நான் பார்த்த வரை அமேரிக்கர்கள் மந்த புத்திக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்! [நான் பார்த்த வரை!] கடிவாளம் போட்ட குதிரை போல, தான் இத்தனை வருடங்கள் எப்படி ஒரு வேலையை செய்தோமோ, அது எத்தனை சுற்றி வளைத்து செய்ய வேண்டி இருந்தாலும் அதையே செய்கிறார்கள்! ஏன் இதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டும்? இதற்கு வேறு வழி இல்லையா என்று யோசிக்கவே மாட்டார்களோ என்னமோ?

நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு நாள் ஒரு அமேரிக்க நண்பனை வைத்துக் கொண்டு வேர்ட் டாக்குமென்டில் டாக்குமென்டிக் கொண்டிருந்தேன்..தலைப்புக்காக சிலவற்றை அடிக்கோடிட்டேன். அதாவது "கன்ட்ரோல் யு" அடித்தேன். திடீரென்று அவன் பதட்டப்பட்டு, அது எப்படி மெளஸ் இல்லாமல் நீ கோடு போட்டாய் என்று வியந்து கேட்டான்! நான் ஷார்ட் கட் கீ என்று சொல்லி எப்படிச் செய்வது என்று காண்பித்தேன்! "யு ஆர் ஜீனியஸ்" என்றான்! ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான்டா என்று நானும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய ஜீனியஸ் தனங்களை வெளிக்காட்டிக் கொண்டேன். நீ டீ ஆத்தக் கூட லாயக்கில்லை என்று பள்ளியில் என் வாத்தியார் என்னை திட்டியது எனக்கு ஞாபகம் வந்தது!! இதில் பாரட்டப்பட வேண்டிய விஷயம், தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதில் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை! நம்மைப் போல் எனக்குத் தெரியும், இருந்தாலும் உனக்கு தெரியுதா என்று டெஸ்ட் பண்ணேன் என்று பீலா விடுவதில்லை.என்னை பொறுத்தவரை, பொதுவாகவே இவர்கள் ஒரு நாள் மாங்கு மாங்கு என்று பார்க்கும் வேலையை நாம் ஒரு மணி நேரத்தில் செய்து விடுவோம் என்று தோன்றுகிறது! அதனால் தான் இந்தியர்களுக்கு இங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு மெளசும் நிறைய மவுசும் இருக்கிறது! [மெளஸ், மவுசு எப்படி கனெக்ட் பண்ணேன் பாத்தீங்களா? அப்படி பொங்குதுங்க..சரி சரி!]

அமேரிக்காவின் பெயரை மாற்றி பேப்பரிக்கா என்று வைக்கலாம்! அத்தனை பேப்பர்களை செலவழிக்கிறார்கள்! இன்று ஒரு நாள் யாரும் எந்த வகையான பேப்பரையும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லி விட்டால் போதும், பாதிக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்! கம்ப்யுட்டரில் ஒரு ஃபைல் தயாரித்து அதை ஒரு ஃபோல்டரில் போட்டு, அந்த ஃபைலை ப்ரிண்ட் எடுத்து அந்த பேப்பரை ஒரு ஃபைலில் போட்டு அதன் மேல் பத்து பதினைந்து ஸ்டிக் நோட் போட்டு டாக்டர் கையெழுத்தில் ஏதோ கிறுக்குகிறார்கள்! கடைசியில் தேடும்போது எது வேண்டுமோ அதை தவிர ஏகப்பட்ட பேப்பர்கள் இருக்கின்றன..ப்ரிண்டருக்கு வாய் இருந்தால் கதறி அழும்! நான் இந்தியாவில் ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை ப்ரிண்ட் எடுக்க போவேன், அன்னைக்குன்னு பாத்து பேப்பர் இருக்காது, இல்லைன்னா சோடா புட்டி கண்ணாடி போட்டு பாத்தாலும் தெரியாத அளவுக்கு மங்கலா விழும்! நானும், ஆனியே புடுங்க வேணாம்னு வந்துருவேன்!

நான் இங்கு வந்த அன்று என் ஸீட்டில் ஒரு பெரிய டப்பா கொண்டு வந்து வைத்தார்கள்! முழு மகாபாரதத்தை ப்ரிண்ட் எடுத்து அதற்கு பின் போட எவ்வளவு பெரிய ஸ்டாப்லர் வேண்டுமோ அவ்வளவு பெரிய ஸ்டாப்லர்! ஒரு பெரிய கத்திரிக்கோல், பெரிய பஞ்சிங் மெஷின், நிறைய ஸ்டிக் பேட், நிறைய பேப்பர் க்ளிப்ஸ், சலஃபன் டேப், நிறைய மார்க்கர்ஸ் [மஞ்சள் கலர் சிங்குசா, பச்சை கலர் சிங்குசா...சே சே!], பேனாவில் தப்பாய் எழுதி விட்டால் அழிப்பதற்கு எரேசர் [ப்ளேடால் எப்படி அழிப்பது என்று இவர்களுக்கு இன்னும் தெரியாதா? பென்சில் என்றால் எச்சி தொட்டு அழிப்பது தான் பெஸ்ட்!] எனக்கு சந்தேகமே வந்து விட்டது, எனக்கு கம்ப்யுட்டர் கொடுப்பார்களா இல்லை அரசு அலுவலகம் மாதிரி பெரிய பெரிய பேரெடை கொடுத்து அதில் ப்ரோக்ராம் எழுது என்று சொல்லி விடுவார்களோ என்று! அடப்பாவிகளா..அவர்கள் கொடுத்த ஒன்றை கூட நான் இன்னும் தொடவில்லை, சில பேப்பர் க்ளிப்ஸை தவிர..கனினியின் பயனை இன்னும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று படுகிறது!

NOTE: இந்த பத்தியை சாப்பிட்டுக் கொண்டே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

அலுவலகத்தில் விடுங்கள், டாய்லட்டில்..அட நம் நாட்டில் தான் தண்ணீர் பஞ்சம் இருந்தும் தண்ணீர் இல்லையென்றால் நாம் வருவதை கூட அடக்கிக் கொண்டு விடுவோம்! இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! துடைத்துக் கொண்டு ஒரு அரை மணி நேரம் சோப்பு போட்டு இவர்கள் கை கழுவுகிறார்கள்! [இப்போ என்ன பண்ணிட்டீங்கன்னு இந்த தேய் தேய்க்கிறீங்கன்னு கேக்கலாம் போல இருக்கு!] என் நண்பரிடம் ஏன் இவர்கள் கக்கூஸில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை என்றதற்கு அவர்கள் கையை அந்த மாதிரி இடங்களிலெல்லாம் உபயோகிக்க மாட்டார்கள் என்றார். எனக்கு ஏனோ நான் பார்த்த ட்ரிபில் எக்ஸ் படமெல்லாம் ஞாபகம் வந்தது! சுத்தக்கார பாப்பாத்திகள்!

இன்னொரு முக்கியமான விஷயம் எப்போது பார்த்தாலும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள்! அலுவலகத்தில் ஒரு பெண் ஒரு மூட்டை பாப்கார்னை [உங்கள் தலை மேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!] கம்ப்யுட்டரில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு மணி நேரத்தில் தின்று தீர்த்து விட்டாள்! இருந்த இடத்திலேயே உட்கார்ந்து என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்பது இவர்களுக்கு மிக்க வசதியாய் இருக்கிறது. நம்மை மாதிரி வத்தக் குழம்பை சாதத்தில் குழைத்தா அடிக்க போகிறார்கள்! வாயில் நுழையாத பெரிய பர்கர் அல்லது சான்ட்விச்..அதில் ஆடு, மாடு, கோழி, பன்னி என்று அடித்து போட்டிருப்பார்கள்! நாளைக்கு ஒரு ஃபுட் ஃபெஸ்டிவல் வந்து விடுகிறது! எப்போதும் ஏதாவது கொறிக்க இருந்து கொண்டே இருக்கிறது! என் அமேரிக்க நண்பன், போ, போய் எடுத்து சாப்பிடு என்று என்னை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளுவான்! நண்பா, உன் அன்புக்கு ரொம்ப நன்றி நீ ஒன்றை மறந்து விட்டாய், நான் அமேரிக்கன் இல்லை இந்தியன்..உங்களைப் போல என்னால் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று மன்றாடினேன்! அவன் விழுந்து விழுந்து சிரித்தான்! சாப்பிட்டுக் கொண்டே இருப்பது எங்கள் வேலைகளில் ஒன்று என்றான்! [அவன் சொல்லும்போது எனக்கு அவ்வளவு புரியவில்லை, வாயில் அவ்வளவு பெரிய பர்கரய்யா..பர்கர்!] நானும் அவ்வப்போது அவர்களை போல் கொறிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் நினைக்கிறேன்! சென்னை போனதும் சாப்பிடாம எப்படி நீங்க எல்லாம் வேலை செய்றீங்கன்னு கேட்டு டின் வாங்கி கட்டிக்க போறேன் என்று தோன்றுகிறது!! am i getting westernized?

- பயணப்படும்
தேன்கூட்டிற்காக



1995 - செளராஷ்ட்ரா காலேஜ், மதுரை.

ஒரு மலையை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் தொடங்கியது என் வாழ்வின் வசந்த காலம். நாம் நடந்து வந்த அந்த வசந்த காலங்களை சற்றே திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் நம்மையறியாமல் நம் முகத்தில் ஒரு புன்னகை அரும்பும். இன்று என் முகத்திலும் அதே புன்னகை. என் கல்லூரிக் நாட்களை பற்றி வலை பதிய வேண்டும் என்று வெகு நாட்களாய நினைத்துக் கொண்டிருக்கிறேன், அது சிறில் அலெக்ஸ் மூலம் குறும்பு என்ற தலைப்பின் மூலமும் இன்று நிறைவேறுகிறது. அதற்கு நான் முதலில் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்! எத்தனை இனிமையான நாட்கள்? எதிர்காலத்தைப் பற்றி எந்த பயமும் இன்றி, எந்தக் கவலையும் இன்றி பாடித் திரிந்த அந்த நாட்களை அசை போடுவது எனக்கு கசக்கவா செய்யும்? அதிலும் கரும்பு தின்ன கூலி போல் அதற்கு தேன்கூட்டில் பரிசு வேறு கொடுக்கிறார்கள். கல்லூரி வாழ்வில் இல்லாத குறும்புகளா? பேச்சுகளா? கேலிகளா? கிண்டல்களா? [அப்பாடா பில்டப் ஓவர்!]



சீனியர்: பஸ்ட் இயரா?
நான்: ஆமா
சீனியர்: எந்த க்ரூப்?
நான்: பி.எஸ்.எஸ்ஸி. பிசிக்ஸ்
சீனியர்: ஓ, ராணி க்ளாஸா? [பெயர் மாற்றப்படவில்லை]
நான்: இல்லை, ராணி தான் என் க்ளாஸ்!
சீனியர்: ???!!! [வலை நாகரீகம் கருதி அவர் சொன்னது சென்ஸார் செய்யப்படுள்ளது..ஹிஹி]



மாமா கூப்பிட்றாருன்னு அந்த அக்காவை கூப்பிடு என்று என்னை கேர்ள்ஸ் பார்க்குக்குள் அனுப்பி வைத்தார்கள். [பெண்களுக்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும், அதற்கு நாங்கள் வைத்த பெயர் ஜுராஸிக் பார்க்] அங்கெல்லாம் போகக்கூடாது என்று தெரியாமல் ஐ, கேர்ள்ஸ் பார்க் ஆச்சே, ராக்கிங் என்றால் இப்படி இல்ல இருக்கனும் என்று குடு குடுவென ஓடிய என்னை தடுத்து நிறுத்த படாத பாடு பட்டுப் போனார்கள் சீனியர்கள்!



நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்னமோ, காலேஜே சைட் அடிக்கும் ஒரு பெண் என் க்ளாஸில் இருந்தது. பசங்க எல்லாம் சேந்து என்னை அவளிடம் முதலை கதை சொல்லச் சொன்னார்கள். முதலை கதை உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு கதையாகப்பட்டது என்னவென்றால்...

முதலை இருக்கும் ஒரு குளத்தில் நீங்கள் இறங்குகிறீர்கள், அது உங்கள் காலை பிடித்துக் கொள்கிறது நீங்கள் என்ன சொன்னால் அந்த முதலை உங்கள் காலை விடும்? இது கேள்வி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அப்படி சொன்னா விட்ருமா? என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் விஷயம்.

தெரியலை நீயே சொல்லு என்றாள்.

தெரியலை நீயே சொல்லுன்னா விட்றுமா? என்றேன்

என்ன சொல்றது என்று சிரித்தாள்

என்ன சொல்றதுன்னா விட்றுமா?

ஐய்யோ, ஆளை விடு பிரதீப்

ஐய்யோ, ஆளை விடு பிரதீப்ன்னா விட்ருமா?

ஒன்றும் சொல்லாமல் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்

இப்படி ஒன்னும் சொல்லாம சிரிச்சுட்டே இருந்தா விட்ருமா?

அவள் சிரிப்பில் மயங்கி..நான் பசங்களை பார்த்தேன். டேய் ஒரு வேளை இவ சிரிச்சா முதலை விட்ருமோன்னேன்! யாரும் இதை எதிர்பார்க்கவில்லை, எல்லோரும் மிகவும் ரசித்து சிரித்தார்கள்!



சீனியர் பெண்களிடம் கடலை போடுவது என் தலையாய கடமை. அதிலும் இந்த சேம் சேம் ஸ்வீட் விளையாட்டு இருக்கே..இரண்டு பேர் ஒரே கலரில் ட்ரஸ் போட்டிருந்தால் யார் முதலில் சேம் சேம் ஸ்வீட் சொல்கிறார்களோ அவருக்கு இன்னொருவர் சாக்லேட் வாங்கித் தரணும். அதிலும் காலேஜ் பெண்களுக்கு காட்பெரீஸுக்கு கீழ் மிட்டாய்கள் இருப்பதே தெரியாது. நான் அதற்கு மசியவே மாட்டேன். ஜீரக மிட்டாய் ஒரு பாக்கெட் வாங்கி ஆளுக்கு 2 தர்றேன் வாயில போட்டுக்குங்க என்று நழுவி விடுவேன். இன்னொரு முறை இப்படித் தான் ஒரு பெண் சேம் சேம் ஸ்வீட், கிவ் மீ எ ஸ்வீட் என்றாள், நானே ஸ்வீட், என்கிட்ட போய் வேற ஸ்வீட் கேக்குறியே என்றேன், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும்! [இனிமே ஸ்வீட் கேப்பியா? கேப்பியா?]



ஜீனியர் நானே இப்படி இருந்தால் என் சீனியர்ஸ் எப்படி இருப்பார்கள்! என் தம்பியும் என் காலேஜில் என் க்ரூப்பில் என் ஜீனியராய் சேர்ந்தான்! ஒரு செமஸ்டர் முடிந்து ரிசல்ட் வந்ததும் என் சீனியர் ஒருவர், என்ன உன் தம்பி எப்படி மார்க் எடுத்துருக்கான் என்று கேட்டார். நானும் தெனாவட்டாய், சூப்பர் மார்க், அள்ளிட்டான்ல யாரு ட்ரைனிங் எல்லாம் ஐய்யா தான் என்று என் காலரை உயர்த்தி பீத்திக் கொண்டிருந்தேன். அவர் அமைதியாய், நல்ல வேளை உன் தம்பி நீ சொல்லித் தந்ததை கவனிக்கலைன்னு நினைக்கிறேன் என்றார். சீனியர் சீனியர் தான்!



காலேஜில் மாடல் எக்ஸாம் என்று ஒன்று வைப்பார்கள். செமஸ்டர் வருவதற்கு முன் ஒரு தடவை மாதிரி பரிட்சையாம்! செமஸ்டருக்கு படித்து பாஸாவதே பெரிய விஷயம், இதில் மாடல் எக்ஸாம் வேறு. மாதிரி பரிட்சை என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரே போட்டி தான்..பரவாயில்லையே, படிப்புன்னா போட்டி இருக்கனும் என்று புருவம் உயர்த்தாதீர்கள், போட்டி, யார் முதலில் எக்ஸாம் ஹாலில் இருந்து வெளியே வருவது என்று! இதற்கு நைட் ஸ்டடி வேறு போட வேண்டும், அப்பா எத்தனை வேலைடா..என் நண்பனின் பாட்டி விட்டிற்கு கூட்டமாக கிளம்பி விடுவோம். பக்கத்தில் தான் அலங்கார் தியேட்டர். அப்போது அங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே [இதை படிக்கவே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே, நான் அடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்?] என்ற ஹிந்திப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரிட்சை நடந்த அத்தனை தினங்களும் நைட் ஸ்டடி அங்கு தான்..ராத்திரி கண் விழித்து படம் பார்த்து விட்டு, பரிட்சை ஹாலில் தூங்காமல் முதல் ஆளாய் வெளியே வருவதில் இருக்கும் கஷ்டம் அனுபவித்தால் தான் தெரியும். ஹாலில் பசங்க அநியாயம் பண்ணுவாங்க. கேள்வித் தாளை தரும்போது, சிலர் இது எதுக்கு சார் என்று வந்தவரை கலாய்ப்பார்கள்.ஒரே ஒரு பேப்பர் தான் வாங்குவார்கள். அதில் முதல் 2 வரி தான் எழுதப் பட்டிருக்கும். அதுவும் கேள்வியாய் தான் இருக்கும். அந்த ஒரு பேப்பருக்கு சார் நூல் என்று ஒருத்தன் எழுந்து நிப்பான். வாங்குவது ஒரு பேப்பர், அதையும் பின்னால் இருப்பவனுக்கு பார்த்து எழுத கொடுத்து விட்டு வெறும் மேஜையில் தலை கவிழ்ந்து படுத்திருந்தான் ஒருவன். சூப்பர்வைசர் அவனை பார்த்து அதிர்ந்து பேப்பர் எங்கே என்றார், அவன் மெல்ல அழுகும் குரலில், இவன் பாத்து எழுத வாங்கிட்டு தர மாட்றான் சார் என்றான். அவருக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அவர் காப்பி அடித்துக் கொண்டிருந்தவனிடம், பேப்பரை வாங்கி பார்த்து அதிர்ந்து கேட்டார், ஏன்டா அவனே 2 வரி எழுதியிருக்கான். அதை நீ வேற பாத்து எழுதுறியா குட்றா அவன் பேப்பரை என்று கடிந்து கொண்டார். இது எப்படி இருக்கு?



