பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!!!

இந்த வரி தான் எனக்கு இப்போது மனதெங்கும் வியாபித்திருக்கிறது! ஏன் என்று நீங்கள் கேட்டு நான் காரணம் சொன்னால் உங்களில் சிலர் என்னை அடிக்க வரக்கூடும். காரணம் என்னவென்றால், அலுவலகத்தில் அடம் பிடித்து அவசர அவசரமாய் ஒரு அமெரிக்கப் பயணம்! 3 வருடத்திற்கு முன் நான் இங்கு வந்த மூன்று மாதங்களில் சுற்றிப் பார்த்தது 9 மாநிலங்கள். சத்தியமாய் டூரிஸ்ட் விசாவில் வரவில்லை. வேலை செய்யத் தான் வந்தேன். இனிமேல் யார் இவ்வளவு தூரம் வருவது என்ற நினைப்பில் ஒரேடியாய் சுற்றிப் பார்த்து விட்டேன். என்னுடைய அமெரிக்க கட்டுரைகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மறந்தவர்கள் தலையில் கொட்டிக் கொண்டே [உங்க தலையிலங்கானும்] இங்கு க்ளிக்கவும். என்ன செய்வது விதி வலியது என்பதை விட வீடு கட்ட வாங்கிய கடன் வலியதாய் இருக்கிறது. இந்த அழகில் ஒரு நாள் பச்சை கலர் சட்டை, ஒரு நாள் மஞ்சள் கலர் சட்டை போட்டவனை எல்லாம் வேலைய விட்டு தூக்கு என்ற ரேஞ்சில் ஐ.டி. உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. [ஆடிய ஆட்டம் என்ன?] காற்றுள்ள போது தானே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று கிளம்பி வந்தாகிவிட்டது!

போன முறை குறுகிய கால விசாவில் வந்ததால் ஹாயாக ஹோட்டலில் தங்கி விட்டு ஊர் சுற்ற சரியாய் இருந்தது. இந்த முறை கொஞ்சம் நீண்ட கால விசாவில் வந்துள்ளதால் மண்டை காய்கிறது. அமெரிக்கா ஒரு பெரிய இயந்திரம். மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் நட்டை திருப்பிக் கொண்டே அந்த சக்கரத்தில் மாட்டிக் கொள்வாரே, அது போல்! நீங்கள் அந்த இயந்திர கதியில் எல்லோரைப் போல சகஜமாய் சுற்ற ஆரம்பிப்பது வரை நரகம்! அதிலும் நீங்கள் அந்த இடத்தில் தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான், அன்பே சிவம் மாதவன் மாதிரி ஜோக் கேட்டால் கூட அழுகையாய் வரும்! சோ, நீங்கள் என்னை இப்போது பார்த்தால் அன்பே சிவம் மாதவனை பார்க்கத் தேவையில்லை.

தற்சமயம் நான் தனித்து இருப்பது க்ளென் ஆலென், [ரிச்மன்ட் அருகில்] விர்ஜினியா. இந்த இடத்திற்கு இன்னொரு பெயரும் இருக்கிறதாம். காதலர்களின் சொர்க்கம் என்று என்னுடன் வந்த ஒரு மேனெஜர் சொல்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள்! எல்லா மானேஜர்களும் சேர்ந்து ஒரு இளம் காதலர்களை பிரித்து [சந்தேகமே வேண்டாம்! என்னையும் என் மனைவியையும் சொன்னேன்] குண்டு கட்டாய் என்னை மட்டும் பார்சல் செய்து அனுப்பி விட்டு இப்படி குசும்பு செய்வது அழகாமோ?

தமிழ் கூறும் நல்லுலகில் நிறைய பேர் இங்கு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நல்ல சமைக்கக் கூடிய, ஒரு பெரிய காரில் தன்னந்தனியே போய் கொண்டிருக்கும் [ரோட்டில் நான் மட்டும் நடக்க பயம்மா இருக்குப்பா!] ஒரு பேச்சிலர் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இந்த வாரம் நான் ஒரு புது வீட்டுக்கு சாராயம் காய்ச்சி கூடியேறப் போகிறேன், சாமான் செட்டு தூக்குவதற்கு, என்னை ஊர் சுற்றிக் காட்டுவதற்கும், வால் மார்ட் கூட்டிப் போவதற்கும், எந்த செல்ஃபோன் வாங்கலாம், எந்த இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கலாம் என்று வழி காட்டுவதற்கும், பணம் பத்தவில்லை என்றால் க்ரடிட் கார்ட் தேய்க்கவும் செளகரியமாய் இருக்கும். உனக்கு நான் ஏன் செய்யனும்? எக்கேடு கெட்டும் போ என்பவர்கள் மூடிக் கொண்டு போங்கள்![ஐய்யோ, சாருவை நிறைய படித்தது தப்பாகி விட்டதே!]



1948ம் ஆண்டு, பிப்ரவரி 1. மெட்ராஸ் ப்ராவின்ஸி.

மழை பெய்யும் ஒரு அடர்த்தியான இரவில் படம் தொடங்குகிறது. சிறையிலிருக்கும் வேங்கடத்தை (பிரகாஷ்ராஜை) இரண்டு நாட்களுக்காக ஒரு விசேஷ அனுமதியுடன் வெளியே அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்து ஒரு பேருந்தில் ஏற்றி காஞ்சிவரம் கொண்டு வரப் படுகிறார். அவர் பயணத்தினூடே அவரின் கடந்த காலத்தை திரைப்படம் விளக்கிச் செல்கிறது. அந்த ஊரிலேயே தேர்ந்த நெசவாளியான வேங்கடம் அன்னத்தை திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வருகிறார். தான் தன் மனைவியை பட்டுச் சேலை கட்டி கூட்டி வருவேன் என்ற அவனது வாக்கு பொய்த்து போனதை பக்கத்து வீட்டுக் கிழவி சுட்டிக் காடி கிண்டல் செய்கிறாள். அதுவே அவரின் வைராக்கியமாய் மாறி தனக்குப் பிறந்த பெண் குழந்தையை பட்டுப் புடவையுடன் தான் திருமணம் செய்து அனுப்பி வைப்பேன் என்று ஊராரின் முன்னிலையில் வாக்குறுதி அளிக்கிறார. அதைக் காப்பாற்ற அவர் படும் பாடுகளும், அதன் முடிவும் நீங்களே வெண் திரையில் காண்க [அதுவரை படம் ஓடினால்!]

அந்தக் காலத்திலேயே 800 ரூபாய் விலை போன பட்டுப் புடவைக்கு 7 ரூபாய் கூலி கொடுக்கிறார் வேங்கடத்தின் முதலாளி. "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்ற உழவர்களின் நிலையைப் போல எத்தனை விதமான புடவைகளை நெய்தாலும் ஒரு பட்டுப் புடவை என்பது ஒவ்வொரு நெசவாளியின் கனவாகவே இருந்திருக்கிறது. ஒரு நெசவாளியின் வாழ்வை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன். முன்பொரு காலத்தில் நல்ல கலை நேர்த்தியான படங்களை இவர் இயக்கியிருந்தாலும் தற்போது ஹிந்தியில் காமெடி படங்களையே இயக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு திடீரென எப்படி இப்படி ஒரு கலை தாகம் எடுத்தது என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. மிக நல்லதொரு முயற்சி என்றே சொல்ல வேண்டும்.

பிரகாஷ் ராஜ் வேங்கடமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் வழக்கமான க்ளிஷேயாகிவிடும். மனிதருக்கு கஷ்டப்பட ஒன்றுமில்லை. அநாயசமாய் செய்திருக்கிறார்.

ஷ்ரேயா அமைதியாய் அழகாய் அளவோடு வந்து போகிறார். நல்ல இயக்குநர்கள் கையில் இவர் கிடைத்தால் தமிழில் ஒரு ஸ்மிதா பாட்டில் மாதிரி ஆகி விட மாட்டார்? பார்க்கலாம்.

வழக்கமாய் தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு தங்கை என்று ஒன்று இருந்தால் அது ஒரு தருதலையை தான் கல்யாணம் செய்திருக்கும். அவன் அவளை பாடாய் படுத்துவான். கதாநாயகன் பொங்கி எழுவான். நல்ல வேளையாய் அந்தக் கஷ்டம் இங்கு இல்லை. வேங்கடத்தின் மச்சானின் கதாபாத்திரம் எந்த வித பாசாங்குமில்லாமல் மிக எதார்த்தமாய் கையாளப்பட்டிருக்கிறது. தொல்லை கொடுக்க வேண்டிய இடத்தில் தொல்லை கொடுக்கிறார். உதவ வேண்டிய நேரத்தில் சரியாய் உதவுகிறார். கழண்டு கொள்ள வேண்டிய இடத்தில் சரியாய் கழண்டு கொள்கிறார். அவரின் நடிப்பையும் பாராட்டலாம்.

படத்தில் மிகவும் பாராட்டுக்குறிய அம்சம் ஒளிப்பதிவு. திரு ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார். நான் கவனித்த வரை பெரும்பாலான ஷாட்கள் வான் நோக்கியே வைக்கப்பட்டிருந்தன. விஜய்யும் மதனும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். சில சாம்பிள்ஸ்.

மோட்டார் கார் ஒன்று முதன் முதலில் ஊருக்குள் வருகிறது.

- அது மோட்டார் கார். குதிரை இல்லாம ஓடும்.
- மோட்டார்னா?
- கண்டுபிடிச்சவன் பேரா இருக்கும். ஒருவேளை கவுண்டர், செட்டியார் மாதிரி மோட்டாரோ என்னமோ...குதிரை வண்டியை ஓட்றவன் குதிரைக்காரன் மாதிரி இதை ஓட்றவனுக்கு பேரு ட்ரைவர்காரனாம்! பட்டணத்துல இருந்து கூட்டிட்டு வர்றாங்க. மாசம் 35 ரூபாய் சம்பளம்!

கம்யுனிஸ சித்தாந்த்தினால் கவரப்பட்டு போராட்டம் நடத்தும் போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் டீ கடை ஆசாமி ஒருவர்...

புரட்சி புரட்சின்னு சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். இனிமே இவங்களுக்கு ஒரு குவளை காப்பி கூட தர மாட்டேன். காப்பி வேணும்னா கம்யுனிசத்தை கலந்து குடிக்கட்டும்!

படத்தின் இசை படத்தினோடு கலந்து செல்கிறது. அதுவே ஒரு மிகப் பெரிய விஷயம் தான். அதற்கு மேல் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிவையே எடுத்துக் கொள்வோம். இந்தப் பதிவு என்னுடைய வழக்கமான பாணியில் ஒரு விமர்சனம். ஒருவேளை நீங்கள் என் பாணியை ரசித்திருந்தாலும், இந்தப் பதிவு உங்களை அவ்வளவாகக் கவரவில்லை என்றால் அதே நிலை தான் காஞ்சிவரம் திரைப்படமும். இந்தப் படத்தில் எல்லாம் இருக்கிறது. நல்ல கதை, நல்ல நடிகர்கள், அழுத்தமான படப்பிடிப்பு, அளவான இசை...ஆனாலும் அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! என்னுடன் வந்த நண்பரும், உதிரிப்பூக்கள் மெல்ல தான் போகும், ஆனால் அதனோட பாதிப்பு அதிகம் இல்லையா என்றார். அவர் சொல்வது நியாயமாய் தோன்றினாலும், இதில் இல்லாத ஒன்று அப்படி என்ன அதில் இருந்தது என்ற கேள்விக்கு என்னக்கு விடை தெரியவில்லை. ஒரு வேளை தமிழ் சமூகத்தைப் பற்றி தெரியாத உலக திரைப்பட விழாக்களில் இந்தத் திரைப்படம் வரவேற்கப்படலாம்!

பின்குறிப்பு: என் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் (அதாவது தன் 6வது படிக்கும் மகனுடன்) இந்தப் படத்திற்கு வந்திருந்தார். அந்தப் பையனால் தாங்க முடியவில்லை. இடைவேளை போடுவதற்கு முன் விளக்குகளை போட்டதும் துள்ளிக் குதித்தான்! "என் வாழ்நாள்ல நான் பாத்த 2 மொக்கை படத்துல இதுவும் ஒன்னு" என்றான். அந்த இன்னொன்னு என்னன்னு கேட்டேன். அவன் சொன்ன பதில், திருப்பாச்சி!

இது என்ன மாதிரியான ஜெனரேஷன்!???

குழந்தையும் தெய்வமும் ஒன்று!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!!
நம் பக்கத்து வீட்டுக் குழந்தை என்னை மாமாவென்றும்
உன்னை அக்காவென்றும் அழைக்கிறது!


உன் இரு ஆட்காட்டி விரல்களால்
கொம்பு செய்து கொண்டாய்
பின்னர் இடக்கையை பின்னுக்கிழுத்து
வடக்கையில் அபிநயம் பிடித்து - அதை
உன் இதழுருகில் கொண்டு வந்து
உன் மருண்ட விழிகளை உருட்டி
இங்கும் அங்கும் துள்ளிக் குதித்து
ஒரு மான் எப்படி இருக்கும் என்று
அந்தக் குழந்தைக்கு செய்து காட்டுகிறாய்
குழந்தை தவறாய் புரிந்து கொள்கிறது
என்று எனக்குப் படுகிறது!
தாம்பரம் போற வழியில, மீனம்பாக்கத்திற்கு முன் இருக்கிற ஒரு அஞ்சலகம் போக வேண்டியிருந்தது. 2 நாளா ஒரு என்.எஸ்.சி வாங்க அலைஞ்சுட்டு இருந்தேன். நூறு ரூபாய் என்.எஸ்.சி தான் வேண்டியிருந்தது. இவ்வளவு கம்மியாவா சேவிங்க்ஸ் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்க வேணாம். இது அதுக்காக அல்ல, ஒரு ப்ராப்பர்டியின் செக்யுரிட்டி டிபாஸிட்டுக்காக! மடிப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (பஸ் ஸ்டாண்ட் மாதிரி) ஒட்டி ஒரு தம்மாதுண்டு போஸ்ட் ஆபிஸ் இருக்கிறது. போன சனிக்கிழமை காலை வழக்கம் போல் எல்லா சோம்பேறித்தனங்களையும் சுறுசுறுப்பாக முடித்து விட்டு ஒரு வழியாய் கிளம்பி ஒரு 11:30 மணியளவில் போய் சேர்ந்தேன். நூறு ரூபாய்க்கு ஒரு என்.எஸ்.சி வேணும் என்றேன். நூறு ரூபாய் என்.எஸ்.சியா? இங்கே இல்லையே சார். நீங்க வேணா கூட் ரோட்ல குமரன் தியேட்டர் பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபிஸ் போய் கேட்டுப் பாருங்க, அங்கே தான் கிடைக்கும் என்று சாவதனமாய் ரீடைரக்ட் செய்து விட்டார். வழியெல்லாம் விசாரித்து ஒரு வழியாய் போய் சேர்ந்து பார்த்தால் நான் எதிர்பார்த்த படியே ஒரு நீ...............ளமான க்யு! வழக்கம் போல் எனக்கு செம டோஸ் விழுந்தது என்னிடமிருந்து! "கொஞ்சம் சீக்கிரம் வந்து தொலைச்சா என்ன? எல்லாத்துலையும் லேட்டு".

கம்ப்யுட்டரில் ப்ரிண்ட் போட்டு கொஞ்சம் பழசாயிருந்தாலும் என்.எஸ்.சி தெளிவாய் தெரிந்தது. பொறுப்பாய் நின்றேன். நான் ஏற்கனவே சொன்னது போல் நான் எந்த இடத்தில் வரிசையில் நின்றாலும் அந்த இடத்தில் கனகச்சிதமாய் வந்து கொஞ்சம் தள்ளிக்குங்க என்று இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் செல்பவர்கள் இந்த முறை வரவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வேளை வேறு பக்கம் செல்வதற்கு அங்கு இடம் இல்லாததும் காரணமாய் இருக்கலாம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். திடீரென்று கவுண்டரில் இருந்தவர் எல்லோரிடமும் ஏதோ ஒரு பேப்பரை வாங்கிக் கொண்டார். நான் கூப்பிட்றேன் வெயிட் பண்ணுங்கோ என்றார். அட ராமா, இவங்க இல்லை எனக்கு பேப்பர் கொடுக்கனும் என்று குழம்பி கற்றது கல்லளவு கல்லாதது கவர்மெண்ட் அளவு என்பது சரியாய் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் நீங்க என்.எஸ்.சி தானே, போய் கேளுங்க என்று உந்தித் தள்ள கடைசியில் துணிந்து உள்ளே போய், கண்ணாடியை கீழ் மூக்கில் இறக்கி விட்டு பாதி கண்ணின் வழியே பார்த்தவரிடம் என்.எஸ்.சி வாங்கனும் என்றேன். அவர் சாவகாசமாய் அதுக்கு டைம் முடிஞ்சதே என்றார். ஓ, இதுக்கு டைம் எல்லாம் இருக்கா என்று யோசிக்கும் போது, 12 மணியோட முடிஞ்சுரும், நீங்க மண்டே வாங்க என்றார். மணி பார்த்தேன். 12:05! அதற்கு மேல் சார், கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க என்றெல்லாம் நான் குழையவில்லை. என் தப்பு தான்! போயிட்டு மண்டே வந்தா தான் சரி என்று நான் என்னை திட்டிக் கொண்டே வந்து விட்டேன். அதற்கு முன், சார் ஃபார்ம் ஏதாவது ஃபில் பண்ணனுமா என்றதும் அவரும் கொஞ்சமாய் உழைத்து அரதப் பழசான, இன்னைக்கோ நாளைக்கோ என்று இருந்த ஒரு மஞ்சள் தாளை எடுத்துத் தந்தார். அதில் சில சந்தேகங்களுக்கும் தெளிவாய் பதில் சொன்னார். முதலில் அரசு அலுவலகங்களில் கொடுக்கும் ஃபார்மின் தரத்தை உயர்த்த வேண்டும்! சாதரணமாகவே கரையான் அரித்தது போலவே இருக்கிறது.

