாத்துருக்கோம்!! மக்களே நீங்க ஒன்னும் கவலை படாதீங்க!! இவனுக்கு இருமல் குறையப் போறதும் இல்லை, இவன் திரும்பி வந்து blog எழுதிநம்மளை கஷ்டப்படுத்தப் போறதும் இல்லை..சாமி நம்ம பக்கம் தான்..அவனுக்குத் தெரியும், யாரை எங்கே வைக்கணும்னு.. போடா!! போவியா!!


விருமாண்டி :

Blog எழுதுறேன்னு உங்களை எல்லாம் கொல்றேன்னு சொல்லி இருப்பாங்களே? சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு எனக்கு மனசுல நெனைப்புன்னு சொல்ல இருப்பாங்களே? அவங்கள்ளாம் யார் தெரியுமா? என்னோட குருக்கள்!! இன்னைக்கு நான் எதோ எழுதுறேன்னா அதுக்கு இவங்கள்ளாம் தான் காரணம். நான் இவங்க books எல்லாத்தையும் படிச்சதில்லை..ஆனா நான் படிச்ச கொஞ்சமே என்னை இந்த அளவுக்கு தூண்டி இருக்கு..நான் வாழ்க்கையை தேடிட்டு இருக்கேன்..சுஜாதா கூட, "எல்லா பிரபலம் ஆனவங்க கிட்டயும் ஒரு false start இருக்கும்னு சொல்றாரு.." அவங்களுக்கு வேண்டியதை கிடைக்கும் வரை அவங்க ஏதாவது புதுசு புதுசா முயற்சி பண்ணிட்டு தான் இருப்பாங்க!! அந்த மாதிரி தான் நான்..நான் எழுத்தாளனா, ஓவியனா, பேச்சாளனா, நடிகனா, பாடகனா, இந்த சமூகத்தையே மாற்ற வந்த பெரிய கொம்பனா...[நான் ஒரு நல்ல software engineer இல்லை என்பது எனக்குத் தெரியும்..so அந்த கேள்விக்கே இடமில்லை!] இப்படி ஆயிரம் கேள்விகளுக்கிடையில் என் பங்கு வாழ்க்கையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்!

நான் எழுதும் blog ற்கு பாராட்டு கிடைக்கும் போது நீ ஒரு நல்ல எழுத்தாளன் என என் மனம் மார் தட்டிக் கொள்கிறது..
நல்ல ஒரு ஓவியம் வரையும் போது, நீ சிறந்த ஓவியன் என்று நினைத்து பெருமைப் பட்டுக் கொள்கிறது..
எப்படி இப்படி எல்லாம் பேசுகிறாய் என்று நண்பர்கள் வியக்கும் போது, இது தானே எனக்குத் தெரியும் என்று சந்தோஷம் கொள்கிறது..

இப்படி எல்லா வித முயற்சிகளுடன் என் வாழ்க்கை நதி ஒரு பேரிரைச்சலுடன் வளைந்து நெளிந்து போய்க் கொண்டே இருக்கிறது..நடுவில் சில சிறிய
பாறைகளாய் இந்த இருமல், காய்ச்சல் எல்லாம்..என் வேகம் தெரியாமல் என்னை அடக்கப் பார்க்கின்றன!! பாவம், அதுங்களுக்கு என்ன தெரியும், கால வெள்ளத்தில் அது என்னுள்ளே தொலைந்து போகும் என்று..

என்னடா இவன் தான் கொஞ்சம் light ஆ எழுதுவான்! இவனும் leave போட்டுட்டு போயிட்டான்னு நினைக்காதீங்க!! இதோ நீங்க 'ம்' சொல்றதுக்குள்ளே [ஒரு 5
நாள் கழிச்சி சொல்லுங்க!] வந்துருவேன்!! தினமும் இவன் இன்னைக்கு என்ன எழுதியிருப்பான்னு என் பக்கத்தில் எட்டிப் பார்க்கும் உள்ளங்களுக்கு என் நன்றி!!

என் கவிதைகளுக்கு 13 வயது.. நான் 9வது படிக்கும்போது கவிதை எழுதத் துவங்கினேன். school ல் தனித் தனியே உட்கார்ந்து படிக்க சொல்வார்கள். எனக்குத் தெரிந்து top rank ல் உள்ள மாணவர்களைத் தவிர வேறு யாருமே அப்போது படிப்பதில்லை..

யாராவது ஒருவன் புது படம் பார்த்து விட்டு வந்திருப்பான். அவன் கதை சொல்வான்..எனக்கு ஒருவன் 'சின்னக் கவுண்டர்' கதை சொன்னான்..சிறிது நாள் கழித்து அந்தப் படத்தைப் பார்த்தேன்..ஒரு scene பிசகாமல் சொல்லி இருந்தான். நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

சரி கவிதைக்கு வருவோம்..முதலில் என் கவிதைக்கு பழி ஆனது obviousely நிலா தான்..இன்று நினைத்துப் பார்க்கிறேன்..நிலவுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் எல்லா கவிஞர்களையும் மெட்ராஸ் பாஷையில் திட்டி இருக்கும்..அவ்வளவு படுத்துகிறோம் நிலவை..பாவம்!!

