மூளைக்கு ரொம்ப வேலை கொடுத்து பாத்துட்டேன்! ஹ¤ஹ¤ம்..சார் கண்டுக்கவே மாட்றார்! மூளை சார், மூளை சார் எழுதி ஒரு வாரத்துக்கு மேலே ஆச்சு சார், என்னோட ரசிகர்களுக்கெல்லாம் என்னோட ப்ளாக் படிக்காம [இதையெல்லாம் கண்டிச்சி திட்றவங்க கமெண்ட்ஸ்ல போடாம எனக்கு தனியா மெயில் அனுப்பும்படி இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்!] சோறு தண்ணி இறங்காது சார்..இப்படி என்னன்னவோ சொல்லி பாத்துட்டேன்! நல்லா அடிச்சி போட்ட மாதிரி படுத்துருக்காரு! இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்த வாரம் என்னால எதுவும் புதுசா எழுத முடியலை..[யாருய்யா அங்கே கை கொட்டி சிரிக்கிறது?]

அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!
நம்ம ஆள் இப்படி சருக்கிட்டாரே என்று நினைப்பவர்க்கு ஒரு நல்ல செய்தி!!

புதுசா ஒன்னும் எழுதலையே தவிர, பழசான ஒன்னை புதுசா காப்பி அடிச்சி வச்சிருக்கேன்! பாரதியோட "வீணையடி நீ எனக்கு" பாட்டு..இது ரொம்ப ஈஸியா இருக்கே..நம்மளும் எழுதலாமேன்னு எழுதி பாத்தேன்! நிறைய எழுதலாம்னு நினச்சேன்..ஒன்னும் வர்லை! இது எப்பவோ எழுதுனது..[அதான் உங்களுக்குத் தெரியுமே, இந்த வாரம் மூளை சார் கோமால போயிட்டாருன்னு?] இதுல ஒரு basic concept உனக்கு அவ ஏதாவதா இருக்கனும், நீ அவளுக்கு ஏதாவதா இருக்கனும்! that's it...கவிதை ரெடி!!

அகரமடி நீ எனக்கு
சூடும் ஆரமடி நானுனக்கு

நிலவடி நீ எனக்கு
நீளும் இரவடி நானுக்கு

காமமடி நீ எனக்கு
கொல்லும் காதலடி நானுனக்கு

மழையடி நீ எனக்கு
மண்னின் வாசமடி நானுனக்கு

வித்தையடி நீ எனக்கு
வீழும் வேட்கையடி நானுனக்கு

அன்புச் சின்னமடி நீ எனக்கு
ஆசை முத்தமடி நானுனக்கு

வானமடி நீ எனக்கு
சுவாசமடி நானுனக்கு

எங்கே யாரையும் காணோம்?


எச்சரிக்கை: உங்களுக்குத் தலை சுத்தினா நான் பொருப்பல்ல!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன். அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்! எவ்வளவு பெரிய
கூட்டத்திலும் தான் தனித்தன்மை வாய்ந்தவன் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். சில சமயம் அவன் கிருக்கனோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். அப்படி ஒரேடியாய் நாம் முடிவு கட்டி விடவும் முடியாது! உங்களுக்கு எப்படி உணர்த்துவது என்று எனக்குப் புரியவில்லை! சரி அவன் செய்த சில எதிர்பாராத செயல்களை சொன்னால் உங்களுக்கு ஓரளவுக்கு புரியலாம்!