மண்டே மார்னிங், காலை 10 மணி சமீபம்.

இந்த முறை தைரியமாய் உள்ளே போனேன். என்.எஸ்.சி அந்தப் பக்கம் என்று இதுவரை பார்க்காத இன்னொரு ஜன்னலைக் காட்டினார்கள். நல்ல வேளை அங்கு கூட்டமே இல்லை, அதோடு ஜன்னலில் ஆளும் இல்லை. வெயிட் பண்ணுங்க வந்துருவார் என்றார் ஒரு பெண்மணி. வெயிட் பண்ணிக் கொண்டே இருந்த போது கொஞ்சமாய் வெயிட் போட்ட ஒருவர் தலையில் கொஞ்சம் முடியுடனும், நிறைய பொறுமையுடனும் நூறு ரூபாய் என்.எஸ்.சி இங்கே இல்லை சார். அதெல்லாம் இப்போ சரியா போறதில்லை, யாரும் இவ்வளவு சின்ன அமவுண்ட்டுக்கு வாங்குறதில்லை, அதனால நாங்களும் வச்சிக்கிறதில்லை, நீங்க ஹெட் போஸ்ட் ஆபிஸ் போய் பாருங்க, ஜி.எஸ்.டி ரோட்ல ஆர்மி கேம்ப் பக்கத்துல இருக்கு என்று ஏதோ பலசரக்கு கடையில் வியாபாரம் ஆகாத பொருளை வைத்துக் கொள்வதில்லை போல் பேசினார்! மிக்க நன்றி என்று மணியை பார்த்து விட்டு, இன்னைக்கும் அவ்வளவு தானா என்று அலுவலகத்திற்கு நடையை கட்டினேன்.

ரெட் லிப்ஸ் மார்னிங், அதாவது செவ்வாய் காலை, 9:15 மணியளவில். [ஐய்யோ, மொக்கை தாங்க முடியலைடா...]

வண்டியை நிறுத்தி அந்த இடத்தை ஒரு நோட்டம் விட்டேன். பழங்கால கட்டிடம், சுற்றிலும் மண் தரை தான். ஜிலு ஜிலுவென அங்கிருந்த சில மரங்களின் காற்று. ஆஹா! உள்ளே கூட்டமே இல்லை, அங்கு வேலை பார்த்த ஒரு இளம் ஆன்டியிடம் நான் சென்று நின்றதும் 9;30 தான் சார் ஆரம்பிக்கும், வெயிட் பண்ணுங்க. இல்லை, நூறு ரூபாய் என்.எஸ்.சி வேண்டும் என்றேன். நூறு ரூபாயா, அது இருக்காதே சார், நீங்க வேணா மெளண்ட் ஹெட் போஸ்ட் ஆபிஸ் போய் பாருங்க, அங்கே கிடைக்கும் என்றார். இவர்களே செக்யுரிட்டி டிபாஸிட் என்று கேட்பது, கேட்டால் அங்கே போ இங்கே போ என்று அலைய விடுவது. நம்பியார் போல் கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு புன்னகையுடன் இல்லை மேடம், மடிப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ்ல இருந்து இது வரை மூணு போஸ்ட் ஆபிஸ் பாத்துட்டேன். எங்கேயும் இல்லை, அவங்க தான் இங்கே கிடைக்கும்னாங்க என்று குழைந்தேன். சரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஒன்னே ஒன்னு பாத்த மாதிரி ஞாபகம் என்று என் வயிற்றில் ஆவின் [ப்ளு பாக்கெட், கொளுப்புச் சத்து இல்லாதது] பாலை ஊற்றினார். வழக்கம் போல் ஒரு ஓரமாய் அமர்ந்து வெயிட் பண்ண ஆரம்பித்தேன். அதை விட நோட்டம் விட ஆரம்பித்தேன் என்பது சரியாய் இருக்கும். ஒரு பெரிய ஹால். அங்கங்கே மரத் தடுப்புகள். பிறக்கும்போதே, இவர்கள் அரசு அலுவலகங்களில் அமர்த்தப் படுவார்கள் என்று நிர்ணயித்த முகங்கள். ஒட்டடை படிந்த மேல்கூரை, நீள நீளமான ஃபேன்கள். பெரிய ஜன்னல்கள். மிதமான சூரிய ஒளி. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்கும் பிள்ளைத்தாச்சி பெண்களைப் போல் பழங்காலத்து ஃபைல்கள். எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் பேப்பர்கள் வெளியே வராத ஃபைல்கள் பார்த்ததாய் ஞாபகம் இல்லை. அந்த இடத்தில் சம்மந்தமே இல்லாமல் அமைதியாய் ஏதோ ஒரு நாட்டின் இயற்கை வளத்தை ஞாபகப்படுத்தும் ஸ்கிரீன் சேவர்களுடன் தூசி படிந்த கம்ப்யுட்டர்கள். என்னம்மா இது ப்ரிண்ட் ஆக மாட்டேங்குது என்று கொஞ்சம் வயதான ஆன்டி அந்த இளவயது ஆன்டியிடம்
கேட்டாள். ஸ்விட்ச் போடுங்க என்றதும் கொஞ்சம் அசடு வழிந்தார். அங்கு வேலை செய்யும் வயதான பெண்ணை கூவி அழைத்து இனிமே காலையில கூட்டி பெருக்கும் போதே ஸ்விட்ச் போட்றுங்க என்று அதட்டினார்.

9:30 மணிக்குள் இன்னும் சிலர் அங்கு வந்தார்கள். சிலர் சேமிப்பு கணக்கை நேர் செய்ய, சிலர் ஸ்டாம்பு வாங்க, சிலர் என்வலப் வாங்க. ஆஹா என்ன ஒரு அருமையான வேலை. ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை, டெட்லைன் இல்லை. இப்படியே வர்றவனுக்கெல்லாம் கேட்டதை கொடுத்து விட்டு, 5 மணிக்கு டான் என்று கடை சாத்தி நடையைக் கட்டி விடலாம். அதிலும் ஈமெயில் காலத்தில் போஸ்ட் ஆபிஸில் அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்தில் வேலை அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். என்ன சம்பளம் ஒரு குறை, பரவாயில்லை, இதை வைத்துக் கொண்டே இவர்கள் பிள்ளைகள் ஒவ்வொன்றும் இன்ஜினியரிங் படிக்கவில்லையா? ஒரே ஏக்கமாய் இருந்தது. இக்கரைக்கு அக்கரை பச்சை, அதிலும் இந்த மாதிரி நினைப்பெல்லாம் டார்க் பச்சை என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒரு வழியாய் என்.எஸ்.சி வாங்கிக் கொண்டு அங்கேயே ஒரு என்வலப் [5 ரூபாய்] வாங்கி, ஸ்பீட் போஸ்ட் [20 ரூபாய்] அனுப்பினேன். அட்ரஸ் எழுதி அந்த ஆண்டியின் கையில் தந்ததும், கருப்பு மையால் அச்செடுத்து சிரித்துக் கொண்டிருந்த காந்தி தாத்தாவின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து! என்ன ஆனாலும் சரி, என் படத்தை ஸ்டாம்ப் போடும் அளவுக்கு பெரிய மனிதன் ஆவதில்லை என்று உறுதி செய்து கொண்டு கிளம்பினேன்! வெளியில் மரங்கள் ஆசிர்வதித்தன!
கூட்டமாய் வந்து நிற்கும் பேருந்தில், வந்தவர்கள் இறங்குவதற்குள் துண்டை
போட்டு இடம் பிடிப்பது போல் ஆகிவிட்டது, வலையுலகில் பதிவிடுவது.
ஆரம்பத்திலிருந்தே பேருந்துகளில் துண்டு போட்டு இடம் பிடிக்கும்
சாமர்த்தியம் எனக்கு இருந்ததில்லை...ரஹ்மான் விருது வாங்கியதும் நானும்
ஒரேடியாய் பூரித்துப் போய் இன்று எல்லோரையும் முந்திக் கொண்டு பதிவிட்டு
விடுவது என்று நினைத்தேன். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்
இஸ்ட்ரி![இஸ்ட்ரின்னா வரலாறு தானே?]

நேற்று [இது நேற்றே போட வேண்டிய பதிவு!] காலையில் அலுவலகம் வருவதற்கு
முன்பே ரஹ்மான் இரு விருதுகள் பெற்றதை தொலைக்காட்சியில் ஐபிஎன் மூலம்
அறிந்து கொண்டேன்! அலுவலகம் செல்லும் வழியில் இயல்பாய் தங்கள் வேலையை
செய்து கொண்டிருப்பவரை பார்க்கும் போதெல்லாம், அடேய் உங்களுக்கு ஒரு
விஷயம் தெரியுமா? என்று கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது.
தொலைக்காட்சியில் அப்படி ஒரு செய்தியும், பல பிரபங்களின்
வாழ்த்துக்களும், இந்தியாவே துள்ளிக் குதித்துக் கொண்டாடும் காட்சிகளும்
என்னை புல்லரிக்கச் செய்தன! அந்தச் சேனலில் வரும் ராஜேஷையும் அவரின்
ஆங்கிலப் புலமையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வழக்கமாய் சினிமா
விமர்சனத்திற்கும் நல்ல ஒரு உலக படத்தை [டிவிடி] பரிந்துரைக்கவும்
வருவார். அவருடைய வாயில் இருந்து ஆங்கிலம் அப்படி கொட்டும்! எந்த வித
தங்கு தடையுமில்லாமல் சரளமாய் உரையாடுவார். ஆனால் நேற்று செய்தி கேட்டு
மனிதர் சந்தோஷதில் திக்கு முக்காடி விட்டார் போலும். வாயிலிருந்து
வார்த்தை வர அத்தனை தடுமாறினார்!

எத்தனையோ பிரபலாமனவர்கள், ரஹ்மானிடம் வேலை பார்த்தவர்கள் வாழ்த்தினாலும்
எஸ் பி பி யின் வாழ்த்தினை போல் இல்லை. இதை விட பல பிரமாதமான இசையை
ரஹ்மான் நமக்கு அளித்திருக்கிறார் என்ற அவர் கூற்றை நூற்றுக்கு நூறு
அங்கீகரிக்கிறேன். ராஜேஷ் எல்லோரிடமும் ஒரே ஒரு கேள்வியை கேட்டார்,
அடுத்த முறை ரஹ்மானை பார்க்கும் போது என்ன சொல்வீர்கள் என்று. எஸ் பி பி
அவரை கட்டித் தழுவி முத்தம் கொடுப்பேன் வேறென்ன சொல்வது என்றார். மனிதர்
இதயத்தின் அடியிலிருந்து அன்பு கொப்பளிக்க வாழ்த்தினார். எத்தகைய அன்பு!
ஒரு தந்தைக்குரிய பாசமும் பெருமிதமும் அதில் தெரிந்தது.

அடடா, ரஹ்மானை விட்டு விட்டு எஸ் பி பி புகழ் பாட ஆரம்பித்து விட்டேன்.
பேக் டு ரஹ்மான்! நான் இளையராஜாவின் தீவிர ரசிகன்! என்னை பொறுத்தவரை
எப்போதாவது தொட்டுக் கொள்ளும் ஊறுகாயை போன்றது ரஹ்மானின் பாட்டு.
எப்போதும் உண்ணும் சாப்பாட்டைப் போன்றது இளையராஜாவின் பாட்டு. [இந்த
நேரத்தில் இப்படி ஒரு உவமை தேவையா?] இருந்தாலும் ரஹ்மான் என்ற கலைஞனை
நான் மதிக்கவே இல்லை என்று அர்த்தம் ஆகாது. எத்தனை கழுதை வயசாகுது, நம்ம
என்ன சாதிச்சிருக்கோம் இந்த இளம் வயதில் இவங்களைப் பாரு என்று நான் என்
கல்லூரிக் காலங்களிலிருந்தே பார்த்து ஏங்கும் இருவர் ரஹ்மானும்
டென்டுல்கரும்! ரஹ்மான் மிகப் பெரிய கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை
[நல்ல வேளை நீ சொன்ன, எங்க யாருக்கும் இது தெரியாது!!]

ரஹ்மான் அவரின் இளம் பருவத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள் அனைத்தும்
மிகச் சரியானவை! சிறு வயதிலேயே இளையராஜாவிடம் சேர்ந்தது. நல்ல ஒரு
வாய்ப்பு வந்ததும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு அற்புதமான இசையை
வெளிக் கொண்ர்ந்தது. இளையராஜாவைப் போல் தீபாவளிக்கு 20 படம்,
வருஷத்துக்கு ஒரு நாலு ராமராஜன் படம் என்று சிக்காமல் ஹிந்தி படங்களில்
இசையமைத்து தன்னுடைய வட்டத்தை அகலப்படுத்தியது. அதோடும் நின்று விடாமல்
வெளி நாட்டினருடன் இசை ஆல்பம் தயாரித்தது, பாம்பே ட்ரீம்ஸ் இசையமைத்தது
என்று அவர் எப்போதும் அடுத்த அடுத்த எல்லையை நோக்கி பயணித்துக் கொண்டே
இருந்தார்! அது சாதாரணமான விஷயமே அல்ல! அதற்கு செய்யும் தொழிலில்
எல்லையில்லா ஈடுபாடும் அசாத்தியமான உழைப்பும் அன்றி அது சாத்தியமாகாது.

இந்தப் படம் மொத்தத்திற்கும் இசையமைக்க ரஹ்மான் எடுத்துக் கொண்டது வெறும்
15 நாட்கள் மட்டுமே. இது தான் அவர் இசையமைத்ததிலேயே குறைவான நாட்களை
எடுத்துக் கொண்ட படமாம். அடப் பாவிகளா, இதுக்கே இரண்டு அவார்ட் தூக்கிக்
கொடுத்துக் கொண்டீர்களே இன்னும் அவரின் பட்டையை கிளப்பும் பாடல்களை
[ரோஜா, புதிய முகம், தால், ரங்கீலா, இருவர், மின்சார கனவு, லகான், ரங் தே
பசந்தி] எல்லாம் கேட்டால் என்ன செய்வீர்கள் என்று இருந்தது எனக்கு.

ரஹ்மானை எல்லோரும் புகழும் இந்த நேரத்தில் அவருக்கு எந்த விதத்திலும்
குறைவில்லாத, இதே போல் பல வித சாதனைகள் படைத்திருக்க வேண்டிய இளையராஜா
(மேல் சொன்னது போல்) ஏன் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக்
கொண்டாரோ என்ற ஆற்றாமையை தவிர்க்க முடியவில்லை!

சரி அதை விடுங்கள், நாடே இந்த நற்செய்தியால் அல்லோல கல்லோல பட்டுக்
கொண்டிருக்கிறது, இளையராஜா ரஹ்மானைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?
சொல்லவில்லையா அல்லது என் காதில் படவில்லையா? 2 வரி பாராட்டினா என்ன சார்
ஆயிடும்? நீங்க பாத்து வளந்த புள்ள தானே? இதான் சார், உங்க கிட்ட...

கமலஹாசன் சொன்னது போல் ஆஸ்கார் அமேரிக்காவின் உச்சம், அதோடு நில்லாமல்,
[அவர் எங்க நிக்க போறாரு] அதையும் தாண்டி இசையில் அகில உலக உச்சத்தை அடைய
என் இனிய வாழ்த்துக்கள். அதோடு ஆஸ்கார் வென்ற பூக்குட்டிக்கும் என்
வாழ்த்துக்கள்!

ஒய். ஜி. மகேந்திரன் நடத்திய நாகேஷின் அஞ்சலி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். சோ, சச்சு, மனோரமா, வி.எஸ்.ராகவன், சித்ராலயா கோபு, வியட்நாம் வீடு சுந்தரம், ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர் நாகேஷை வாழ்த்தி பேசினார்கள்! [கமல் எங்கே?] நான் போய் சேர்வதற்குள் சோ பேசி முடித்து விட்டார்!

சித்ராலயா கோபு

நாகேஷுக்கு முதல் சீன் சொல்லும்போது மிஸ்டர். கோபு என்றார். கொஞ்ச நேரம் கழிச்சி கோபு சார். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி டேய் கோபு என்றார்! அன்றிலிருந்து எங்கள் நட்பு செழித்து வளர்ந்தது. சிறிது காலம் சித்ராலயாவில் தான் படங்களை கொடுத்தோம். என்னடா எப்படி இருக்கு என்று கேட்கும் போது நாகேஷ் அலுத்துக் கொண்டு, எங்கேடா? பார் சோப்பைத் தாண்ட மாட்டெங்குதே என்பார்! அது என்னடா பார் சோப்பு என்றால் சம்பளம் 501ஐ தாண்ட மாட்டேங்குதே என்பார். பொறுமையாய் இரு என்று சொல்வேன். நான் சொன்னது போல் சில படங்களுக்கு அப்பால் நாகேஷை நான் தேட வேண்டியதாகி விட்டது. அவர் எங்கேயோ சென்று விட்டார். அவ்வளவு பிசி. என்றாலும் நான் எடுத்த படங்களுக்கு தாரளமாய் நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்!