என் நினைவில் உள்ள வரை நான் எழுதிய முதல் கவிதை:

நிலவைப் பெண் பார்க்க மேகத்தில்
நட்சத்திர ஊர்வலம்!


[கவனிக்க: அது 'வானத்தில்' என்று இருக்க வேண்டும், எனக்கு அப்போது மேகத்துக்கும், வானத்துக்கும் வித்தியாசம் தெரியாதோ என்னவோ!!]

வெள்ளித் தட்டு போல் உள்ள நிலாவே
உன்னை யாராவது தூக்கிச் சென்று விடுவார்
என்று தான் இந்த நட்சத்திரக் காவலா?!
[யாருமே சொன்னதில்லை!!.. கவிதெ கவிதெ!!]

ஏழை என் கடன் அடைக்க
எனக்கொரு யோசனை!
வெள்ளி நிலவே உன்னை அடகு வைக்க!!


[இந்தா நிலாக்கண்ணு..கோச்சுக்காதேமே..நான் இன்னா பண்றது, உன்னை நெனைச்சா கவிதை அருவி மாதிரி கொட்டுது, ஆனா அது எழுதனும்னு உட்கார்ந்தா..இந்த எழுத்து..வார்த்தை..]

இப்போ சொல்லுங்க, நிலா திட்டுமா? திட்டாதா?

அப்புறம் மெல்ல காதல் பக்கம் போனேன்..

பெண்ணுக்கு பஞ்சு போன்ற மென்மையான உடல் கொடுத்து
அதில் ஏன் இரும்பாலான இதயம் கொடுத்தாய்?


[அடஅடா..தேவதாஸ் range க்கு எழுதியிருக்கேன்யா!! இதெல்லாம் சத்தியமா cinema பாத்து கெட்டுப் போனதால வந்தது தான்..இல்லைன்னா 9வது படிக்கிற பையனுக்கு எப்படிய்யா இதெல்லாம்!!]

விலைவாசி ஏற்றத்தால்
அவள் மானமும் விலை ஏறியது


[ஒரு வேளை பிஞ்சுலேயே பழுத்திட்டேனோ?]

இப்படி ஆரம்பித்தது என் கவிதைப் பயணம்! பிறகு +1, +2 வில் கதை/கவிதை எழுதுமாறு தலைப்பு ஒன்றை கொடுப்பார்கள். கவிதையின் தலைப்பு பெரும்பாலும் குயில், மயில், நிலா [நம்ம ஆளு], வானவில் என்று இருக்கும்..எனக்கு வார்த்தைகள் எங்கிருந்தோ சரம் சரமாய் வந்து விழும்..எழுதித் தீர்த்திடுவேன்..வாத்தியார்களும் 10 க்கு 7, 8 என்று போட்டு விடுவார்கள். ஆனால் இதுவரை எந்த வாத்தியாரும் என்னை ஊக்குவிப்பது இருக்கட்டும், நல்லா இருக்குப்பா என்று ஒரு பொய் கூட சொன்னதில்லை..ஒரு வேளை அவர்களுக்கு கவிதை பிடிக்காதோ என்னவோ!

இனிமே அப்பப்போ என் கவிதைகளுடன் உங்களை முற்றுகை இடுவேன்..ஜாக்கிரதை!!

Labels: | | edit post
இந்தியா இமயத்தை விட
உயர்ந்திருந்தது

அரசியல்வாதிகள் அனைவரும்
காந்தியாய், காமராஜராய்
மாறி இருந்தனர்

ஊழல் ஊழ்வினை
கண்டிருந்தது

லஞ்சம் நாடு
கடத்தப்பட்டிருந்தது

தீவிரவாதம்
பக்கவாதம்
கண்டிருந்தது

வறுமையின் வயிரு பசியால்
வாடிப் போயிருந்தது

பாபருடன் இராமர்
என்மராகி இருந்தார்

தமிழ்நாட்டில் காவிரி
தலைவிரி கோலமாய்
ஓடிக் கொண்டிருந்தது

'ஆயிரம் வாலா' செய்து கொண்டிருந்தவர்கள்
'அறம் செய விரும்பு' படித்துக் கொண்டிருந்தனர்

வரம்பு மீறி கனவு
காண்பதாகக் கூறி - கனவே
என் கனவு கலைத்தது!! :(

இது நான் ஒரு 5 அல்லது 6 வருஷத்துக்கு முன்னே எழுதிய கவிதை..இந்தக் கனவிற்கு இன்றும் இதே நிலைமை தான் என்று நினைக்கும் போது என் விரல்கள் type செய்ய மறுக்கின்றன..

i hope to delete this post in near (??) future..can i?

Labels: | | edit post
நான் என் நண்பர்களுடன் இருக்கிறேன். என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் 7 பேர். எல்லோரும் software field ல் தான் குப்பை கொட்டுகிறோம்.

நாங்கள் இரவு மட்டும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். நான் office ல் இருந்து சீக்கிரம் போய் விட்டால் என் favourite வத்தக் குழம்பு வைத்து விடுவேன். பசங்க பாவம் துடிதுடிச்சிப் போயிடுவாங்க!! [நல்லாத் தாங்க வைப்பேன், சும்மா என்னை ஓட்றதுக்காக பசங்க இப்படி பண்ணுவாங்க!]

