என் இனிய தமிழ் மக்களே!!

computer யுடன் program பேசி வந்த இந்த ப்ரதீப், இன்று உங்களுடன் BLOG ல் பேச வருகிறான். [ஐய்யயயோ..ஏன் எல்லாரும் இப்படி ஒட்றீங்க?]

நான் யார்? [dei pradeep, பெரிய பெரிய அறிஞர்கள் கேள்வி எல்லாம் assaulta கேக்குறே! எப்பிட்றா?]

1. என் பெயர் ப்ரதீப் குமார்.
2. நான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த "மதுரை" யில் பிறந்தேன்.
3. எனக்கு முன் பிறந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். 1978, நவம்பர் மாதம் 16ம் நாள், குரு வாரத்தில் ஒரு ஒளிக் கீற்று பூமியில் பாய்ந்தது. அது ஏன் என்று
யாருக்கும் புரியவில்லை! அன்று தான் நான் பிறந்தேன்! அந்த ஒளி சாட்ஷாத் நான் பிறந்ததால் தான்! ஹிஹி..[இதெல்லாம் ரொம்ப 'over' என்று நீங்கள் கதறுவது எனக்குத் தெரிகிறது. I JUST DONT CARE! ஹிஹி..ஹிஹி]
4. படிப்பின் முதல் எதிரியான 'சினிமா' தான் எனக்கு ஆருயிர் நண்பன்!! அதனாலோ என்னவோ படிப்புக்கு என்னை பிடிக்கவில்லை! படிப்பில் நான் மகா மட்டம்!
[பெறுமையா சொல்லிக்கோ!!]
5. கணக்கில் பல பேர் புலி! ஆனால் கணக்கு தான் எனக்கு புலி, சிங்கம், கரடி எல்லாம்...
6. B.Sc., (Physics 1995-1998) - Sourashtra College, Madurai & M.Sc., (Computer Science 1998-2000) - M K U College, Madurai. படித்து முடித்தேன். [யாரு? நீ...படிச்சே?... மெய்யாலுமா?]
7. இன்று 'Satyam Computers, Bangalore', Software Engineer! [பாவம் Satyam!!]
8. நான் அதிகம் கனவு காண்பவன்!

இது தான் என் கதை! [புதிய பறவை யில் சிவாஜி சொல்வது போல் சொல்லவும்! இப்படி தான் அடிக்கடி நான் எதாவது எடுத்து விடுவேன்..ஹிஹி..]

எனக்கு இந்த BLOG யுவது மிகவும் பிடித்திருக்கிறது. நான் தமிழ் மட்டுமன்றி English லும் சில கொலைகள் செய்துள்ளேன்! ஹிஹி.. insterested can go
here