Showing posts with label என்னமோ. Show all posts
Showing posts with label என்னமோ. Show all posts
எனக்கு ஒரு வலைப்பக்கம் இருக்கிறது, அதை நம்பி ஒரு கோடி, சரி, ஒரு லட்சம், அட, சரி ஒரு ஆயிரம், சரிய்யா, ஒரு பத்து பதினஞ்சு பேரு இருக்காங்க என்பதே எனக்கு மறந்து விட்டது. கழுதை தேய்ந்து கடவுள் துகள் ஆன கதையாய் [அட, இன்னும் டச் விட்டு போலியே..!!] மாதத்திற்கு ஒன்று என்று எழுதி கொண்டிருந்தேன். அது வருடத்துக்கு ஒன்று என்கிற ரேஞ்சில் வந்து நிற்கிறது. இந்த நிமிடம் வரை எதை பற்றி எழுதப் போகிறேன் என்று யோசிக்கவில்லை. பாப்போம்...

நான் என்ன நினைக்கிறேன்னா, இப்போ எல்லாம் வீடியோல பெர்பார்மன்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோமா, கழுதை இனி பிளாக் எழுதி என்ன ஆக போகுது, "அட யாருப்பா அதை அசிங்கமா கைல, கழுத்துல மாட்டிகிட்டு" என்று கவுண்டமணி சொல்வது போல் என் ஆழ்மனம் முடிவுக்கு வந்து விட்டது போல...ஆனா, இதை நெனச்சி அந்த பத்து பதினஞ்சு பெரும் கவலைப்பட வேணாம். வீடியோவில் நடனம் புரிவோம், "கீ போர்டிலும் நடனம் புரிவோம்" [நன்றி: கருந்தேள் ராஜேஷ்]

ஒரு முக்கியமான விஷயம், நான் மொத்தமாய் பெங்களூர் குடி பெயர்ந்து நேற்றோடு ஒரு வருடம், ஒரு மாசம் ஆகிறது. சில வருடத்துக்கு முன், பெங்களூரில் இருந்து சென்னை வந்தேன். இப்போது மறுபடியும் பெங்களூர். விஷயம் ஒன்றுமில்லை. சும்மா ஒரு மாற்றம் தான்.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து சென்னையில ஒரே மழையும், வெள்ளமும், புயலுமாய் இருக்கிறது. நம் சென்னையை விட்டு வந்தது ஏதோ அபசகுனம் ஆகிவிட்டது போல என்று நினைத்து சற்று பீற்றிக் கொண்டால், சென்னையில் எழும் தன்னெழுச்சிகள் நல்ல சகுனம் தான் என்று காட்டுகிறது. எப்படியோ நல்லா இருந்தா சரி!

எதற்காக சென்னை குடிபெயர்ந்தேனோ, அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்த போது, பெங்களூர் வந்துவிட்டேன். என் குறும்படங்களை பற்றி தான் சொல்கிறேன். "நீங்கள் போய் விட்டால், தமிழ் குறும்படங்களின் எதிர்காலம் என்னவாவது?" என்று ஒரு நூறு பேர், இல்லை, ஒரே ஒரு ஆள் மட்டும் கேட்டார். "தமிழை தெலுங்கன் வளர்ப்பது போல் யாராவது அதை வளர்த்து எடுப்பார்கள்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மை என்னவென்றால், பெங்களூர் வந்து அடுத்த லெவல் போக வேண்டும் என்று தான் என் விருப்பம். சென்னை மாநில லெவல் என்றால் பெங்களூர் தேசிய லெவல். இங்கே தான் ஒருத்தன், ஹிந்தியில் குறும்படம் எடுக்கிறான், ஒருத்தன் ஆங்கிலத்தில் எடுக்கிறான், ஒருத்தன் கன்னடத்தில் எடுக்கிறான். நான் இங்கு வந்து ஒரு ஹிந்தி, ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். [அதெல்லாம் யூட்யூபில் வராது!] சென்னை என்ன ஒரு ஆறு மணி நேரம் தானே, வந்துட்டு போனால் போகிறது. என்ன நான் சொல்றது? சோ, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு போல் கர்நாடகமும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பாப்போம்.

அடிக்கடி சந்திக்க முயற்சி பண்றேன், இல்லைனா அடுத்த வருஷம் பாக்கலாம்...

இன்னொரு பால்வெளியில்
நம் சூரியனின் பெயர் நட்சத்திரம்
தான் இல்லையா?



சில பெண்களுக்கு
தாங்கள் "பெரிய" பெண்கள்
என்று நினைப்பு!