எங்க system படி யாராவது சமைச்சுட்டு இருந்தா, சும்மா இருக்குறவன் போய் தயிர், தொட்டுக்க சிப்ஸ் அப்படி இப்படின்னு வாங்கிட்டு வரணும். இதுல நான் எப்போவாவது மாட்டுவேன்!! நான் எப்பவுமே ஒரு வேலை சொன்னா, அதை 2 ஆக்கிடுவேன். அவ்வளவு சமத்து நான் :) இதுல எனக்கு ஞாபக மறதி வேற, கேக்கணுமா?

அதனால நான் சாமான் வாங்கப் போனா எல்லாம் சரியா எழுதிக்கொடுப்பாங்க! [அப்படியும் மறந்துருவேன்]

ஒரு நாள் நான் சாமான் வாங்க கிளம்பி போனேனா, பாதி தூரம் வந்த உடனே friend sms பண்ணான். இன்னைக்கு side dish வேணாம், potato 3/4 kg வாங்கிட்டு வான்னு சொன்னான்..சரின்னு கடைக்கு போனேன்..[அந்த aunty என்னை நல்லா sight அடிக்கும்..ஹிஹி]சரி அவங்களுக்கும் கொஞ்சம் காட்சி கொடுத்த மாதிரி இருக்குமேன்னு போனேன். [சரி சரி..] friend என்ன வாங்க சொன்னான், potato அதாவது உருளைக்கிழங்கு..நான் என்ன கேட்டேன் தெரியுமோ? அக்கா, ஒரு முக்கா கிலோ தக்காளி போடுங்கன்னேன்!!!!!!!! [எனக்கு ஆரம்பத்துல இருந்து இந்த potata, tomate குழம்பும்!] அவங்களுக்கு என்ன தெரியும் பாவம்..நம்ம ஆளு வந்துட்டான்ன மாதிரி பாத்துட்டு,

Aunty : 1 கிலோ வாங்கிக்குங்க உங்களுக்கு மட்டும் குறைச்சு போட்டுத் தர்றேன்
நான் : ஆமா இப்படி தான் எல்லாருக்கும் சொல்வீங்க எனக்குத் தெரியாதா? [அதுக்கு aunty பாத்துச்சே ஒரு பார்வை..நான் அவளை hurt பண்ணிட்டேனாம்..ஆஹா!! ஒரு கூட்டமாத் தான்யா அலையிராய்ங்க..நம்ம கிட்டேயே வர்றாங்களே!!]

so, அந்த பார்வையில் பயந்து போய், ஒரு கிலோ வாங்கிக்கிட்டேன்..எது, 3/4 கிலோ கிழங்கு வாங்கிட்டு வாடான்னா, 1 கிலோ தக்காளியோட நிக்கிறேன்..friend உள்ளே போன உடனே சொன்னான், என்னடா கிழங்கு வாங்காம தக்காளி வாங்கிட்டு வந்துருக்கேன்னு? அப்போ ஒடிச்சு எல்லா யோசனையும், இதுல அவரோட add up வேற..நினேச்சேண்டா..பையன் ஒரு தடவைல ஒரு வேலயை முடிக்க மாட்டானேன்னு" மானமே போச்சு..aunty எனக்குன்னு கம்மியா கொடுத்துருக்காடான்னேன்..அதற்கு அவர்கள் பதில்:

"இதுக்கு பிச்சை எடுக்கலாம்!!" [உபயம்: சூரியன் படம் - கவுண்டமணியைப் பார்த்து ஒமக்குச்சி சொல்லும் dialogue..

அதுக்கு நான் : இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!

சத்தியமா எனக்கு potato னா, உருளைக்கிழங்குன்னு தெரியும்..[என்னை நம்புங்க please], அவன் ரசம் வைக்கப் போறதா சொன்னான்..அப்போ 3/4 கிலோ தக்காளி எதுக்கு? அப்படியாவது யோசிச்சிருக்கணும், அதான் மண்டையிலே ஒன்னும் இல்லையே!! அவன் கிழங்க அவியல் [அவியல் தானா அது?] மாதிரி பண்ணலாம்னு கேட்ருக்கான்!! என்னை அனுப்புனா அவன் நினைச்சது நடக்குமோ?

இப்படி தான் நேத்தும் ஆச்சு!!

உப்பு - 1 pocket
parachut oil - 100 ml
milk
curd
mixture/காராபூந்தி

நேரா கடைக்கு போனேன் [actuala வளைஞ்சு வளைஞ்சு தான் போனேன்..ஹிஹி]. அந்த கடையிலே மிக்சர், காராபூந்தி எல்லாம் கிடைக்காது..[என் கஷ்ட காலம்!] so except side dishes, எல்லாம் வாங்கிட்டேன். அப்படியே வீட்டுக்கு போயிட்டேன்..நான் செஞ்ச தப்புக்கு நான் தானே போகனும், so இன்னொரு தடவை கடைக்குப் போய் side dish வாங்கினேன்..

so எல்லாமே தப்பு தப்பா செய்றதே என்னோட ஒரு தப்பான பழக்கமாயிடுச்சு..ஏன்னு தெரியலை..எனக்குன்னு ஒரு உலகத்துல நான் மட்டும் என் கனவுகளோட சுத்திட்டு இருக்கேன்..இதை நான் நகைச்சுவையா உங்களுக்கு சொல்றேனே தவிற எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..நான் எப்போ திருந்தப் போறேன்னு தெரியலை..சொல்ல மறந்துட்டேன்..நேத்து அப்படி என்ன தான் யோசிச்சுட்டு இருந்தேன்...நேத்து april fool day!!