ஒரு நாள் லஞ்ச் முடிந்து எல்லோரும் தூங்கி வழிய ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் அவரவர் பெஞ்சில் தலை சாய்த்து படுத்திருந்தோம். ப்ரொஃபஸருக்கோ பரந்து விரிந்த தலை..வழுக்கை சார்! திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். என் பக்கத்தில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினேன். அவன் தூக்கத்தை கெடுத்த கடுப்பில் என்னடா, சொல்லித் தொலை என்றான். நான் மெல்ல அவனிடம், டேய் மாப்ளே..இந்த ஆளு எப்பிட்றா முகம் கழுவுவாரு? ரொம்ப தூரம் கழுவ வேண்டி இருக்கும்ல..ரொம்ப கஷ்டம்டா..என்றேன்! அவன் சிரிப்பை அடக்க முடியாமல் அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பெஞ்சுக்கு அடியில் சரிந்து விட்டான்.



இப்படித் தான் ஒரு வாத்தி போர்டில் ட்ரான்ஸிஸ்டர் [இது 98.3 FM ட்ரான்ஸிஸ்டர் இல்லை, பிசிக்ஸ் ட்ரான்ஸிஸ்டர்பா..] படத்தை போட்டார். நாங்களும் தூக்கம் வராம இருக்க ரொம்ப பொறுப்பா அதை நோட்ல வரஞ்சோம். அவர் வெறுத்து போய் இந்த படத்தை தான் நான் டெய்லி போட்றேன், இதை ஆயிரம் தடவைக்கு மேல போட்டாச்சு என்றார்! [எல்லாம் ஒரே கட்டம் கட்டமா தான் இருக்கு...யாரு கண்டா!] ஒரு வேளை இது தான் வாத்தி குறும்பா?



கெமிஸ்ட்ரி லேப் என்றாலே டெஸ்ட் ட்யூப்களும், பியுரட்டுகளும், பிப்பட்டுகளும் வைத்து ஜிமிக்ஸ் வேலை காட்டுவது தானே..அங்கு இருந்த வாத்தியாருக்கு பசங்க என்ன பேர் வச்சுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? ஜீபூம்பா! [ஹைட் ஆஃப் க்ரேயேடிவிட்டி!] சால்ட் அனாலிஸிஸ் என்று ஒன்று உண்டு. ஏதாவது ஒரு உப்பை கொடுத்து அதற்கான பல சோதனைகள் செய்து அது சோடியம் க்ளோரைடா, கால்சியம் கார்பனைட்டா இப்படி எத்தனையோ வகையறாக்களில் எது என்று கண்டு பிடிக்க வேண்டும்! ஒரு உப்பை வாங்கிப் பார்த்து அதன் தன்மைக்கேற்ப சோதனைகள் செய்தால் அது என்ன உப்பு என்று தெரியும், எனக்குப் பிடித்த பெண் எங்கே போகிறாளோ, என்ன செய்கிறாளோ அதையே செய்து கொண்டிருந்தால், உப்பை எங்கேயிருந்து கண்டு புடிக்கிறது. ஒரு மண்ணும் வராது..நேரா ஜீபூம்பாகிட்ட போவேன், அவர் ஒரு பெரிய நோட்டை வச்சிருப்பார். அதில் என் பெயருக்கு நேரே எனக்கு என்ன உப்பு கொடுக்கப் பட்டது என்று எழுதியிருக்கும். நான் செய்த சோதனைகளை வைத்து அது எந்த உப்பு என்று சொல்ல வேண்டும். நான் சொன்னதும் நோட்டில் உள்ளதும் ஒன்றாக இருந்தால் பெருசா என்ன செஞ்சிடுவாரு, இன்னொரு உப்பை தூக்கி கொடுப்பாரு! நான் போனவுடன் அந்த நோட்டை எட்டிப் பார்ப்பேன், அவர் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நோட்டை மறைத்து கொள்வார்...அடடா இன்ஸல்ட் ஆகிப் போச்சே!..இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம நான் முழிப்பேன்..அவர் ம்..என்ன உப்பு சொல்லும்பார். நான் காப்பர் சல்ஃபேட் சார் என்பேன்! அவர் நோட்டைப் பார்த்து இல்லையேப்பா என்பார். சார், இல்லை சார், இது அம்மோனியம் சல்ஃபேட் என்பேன்..இல்லையே என்பது போல் தலையசைப்பார். அவர் வெறுத்து போய் இது மக்னீசியம் க்ளோரைட் பா என்பார். கரெக்ட் சார் என்று நான் வந்து விடுவேன்! நம்ம தப்பா சொன்னா அவர் சரியா சொல்றாரே, இவர் ரொம்ப நல்லவர்டா என்று பசங்களிடம் அவர் பெருமை வளர்த்து விட்டேன்!அதற்குப் பிறகு நான் சோதனை செய்வதையே நிறுத்திக் கொண்டேன்....



இந்தக் கடைசி புள்ளிகளில் தொத்திக் கொண்டு நிற்கின்றன என் எஞ்சி இருக்கும் கல்லூரி நாட்கள், இன்னும் எத்தனையோ குறும்புகளுடனும், கும்மாளங்களுடனும்! [இன்னா ஓபனிங்! இன்னா பினிஷிங்!! ஹார்ட் டச் பண்டியே கண்ணு!]
தேங்க்ஸ் கிவ்விங் நீண்ட விடுமுறையில் லாஸ் வேகஸ் சென்றிருந்தேன். அந்த நகரத்தை பார்த்த வியப்பில் ஒரு வாரம் என்னால் சரியாக வாயை மூடவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! [எதாவது விபரீதமா நினைச்சுக்காதீங்க] ! அத்தனை ஆச்சர்யங்கள், அத்தனை அதிசயங்கள்!! இப்படியும் ஒரு ஊரா என்று வியப்பே மிஞ்சுகிறது.

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! இந்த தடவை நான் பேசப் போவதில்லை, என் படங்கள் பேசும்![பேசிட்டாலும்]

நியுயார்க் நியுயார்க்



பாரீஸ் பாரீஸ்



சீசர்ஸ் பாலஸ்











அமெரிக்காவில் பிரை நிலவு இந்தப் பக்கம் திரும்பி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?













இயற்கைக்கு முன்னால் மனிதன் தான் எத்தனை சிறியவன்!









ஹூவர் டாம், அரிசோனா







அனைத்து படங்களும் இந்தக் காமிராவினால்...



நான்.. நானே தான் எடுத்தேன் [பின்ன வேற யாராவது மண்டபத்துல கொடுத்தா எடுத்து வந்தேன்..நான் நானே தான் எடுத்தேன் ஐயா!] :-)



- பயணப்படும்
தேன் கூடு போட்டிக்காக

தலை நிறைய மல்லிகை பூ. நெத்தியில் ரத்தச் சிவப்பில் வட்டமான பெரிய பொட்டு. மிகையாக மஞ்சள் பூசியும் பொலிவு குறையா முகம். பல வருடங்களாய் முகத்தில் இல்லாத சாந்தி! அவள் தலைக்கு மேலே எரிந்து கொண்டிருந்த ஊதுபத்தியும் தொங்கிக் கொண்டிருக்கும் நூறு வாட்ஸ் பல்பும் இல்லையென்றால் அவள் இறந்து விட்டாள் என்று சொல்ல முடியாது. அந்த ஊதுபத்தியின் நறுமணம் மணியின் நாசியின் வழியே மூளைக்குச் சென்று உன் மனைவி இறந்து விட்டாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அது அவனுடைய துக்கத்தை இரட்டிப்பாக்கியது. அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

அந்தத் தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலின் வழியே சூரிய ஒளி ஆங்காங்கே கோலம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியை தங்கள் ஆடைகளில் ஏந்தி இரண்டு குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எழவு வீட்டின் துக்கம் பழக்கப்பட்டு போன சில ஆடவர்கள் அன்றைய செய்தித் தாளில் முழ்கிப் போயிருந்தார்கள். துயரை ஆற்ற முடியாத சில தாய்மார்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பெருமை கொண்டும் அவளுடைய இத்தகைய நிலையை நினைத்தும் அவளுடைய தலையெழுத்தை நொந்து கொண்டார்கள்.

ஒரு பெரிய கருப்பு நிற கண்ணாடி அணிந்து அன்றைய நாளிதழில் மூழ்கி இருப்பவரிடம் சாந்தா வீடு இது தானே என்று அவன் கேட்டு விட்டு அவர் பதில் சொல்வதற்குள் மெல்ல வாசலில் தன் செருப்பை கழற்றி விட்டு படியேறி வீட்டுக்குள் புகுந்தான். அவன் குரலில் இருந்த நடுக்கத்தை அவர் உணர்ந்தாரா தெரியவில்லை, பழைய படி பிரதமர் என்ன தான் சொல்கிறார் என்பதில் அவர் கவனம் செலுத்தினார்.

வந்தவனுக்கு நாற்பது வயது இருக்கலாம். சிறிய கட்டம் போட்ட சட்டையும் பழுப்பேறிப் போன வேட்டியையும் அணிந்திருந்தான். மெலிந்த தேகம். நல்ல நிறம். கரிய வானத்தில் ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்களைப் போல கரிய கேசத்தில் ஆங்காங்கே மின்னும் நரைத்த தலை முடி. அவன் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு கைகளிலும் சந்தனம் பூசி அவளுடைய வயிற்றில் அவளுடைய கைகளை வைத்திருந்தார்கள். அவளுடைய கைகள் பெரிய ரோஜாப் பூ மாலைக்கு நடுவில் கொஞ்சம் தான் தெரிந்தது. பச்சை நிற பட்டுப் புடவை உடுத்தியிருந்தார்கள். கண்களில் பொங்கி வரும் கண்ணீர் அவனை சரியாக பார்க்க விடாமல் செய்தது. மெல்ல அவள் அருகில் சென்றான்.

அவளை பார்த்தவாறே அவளை கிடத்தியிருக்கும் கட்டிலில் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான். அங்கு இருந்தவர்கள் அழுவதை நிறுத்தி அவனையே திகைத்து பார்த்த வண்ணம் இருந்தனர். மணி தலை கவிழ்ந்து மயக்க நிலையில் அழுது கொண்டே இருந்தான். அவன் அவளையே வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து மெல்ல ஒரு விசும்பல் ஒலி கேட்டது. மணி மெல்ல தலை தூக்கி பார்த்தான். அவன் அவளுடைய கைகளில் கை வைத்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று மணியை பார்த்து ஏன் இப்படி என்பது போல் கை காட்டினான். அவளுடைய தாடையில் கை வைத்து ஏதோ முனங்கினான். அவனுடைய அழுகையில் அது அமுங்கிப் போயிற்று! மெல்ல அங்கு இருந்த ஒரு பெரியவர் எழுந்து அவனிடம் வர எத்தனித்தார். சட்டென்று கையை எடுத்து தடதடவென தலையில் அடித்து ஓங்கி அழுதான். மணி பிரமை பிடித்ததைப் போல பார்த்து கொண்டிருந்தான். ஏன் இப்படி பண்ணிட்டே என்று அவன் கேட்டது இப்போது தெளிவாகக் கேட்டது. தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு அழுதான். அந்தப் பெரியவர் பக்கத்தில் வந்து அவனை எழுப்பினார். அவன் அவர் கைகளில் சிக்காமல் முரண்டு பிடித்தான். சரி வாங்க, எழுந்திருங்க..இங்கே உக்காருங்க என்று அவனை கஷ்டப்பட்டு எழுப்பி அந்தப் பெரியவர் அழைத்து போனார். அவன் திரும்பி திரும்பி அவளைப் பார்த்த வண்ணம் ஓலமிட்டு அழுது கொண்டும் வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டும் நடந்து சென்றான். அந்த ஓலம் அடங்க சிறிது நேரம் ஆனது.

சற்று நேரம் அழுகையை மறந்து எல்லோரும் அவன் போன வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த யாரும் அவனை இதுவரை பார்த்ததில்லை! பேயரைந்து போயிருந்த மணிக்கு அந்த ஊதுபத்தியின் மணம் மறுபடியும் அவன் மனைவியின் சாவை ஞாபகப்படுத்தியது! அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்!

1973

எதற்கோ இலவசமாய் கிடைத்த அந்தச் சிறுகதை தொகுப்பில் இருந்த இந்தக் கதையை படித்து விட்டு புத்தகத்தை மூடும் போது ஈரம் படிந்த கண்களை துடைத்துக் கொண்டு தூங்கச் சென்றான் சீனிவாசன்!
ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நானும் என் நண்பரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்து கொண்டோம், டிரைவர் அதிர்ச்சி அடைந்து இல்லை, இல்லை நான் தான் ஓட்டுவேன் என்றார். பார்த்தால் என் நண்பர் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார்! [என்ன? என்ன நக்கல்? எங்களுக்குத் தெரியாதாக்கும், இங்கே லெஃப்ட் ஹேன்ட் ட்ரைவிங்னு..எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்..]

ஹோட்டலில் எதற்கோ ஃபோன் செய்யப் போய் 911 எண்ணை தெரியாமல் அழுத்தி அது போலீஸுக்கு போய் ஹோட்டல் முதலாளி துடிதுடித்துப் போனார். தெரியாமல் அங்கு ஃபோன் செய்து விட்டால், மன்னித்து விடுங்கள், ராங் நம்பர் என்று வைத்து விடுங்கள் இல்லையென்றால் இங்கு யாரோ இறந்து கிடக்கிறார்கள் என்று போலீஸ் வந்து விடுமாம். கஷ்டம்! [நம் நாட்டிலும் அவசர போலீஸ் 100 எண்ணை அடித்தால் இப்படித் தானா?] பிரச்சனை என்னவென்றால், ஹோட்டல்களில் 9ஐ எஸ்கேப் கீயாக பயன்படுத்துகிறார்கள். 9 அடித்து விட்டு, நாட்டு எண் 1ஐ அடித்து வேறு எண்ணை அடிக்க, தெரியாமல் 1 அழுத்தி விட்டால் கதை முடிந்தது!

தூரத்தை கேட்டால் மயிலில்[இது முருகனோட மயில் இல்லை], எடையை கேட்டால் பவுண்டில், தட்பவெட்பநிலையை கேட்டால் ஃபாரன்ட்ஹீட்டில் என்று சொல்லி அதை கிமீக்கும், கிகிராமுக்கும், செல்சியசுக்கும் மாற்றி மாற்றி பார்த்து எங்கள் நாட்கள் கணக்கு செய்வதிலேயே கழிந்து விடுகிறது. நான் வழக்கம் போல் அந்த மாதிரி கணக்கு செய்வதில் கலந்து கொள்வதில்லை! [வேறு மாதிரி கணக்கு என்றால் பண்ணலாம்!] 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட்டா என்று என் நண்பர் ஃபார்முலா எல்லாம் ஞாபகப்படுத்தி அதை செல்சியஸில் ஆக்கி பார்த்துக் கொண்டிருப்பார். எப்படியும் செல்சியஸில் வந்தவுடன் இவ்வளவு கம்மியா என்று வாய் பிளக்க போகிறோம், நான் 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்! கதம் கதம்!

அமேரிக்கர்களுடைய வேலையையும், குடும்பத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத இயல்பு என்னை மிகவும் கவர்கிறது. 8 மணிக்கு அலுவலகம் வந்து, 5 மணிக்கு எல்லோரும் ஜூட்! 5 மணிக்கு மேல் மெயின் கதவு கார்டை காட்டினாலும் திறக்காதாம்! 5 மணி வரை தான் அந்த கார்டுக்கு அனுமதியே வழங்குகிறார்கள்! எனக்கு கார்ட் கொடுக்கும்போது, எதற்கும் இருக்கட்டும் இவர்களுக்கு 24 மணி நேரமும் கொடுத்து விடுங்கள் என்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள்! [எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ?]

கிட்டத்தட்ட மூன்று வார லீவிலிருந்து ஊர் சுற்றி விட்டு வருகிறார்கள்! அடுத்த மூன்று வாரத்திற்கு எங்கு போவது எந்த ஊர் சுற்றுவது என்று கூகுளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! விடுமுறையை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம்? வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம்! ஹும், அமேரிக்கர்கள் வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது!

- பயணப்படும்
செளக்கியமா இருக்கீங்களா? என்ன சென்னையில் நல்ல மழையாமே? என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி! நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்.