முகம் புதைந்து அழுகிறேன்
சோகத்தில் ஒரு சுகம்.
சோகத்தில் என்ன சுகம் வேண்டி இருக்கிறது?



பரஸ்பர அன்பில் நெகிழ்ந்தேன்
பார்வையை கண்ணீர் மறைக்க
உலகம் தெளிகிறது



"சடசடவென்று" வரியை ஆரம்பிக்க வேண்டும்
"மடமடவென்று" எழுதி முடித்து விடலாம் தான்!
வழக்கமான இரட்டைக் கிளவி கூடாது;
இது அடுக்குமா? ஐயோ ஐயோ!!

சத்திரத்தில் கிடக்க வேண்டும். வானம் இருட்டிக் கொண்டு வருகிறது. சேலை நுனி சிவப்பாய், இல்லை கருஞ் சிவப்பாய் அப்படியே பரப்பிக் கொண்டே ஓடுகிறாள், சினிமாவில் கனவுக் காட்சியில் ஓடுவதை போல...ஒரு நீரோடை ஓடுகிறது. எங்கும் யவ்வனம். அமைதி. சாந்தி. என் கண்களை மூடி ரசிக்கிறேன். காற்று என் முகத்தில் அறைகிறது. தூரத்தில் ஒரு யானை தண்ணீர் குடிக்கிறது. மனதில் தோன்றுவதை நான் அப்படியே எழுதவில்லை, இங்கு எழுதக் கூடியதை மட்டும் எழுதுகிறேன் என்று தெரிகிறது. மீண்டும் மீண்டும் மனதில் முலைகள் தெரிகிறது. நல்ல ஓங்கு தாங்கான முலைகள். முகம் தெரியவில்லை. வானத்தின் நீலம் தண்ணீரில் தெறிக்கிறது. மீன்கள் துள்ளி ஓடுகின்றன. ஓடையின் சத்தம் ரம்மியமாய் இருக்கிறது. நான் ஒரு கட்டில் தான் உட்கார்ந்திருக்கிறேன். கருப்பு சேலை உடுத்திய பெண். சிவந்த பொட்டு நெற்றியில் இட்டு என்னை பார்த்து சிரிக்கிறாள். அவள் ஏனோ சானா கானை போல் இருக்கிறாள். சானாவை ஏன் நினைத்தோம் என்று நினைக்கும்போது வித்யா பாலன் தோன்றி மறைகிறார். ஒரு ஆணின் மனம் என்ன நினைக்கிறது என்று ஆராய்ந்தால் அதில் முக்கால்வாசி பெண்களின் ஞாபகம் தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

திடீரென்று மேல் சொன்ன அத்தனையும் ஒரு சினிமா படம் போல் திரைக்குள் போய் விடுகிறது. ஒரு திரையரங்கு தெரிகிறது. மக்கள் மெய் மறந்து இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கே என்று தேடுகிறேன். யாரோ ஆர்டர் செய்த தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு ஒருவன் இருட்டுக்குள் தட்டுத் தடுமாறி வருகிறான். திடீரென்று சென்னையின் முக்கியமான சாலை தெரிகிறது. எல்.ஐ.சி. பில்டிங் தானே அது? எத்தனை வாகனங்கள். விர் விர்ரென்று போகின்றன. எதிரில் உள்ள கட்டிடத்தில் வாழை இலை போல் உள்ள ஒன்று மயில் தோகை போல் விரிந்து பரந்திருக்கிறது. மயில் என்றதும் நேற்று செய்தித்தாளில் படித்த மயில்கள் இறந்த செய்தி ஞாபகம் வருகிறது. மூளையின் திறனை நினைத்து வியக்கிறேன். எப்படி முடிச்சுப் போடுகிறது ஒவ்வொரு ஞாபகத்திற்கும். கருப்பு நிறப் பெட்டியும், சைதாப்பேட்டையும் தெரிகிறது. அங்கு ஆட்கள் சாலையை கடக்கிறார்கள். அருகில் ஹெல்மட் அணிந்த ஒருவன் கிளம்பத் தயாராயிருக்கிறான். இவன் எங்கு போய்க் கொண்டிருப்பான்? இவன் கதை என்ன? எத்தனை மனிதர்கள், எத்தனை வாழ்க்கை? எத்தனை கதைகள்? யார் இவர்கள்? இந்தக் கணத்தில் இவர்களுடன் நான் இருக்க எது என்னை விதித்தது? உளறாதே என்கிறது மனம்.