இதை படத்துல ஒரு scenea வைக்கனும்னா என்ன செய்யலாம்னு யோசிச்சேன்..அதை நான் சொல்றேன்..உங்களுக்கு புடிச்ச herione ஐ நீங்க கற்பனை பண்ணிக்குங்க..என்ன? hero யாருன்னு சொல்லலயா? இதுல என்னங்க doubt? அகில உலக கலை நாயகன் ப்ரதீப் தான்..[என் வீட்ல எனக்கு பசங்க வைச்ச பேரு..ஹிஹி]


sunny day
Location : spencer plaza!
caste : hero, herione [hero நான்னு சொன்னதாலே அது ஒரு ஜொள்ளு பார்ட்டி character னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்..ஹிஹிஹி]
situation : இரண்டு பேரும் first time பாக்குறாங்க

Hero [herione அழகுல மயங்கி..]: Hello! என்னைத் தெரியுதா?
Herione : [பயந்து போய்] இல்லையே! யாரு நீங்க?
Hero : no problem. எனக்கும் உங்களைத் தெரியலை!
Herione [கடுப்பாகி] : excuse me..
Hero [cool] : excused!
[Herione : கடுப்பாகி போயிட்டே இருக்கா!!]
Hero [பின்னாடி ஓடிப்போய்]: 1 sec, என்னைத் தப்பா நெனைக்காதிங்க..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! இதை சொல்லனும்னு தோனிச்சி..அதான்..sorry..bye! [மெல்ல நடந்து போறான்!]
Herione : [ஒன்னும் புரியாம..மெல்ல நடந்து போறா!]
Hero : excuse me..[அவள் திரும்பிப் பார்க்கிறாள்!] நீங்க நான் சொன்னதை மனசுல வச்சுக்காதீங்க. இன்னைக்கு april 1st..அதான் just உங்களை fool பண்ணேன்..நீங்க ஒன்னும் அவ்வளவு அழகா இல்லை!! ;) [சொல்லிட்டு அவள் பதில் எதிர்பார்க்காதவனாய் போகிறான்]
[Herione முகம் கோபத்தால் சிவக்கிறது! வெறுப்புடன் நடந்து போகிறாள்!]
Hero : மறுபடியும்..excuse me..[அவள் மறுபடியும் திரும்பிப் பார்க்கிறாள்!] நான் இப்போ தான் சும்மா சொன்னேன்..நீங்க உண்மையிலேயே அழகா இருக்கீங்க..:)
[Herione : அவளுக்கு லேசா சிரிப்பு வருது..]
Hero : இப்போ இன்னும் ரொம்ப அழகா..:)
[Herione முகம் இந்த முறை நாணத்தால் சிவக்கிறது!! Hero பார்த்துக்கொண்டே நிற்கிறான்...]

so, என்ன சொல்றீங்க? இதை இன்னும் hotel room போட்டு யோசிச்சேன்னா நல்லா கொண்டு வரலாம்..

சுஜாதா எதோ book ல சொல்லி இருந்தாரு..உன் கதையை யாராவது திருடாம இருக்கணும்னா, உன் கதையை எழுதி உனக்கே நீ register post பண்ணிக்கோ..அது ஒரு record மாதிரி ஆயிடும்..அப்புறம் யாராவது திருடினாக் கூட case போட்டு easy ஆ ஜெயிக்கலாம்னாரு..ஆனா அவர் சொன்ன ஐடியாவை விட என்கிட்ட ஒரு better ஐடியா இருக்கு..உங்க கதையை யாரும் திருடாமல் இருக்கணும்னா..best கதையே எழுதாதீங்கோ¡¡¡¡¡¡¡...

இந்த blog படிக்கிறதுக்கு முன்னாடி,

TV ல மெட்டி ஒலி, கோலங்கள் ஓடுதுன்னா better off பண்ணிட்டு வந்திருங்க..
grinderla மாவு போட்டு இருந்தீங்கன்ன better off பண்ணிட்டு வந்திருங்க..

இது கொஞ்சம் பெரிய POSTUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU..ஆமா!

நான் [இங்கு நான் என்பது நானும் என் நண்பர்களும்!!] ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் 1 மணி நேரம், என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன பள்ளிக்கூடத்துக்கு போறது வழக்கம். [என் rediff blog படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்]

ஏன் போறேன்? [இப்போவாவது படிக்கலாம்னு தான்..]

நான்
AID என்ற ஒரு சமூக நலக் குழுவில் உள்ளேன். அதைப் பற்றி ஓரளவுக்கு விரிவாய் என் rediff blog எழுதியுள்ளேன்.