பஸ்ஸில் சென்று கொண்டிருப்பான்! திடீரென்று முன்னே இருப்பவரைக் கூப்பிட்டு ஸாரி சொல்வான். அவர் புரியாமல் விழிப்பார்! இவன் ஜன்னலை நோக்க ஆரம்பிப்பான்! அவர் திரும்பியதும் மறுபடியும் அவரை அழைத்து ஸாரி சொல்வான்! அவர் எதுக்குப்பா ஸாரி என்று பொறுமையிழந்து கேட்பார். அதற்கு அவன் இல்லை சார், உங்களுக்கு என்னை தெரியாது..ஆனா எனக்கு உங்களை நல்லாத் தெரியும். உங்களுக்கே தெரியாம நான் ஒரு தப்பு பண்ணிட்டு இருக்கேன்! எனக்கு அது தப்புன்னு தெரிஞ்சும் பண்றேன்! ஆனா என்னால பண்ணாம இருக்க முடியலை. நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க சார் என்பான். அவர்
பையைத் தடவி தன் பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். சே! சே! அந்த மாதிரி சீப்பான தப்பு இல்லை சார், நல்லா யோசிச்சு பாத்து உங்களுக்கு ஞாபகம் வர்றதுக்குள்ள நான் இறங்கிக்கிறேன் சார் என்று சொல்லி அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வான்! அவர் பாவம் தன் பெண்ணை லவ் பண்றானோ ரேஞ்சுக்கு யோசித்து பாவம் மண்டை காய்ந்து கொண்டிருப்பார்!

இப்படியே அவன் வேறொருவரிடம் பஸ்ஸில் ஸாரி கேட்டுக்கொண்டே இருந்ததில் வெறுத்துப் போய் அவர் சரிப்பா மன்னிச்சி விட்டுட்டேன். போதுமா என்றார். அதற்கு இவன் ஏன் சார் நான் தான் எந்தத் தப்பும் செய்யலையே, நீங்க எதுக்கு என்னை மன்னிக்கனும் என்று கேட்பான்! இப்படி படுத்துரதுக்குன்னே அந்த மாதிரி நோஞ்சான் ஆசாமிகளையே புடிப்பான்! பாவம் அவர்கள்...

இன்னொரு கொடுமையான விஷயம் பஸ்ஸில் யாராவது தூங்கிக் கொண்டே வந்தால் போதும், அவர்களை எழுப்பி ஏன் சார் நீங்க லாஸ்ட் ஸ்டாப்ல இறங்கப் போறீங்களா என்று கேட்பான்! ஆமா ஏன் கேட்குறீங்கன்னு அவர் கேட்டா, இல்லை எனக்கு உட்கார இடம் கிடைக்காதே நான் அடுத்த சீட்டுக்குப் போறேன்! என்று சொல்லி விட்டு அடுத்த சீட்டுக்கு போய் விடுவான், அவர் மறுபடியும் தூங்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் தட்டி எழுப்பி "தாங்க்ஸ் சார்" என்பான்! அதுக்கப்புறம் அவர் தூங்குவார்னு நினைக்கிறீங்க?

ரோட்டில் போகும் முன்பின் பார்க்காத பெண்ணிடம் உங்க பேர் என்ன என்று ஆரம்பிப்பான். அது உங்களுக்கு எதுக்குன்னு அந்த பொண்ணு கேட்டா "என்னங்க? பேர் தெரியாமயாடா லவ் பண்றேன்னு பசங்க கிண்டல் பண்றாங்கல்ல" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான்!! அவள் அதிர்வதைப் பார்த்து, ஐய்யய்யோ சும்மா சொன்னேங்க சத்தியமா நான் உங்களை லவ் பண்ணலை, அப்புறம் உங்க friend என்னை சும்மா விடுவாளா என்பான்! அவள் புரியாமல் இவனைப் பார்ப்பாள். என்னங்க இன்னுமா புரியலை, என்ன நீங்க போங்க!! என்பான். அவளும் மாலாவோட.... என்று இழுப்பாள்! அப்பா!!! இவ்வளவு நேரமா என்று
ஒரே போடாகப் போடுவான்! அப்படி அந்த பெண் சொல்லவில்லையென்றால் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது..அவன் 10 பெண்களிடம் கேட்டால் ஒரு ரெண்டு பெண் தான் இந்த பதிலைத் தரமாட்டார்களாம்..இப்படியே அவன் பல பேரை friend பிடித்து வைத்திருந்தான்னா பாத்துக்குங்க!