சரி என் கதைக்கு வருகிறேன். ஒவ்வொரு கனிப்பொறி வல்லுனரின் நித்திய கனவான அமெரிக்காவுக்கு ஒரு வழியாய் வந்தாகிவிட்டது. இங்கு வந்து பல யுகங்கள் கடந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள். அதிக ஆள் அரவமில்லாத எந்த ஒரு புது நகரத்தில் குடி பெயர்ந்தாலும் நாட்களை பிடித்து தள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

நான் இருப்பது மேல் சொன்ன மாதிரியான ஒரு சின்ன டவுன். சுற்றிலும் மலைகள், [கொஞ்சம் கண்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்!] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று! உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள்! ஊர் முழுவதும் அத்தனை தங்கம். நம் ஊரில் தோண்டினால் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, தங்கம் எங்கிருந்து வருவது?

அமெரிக்கா என்றவுடன் எல்லோரும் செல்வது கலிஃபோர்னியா, நியுயார்க்..வழக்கமாய் நான் புலம்புவது போல் எனக்கு என்று வரும்போது, ஹெலனா, மோன்டனா! அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான்! அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான்! பர்கரில் இருந்து பால் நிலவு வரை! பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு! எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது! இங்கு சுற்றிலும் மலையும், காடுகளும் இருப்பதால், மான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் மக்கள் வருகிறார்கள்!

காலை நேரங்களில், மதிய வேளைகளில் வெளியே வந்தால் ஊரடங்குச் சட்டம் ஏதாவது போட்டு விட்டார்களா என்று தோன்றுகிறது. ரோட்டில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் கேட்டேன், எங்கே ரோட்டில் யாரையும் காணவில்லை என்று? அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள்! என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார்! சென்னையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன், அவர் என்ன என்றார்..கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேனோ என்னவோ!

இது மிகச் சிறிய ஊர் என்பதால் அமெரிக்காவின் பெரு நகரங்களில் இருப்பதைப் போல் இங்கு போக்குவரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை. கை தட்டிக் கூப்பிட நம் ஊர் போல் ஆட்டோக்களும் இல்லை! டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது! இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும்! அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்!

அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது!
  • ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்! காலை வணக்கம் சொல்கிறார்கள்!
  • எந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள்
  • எல்லோரிடமும் மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு! நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்! பத்தில் ஒரே ஒருவர் சிடு மூஞ்சியாய் இருந்தால் அதிகம்!
  • கார் ஓட்டுபவர்கள் தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒரு நிமிஷம் நிறுத்தி அவர்கள் கடந்து சென்ற பிறகே செல்கிறார்கள் [நம் ஊர் ஞாபகம் வந்தது, சாவுகிராக்கி, வீட்ல சொல்ட்டு வந்தியா நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா?]
  • ஊனமுற்றவரகளையும், வயதானவர்களையும் மிக கண்ணியமாக நடத்துகிறார்கள்
  • எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்!
    அதற்கு

ஒரு உதாரணம் கூற வேண்டும். வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நானும் என் நண்பரும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்றோம். இறங்கியதும், ஒருவருக்கு 6.50, இருவர் என்றால் 7.50 என்றார். என் இந்திய நண்பர், அது எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாய் தானே தங்குகிறோம், 6.50 தான் தருவேன் என்று அபத்தமாய் பிடிவாதம் பிடித்தார். சரி பரவாயில்லை நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று மிக்க கண்ணியமாக வாங்கிக் கொண்டார். மறுநாளும் அதே டிரைவர். சென்று இறங்கியதும் அதே கணக்கை சொன்னார். என் நண்பர் அதே பழைய பல்லவியை மறுபடியும் பாடினார். அதற்கு அவர், போன தடவை கேட்டீர்கள், பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டேன், இந்தத் தடவையும் நீங்கள் அதையே சொல்கிறீர்கள் சரி உங்கள் இஷ்டம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார். என் நண்பர் பில் கேட்டார். அவர் சரியாக 7.50 என்று எழுதிக் கொடுத்தார். நாங்கள் 6.50 தானே கொடுத்தோம், நீங்கள் 7.50 என்று பில் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். என்ன செய்வது, நீங்கள் தர மாட்டீர்கள், நான் என கை காசை போட்டுக் கொள்வேன்..அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சாதாரணமாய் சொன்னார். இருவரும் வெட்கித் தலை குனிந்தோம்! போன முறையே இப்படி எல்லாம் இந்தியாவில் போடும் சண்டை போட வேண்டாம், கேட்டதை கொடுத்து விடுவோம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவே இல்லை. சிலருக்கு அடிபட்டால் தான் உரைக்கிறது!

- பயணப்படும்!


[img courtesy: flickr]

என்ன? தீபாவளியா? ஒரே கொண்டாட்டமா? எனக்கு ஒன்னு சொல்லுங்க! ஒருத்தன் தீபாவளிய எங்க கொண்டாடலாம்? வீட்ல, பாட்டி வீட்ல, மாமனார் வீட்ல? ரைட்? நடு ரோட்ல? என் விதியை கேளுங்க! இந்த வருஷம் எனக்கு தீபாவளி ஃப்ளைட்ல.. கரெக்கிட்டா 20ஆம் தேதி பேரிக்காவுக்கு, சே அமேரிக்காவுக்கு கெளம்புறேன். எல்லாம் பெட்டியை தூக்கிட்டு எக்மோருக்கு பறந்துட்டு இருக்கானுவ, நான் மட்டும் ஏர்போர்ட்டுக்கு பறக்கனும், பறக்குறதுக்கு..எப்படி இருக்கு கதை? அட நிஜம் தாங்க!

நம்ம தான் எது செஞ்சாலும் காமெடி ஆச்சே, நம்ம மக்காவுக்கெல்லாம் ஒரே குஷி இன்னொரு கழைக்கூத்தாடியும் அமேரிக்காவுக்கு போவுதுன்னு..டேய் மாமு தீபாவளியே ப்ளைட்லயாடா? ஒரு ராக்கெட் கொண்டு போய் ஃப்ளைட்ல வச்சு வெடி மாமு, ங்கொக்க மக்கா நம்ம யாருன்னு காட்ட வேணாம்! இப்படி ஒருத்தன். ஏர்போர்ட்ல அம்புட்டு நேரம் என்ன எழவத் தான் பண்றதுன்னு தெரியாம ஒருத்தன்ட பொலம்பிட்டேன். இது என்ன பிஸ்கோத்து பிரச்சனை, அங்கன நெறைய ஏரோப்ளேன் நிக்கும் மாமு, ஒரு நல்ல ரெக்கையா பாத்து டப்புன்னு கீழே துண்ட விரிச்சி படுத்துறுன்னான். ஸ்ஷ்...அப்பா முடியவில்லை என்று புலிகேசி ரேஞ்சுக்கு ஒரு பெருமூச்சு விட்டேன். 2 வார்த்தை இங்கிலிபீசுல பேசிட்டா போதும், தொறை இங்கிலீஷ் எல்லாம் பேசுதுன்றானுவ..சரி கெளம்புரேன்னு ஆபிஸ்ல பசங்ககிட்ட சொல்லி ஜகா வாங்கும் போது ஒருத்தன் அப்போ நாளைக்கு வர மாட்டியா? உன்னை இனிமே பாக்கவே முடியாதான்னு ஒரே அழுவாச்சி! டேய் பாக்கவே முடியாதான்னு எல்லாம் சொல்லாதீங்கப்பா..அட்லாண்டிக் ஓஷன் எல்லாம் தாண்டி போறேன்! திரும்பி வருவேண்டான்னு தேத்திட்டு வந்துருக்கேன்! ஒவ்வொருத்தன் ரவுசும் தாங்க முடியலபா...

அமேரிக்காவுக்கு போவதை இவ்வளவு சலிப்பாய் யாராவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹிஹி..திடீரென்று கம்பெனியிலிருந்து ஒரு மூனு மாசம் போயிட்டு வாயேன் என்று அனுப்பி விட்டார்கள். நானே எதிர்பார்க்காத ஒன்று. சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டேன். நான் போகும் இடம் வடக்கு அமேரிக்கா(வாம்)! நான் போவது், மலையும் மலை சார்ந்த இடமும். நகரம் : ஹெலெனா மாநிலம் : மோண்டனா [யாரோ ஒருத்தன் "ஐ, ஆண்டெனா மாதிரி இருக்கு அங்கே சன் டி.வி. தெரியுமான்னு கேட்டான்!" இல்லை தெரியாம தான் கேக்குறேன் என்னை பாத்தவுடனே தான் இந்த மாதிரி கேள்வி எல்லாம் இவங்களுக்கு கேக்கத் தோனுதா?] இடத்தை பார்க்க விரும்பினால் கூகுள் மேப்பில் ஹெலெனா, மோண்டனா என்று டைப்புங்கள். இன்னும் 2 நாட்கள் பொறுத்து கூகுள் எர்த்தில் பாருங்கள், நான் நடந்து போய் கொண்டு இருப்பது தெரிந்தாலும் தெரியும்!

இதன் மூலம் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அங்கு போய் என்னால் காப்பி ஆத்துவதோடு இந்த தமிழ் சேவை எல்லாம் ஆத்த முடியுமா் என்று தெரியவில்லை. அதனால் என்னை நீங்கள் எல்லோரும் சற்று பொறுத்து அருள வேண்டும். திரும்பி வந்தவுடன் ஒரு பயணக் கட்டுரை எழுதுகிறேன். இது ப்ராமிஸ், கோல்கேட், வீக்கோ வஜ்ரதந்தி!!

சீ வாட் ஐ சே..[இன்னைக்கு உனக்கு வேட் ஐ சே! இருக்குற இருப்புக்கு இங்கிலீஷ் வேற!]

படக் குறிப்பு: அதாங்க..அட, புரியல இந்த ஏரோப்ளேன்லாம் ஆவுமேங்க..என்னங்க இது..தொண்டைலையே நிக்குது..ஆ! டேக் ஆஃப்!

[img courtesy: flickr]

அப்பா ஐந்தாவது முறையாக வண்டியை உள்ளே வைக்கும்படி சொன்னார். நல்ல ஒரு கதையில் கதாநாயகன் யாரையோ சந்திக்கச் சென்று கதவைத் தட்டும் போது அவருடைய குரல் எனக்கு மறுபடியும் கேட்டது. நான்காவது முறையாக அவர் சொன்ன போது "நான் வைக்கிறேன், நீங்க போய் படுங்க!" என்று சற்று எரிச்சலாய் சொன்னது ஞாபகம் வந்தது. அப்பாக்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் முதன் முறை சொன்னதும் நாம் எதையும் செய்வதே இல்லை! முன் சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? உடனே சொன்னால் மறுபடியும் நான் எரிந்து விழுவேன் என்று நினைத்தாரோ என்னவோ! அவருக்கு இரவு சாப்பாடு முடிந்தவுடன் வீட்டை பூட்டி விட வேண்டும். அவரவர் கவலை அவரவர்க்கு..

அந்தப் பக்கத்தின் நம்பரை பார்த்துக் கொண்டு, வண்டி சாவியை எடுத்துக் கொண்டு செருப்பை தேடினேன். ஒரு செருப்பு மட்டும் தலைகீழாய் கிடந்தது. ஹாலில் இருந்து வரும் சொற்ப வெளிச்சத்தில் என் செருப்பை கண்டு பிடித்தேன். இப்போது இந்த கஷ்டம் வேறு. எரிச்சலாய் வருகிறது. அங்கு இருக்கும் ஒரு க்ரில் கேட்டைத் திறந்து, வெளி கேட்டை நன்றாக திறந்து வைத்துக் கொண்டேன். வெளியே குளிர்ந்த காற்று வீசுகிறது. வானத்தைப் பார்த்தென். பெளர்ணமி நிலவின் வெளிச்சம் வானத்தில் எங்கும் கோலமிட்டிருந்தது. பக்கத்து வீட்டில் தென்னை மரங்கள் இருக்கின்றன. தென்னங்கீற்றின் வழியே நிலவைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கடற்கரைக்கு போயிருக்கலாம் என்று தோன்றியது. சரி என்று வண்டியை எடுத்து மேலே ஏற்றினேன். அப்போது தான் பார்த்தேன் அதை. மழைக்காலம் வந்து விட்டால் இந்தப் பிரச்சனை. என் உள்ளங்கை அளவுக்கு, சீ சீ அதை யார் உள்ளங்கையில் வைத்துக் கொள்வது? ஒரு பெரிய தவளை. சிறு வயதில் தவளை இலக்கியம் தெரிந்த என் நண்பன் ஒருவன் சொரித் தவளை நம்ம ஒடம்புல பட்டா நமக்கு பட்ட இடத்தில் சொறி புடிக்கும்என்று சொன்னான். அவன் எந்த நேரத்தில் சொன்னானோ, எந்த தவளையை பார்த்தாலும் இது சொறித் தவளையோ என்று தான் தோன்றும். இது என்னவோ இளம் பச்சை நிறத்தில், கொட்ட கொட்ட விழித்து கொண்டு நான் வண்டி வைக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜன்னலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய கண்!

வழக்கமாய் நான் வண்டியை ஜன்னலோரம் ஒட்டி வைப்பது வழக்கம். இன்று என்ன செய்வது? எனக்கோ அருவருப்பில் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. வண்டியை மெதுவாய் நடுவில் நிறுத்திவிட்டு, வெராண்டாவில் இருக்கும் ஒரு விளக்கமாற்றை எடுத்து கொண்டேன், கூட கொஞ்சம் தைரியத்தையும். எனக்கு தவளைகளிடம் பயத்தை விட அருவருப்பு ஜாஸ்தி. விளக்கமாற்றால் ஒரே தள்ளு தள்ளியதில் என் வண்டியின் பெட்ரோல் டாங்கில் போய் நின்றது. அது வழுவழுப்பாய் இருப்பதால் லேசாய் வழுக்கிக் கொண்டிருந்தது. இன்னொரு முறை தட்டியதில் அது வண்டி சாவி அருகில் சென்று நின்று கொண்டது. எனக்கோ அதை ஒவ்வொரு முறை தள்ளத் தள்ள அருவருப்பின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. தெரியாமல் மேலே பார்த்தால் தலைக்கு நேரே பல்லி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறது. அட ஆண்டவா, உன் படைப்பில் தான் எத்தனை விந்தைகள் என்று வியந்தேன், இல்லை வியர்த்தேன். என்னால் இப்போது தவளையை பார்க்க முடியவில்லை. கிழே தவளை, மேலே பல்லி! அப்பாவை கூப்பிட்டு அந்த தவளையை விரட்டச் சொல்லலாமா என்று நினைத்தேன். ஒரு தவளைய விரட்ட தெரியல பேச்சு மட்டும் காது வரைக்கும் நீளுது என்பார். ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது வீட்டுக்குள் நுழைந்து விட்டால் எனக்கு அதனிடம் பயமில்லை; அருவருப்பு தான் என்று இவருக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை.

சரி என்று வண்டியை மட்டும் கொஞ்சமாய் ஓரமாய் நகர்த்தி விட்டு, நகர்த்தும் போது சக்கரத்தில் கீழ் மாட்டி அந்த தவளை நசுங்கியிருந்தால் என்று இந்த பாழாய் போன, விவஸ்தையே இல்லாத மனம் நினைத்து உடம்பை ஒரு தடவை உலுக்கிப் பார்க்கிறது. உள்ளே வந்து அமர்ந்து அந்த புத்தகத்தின் விட்டுப் போன பக்கத்திலிருந்து தொடங்கினேன். அவன் கதவு திறந்ததும் என் காலில் ஒரு தவளை விழுந்தது, அவன் சந்திக்கப் போன நபரிடம் பேசிக் கொண்டிருந்த போது சக்கரத்தின் கீழ் அடிபட்ட தவளை தெரிந்தது. அவன் பையிலிருந்து ஒரு தவளையை எடுத்து அந்த நபரிடம் நீட்டுகிறான். எனக்கு அம்மா கொடுத்த பாலில் தவளை ஒன்று மிதக்கிறது. எனக்குத் தெரியும், அந்தத் தவளை எப்படியோ எங்கோ மறைந்து போயிருக்கும். ஆனால், என் மனதில் வந்து உட்கார்ந்திருக்கும் இந்த மனத் தவளைகளை நான் எப்படி விரட்டுவது? ஒரு வேளை என் மனமும் சொறி பிடித்துருக்குமோ?


[img courtesy: flickr]

I N S T E A D . . . D O N A T E!

என் நண்பர் ஒருவர் விளம்பரத் துறையில் இருக்கிறார். எனக்கு அதில் நிறைய ஆர்வம் இருப்பதால், அவரிடம் பேசும்போதெல்லாம் ஏதாவது விஷயத்தை சொல்லுங்கள், நானும் ஸ்கிரிப்ட் எழுத முயற்சிக்கிறேன் என்று நச்சரிப்பதுண்டு. இந்த முறை அப்படி கேட்டவுடன், ரத்த தானத்தைப் பற்றி ஒரு விளம்பரம் செய்ய வேண்டும். அதைப் பற்றி யோசி என்றார். அதன் விளைவு தான் நீங்கள் மேலே காண்பது.

இனி பின்னூட்டமிடுவதும், ரத்த தானம் தருவதும் உங்கள் கையில்!
பல நாட்கள் கழித்து தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சாமியாடத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குள் இறங்கியிருப்பது ஏ. ஆர். ரகுமான் சாமி. எனக்கென்னமோ இளையராஜா சாமி என்னை பிடித்து ஆட்டும் அளவுக்கு ரகுமான் சாமி ஆட்டுவதில்லை. ஆனால் இசை என்னும் சாமி எப்போதும் என்னை பிடித்து ஆட்டுவதால் எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு. [எத்தனை சாமிப்பா நாட்ல!] அப்படித் தான் இரண்டு நாட்களாய் சில்லென்ற காதலை [படத்தின் பாடல்களை சார்!] ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பதிவு இந்தப் படத்தின் இசையின் விமர்சனம் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றித் தான்.



"நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது" என்ற பாடல். இந்தப் பாடலின் சிச்சுவேஷன் [இதற்கு தமிழில் என்ன சொல்வது?] காதலியைப் பிரிந்த காதலன் தனிமை உணர்ந்து பாடுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால் [நான் கேள்விப்பட்டது வரை] மெட்டுக்கு பாட்டெழுதாமல், பாட்டுக்கு மெட்டு போடப்பட்டிருக்கிறது. வாலி பாட்டெழுத ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் பாட்டை எல்லோரும் ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. இந்தப் பாட்டைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் [வைரமுத்துவின் கம்பீரமான குரலையும், கவிதை நயமான தமிழையும் கடன் வாங்கிக் கொள்கிறேன்!]
"வார்த்தைகள் ரகுமான் தம்பியின் இசையில் சம்மணமிட்டு அமரவில்லை! நொண்டியடிக்கிறது" என்று தான் சொல்ல வேண்டும்!

ஓரிரு வரிகளைத் தவிர அனைத்தும் புளித்துப் போன பழைய வரிகள். நிமிஷங்கள் வருஷமாவதையும், குளிர்காலம் கோடை ஆவதையும், செந்தணல் பனிக்கட்டி ஆவதையும் எத்தனை முறை தான் எழுதுவார்களோ நம் கவிஞர்கள்..கேட்டதையே கேட்பதை விட தனிமையே தேவலை என்று தோன்றுகிறது. பாட்டுக்கு மெட்டு என்றால் கவிஞர்களுக்கு அல்வாவுடன் கொஞ்சம் காராசேவ் சாப்பிடுவது போல்[ஸ்வீட் காரம்பா!]. வாலி போன்ற பெருங்கவிஞர் இப்படி சொதப்பியிருக்கக் கூடாது.

"காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" என்ற பாட்டையும் வாலி எழுதி விஸ்வநாதன் மெட்டு போட்டார் என்று படித்திருக்கிறேன். அந்தப் பாட்டின் பல்லவி ஒன்றே போதும், கவிதை! வாலி சார், பேசாமல் நீங்கள் அவதார புருஷனே தொடருங்கள்!!

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர் என்றும் என்னை தாங்கள் யாரும் சொல்லி விடக்கூடாதெ, அதனால் சரி பாட்டுக்குத் தானே மெட்டு..நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன்.. என்றதன் விளைவு கீழே [ஐய்யோ, சேருக்கு அடியில இல்லைங்க!!]

[முன் குறிப்பு: இதிலும் ஏற்கனவே சொன்ன விஷயங்கள் வந்திருக்கலாம், ஆனால் எழுதும் போதும், படிக்கும் போதும் எனக்கு அலுக்கவில்லை!]

[பல்லவி 1]
சுவாசம் முழுதும் உன் காதல்
தேசம் முழுதும் உனை தேடும்
வாசம் மாறா உன் தேகம்
பேசாப் பொழுதும் என் உயிர் பாடும்

[பல்லவி 2]
கண்கள் ரெண்டும் உனை தேடும்
கவிதை என்றும் பொய் பேசும்
இதயம் இன்று இளைப்பாறும்
இயக்கம் கொஞ்சம் தடுமாறும்

[சரணம் 1]
காதலி என்ன கடவுளா?
தூணிலும் துரும்பிலும் தெரிகிறாள்

காதலைச் சொல்லி பிரிகிறாள்
கனவினில் எங்கும் விரிகிறாள்

காதல் வளர்வது பிரிவிலா
கண்கள் கலங்கியதென்ன பரிவிலா

காதலில் இரக்கம் பஞ்சமா
தோற்றவன் உலகில் கொஞ்சமா

[பல்லவி]

[சரணம் 2]
மழை தனியாய் எனை நனைக்க
மனம் உனையே நினைத்திருக்க

என் இளமைப் பறவை பறந்தது
உன் நினைவு சிறகுகளால்

என் இதயம் ஒன்றே சிறந்தது
உன் இதயம் வென்றதால்

இமை மேல் கொஞ்சம் ஈரம்
இளமையில் தனிமை சாபம

[பல்லவி]

யாரங்கே..யாரடா அங்கே!! லகுட பாண்டிகளே! மெட்டு போட கூட்டி வாருங்கள் ரகுமானை...

தேவனின் "பல்லிசாமியின் துப்பு" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை விட சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். மனிதருக்கு என்னமாய் ஹாஸ்யம் வருகிறது. கீழ் வருவது நான் மிகவும் ரசித்த கதைகளுள் ஒன்று. படித்து விட்டு, சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாணால் நான் பொறுப்பாளியல்ல!







1

10-1-'43
'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு மாணிக்கம் பிள்ளை எழுதிக் கொண்டது.

அன்பார்ந்த ஐயா,

தங்களிடம் நான் வாங்கிய தமிழ் 'டைப் ரைட்டிங்' மிஷின் வெகு அற்புதமாக உழைக்கிறது. அதைப் பார்க்கிற பேர் யாரும் அது ஸகிண்ட் ஹாண்ட் மிஷின் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நல்ல பண்டத்தைப் பொறுக்கி எடுத்து எனக்கு நீங்கள் விற்றதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் நண்பர்களுக்கெல்லாம் தங்கள் கடையையே எப்போதும் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறேன்.

தங்கள்,
மாணிக்கம் பிள்ளை

2
14-1-'43
'புராதன விலாஸ்' மமம மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

உங்கள் டைப் ரைட்டிங் மிஷின் இன்னும் மமமம நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் மமம என்ற எழுத்து வரும்மமம போது மமமமட்டும்மமம ஏனோ மமமமறுபடி 'ம' எழுத்து விழுந்து விடுகிறது. உடனே ஒரு ஆளை அனுப்பி ரிப்பேர் செய்யச் சொல்லவும்மமம.

தங்கள்,
மமமமாணிக்கம்மமம பிள்ளை

3
20-1-'43
புரா?ன விலாஸ்? மானே?ருக்கு?

ஐயா?

நீங்கள் அனுப்?ய ஆள் வந்தான்? ரிப்பே?ர் செய்தான்? ஆனால் நான் என்னத்தைச் சொல்?லுவேன்? தலை?லி போய் திரு?வலி வந்தது போல், ஒன்று போய் ஒ?று அல்லவா வ?து விட்டது. நான் டை? அடி?கும்போ? ஏனோ கே?விக்குறிக? விழு?து கழு?தை அறு?கி?றனவே?? த?ர, அது போடு? சத்?ம் காத?ல் கேட்?? முடியவில்லையே? உடனே வேறொரு ந?ல? ஆளாக அனுப்? வை?கவும்? பழைய ஆசா?யை மென்று கேட்?க் கொ?கிறே?

தங்கள் உண்மையுள்ள?
மா?க்கம் ?ள்ளை?

4

23-1-'43
'புராதன விலாஸ் மானேஜரே!'

அன்பார்ந்த ஐயா!

உங் கள்கம் பெனியில்வியா பாரம்வைத்து கொண்ட தற்காகஎன் னை செருப்பால்அ டிக்கலாம். ஆ மாம்! ஒருரி ப்பேர் செய்தா ல்இன்னொரு ரிப்பேர்கா த்திருக்கிறது. வார் த்தைமுடி ந்தால் இட வெளிவி ட்டுக்கொள்ளாதோ? வயி ற்றெரிச்சலைக் கேளுங்கள். தா வித்தா விக்கு திக்கிறதே!

கொஞ்சமும்மன நிம்மதியில்லை. உடனே ஒதுக்கப் பண்ண ஆள் ஜல்திஅ னுப்பவும்.

தங்கள்
மா ணிக்க ம்பி ள்ளை

5
00-00-0000
'புராதன000 மானே 0000

ஐ00

நீங்க00 அனு00ய ஆள் வந்000. அவன் சுத்0 சைபர் என்0தற்கு இது 00 அத்00ட்சி போ00தா? சும்மா0 சும்மா நா0 ரி00ர் ப0ணிக் கொ0டு இருக்க மு0யாது. இ0வே க00சி 00வை. இனியு0 மிஷி0 ஒழு0 காகா விட்டால் நான் உங்கள் கம்பெனி மீது 00000 0000 வேண்டியி0க்0ம் எ0று எ0சரிக்கை 00கிறே0.

மா0000 பி000
6

2-2-'43
'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

நான் கடிதம் எழுதிய போதெல்லாம் ஆள் அனுப்பி என் மிஷினை ரிப்பேர் செய்தத்தற்கு மிக நன்றியுள்ளவனாகயிருக்கிறேன். இப்போது மிஷின் திருப்திகரமாக 'டைப்' அடிக்கிறது! அபாரம், அருமை, அற்புதம், போங்கள்!

என் நண்பர்களிடம் f f f f f f f f f f f f0 0 0 0 0 0 0 0 0 ** * * * * * 0 0 0 0 0 0 0 0 % % % % % % % f f f f f f f f f f ? / த ? f % உண்மை ???

மாணி f f ம் % ள் ?

பின் குறிப்பு

இந்த* தடி ? ம் அடிக்க ஆர பிரித்* * * * சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கி%றன ? உடனே fரு ஆளை அனுப்பி* * ? ? வைக்fவும்!

------------சுபம்--------------

என்னுடைய கீ போர்ட் இப்படித் தகராறு செய்த போது நான் பதிந்த இந்தப் பதிவு எனக்கு இன்னும் இந்தக் கதை பிடிப்பதற்கு காரணமாகிவிட்டது. அந்தக் காலத்துலயே இப்படி ஒரு புதுமையான சிந்தனை! இந்தக் கதையை படித்து விட்டு நான் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். நீங்களும் அப்படித் தானா?
இது என் நூற்றி ஒன்றாவது பதிவு!

எல்லாவற்றையும் முயற்சிப்பது போல் தான் வலைபதிய ஆரம்பித்தேன். எதுவாய் இருந்தாலும் சீக்கிரம் அலுத்து விடும் எனக்கு வலைபதிவது இன்னும் அலுக்கவில்லை! ஆச்சர்யம் தான். குறும்பு செய்யும் கிருஷ்ணனை கட்டிப் போட்ட யசோதையை போல் வலைப்பதிவு என்னை இன்றும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது! [ஏதோ ஒரு உவமை இருந்தால் தான் பெரிய எழுத்தாளர் போல் இருக்கும் என்று எழுதிய உவமை; நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்!]

சரி, நூறு பதிவுகளை வெற்றிகரமாய் எழுதியாகிவிட்டது. கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம், ஓவியம், திரைக்கதை, சொந்த அனுபவம் என்று எல்லா வகையிலும் எழுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை எழுதும் போதும் நம்மிடம் சரக்கு தீர்ந்து விடுமோ என்று எழுத்தாளனுக்கே உரிய பயம் வரத் தான் செய்கிறது! [ இங்கு எழுத்தாளன் = பிரதிப், அதாவது அடியேன்!] இப்போது இந்த பதிவில் ஒரு விபரீதமான முயற்சியில் இறங்கலாம் என்று இருக்கிறேன். காதலை வித விதமாய் சொல்லியாகிவிட்டது. காமத்தை பற்றி ஏன் சொல்லக் கூடாது? காமத்தை பற்றி பேச்சு எடுத்தாலே "கத்தி மேல் நடப்பது" என்ற சொற்றொடர் கண்டிப்பாக வர வேண்டும்! அப்போது தான் அதற்கு மதிப்பு! இதோ நானும் கத்தி மேல் நடக்கப் போகிறேன்.

இது வரை வலைபதிவில் இப்படிப் பட்ட முயற்சிகள் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சரி இதை மட்டும் ஏன் விட்டு வைப்பானேன்! இதோ! படியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------------------


வழக்கமான இரவு! வட்டமான நிலவு. அவர்கள் கதவை மூடாவிட்டால் இன்னும் சற்று நேரத்தில் முகம் சிவந்த நிலவைத் தான் நாம் பார்க்க முடியும். ஆம்..கனவில் ஊர் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில் காதலில் சஞ்சரிக்கத் தொடங்கி இருக்கின்றன இரு இதயங்கள்! காதலின் விளைவால் உண்டான காமத்தின் தாளத்தில் துடிக்கிறது அவர்களுடைய இதயம். விளக்கு அணைந்திருக்கிறது; அவள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறாள். அவளின் வெளிச்சத்தில் உயிர் வாழப் போகும் மின்மினிப் பூச்சியாய் அவன் இருக்கிறான். சத்தம் செய்யாத அந்தப் பெரிய தேக்குக் கட்டிலில் நிறைய இடம் விரயமாகி இருக்கிறது. இருவரில் யார் நதி, யார் கடல் என்று தெரியவில்லை..ஆனால் ஒரு சங்கமம் தொடங்க இருக்கிறது! எங்கிருந்தோ கேட்கும் வீணையின் இசை அந்தச் சங்கமத்திற்கு மேலும் அழகூட்டுகிறது!

அவனும், அவளும், காதலும், காமமும் ஒரே இடத்தில் குழுமி இருக்கிறார்கள்! நதி மூலம் தேடுவது போல் அவன் ரதி மூலம் தேடத் தொடங்குகிறான். அவளுடைய அவிழ்ந்த கூந்தலின் ஊடே அவளுடைய ஒளிர்ந்த முகத்தை பார்க்கிறான். தென்னங்கீற்றின் வழியே பெளர்ணமி நிலவை போல் பிரகாசிக்கிறாள் அவள்! சிரிக்கிறாள் அவள், சிதைகிறான் அவன்! அவனுடைய விரல்கள் கூந்தலிலிருந்து விடுபட்டு மேல் நோக்கி முன்னேறுகிறது. அவள் நெற்றி தடவினான் முதன் முறையாக..அவள் உயிர் தடவப்பட்டது புரியாமல்! அவளுடைய நெற்றியில் உள்ள சிவப்பு நிற பொட்டு அவளுடைய அத்தனை வெட்கத்தையும் திரட்டி வைத்தது போலிருந்தது. இரு கரிய வானவில்லை ஒத்த புருவத்தில் அவன் விரல்கள் இறங்கின..நிலவை மேகம் மறைத்தது போல், விழியை இமை மறைத்திருந்தன..மூடிய விழிகள் துடிக்கின்றன..முத்தம் கொடுத்து அமைதி படுத்துகிறான். இமைகளின் மேல் அவன் இதழ் பதித்தான். அவள் இதயத்தின் மேல் அவன் கரம் பதித்தான். கன்னங்களில் அவன் தடம் பதித்தான். அவளுடைய கரங்களைத் தடவி அவள் விரல்களில் தன் விரல் கோர்த்தான். விரல்களின் நடுவில் இருந்த இடைவெளிக்கு அர்த்தம் கண்டான்! அவன் ஸ்பரிசம் பட்டதும் அவள் கூசி, குறுகி ஆனந்தித்தாள்! அவளின் மொத்தமும் அவனுடைய கைக்குள் அடங்கி விடுவது போல் சுருங்கிப் போனாள்..உடல் உடலை உரசுகிறது; உயிர் உயிரை உரசுகிறது. பெண்மை என்னும் வெள்ளம் கரை புரண்டு, ப்ரவாகம் எடுத்து ஓடத் தொடங்குகிறது. அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிறு துரும்பாகத் தத்தளிக்கிறான். அவன் சொல்லித் தருகிறான். அவள் அள்ளித் தருகிறாள். பசித்திருக்கிறான், அவளை ரசித்திருக்கிறான்..அதோடு ருசித்திருக்கிறான்!!

அவளின் ஆடை கலைக்கிறான், அவளின் வெட்கம் கலைந்து விடாமல்! அவளின் உடலை ஆய்கிறான். எத்தனை வளைவு, எத்தனை நெளிவு, மேடுகள், பள்ளங்கள், இருள், வெளிச்சம், இன்பம், துன்பம்...வாழ்வின் அத்தனை சாராம்சங்களையும் கொண்டுள்ளது பெண்ணின் தேகம். தாகமெடுத்துப் போராடும் ஒருவனின் முன் சுவையான நீர் சுனை ஒன்று தென்பட்டால், அள்ளி எடுக்க எப்படி இரு கைகள் போதாதோ அதே போல் அவளின் அத்தனை அழகுகளையும் அள்ளிப் பருக இரு கண்கள் போதாமல் தவிக்கிறான். அவள் அதை விழி மூடிய கைகளினூடே ரசிக்கிறாள். அவள் இரு கைகளையும் எடுத்து விரித்து, அதில் தன் கைகளைக் கோர்த்து அவளின் மேல் அமர்ந்து கொள்கிறான். வெட்கத்தில் அவள் முகத்தை மூட வழியில்லாமல் வடப்புறமும் இடப்புறமும் திரும்பித் துடிக்கிறாள்! சற்று இடைவெளி விட்டு, அவளுக்கு நேரம் தந்து..அவளின் இதழ் பதிக்கிறான்.