.................................................................................
.................................................................................
.................................................................................
[இதை புள்ளி புள்ளி என்று வாசித்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..அப்படிப் போட்டா என்ன எழுதலாம்னு யோசிக்கிறேன்னு அர்த்தம்பா!! அடா அடா..]

சரி, இப்போ இருக்குற Education System நல்லா இருக்குன்னு சொல்றவங்க எல்லாம் கை தூக்குங்க! ................................................

sorry! நான் உங்க கூட பேசுற மாதிரி இல்லை. உங்க பேச்சு கா!

school நிஜம்மாவே குழந்தைகளுக்கு சந்தோஷம் தருதா என்ன? என்னைப் பொறுத்தவரை வரை இல்லைன்னு தான் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை school என்பது குழந்தைகளை FAIL ஆக்குவதற்காகவே உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது!! நீங்களே சொல்லுங்கள். இன்றைய குழந்தைகள் எவ்வளவு வேகமாக செயல் படுகிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் கூட பதில் சொல்ல முடிவதில்லை. அப்படித் தான் எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது இருக்கிறார்கள். பின்பு ஏன் அவர்கள் school சென்று FAIL ஆகிறார்கள்? ஏன் 1 ஒருவன் மட்டும் first rank வாங்குகிறான்?

நிறைய சிந்திக்கும் குழந்தைகளை நாம் பள்ளி என்னும் JAIL ல் அடைத்து அப்பாடா இனி அவன் படிச்சா அவன் நல்லா இருப்பான், நம்ம கடமை முடிஞ்சது என்று தான் இருக்கிறோம். நம்மை விட குழந்தைகளுக்கு புதுசாய் கற்பதில் ஆர்வம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படி நிறைய சிந்திக்கும் குழந்தையை ஒரு school ல் சேர்த்து சில புத்தகங்களை கையில் கொடுத்து, இதில் என்ன இருக்கிறதோ அதை தான் நீ இனி படிக்க வேண்டும், இதைப் பற்றி தான் நீ சிந்திக்க வேண்டும் என்று ஒரு முட்டுக்கட்டை போடுகிறோம். குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுப்பதாய் நினைத்து, பள்ளயில் அவன் என்ன செய்தாலும் ஆசிரியர்:

1. ஹேய் [குழந்தைகள் என்ன ஆடு மாடா?] கத்தாதே..சத்தம் போடாதே!
2. அடுத்தவன்கிட்டே பேசாதே! எனக்கு pin drops silence இருக்கணும், ஆமா!! [அப்போ தானே அவருக்கு தூக்கம் வரும்]
3. வாயில விரலை வை! [அந்த குழந்தை அப்போ தான் கை சூப்புர பழக்கத்தை விட்ருக்கும், என்னடா வாத்தியாரே சொல்றாரேன்னு மறுபடியும் சூப்ப ஆரம்பிச்சிடும்!!]
4. bench மேல ஏறி நில்லு.
5. neel down போடு.
6. ஜன்னல் வழியா எட்டிப் பாக்கதே! தொலைச்சுடுவேன்!!
7. நீ எல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு!!

பின் குறிப்பு: நான் போகும் school ல் எந்தக் குழந்தையை எதைக் கேட்டாலும் கையைக் கட்டிக் கொள்ளும். நான் அதை எடுத்து விடுவேன். அது மறுபடியும் கட்டிக் கொள்ளும். [அப்படி அவர்களை பழக்கி விடுகிறார்கள்!]

இன்று இருக்கும் கல்வி முறை:

"ஒரு ஆசிரியர் இருப்பார், அவருக்குத் தான் எல்லாம் தெரியும். அவர் சொல்வதைக் மட்டும் கேட்க வேண்டும். அவர் அறிவை அப்படியே தூவி விடுவார். குழந்தைகள் catch பிடித்துக் கொள்ள வேண்டும்."

புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை மனப்பாடம் செய்ய வேண்டும். அப்படியே அதை பரிட்சையில் வாந்தி எடுக்க வேண்டும்!! நன்றாக வாந்தி எடுப்பவன் சிறந்த மாணவன். சரியாய் வாந்தி எடுக்காதவன் மாடு மேய்க்கத் தான் லாயக்கு, tea ஆத்தத்தான் லாயக்கு!!

joy of learning

so, இந்த முறையை மாற்றுவது தான் எங்கள் குறிக்கோள். படிப்பு என்பதும் விளையாட்டாக இருக்க வேண்டும், LEARNING SHOULD BE FUN. INSTEAD OF TEACHING, WE SHOULD DISCUSS WITH THEM TO ARRIVE A CONCLUSION. அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்கலாம். இதனால் தான் நான் school க்குப் போகிறேன். நான் போகும் school மிகச் சிறியது. 2 அறை தான். 3,4 & 5 எல்லாம் ஒரே அறையில், அதற்க்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்ற அறையில். We have set of general syllabouse on all subjects. Science [Simple experiments], Maths, Social Science etc.,] We discuss Social Science with 5th Std students.