வி.எஸ்.ராகவன்

நாகேஷை என் நண்பனா அடைஞ்சது நான் பெற்ற பாக்கியம். காதலிக்கிறவங்களுக்குள்ள மொதல்ல மோதல் வந்து பிறகு காதல் வர்ற மாதிரி எங்க நட்பு! ஏதோ ஒரு நாடகத்துல நான் நடிச்சிருந்தேன், அதை பாத்துட்டு நாகேஷ் அந்த நாடகத்துல நீ என்ன பண்ணியிருந்தே? ஒன்னும் புரியலையே என்றார். உனக்குத் தானே புரியலை, பரவாயில்லை என்றேன். அங்கு தான் தொடங்கியது எங்கள் நட்பு. அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். நாகேஷ் ஒரு துணிச்சல்காரர். பார்க்க தான் நரம்பா இருப்பாரே தவிர மன உறுது ஜாஸ்தி! நாங்க எல்லாரும் ஒரு நிகழ்ச்சிக்காக மலேஷியா சிங்கப்பூர் போயிருந்தோம். அங்க ஒரு ஆர்டிஸ்டோட அப்பா குடிச்சிட்டு வந்து பாட்டிலை ஒடைச்சி எங்களை எல்லாம் குத்திடுவேன்னு மிறட்டினாரு. நாகேஷ் தைரியமா அவர் முன்னால நின்னு எங்கே, குத்துடா, குத்து என்றார். பிறகு அவர் பணிந்து போன பிறகு ஏன்பா இப்படி போய் அவன் முன்னாடி நிக்கிறே? அவனே குடிச்சிட்டு வந்துருக்கான்னு சொன்னா, குடிகாரனை பத்தி எனக்குத் தெரியாதா, அவன் சும்மா உதார் விட்றான் என்றார். நாகேஷ் ஒரு குழந்தை என்றும் சொல்லலாம். அவருக்கு ஒரு பொருள் பிடித்து விட்டதென்றால் அவருக்கு அது அப்பவே வேண்டும். என்னிடம் இருந்த காது குடையும் கம்பி போல் வேண்டுமென்று ஊர் பூராவும் அலைந்தோம். அதே போல் நாகேஷ் ஒரு சாமர்த்தியசாலி. தயாரிப்பாளர்களிடம் பணத்தை கறாராக பேசி வாங்கி விடுவார். பணத்தை வசூலிக்காமல் டப்பிங் செய்ய மாட்டார். அவர் பிசியா நடிச்சிட்டு இருந்த காலகட்டத்துல ஒரு நாளைக்கு 2, 3 கால்ஷீட் கொடுக்குறது வழக்கம். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரும் கலைஞர்களே அவருக்காக காத்திருப்பார்கள். ஒரு ஸ்டூடியோவில் லேட் ஆனால், அடுத்து போக வேண்டிய ஸ்டூடியோவில் இருக்கும் எலெக்ட்ரிஷியனை கூப்பிட்டு கரண்டை கட் செய்ய சொல்லி விடுவார். அவர் போய் சேர்ந்தடும் கரெக்டாய் கரண்ட் வந்து விடும். நாகேஷ் வந்தவுடன் கரண்ட் வந்து விட்டது என்று இவருக்கு நல்ல பெயர் வேறு கிடைத்து விடும்.

'வியட்நாம் வீடு' சுந்தரம்

என் வியட்நாம் வீடு நாடகத்தை மேடையேத்த ஒய்.ஜி.மகேந்திரன் கேட்டர். நானும் அவரின் மீது உள்ள நம்பிக்கையால் கொடுத்து விட்டேன். நாகேஷ் இறந்த சில நாட்களுக்கு முன் அவர் வீட்டிற்குச் சென்று இந்த விஷயத்தை சொன்னேன். டென்சிங் இன்னைக்கு செய்ய வேண்டியதை அன்னைக்கே செஞ்சுட்டான். அதான் எல்லோரும் அவனை மறந்துட்டா, நீ என்னைக்கோ எழுதின நாடகத்தை இன்னைக்கு மேடையேற்றி உன்னை ஞாபகப்படுத்திக்கிறா, நல்லது தானே என்று சொல்லி விட்டு என்னை சற்று நேரம் கூர்ந்து நோக்கினார். எனக்கு அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று புரிந்தது. அவர் மெல்ல என் கையை பற்றி "நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு!" என்றார். யுஏஏ வில் சாதாரண லைட் பாயாய் இருந்த நான் இன்று மேடையில் பேசும் அளவிற்கு வந்ததற்கு நாகேஷும் ஒரு காரணம்.

சச்சு

நாகேஷுடன் நடிக்கும் போது ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும், அவர் எப்போது எப்படி என்ன செய்வார் என்று அவருக்குத் தான் தெரியும். ஏதோ ஒரு படத்தில் ஒரு சீனில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் வாயில் படபடவென்று அடித்து விட்டார். ஷாட் முடிந்து பார்த்தால் ரத்தமே வந்து விட்டது. நாகேஷ் என்ன இது என்று கேட்டால், ஓ சாரிம்மா, நான் சொல்லனும்னு தான் இருந்தேன் என்று இழுப்பார். என் பாட்டி என் கூட ஷூட்டிங் வரும் போது இவரிடம் எப்படி சாப்பாடு கொடுக்குறது? என்ன சாப்பிடுதோ அப்படி இப்படி என்று புலம்ப இவரும் என்ன பாட்டி ரொம்ப கவலைப்பட்றீங்க, இதோ இருக்குது பேத்தி சாப்பாடு கொடுங்க என்றார். அதற்கு என் பாட்டி இவளை சொல்லலை, வீட்டுல இருக்குற நாயை சொன்னேன் என்று சொல்லி விட்டார். அவ்வளவு தான், இதை யுனிட் பூரா தண்டோரா போட்டு விட்டார். அதன் பிறகு என் பாட்டி நாகேஷ் இருந்தால் நான் வரலை என்ற அளவுக்கு ஆகி விட்டார்.

நிற்க

நாடக விழாவோ, சினிமா சம்பந்தப்பட்ட பாராட்டு விழாவோ, அல்லது இந்த மாதிரி அஞ்சலி கூட்டமோ, மனோரமா தவிர்க்க முடியாதவராகி விடுகிறார். இவரை அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். மேடையில் பேச விட்டால் பாதி உணர்ச்சி வசப்பட்டும், பாதி உளறிக் கொட்டியும் எல்லோரையும் பாடாய் படுத்துகிறார். இவரா சினிமாவில் அந்தக் கலக்கு கலக்கியவர் என்றால் நம்பவே முடியவில்லை. இரு வார்த்தைகள் கோர்வையாய் இவரால் பேச முடியவில்லை. அவருக்கு முன்னால் பேசியவர்களின் பேச்சை எல்லாம் வாங்கிக் கொண்டு அதையே மறுபடியும் நா தழுதழுக்க சொல்லி சப்பை கட்டு கட்டி விடுகிறார். வடிவேலுவின் பேட்டிகளைப் பார்க்கும் போதும் எனக்கு இது தோன்றுவதுண்டு. ஏதோ உலகத்திலேயே அவர் ஒருவர் தான் அடக்கமானவர் மாதிரி ஆமாம்மா, அவரோட நான் நடிச்சது என் பாக்கியம் என்று ஓவர் செண்டிமெண்டுகளை பிழிவார். அத்தனை பெரிய சிரிப்பு நடிகரின் பேட்டி எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எப்படி இவர் ஸ்கிரீனில் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறார் என்று எனக்கு சந்தேகம் வருவதுண்டு. நாகேஷ் சொன்னது போல் நம் தமிழ் சினிமாவில் காமெடியன்களில் சிலருக்கு டைமிங் நல்லா இருக்கு, சிலருக்கு டைம் நல்லா இருக்கு! என்பது தான் நினைவுக்கு வருகிறது.



நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையும் பேச அழைக்கும் போது ஒய்.ஜி.மகேந்திரன் நாகேஷைப் பற்றி பல வித எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. அதில் சில.

கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியும் நாகேஷும் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள். நாகேஷ் ஏதோ பெசி முடித்ததும் சிவாஜி ஜெர்க் விட்டுக் கொண்டு, "ஏண்டா, டயலாக் பேசுறியா?" என்பார். பதிலுக்கு நாகேஷ், "ஏண்டா, நீ இருக்கும் போது யாரும் டயலாக் பேசக் கூடாதா?" என்பார்.

நம்நாடு படத்தில் ஏதோ வெளிநாட்டுக்காரர் போல் உடையணிந்து கொண்டு ஒரு பெரிய நாயுடன் நாகேஷ் வருவார். அதில் வில்லனாக வரும் தங்கவேலு நாயைப் பார்த்து நாகேஷிடம் "ஏன்பா, இது என்ன நாயா?" என்பார். அதுக்கு நாகேஷ், "பின்ன என்ன நீயா?" என்று ஒரு போடு போட்டார். அந்தக் காட்சி எடுத்து முடிந்ததும் தங்கவேலு எம்.ஜி.ஆரிடம் என்னங்க இந்தப் பைய இப்படி ஒரு போடு போட்டானே, தயவு செய்து இந்த சீனை எடுத்துறுங்க என்று கெஞ்சினார். எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அதை அப்படியே வைத்து விட்டார். எம்.ஜி.ஆரே நாகேஷை அந்த அளவிற்கு ரசித்தார்.

கெளரவம் படத்தில் வீட்டில் கோர்ட் ஒத்திகை பார்க்கும் சீன். சிவாஜி இங்கிலீஷில் பேசி அசத்தி டேக் ஓக்கே ஆயிற்று. எல்லோரும் ஆரவாரமாய் கை தட்டினார்கள். ஆனால் அவர் செட்டில் ஓரத்தில் இருந்த இருந்த எங்களிடம் (நாகேஷும், நானும்) என்னடா எப்படி சீன்? என்றார். நாகேஷ் உடனே கொஞ்சமும் பயப்படாமல் இந்த படத்துல நீங்க பல இடத்துல பாரிஸ்டர் மாதிரி இங்கிலீஷ் பேசி அசத்தியிருக்கீங்க, ஆனா இப்ப நீங்க பேசினது பாரிஸ்டர் இங்கிலீஷ் மாதிரி இல்லை, ராயபுரம் இங்கிலீஷ் மாதிரி இருந்தது. ஸ்டைலாய் இல்லை என்று ஒரு போடு போட்டார். எங்க ரெண்டு பேருக்கும் இதான் தோணுச்சு என்று என்னை வேறு கூட சேர்த்துக் கொண்டார். அதற்கு அவர், போங்கடா தடி மாட்டுப் பசங்களா, நான் என்ன ஒய்.ஜி.பி. ஆரம்பிச்ச இங்கிலீஷ் ஸ்கூல்லயா இங்கிலீஷ் படிச்சேன். நல்லாயில்லைன்னா சொல்ல வேண்டியது தானே என்று உடனே இன்னொரு டேக் எடுத்து அதை சரியாய் பேசி விட்டு ஒரு முறை நாகேஷ் பக்கம் பார்த்தார். நாகேஷ் ஓகே என்று கை காட்டியதும் தான் அவருக்குத் திருப்தி வந்தது.

நாகேஷ் சிவாஜிக்கு சடை என்று பெயர் வைத்திருந்தார். எப்போ பாத்தாலும் மேக்கப் போடு, டயலாக் படி என்று படுத்தும் என்பார். அதே சமயம் கெளரவம் படத்தில் அவர் மேக்கப் அறைக்கு சிவாஜி கணேசனாய் போய் திரும்பி வரும் போது பாரிஸ்டர் ரஜினிகாந்தாய் வெளியே வருவார். மதியம் ஒன்றரை வரை அப்படித் தான் பேசுவார். மதியத்திற்குப் பிறகு கண்ணனாய் தான் திரிவார். அவன் தாண்டா நடிகன், நம்ம எல்லாம் வேஸ்ட் டா என்றும் புகழ்வார்.

நிற்க


ஒய்.ஜி.மகேந்திரன் சிவாஜியின் தீவிர பக்தர் என்று நான் அறிவேன். ஆனால் அவர் நாகேஷிடம் அதே பக்தி கொண்டிருப்பார் என்று இன்று தான் அறிந்தேன். அவர் அந்த ஜாம்பவான்களோடு இருந்த சமயங்கள் ஒவ்வொன்றையும் சிலாகித்துச் சொல்லும் போது அவர்களிடம் அவருக்கு இருக்கும் மரியாதையும் பக்தியும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. அதனால் தான் அவர் இறந்த பிறகும் இத்தகைய ஒரு விழாவை அவரால் எடுக்க முடிகிறது.

எல்லோரும் பேசி முடித்ததும் நாகேஷின் அற்புதமான சில க்ளிப்பிங்க்ஸ்களை போட்டுக் காட்டினார்கள். கமலஹாசன் சொன்னது போல் ஒரு மனிதரின் இரங்கல் கூட்டத்திற்கு வந்து அதை மறந்து அவரை நினைவு கூறும் இடமெல்லாம் சிரிப்பென்றால் அந்த வாழ்க்கை எத்தகையது! காமெடியனாவே இருந்தாலும்

SERIOUSELY HE IS A LEGAND! HATS OFF!

கீழிருக்கும் அத்தனை பாய்ண்ட்களையும் நம் வலையுலக எழுத்தாளர்கள் ஒன்று விடாமல் எழுதியாகிவிட்டது. அப்புறம் நீ எதுக்கு எழுதுறேன்னு கேக்கப்படாது! எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா? இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றது?



பாலா சாரிடம் சில கேள்விகள்

1. இருக்கும் எல்லா கழிசடைகளை விட நேர்த்தியாய் தான் படம் எடுக்கிறீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரே வித்தியாசம். அவர்களின் கதாநாயகர்கள் ஊரோடு ஒட்டி வாழ்ந்து குத்து, பாட்டு பாடி, எதிரிகளை வீழ்த்துகிறான். உங்கள் கதாநாயகன் ஊரோடு ஒன்ற முடியாத காட்டு வாசியாய் ஓன்றும் பேசாமலும், அப்படியே பேசினாலும் ஒன்றும் புரியாமலும் எதிரிகளை வீழ்த்துகிறான். எல்லோரிடமும் அடிபடும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்போது படம் எடுப்பீர்கள்? (நீங்கள் அப்படி எடுத்தால் அந்தப் படமும் ஓடும் என்று நான் நம்புகிறேன்!)

2. நான் கடவுள் படத்தை உண்மையில் எத்தனை மணி நேரம் வருமாறு படம் பிடித்தீர்கள்? காசி காசி என்று மூன்று வருடமாய் கேட்டோமே, அங்கே அந்த 15 நிமிஷம் தானா எடுத்தீர்கள்?

3. அது எப்படி சார், 14 வருஷத்துக்குப் பிறகு அந்தக் கோலத்தில் இருப்பவனையும் தன் மகன் தான் என்று தந்தை சரியாய் அடையாளம் கண்டு கொள்கிறார்? லாஜிக்கே பார்க்காமல் படம் பார்க்கத் தானே பேரரசு போன்றவர்களை எல்லாம் வளத்து விட்டுறுக்கோம், உங்களுக்கு ஏன் இதெல்லாம்?

4. ஆர்யா காசியில் தொலைந்து போயிருந்தால், ஒரு வேளை உண்மையிலேயே அகோரி ஆனாலும் ஆகியிருப்பார். அந்த அளவுக்கு அவரை மாற்றிய நீங்கள் பூஜா பாடும் பாடல்களை ஏன் அவர் குரலிலேயோ அல்லது ஒரே ஒரு நல்ல குரலிலோ பாட வைக்கவில்லை? இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லனுமா சார்?

5. பூஜாவைச் சுற்றி நாய்களும், நரிகளும், பேய்களும் (அதுங்க கூட பரவாயில்லை, சுற்றி மனுஷனுங்க!!) சுத்தி இருக்கும்போது அந்தப் பெண்ணை கற்பழிக்காமல் எப்படி சும்மா விட்டார்கள்? இதுக்கே அந்தப் பொண்ணு இந்த ஜென்மமே வேணாம் சாமின்னுதே, நம்ம நாட்ல இதை விட பொண்ணுங்க அவதிப்பட்றாங்களே அவங்களை எல்லாம் என்ன செய்றது?

6. அந்த தாண்டவனை எங்க சார் புடிச்சீங்க? அவனை பாத்தாலே....ஆமா, உண்மையில் ஆர்யா அந்த முதலாளிகளின் பிணங்களை என்ன சார் செஞ்சாரு? ஒருவேளை படத்தோட உக்கிரம் தாங்க முடியாம எல்லாரும் அகோரியா மாறி ரெண்டு பேரையும் கொன்னு தின்னுட்டீங்களா? மக்கா, நீங்க பாத்த தியேட்டர்லயாவது அதை காட்டுனாங்களா?

7. அப்புறம் சில தேவையில்லாத சீன்களும், அதன் தேவையில்லாத நீளமும் நீங்கள் ஏன் சரி செய்ய முயலவில்லை? (அந்த போலிஸ் ஸ்டேஷன் கூத்துக்கள், முருகன் குடித்து விட்டு உளருவது...)