ராஜ்பவன் வரை வந்து விட்டேன். அந்த கேட்டை தாண்டி என்ன ஒரு அமைதி. இரு காவலர்கள் காவல் காத்து நிற்கிறார்கள். ஒரு இலக்கில்லாத பயணம் போல உள் செல்கிறது ஒரு தார் சாலை. ஒரு குப்பை இல்லை. கவர்னர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? கவர்னர் என்றதும் ஏன் தலைப்பாகை போட்ட ராதாகிருஷ்ணன் ஞாபகம் வருகிறார். ரோசைய்யாவை ஞாபகப்படுத்திக் கொண்டேன். வழுக்கை தலை, வயதான ஆள். குர்தா, வேஷ்டியில் மெல்ல படியிறங்குவது போல்! மான்கள் அவரை வழி மறிக்கவில்லை தான், மறித்தால் எப்படி இருக்கும்? மான்கள் விளையாடும் ஒரு பெரிய பங்களாவில் தனக்கு வாழ்க்கை வாய்த்திருப்பதை நினைத்து அவர் என்றாவது மகிழ்ந்திருப்பாரா? அத்தனை ரசனை உள்ளதாய் இருக்குமா அவர் வாழ்க்கை? புள்ளி மான்கள் என்ன அழகு!

"ஒரு டீக்கடையை" நினைத்துப் பார்க்கிறாயா என்று ஒரு கோடு காட்டி விட்டு மேலும் தொடர்கிறது மனம். மாஸ்டர் டீயை உயர உயர அத்துகிறார். ஜனங்கள் சாலையை வெறித்தபடி, வாழ்க்கையை வெறுத்தபடி [இந்த வாக்கியத்தை என்னுள் இருந்த அறிவுஜீவி எழுத்தாளன் கோர்த்துக் கொள்கிறான்!] டீ குடிக்கிறார்கள். வாகங்களின் இரைச்சல், புகை...அப்பப்பா..என்ன நகரம் இது? நரகம்! மனம் மூனாரை கற்பனை செய்கிறது. எத்தனை வேறுபாடு. பச்சை கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. அந்த அழகை ரசிப்பதற்குள், ஒரு தேயிலை செடியின் கீழ் யாரோ குடித்துப் போட்ட பிளாஸ்டிக் கப் கண்ணில் படுகிறது. முகம் வாடுகிறது. பெரியவர்களை மதிப்பது நல்ல பழக்கம். அப்படி என்றால் இயற்கை எவ்வளவு பெரியவர்? ஏன் அவரை நாம் மதிப்பதே இல்லை? திடீரென்று அங்கிருக்கும் கட்டடங்கள் சரிந்து விழுகிறதை நான் எழுதப் போவதில்லை. உத்தரகண்டில் நடந்ததை பார்த்து விட்டு காப்பி அடித்து விட்டான் என்று சொல்வார்கள்.

அடுத்து நினைப்பதை அடுத்த பாராவிற்குள் எழுத வேண்டும் என்று மனம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைப்படி...கட்டளைப்படி நடக்க வேண்டும், தொட்டனைப்பதே எனக்குப் போதும். ஒரு இறைவன் வரைந்த கதை..புதிய கவிதை..புதிய கவிதை..கதை முடிவும் தெரியவில்லை! ஆஅ.........ஒரு கிளியின் தனிமையிலே இரு கிளியின் உறவு, உறவு உறவு உறவு உறவு...ஏசுதாசுடன் சித்ராவின் குரல் மனதில் கேட்கிறது. அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் இப்போது பார்த்தால் சிரிப்பாய் இருக்கிறது. இந்த அளவு கற்பனை வறட்சி உள்ளவர்களுக்கா இளையராஜா அப்படி பாட்டு போட்டுக் கொடுத்தார்? மணிரத்னம் தான் கொஞ்சம் ஜஸ்டிஃபை செய்தார். இதை தமிழில் எப்படி எழுதுவது? ஜஸ்டிஃபை செய்தார் என்பதை? எவ்வளவு யோசித்தும் வரவில்லை. நம் தாய்மொழியில் எழுதுவதற்கு நமக்கு வரமாட்டேன் என்கிறது!