நான் முதலில் ஏதாவது விளையாடுவேன். [குழந்தைகளுக்கு நம் மீது நம்பிக்கை வர அவர்களுடன் விளையாட வேண்டும்] 4 joke சொல்வேன். நல்லா சிரிக்க வைப்பேன். கோணங்கித்தனம் பண்ணுவேன். கோமாளித்தனம் பண்ணுவேன்..பாட்டு பாடுவேன், விடுகதை கேட்பேன். [believe me, infosys puzzle க்கு answer பண்ணாங்க..i stemped!!] அப்போ தான் சரி இவன் நம்ம வாத்தியார் மாதிரி இல்லை, நல்ல ஆளா இருக்கான், இவன்கிட்டே பேசலாம் என்று நினைப்பார்கள். நாம் எத்தனை குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம், பள்ளியில் பேசவே மாட்டார்கள். அவர்கள் அங்கே ஒதுக்கப்பட்டவர்கள். [நானும் அப்படித்தான் இருந்தேன்!!]

That syllabous has some worksheets:

1. உன்னைப் பற்றி
2. உன் நண்பர்கள் பற்றி
3. உன்னிடம் உள்ள தனித்தன்மை
4. உன் குடும்பம்
5. உன் ஊர்

அவர்களைப் பற்றி அவர்களுக்குள்ளே யோசிக்கச் செய்வது. சமூகத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது. தன்னம்பிக்கை வளர்ப்பது. அவர்களின் பலத்தை அவர்களுக்கு உணர்த்துவது..இப்படிப் பல...

நான் school க்குள் நுழைந்தவுடன் அங்கே ஒரு குதூகலம்..ஒரு களிப்பு..ஒரு சந்தோஷம் எல்லாம் அவர்களுக்குள் வருவதை பார்க்கிறேன்.

1. எங்க வீட்டுக்கு வாங்க என்று ரோட்டில் என்னைப் பார்த்து என் கையைப் பிடித்து அந்த சின்ன பையன் இழுக்கும்போது..
2. office செல்லும் என்னை வழியில் பார்த்து chocolate எடுத்துக்குங்க, இன்னைக்கு எனக்கு birthday என்ற அந்த சின்ன பெண்ணைப் பார்க்கும்போது..
3. நான் உள்ளே நுழைந்தவுடன் எனக்கு கை கொடுக்கத் துடிக்கும் அந்த பிஞ்சுக் கரங்களை நினைக்கும்போது...
4. உங்களுக்காக கோயில்ல இருந்து திருநீரு கொண்டு வந்துருக்கேன், வச்சுக்குங்க என்று சொல்லும் போதும்..

என் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது!!

நான் ரஜினியோட FAN னு சொல்றதை விட அவரோட WINDMILL னு சொல்லலாம். அவ்வளவு பெரிய FAN நான்!!! [வழக்கமான ஹிஹி..ஹிஹி]

என் இள வயதில் நான் "நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்" வளர்ந்ததை விட "நாளொரு ரஜினி படம், பொழுதொரு ரஜினி ஸ்டைலாகத்தான் வளர்ந்தேன். [ரொம்ப வளரல, கொஞ்சம் குள்ளம் தான்..]