பேட்டியில் படித்த போதெல்லாம் நிறைய மனநிலை சரியில்லாதவர்கள் நடிக்கிறார்கள், அவர்களை நடிக்க வைக்க நிறைய நேரம் தேவைப்பட்டது என்றெல்லாம் படித்தேன். ஆனால் நடித்தவர்கள் அந்த அளவுக்கு நிலை தவறியவர்கள் மாதிரி தெரியவில்லை, ஒருவேளை நீங்கள் அவ்வளவு தெளிவாக நடிக்க வைத்து விட்டீர்களா? படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருந்தது, எதிர்பார்ப்பு ஒன்று இருந்தாலே ஏமாற்றம் என்பது சகஜம். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் படம் விட்றது சினிமா ஒன்னும் பட்டாசு, கரும்பு இல்லை என்று எனக்குப் புரிகிறது, ஆனாலும் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்! தமிழ் சினிமா உங்களைப் போன்றவர்களைத் தான் நம்பியிருக்கிறது...அடியேனும் தான்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன் ரயில்வேயில் குமாஸ்தாவாக பணி புரிந்தவர் நேற்று இயற்கை எய்தியுள்ளார்! கடந்த நாற்பது ஆண்டுகளும் அவர் ரயில்வேயில் பணி புரிந்து விட்டு இறந்திருந்தால் அவரின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்திருக்குமோ இல்லையோ, இந்தப் பதிவுக்கு அர்த்தமிருந்திருக்காது! கடந்த நாற்பது ஆண்டுகள் கலையுலகில் அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் இன்று அவரின் மறைவிற்கும், இந்தப் பதிவிற்கும் அர்த்தம் சேர்க்கிறது! நாகேஷ்! இந்தப் பெயரை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, நாகேஷ் என்ற பெயரைக் கேட்டவுடன் அதில் ஒரு வித நகைச்சுவை எனக்குத் தென்படுகிறது. முன் பின் தெரியாத ஒருவரின் அறிமுகத்தின் போது அவர் தன் பெயரை நாகேஷ் என்று சொன்னால் உங்களின் மனம் அனிச்சையாய் நடிகர் நாகேஷை நினைத்து ஒரு புன் முருவல் பூக்கும். அதை உங்களால் தவிர்க்க முடியுமா? அத்தகைய தாக்கத்தை நம் மனதில் நிரந்தரமாய் தங்கி இருக்கச் செய்தவர் நாகேஷ். மாடி வீட்டு மாதுவையும், தருமியையும், வைத்தியையும், செல்லபாவையும் மறக்க முடியுமா? ஆயிரம் பொன் பரிசாச்சே, சொக்கா என்ற அவரின் கூவல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருவிளையாடல் வெற்றி விழாவை மதுரையில் கொண்டாடினார்களாம். அந்தத் திரைக்காவியத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் பொற்கிழி கொடுத்து கெளரவிக்கப் பட்டதாம். அந்த விழாவிற்கு நாகேஷை அழைக்கவில்லை. அது தான் சினிமா, என்று நாகேஷின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் நின்று கொண்டே படித்த ஞாபகம்!!

நிற்க

இந்நேரம் அபியும் நானும் படத்தை வலையுலகம் பிரித்து மேய்ந்திருக்கும். என்ன செய்வது? எனக்கு இப்போது தான் அதைப் பார்க்க முடிந்தது! டூயட் மூவிஸாரிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல திரைப்படம்! எனக்குப் பிடித்தது! குழந்தைங்க கடகடன்னு வளர்ந்துர்றாங்க, ஆனா சில அப்பாக்கள் வளர்றதே இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!! இன்றைய தலைமுறையில் குழ்ந்தைகள் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவே உள்ளனர். they know what they are doing! தன் கருத்தை, தன் வாழ்க்கையை, தன் கனவை தம் பிள்ளைகளிடம் திணிக்கும் நம் இந்திய மரபு ஒழிய வேண்டும்! நல்லதோ கெட்டதோ, பிள்ளைகளை வழி நடத்துவதோடு பெற்றொர்களின் கடமை முடிந்து விடுகிறது. இதிலும் காதல் உண்டு என்ற போதும், இது போன்ற காதல் அல்லாத வாழ்வின் பிற உணர்வுகளின் மீதும் தமிழ் சினிமாவின் பார்வை விழ வேண்டும்! பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா, ரவி சாஸ்திரி [இவர் பெயர் என்ன?] கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ஜோடி எனக்கு ஏனோ பாரத விலாஸில் சிவாஜி - கே. ஆர். விஜயா ஜோடியை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. அசட்டுத் தனமாய் நடந்து கொள்ளும் புருஷனுக்கு ஏற்ப அவனை ஒரு குழந்தையாய் பாதுகாக்கும் ஒரு மனைவி! பாரத விலாஸிலும் இதே காரெக்டரைசேஷன் தான். த்ரிஷாவின் காதலனாக பல்லே பல்லே என்று ஒரு சிங் வந்து நிற்பது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அக்மார்க் ட்விஸ்ட்! மாமனாருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக பிரதமரே அவரிடம் தொலைபேசியில் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தான் பட்டது! அதிலும் மாப்பிள்ளையின் சொந்த பந்தங்களின் கதை எல்லாம் ஓவர் டோஸ்! அபியின் குடும்பம் ஒரு அழகான அமைதியான சராசரியான குடும்பம் என்பதைப் போல் மருமகனையும் யதார்த்தமானவனாகக் காட்டி இருக்கலாம்! என்ன தான் படம் நன்றாய் சென்றாலும், சருக்கு மரம் விளையாடச் சென்ற பிருத்திவிராஜின் குழந்தையை எங்கே காணோமே என்று என் மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது. இடைவேளை வரை அது அப்பாவைத் தேடவே இல்லை, வீட்டுக்கு போவோம் என்று சொல்லவே இல்லை.
அலுவலகத்தில் க்ரிஸ்மம், க்ரிஸ்சைல்ட் விளையாடுகிறோம்! சீட்டு குலுக்கிப் போட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறதோ அவருக்கு நீங்கள் அம்மா. இதே போல் உங்கள் பெயரும் யாருக்கோ போயிருக்கும். அவர்கள் உங்களுக்கு அம்மா. ஆனால் தன் குழந்தையிடம் தான் தான் தாய் என்பதை கூறக் கூடாது! இயற்கைக்கு மாறுபட்டு இந்த ஆட்டத்தில், அம்மா சொல்வதை குழந்தை கேட்க வேண்டும்! இது தான் ஆட்டத்தின் நிபந்தனை...தினமும் அம்மா சொல்லும் செயல்களை குழந்தை தட்டாமல் செய்தால் ஆட்டத்தின் முடிவில் அம்மா குழந்தைக்கு ஒரு பரிசு கொடுப்பாள்! இது தான் ஆட்டம்!

சென்ற ஒரு வாரமாய் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம்! இதை பொதுவாக கிறிஸ்துமஸ் சமயங்களில் விளையாடி கிறுஸ்துமஸ் அன்று பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் நாங்கள் க்ரிஸ்மம்மை பொங்கல்மம் ஆக்கிவிட்டோம்! இதுவும் நன்றாய் தான் இருக்கிறது...என் க்ரிஸ் மம் என்னிடம் என் மனைவியை பற்றி ஒரு கவிதை சொல்லு என்று சொல்லிவிட்டது! கேட்கவா வேண்டும்....ஒரு சென்னை 28 மாதிரியான கவிதையை எடுத்து விட்டேன்! [லைஃவ் இஸ் ட்ராமா, ஐ லவ் யு பூமா] அதுவாய் பொங்கி விட்டது...கவிதை [இது, கவிதை?] கீழே...

குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குமரன் பிரதீப்புக்கு ஒரு நிஷா! [என் மனைவியின் பெயர்]

ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!
ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!

உன்னைய பாத்ததும் என் மனசு
போதும் ஸ்டாப்புன்னுச்சு!

உன்னைய நெனச்சாலே கவிதை கொட்டுது
சொன்னா நம்ப மாட்டே கனவுல கயித முட்டுது!
ஸ்வபா...இப்போவே கண்ண கட்டுது!!

உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன் ஒருத்திகிட்ட தான் என் ஹார்ட் ஃபாலிங்கு!

வானத்துல காயுது மூனு!
நான் தான் நீ தேடின மேனு!
உன் கண்ணு ரெண்டும் மீனு
ஜாக்ரதை, நான் வெஜ் நானு!!

நீயில்லின்னா நான் அவுட்டு
நீயில்லின்னா நான் அவுட்டு
லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், எனி டவுட்டு?

காந்தி போடச் சொன்னார் கதர்!
காந்தி போடச் சொன்னார் கதர்!
வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர்!!

கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசி வரை நீ தான் என் கண்ணு!

எப்படி கவிதை? அதான் ஒன்னுக்கு கீழே ஒன்னா வரியும், பல ஆச்சர்ய குறியும் இருக்குல்ல? [எப்படி ரைமிங்கு?] அப்போ அது கவிதை தானே...இப்போது இதை படித்த அத்தனை பேரும் கோரஸாய் வாஹ், வாஹ் என்று சொல்ல வேண்டும்! எங்கே பார்க்கலாம்...
வேண்டாம். என்னை ஒன்றும் கேட்காதீர்கள். நானே மண்டை காய்ந்து போயிருக்கிறேன். நவீன கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்னு நினைக்கிறது குத்தமா....அது என்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே கவிதையை ரசிக்கும் பக்குவம் இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் புதுக் கவிதைகள் அதிகமாய் இருந்தன. எளிதான வார்த்தைகள், வர்ணனைகள் என்று புரியவும், ரசிக்கவும் ஏதுவாய் இருந்தது. ஆனால் இப்போது வரும் நவீன கவிதைகளின் தலை கால் புரியவில்லை. சரி நல்ல கவிதைகளை எப்படி அடையாளம் காணலாம் என்பதை விளக்கும் கவிஞர்களின் கட்டுரைகளை படித்தால் அது மற்றொரு நவீன கவிதைகளாகவே இருக்கிறது..ஒரு வேளை அதை நவீன கட்டுரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்...தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு வேண்டுகோள்! கீழிருக்கும் கவிதைகளைப் படித்து எனக்கு அர்த்தம் சொல்லுங்கள்! தமிழில் இருக்கும் அதிகம் உபயோகப்படாத வார்த்தைகளை சீட்டில் எழுதி குலுக்கி போட்டு எல்லாவற்றையும் கலந்து அடித்து இப்படி சம்மந்தா சம்மந்தமில்லாமல் எழுதுவது தான் நவீன கவிதையா?

இனி கவிதைகள் [என்ற பெயரில் என்னவோ...]

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி
மனமெங்கும் வியாபித்திருக்க
இரு கண்களின் வழியே வழியும்
கானல் நீராய் அது அலைக்கழிக்கும்
ஒரு நீர்த் துளியின் விளிம்பில்
விருட்சம் ஒன்றின் வேர் வளரும்
அந்த ஒரு நொடிக்காக நான்
காத்திருக்க மாட்டேன்!

குறையொன்றுமில்லை
உன் குறுதியின் அழகியல் சார்ந்த
வழிபாடு எனக்கு வாய்த்தபின்
குறையொன்றுமில்லை

அந்திச் சூரியனின் நிறம் கண்டு
கதறி நிற்கும் ஒரு பைத்தியக்காரனின்
பிதற்றல்களில் தெரிக்கும் ஒரு
பிரபஞ்சத்தின் ஓலம்

வைகரையின் வசந்த வீச்சில் வாலிப நுரைகள்
வந்து வந்து உன் காலை நனைத்த
அந்த நாளில் தான் உன் தெற்றுப் பல்
தெரிய நீ சிரித்தாய்!

நீ உளரியதையும்
நான் உளரியதையும்
புசித்துச் செரித்து
நம் உடல்கள் பூரித்து
நின்றபின் நமக்கான காதலை
நாமிருவரும் தேடத் துவங்குவோம்!

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி என்றால் என்ன? கண்களில் கானல் நீரா? நீர்த் துளியின் விளிம்பில் எப்படி விருட்சம் ஒன்றின் வேர் வளரும்? ஆமா நீ யாரு? இதுக்கும் நீ காத்திருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்? அட போங்கப்பா....இதை விட அடுத்து, குறுதியில் என்னய்யா அழகியல் சார்ந்த...அதோடு வழிபாடு ஏன் சேர்ந்தது? இல்லை என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு? நானும் சரி கவிதையை புரிஞ்சுப்போம், நாமும் நாலு வரி எழுதி இலக்கியத்துக்கு தொண்டு செய்வோம்னா...ஸ்வபா....

ஆமாம், உண்மையில் இது நல்ல கவிதைகளா? இல்லை வெறும் பேத்தலா? எனக்குத் தான் புரியவில்லையா? நானும் படித்திருக்கிறேன். எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதில்லை, அவரவர்க்கான கவிதைகளை ரசிக்கலாம், மற்றதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று! அப்படி என்றால் மேல் சொன்னவை யாருக்கான கவிதைகள்?
32ம் வருட புத்தக சந்தையைப் பற்றி எல்லோரும் பதிந்தாகிவிட்டது என்று நினைக்கிறேன்! சென்ற வாரமே நான் சென்று வந்து விட்ட போதிலும் இப்போது தான் பதிய முடிந்தது. இந்த முறை நான் அதிகம் புத்தகம் வாங்கவில்லை. கண்காட்சிக்குப் போவதற்கு முன்பே இந்த முறை சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்! அவருடைய வலைப்பூவை மட்டும் படித்துக் கொண்டேயிருந்தால், எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, பின் சட்டையை பிடித்து, ஏண்டா என் புக்கை வாங்க மாட்றீங்க என்று கேட்டு விடுவாரோ பயந்தும், சரி மனிதர் ரொம்பவும் தான் பேசுகிறார், ஒரு விஷயமும் இல்லாமல் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகித்தும், அப்படி என்ன தான் இலக்கியம் படைத்திருக்கிறார் என்று வியந்தும் அவருடைய ராஸ லீலா, ஃபேன்ஸி பனியன் [தலைப்பின் இன்னொரு பகுதி இன்னும் மனப்பாடம் ஆகிவில்லை], ஜீரோ டிகிரி என்று வாங்கித் தள்ளி விட்டேன். ஜீரோ டிகிரி ஒரு 60 பக்கம் படித்திருக்கிறேன். ஒரு துளி கூட புரியவில்லை. நாக்கு தள்ளிவிட்டது! முழுதும் படித்து விட்டு, சாருவை கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கணும். உயிர்மையில் தான் அதிகம் வாங்கினேன். கா.நா.சு வின் பொய்த் தேவு, மேல் சொன்ன சாருவின் புத்தகங்கள், பாப்லோ நெருடாவின் கவிதையும், மனுஷ்ய புத்திரனின் சில கவிதைத் தொகுப்புகளும் வாங்கினேன். வழக்கம் போல் என் படுக்கையரையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை. மனுஷ்ய புத்திரனிடம் கேட்டு அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தினேன்! எஸ்.ராமிகிருஷ்ணன் உயிர்மை ஸ்டாலில் வந்திருந்தார். நான் வழக்கம் போல் அவரிடம் சென்று பேசவில்லை...அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி தொகுத்த முத்திரைகள் பத்து புத்தகங்கள் மிகவும் பிடித்தது. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து பத்து பத்து கதைகளாய் பிரித்து ஒரு சின்ன டைரி வடிவில் தொகுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு எட்டு புத்தகங்களை வாங்கினேன். கிட்டத்தட்ட 315 ரூபாய் ஆனதாய் ஞாபகம். 8 விதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் 80 சிறுகதைகளும் கிடைத்த மகிழ்ச்சி! எங்காவது பயணிக்கும் போது கூடவே எடுத்துச் சென்று விடலாம்! மிகச் சுலபம்!! விகடனில் நான் வாங்குவது கார்ட்டூன்ஸ் தொகுப்புகள் தான். சென்ற முறை கோபுலு, இந்த முறை மதன். மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலும், ரெட்டைவால் ரெங்குடுவும் கிடைக்கவில்லை. அதை ஏன் ஒரு தொகுதியாக வெளியிடவில்லை? அல்லது என் கண்ணில் படவில்லையா தெரியவில்லை...இப்படியாக இந்த வருட புத்தகத் திருவிழா இனிதே முடிந்தது!

இந்த வார சனிக்கிழமை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமத்தின் இறுதி நாள். சரி நல்லபடியாய் முடித்துக் கொடுத்து விட்டு வருவோமே என்று அங்கு சென்றேன். கடற்கரையின் இடது பக்க சாலை முழுதும் நட்சத்திர ஹோட்டல்களின் அணிவகுப்பு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ஊர்களின் ஐட்டத்தை போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள். விருதுநகர் எண்ணெய் பரோட்டா, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, செட்டிநாடு இட்லி, மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பிரேம விலாஸ் அல்வா...[டோர் லாக், ஜொள்ளு வடியுது தொடைங்க!!] சாப்பாடு விஷயத்தின் அன்று மொத்த தமிழ்நாடும் அங்கு தான் இருந்தது! அந்த சாலையில் அமர்ந்து கொண்டு கையில் குதிரை பொம்மையுடனும், மினுக் மினுக்கென்ற உடையுடன் ஆடி அசைந்து செல்லும் கலைஞர்களை பார்க்க உற்சாகமாய் இருந்தது. தாரை தப்பட்டை, கிராமிய பாடல்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் சிவமணியின் ஒரு மணி நேர ட்ரம்ஸும், 45 நிமிட வாண வேடிக்கையும் கண்ணுக்கும், காதுக்கும் நல்ல விருந்தாய் அமைந்தது. சிவமணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது எனக்கு ஒன்றும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. ஓவராய் அலட்டுகிறார் என்றே தோன்றும்.! அன்றோடு அந்த எண்ணத்தை அடியோடு ஒழித்து விட்டேன். மனிதர் என்னமாய் தட்டுகிறார். வலுக்கைத் தலையுடன் யாராவது மேடையில் ஏறியிருந்தால், அவர் தலையிலும் தட்டியிருப்பார்! அப்படி ஒரு வாசிப்பு. கிடைத்ததை எல்லாம் தட்டுகிறார். இடைவிடாத அவரின் தட்டல்கள் இசைப் பிராவகமாய் பொங்கி இதயத்தில் இடியென இறங்கியது! ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன்! அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு! சில விஷயங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது தான்!!