அவளுடைய மார்புகள் அவனின் மார்பில் பட்டு நசுங்கி உருவம் பிசகுகின்றன. கீழ் நோக்கிப் பாயும் நீர் போல், அவள் இதழ் சுவைத்துக் களைத்து கழுத்தில் விழுகிறான். பல செல்லக் கடிகள் கடித்து, அவளை மோகித்து இம்சிக்கிறான். பல முறை கசங்கிப் போன தென்றல் அனுபவ பாடம் கற்று காதலர் வழி புகாமல் வேறு திசை நோக்கிச் சென்று விட்டது. கழுத்தைச் சுவைத்து மயங்கிக் கிடப்பவள் காதில் மெல்லச் சொல்கிறான், "உப்புக் கரிக்கிறாய்! ரோசக்காரி தான்" என்று! அவள் சினுங்கிச் சிரித்த அடுத்த நொடி பல்லில் முத்தம் வைத்தான். அதிர்ந்து அவள் வாய் மூட நினைத்தது பலித்தது என்று வாய் பிரிக்காமல் அவள் இதழ் பறித்தான்! மெல்ல எழும்பி அவளிடம் கோர்த்த கைகளை விடுத்து கைகளுக்கு வேலை கொடுக்கச் சித்தமானான். மோதிரம் போடுவதற்கென்றே விரல்கள் என்ற எண்ணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு இரு கைகளாலும் அந்த மோகனத்தின் மார்பு பிடித்தான். மேகங்களில் காற்று மோகித்துப் படும் போது மழை பெய்வதை போல், அங்கு அவளின் பெண்மை துளிர்த்து எழுந்தது, அவன் மேல் விழுந்தது. உலர்ந்த திராட்சையை ஒத்த அவளின் முலைக் காம்புகளை தன் முத்த மழையில் நனைத்தான்! அதில் அவனும் நனைந்தான்.

அங்கிருந்து சற்று இறக்கத்தில் இருக்கும் அவளின் தொப்புளில் தான் தன் உமிழ் நீர் சேகரித்தான்! முற்றத்தில் ஒரு மழை நாளில் இருக்கும் சிறு செப்புக் குடம் ஒன்று நிரம்பி வழிந்தது போல் வழிகிறது அவன் எச்சிலில் அவளது தொப்புள்! தொப்புள் கடிக்கும் அவனை மெய்மறந்து தலை கோதுகிறாள். அழுத்திக் கொள்கிறாள் இன்னும். அவனின் நாக்கு தொப்புள் வழியுனூடே அவள் முதுகு துளைக்கிறது. மூச்சு முட்ட, எச்சில் தீர மெதுவாய் எழுகிறான். காதலாய்ச் சிரிக்கிறான் அவள் கண்களைப் பார்த்து. மோகத்தில் அவள் உதடு துடிக்கிறது.

சற்றே மேலெழும்பி காதலின் கடைசி கட்டத்துக்கு ஆயுத்தமாகிறான். அவனை வார்த்தெடுப்பதற்காக அவளின் பெண்மை விரிந்திருக்கிறது. துடித்திருக்கும் ஆண்மையை அது அழைப்பதைப் போலிருக்கிறது. தன்னுடைய அந்தரங்கத்தை, அடையாளத்தை, அலுங்காமல் அதனுள் செலுத்துகிறான். அது உறைக்குள் புதிய வாள் ஒன்று செல்வது போல் வழுக்கிக் கொண்டு செல்கிறது. அத்தகைய நீர் சுரந்து ஆண்மைக்கு வழி விட்டு இன்பம் காண்கிறது பெண்மை. இயங்கத் தொடங்குகிறான். அவள் மயங்கத் தொடங்குகிறாள். கண்களை மூடி ரசிக்கிறாள், தன்னுடைய கற்பு கரைபடுவதை. முனகுகிறாள், அவன் மேலும் முறுக்குகிறான். ஆணில் சற்றே பெண்மையும், பெண்ணில் சற்றே ஆண்மையும் கலக்கிறது, தங்கத்தில் செப்பு கலப்பதைப் போல..இறுதியில், இரு உடல் கொண்ட இயக்கத்தின் பலனாய் அவன் அவளுள் தன் உயிர் துளிகள் தூவினான். பிறந்து, வளர்ந்து, காத்து வந்த ஆண்மையின் சில துளிகளை உழைத்துக் களைத்து அவளுள் சேமித்து வைக்கிறான், எப்படியும் பத்து மாதங்களில் இழந்த அந்த உயிர் துளிகள் வட்டியுடன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்! சோர்ந்து சரிகிறான் அவள் மேல்..காமம் வடிந்து விட்டது அவன் கண்ணில்; காதல் அல்ல!!

காலந்தோரும் அவர்களுடைய புணர்வு தொடரும்..அவர்களுள் காதலும் காமமும் ஓங்கி இருக்கும் வரை!


வெள்ளத் தோலும், வெளையாட்டுமா பேசுவாரே அவரா
சின்ன நெத்தியில பெரிய பொட்டு வச்சுருப்பாரே அவரா
எலும்புக்கு மேலே தோல் போத்தினாப்ல இருப்பாரே அவரா
எட மெஷினா எனை நெனச்சு மேல கெடப்பாரே அவரா
ஒரு மணி நேரம் அனுபவிச்சுட்டு ஓசி ஒன்னு கேப்பாரே அவரா
அவுத்துப் போட்டு அரசியல் பேசுவாரே அவரா
ராவுக்கு மட்டும் வீட்டுக்கு போவாரே அவரா

ஆரோட புள்ளடா நீ?
மழை பெய்து கொண்டிருக்கிறது, உள்ளும் புறமும்! புறத்தில் வான் மழை; உள்ளத்தில் அவள் மழை! குளிர் காற்று முகத்தில் அறைகிறது, அவளுடைய பார்வை அவன் முகத்தில் அறைவதைப் போல் உணர்கிறான். மழையின் மெல்லிய சாரல் கேட்கிறது. அவளுடைய புன்னகையாய் அதை வரித்துக் கொள்கிறான்! இயற்கையின் அத்தனை அசைவுகளையும் அவனுக்கு ஏற்றவாறு அவளை வைத்தே மொழி பெயர்த்துக் கொள்கிறான்! ஏதோ ஒரு காலத்தில் சென்று கொண்டிருந்த ஒருவனை திடீரென்று வாழ்க்கை வசந்த காலத்தில் எதிர்பாராத விதமாய் தள்ளி விட்டதாய் நினைத்துக் கொள்கிறான்! கவிதைகளும், காவியங்களும், அது சொல்லும் காதலும் மெல்லப் புரிவதாய் உணர்ந்து சிரிக்கிறான். வாழ்க்கை இத்தனை அழகா என்று பிரமிக்கிறான். உலகின் சுகங்கள் அத்தனையும் தனக்குப் பிடித்த பெண்ணின் சிரிப்பில் அடக்கமா என்று வியக்கிறான். அவனுடைய காதலால் உலகமே சுபிட்சம் பெற்று விட்டது போல் தோன்றுகிறது. எல்லோரும் சந்தோஷமாய், அழகானவர்களாய், நல்லவர்களாய் தெரிகிறார்கள். வறுமை, சோகம், தீவிரவாதம், கோபம், வஞ்சகம் இப்படி அத்தனையும் தனிக்கை செய்யப்பட்டே அவன் பார்வைகளில் விரிகின்றன! அவனுடைய இதயத்தில் வெள்ளமென பொங்கி வழிகிறாள் அவள்.

அவளுடைய நினைவுகளே அவனை அழுத்துகின்றன. அதில் மிக சுலபமாக, சுகமாக அமிழ்ந்து போகிறான். இரவு வந்தும் அவன் அவளோட கழித்த பகல்களை இன்னும் விட்டு வரவில்லை. வர முயலவில்லை என்பதே உண்மை! நிலவு வந்த பின்னும் அவன் கதிரின் வெம்மையையும், அவள் கை கோர்த்து வேர்த்துப் பிசுபிசுத்த பொழுதுகளையும் எண்ணிப் பார்த்துக் கொள்கிறான். காலம் அவனை மட்டும் அதே இடத்தில் விட்டு விட்டு சென்று விட்டது. யாருமற்ற ரயில் நிலையத்தில் தொலைந்த குழந்தையை போல் தனியே நிற்கிறான், தான் தொலைந்திருப்பது புரியாமல்!

எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் அவளுடனே இருப்பதாக உணர்கிறான். அவளுடைய வார்த்தைகளே காதுகளைச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. யார் எதைக் கேட்டாலும் ஏதோ ஒப்புக்காக பதில் சொல்கிறான். அடிக்கடி தனியாய் சிரித்துக் கொள்கிறான். அடிக்கடி கண்ணாடி பார்க்கிறான். தன்னை மிகவும் அழகாய் உணர்கிறான். அவள் அங்கு இல்லாவிட்டாலும் அவளுடன் பேசிக் கொண்டே இருக்கிறான். யோசனைகள் குறைந்து விட்டது. அறிவின் அளவு சிறுத்து விட்டது. உடலின் அத்தனை பாகங்களும் இதயமாகிவிட்டதைப் போல் உணர்கிறான். உலகில் அவனும், அவளும் மட்டும் இருக்கிறார்கள்! இப்படியே நினைத்துக் கொண்டிருக்கும் சில காதலர்களும் ஆங்காங்கே மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். யாரைப் பற்றியும் யாரும் கவலைபடுவதில்லை. அது வேறு உலகம். எங்கும் ஏகாந்தமே சூழ்ந்திருக்கிறது. அந்த நொடியை முழுதாய் அனுபவித்து வாழவே விரும்புகிறான். அவளோடு சேர்ந்தே வானத்தை பார்க்கிறான். கண்களில் மழைத் துளி விழுகிறது!

காதல் என்பது
திறந்த கண்களால்
மழைத்துளி வாங்குவது போன்றது!
அதன் சுகம் கொடுமையானது!!

என்று என்றோ படித்த கவிதை அரைகுறையாய் ஞாபகம் வருகிறது. அப்படியே அதை அனுபவித்துக் கொள்கிறான். தூரத்தில் ஒரு இடி முழங்கி அவர்களை வாழ்த்துகிறது. அப்படி அவன் நினைத்துக் கொள்கிறான். இன்று மண்ணோடும், மனதோடும் ஒரு மழைக்காலம் தொடங்கி விட்டது!

விடுங்கள்.. அவன், அவர்கள் நனையட்டும்!
காதலி..
நான்
நடைமுறைக் காதலன்

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்

உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்

நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன

என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்

உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்

மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்

மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்

ஆம்
நான் நடைமுறைக் காதலன்

i just can't stop recommeding this blog to all illayaraja fans!
Amazingly written!
http://isai-alias-raja.blogspot.com/
இதே பிரச்சனை யின் காரணமாக...இன்று இரு கவிதைகள் மட்டும்!

யாருமில்லாத கடற்கரையில்
வந்து வந்து போகும் அலைகள்..
யார் காலை நனைக்க!

[இன்று திருவான்மியூர் கடற்கரையில் உதித்தது!]

பெளர்ணமி மட்டுமல்ல
பிறை நிலவும் அழகு தான்..
ஜன்னலின் வழியே உன் முகம்!

[2வது கவிதையின் முதல் இரு வரிகளை நான் எங்கேயோ கேள்விப்பட்டது போல் உள்ளது! யாருக்காவது தெரியுமா?]
வலைப்பதிவர் பெயர்: பிரதீப்
[சுருக்கமாக - பிரதீப் குமார் ஈஸ்வரி சுப்ரமணியன்]

வலைப்பூ பெயர்: பெய்யெனப் பெய்யும் மழை!
[யாருப்பா அது பிழைன்னு படிக்கிறது?]

சுட்டி(url) : http://espradeep.blogspot.com
[வலை உரலே க்யுட்டாயில்லை! நானும் இல்லைன்னு தானே சொன்னேன்!]
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை [அதனால் தான் வலைப்பதிவு வைத்து தமிழை மேலும் வளர்க்கிறேன்!]

நாடு: இந்தியா [ஜெய்ஹிந்த்!]

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் மேய்ந்த போது தெரிந்து கொண்டது கொஞ்சம்; ஷாங்ரீலா பவித்ராவின் மூலம் தெரிந்து கொண்டது கொஞ்சம்!
[பவித்ரா, உங்களுக்கு ஆபத்து! பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்!]

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 19, 2004
[சனி உச்சத்தில் இருந்த போது! உங்கள் எல்லோருக்கும்!!]

இது எத்தனையாவது பதிவு: 95

இப்பதிவின் சுட்டி(url):
http://espradeep.blogspot.com/2006/05/blog-post_28.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆரம்பிக்கப்படாமல் இருந்தது!
[சமீபத்தில் சுஜாதாவின் கேள்வி - பதில் தொகுப்பை படித்ததன் விளைவு!]

சந்தித்த அனுபவங்கள்:

1. எழுத்தாளர் சுஜாதாவையும் சக வலைபதிவாளர்களையும் சந்தித்தது!
[தேசிகனுக்கு ஒரு ஆ! எத்தனை நாள் தான் ஓ போடுவது?]
2. என் வலைப்பதிவை தவறாமல் படிக்கும் நண்பர் ஒருவர், எனக்கு ஃபோன் செய்து எழுத்தாளர் சுஜாதா பேசுவதாகவும், நான் நன்றாக எழுதுவதாகவும், விகடனில் நான் எழுத முயற்சிக்க வேண்டுமாயும் கேட்டு என்னை கொஞ்ச நேரம் கலாய்த்தார்!
[அடுத்த முறை ஜெயகாந்தன் மாதிரி பேச சொல்லியிருக்கிறேன்!]
3. பஸ் ஸ்டாண்டில் என்னுடைய ரசிகர் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டது!
[இது சத்தியமான பொய்!]

பெற்ற நண்பர்கள்: பிரதீப்புக்கும் எனக்கும் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது!

கற்றவை: கற்றபின் நிற்க அதற்குத் தக.
[முன் பாதியை நிரப்பு - 2 மார்க்]

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன? இந்தியாவுக்கு சுதந்திரம் வந்துருச்சா?

இனி செய்ய நினைப்பவை: சொல்லிப் பெய்வதல்ல மழை!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

மதுரை மாநகரில் சுப்ரமணியன் - கீதா தம்பதியினருக்கு 1978ம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பிரதீப் வானத்தில் இருந்து குதித்தார்! நர்ஸ் காட்ச் பிடித்து தொட்டிலில் போட்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப பிரதீப் சினிமாவிலும், சினிமா பாடல்களிலும் தேர்ந்து விளங்கினார். சிறு வயதிலேயே ரஜினி போல் நடந்து காட்டியும், நடித்துக் காட்டியும் பலருடைய உள்ளத்தை கொள்ளை கொண்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கொஞ்சமாய் வளர்ந்த பிரதீப்பின் வாழ்வில் அந்த சமயத்தில் விதி நன்றாக விளையாடியதில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆனார். அலுவலகத்தில் வலைபதிவதில் அயராது உழைத்தாலும் அதிலும் நேரம் மிச்சம் பிடித்து ப்ரொக்ராமிங்கும் செய்து கடமையை கண்ணும் கருத்துமாய் செய்தார்!! 2006 அல்லது 7 க்குள் யாராவது ஒரு குணவதியை மணப்பார்! இனிதே இல்லறம் நடத்துவார்? இப்படிப் பட்ட உயர்ந்த எண்ணங்களுடனும், குணங்களுடனும் வாழும் ஒரு மேதையை நாளை தமிழகம் இழந்தால் அது ஒரு பேரிழப்பாகவே இருக்கும். லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துவார்கள்! செலுத்தனும்!!

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்

பெய்யெனப் பெய்யும் மழை!

மதுமிதாவுக்கு ஒரு கேள்வி! இவ்வளவு லொள்ளா எழுதியிருக்கேனே, இதை புத்தகத்துல போடுவீங்க?
கூறை மேலிருந்த கண்ணாடித் தடுப்பின் வழியே வெயில் சுள்ளென்று அடிக்கிறது. கண்ணை மூடிக் கொண்டே வெப்பத்தை உணர்கிறேன். மிகவும் சோர்வாக இருக்கிறது. வாயில் கசப்பு நிரந்தரமாய் தங்கி விட்டது. நோயின் வெம்மையோடு வெயிலின் வெம்மையும் சேர்ந்து விட்டது. கண்களைத் திறக்க நினைக்கிறேன், முடியவில்லை. மிகவும் ப்ரயத்தனப்பட்டுத் திறக்கிறேன். கண்களின் நேரே சூரிய ஒளி பட்டு கண் கூசுகிறது. மறுபடியும் கண்ணை மூடிக் கொள்கிறேன். அப்படியே சிரமப்பட்டு கட்டிலின் அந்தப் பக்கம் புரண்டு கொள்கிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இப்போது கண்களைத் திறக்கலாம். என் பூப்படைந்த கண்ணின் வழியே அந்தக் காட்சியைக் காண்கிறேன். நான் தினமும் பார்க்கும் காட்சி. கண்ணாடித் தடுப்பின் வழியே நேர் கோட்டில் சூரிய ஒளி கட்டிலில் பட்டு அந்தக் கண்ணாடித் தட்டின் வடிவம் கட்டிலில் கிடக்கிறது. அந்த ஒளியின் ஊடே மாசு படிந்த ஒரு உலகம் தெரிகிறது. பல கோடி வருடங்களாய் கொளுந்து விட்டு எரியும் சூரியனின் ஒளியில் வயோதிகம் இல்லை. அதே வேகம், அதே தினவு, அதே வீச்சு, அதே கர்வம்! சூரியனை எந்த நோயும் பீடிப்பதில்லை போலும்.