தாய்மொழி என்றதும் பள்ளியில் படித்த நிறைய செய்யுள் உனக்கு இன்னும் மனப்பாடமாய் தெரியுமே, என்று மனம் ஞாபகப்படுத்துகிறது. அன்று அப்படி பீற்றிக் கொண்டு இரண்டு வரி பாடியதும் மறந்திருந்தது தெரிந்தது. பாதகமில்லை. மீண்டும் முயற்சிக்கலாம். அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி, இடையில் ஏதோ வருமே...[கடைசியில் ஞாபகம் வந்தது, எங்கும் பிரகாசமாய்] தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை...மறந்து விட்டது. இது ஏழாவதில் வந்த செய்யுள். மெய்தான் அரும்பி விதி விதிர்த்து உன் விரையார் கழர்க்கென் கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய் தான் போற்றி சய சய போற்றி என்னும் உடையாய் என்னை கண்டு கொள்ளே! இல்லை, சொதப்புகிறேன். எட்டாவது பாடமும் மறந்து விட்டது. எல்லாம் மறந்து விட்டது. எப்போது மறந்தது? இந்த செய்யுள்களை ஞாபக அடுக்கிலிருந்து கழட்டி விடலாம் என்று மூளை எப்படி முடிவெடுத்தது? எனக்குத் தேவைப்படாது என்று அதற்கு எப்படித் தெரியும்? புரியவில்லை.

என்னங்க மண்டை காய்ஞ்சுருச்சா? நிறுத்திட்டேன். ஒண்ணுமில்லை. கண்ணை மூடி கொஞ்சம் சிந்திச்ச நம்ம மனம் எவ்வளவு யோசிக்குது? அதை ஆவணப்படுத்தினா எப்படி இருக்கும்னு ஒரு விபரீத ஆசை. மனம் யோசிப்பதை எழுதினேனா, அல்லது இதை எல்லாம் யோசி என்று மறைமுகமா அதை தூண்டினேனா தெரியவில்லை. இன்னும் ராவா வரும்னு தான் நெனைச்சேன். இன்னொரு தடவை இரக்கமேயில்லாமல் கத்தரிக்காமல், வெட்டி ஒட்டாமல் எழுதி பாக்கணும். முதலில் எனக்கு இந்த நினைப்பு 2005ல் வந்தது. பலமுறை எழுதி எழுதி பார்த்தேன். இப்போது தான் ஒரு கோர்வையாய் வந்திருப்பது போல் தோன்றுகிறது. பரவாயில்லை, வெட்டி ஒட்டி எழுதினாலும், என் மனம் அத்தனை அசிங்கமாய் எதையும் யோசிக்கவில்லை. ஒருவேளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து கொஞ்சம் பொறுப்புடன் அது செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்போ என் மனம் என்ன சொல்லுதுன்னா...முன்பு வலையுலகில் மற்றவருக்கு அழைப்பு விடுத்து விளையாடுவது போல் [அப்படி எந்த விளையாட்டும் இப்போது நடப்பதில்லையா?] இதை விளையாடி பார்க்கலாமேன்னுது! என்ன சொல்றீங்க? உங்க மனம் என்ன சொல்லுதுன்னு எழுதி பாருங்களேன்! சுவாரஸ்யமா இருக்காது? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி யாரவது முயற்சி பண்ணியிருக்காங்களா?
நான் அலுவலகம் விட்டு வீடு சேர்வதற்கும்
மறுபடியும் வீடு விட்டு அலுவலகம் சேர்வதற்கும்
இடைப்பட்ட நேரத்தில் - சாலையில்
சில நாய்கள் அடிபட்டு சாகின்றன

அடிபட்டு இறந்த நாயை
எந்த நாயும் அடக்கம் செய்வதில்லை

நான் பார்க்கும் சமயங்களில்
பெரும்பாலும் அதில்
நாயின் அடையாளங்கள் மறைந்து - ஒரு
கந்தல் துணியாய் என் வண்டிச் சக்கரத்தில்
சிக்கி வழுக்கி விடுகிறது..

திரும்பிப்பார்த்து, அதில் சக்கரம் ஏற்றியதை
நினைத்து மனம் அசூசை கொள்கிறது

இரண்டொரு நாளில் அது
சாலையோடு சாலையாகி
மறைந்து விடுகிறது

இப்போது நான் சாலையெங்கும்
மறைந்து கிடக்கும் இறந்த நாய்களை
கடந்தபடியே வீடு சேர்கிறேன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சவ ஊர்வலங்களில் நடக்கும் அராஜகங்களை பார்த்தால்
ஒருவேளை, இறந்தவர் நல்லவராகவே இருந்தாலும்
அவர் வாழ்நாள் முழுதும் சேர்த்த நல்லபெயரை 
இந்த ஒரு ஊர்வலம் அழித்து விடுமோ என்று தோன்றுகிறது!