இன்னைக்கு நேரமே சரியில்லை! யார் முகத்துல முழிச்சேனோ தெரியலை. எல்லாமே தப்பு தப்பா நடக்குது. எல்லாம் தப்பு தப்பா நடக்குறது எனக்கு ரொம்ப நார்மல் தான், ஆனா இன்னைக்கு பாருங்க கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு! ஏதோ படத்துல வடிவேலு சொல்வானே, ஒரு மனுஷனுக்கு ஒரே நாள்ல எத்தனை சோதனைடா சாமின்னு, அந்த மாதிரி! வழக்கம் போல காலம்பொற எந்திரிச்சி சவரம் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன், கழுத்தை லேசா கீறிண்டேன். மார்கழி மாசம் பனி ஜாஸ்தியா இருக்கேன்னு சுடு தண்ணியில குளிக்கலாம்னு நான் ஹீட்டரை போட்றதுக்கும் கரண்ட் கட்டாகுறதுக்கும் சரியா இருந்தது! என்ன எழவோ ஆயிட்டு போறதுன்னு பச்சத் தண்ணிய மடக் மடக்குன்னு ஊத்திகிட்டு, உடம்பை துடைச்சிட்டு பனியனை போட்றேன், ஏற்கனவே சல்லடையா இருந்த பனியன்ல மூணாவதா ஒரு கை வந்திடுச்சி. சனியனை கழட்டி போட்டு முந்தாநாள் போட்ட சட்டையை எடுத்து [ரொம்ப மெல்லமா ஜாக்கிரதையா] போட்டுட்டேன், கொஞ்சம் சுருக்கமா தான் இருந்தது...அதான் கரண்ட் இல்லையே எப்படி அயன் பண்றது? மேலே கேளுங்கோ...

ஒரு வழியா மானத்தை மறைச்சிட்டு வயித்தை கவனிக்கலாம்னு பாத்தா தீஞ்சு போன உப்புமாவை வச்சுட்டு மாலதி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று வழிந்தாள். அவளுக்கும் நேரம் சரியில்லையோ என்னமோ? நானும் பெருந்தன்மையா [உண்மையா சொல்லனும்னா ஒரு பயம் தான், அவ கத்த ஆரம்பிச்சுட்டா யாரு என்ன பண்ண முடியும்?]அதை உள்ளே தள்ளிட்டு ரோட்ல கெடக்குற எல்லா கழிசடைகளையும் கடந்து ஒரு வழியா பஸ் ஸ்டாப் வந்து நின்னா, கோனி மூட்டையில எதை எதையோ வச்சி அமுக்கினாப்ல பஸ் வந்தது. நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு [உள்ளே போய் எப்போ விட முடியுமோ] உள்ளே நுழைய முயற்சித்து இப்போதோ அப்போதோ என்று இருந்த செருப்பு அறுந்து போய் நான் என்ன கத்தினாலும் ஒரு செருப்போடு என்னை உள்ளே திணித்து, திணித்தே விட்டார்கள். அதே வேதனையுடன் யார் யாரிடமோ பாஸ் பண்ணி ஒரு வேர்வை தோய்ந்த டிக்கட்டை எடுத்ததில் மிச்சம் அப்புறம் தர்றேன் என்ற கண்டெக்டரின் எரிச்சை கலந்த சைகை புகை மண்டிய என் கண்ணாடி வழியாய் மங்கலாய்த் தெரிந்தது. என் அருகில் இருந்த சீட்டில் வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருவர் இருந்தனர்! எனக்குத் தெரியும், அப்படி இருந்தாலே அது லாஸ்ட் ஸ்டாப் கிராக்கிகள் தான்! இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை.

ஏன் இன்று இப்படியெல்லாம் நடக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போதே ஒரு வழியாய் இறங்க வேண்டிய இடம் வந்தே விட்டது! மணியடித்ததும் ஸ்கூலிலிருந்து ஓடும் குழந்தைகளைப் போல விட்டால் போதும் என்று ஒரே குதி...குதிக்கிற வயசா இது? வெறும் காலில் சிறு கல் குத்தி வலி பின்னியெடுத்தது...எப்படியோ தப்பி பிழைத்து ஆபிஸில் என் இடத்தில் உட்கார்ந்து மூச்சு விடுவதற்குள் மேனேஜரிடமிருந்து அழைப்பு. நல்ல வேளை மேனேஜர்களுக்கெல்லாம் தனி ரூம் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் நம் மானமே போய் விடும்! உச்சி கால பூஜை முடிந்து சீட்டுக்கு வந்து அப்பாடா என்று உட்கார்ந்ததும் அவளை பார்த்தேன். கையில் பெரிய ஸ்வீட் பாக்ஸ், எல்லோரிடமும் சிரித்தபடி நீட்டிக் கொண்டிருந்தாள். எல்லோரும் தங்களால் இயன்றதை அள்ளிக் கொண்டிருந்தனர். அந்த பாக்ஸை பார்த்தவுடன் காலையில் சாப்பிட்ட தீய்ந்த உப்புமா ஞாபகம் வந்தது. உடனே வயிறு சிக்னல் கொடுக்க வாயில் ஜலம் ஊறத் தொடங்கியது. இரண்டு சீட் தள்ளியிருக்கும் சீதாராமனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்! ஸ்வீட் வாங்கினோமா, சாப்பிட்டோமா, வேலையை பார்த்தோமான்னு இருக்கானா...ஒரு பொண்ணு புதுசா சேந்துரக்கூடாதே இவனுக்கு...எப்படியோ தப்பித்து என் சீட்டுக்கு வந்தவளின் கையில் உள்ள ஸ்வீட் பாக்ஸில் ஒரே ஒரு ஸ்வீட் மிச்சம் இருந்தது...!!!

அந்த ஸ்வீட்டை நான் எடுத்ததும் காலி டப்பாவையும் என்னையும் பார்த்து விட்டு, அழகாய் சிரித்த படி அவள் யு ஆர் வெரி லக்கி சார் என்றாள்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சென்னையில் இருந்தாலும், நேற்று தான் கலாக்க்ஷேத்ரா செல்லும் வாய்ப்பு கிடைத்தது! பல நாள் கனவு நேற்று ஒருவாறு நிறைவேறியதில் சந்தோஷம்! அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு யாராவது பின்னால் வந்து போகும் போது மட்டும் வேலைக்கான விஷயங்களை மேக்ஸிமைஸ் செய்து கொண்டும், யாரும் இல்லாத சமயங்களில் இணையத்தில் மேய்ந்து கொண்டும் இருந்தேன். சரி அப்படி ஒன்றும் பிரமாதமாக வேலை இல்லை என்றால் ஏதாவது ஒரு கச்சேரிக்குப் போகலாமே என்று எண்ணி கூகுளாரிடம் எந்த இடத்தில் என்ன கச்சேரி, எந்த சபாவில் என்ன டிபன் என்று கேட்டதில் கலாக்ஷேத்திராவில் எப்படியோ என்னை கொண்டு போய் நிறுத்தியது! இன்று மாலை 6:30 மணிக்கு வைஜெயந்தி மாலா பாலியின் பரதநாட்டியம் என்று போட்டிருந்தது!

என்ன வைஜெயந்தி மாலா இன்றும் நடனம் ஆடுகிறார்களா என்று சந்தேகம் ஒரு புறம் இருந்த போதிலும் பாலி என்ற அவரின் முழுப் பெயர் கொஞ்சம் ஊர்ஜிதப்படுத்தியது!

கட் செய்தால் கலாக்க்ஷேத்ரா!

அடடா, சென்னையில் அதுவும் ஒருவர் மேல் ஒருவர் நடக்கும் திருவான்மியூரில் இப்படி ஒரு இடமா என்று வியந்தேன்! விசாலமான இடம். சுற்றிலும் மரங்கள். ரம்மியமான சூழல்! ஐ.ஐ.டி கேம்பஸை ஞாபகப்படுத்தியது! ஆங்காங்கே காவி வேட்டியுடனும், தலையில் குடுமியுடனும் வெள்ளைக்காரர்கள். 50 ரூபாய் டிக்கட் இருந்தாலும் முன்னர் பெற்ற அனுபவத்தாலும், [க்ளிக்] எங்கே வைஜெயந்தி மாலா ஆடும் போது என் கால் கையை மிதித்து விடுவாரோ என்று பயந்து 100 ரூபாய் டிக்கட் எடுத்து, பாதுகையை வெளியே விடுத்து, ஒரு இருள் போர்த்திய சபைக்குள் நுழைந்தேன். கேரள சேலை சரசரக்க அம்சமான பெண்களில் ஒருவர் எனக்கு இருக்கை தேடிக் கொடுத்தார்!

அரங்கின் ஒரு ஓரத்தில் மட்டும் கொஞ்சம் வெளிச்சம். ஒரு பெண்மணி [பெயரை மறந்திருப்பேன் என்று உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை] அப்போது தான் பாடத் தொடங்கினார்! மேடையில் ஒரு மெல்லிய வெளிச்சத்தின் ஊடே பட்டுப் புடவை சரசரக்க 72 வயது வைஜெயந்தி மாலா பாட்டி சாரி வைஜெயந்தி மாலா பாலி ஆடத் தொடங்கினார்! வாசுதேவராய், தேவகியாய், சக்தியாய், கிருஷ்ணனாய் கிட்டத் தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் விடாமல் ஆடினார்! ஆடுவதற்கு முன் அந்த நடனத்தின் சாராம்சத்தை ஆங்கிலத்தில் சொல்லி எனக்குப் புரிந்ததை விட, அவரின் அபிநயம் எனக்கு ஓரளவுக்குப் புரிந்தது! பாடியவரின் குரலும் அற்புதம்! முதலில் சற்று நேரம் அவர் குரலுடன் வயலின் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு மிருதங்கமும் சேர்ந்ததும் ஆட்டம் சூடு பிடித்தது! அதோடு ஒரு பகுதிக்கு மட்டும் காயத்ரியின் நட்டுவாங்கம் [இவர் வேறு பெண்!] சேர்ந்து கொள்ள நாங்கள் எல்லோரும் சற்று நேரம் கோகுலத்திற்கே சென்று வந்தோம்! [இப்படி எல்லாம் யாராவது நாட்டியத்தை விமர்சித்திருப்பார்களா?] கிருஷ்ணன் கோவர்தன மலையை தூக்கி எல்லோரையும் மழையிலிருந்து காப்பது வரை நடனம் தொடர்ந்தது!

சுற்றி இருள் சூழ, மேடையில் இருந்த மெல்லிய விளக்கொளியில் அவர் ஆடிய விதம், அது ஒரு அற்புத கனம்! ஆதிசேஷனாய் அவர் வளையும் போதெல்லாம், அர்பணிப்பும், செய்யும் செயலில் ஈடுபாடும் இருந்தால் ஐம்பதென்ன எழுவதும் வளையும் என்று புதுமொழியை நான் கற்றுக் கொண்டேன்! ஒவ்வொரு முத்திரையும் அத்தனை கச்சிதம்! வீரப்பாவும் பத்மினியும் தான் இல்லாமல் போனார்கள்!

இவருக்கு அமைந்திருப்பது என்ன ஒரு வாழ்க்கை? அழகு, பெயர், புகழ், பணம், கலை, என்ன இல்லை இவரிடம்! எழுபது வயதிற்கு மேலும் இவரின் நடனத்தைப் பார்க்க அத்தனை கூட்டம்! அத்தனை ஆவல்!! அத்தனை எதிர்பார்ப்பு!

சிலர் பிறக்கும்போதே வரம் பெற்றுப் பிறக்கிறார்கள் போலும்...

மேன்மக்கள் மேன்மக்களே!!

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
குழந்தைகள் தினமும் முடிந்து விட்டபடியால் இந்தப் பதிவை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை! தோ, ஆரம்பிச்சாச்சே! பலே, பலே!! குழந்தைகள் தினம் என்றதும் நினைவுக்கு வருவது நேரு மாமாவும், குழந்தைகளும். இந்தப் பதிவு நேரு மாமாவைப் பற்றியது அல்ல என்று நான் சொன்னால் அப்படியென்றால் வேறு யாருடையது என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

நேரு மற்றும் பல மாமாக்களைப் போல் குழந்தைகள் என்றால் எனக்கும் கொள்ளைப் பிரியம்! அதிலும் குறிப்பாக தாயின் தோள்களில் சாய்ந்து கொண்டு எச்சில் வழிய தன் உருட்டைக் கண்களால் உலகையே உள் வாங்கத் துடிப்பதுகள், தத்தக்கா பித்தக்கா என்று சதா பேசிக் கொண்டும் சப்தம் எழுப்பிக் கொண்டும் நாம் திரும்பிய சமயம் செக்கஸ்லோகியா என்று சொல்லி நம்மை அதிர வைப்பதுகள், சமீப காலமாய் பேச ஆரம்பித்து கத்தால கண்ணாலேயும், டாக்சி டாக்சியையும் அபிநயத்துடன் செய்வதுகள், பள்ளிக்குப் போக ஆரம்பித்து இருப்பதுகள் என்று பட்டியல் நீளூம்!

சாலையில், கடைகளில், பேருந்து நிலையங்களில் என்று எச்சில் ஒழுக தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு முழிக்கும் குழந்தைகளைப் பார்த்தால் போதும், அடுத்த நிமிஷம் நான் ஆயுத்தமாகி விடுவேன்! கையை ஆட்டுவது, முட்டைக் கண்ணாக்கிக் காட்டுவது, முகத்தை அஷ்ட கோணலாக்கிக் காட்டுவது, சிரித்துக் கொண்டே கூப்பிடுவது என்று....என் நண்பன் ஒருவனுக்கு நான் செய்யும் இந்தக் காரியம் பிடிக்காது என்று நினைக்கிறேன்! மனசுல பெரிய ஹீரோ, குழந்தையை சிரிப்பாலேயே அப்படியே கவர்ந்துருவாரு என்று நினைப்பானோ என்னமோ, டேய் நீ அவங்க அம்மாக்கு தானே சிக்னல் கொடுக்குறே என்று அதிரடியாய் கேட்பான்! அப்படியெல்லாம் பப்ளிக்கா கூப்பிடக் கூடாதுடா என்று அட்வைஸ் வேறு செய்வான்! அடப் பாவிகளா....

குழந்தைகளுடன் விளையாடுவதும், உரையாடுவதும் ஒரு கலை...அது எல்லோருக்கும் வருவதில்லை என்று தான் நான் நினைக்கிறேன்! பெரும்பாலானவர்களுக்கு உன் பேர் என்ன? எந்த ஸ்கூல் படிக்கிறே? க்ளாஸ்ல எத்தனாவது ரேங்க் [நான் குழந்தையாய் இருந்த சமயத்தில் இந்தக் கடைசி கேள்வி என்னை மிகவும் எரிச்சல் படுத்துவதுண்டு!] என்ற சம்பிரதாய கேள்விகளோடு குழந்தைகளிடம் செய்யும் சம்பாஷனை முடிந்து விடுகிறது. எனக்கு அப்படியில்லை! பெற்றோர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் தான் நான் அதிகம் பேசுவதுண்டு! அதிலும் இந்தக் காலத்துக் குழந்தைகள்...அப்பா அப்பா...இதோ சில சாம்பிள்கள்ள்ள்ள்!

நான் கல்லூரியில் படித்த போது என் வீட்டுக்கு என் நண்பன் ஒருவன் வருவான்! என் வீடு ஒரு காம்பவுன்டில் இருப்பதால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டில் வளர்வதுண்டு! என் நண்பன் அப்படி வரும் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொண்டு கீழ் வரிசைப்படி சில கேள்விகளைக் கேட்பான்!

1. உன் பேர் என்ன?

2. எந்த ஸ்கூல்?

3. உன் க்ளாஸ்ல மொத்தம் எத்தனை பேர்?

4. உன் க்ளாஸ்ல எத்தனை பசங்க?

5. உன் க்ளாஸ்ல எத்தனை பொன்னுங்க?

6. நீ யார் மடியில் உக்காருவ?

அட, இது நல்லாயிருக்கே என்று நானும் அதை பழகிக் கொண்டேன்! எனக்குத் தெரிந்த குழந்தைகளிடமும் கேட்க ஆரம்பித்தேன். [கடைசி கேள்வியைத் தவிர! எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான்!] என் மாம பசங்களிடம் அடிக்கடி கேட்டுக் கேட்டு, நான் 4வது கேள்வி வரும்போதே அவர்கள் உஷாராகி கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே, என்னை பொய்யாய் அடித்து விட்டு, அடுத்து நீ என்ன கேப்பேன்னு எனக்குத் தெரியும் என்று ஓடி விடுவார்கள்! இதற்காகவே சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை என்னிடம் பேசுவதை பார்த்தால் பதறிப் போவதுண்டு!