இன்று என்ன தேதி, என்ன கிழமை, என்ன மாதம்? மூக்குக் கண்ணாடி அணியாத மங்கிய பார்வை போலாகிவிட்டது நினைவுகளும்! நினைவுகளின் துல்லியத்திற்கும் ஒரு மூக்குக் கண்ணாடி அவசியம் என்று தோன்றுகிறது. நினைவுக்கு ஏது மூக்கு? என்ன இது? ஒரே பிதற்றலாய் இருக்கிறதே? பேசும் போது பிதற்றுவது தான் உளரலென்றால் மனதளவில் இப்படிப் பிதற்றுவதற்கு என்ன பேர்? சே! என்ன உளரல் இது? உடம்பு நோய் கண்டும் இந்த மனது ஓய்வு எடுக்க மறுக்கிறதே? உடம்பு பாடாய் படுகிறது என்று சிறு இரக்கம் கூட காட்டுவதில்லையே இந்த மனம்? என்னால் முடியவில்லை. ஆமாம்....?, இந்த என்னால் என்பது உடலா, மனதா? ஏன் இப்படி உளருகிறேன் இன்று? சூரிய ஒளி மங்குகிறது. ஏதோ மேகம் மறைத்திருக்க வேண்டும். தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாசகம் ஞாபகம் வருகிறது. இந்த மூளை தான் மனதை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறது?! இந்த மனக்கிறுக்கின் உளரலுக்கு செவி சாய்த்து மூளைப் பரணில் இருக்கும் கண்டதை தூசி தட்டி எடுத்துத் தருகிறதே? உடல் சொல்கிறது, இரண்டும் கூட்டுக் களவானிகள் என்று!

என் உடல் வெப்பத்தால் கட்டில் சுடுகிறது. இவ்வளவு நேரம் அதை உணரக்கூடாது என்று என் எண்ணங்களை திசை திருப்பிப் பார்த்தேன். பலிக்கவில்லை. கொஞ்சம் புரண்டு கொள்கிறேன். வேட்டியை இரு கால்களுக்கும் இடையில் நன்றாய் செலுத்திக் கொள்கிறேன். என்ன வெப்பம்?! உடலெல்லாம் ஒரே அசதி. நான் ஓடிய ஆடிய காலங்கள் நினைவுப் பரணில் எங்கோ தூசு கண்டு கிடக்கிறது. அதை எடுத்து தூசு தட்ட நினைத்தால் இருமல் வரும்! இதோ வந்து விட்டது..இவ்வளவு நேரம் எப்படி மறந்து போயிருந்தேன். அப்பா, உயிரை உள்ளிருந்து பிடுங்கி எறிவது போல் அவ்வளவு அழுத்தமான, ஆழமான இருமல்கள்! என் வயதான, இறந்த போன, இறந்த கால மனைவியின் தளர்ந்த கைகளை மிகவும் கஷ்டப்பட்டு நினைத்துக் கொண்டு என் மார்பை வருடிக் கொள்கிறேன்! இதமாய் இல்லை தான். அப்படி இருப்பது போல் கற்பனை செய்து கொள்கிறேன்! வற்றிய கிணறைப் போல வற்றி இருந்த பாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுக்கிறேன்..இல்லை; எடுக்க முயல்கிறேன். ஆஹா...விரல்களில் ஈரம் படிகிறது! நல்ல வேளை அதிகமாய் தண்ணீர் இல்லை, டம்ளரில் நிரம்ப தண்ணீர் இருந்தால் அதை தூக்க சிரமம் ஏற்பட்டிருக்கும். ஏதோ டம்ளரில் ஒட்டி இருந்த ஒரு திவளை நீரை நாக்கில் நனைத்துக் கொள்கிறேன். எனக்கு யாருமே இல்லையா? என்று மனதில் ஒரு குரல் ஓலமிட்டு அழுகிறது! பாழடைந்து போன கண்களில் சிறிது கண்ணீர் சுரக்கிறது. நானிருக்கிறேன் என்று ஒரு சிறு தென்றல் என் கண்ணீர் துடைக்கிறது. கூரையின் கண்ணாடித் தடுப்பின் வழியே பார்க்கிறேன். நோயாளியைப் பார்க்க வருபவர்கள் பழங்கள் கொண்டு வருவது போல், சூரியன் வேஷம் போட்டுக் கொண்டு எனக்காக நட்சத்திரங்களை கொண்டு வந்து எட்டிப் பார்க்கிறது அரை குறை நிலா! அதற்குள் இரவு வந்துவிட்டதா?

வாழ்வில் மற்றொரு நாள் கழிந்தது!

அதே மாநகராட்சிப் பள்ளி; அதே போன்ற வெவ்வேறு நீண்ட வரிசைகள். ஜனநாயகக் கடனை நிறைவேற்றி விட்டு வந்தவுடன் எழுதுகிறேன். என் வாழ்நாளில் முதன் முதலாய் நான் போடும் ஓட்டு! ஒரு ஜீன்ஸ் ட்ரவுசர், ஒரு டீ-சர்ட்..கூட்டம் அதிகமாயிருந்தால் வரிசையில் ரொம்ப நேரம் நிற்க போர் அடிக்குமே என்று ஐ-பாட் ஐயும் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். நான் நினைத்த அளவுக்கு கூட்டம் அதிகம் இருக்கவில்லை. இருந்தும் காதில் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு நீ ஒரு காதல் சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தேன். கைலி கட்டிக் கொண்டும், அழுக்கான வேட்டி கட்டிக் கொண்டும், 3 வருடத்திற்கு முன் எடுத்த தீபாவளி சட்டையுடனும், கரை படிந்த பற்களுடனும், வித விதமாய் நின்றிருந்தனர். நான் அவர்களிடம் இருந்து தனித்து தெரிந்தேன். எந்த மடையனும் சொல்லி விடுவான், நான் சாஃப்ட்வேர் இன்சினியர் என்று! சாதாரண மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி வந்து விட்டேன்? இப்படி விலகச் செய்வது படிப்பா அல்லது பணமா? என்னைப் பற்றி அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? இப்படி பல எண்ணங்கள்! இப்படி எல்லாம் நான் நினைப்பது நியாயமா? அல்லது பேத்தலா? என்னமோ ஒன்றும் புரியவில்லை.

நீ ஒரு காதல் சங்கீதத்தையும் மீறி வரிசையில் நின்றவர்களின் அரசியல் விவாதம் காதில் விழுந்து கொண்டிருந்தது. இங்கு அரசியல் பேசக்கூடாது போர்ட் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். என்ன அபத்தம், இந்த இடத்தில் பேசா விட்டால் வேறு எந்த இடத்தில் தான் அரசியல் பேசுவது. பேசட்டும்; தகராறு ஏதும் வராமல் இருந்தால் சரி. வெளியே ஆங்காங்கே வெவ்வேறு கட்சிக் கொடிகள் கட்டி அது காற்றில் பறந்து கொண்டிருந்தன. கொடியுடன் அவர்கள் கொள்கைகளும்! எனக்கு எங்கள் தொகுதி பெயர் என்ன? யார் இங்கு நிற்கிறார்கள், இவர்களின் அரசியல் பின்னனி என்ன? ஒன்றும் தெரியாது. நான் ஓ போடத் தான் சென்றேன்! அதாவது, 49 {ஓ}! இந்தப் பட்டியலில் இருக்கும் யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை என்றால் 49 {ஓ} போடலாம் என்று சில நாட்களாக சாஃப்ட்வேர் இன்சினியர்களுக்கு (மட்டும்!) மெயிலின் மூலம் அறிவூட்டப்பட்டது!

வரிசை நகர்ந்து நான் உள்ளே சென்றேன். என் சீட்டையும், புகைப்பட அட்டையையும் சரி பார்த்தார் ஒரு அதிகாரி. மற்றவர் அதை வாங்கி என்னுடைய பேர் இருந்த ஒரு நோட்டில் என் பெயருக்குக் கீழே அடிக்கோடிட்டு இன்னொருவருக்கு அந்த நம்பரை சொன்னதும் அவர் குறித்துக் கொண்டார். ஒரு சீட்டைக் கொடுத்தார். பக்கத்தில் ஒருவர் என் விரலை நீட்டச் சொல்லி மையிட்டார். இந்த முறை புள்ளிக்கு பதிலாய் கோடு போடப் போவதாக பேப்பரில் படித்தேன். அதே மாதிரி ஒரு கோடு இழுத்து விட்டார். கோடு மட்டும் போடுங்கள்! சரியாய் ரோடு மட்டும் போடாதீர்கள்! என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்தவர் நோட்டு ஒன்றில் என் கையெழுத்தை வாங்கிக் கொண்டார். நல்ல வேளை அங்கே பேனா இருந்தது. இந்த முறை யாரும் என் பேனாவை கேட்கவில்லை! அந்தச் சீட்டை கொண்டு போய் அங்கு ஒரு வயதான் பெண்மனி உட்கார்ந்திருந்தார். அவரிடம் கொடுத்ததும், அதை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள அட்டைத் தடுப்புக்குள் என்னைப் போய் ஓட்டுப் போடச் சொன்னார்.

உள்ளே சென்று அந்த வோட்டிங் பேடைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த 49 {ஓ} இல்லை; சரி அதற்கு ஃபாரம் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து வெளியில் வந்து, அந்த அம்மாவிடம் எனக்கு யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை, எனக்கு 49 {ஒ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன். அவர் இதில் உள்ளதைத் தான் போட வேண்டும், அந்த நீல நிற பட்டனை அமுத்துங்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு அது தெரியும், எனக்கு இவர்களுக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை. 49 {ஓ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன் மெதுவாய். அதற்குள் அந்த அறையில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. நீங்க ஆபிஸர்கிட்ட கேளுங்க என்றார். அவர் பக்கத்தில் தான் வரிசை நின்று கொண்டிருக்கிறது. நான் மெதுவாய் சென்று 49 {ஓ} ஃபார்ம் கொடுங்க என்றேன். அவர் அப்படின்னா? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள். i am really embrassed! சரி என்று சமாளித்துக் கொண்டு, எனக்கு இதில் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்று ஒரு ஓட்டுப் போட வேண்டும், அதற்கான ஃபார்மை கொடுங்கள் என்றேன். வரிசையில் சலசலப்பு அதிகமானது. என்ன சொல்றீங்க? ஓட்டு போட விருப்பமில்லைன்னா ஏன் வந்தீங்க? என்றார் ஆபீஸர். வரிசையில் நின்ற ஒரே ஒரு ஜீவாத்மா மட்டும், இல்லை சார் அவர் கேக்குறது சரி தான் என்று அவரிடம் கூறி விட்டு ஆனா அந்த ஃபார்ம் இங்க இல்லை, நீங்க ஏன் ஓட்டை வேஸ்ட் பண்றீங்க? போய் யாருக்காவது போடுங்க என்றார் என்னிடம். எல்லோரும் புலம்பினார்கள். போங்க போய் ஓட்டு போடுங்க என்றார். அப்படியே வெளியே போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நல்ல ஓட்டு கள்ள வோட்டு ஆகாமல் இருக்க உள்ளே சென்று என் மனதில் அடுத்த படியில் இருந்த ஒரு சின்னத்தில் க்ளிக்கி என் முதல் ஓட்டை போட்டேன். [யாருக்குப் போட்டேன் என்பது ரகசியம் என்பது உங்களுக்கே தெரியும்!] எல்லோரும் என்னை பார்த்து சிர்ப்பது போலிருந்தது. அரை ட்ரவுசர் போட்ட அரை லூசு என்று நினைத்திருக்கலாம். உண்மையில் யார் அரை லூசு? மக்கள் ஏன் இவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள்? மக்களை விடுங்கள், அந்த அதிகாரிகளுக்கும் அப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்களா? 1960 ஆண்டுகளிலிருந்து இந்த 49 {ஒ} என்பது இருக்கிறது என்றார்களே! பத்திரிக்கைகளில் எத்தனை முறை இதைப் பற்றி வந்திருக்கிறது! யாரும் நமிதாவின் படத்தைத் தாண்டிப் பார்ப்பதே இல்லையா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சரி அரசியல் கட்சிகள் தான் 49 {ஒ} பற்றி பேசமாட்டார்கள். இந்தத் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? இந்த விழிப்புணர்வை மக்களுக்கு அது ஏன் சரியாக வழங்கவில்லை. வீடு விடாய் சென்று ஓட்டுக் கேட்கும் அரசியல் கட்சிகளோடு இவர்களும் ஒரு குழு அமைத்து வீடு வீடாய் சென்று இதைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லலாமே? ஏன் செய்யவில்லை? இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்? என்ன தான் தீர்வு இதற்கெல்லாம்? ஏன் என் நாடு இப்படி இருக்கிறது? எது தான் சரியாய் நடக்கும் இங்கே? வழக்கம் போல் நிஜம் கேள்விகளின் ரூபத்தில் முகத்தில் அறைகின்றன!

வீட்டிற்கு வந்தவுடன் www.ohpodu.org சென்று ஞாநியின் நம்பர் தேடி, அவருக்கு ஃபோன் போட்டென். ஒரு நம்பர் மாறிவிட்டதாகச் சொன்னது. இன்னொன்று எப்போதும் பிஸியாக இருந்தது. நான் என்ன தான் செய்வது? எல்லா கொடுமைகளையும் பார்த்து பார்த்து இத்தனை கேள்விகளையும் எனக்குள்ளே கேட்டுக் கேட்டு இதோ வலைபதித்துக் கொண்டிருக்கிறேன்! சமயத்தில் எல்லாவற்றையும் எடுத்தெறிந்து விட்டு சமூகத்தைத் திருத்தக் கிளம்பி விடலாம் என்று தோன்றுகிறது! ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. எல்லோரையும் போல என்னால் இந்தியான்னா இப்படித் தான் என்றும் போக முடியவில்லை! கடைசியில் ஆதங்கமே மிஞ்சுகிறது.

என் விரலைப் பார்த்துக் கொள்கிறேன். மை காய்ந்திருந்தது! என் விரலிலும் இன்று முதன் முதலாய் ஜனநாயகக் களங்கம் ஏற்பட்டு விட்டது!

யாரும் சிரிக்கக் கூச்டாது சொல்லிச்ட்ச்டேன்! இந்த முறை என் கீ போர்ச்டில் ச் அட்சித்தால், ச் உச்டன் ச்ட
விழுவதால் என்னால் வலை பதிய முச்டியவில்லை. அது எப்பட்சி மீண்ட்சும் மீண்ச்டும் எனக்கு மச்ட்ச்டும் இப்பட்சி நச்டக்கிறது?

புரியாதவர்களுக்கு!

யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்! இந்த முறை என் கீ போர்டில் ட அடித்தால் ச் வுடன் சேர்ந்து விழுவதால்
என்னால் வலை பதிய முடியவில்லை. அது எப்படி மீண்டும் மீண்டும் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?

கதை - எழுதியாகிவிட்டது
கவிதை - எழுதியாகிவிட்டது
கட்டுரை - எழுதியாகிவிட்டது
ஓவியம் - வரைந்தாகிவிட்டது
விமர்சனம் - எழுதியாகிவிட்டது
அனுபவங்கள் - எழுதியாகிவிட்டது

திரைக்கதை - இதோ...

இது என்னுடைய முதல் திரைக்கதை அனுபவம்! இதை, குத்து பாட்டு 2 போட்டா படம் பிச்சிக்கும் என்று சொல்லாத தயாரிப்பாளர் கிடைத்தால் 5 அல்லது 7 நிமிட குறும்படமாக எடுக்கலாம். ஏதோ நான் படித்த மற்றும் பார்த்த அனுபவங்களைக் கொண்டு இதை எழுதியிருக்கிறேன். நம் நாட்டின் கல்வி முறையையும், பரிட்சை பற்றிய பயமும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து சொல்ல முயன்றிருக்கிறேன்..இது நம்மில் பலரின் அனுபவமாகக் கூட இருக்கலாம்.

ஓபன் பண்ணா! [ஆரம்பிச்சுட்டான்யா!]


அதிகாலை ஒரு தெரு.

தூரத்தில் ஒரு வீட்டில் அலாரத்தின் சத்தம்.

அப்பா: டேய் மணி, எந்திரி..மணி 5 ஆச்சு பாரு..எந்திரி. இன்னைக்கு என்ன பரிட்சை?

மணி: [கண்களை கசக்கி கொண்டே] கணக்கு!

அப்பா: போ, போய் பல்லை விலக்கிட்டு, முகம் கழுவிட்டு படி..[அப்பா திரும்பி படுத்துக் கொள்கிறார். மணி வேண்டா வெறுப்புடன் நடந்து பாத்ரூம் செல்கிறான்.]

மணி முகம் கழுவிய பிறகும் இன்னும் தூக்கக் கலக்கத்துடன் இருக்கிறான். கணக்கு புத்தகத்தை பையில் இருந்து எடுக்கிறான். கணக்கு 7 close-upல் காட்டப் படுகிறது. அதை தூக்கக் கலக்கத்துடனும் வேண்டா வெறுப்புடனும் பார்க்கிறான். ஏதோ ஒரு பக்கத்தை புரட்டுகிறான். தூக்கத்தில் பக்கங்கள் மங்கலாகத் தெரிகிறது. [பின்னனியில் ஒரு தாலட்டு இசை பதிவாகிறது.] அப்படியே புத்தகத்தின் மேல் தலை கவிழ்ந்து படுத்துக் கொள்கிறான்.

அப்பா: [படுக்கையிலிருந்து] என்னடா தூங்குறியா?

மணி: [வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டே] ஒன்னும் தூங்கலை..படிச்சிட்டு தான் இருக்கேன்.



காலை

மணி குளித்து சீருடை அணிந்து சாமி கும்பிடுகிறான்.