------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எப்படி பிறந்த பிறகு
பிறந்து விட்டேனோ
அதே போல்
இறந்த பிறகு
இறந்து விடுவேன்  

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழும் போது இறந்து இருந்தால்
இறந்த பிறகு வாழ்வதெப்படி?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இறந்த பிறகு என்ன நடக்கும்?
என்னிடம் கேளுங்கள்
நான் இறந்த பிறகு 
வெண்சங்கு
மயிலிறகு
மோனநிலை
திவ்யம்!
------------------------------------------------------------
பச்சைப்புல்
பரந்த வானம்
பசிக்குச் சோறு
போதும்!
------------------------------------------------------------
ஒரே சத்தம்
ஒரே அமைதி
வழக்கமான இரவு
வாசலில் நிலவு
------------------------------------------------------------
தொட முடியாத வானம்
கால் நனைக்காத நீர்
என்ன வேடிக்கை
------------------------------------------------------------
புல்லில் பனி
வயிற்றில் பசி
அவரவர் எண்ணம்
------------------------------------------------------------
இந்தக் காற்று
எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
------------------------------------------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை காசு!
 

எல்லா சிறந்த நகைச்சுவையும் ஒரு கட்டத்தில்
இதற்குத் தானா அப்படிச் சிரித்தோம்
என்று ஆகி விடுகிறது!
 ------------------------------------------------------
ரொம்ப நாட்களாய் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்று, உங்களை கேட்கிறேன்.
தனியாய் ஒரு பெண் மட்டும்
ஒரு ஹோட்டலில் அமர்ந்து
உணவருந்துவதை பார்த்திருக்கிறீர்களா?
[KFC, Mc Donalds போன்ற இடங்களைத் தவிர்த்து!] 
 -----------------------------------------------------
பெண்கள் தினத்துக்கு அலுவலகத்தில் ஸ்டால் போட்டு
சேலை, சுடிதார், தோடு, வளையல், செயின் என்று
கொள்ளையடித்தார்கள்.
 
நூற்றி முப்பது ரூபாய்க்கு நான் வாங்கிய தோடுகளும், வளையலும்
வனவாசத்தில் சீதா தேவியார் உபயோகப்படுத்தியது போலிருந்தது!
-------------------------------------------------------------
கணையாழியின் கடைசி பக்கங்கள் படிக்கும்போது
சுஜாதாவின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது!
அதே சமயம், அவர் மனைவியிடம் 
எவ்வளவு நேரம் பேசியிருப்பார் 
என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை!!

இன்றைய வலைப்பதிவை பார்க்கும் முன், என் முந்தைய வலைப்பதிவை பற்றி ஒரு updated கருத்து:

தெய்வத்திருமகள் படத்தை நான் ஆஹா ஹோஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டேன். அது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி என்ற உண்மை தெரியாமல்! ராம் பின்னூட்டம்ல சொன்னதும் தான் வலையில் தேடி பார்த்தேன். விக்ரம் சிகை அலங்காரத்திலிருந்து அவர் சிரிப்பு வரை அப்படியே இருக்கிறது! ஏன் இதில் ஒரிஜினல் இல்லையா என்று நீங்கள் கேட்டால் இருக்கிறது, ஆனாலும் மூலம் நகல் தானே! வெறுத்து விட்டேன். படத்தில் ஒரு வரி கூட இதை போடவில்லை, தொலைக்காட்சியில் வண்டி வண்டியாய் படத்தை பற்றி பேசுகிறார்கள், இதைப் பற்றி சொல்லவில்லை! மிஷ்கினுக்கு அடுத்து இப்போது இயக்குனர் விஜய்! ஆங்கில படங்கள், உலக படங்கள் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும், மற்றவர்களுக்கு இது ஒரு புது படம் தானே என்று நினைப்பது எத்தனை திருட்டுத்தனம்?

திருட்டு வீசிடியில் படத்தை பார்க்காதீர்கள் என்று எனக்கு சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நிற்க [எந்திரிச்சி நிக்கத் தேவையில்லை!]

கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்! BACK TO THE STORY!! இன்று கொசுக்கடி தாங்க முடியாமல் அதைப் பற்றி நறுக்கென்று ஒரு கடியை பேஸ் புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாம் என்று ஆரம்பித்தேன். அது வலைபதிவு வரை வந்து விட்டது. எனக்கு சந்தோஷம், உங்களுக்கு (சங்கடம்?)

சங்ககாலத்தை போல் இன்றும் வீரனின் இடையில்
வாள் வைக்கும் வழக்கம் இருந்தால்
இடையின் மற்றொரு பாகத்தில் 
இன்னொரு உறை வைக்க வேண்டி இருக்கும்...
கொசு பேட் வைக்க!!