மற்றொரு முறை என் காம்பவுண்டில் இருக்கும் ஒரு சின்ன பையனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்தது! நானும் எதேச்சையாய், என்னடா உன் தங்கச்சிக்கு என்ன பேர் வைக்கப் போறேன்னு கேட்டேன், அதற்கு அவன் என் தங்கச்சி பேரு ராஜகாளியம்மன் என்றான் பட்டென்று! அடடா தமிழ் சினிமாவைன் க்ராபிக்ஸ் அட்டகாசங்கள் இந்த பிஞ்சு மனதையும் கவர்ந்து விட்டதே என்று எண்ணி வியந்தேன்! அவன் பேர் வைத்தானோ இல்லையோ, என் கைங்கரியத்தினால் அந்த தங்கச்சிக்கு ராஜகாளியம்மன் என்ற பட்டப் பெயர் நிலைத்து விட்டது!
இப்படித் தான் ஒரு முறை என் உறவினரின் 1வது படிக்கும் குழந்தையுடன் பீச்சுக்குச் சென்றேன். அங்கே நாயை பார்த்ததும் அய்யயோ, லயன் வருது பாரு என்றேன்! அவன் என்னை ஒரு ஈனப் பிறவியாய் பார்த்து விட்டு அது லயனா? அது டாக் என்றான் எரிச்சலுடன்! அவன் சொன்ன விதம், இவனையெல்லாம் நாம் எப்படி கரையேற்றுவது என்பது போல் இருந்தது தான் வேடிக்கை!
என் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன்! அங்கிருந்த குழந்தையிடம் உங்க அம்மா பேர் என்ன என்று கேட்டேன். அது மழலை கொஞ்சம் வீவா என்றது! உங்க அப்பா பேர் என்ன, போர்ன்வீட்டாவா என்றேன்! அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டே அடுப்படியை பார்த்தது! உடனெ அவன் அம்மா, நீ போர்ன்வீட்டா என்று சொன்னதால் அதை பார்க்கிறது என்று சொன்ன பிறகு தான் எனக்கு விஷயம் புரிந்தது! அம்மாவுக்குத் தான் குழந்தைகள் சொல்ல நினைப்பதை சரியாய் சொல்ல முடிகிறது!

சமீபத்தில் எங்கள் வீட்டில் எல்லா குழந்தைகளும் விடுகதைகள் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தோம். என் மாம மகனுக்கு அவனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம்! கவனித்துக் கொண்டே இருந்தவன் பெரியவர் சிறியவர் அனைவரையும் பார்த்து நான் ஒன்று கேட்கிறேன் என்று சொல்லி கீழிருக்கும் கேள்வியை கேட்டான்.
3 திருடர்கள் ஒரு வீட்டில் திருட போகிறார்கள்! அங்கு இருக்கும் இரண்டு செக்யூரிட்டிகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூன்று பேரும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள்! அவர்கள் திருடி விட்டு வெளியே வரும் போது இரண்டு செக்யூரிட்டிகளும் விழித்து விட்டார்கள்! அவர்கள் மூவரும் எப்படித் தப்புவார்கள்?

அந்தப் பையனின் அக்கா இப்படி ஒரு விடுகதையே இல்லை, இவனாய் ஏதோ உளருகிறான் என்றாள். சரி என்ன தான் சொல்கிறான் பார்க்கலாம் என்று எங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு அவனிடமே பதிலை சொல்லச் சொல்லி பணித்தோம். அவன் தெனாவட்டாய் சொன்ன பதில்...
மூன்று பேரில் ஒருவன் மட்டும் செக்யூரிட்டிகள் பார்க்கும் படி தப்பி ஓடுவான், செக்யூரிட்டிகள் அவனைப் பிடிக்க ஓடும் போது மற்ற இருவரும் தப்பி விடுவார்கள் என்றான்! சரி அந்த ஒருவனின் கதி என்னடா ஆனது என்று எல்லோரும் ஆவலாய் அவனை பார்க்க...அவன் சாவகாசமாய்....அவன் செத்து ஒழிவான்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்றான் புன் சிரிப்புடன்! அதோடு நில்லாமல், ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடியும்! என்று ஒரு தத்துவத்தை வேறு உதிர்த்தான்! ஐந்தே வயது...நாங்கள் வாயடைத்துப் போனோம்! அம்மா அப்பா வேலைக்குப் போயிருந்த சமயத்தில் இணையத்தில் கேம்ஸ் விளையாடி அந்த மாதம் மட்டும் 2000 ரூபாய்க்கு ஆப்பு வைத்திருக்கிறான்! இது ஒரு புறம் பெருமையாய் இருந்தாலும் மற்றொரு புறம் அவர்களின் வேகத்தைக் கண்டு பயமாய்த் தான் இருக்கிறது! அதனால் என் மாமா அந்த வசதியையே நிறுத்தி விட்டார்!

சிவாஜி படம் வந்த புதிதில், என் நண்பியின் மகன் காக்கா பர பர விளையாடுவோம் என்று அழைத்தான்! உயிருள்ள பொருள்களின் பெயரைச் சொன்னால் இரு கைகளையும் பறப்பது போல் செய்ய வேண்டும்! உயிரற்ற பொருள்களின் பெயர்களைச் சொன்னால் கைகளை ஆட்டாமல் இருக்க வேண்டும்! இது தான் விளையாட்டின் விதிமுறை. உயிருள்ளவற்றின் பெயர்களையும், உயிரற்றவற்றின் பெயர்களையும் மாறி மாறி அவன் சொல்லச் சொல்ல நானும் அதற்கேற்ப கைகளை அசைத்துக் கொண்டிருந்தேன்! திடீரென்று தன் பெயரை சொன்னான்! நானும் கையை ஆட்டினேன்! நான் கையை ஆட்டியதும் சற்றும் எதிர்பார்க்காமால் அவன், "பேரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல!!" என்றானே பார்க்கலாம்!

சமயம் கிடைத்தால், இல்லை சமயத்தை ஏற்படுத்திக் கொண்டு நீங்களும் கொஞ்ச நேரம் குழந்தைகளிடம் பேசிப் பாருங்களேன்!
எல்லோருக்கும் என் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

காலம் மறுபடியும் தன் கடமையை சரியாய் செய்திருக்கிறது! நம்பியாரிடம் என்றுமே தோற்காத எம்.ஜி.ஆரே மரணத்திடம் தோற்ற போது, மரணத்திற்கு நம்பியார் எம்மாத்திரம்? சினிமாவில் ஒழுக்கமான மனிதர்கள் குறைவு! பணம் இருந்தாலே மனம் கொஞ்சம் ஆட்டம் போடத் தான் செய்யும், அதோடு புகழும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்! அத்தகைய கூட்டத்தில் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் தேக ஆரோக்கியத்தோடு 89 வயதில் மதியம் உணவருந்தி விட்டு, தூக்கத்திலேயே நிரந்தர துயிலடைவது எல்லோருக்கும் சாத்தியம் அன்று! மிஸ்டர். நம்பியார் டிசேர்வ்ஸ் இட்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களைப் பற்றி நாம் நினைக்கும் அளவிற்கு வி.எஸ். ராகவனைப் பற்றியோ, சுந்தரிபாயைப் பற்றியோ, பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றியோ நாம் அதிகம் நினைப்பதில்லை! அப்படிச் சிறிது நேரம் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இறந்து போக வேண்டியிருக்கிறது! இப்படி ஒரு தருணத்தில் நம்பியாரைப் பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் அவரின் நடிப்பைப் பற்றியும் நான் எண்ணிப் பார்க்கும் போது எந்த ஒரு நடிகருக்கும் அவர் சளைத்தவிரில்லை என்பது விளங்குகிறது! எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதும் போது நம்பியார் தன் தோல்வியையும், தன் கையாலாகத தனத்தையும், அதனால் உண்டாகும் ஆத்திரத்தையும், அப்படி எத்தனையோ வித உணர்ச்சிகளை அவர் முக பாவத்தில் கொண்டு வரும் நேர்த்தியை எம்.ஜி.ஆர் ஓடிச் சென்று கட்டிப் போட்டிருக்கும் தன் தாயை விடுவித்து அம்மா என்று ஆரத் தழுவி கொஞ்சும் போது நாம் அதை கவனிக்கத் தவறி விட்டோம் என்றே தோன்றுகிறது!

அவர் முகம் வில்லனுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது என்று யாரும் எளிதாய் சொல்லி விட முடியாது! அவர் அமைதியாய் நல்லவன் போல நடிக்கும் போது அவரின் முகத்தில் தவழும் சாந்தம் கதாநாயகனின் முகத்தில் கூட இருந்ததில்லை! மிஸ்ஸியம்மாவில் அவர் சாவித்ரியை மணக்கத் துடிக்கும் துடிப்பையும், அதற்கு அவர் படும் பாடுகளையும் பார்த்து நான் வாய் விட்டுச் சிரித்து ரசித்திருக்கிறேன்! அத்தனை சாந்தமான முகத்தில் வாயை கோணிக் கொண்டு, கையைப் பிசைந்து கொண்டு தாடைக்கு கீழே ஒரு 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சம் பட்டதும் எங்கிருந்து தான் அத்தனை குரூரம் வருமோ என்று ஆச்சரியமாக இருக்கிறது... "மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என்று அத்தனை கம்பீரமாக முழங்கும் நம்பியாரிடம், எம்.ஜி.ஆர் அமைதியாக, மிருதுவான குரலில் சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்பார்! எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாய் வணங்குவதற்கு நம்பியாரின் பெரும் பங்கு இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை!

நம்பியாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மூளையில் ஒரு ஓரத்தில் ஒலிக்கிறது "டேய் மாயாண்டி" என்ற ஒரு குரூரக் குரல்! நம்பியாரின் நினைவு இருக்கும் வரை அந்த மாயாண்டிகளும், காட்டு பங்களாக்களும் வாழ்வாங்கு வாழும்!

சட்டம் ஒரு இருட்டறை...
சட்டக் கல்லூரி ஒரு முரட்டறை!

இளகிய மனம் படைத்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி நேற்று அந்த நியுஸ் சேனலில் அந்தக் காட்சியை பார்த்து விட்டேன்! சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் இரு பிரிவினருக்கு நேற்று நடந்த அடிதடி காட்சி அது! ஒரு கூட்டம் கையில் பெரிய தடியுடனும், கத்தியுடனும் ஒரு மாணவனை சகட்டு மேனிக்கு புரட்டி எடுக்கிறது, அதை தடுக்க கையில் கத்தியோ, உருட்டுக் கட்டையோ சரியாய் நினைவில்லை கொண்டு அவனை காப்பாற்ற முற்படும் இன்னொரு மாணவனின் மேல் வெகு ஆக்ரோஷமாய் பாய்கிறது அந்தக் கூட்டம்! அவனை சராமாரியாய் தாக்கியதில் அவன் மயங்கி வீழ்ந்தும் செத்த பாம்பை அடிப்பதைப் போல் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவனாய் வந்து சகட்டு மேனிக்கு உடலெங்கும் அத்தனை பெரிய தடியால் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்! அவன் கதை முடிந்து விட்டதை போல் இதை விட பரபரப்பாய் என்ன இருக்கிறது என்று ஏங்கும் காமெரா மெல்ல இடது பக்கம் திரும்புகிறது...அங்கு கூட்டமாய் நிற்கும் காவல் துறையினர் கஞ்சி போட்ட சட்டைக்குள் விரைப்பாய் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! பிறகு அந்தக் கல்லூரியின் முதல்வர் சற்று விளக்கம் கொடுக்கிறார். பின்னால் பயந்தபடி நிற்கும் காவல் துறை அதிகாரி ஒருவர் நாங்கள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறார்!

மனிதன் உணர்ச்சிப் பெருக்கால் செய்யும் தவறுகளை தண்டிக்கவும், அவனை திருத்தி நல்வழி செலுத்தவும் தான் நாட்டில் இத்தனை சட்டங்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள். நாளை சட்டத்தைக் காக்கப் போகும் இவர்களாலேயே தங்கள் உணர்ச்சிகளை அடக்க முடியாத போது இவர்கள் வாதாடி எந்த நிரபராதியை காப்பாற்ற முடியும்? எந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்? மாணவர்களை கூட கட்டுப்படுத்த முடியாத காவல் துறையால் நாட்டில் நடக்கும் குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இத்தனை கேள்விகள் மனதில் ஓட, அந்தப் பையன் பிழைக்கனுமே என்று நினைத்துக் கொண்டே, என் கையாலாகத தனத்தை நினைத்து வருத்தத்துடனும், எரிச்சலுடனும் என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? வேறு என்ன, என்னால் முடிந்தது...சேனலை மாற்றினேன்! வடிவேலும் விவேக்கும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள்!

பின்குறிப்பு: ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பிரகடனப் பிரதிநிதி என்று ஆகி விட்ட நிலையில் இந்தக் காட்சியை பதிவு செய்த அந்த தொலைக்காட்சியைக் கூட எந்த அளவுக்கு நம்புவது என்று எனக்குப் புரியவில்லை! ஆமா, அந்த பையன் பொழச்சுப்பான்ல?
இந்தச் சினிமா தான்...

மாதத்துக்கு ஒரு பதிவு போடுவதே இப்போதெல்லாம் பெரும்பாடு ஆகிவிட்டது! வலையுலக நண்பர்களும் ரஜினி மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்தது போல் என் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்! என்னடா எழுதுவது என்று முழித்துக் கொண்டிருந்தேன்...இதோ, கிடைத்து விட்டது...பிச்சைப் பாத்திரத்தின் வழியே ஒரு பதிவுப் பிச்சை :)

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

நான் பார்த்த முதல் படம் ப்ரியா என்றும், அதனால் தான் இப்படி ரஜினி பைத்தியம் பிடித்துத் திரிகிறேனோ என்றும் என் அம்மாவுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு! ப்ரியா வெளி வந்த வருடத்தை வைத்து கணக்கிட்டால் 1 அல்லது 2 வயதில் படம் பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ரொம்ப கடைசியும் இல்லாமல் ரொம்ப கிட்டத்திலும் இல்லாமல் நடுநாயகமாக உட்கார்ந்து பார்த்தது...ஏகன்! [அஜீத்தே வந்து கூப்பிட்டாலும் போயிடாதீங்கோ மக்கா!]

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சுப்ரமணியபுரம்! மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இப்படி ஒரு புரத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை...மதுரையில் இப்படியும் ஒரு இடம் இருக்கிறதா? அங்கு இப்படியும் மக்கள் வாழ்கிறார்களா என்று வியந்தேன்! படத்தை ஆஹா ஓஹோ என்று புகழும் அளவிற்கு பெரிதாய் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது! ஸ்வேதா தேடிக் கொண்டே வரும்போது ரேடியோவில் ஒலிக்கும் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் என்று ரெக்கார்ட் ப்ளேயரில் ஒலிக்கும் இடம் அருமை. அந்தப் பாட்டை அந்த ஒரு காட்சியில் கேட்பதற்குக் கூட எத்தனை அற்புதமாய் இருக்கிறது! ராஜாவுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப், அதை சரியாய் படத்தில் பயன்படுத்திக் கொண்ட சசிக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்!

2008 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று "கண்கள் இரண்டால்", இப்படி ஒரு பாட்டை இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தன் அமைதியாய் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் பேசு தங்கக் காசு நடத்திக் கொண்டிருக்கிறார்! அவரை பத்திரிக்கைகளும், டீவியும் எப்படி பேட்டி எடுக்காமல் விட்டு வைக்கிறது என்று வியந்தேன்? [ஒருவேளை அவர் கொடுத்தும், நான் தான் பார்க்க தவறி விட்டேனோ?]

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாலுமகேந்திராவின் சந்தியா ராகம்! [இந்த ஒரு படம் தான் மெளன மொழி விளையாடும் போது என் நண்பன் என்னன்னவோ செய்தும் என்னால் சொல்லவே முடியவில்லை!] ஒரு முதியவரின் மகிழ்ச்சி, சோகம், கோபம், விரக்தி, குறும்பு, பயம் அத்தனையையும் ஒரு ஜன்னலின் வழியே நாம் பார்ப்பதை போல பாலு அவர்கள் படத்தை மிக அழகாக நகர்த்தியிருந்தார்! சொக்கலிங்க பாகவதரின் நடிப்பை சொல்லவா வேண்டும்? பாலுவைத் தவிர இவரை ஏன் யாருமே கண்டு கொள்ளவேயில்லை?

1. ஆற்றில் குளித்து விட்டு வரும் வழியில் தெருவில் குழந்தைகள் நொண்டி விளையாடிச் சென்ற கட்டங்களை பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அதில் நொண்டி ஆடும் இடத்தில் குறும்பு.

2. பட்டணத்தில் குழந்தை ரோட்டில் விற்கும் பண்டங்களை வாங்கித் தந்து அவளுக்கு நோவு வந்து அர்ச்சனாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் இடத்தில் இயலாமை!

3. முதியோர் இல்லத்தில் தன்னை பார்க்க வந்த அர்ச்சனாவை எல்லோருக்கும் அறிமுகம் செய்யும் போது ஒரு பாட்டி "யாரு புதுசா வந்துருக்குற டாக்டர் அம்மாவா?" என்று கேட்டவுடன், என் மருமவ என்னை ஆசையா பாக்க வந்துருக்கு...உனக்கு யாரை பாத்தாலும் டாக்டர் அம்மா தான்...எனும் இடத்தில் பெருமை!

4. அர்ச்சனாவிற்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும் ஓடிச் சென்று அந்தக் குழந்தையின் கையில் தன் விரலை வைத்ததும் அந்த இரு கைகளையும் க்ளோஸப்பில் காட்டும் இடம் கவிதை...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்!

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழ்நாட்டில் சினிமாவின் தாக்கம்! ஒவ்வொரு பயணத்தின் போதும் இதை நான் உணர்கிறேன்! ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு முட்டுத் தெருவில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க" என்ற வாசகம் இன்னும் மிச்சமிருக்கிறது! நேற்று வந்த கதாநாயகன் படம் தீபாவளி அன்று வராததற்காக வருத்தப்பட்ட்டு போஸ்டர் அடிக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறது!
இன்றும் வருடம் தவறாமல் முரளிக்காக (மன்னிக்க! கடவுள் முரளிக்காக) போஸ்டர் அடிக்கும் கே.கே. பெருமாளை மதுரை வாசிகள் யாரும் மறந்து விட முடியாது! அப்படி என்ன தான் முரளி அவருக்கு செய்திருப்பார் என்று நான் வியந்ததுண்டு!