மணி: பிள்ளையாரப்பா..இன்னைக்கு கணக்கு பரிட்சை!..உன்னை தான் நம்பி இருக்கேன். பரிட்சை ஈஸியா இருக்கனும். அந்த சோடாபுட்டி வாத்தியார் வரக் கூடாது....இப்போ என் தலையில குட்டிக்கிறேன்...மகனே சொதப்புன..சாய்ந்தரம் உன் தலையில கொட்டுவேன்டீ! ஆமா..[பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டே திருநீறை எடுத்து பூசிக் கொள்கிறான்]
மணி பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்புகிறான். அப்பா வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பா: என்னடா ஒழுங்கா படிச்சியா? பரிட்சையை ஒழுங்கா பாத்து எழுது!

மணி: எங்க பள்ளிகூடத்துல பாத்து எல்லாம் எழுத விட மாட்டங்கப்பா..

அப்பா: அடி படவா..[மணி ஓடுகிறான்] பாஸ் பண்ணாம வீட்டுக்கு வந்துராதே..இதெல்லாம் எங்க உருப்புடப்போகுது?! புள்ளைய பெத்துருக்கா பாரு..அவ அண்ணன்காரன் மாறியே..[உள்ளேயிருந்து ஒரு பெண் குரல்: எங்க வீட்டை குறை சொல்லலைன்னா உங்களுக்கு பொழுது விடியாதே!]

மணி குழப்பத்துடன் நடந்து செல்கிறான். எத்தனை முறை படித்திருந்தாலும் சூத்திரங்கள் ஞாபகத்திற்கு வர மறுக்கின்றன. [அவன் தோல்பை சிலுவையாய் மாறுகிறது. அவர் அப்பாவும், வாத்தியாரும் பிரம்பால் அடித்துக் கொண்டே பின்னால் வருகிறார்கள்! ]

டீ கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் மணியை பார்த்து, "என்னடா பரிட்சையா இன்னைக்கு?" என்று சிரிக்கிறான். மணிக்கு அவனை பார்க்க பொறாமையாய் இருக்கிறது. தலை குனிந்து நடக்கிறான். ரோட்டில் எல்லோரையும் பார்த்து இவர்களுக்கு எல்லாம் இன்று கணக்கு பரிட்சை இல்லையே..என்ற ஏக்கத்துடன் நடக்கிறான்.



பள்ளிக்கூடம்

கேள்வித் தாள் கொடுக்கப் படுகிறது. மணிக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்து நிற்பதால் கேள்வித்தாள் மங்கலாய் தெரிகிறது..வேர்க்கிறது. அந்த வேர்வையில் அவன் பூசியிருந்த திருநீறு கரைகிறது..

பிள்ளையாரை குட்டுவது போல் மணி கற்பனை செய்து கொள்கிறான்!


சுபம்
dumb charat என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் எனக்குத் தெரிந்த வரை, மெளன மொழி அல்லது படம் பேர் சொல்லி விளையாடுவோம்டா என்பார்கள். படம் பேர் சொல்லி என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் நான் சரி என்று தலையாட்டி முடித்திருப்பேன். அந்த விளையாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்கும். எனக்குத் தெரிந்து, நான் கேப்டனாய் உலா வரும் ஒரே விளையாட்டு இது தான்! சமீபத்தில் உறவினர்களுடன் மறுபடியும் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. என் அக்காவிற்கு என் சினிமா அறிவைப் பற்றி நன்றாய் தெரியும். டேய், நம்ம ஒரு டீம்டா என்று முதலில் இடம் போட்டு வைத்து விட்டார். என் எதிர் அணியில் அண்ணன், அண்ணி மற்றும் சில சுண்டான்கள். எங்கள் அணியில் நான், அக்கா மற்றும் சில சுண்டான்கள். என் அண்ணனுக்கு அதிகம் சினிமா அறிவு கிடையாது. ஆனால் அண்ணி சினிமா அறிவு இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் யாரு, என் பேக்ரவுண்ட் என்ன என்ற ரேஞ்சில் நான் பீத்திக் கொண்டிருந்தேன்.

ரூல்ஸ் இது தான்: (உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும்)

1. ஒரு அணியில் உள்ளவர் இன்னொரு அணியில் உள்ளவர் யாரிடமாவது ஒரு திரைப்படத்தின் பெயரை அவர் காதில் சொல்ல வேண்டும்.
2. காதில் வாங்கிய நபர் தன்னுடைய அணிக்கு வாயசைக்காமல் நடித்துக் காட்டி, அதை அந்த அணியில் மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
3. இத்தனை நிமிஷத்திற்குள் சொல்ல வேண்டும் என்று நாங்கள் டைம் செட் செய்து கொள்வதில்லை. (வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம்)

நான் முதலில் என் அண்ணன் காதில் சென்று பல்லவன் என்ற தமிழ்த் திரைக்காவியத்தைக் கூறினேன். அவர் கடுப்பாகி, அப்படி எல்லாம் படமே வரலை என்றார். அதற்குள் என் அணியில் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் சொன்னா சரியா இருக்கும், போய் நடிங்க என்றேன். இதை எல்லாம் எப்பிட்றா நடிக்கிறது என்று என்னை அநியாயத்திற்கு முறைத்து விட்டு நடிக்க ஆரம்பித்தார். ஸ்டேரிங்கை ஓட்டினார். கியர் போட்டார். மனிதர் கிட்டத்தட்ட பஸ்ஸையே ஓட்டி விட்டார். ஒன்னும் நடக்கல. எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை. ஒரு வழியாய் எல்லோரும் வெறுத்துப் போய் கடைசியில் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அண்ணன் சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டார்.

அடுத்து என் டர்ன். இதெல்லாம் எனக்கு சாதரணம்டா என்று கிளம்பினேன், அங்கு அண்ணி இருப்பது தெரியாமல்..அவர்கள் என் காதில் சொல்லிய படம் என்ன தெரியுமா? கும்மாளம். இதெல்லாம் எப்படி நடிக்கிறது என்றேன்? சோர்ந்து போயிருந்த அண்ணன் எழுந்து நீ பல்லவன் சொன்னியே அப்போ என்னைப் பத்தி கொஞ்சமாவது நெனைச்சி பாத்தியாடா என்று கதறினார். தீதும் நன்றும் பிறர் தர வாரா வுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். கும்மாளத்தை எப்படி நடித்துக் காட்டுவது சொல்லுங்கள்? நானும் மாக்கான் மாதிரி தைய தக்கா என்று குதிக்கிறேன்..ஓட்றேன், ஆட்றேன்..என் அக்காவுக்கு சிரிக்கவே சரியாய் இருக்கிறது, அவள் பதில் சொல்லக்கூட முயற்சிக்கவில்லை. பெரும் தோல்வி. எங்கள் அணியில் கிட்டத்தட்ட ஒரு 40 வயதானவர் இருந்தார். அவரிடம் ராஜபார்ட் ரங்கதுரை படத்தை சொல்லியிருந்தார்கள். பாவம் அவர் பதறி விட்டார். அவருக்கு நம்பிக்கையே இல்லை. சும்மா நடிங்க என்றேன். கஷ்டபட்டு ஏதேதோ செய்தார். நான் சரியான பதிலைத் தந்ததும் அவரால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இந்தச் சின்ன வயதில் இத்தனை அறிவா என்ற ரேஞ்சுக்கு கையை கும்பிட்டுக் கொண்டே என் அருகே வந்து அமர்ந்தவரை ஆஸ்வாசப்படுத்தி அமர வைத்தோம்.இன்னொரு முறை நான் சென்றேன். இப்போது அவர்கள் சொன்னது அழகன். ஒரே வார்த்தை என்று சைகை காட்டினேன். நடிக்காமல் பேசாமல் நின்றேன். ஒரு புன் முறுவல் பூத்தேன். என் முகத்தை சுட்டு விரலால் காட்டினேன். ஒரு சுண்டான் ஆதிவாசி என்றான். நான் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். தோல்வியை ஒப்புக் கொண்டேன். அதற்குள் எதிரணியில் இருந்தவர்கள் உனக்கு நடிக்கவே தெரியலை, மம்முட்டி படம் தானே, மம்பட்டி எடுத்து வேலை செய்ற மாதிரி நடிச்சா ஈஸீயா சொல்லிடலாம் என்றார்கள். இந்த அளவுக்கு எனக்கு யோசனை ஓடவில்லை. இனிமேல் நாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.

அடுத்த முறை நண்பர்களுடன் விளையாடினேன். இந்த முறை என் தம்பி என் அணியில் இருந்தான். நடிக்க ஆரம்பிக்கும் முன் சில கேள்விகளை கேட்போம். பழைய படமா? அவன் ஆமாம் என்று தலையாட்டுவான். சில பேருக்கு அப்படி ஒரு படம் வந்ததே தெரியாது என்றால் கஷ்டம் தான். எத்தனை வார்த்தைகளோ அதை கையால் எண்ணி சொல்லி விடுவான். அதனால் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியை யாரும் சொல்வதில்லை. அவன் எண்ணி முடிப்பதற்குள் சொல்லி விடுவோம். முதலில் என் அணிக்காரன் நடிக்க வந்தான். நான் தயார். பழைய படம் என்று கையை பின் பக்கம் இழுத்து தலையை சாய்த்து சொன்னான். அவன் நிமிர்வதற்குள் குலேபகாவலி என்றேன். ஆமாம் என்று வந்து அமர்ந்து விட்டான். எதிரணியில் வெறுத்தே போனார்கள். அடுத்து இன்னொருவன் நடிக்க வந்தான். இடது கையை ஏந்துவது போல் வைத்துக் கொண்டு வலது கை விரல்களால் நடப்பது போல் செய்து காட்டினான். என் தம்பி நண்டு என்றான். அதுவும் சரி. அடுத்து சீவலப்பேரி பாண்டி என்று பெருமையாயும் இதை எப்படி உன் அணியில் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம் என்ற ரேஞ்சுக்கு எதிரணியினர் சொல்லி விட்டிருந்தார்கள். எங்கள் அணியில் நடிக்க வந்தவன் 2 வார்த்தை, இடைப்பட்ட காலப் படம் என்ற சைகை செய்து, இடுப்பில் வேட்டியை ஏத்தி கட்டுவது போல் செய்து, பின்னாலிருந்து அரிவாள் எடுப்பது மாதிரி சைகை செய்தான். முடிந்தது. வந்து உட்கார்ந்து விட்டான். நெக்ஸ்ட் என்றோம். எதிரணியில் இருந்த ஒரு நண்பி, இவன் இருந்தா நான் இந்த விளையாட்டுக்கு வர்ல என்று என்னை கை காட்டி சொன்னாள். அடுத்து என் தம்பி உள்ளே போனான். 13ம் நம்பர் வீடு. இதை தான் என் தம்பியின் காதில் சொன்னார்கள் என்று ஞாபகம். சொல்லிவிட்டு, இதையும் உங்க அண்ணன் சொல்லிடுவானா என்று கேட்டிருக்கிறான். என் தம்பி, வந்து பாரேன் என்று நடிக்க வந்தான். பேய் மாதிரி குரூரமாய் ஏதோ செய்தவுடன் சரியான பதிலை சொல்லி விட்டொம். நான் மிகவும் கஷ்டப்பட்டும் சொல்லாத படம், சந்தியா ராகம். அதற்காக என் நண்பன் இந்தியாவை எல்லாம் நடிப்பில் கொண்டு வந்தான். சா·ப்ட்வேர் இன்சினியர்கள் ஆங்கிலப் படங்களின் பெயர்களைக் கொண்டு ஆபிஸீல் விளையாடுகிறார்கள். நான் அதில் பூஜ்யம். இனிமே தமிழ் படங்களை சொல்லி நாம் விளையாடவே முடியாது, ஏதாவது சீன் நடிச்சு காட்டி எந்தப் படம்னு கண்டுபிடிக்கலாம் என்று என் நண்பன் ஒருவன் யோசனை சொல்லியிருக்கிறான். வெற்றியோ, தோல்வியோ இந்த விளையாட்டையும், அது எங்களுக்குத் தந்த இனிமையான அனுபவங்களையும் நான் நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்கிறேன். ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அது சொய்ங்கென்று கீழிறங்கும் போது உண்டாகும் ஒரு குதூகலமும், உற்சாகமும் எனக்கு அதை நினைத்துப் பார்க்கும் போது ஏற்படுகிறது. நீங்களும் விளையாடிப் பாருங்கள்!

முன்னாலேயே எழுத வேண்டிய பின்குறிப்பு:

அதான் படிச்சாசுல்ல, அப்படியே ரைட்ல அந்தப் படத்தை க்ளிக்கி, நமக்கு ஒரு வோட்டை போட்றது?! இது தமிழக அரசு வோட்டு மாதிரி இல்லைங்க; ஓட்டு போட்றவங்களுக்கும் ஏதோ பரிசு தர்றாங்களாம். பாத்துக்குங்க. அவ்வளவு தான் சொல்வேன்!

வெள்ளிக்கிழமை க்யான் விபோத் நடத்திய டெம்டேஷன் என்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அலுவலகத்தில் ஒரு நண்பர் அவருடைய மனைவி வராததால் என்னை அழைத்து சென்றார். மியுசிக் அகாடமியில் நடந்தது. ராஜேஷ் வைத்தியாவின் amplified வீணையுடன், சினிமா பின்னனிப் பாடகர் கார்த்திக்கின் குரல் சேர்ந்து எங்களை எங்கேயோ கொண்டு சென்றது. கர்நாடகம், இந்துஸ்தானி, கஜல் என்று எல்லாம் சேர்ந்த (அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்) ஜுகல்பந்தி (எல்லாம் சேர்ந்து கொடுப்பதற்கு ஜுகல் பந்தி என்று தானே பெயர்?) கார்த்திக்கின் குரல் மிகவும் சாதாரணமாயும், இனிமையாவும் இருந்தது. இது தான் அவருடைய முதல் மேடை நிகழ்ச்சியாம். அடிக்கடி மினரல் வாட்டர் குடித்தார்.சாருகேசி, மதுவந்தி, தர்மாவதி என்று பல பெயர்களைச் சொன்னார்கள், வழக்கம் போல் ஒன்றும் புரியவில்லை. கடைசியில் அந்நியன், ஆதி புகழ் சைந்தவியும் (12வது படிக்கிறார்!) சேர்ந்து கலக்கினார். கர்நாடக இசைக்கே உரிய அற்புதமான சாரீரம். டோரா டும்முன்னு என்ற ஒரு கருத்தாளமிக்க பாடலை பாடி இருக்கிறார். கார்த்திக்குடன் சேர்ந்து சில சினிமா பாடல்களையும் பாடினார்கள். நிகழ்ச்சிக்கு பாலசந்தர், மதன் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் வந்திருந்தார்கள். பாலசந்தருக்கு 70 வயதுக்கு மேல் ஆகி விட்டது என்று ஞாபகம், மனிதர் என்னமாய் ஓடுகிறார்.

சனிக்கிழமை ப ட் டி ய ல் பார்த்தேன். ஓகே ரகம். என்னடா ஒரே ரத்தம், அடி, தடி..ஏண்டா இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு வர்றே என்று அம்மா திட்டினார். பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கதை. சீரான திரைக்கதை, திடீர் திருப்பம். தெரிந்த முடிவு! அவ்வளவு தான் பட்டியல். ஆர்யா இன்னும் கொஞ்சம் கம்மியாக தாடி வைத்திருக்கலாம், அசல் பரதேசி மாதிரியே இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கும் பரத்துக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. (அதற்குள் நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்தால்!) தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் கதைக்குத் தேவையில்லாமல் பாடல்கள் புகுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை. என் வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு கடமையை முடித்தேன். ஜனநாயகக் கடமை. தேர்தலுக்காக ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். காலம் காலமாக சென்னையிலேயே இருப்பவர்களின் பலருடைய பெயர்களே விடுபட்டிருக்கும் நிலையில் என் பெயர் இருந்தது நான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம். என்ன முயன்றாலும், ஞாயிற்றுக் கிழமை காலை என்பது 12 மணிக்குத் தான் தொடங்குகிறது. ஒரு வழியாய் அதற்குள் ஷாம்பு எல்லாம் போட்டு குளித்து ரெடியாகி பக்கத்தில் இருந்த மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றேன். 4 வரிசை நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு 100 பேர் தங்களுக்குப் பிடித்த வரிசையில் நிற்கிறார்கள். நான் நின்ற வரிசையில் என் முன் இருந்தவர், முதலில் புகைப்பட அடையாள அட்டை ஒன்றை காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும், அதற்குப் பிறகு அந்த வரிசையில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றார். 12 மணி வெயில், கருப்பு சட்டையில் ஜிகு ஜிகு என்று நிற்கிறேன். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் வரிசையில் நிற்கும் போது ஒன்றை கவனிப்பதுண்டு. வரிசையின் குறுக்கே புகுந்து போக விரும்புபவர்கள், நேராக என்னைத் தான் தள்ளச் சொல்லி அந்தப் பக்கம் செல்வார்கள். அது எப்படி நேராக என்னிடம் வருகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நேற்றும் வழக்கம் போல் அதே நடந்தது.