எனக்கும் சங்க கால வீரனுக்கும்
நிறைய வித்தியாசமில்லை!
இரவில் பேட் கொண்டு நான் 
கொசு அடிக்கும் அழகைப் பார்த்தால்
உங்களுக்கு புரியும்!!

பறக்கும் படையில் எதிரிகள்
காலாட்படையின் வீரன் நான்
வாள் வீசிப் பயன் என்ன?
சரண் அடைந்தேன் கொசுவே சரணம்!

எப்படியும் கொசுவை அழிக்க முடியப்போவதில்லை - பதிலாக 
எதாவது ஆராய்ச்சி செய்து அதன் எடையை கூட்டி விட்டால்
அது நம் கை காலில் கடிக்க அமரும் போது அதன் பாரம் தாங்காமல்
தள்ளி விடவாவது ஏதுவாய் இருக்கும்!!

பிள்ளையார் எறும்பும் அசைவமா என்ன?
இறந்த கொசுவை தூக்கிக் கொண்டு ஓடுகிறேதே!

படுக்கையின் மேல் கொசு வலை விரித்து 
விளக்கணைத்துப் படுத்தேன்...காலையில் 
அதிக ரத்தம் குடித்து மயங்கிய நிலையில் 
தப்பிக்க வழியில்லாமல் கொசுக்கள் 
அசந்து தூங்கி கொண்டிருந்தன!
உன் பேர் என்ன?
சொல்லியது குழந்தை.
உன் பேர் என்ன என்றது என்னை பார்த்து!
சொன்னேன்.
வண்டியில வந்தீங்களா கார்ல வந்தீங்களா என்றது!
கார்ல தான் என்றேன்.
பேச்சை வளர்ப்பதற்காக, உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?
என்று கேட்டேன்.
ஓ! நல்லா தெரியும் என்றது.
உனக்கு காலே எட்டாதே, அப்புறம் எப்படி ஓட்டுவே என்றேன்.
செருப்பு போட்டுட்டு தான் என்றது!

ரைம்ஸ் ஒன்று சொல் என்றேன்...
தெரியாது என்றது குழந்தை!
டீவியில் ரஜினியைக் காட்டி யார் என்று கேட்டேன்,
அதற்கும் தெரியாது என்றது குழந்தை!!
இந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் தெரியாது
என்று தான் சொல்லும் என்று நான் என்னை
சமாதானம் செய்து கொண்டேன்

முக்கியமான பொருட்களை எங்கே வைக்கிறேன்
என்று மறக்காமல் இருக்க அட்டவணை தயாரிக்கிறேன்
அதை எங்கே வைப்பது?

ஆன் டியூட்டி போட்டு ஒரு அரசு வாகனம் என்னை கடந்து சென்றது...
வண்டியில்(லும்) எல்லோரும்
தூங்கி கொண்டிருந்தார்கள் :-)

காலில் மாவுக் கட்டு போட்டுக் கொண்டு
வண்டியின் பின்னால் அமர்ந்து செல்லும்
அந்தக் குழந்தை - தன் அப்பாவை 
சற்று கூடுதலாய் இறுக்கிப் பிடித்துச் செல்கிறது!

நீ ஏன்க்கா இந்த தொழிலுக்கு வந்தே?

ஆரம்பிச்சிட்டியா நீயும்?

சும்மா சொல்லு

எல்லாம் ஒரு சோஷியல் சர்வீஸ் தான்!

எது? இதுவா? அய்யே! இதுக்கு பேரு சோஷியல் சர்வீசா?

பின்ன நீ செய்றதா சோஷியல் சர்வீசு?

நானா சொன்னேன், நீ தான் சொன்னே?

ஆமா, நான் சொன்னேன். சொல்றேன். அதுக்கு என்ன?

இது எப்படி சோஷியல் சர்வீஸ்?

என்ன நீ புஸ்தகம் கிஸ்தகம் படிக்கிறதில்லையா?

இது சோஷியல் சர்வீஸ்னு எந்த புஸ்தகத்துல போட்ருக்கான்?

எங்களை மாதிரி பொம்பளைங்க இருக்குறதால தான் இன்னைக்கு குடும்ப பெண்கள் மிச்சமிருக்காங்க! அதை தெரிஞ்சுக்கோ நீ!

இது உனக்கே ஓவரா இல்ல?