1. என் compoundல் என் பெயர் ரஜினி, எனக்கு தம்பி இருப்பதால் நான் "பெரிய ரஜினி" அவன் "சின்ன ரஜினி"!
2. பூ விற்றுக்கொண்டு வரும் ஒரு அக்கா என்னிடம் "டேய், ஒரு தடவை ரஜினி ஸ்டைல் செய்துகாமிடா" என்று கெஞ்சுவாளாம். [அம்மா சொன்னாள், எனக்கு
ஞாபகம் இல்லை!]
3. எனக்கு தெரிந்து வந்த அத்தனை ரஜினி பாட்டும் தலைகீழ் பாடம். [அப்புறம் படிப்பு எப்படி வரும்னேன்?]
4. புதிதாக ஒருவனை என் நண்பனாக ஏற்றுக் கொள்ள நான் அவனைக் கேட்கும் கேள்வி:
1. உன் பேர் என்ன?
2. நீ ரஜினி கட்சியா, கமல் கட்சியா? [அவ்வளவே..]
எனக்கு தெரிந்து என் வயதை ஒத்த பசங்களுக்கு, ரஜினியை தான் பிடிக்கும். யாராவது கமல் கட்சி என்றால் கமல் எப்போ பாத்தாலும் herione ஐ
கொஞ்சிட்டே [உவ்வே..அப்போ!! ;)]இருப்பாரே, சண்டையே போட மாட்டாரே..அவரைப் போய் இவனுக்கு எப்படி பிடிக்குது? என்று என் whole set [பெரிய shaving settu..] அவனை தீண்டத்தகாதவனைப் போல் பார்ப்போம். அவன் பிறப்பிலேயே ஏதோ கோளாறு என்றே நான் நினைத்தேன்.
5. பலரை ரஜினியின் மகத்துவங்களைக் கூறியே ரஜினி கட்சிக்கு இழுத்த பெருமை எனக்கு உண்டு!
6. T-Shirt போட்டுக் கொண்டால் மேல் button போட்டுக் கொள்ள மாட்டேன் ;)
7. வீட்டில் எனக்கு hair-cut பண்ண ஒரு யுத்தமே நடக்கும். அப்படியே போனாலும், ரஜினி மாதிரி step-cutting போடுங்க என்பேன். சலூன் கடையில் இருப்பவன் சிரித்து விட்டு, அதுக்கெல்லாம் நெறைய முடி வேணும் என்பான். மூக்கு வரை எனக்கு முடி இருக்கிறது, இதற்கு மேல் என்ன? என்று எனக்கு எரிச்சலாய் வரும்.
இதற்குள் என் தம்பி "நல்லா பொடி வெட்டா போட்ருங்க" என்று சொல்லி சைகை காட்டிப் பழி தீர்த்துக் கொண்டிருப்பான்!! [so, 16 வயதினிலே பரட்டை மாதிரி உள்ளே போன நான், குறுதிப் புனல் கமல் rangeukku வெளியே வருவேன்!! குளிக்கிறேனோ இல்லையோ தம்பியைத் தான் முதலில் தேடுவேன்..மகனே காலிடா நீ இன்னைக்கு..]
8. ரஜினி படத்தில் முழங்கால் வரை shoe போட்டு வருவார். [fight scenes..+ அந்த leather jacket..ஐய்யோ தலைவா¡¡¡¡!!], என்னிடம் ஒரு சின்ன 100/= shoe இருக்கும். so, socks க்குள்ளே pant ஐ விட்டுக் கொள்வேன்! என் மாமா இதை ஒரு முறை பார்த்து கடுப்பாகி விட்டார். [பாவம் அவர்!!]
9. அம்மா ஏதாவது கடைக்குப் போய் வாங்கி வரச் சொன்னால் குஷி ஆகி விடுவேன். ரஜினி பாட்டு பாடிக்கொண்டே போகலாம். கடை வந்தவுடன், பச்சரசி
எவ்வளவுக்கு, பாசிப்பயிரு எவ்வளவுக்கு என்று மறந்து போயிருப்பேன்!! [அப்புறம் என்ன திட்டு தான்..பூஜை தான்!!]
11. இன்றும் "நல்லவனுக்கு நல்லவன்" ticket கிடைக்காமல் அழுது கொண்டே நடந்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
12. "அண்ணாமலை" முதல் நாள் பாட்டியுடன் சென்று கூட்ட நெரிசலில், counter ல் நுழைந்தும் ticket எடுக்காமல் பாட்டியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அந்த
ticket யும் தொலைத்து, அழுததால் police காரர் பாவம் சின்னப் பையன் என்று உள்ளே விட்டார். [sorry பாட்டி!!]
10. இன்று கூட எனக்கு "தளபதி" 10 வது நாள் poster ல் இருந்து 100 வது நாள் poster வரை அப்படியே ஞாபகம் இருக்கிறது!! first poster was "In a white background " ரஜினி கருப்பு shirt போட்டுட்டு யாரையோ வெட்ற மாதிரி ஒரு still..awesome still it was"! அதை first ஒரே ஒரு இடத்துல ஒட்டி இருந்தாங்க, schoola இருந்து வரும்போது bus ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நான் அதை பாத்தே ஆகனும்.[maniratnam the Great!!]

இன்று யோசித்துப் பார்க்கிறேன்!! 150 படங்கள் ரஜினி பண்ணி இருந்தாலும் அவருடைய நல்ல படங்களை எண்ணும் பொழுது விரல் விட்டு எண்ணக்கூடியதாய்
இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. ஒரு மிகச் சிறந்த நடிகரை commerical என்ற பெயரால் கட்டுப்படுத்தி விட்டோமோ என்று தோன்றுகிறது!

எனக்கு மிகப் பிடித்த ரஜினி படங்கள்:

1. ஜானி
2. முள்ளும் மலரும்
3. மூன்று முடிச்சு
4. அவர்கள்
5. தப்புத் தாளங்கள்
6. 16 வயதினிலே
7. தில்லு முள்ளு
8. நினைத்தாலே இனிக்கும்
9. பில்லா
10. ரங்கா
11. அன்புள்ள ரஜினிகாந்த்
12. தளபதி
13. மன்னன்
14. அண்ணாமலை
15. பாட்ஷா

தலைவா எப்போ ஜானி மாதிரி ஒரு படத்தைக் கொடுக்கப் போறீங்க?

எனக்கு cinema வில் கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும், என்

வீட்டிலோ, சுற்றத்தாரோ யாருமே cinema வில் இல்லை. என் அப்பா, படம் பார்க்கும் பொழுது, படம்

இறுதியில் ஒரு கல்யாணத்தில் முடியவில்லை என்றால் படம் முடிந்ததாகவே ஒப்புக்கொள்ள மாட்டார்.

அப்படிப் பட்ட அவருக்கு நான் மகான். [sorry..மகனுக்கு பதிலா மகான்னு type அடிச்சுட்டேன்.

keyboardu கு கூட உண்மை தெரிஞ்சிருக்கு!] எனக்கு ஏதாவது கொஞ்சம் தெரியும் என்றால் அது

cinema தான்.

point க்கு வர்றேன்.
AKIRA KUROSAWA - சினிமாவின் தந்தை [தமிழ்], அவரோட சுய சரிதம் மதுரையில வாங்கினேன்.