எனக்கு எரிச்சலைத் தரும் ஒரு விஷயம், ரயில்வே ஸ்டேஷன், பாங்க் இந்த இடத்திற்கு பேனா இல்லாமல் வருவது. வரிசையில் இருந்த பலர், அதிகாரியிடமே பேனாவைக் கேட்டு கையெழுத்து இட்டார்கள். அவரும் வழக்கம் போல் எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார். என் முன்னால் இருந்தவர் வரை அடையாள அட்டை காட்டி அதிகாரி வைத்திருந்த நோட்டில் கையெழுத்து இட்டுச் சென்றார். என் ராசியைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் போய் நின்று, பாத்தியா இது என் பேனா என்று வீராப்பாய் கையெழுத்து போட்டேன். சொல்லி வைத்தார் போல், அவர் பேனா எழுதாமல் போனது. பேனா கொடுத்துட்டு போங்க. என் பேனா எழுத மாட்டேங்குதுன்னார். என் நெத்தியில இளிச்சவாயன்னு ஏதாவது ஒட்டி இருக்கா சார்? என்று அவரிடம் கேட்கவா முடியும். தர்மசீலன் போல் கொடுத்து விட்டு நகர்ந்தேன். ஆனால் உண்மையில் சொல்கிறேன் 50 கிலோ பொன்னை வேண்டுமென்றாலும் பாதுகாப்பாய் வைத்திருக்கலாம் போலிருக்கிறது, இந்தப் பேனாக்களை வைத்துக் கொள்வது இருக்கிறதே...அப்படி பல பேரிடம் காப்பாற்றி கடைசியில் இவரிடமா என் பேனாவை பறி கொடுக்க வேண்டும் என்று அடுத்த வரிசையில் நின்று வெயிலின் குளுமையை உணர்ந்த படி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

LKG C Section ல் ஃபோட்டோ எடுக்கிறார்கள். வரிசை LKG C Sectionஐ நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. மணி 1; வரிசை அப்படியே நிற்கிறது, மணி 2; வரிசை அப்படியே நிற்கிறது. கேட்டால் சாப்பிடப் போய் விட்டார்களாம். கிட்டத்தட்ட 100 பேர் ஒதுங்க இடம் இல்லாமல் பசியுடன் வெயிலில் நிற்கிறோம். யாரோ ஒரு புண்ணியவதி ஒரு பெரிய பையில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வேண்டுபவர்க்கு கொடுத்தார். வாழ்த்த வயதில்லாமல் வணங்கினேன். வழக்கம் போல் எல்லோரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சாப்பிட்டு விட்டு வரிசை கொஞ்சம் நகர்ந்த மாதிரி ஆசை காட்டியது. பிறகு அவ்வளவு தான். தாய்குலங்கள் மட்டும் ஃபோட்டோ எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். தந்தைக்குலங்கள் அப்படியே நிற்கிறோம். பக்கத்தில் நின்ற ஒரு தாய்குலம் ஏதோ எழுதுவதற்காக பெண்கள் பக்கம் பேனா கேட்டுவிட்டு கிடைக்காமல், ஆண்கள் பக்கம் திரும்பி ஒரு முறை எல்லோரையும் பார்த்து விட்டு, பேனா இருந்தா கொடுங்க என்றார் என்னிடம். நற நற;

அப்போது தான் என் பேனாவை கையாடியவர் அந்த வழியே வந்தார். சார் பேனா என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து, ஏன்யா? ஒரு 5 ரூபா இருக்குமா? எழுதலைன்னு தானே வாங்கியிருக்கேன்..சொல்லிட்டு போயிட்டே இருக்கார். வரிசையில் நின்றவர்கள் என்னை பார்த்த பார்வை இருக்கே. அவர் போய்விட்டாரா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு நான், 5 ரூபா தானே, வாங்கியிருக்க வேண்டியது தானே என்றேன். நானும் ஹீரோ மாதிரி ஏதாவது பண்ணிடம்னு பாக்குறேன்; ஆனா காமெடியா பூடுதுப்பா! ஒரு வழியாய் அந்த வகுப்புக்குள் நுழைந்து அங்கு தொங்க விடப்பட்டிருகும் கரடியும், இரு நண்பர்களும் கதையை பல தடவை படித்தேன். ஒரு அம்மா தன் குழந்தைக்கு அந்தக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு காட்ல 2 அண்ணங்க நடந்து வந்தாங்களாம்; அப்போ பியர் வந்துடுத்தாம்; ஒரு அண்ணா மரத்துல ஏறிட்டாராம், இன்னொரு அண்ணாக்கு ஏறத் தெரியலையாம். கீழே செத்த மாதிரி படுத்துண்டானாம். கரடி கிட்ட வந்து மோந்து பாத்துட்டு போயிடுச்சாம். அந்த அண்ணா கீழே வந்து கரடி உன்கிட்ட என்னடா சொல்லிச்சுன்னு கேட்டானாம். இனிமே உன்னை மாதிரி selfish கூட சேராதேன்னு சொல்லிச்சுன்னானாம். என்று கதையை முடித்தார். நல்லவேளை, அந்த அண்ணாவை கரடி ஏன்மா சாப்பிடலை என்று குழந்தை கேட்கவில்லை.

நம் கதைக்கு வருவோம்; 100, 150 பேருக்கு ஃபோட்டோ புடிக்க அங்கு இருந்தது மூன்றே பேர். அவர்களும் அதிகாரிகள் கிடையாது. ஏதோ ஒரு க்ரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் செம்பட்டைத்தலையுடன் இருந்த 3 வாலிபர்களை கொண்டு வந்து இங்கு உட்கார வைத்து விட்டார்கள் போலிருக்கிறது. ஒருத்தர் ஃபோட்டொ புடிக்கிறார். ஒருத்தர் கம்ப்யுட்டரில் அதைப் பதிவு செய்கிறார். ஒருத்தர் வெட்டி ஒட்டி லாமினேட் செய்கிறார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் சாப்பிடாமல் கொள்ளாமல் நின்று நின்று எனக்கு, இல்லை அங்கு எல்லோருக்கும் பெண்டு கழன்டுட்டது. ஐய்யய்யோ மணி 3 ஆயிடுச்சே, இப்போ டீ குடிக்க போயிடுவாங்களே என்று சொன்னேன். வரிசையில் முன்னால் இருந்தவர் என்னை திரும்பிப் பார்த்து முறைத்த மாதிரி இருந்தது. பேசாமல் இருந்து விட்டேன். ஒரு வழியாய் என் முறை வந்தது. நான் சரியாய் உட்கார்வதற்குள் டிஜிட்டல் காமெராவினால் என்னை க்ளிக்கியிருந்தான். ஒரு சிட்டை கொடுத்தான், அதைக் காண்பித்து ஃபோட்டோ பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். அதற்க தனியாய் ஒரு கும்பல். நான் சாப்பிட்டு மறுபடியும் சென்றேன். 4 மணி. பேனா கொடுத்தவரின் பின்னால் நின்றேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. ஃபோட்டோ வந்தது. வாங்கிப் பார்த்தேன். தேமேயென்று இருந்தது. (இருக்கிறது தானே வரும்னு எங்களுக்குத் தெரியும் நீங்க ஒன்னும் சொல்லாதீங்க!) பார்த்துக் கொண்டே நடந்தேன். என்னிடம் பேனா வாங்கியவர் கூட்டத்தினரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஆமாய்யா? ஒருத்தரும் பேனா கொண்டு வந்துராதீங்க, எல்லாம் இங்கே வந்து என் கிட்ட கேளுங்க! நான் என் புது பேனாவை தடவிக் கொண்டே நடந்தேன்.

3 பதிவு போட்டும் ஒரு கமெண்டும் இல்லை; நான் என்ன கமலஹாசனா, வைரமுத்துவா? பாராட்டுகளைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருக்க? தூக்கமே இல்லை. என்னடா இது, மகளீர் தினத்திற்காக ஸ்பெஷலாய் ஒரு ஓவியப் பதிவு, தம்பி படத்தைப் பற்றி என்னுடைய நடையில் ஒரு விமர்சனம், CTSல் கொடுத்த i-Pod பற்றி நகைச்சுவையாய் ஒரு பதிவு..பயன் என்ன? ஒரு கமெண்டும் இல்லை! வெறுத்தே போனேன். ஒருத்தரும் சீண்டாத அளவுக்கா நாம் எழுதுகிறோம் என்று எனக்குள் ஒரு சந்தேகம். பார்த்தால் நான் என்றோ என் ப்ளாகர் செட்டிங்கில் கை வைத்த பலன்.

ஒன்னு English தெரியனும், இல்லை கை காலை வச்சுட்டு சும்மா இருக்கனும். Moderate Commentsஆமே, சரிப்பா என்னுடைய பதிவுகளுக்கும் இதை செய்யுங்க என்று தெரியாத்தனமாய் சொல்லி விட்டேன். நீங்கள் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் ப்ளாகர் பிள்ளை அடக்கமாய் எடுத்து வைத்துக் கொண்டு நான் எப்போது வந்து அதை ஆமோதித்து பதியப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறது. யாராவது பின்னூட்டம் போட்டால் உனக்கு ஒரு மெயில் பண்றோம்பா என்று ப்ளாகரில் அப்போதே சொன்னார்கள். கேட்டால் தானே, எல்லாம் எனக்குத் தெரியும் என்று அந்த பயன்பாட்டை பயன்படுத்தவில்லை. அவஸ்தைப் படு! நான் என்ன செய்யட்டும்னுது ப்ளாகர். இதோ, இன்னைக்கு புலம்பிட்டு இருக்கேன்.

முக்கியமான பதிவாய் இருந்தால் தான் நான் என் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி, பாத்திரம் தேய்ச்சது தேய்ச்ச வரைக்கும் இருக்கட்டும், உடனே இங்கே வா என்று புருஷன்காரன் அதட்ற மாதிரி, எந்த கோட் அடிச்சிட்டு இருந்தாலும் மொதல்ல என் ப்ளாகை படிங்கப்பா என்று அனுப்புவேன். இல்லையென்றால் அவர்களாகவே திறந்து படித்து பின்னூட்டம் அளித்து விட்டுப் போவார்கள். உங்களுக்குத் தான் தெரியுமே, கடந்த 3 பதிவா பின்னூட்டமே இல்லாம, போஷாக்கு குறைந்து இருந்த கொஞ்ச நஞ்ச தெம்பை வைத்துக் கொண்டு என் நண்பர்களுக்கு மெயில் பண்ணி பாத்திரத்தை போட்டதை போட்டபடி..ஐய்யோ, அடிச்சது அடிச்சபடி இருக்கட்டும் வந்து படிச்சுட்டு போங்கப்பா என்று மெயில் அனுப்பினேன்.

அப்போது தான் என் நண்பன் நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் எல்லாம் ஏன் வர்ல என்று கேட்டான். ஆஹா! அப்போ நம்ம ப்ளாகுக்கு கமெண்ட் வருதுரா, ஏதோ ஒரு தில்லு முல்லு நடக்குதோன்னு இன்னைக்கு வந்து Moderate Comments sectionல் பாக்குறேன். 33 கமெண்ட்ஸ் தேமேன்னு தூங்கிட்ருக்கு! இங்கே பார்றா!! பிறகு என்ன ஒரே குஷி தான். எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு செலக்ட் செய்து பதிந்ததில் எல்லாம் ஒழுங்காய் தெரிந்தது! அப்பாடா..வீட்டில் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். வயிறு என்ன? மனசு வரைக்கும் நெறைஞ்சு கெடக்கே...

இதன் மூலம் நான் சகல லோகத்திற்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்னைக்கு தான் உங்க கமெண்ட் எல்லாம் படிச்சேனுங்கோ!! கோ!! கோ!!! (எதிரொலிக்குதா?) என்னுடைய ஓவியத்தைப் பார்த்து இத்தனை பேர் கருத்து கூறியிருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு மிகப் பெரிய தவறுக்கு அடித்தளம் இட்டு வீட்டீர்கள். இனிமே அடிக்கடி இப்படி ஓவியம் எல்லாம் போட்டு உங்களுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் என்பேன், எல்லாம் சமத்தா சொல்லனும் தெரியுரதா? இதுல சிவமுருகன் அவர்களுக்கு நான் பதில் சொல்லலைன்னு கோவம் வேற! நிஜமாவே நீங்கள் தான் என் ஓவியத்தை புரிய வைத்தீர்கள்! மிக்க நன்றி! காயத்ரி சந்திரசேகரும் தங்லீஷில் என் ஓவியத்தை அலசியிருக்கிறார். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக! அனுசுயா வேறு ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்து விட்டுப் போயிருக்கிறார். சென்ற வாரம் என் பதிவு தினமலரில் வந்ததாம். இது எனக்கே தெரியாத விஷயம். இது உண்மை தானா? அப்படி என்றால் தயவு செய்து யாராவது எனக்கு அந்த சுட்டியைத் தந்தால் தன்னியனாவேன்!

போன ஒரு மாதமாய் சுலேகா டாட் காமில் இருந்து எனக்கு மெயில் வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய பதிவுகளை அவர்களுடைய வலையில் போட்டுக் கொள்வதாக. எனக்கு வலிக்குமா சொல்லுங்க. இருந்தாலும் ஒரு பிகு இல்லைன்னா எப்படி? சரி உங்க வலையில போட்றதால எனக்கு என்ன பயன்? என்று இப்போது தான் ஞான பீட விருது வாங்கின கையோடு வந்தது போல் மெயில் செய்தேன்..சர் தான் போடா, நீயும் ஆச்சு உன் ப்ளாகும் ஆச்சு என்று என்னை உதைக்காமல், பொறுப்பாய் காரணங்களைச் சொல்லி எனக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். என்ன கொஞ்சம் பெயரை திருப்பி போட்டு விட்டார்கள். இங்கு espradeep.blogspot.com அங்கே pradeepes.sulekha.com!

என்னடா இவன் இன்னும் தலைப்புக்கு வரவே மாட்றானேன்னு நினைக்கிறீங்களா? இதோ வந்துட்டேன்...இன்னைக்கு காலையில ஒரு மெயில் வந்தது. நமக்கு கமெண்ட் வரனும்னா இது தான் சரியான வழி என்று நினைத்துக் கொண்டேன். இவரைப் போட்டா உலகம் பூரா வசூல் மழை, நம்ம வலைப்பதிவுக்கு பின்னூட்ட மழை வராதா என்ன? இன்னைக்கு இவரோட பவரை நம்ம டெஸ்ட் பண்ணிட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று! சாட்ஷாத் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் தான். வந்த மெயிலின் தலைப்பு SIVAJI - THE BOSS Stills..ஆஹா, போன தடவை இப்படி தான் ஒரு மெயில் வந்தது ஒரு ஜிப் ஃபைலில்..ஆர்வமாய் டவுன்லோட் செய்து பார்த்தால் நடிகர் திலகம் சிவாஜி அழுவது மாதிரி, சிரிப்பது மாதிரி, அழுது கொண்டே சிரிப்பது மாதிரி..எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதைப் பார்த்து நானும் அழுது கொண்டே சிரித்தேன்!!

பசங்களின் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா? நான் மட்டும் என்ன சலைத்தவனா..உடனே அதை எல்லோருக்கும் அனுப்பினேன். உடனே ஒருவனிடம் இருந்து ரிப்ளை..மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிவாஜியை பிடித்த எனக்கே அவ்வளவு எரிச்சல் வந்ததே..அவன் இந்தக் காலத்து யுவன்! எப்படி இருந்திருக்கும். அந்த "மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!!" அப்படியே அவன் இதயத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். சரி அதை விடுங்கள். இன்றைய மெயிலை திறந்தேன். எடுத்தவுடன் எழுதி இருந்தது. Scroll down..சரி நானும் Scrollனேன். கொஞ்ச தூரம் போனதும் Scroll down slowly..ஏண்டா நான் இப்போ வேகமா scroll பண்ணா உங்களால என்னடா பண்ண முடியும்? சூப்பர் ஸ்டாரை விட இவர்களுடைய பில்டப் இருக்கிறதே..தாங்க முடியவில்லை! சரி நீ ஓவரா பில்டப் கொடுக்காதே படத்தைக் காட்டு என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. இனி படம்!

கார்ல இருந்து இறங்கி கண்ணாடியை ஸ்டைலா மாட்றாரு!
Image hosting by Photobucket

ஸ்லோ மோஷன்ல ஸ்டைலா நடந்து வர்றாரு!

அப்படியே மிட் ஷாட்ல முடி ஆட்றதை காட்றோம்!

வச்சுக்க நீ ன்னு பூ கொடுத்து ப்ரபோஸ் பண்றார்!
[இங்கே ஒன்னு கவனிச்சேளா, ஷ்ரேயா கொழந்தைக்கு சத்த வயசானாப்ல இல்ல?
தலைவருக்கு அக்கா மாறின்னா இருக்கா?]

தோ பார் கண்ணு..நம்ம பெர்சனாலிட்டி, ஸ்டைல் பாத்து நம்ம பின்னாடி நெறைய..நெறைய பப்ளீஸ் வந்தாங்க..ஆனா நம்மள யாரும் டச் பண்ண முடியலை! நமக்கு இந்த ரோஜா கொடுத்து தாஜா பண்றது எல்லாம் வராது கண்ணா..ஆனாலும் கொடுக்கிறேன். டக்குன்னு ஒன்னு சொல்றேன், நெஞ்சுல வச்சுக்க..இதுல பூவும் இருக்கு;முள்ளும் இருக்கு. ஒரு ஆம்பளைக்கு வேண்டியது வாழ்க்கை பூரா நிம்மதி. ஒரு பொம்பளைக்கு வேண்டியது ஒரு நல்ல புருஷனோட அன்பும் பாதுகாப்பும்! நீ இந்த பூ மாதிரி என் வாழ்க்கையில சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரனும். நான் இந்த முள்ளு மாதிரி உன் வாழ்நாள் பூரா பாதுகாப்பா இருப்பேன்! இது எப்படி இருக்கு?