அட யார்ரா இவன்? சரி, எங்க சர்வீசே இல்லைன்னு வச்சுக்கோ, 15 வயசுல வயசுக்கு வந்த நீ 35 வயசாகியும் ஒண்ணுமே பண்ணலைன்னா வெறி புடிச்சி போய் ரோட்ல போற பொண்ணை கை புடிச்சி இழுப்பியா மாட்டியா? எங்களை மாதிரி பொண்ணுங்க இருக்கும்போதே உங்க அட்டூழியம் சீரழியுது, பேப்பர் படிக்கலை? இதுல நாங்க இல்லைன்னா இந்த சொசைட்டி என்ன கதிக்கு ஆகும்? ஒரு இத்துப் போன டையையும், அந்த பாழடைஞ்சு போன மேன்சனையும் கட்டிட்டு அழற? உன் தங்கச்சிங்க 3 பேருக்கு உன் மெடிக்கல் ரெப் வேலையுல சம்பாதிச்சி பவுன் சேத்து கட்டிக் கொடுத்து கல்யாணம் பண்ண நீ இன்னொரு ஜென்மம் தான் எடுக்கணும்! இவ்வளவு கேள்வி கேக்குற அப்போ நீ ஏன்டா இங்கே வர்றேன்னு நான் உன்னை கேக்க முடியாது, ஏன்னா நீ வந்தா தான் என் பொழப்பு ஓடும்! அதுவுமில்லாம உன்ன சொல்லி குத்தமில்லை..., உனக்கு பசி! பசிச்சா சாப்டு தான் ஆகணும்? உங்களுக்கு பசிக்கிற வரை நாங்க பரிமாறிட்டே இருக்க வேண்டியது தானே?

எம்மாடி, என்னா மெசேஜ்! உன்கூட படுத்தவங்ககிட்ட துட்டு மட்டும் வாங்காம அவங்களோட உலக அறிவையும் வாங்கி இருப்பே போல! சூப்பர்! ஆமா, நீ ஏன் அரசியல்ல குதிக்கக் கூடாது? பெரிய ஆள் ஆயிடுவே!

பெரிய ஆள் ஆகி?

உன் பொது நலத் தொண்டை நல்லா செய்யலாம்ல?

நான் காந்தி மாதிரி, பெரியார் மாதிரி பதவியில இல்லாம என் சேவையை தொடர்ந்துக்குறேன்!

நல்லா வேலை இதெல்லாம் கேக்க அவங்க உயிரோட இல்லை! உன்னோட ஜெனரல் நாலேஜ் என்னால தாங்க முடியலை! என்ன படிச்சிருக்கே நீ?

பத்தாங் கிளாஸ்ல எங்க ஊர்ல நான் தான் பஸ்ட் மார்க் தெரியுமா?

அடங்க கொக்கமக்கா! அப்படியே படிச்சி டாக்டர் இஞ்சினியர்னு ஆயிருக்கலாம்ல? கை நிறையா சம்பாதிச்சிருக்கலாம்!

கை நெறையவா? ஹஹஹா, இப்போ தான் உடம்பு நெறைய சம்பாதிக்கிறேனே! உனக்கு புடிக்கலையா?

இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! என்ஜினீயர், டாக்டர், வக்கீல் இவங்க சம்பாதிக்கிறதும், நீ சம்பாதிக்கிறதும் ஒண்ணா?

அவங்களுக்கு நான் என்னடா குறைஞ்சு போயிட்டேன். சொல்ல போனா அவங்களை விட நான் எவ்வளவோ மேல்!

நீ ஃபிமேல் ஆச்சே!

அடச்சீ சொல்றதை கேளு! இஞ்சினியருங்க பாலம் கட்றேன், அபார்ட்மென்ட் கட்றேன்னு அரைகுறையா கட்டி பணத்தை கொள்ளை அடிச்சி அநியாயம் பண்றாங்க! டாக்டருங்க ஒரு கிட்னி சரி செஞ்சா இன்னொரு கிட்னியை டிப்ஸா எடுத்துக்குறானுங்க! அப்புறம் என்ன சொன்ன? வக்கீலா? இப்போ எவன்டா வக்கீளுகெல்லாம் படிக்கிறான்? நான் என்ன சொல்ல வர்றேன்னா, அவங்களை மாதிரி கஸ்டமர்களை நாங்க ஏமாத்துறதில்லை! கையில காசு, வாயில தோசை! ஆமா... இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ, என்ஜினீயர் அறிவை விக்கிறான், வக்கீல் வாயை விக்கிறான். நான் என் உடம்பை விக்கிறேன்! அவனவன்கிட்ட இருக்குறதை அவனவன் விக்கிறான்! அவங்க எல்லாரையும் விட நாங்க சரியா விக்கிறோம்! பாத்துக்க...இவங்களோட எல்லாம் என்னை சேத்து வச்சி இன்சல்ட் பண்ணாத! சொல்லிட்டேன்.