அப்படி என்ன தான் படம் புடிச்சுருக்காரு பாப்போம்னு.

அந்த புத்தகத்தில் நான் கண்டது:

1. அகிரா japan ஐ சேர்ந்தவர். [உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்!]
2. சின்ன வயசுல மன நோயாளியா இருந்தாராம். [நான் தெளிவா இருந்தேன்..என்ன ப்ரயோஜனம்?]
3. அவர் ஒரு ஓவியரும் கூட. [நானும் தான்..இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..]
4. ஒரு நடிகையை மணம் முடித்தார்.
5. அவருடைய seven samurai உலக ப்ரசித்தி பெற்றது. [நான் அவருடைய எந்த படத்தையும் பார்த்ததில்லை]
6. "நீ எவ்வளவு சிரமப்பட்டு ஒரு காட்சியை எடுத்திருந்தாலும், அது பார்ப்பவருக்கு மகிழ்ச்சியை தராதென்றால், அதை கண்டிப்பாக வெட்டி விடு. படத்தொகுப்பு அறையில் நீ ஒரு கொலைகாரனாய் இரு." இது அவர் அவருடைய குரு யசாமோன் இடம் கற்ற பாடம். [ஒரு பெயராவது வாயிலே
நுழையுதா? இது correcta ன பெயரான்னு என்கிட்ட கேக்காதீங்க..i am not sure!]
7. சத்தியமா எனக்கு 'அகிரா' தவிற வேற எந்த பெயரும் ஞாபகம் இல்லை.

பின் குறிப்பு: இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்ததிலிருந்து என் வீட்டில் நண்பர்கள் என்னைத் தேடும் பொழுது 'அகிரா' எங்கே என்று தான் தேடுகிறார்கள்.

"ஒரு நல்ல காரியத்தை தொடர்ந்து செய்வது மிகக் கடினமான ஒன்றாக எனக்குப் படுகிறது!"

மேலே சொன்னது என் வரையில் நான் கண்டுபிடித்த மிகப் பெரிய உண்மை! உங்களுக்கு எப்படியோ

எனக்கு தெரியாது!

ஏதோ ஒரு ஆர்வத்தில் ஒரு பழக்கத்தை ஆரம்பிக்கிறோம்! ஆனால் அதே ஆர்வத்துடன் நாம் எத்தனை

நாள் அதை தொடர்ந்து செய்கிறோம்? நான் இப்படி பல நல்ல காரியங்களை கை விட்டிருக்கிறேன்.

அதை இங்கே பட்டியலிடுகிறேன். இதை அடிக்கடி படிக்கும்போதாவது நான் அதை தொடர முற்பட

வேண்டும்.

1. GYM போவது. நான் 5 வருஷத்துல பல தடவை gym join பண்ணேன். ஆனா continous போகவே

இல்லை! அப்படி போயிருந்தா இன்னைக்கு நான் ஒரு ranga இருந்துருப்பேன்!! ஹ¤ம்..
2. Jogging! ஒரு 2 வாரம் போயிருப்பேன்னு நெனைக்கிறேன். winterல காலங்காத்தாலே யாரு

எந்திரிக்கிறதுன்னு அதுவும் out!
3. காலயில எந்திரிச்ச உடனே வயிறு முட்ட தண்ணி குடிச்சா நல்லதாம். அது ஒரு 4, 5 நாள் ஒடிச்சி!

அப்புறம் உங்களுக்கு தான் தெரியுமே..
4. காலயில எந்திரிச்சி என் friend கோவிலுக்குப் போவான். அது ஒரு நாள் try பண்ணேன். நல்லா தான்

இருந்தது, but என்ன ப்ரயஜோனம்?
5. பெரிய இவன் மாதிரி Bangalore Tamizh Changam ல சேர்ந்தேன். library பக்கம் தலை வச்சு

படுத்தே 1 மாசம் ஆகுது. [ஆனா இதை கண்டிப்பா செய்வேன்!]
6. படமா வரைஞ்சு தள்ளணும்னு posture color எல்லாம் வாங்கினேன். அது இன்னைக்கு என் வீட்ல

ஒரு ஒரமா இருந்துட்டு என்னை பார்த்து முறைக்குது!!


இப்படிப் பல, இங்கு பட்டியலில் உள்ளவை சில! [எப்படி எதுகை மோனை எல்லாம் கலக்குறேனா?]

இதெற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் என்னால் ஒரு காரியத்தைக் கூட தொடர்ந்து செயல்படுத்த

முடியவில்லை? எனக்குத் தெரியும். அதற்குப் பெயர் "சுய இரக்கம்"!! நானே என்னை

சமாதனப்படுத்திக் கொள்வது. ப்ரதீப் நீ ரொம்ப tireda இருக்கே. இன்னைக்கு வேணாம்! ஒன்னும் குடி

முழுகிப் போயிடாது! இப்படி நெனச்சு நெனச்சே நான் என்னயே ஏமாத்திக்கிறேன்!!

Hope soon i will kill that damn "சுய இரக்கம்!!"

என்னை வாழ்த்துங்கள்!!