நேற்று கூட பம்மல் செல்லும் வழியில் ஒரு குறுகிய தெருவில் ஒரு அழுக்கான டெய்லர் கடை போர்டில் பியர்ஸ் ப்ராஸ்னன் சிரிக்கிறார்! அங்கு எத்தனை பேருக்கு அவரை தெரியும்? ஏன் அந்த இடத்தில் அவர் படத்தை வரைய வேண்டும்? பியர்ஸ் ப்ராஸ்னனுக்கும் பம்மலில் இருக்கும் ஒரு குறுக்குச் சந்தில் வாழும் டெய்லருக்கும் என்ன சம்மந்தம்?
இவர்களுக்காக அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?

தன் மேல் வந்து விழுந்தவர்களை தள்ளி விட்டு, "கொஞ்ச நேரம் சிரிக்க வைத்ததற்காகவா இத்தனை அன்பு? இத்தனை ஆர்ப்பாட்டம்? அப்படியென்றால் உலகம் இத்தனை கீழ்த்தரமானதாகவா இருக்கிறது?" என்று சாப்ளீன் எண்ணி வியந்தது எத்தனை உண்மை!

இதை யோசிக்கும் போதெல்லாம் என் அனைத்து கேள்விக்குறிகளும் ஆச்சர்யக்குறிகளாய்த் தான் முடிகிறது!

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இளையராஜா! இவர்தான் என்னைத் தாக்கிய மிகப் பெரிய தொழில் நுட்பம்! வள்ளியில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாட்டில் சரணத்தில் எத்தனையோ இசையின் மத்தியில் ஒரு சின்ன குழல் ஓசை கேட்கும்! மிக அற்புதமான ஒரு ஒலி அது! இந்த இடத்தில் இதை சேர்க்க வேண்டும் என்று இவருக்கு எப்படித் தோன்றும்? இது இல்லாவிட்டால் பாட்டு கெட்டு விடுமா? இப்படி எத்தனை பல்லவிகள்? எத்தனை சரணங்கள்? எத்தனை படங்கள்? அதுவும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டம்! கிட்டத்தட்ட 10 படங்கள் இவர் இசையுடன் வரும், அதில் அத்தனையும் ஹிட்!

எனக்குத் தெரிந்து இளையாராஜா தான் பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் நடுவே ஒரு இசையும், பல்லவிக்கும் இரண்டாம் சரணத்திற்கும் இடையே மற்றொரு இசையும் கொடுப்பதில் வல்லவர்! [இதை இசையின் மொழியில் எப்படிச் சொல்வார்கள் என்று தெரியவில்லை, மன்னிக்கவும்!] அந்த இடத்தின் இசையை வைத்தே அது என்ன பாட்டு என்று சொல்லி விடலாம்!

அப்புறம், மணிரத்னம் படங்களின் ஒளிப்பதிவு, அவர் ஒவ்வொரு சீனிலும் ஃப்ரேம் செட் செய்யும் நேர்த்தி! அதே ஒளிப்பதிவாளர்களை செய்த வேறு படங்களில் அந்த நேர்த்தி காணப்படுவதில்லை என்பது என் அபிப்ராயம்! உங்க நாயனத்துல தான் அப்படி சத்தம் வருதா இல்லை எல்லா நாயனத்திலும் அதே சத்தம் தான் வருதாங்கிற மாதிரி...எப்போதுமே ஒரு சந்தேகம்!

ஏ.ஆர். ரகுமானைப் பற்றி நண்பர்கள் சொல்லி விட்டார்கள்! அதனால் அடங்கிக் கொள்கிறேன்...

அது எப்படி சிலர் மட்டும் இப்படி வரம் பெற்றுப் பிறக்கிறார்கள்? எனக்குப் புரியவில்லை!

தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

யாரை மேன் கேட்கிறாய்? [இது என்ன படம் சொல்லுங்க?] கமலாஹாசன் பேட்டியும், கம்ப்யுட்டர் சயின்ஸ் பரிட்சையும் இருந்தால், முதலில் கமலாஹாசன், பிறகு தான் கம்ப்யுட்டர் சயின்ஸ்!

தமிழ்ச்சினிமா இசை?

பாஸ்! [இளையாராஜா பத்தின பத்தியை படிங்க!]

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பையும் மீறி, என் சுய வெறுப்பையும் மீறி கொஞ்சமாய் ஹிந்தி தெரிந்து கொண்டதால் அந்த படங்களை பார்ப்பதுண்டு. சமீபத்தில் ஹிந்தியில் மிகவும் தாக்கிய படங்கள்,

தாரே ஜமீன் பர்
லகே ரஹோ முன்னா பாய்

கணினிப் பொறியாளர்களின் வீக்யெண்ட் கலாச்சாரத்தில் நானும் கலந்து விட்டதாலும், பசித்தவனுக்கு ரேஷன் கார்டு, ரசிப்பவனுக்கு டிவிடி லைப்ரரி மெம்பர்ஷிப் கார்டு என்று ஆகிவிட்டதால் கொஞ்சமாய் மற்ற மொழிப் படங்களும் பார்ப்பதுண்டு! தாக்கிய படங்கள்...

ஃபோன் பூத்
பதேர் பாஞ்சாலி
சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்
அபோகலிப்டோ
ரன் லோலா ரன்
கேஸ்ட் அவே
தி டெர்மினல்
ஃபாரஸ்ட் கம்ப்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...

தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! ஒன்றுமில்லை! மிகவும் பிடிக்கிறது! கண்டிப்பாய் செய்வேன்! என்னால் நிச்சயமாய் மேம்படுத்த முடியும். அப்படி மேம்பட உதவினால் என்னை சினிமாவில் சேர்த்து விடுவீர்களா?

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தீபாவளிக்கு படம் வராததற்கே போஸ்டர் அடிக்கும் கூட்டம்! இதில் சினிமாவே இல்லையென்றால் ஆந்திராவில் பல விவசாயிகளுக்கு ஏற்பட்ட கதி தான் தமிழர்களுக்கு ஏற்படும் என்று நினைக்கிறேன்!
என் வீட்டிலிருந்து வெளியேறி சிறிது தூரம் நடந்து ஒரு இடது பக்கம் திரும்பி, இன்னும் சிறிது தூரம் நடந்து ஒரு வலது பக்கம் திரும்பி...அதே போல் மற்றொரு முறை செய்தால் நாயக்கர் வீடு! மதுரையில் பிறந்து வளர்ந்த நான், போன முறை மதுரை சென்ற போது என் நினைவு தெரிந்து 3வது முறையோ, 4வது முறையோ நாயக்கர் வீட்டுக்குச் சென்று வந்தேன்! வேலு நாயக்கர் பம்பாயை அல்லவா உலுக்கிக் கொண்டிருந்தார்! அவர் எங்கே இப்படி என்று முழிப்பவருக்கு, நான் சொல்வது வேலு நாயக்கரைப் பற்றி அல்ல, திருமலை நாயக்கரைப் பற்றி! [ஆஹா! என்ன ஹாஸ்யமா எழுதுறான் இந்தப் பையன்!] நான் சென்று வந்தது திருமலை நாயக்கரின் அரண்மனை! அரண்மனை என்ற வார்த்தை பெரிதாய் இருப்பதால் நாம் இந்தப் பதிவிற்காக அதை வீடு என்று வைத்துக் கொள்வோம்! [நாயக்கருக்கு என்ன கஷ்ட காலம் பாருங்கள்!]

அந்த வீட்டில் பல சரித்திரப் புகழ் மிக்க நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன..அதாவது 1994 ஆம் ஆண்டு பம்பாய் படத்தின் "கண்ணாலனே" பாட்டின் படப்பிடிப்பு நடந்த போது மணிரத்னம் ஒரு முறை என்னை பார்த்தால் போதும், அடுத்த அர்விந்த் சாமி நான் தான் என்று நினைத்தேன்! என் கஷ்ட காலமோ என்னமோ அன்று டியுஷனில் கணக்கு பரிட்சை இருந்ததால் தமிழ்நாடு பிழைத்தது...பிறகு கல்லூரிக் காலத்தில் நேருக்கு நேராய் சிம்ரனை தரிசிக்க முயன்று அந்த வீட்டு மதில் மேல் வந்தியத் தேவனை போல் ஏறிக் குதித்து [நல்ல வேளை அகழியை மூடி விட்டார்கள்!] அருகில் செல்லும்போது சே! ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு இத்தனை பாடா என்று கேனத்தனமான ஞானோதயம் பெற்று அந்த சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டவன்! இது தான் எனக்கும் நாயக்கரின் வீட்டுக்கும் உள்ள சரித்திரப் பின்னனி!

இதற்கு மேலும் என் சரித்திரத்தைக் கூறி உங்களை சித்தரவதை செய்ய விரும்பவில்லை..எங்கே, என் போட்டோகிராபி திறமையை பார்த்து வாயடைத்துப் போங்கள் பார்ப்போம்!!


இருவர் சேர்ந்தது பிடித்தாலும் முழுதாய் இந்தத் தூண்களை பிடிக்க முடியாது!

மற்றொரு சரித்திர நிகழ்வு...

விண்டோ ஏசீ?


ஒட்டடை அடித்தவன் நிலை என்ன ஆயிருக்கும்?



இது நடன நாட்டிய கலா மண்டபம்!

ஒளியை நிறம் பிரித்திருக்கிறார் நாயக்கர்!

பார்வதி தேவி என்று ஞாபகம்!

தங்கப்ப தக்கம்!














அவோ பா, அஸ்கி பெடான், பொஹ்வ்ன்டின், நத்தா நதினின் அஸ்கி சொம்மர் அவொபா...நொவ்ரா நொவ்ரீ பாயிர் பொடி ஆஸிர்வாத் க்ஹல்லுவோ! ரேய், பாபு, போட்டோ பாபு டக்கு டக்கு கெரி தெஹ்ல்லே ஆவ் சங்குஸ்! [வாங்கப்பா..பசங்க, மாட்டுப் பொண்ணுங்க, பேரன், பேத்தி எல்லாம் முன்னாடி வந்து மாப்பிள்ளை பொண்ணுகிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க...டேய் போட்டோ புடிக்கிற தம்பி, டக்கு டக்குன்னு எல்லாத்தையும் போட்டொ எடு சொல்றேன்!! என்று ஆணைகளை பறத்திக் கொண்டிருந்தார் லிங்கு மாமா]...

மணமகன் கோபாலாச்சாரி, மணமகள் அம்புஜம் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி அன்று அந்த வீடியோ விளக்கின் மஞ்சள் வெப்பத்தில், பட்டு வேஷ்டிகளும், பட்டுப் புடவைகளும் கசகசக்க, உடலெங்கும் வேர்வை ஊற்ற ஒவ்வொருவராக மணமக்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பேரன் பேத்திகள் அடிக்கடி குனிந்து எழுந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திருமணங்கள் ஆகி சில ஆண்டுகள் கடந்து விட்டபடியால் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் குனிந்து வணங்குவது சற்று சிரமமாகவே இருந்தது. இதில் போட்டோகிராபர் வேறு, தா, பஹவி ஏட் சவோ, உவ்வோ உஞ்சோ சவோ...தா துர போட் அவ்ங்காரிய கலாரஸ் உவ்வோ அசுவோ தா [அண்ணே, அண்ணி கொஞ்சம் இங்கே பாருங்க, கொஞ்சம் மேலே பாருங்க, அண்ணே உங்க வயிறு அழுத்துதுன்னு தெரியுது, கொஞ்சம் சிரிங்க] என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்.

அன்றைய கூத்துகள் அத்தனையும் ஆடி அடங்கிய பிறகு, வெராண்டாவில் ஈஸி சேரில் அமர்ந்து கையில் ஒரு விசிறியுடன் தன் ஞாபகங்களை விசிறிக் கொண்டிருந்தார். இதோ, நேற்று சொன்னது போல் இருக்கிறது....

சால் காய்தி சினிமா ஜீலி அவெங்கோ! [நட, ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு வருவோம்!]

பெய், துமீ அங்கோ ஹொராட் கெரி தொவெயோ, ஒப்புலுஸ்! துங்கோ கலய பெட்கி மெனின்னா மொகொ ஹொராட் கெரி தொவெயோ? ஆனா துங்கோ ஹிந்தோ அமீ பொஞ்சு பொவ்னோ பொல்டியோ...[அக்கா, நீங்க தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க, நான் ஒத்துக்குறேன்..உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு தானே எனக்கு கட்டி வச்சீங்க? ஆனா உங்களை இன்னைக்கு பஞ்சாயத்து பண்ண கூப்பிட வேண்டியதாயிடுச்சே...நான் என்ன செய்றது?]

மீ காய் துஸுர தல்லான் சோன் பனி தைலி ஹின்டரியகி, சின்னலின் தொவ்லி ஹின்டரியோ? ஒன்ட தல்லோ, பெல் ஜோல் காய் எதிர் சாய்கி தெல்லேன்னா எதிர் சாரியோ? துமீ சங்குவோ, மொர ஹொல்லோ காய்தி தப்பு சேயா? ஹாத் தொவதி தெட்டி சொடதி மொன்னு கோனொ லவஸ்? எல்லே பூரா மீ கோட் பெய் சங்கி ரொடத்தே? [நான் என்ன மத்த ஆம்பளங்க மாதிரி தண்ணி போட்டுட்டு ஊர் சுத்துறேனா? இல்லா கூத்தியாளை வச்சிருக்கேனா? ஒரு புருஷன் பொஞ்சாதிகிட்ட என்ன எதிர்பார்ப்பானோ அதைத் தானே நானும் எதிர்பார்க்குறேன்? நீங்களே சொல்லுங்க, என்கிட்ட ஏதாவது தப்பு இருக்கா? கைய வச்சாலே தட்டி விட்றதுன்னா மனசுக்கு எப்படி இருக்கும்? இதையெல்லாம் நான் யார்கிட்டக்கா சொல்லி அழுவுறது?]

மொகோ ஒப்பாரனி, பிள்ள ஜெனத்த வர பொருத்தில்டீ, எக மிஞ்சி மொர ஹால் முசுனா...எங்கோ கொங்கதி தொவ்ல்னோ மெனி லயத் தொவ்லந்த பெய்! மீ கொன்னி மென்னா!![எனக்கு புடிக்கலை, புள்ள பொறக்குற வரை பொறுத்துகிட்டேன், இனிமே என்னால முடியாது! இவருக்கு யாரையாவது வச்சுக்கனும்னா தாராளமா வச்சுக்கட்டும் அக்கா! நான் எதுவும் சொல்லலை...]

சியாஸ் பெய் எனோ கெரர்த்தோ வத்தோ, பிள்ள ஜெனத்த வர துனோ தங்கிலி ஹொதிர்த்தே! டாக்டர் கேர் ஆவ் மெனத் தெல்ல கானும் க்ஹல்லத்த நிஹீ! மீ காய் கெரத்தெ எகோ தொஹ்வ்லி...[பாத்தீங்களாக்கா, இவ பேசுற பேச்சை...குழந்தைங்க பொறக்குற வரை வலி தாங்கிட்டு இருந்திருக்கா! டாக்டர் வீட்டுக்கு போகலாம்னாலும் காதுல போட்டுக்குறதில்லை..இவளை வச்சிட்டு நான் என்ன செய்ய?]

நஹாபா, கோபால் இசனி தீ தெனு சொடி தெனாத்தொ வத்தொ கெரதி கொனோபா? [இல்ல கோபால், இப்படி ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்காம பேசிகிட்ருந்தா எப்படிப்பா?] துங்கோ தீ பிள்ளோ ஹொய்யோ, அத்தொ தீ தெனு செரி ஜிவானா மெனதி சோட் தெக்காரஸ்யா? தெல்ல பிள்ளன் தோன் சன பொல்டரியொநாபா...[உங்களுக்கு ரெண்டு குழந்தைங்க ஆயிடுச்சு, இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்னா நல்லாயிருக்கா? அந்த குழந்தைங்க முகத்தையும் பாக்கனுமா இல்லையா?]

அடுத்த அரை மணி நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு கோபாலாச்சாரி ஒரு முடிவுக்கு வந்தவராய் சொன்னார்...

சால் காய்தி சினிமா ஜீலி அவெங்கோ! [நட, ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு வருவோம்!]
பக்கத்து ஆத்து தேசிகாச்சாரி "சொன்னா நம்பமாட்டேள்னு" ஆரம்பிச்சா போதும் நேக்கு புரிஞ்சிரும், அவர் மாதவனைப் பத்தி ஏதோ சொல்லப் போறாருன்னு...அவனை பெத்தவா கூட இப்படி அவனை தலையில தூக்கி வச்சுண்டு ஆடியிருக்க மாட்டா, இந்த மனுஷர் அப்படி ஆடுவார்! என்ன பண்றது, நேக்கும் பொழுது போகனுமோன்னோ? இத்தனை காலமும் கவர்ன்மெண்ட்ல குப்பையை கொட்டி ரிடையர்மென்ட்ங்குற பேர்ல என்னையும் ஒரு குப்பையா எடுத்து வெளியே கொட்டிட்டா...நான் என்ன ப்ரஸ்டீஜ் பத்மநாபனா? அதையே நெனைச்சி ஓவர் ஆக்ட் பண்றதுக்கு? அவா வேலையை அவா செய்றா...