சரி ஒத்துக்குறேன், உன் தொழிலை பத்தி இவ்வளவு பெருமையா பேசுறியே எந்த பொண்ணாவது இந்த தொழிலை புடிச்சி செய்வாளா? பொண்ணுங்களுக்கு லவ் தான் முக்கியம், அப்புறம் தான் மத்ததெல்லாம் அப்படீன்னு பேசிக்கிறாங்க! எப்படி மடக்குனேன் பாத்தியா?

அடடடா..அறிவு வழியுது தொடச்சுக்கோ! நீ சொல்றது என்னமோ கரெக்ட் தான்! எந்தப் பொம்பளையும் இந்த தொழிலை புடிச்சி செய்ய மாட்டா! ஆனா, நீயே சொல்லு இன்னைக்கு எத்தனை என்ஜினீயர் புடிச்சி போய் என்ஜினீயரா இருக்கான் இங்கே? உன்னையே எடுத்துக்கோ, கொளுத்துற வெயில்ல டையை போட்டுட்டு நாயா சுத்துறியே, உனக்கு புடிச்சா நீ செய்றே? எத்தனை பேருக்கு புடிச்சது கெடைக்குது? கெடைச்சதை எடுத்துக்க வேண்டியது தான்! அதானே வாழ்க்கை!

பிலாசபி ஓவரா இருக்கே! இதுக்கு பதில் சொல்லு, நீ செய்ற தொழில் சட்டப்படி குற்றமாச்சே? இதுக்கு என்ன சொல்லப் போறே?

சட்டமா? அட ஏன்டா நீ ஒரு வெவரம் புரியாதவன்! இந்தா புடி, இது என்னோட வக்கீல் கஸ்டமர் எனக்கு சொன்னது!

வக்கீலே கஸ்டமரா? கஷ்டம்!! சொல்லு..சொல்லு!!

ஒரு பொண்ணுக்கு 18 வயசு ஆனா அவளுக்கு புடிச்சவன் கூட போகலாம்! இது சட்டம். ஆனா அவளை பெத்தவங்க, எங்க பொண்ணுக்கு நாளைக்கு தான் 18 வயசு ஆகுது இன்னைக்கு இவ மைனர் தான்னு அவளை தர தரன்னு இழுத்துட்டு போகலாம். சட்டப்படி அது சரி! ஆனா கொஞ்சம் யோசிச்சி பாரு; இன்னைக்கு அது ஓடி வந்தது தப்பு, நாளைக்கு ஓடி வந்திருந்தா அது சரி! எப்படி இருக்கு உங்க சட்டம்?

சட்டம் ஒரு இருட்டரைன்னு எனக்கு இன்னைக்குத் தான்க்கா வெளங்கியிருக்கு! ரைட்டு, உங்களால தான் எய்ட்ஸ் வந்துச்சு! அது உங்க சர்வீஸ்ல ஒண்ணுன்னு வச்சுக்கலாமா?

வச்சுக்கோ! உன்னை யாரு வேணாம்னா? கண்ணு, ரோட்ல ஆக்சிடெண்ட்ல டெய்லி நூறு பேர் சாவுறான், அதுக்காக ரோட்ல போகாமயா இருக்கோம்? ஹெல்மட் போட்டுட்டு வண்டியை ஒட்டு! அப்போ கூட சில அடிகள் படத் தான் செய்யும்! அவ்வளவு பயம் இருந்தா ஒருத்தியோட போதும்னு பொத்திட்டு இருக்க வேண்டியது தானே? ஏன் ஊர் மேயிறீங்க? அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னா , மக்கள் தொகையை கொறைக்குறதுக்கு நாங்க கவர்மெண்டுக்கு செய்ற சர்வீஸ்னு வச்சுக்கோயேன்!!

யப்பா, நீ கட்சி ஆரம்பிச்ச எங்கேயோ போயிடுவே! என்னாமா பேசுற நீ?! அப்போ நீ செய்றது தப்பே இல்லைன்ற?

தப்பேயில்லை, இப்போ எல்லாம் கால் கேள்ஸ் மாதிரி கால் பாய்சே இருக்காங்க, தெரியுமா? உங்க ஜென்மத்துக்கு தான் லவ்வே தேவையில்லையே! நீ தான் வேலையே புடிச்சி செய்யனும்னு சொல்றியே? செய்றியா? உனக்கு ஒரு சான்ஸ் வாங்கி தர்றேன்!

ஆள விடு ஆத்தா நீ!

ஹஹஹா..வந்துட்டான் பேட்டி எடுக்க!!