பாத்தேளா? இப்படித் தான் பேச வந்ததை விட்டுட்டு வேற ஏதேதோ பேச ஆரம்பிச்சிருவேன், என்ன சொல்லின்டிருந்தேன்? மாதவன்! அவன் எங்க அக்ரஹாரத்துக்கு வந்து ஒரு ஆறு மாசம் தான் ஆறது. சொந்த ஊர் ஸ்ரிரங்கம். வத்தலுக்கு சொக்காய் போட்டது போல ஒரு ஒடம்பு! சார்டர்ட் அக்கவுண்டட் ஆறது தான் அவன் கனவாம்! இங்கே வாடகைக்கு ஒரு அகத்தை எடுத்துண்டு ஏதோ கோச்சிங் சென்டர் போயின்ட்ருக்கான்! எங்க ஆத்துல சின்னது இருக்கே, அவனை ஃப்ரூட்னு தான் சொல்வா! வாண்டு! நாள் தவறாம சந்தியா வந்தனம் பண்றானாம், கீதை படிக்கிறானாம், வேதத்துக்கு அர்த்தம் சொல்றானாம்! பொறுக்கிகளைக் கூட நம்பிடலாம்! ஆனா இந்த மாதிரி ஊமைக் குசும்பன்களை நம்பவே கூடாது...என்ன பண்றது தேசிகாச்சாரி விட்டா அவனுக்கு தன் சொத்து பூராவும் எழுதி வச்சுருவார் போலிருக்கே? நீங்களே சொல்லுங்கோ? இந்த காலத்துல யாரை நம்ப முடியிறது?

அன்னைக்கு மத்தியானம் வானம் கொஞ்சம் மந்தமா இருந்தது! போஜனம் முடிச்சுண்டு வெத்தல பெட்டியை எடுத்துண்டு காத்தாட திண்ணைக்கு வந்தேன்! மணி ஒரு மூணு இருக்கும், தெருவுல ஆள் நடமாட்டம் இல்லை. அப்போதான் மாதவன் புத்தகம் கையுமா அவன் ஆத்துல நுழைஞ்சான். நான் எங்கேயோ பார்த்துண்டே, எதொ யோசனையில் வெத்தலையை கொதப்பின்டே திரும்பி பாத்தா பாரூ எம்பி எம்பி மாதவன் வாசக் கதவைத் தட்றா! வெளியே வந்த மாதவன் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பாத்துட்டு, அவளை உள்ளே அழைச்சுண்டான்! நான் திண்ணையில இருந்தது அவனுக்கு பார்வையில படாது!

பாரூ தேசிகாச்சாரியின் மகள். பாரூக்கு ஒரு இருபது வயதிருக்கும். மூன்று வயதில் மூளைக் காய்ச்சல் வந்து அவளை முடக்கி விட்டது. தத்தித் தத்தித் தான் நடப்பாள். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியிருந்தும், ஐந்து வயதுக்குறிய மூளை வளர்ச்சி தான்! இவ எதுக்கு அவன் ஆத்துக்கு இந்த சமயத்துல போறா? பட்டப் பகல்ல என்ன கர்மம் என்று என் நெஞ்சு அடித்துக் கொண்டது! விசுக்கென்று எழுந்து சென்று பார்க்கவும் திராணியில்லாமல், சத்த நேரம் பித்து பிடித்தாப்ல உக்காந்துட்டேன்! பிறகு கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திண்டு மெல்ல எழுந்து சத்தமில்லாமல் அவன் ஜன்னலின் இடுக்கில் நோக்கிய எனக்கு தூக்கி வாரிப் போட்டது!

அந்த எட்டுக்கு எட்டு அறையில் ஒரு ஓரத்தில கிழிஞ்ச பாய் போட்டுன்டு அவ நன்னா தூங்கின்டு இருக்கா!! இவன் இந்த ஓரத்தில் உக்காந்துண்டு படிச்சிண்டு இருக்கான்! அவன் மெல்ல எழுந்து டேபிள் ஃபேனை அவ பக்கமா திருப்பி வச்சுட்டு அவ தலைக்கு கீழே ஒரு தலைகாணியை போட்டுட்டு ஆறுதலா அவ தலையை தடவி விட்டுட்டு மறுபடியும் அவன் இடத்துக்கு வந்து படிக்க ஆரம்பிச்சுட்டான்! நேக்கு கண்ல ஜலமே வந்துடுத்து!

சொன்னா நம்பமாட்டேள்!
ஒரு பெஞ்சில் இரண்டு சிறுவர்களின் கால்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன! அவர்கள் இருவரும் ஏதோ ஒரு சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது...

சட்டென்று ஒருவனின் கால்கள் ஆடுவது நிற்கிறது! அதைத் தொடர்ந்து மற்றவனின் காலும் நிற்கிறது....

மணி: காட் ப்ராமிஸ்? [கையை நீட்டுகிறான்!]
சிபி: காட் ப்ராமிஸ் [கையில் அடிக்கிறான்]
மணி: உனக்கு எப்படி தெரியும்?
சிபி: எத்தனை சினிமா பாத்துருக்கேன்!
மணி: நான் நம்பலை...
சிபி: நாளைக்கு என் கூட வா, உன்னை இன்ட்ரொட்யுஸ் பண்ணி வைக்கிறேன்!
மணி: சரி

மறுபடியும் கால்கள் ஆடுகின்றன...

மணி: ஏதுடா இந்த ரோஸ்?
சிபி: எங்க தோட்டத்துல பறிச்சேன்...
மணி: எதுக்கு?
சிபி: அன்னைக்கு நான் கோயிலுக்கு பூ கொண்டு போகும்போது என்கிட்ட ஒரு பூ கேட்டாங்க, நானும் குடுத்தேன்! தலையில வச்சிகிட்டு நல்லா இருக்கான்னு கேட்டாங்க...ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னேன்! என் கன்னத்தை கிள்ளி சிரிச்சாங்க
மணி: நீ பொய் சொல்றே
சிபி: நீ தான் பாக்க போறியே...
விட்டுக்கு வெளியே நின்று...
சிபி: ரோஸி
மணி: இதான் அவங்க பேரா?
சிபி: ஆமா, நல்ல இருக்குல்ல! வாசனையா?
ரோஸி: ஹேய் சிபி! குட் மார்னிங்...
சிபி: இது உங்களுக்காக!
ரோஸி: சோ ஸ்வீட்! சார் யாரு?
சிபி: இவன் மணி, என் ஃப்ரண்ட்.
மணி: என் பேர் ஏ. ஐ. மணிகண்டன். நான் சிக்ஸ்த் ஏ செக்ஷன்.
ரோஸி: என் பேர் ரோஸிலினா, காலேஜ்ல பீ.காம் படிக்கிறேன்.
மணி: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, சிபியை நீங்க லவ் பண்றீங்களா?
ரோஸி: ஆமா அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
[மணி ஓடுகிறான். சிபி துரத்துகிறான், ரோஸி சிரித்துக் கொண்டே உள்ளே போகிறாள்]

சிபி: டேய் மணி, நில்ரா..டேய் நில்லு
இருவரும் நிற்கிறார்கள். மூச்சு வாங்குகிறது..
சிபி: எப்படி?
மணி: இந்த கல்யாணம் நடக்காதுடா
சிபி: ஏன்?
மணி: அவ எவ்வளவு ஹைட்! நீ இத்துனூன்டு இருக்கே...
சிபி: நானும் ஹைட் ஆயிடுவேன்டா
மணி: கிழிப்பே
சிபி: இப்போ என்னடா செய்றது?
மணி: நீ சீக்கிரம் ஹைட் ஆகனும்
சிபி: அதுக்கு என்ன செய்யனும்?
மணி: எங்க அண்ணன் செம ஹைட்டுடா..அவன்கிட்ட கேப்போம்
சிபி: சரிடா.

மறுநாள்...

மணி: ஹைட்டா வளரணும்னா நிறைய ஸ்கிப்பிங் ஆடனுமாம், நிறைய எக்ஸர்சைஸ் பண்ணனுமாம். நிறைய பால் குடிக்கனுமாம்!
சிபி: அது பால் இல்லைடா! காம்ப்ளான், நான் தான் டெய்லி டூ டைம்ஸ் குடிக்கிறேனே!
[சிபி ஒரு முடிவுக்கு வருகிறான்]

சிபியின் கையில் புது ஸ்கிப்பிங் ரோப்! சிபி குதிக்கிறான்..விழுகிறான், எழுகிறான்! மணி உதவி செய்கிறான்.இரண்டு முறை குதித்து விட்டு தன் உடலை ஜான் போட்டு அளக்கிறான். மணி இவனை விட நன்றாய் ஸ்கிப்பிங் ஆட சிபி அவனை தடுத்து நிறுத்துகிறான்! அவனையும் ஜான் போட்டு அளக்கிறான்!

சிபி: வேணாம்! நீ பண்ணாதே
மணி: ஏன்டா?
சிபி: அப்புறம் நீ விட ஹைட் ஆயிட்டா?
[மணி பேயரைந்து நிற்கிறான்]

மறுநாள் ரோஜாவுடன் இருவரும் ரோஸி வீட்டுக்குச் செல்கின்றனர்! வாசலில் ரோஸி யாருடனோ பைக்கில் போகிறாள்! அவளுடைய அம்மா டாட்டா காட்டுகிறாள்!
சிபி: ரோஸி எங்க போறா?
அம்மா: அவ சினிமாக்கு போறா...சிபி, ரோஸி அக்காக்கு கல்யாணம்டா. உங்க அம்மாகிட்ட சொல்லு என்ன?
சிபி: யாரு கூட?
அம்மா: அந்த பைக்ல போறாரே அவர் கூட [உள்ளே போகிறார்]
மணியும் சிபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்!
மணி: நீ ஏன்டா அவங்க அம்மாகிட்ட சொல்லலை?
சிபி: என்னை பாக்கும் போது சிரிச்ச மாதிரி தான்டா அந்த பைக்ல போகும்போது சிரிச்சா!
மணி: இந்த பொண்ணுங்களே இப்படித் தான்டா! அவங்களை நம்பவே கூடாதாம்! எங்க அண்ணன் சொல்வான்!

சிபி கையிலிருக்கும் ரோஜாவை தூக்கி எறிகிறான்!
மணி ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டே வருகிறான். சிபி எதுவும் சொல்லாமல் நடக்கிறான்...
எனக்கு நிச்சயமாய் தெரியும்
நீ சிரித்திருப்பாய்
மேகம் தான் தூறுகிறதே!
-------------------------------------------------------------------------------------------------
நீ வீட்டில் இல்லாத
ஒரு பொழுதில்
நானிருந்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்...
வீடெங்கும் நீ
நிறைந்து கிடக்கிறாய்!
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத சமயத்தில்
நீ வளர்க்கும் பூனை
உன் கதகதப்பு வேண்டி
மடித்து வைத்திருக்கும்
உன் புடவையில் துயில்கிறது
பாவம்...பூனைக்கு எப்படித் தெரியும்?
புருஷனுக்குத் தான் முதல் உரிமை என்று?
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத தருணத்தின் மெளனம்
உன்னை விட அதிகம்
தொனதொனக்கிறது!
-------------------------------------------------------------------------------------------------
எதிர்பாராமல் நம் கண்ணைக் குத்தும்
குழந்தை போல் திடீரென்று
வந்து விடுகிறது மழை

நீ இருந்தால்
மழையை விட சடசடத்துக் கொண்டே
கொள்ளையில் காயும் துணிகளை
அள்ளிக் கொண்டு வருவாய்!

மழை வாசனையோடு
மிகக் கொஞ்சமாய் நனைந்து
என் அருகே வந்து அமர்வாய்

ஜன்னலின் வழியே பார்க்கிறேன்!
கொல்லையில் துணிகள் நனைகின்றன...
நான் உள்ளே நுழையவும் "சரி பவி மீ அவுஸ்" [சரி அண்ணி, நான் கெளம்புறேன்] என்று அவள் கிளம்பவும் சரியாய் இருந்தது...

சாந்திக்கு வயது ஒரு 35 இருக்கலாம். அவள் வறுமைக்கும் வயிருக்கும் சம்மந்தமில்லை...நல்ல புஷ்டி! இருட்டில் பிடித்த கொலக்கட்டை போல் கொச கொசவென்று நான்கைந்து, வீடுகள் என்ற பெயரில் இருக்கும் கூடுகள் எங்கள் காம்பவுண்ட்! அந்த கொச கொச கூடுகளில் எங்கள் பக்கத்துக் கூட்டில் வசிப்பவள் இந்த சாந்தி. எல்லோரும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்தவர்கள். உங்களை பொறுத்த வரை காய்ரா பூய்ரா ஜாதி!

அவள் புருஷன் மகா யோக்கியன். குடிக்காமல் பெண்டாட்டியை கை நீட்டி அடிக்கவே மாட்டான்! அதே சமயம் குடிக்காமல் இருக்கவே மாட்டான்! இந்த இரண்டு வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வருபவன், எப்படியோ இன்னொரு வேலையும் பொறுப்பாய் செய்துள்ளான். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். குடிகாரனின் குழந்தைகளாய் இருந்தாலென்ன, அத்தனை அழகு!

சாந்திக்கு இரண்டு வேலை தெரியும். ஒன்று தைப்பது; இன்னொன்று அழுவது! ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் பெயரை வரைவது போல் சாந்தியும் ஜாக்கட்டை தைத்து தன் பெயரை அதில் வரைந்திருந்தால், மதுரையில் அந்த ஏரியாவில் சந்துக்குச் சந்து இருக்கும் பெண்களின் மேல் அவள் பெயரை பார்க்கலாம்! அவ்வளவு தைத்திருக்கிறாள்! சாதாரண ஜாக்கெட் 30 ரூபாய். பஃப் கை 35! தொட்டி கழுத்து வைத்து பாசி வைக்க 40. ஜன்னல், பால்கனி என்று விதவிதமான டிசைன்கள், விதவிதமான ரேட்டுகள்! எங்கள் கொச கொச காம்பவுண்டில் எங்கள் வீடு ஒரு மாதா கோயில்! மாதா கோயிலின் பாதிரியார் போல் என் அம்மா எல்லோரின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு பாவ மன்னிப்பு கொடுப்பார்! எல்லாவற்றையும் சொல்லி அழுவதில் அவர்களுக்கு ஒரு ஆறுதல்! இன்றும் சாந்தி கண்னைத் துடைத்துக் கொண்டே தான் சென்றாள்!

ககம்பா தூ காய்தி மெல்லே சேத்தே! தெனு சா ரொல்லே ஜாராஸ்! [ஏம்மா நீ ஏதாவது சொல்லிட்டு இருக்கே? பாரு அவங்க அழுதுட்டே போறாங்க] என்று அம்மாவை கலாய்த்தேன்!

ஹாய் மீ தெகோ சசு சா காய்தி மெனத்த..ஜீ பாத் தைலி காரா [ஆமாம், நான் தான் அவ மாமியாரு, ஏதாவது சொல்றதுக்கு! போய் சாப்பிட்றா...]

நான் சாப்பிட ஆரம்பித்ததும், அம்மா ஆரம்பித்து விட்டாள்! சாந்தி சொல்லி அழுததெல்லாம் என்னிடம் சொல்லி அவள் மீது பரிதாபப்பட்டாள்! மாதா கோயிலின் அடுத்த பாதிரியாராக என்னை பாவித்துக் கொண்டேன்! குழந்தைகளுக்கு பள்ளியில் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அவன் குடித்து விட்டானாம்! கேட்டதற்கு சிகெரட் நெருப்பை வைத்து கையை சுட்டு விட்டானாம். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இப்படி மனம் போன போக்கில் நடந்து கொள்கிறானாம். மூன்று பெண் குழந்தைகளையும் பார்த்து பார்த்து எரிந்து விழுகிறானாம். என் அம்மாவுக்கும் கண் கலங்கித் தான் இருந்தது...மனிதர்கள் ஏன் இத்தனை கேவலமான பிறவிகளாய் இருக்கிறார்கள்? இவர்களுக்கு ஏன் குடும்பம், குழந்தை குட்டி? எப்படி இவ்வளவு நீச்சமாக நடந்து கொள்ள முடிகிறது? எப்படி இருந்தாலும் அந்தப் பெண் பாவம் அவனுடன் தான் காலம் தள்ள வேண்டும் என்பது எத்தனை கொடுமை...எப்படி அவளால் அவனுடன் சிரித்துப் பேச முடியும்? நாள் முழுதும் சண்டை போட்டு விட்டு எப்படி அவன் முகம் பார்த்து வாழப் பிடிக்கும்? என்று ஆயிரம் கேள்விகள் என் மனதில் எழுந்தன...நானும் சாப்பிட்டு விட்டு எழுந்தேன்!

மறுநாள் நான் கல்லூரியிலிருந்து வர நேரமாகிவிட்டது...பாதிரியார் தனியாகத் தான் இருந்தார். எந்தப் பாவியும் மன்னிப்பு கேட்க வரவில்லை போலும். பயங்கர பசி...

காய் அம்பா கெர்ரித்தே ஹிந்தோ? [என்னம்மா செஞ்சிருக்கே இன்னைக்கு?] என்ற என் பார்வையில் அந்த குளோப் ஜாமுன் விழுந்தது! ஒரு அழகான பெண்ணை பார்த்து வழிவதைப் போல் நாக்கு ஜொள்ளு வடித்தது! காய் விஷேஸ் ஹிந்தோ? கோனே எல்லே? [என்ன விஷெசம் இன்னைக்கு? ஏது இது?] என்று வாயில் போட்டேன்!

சாந்தி கெவ்ரார் மெனா! தெனோ அந்திர்தே! [சாந்தி முழுகாம இருக்காளாம், அவ கொடுத்தா!] என்றாள் அம்மா! குளோப் ஜாமூன் நெஞ்சை அடைத்தது!