காலேஜில் யாராவது பெண் இவனை ராக்கி கட்ட வந்தால், அவள் வந்து பக்கம் நின்றவுடன் அவள் கண்ணோடு கண் வைத்து ஐ லவ் யு என்பான்!

இப்படிப் பட்ட ஒருவனோட வாழ்க்கையில திடீர்னு ஒர் அதிர்ச்சிகரமான விஷயம் நடந்தது!!

அட வாங்க சார், இவ்வளவு நேரமா வர்றதுக்கு..என்ன கதை முதல்ல இருந்தா..சொல்லிட்டா போச்சு!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன்.....அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்!...................................



மழை, மழைன்னு எழுதி எழுதி blog யே சொத சொதன்னு ஆயிடுச்சுப்பா!! ஒரு change க்கு கொஞ்சம் wague ஆ எழுதிக்கிறேன்!

எழுத ஆரம்பிக்கும்போது இதன் கரு என்னுடைய ஒரு நொடி எண்ணமாக இருந்தது..அது வளர்ந்து இந்த நிலையை எட்டி உள்ளது!

இது ஒரு வரிக் கதை இல்லை
இது sudden ficationa? இல்லை
இது ஒரு கட்டுரையா? இல்லை
இது சுயசரிதையா? இல்லை
ஒரு கவிதையை உரைநடை படுத்த முயற்சிக்கிறாயா? இல்லை!

நான் எழுதி இருக்கும் இந்த பத்திகளுக்கு என்ன பெயர் வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை..அதையும் உங்களிடமே விடுகிறேன்! பல எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!! ஏதாவது எழுதுங்கள் என்று!! அப்படி ஒரு முயற்சி தான் இது..

திடீரென்று அவனுக்கு அந்த பயம் வந்தது..அதை பயம் என்று சொல்ல முடியாது! அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. காலையில்
எழுந்து கண்ணாடி பார்க்கும் போது முதன்முதலாய் தோன்றியது அது. "அட, நம்ம hero மாதிரி இருக்கோமே" என்ற நினைவைத் தொடர்ந்து வந்தது அந்த நினைவு! அந்த கன நேர நினைவை அவனால் ஏனோ அலட்சியப்படுத்த முடியவில்லை. அதை மறுபடி மறுபடி யோசித்துப் பார்த்தான். அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டே இருந்ததால் அந்த நினைவு இவனிடம் நெருக்கமாகி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். இப்பொழுது
அதை நினைத்தால் அவனுக்கு எரிச்சல் வருகிறது. அவன் மீதே அவனுக்கு கோபம் வருகிறது..ஏன் தேவையில்லாததைப் பற்றி இவ்வளவு யோசித்தோம் என்று அவனே அவனைத் திட்டிக் கொள்கிறான்! ஏனோ அவன் படும் பாட்டை அவனுடைய மனசாட்சி ரசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கும் போது, "இல்லை, நாம் இதைப் பற்றி யோசிப்போம்" என்று எடுத்துக் கொடுத்து அவனை எரிச்சல் படுத்துமா? மனம் ஒரு குரங்கு என்று இதற்குத் தான் சொன்னார்களோ, அவனுக்கு என்னமோ அவன் மனம் ஒரு குரங்கல்ல..ஒரு குரங்குக் குடும்பமே தனக்கு மனமாய் வாய்த்திருப்பதாய் அவனுக்குப் பட்டது! அது தன் தோள்களிலும், தலையிலும் ஏறி உட்கார்ந்து தன்னைப் பார்த்து நகைப்பதாகத் தோன்றியது!

எனக்கு அது உறுதி, எனக்கும் கட்டாயம் அது நடக்கும் என்று தெரியும், ஏதோ நான் தெரியாமல் அதைப் பற்றி யோசிக்க ஆசைப்பட்டேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சினான். அது அவ்வளவு சீக்கிரத்திலா மசிந்து விடும். மாறாக இவனை நோக்கி எள்ளி நகையாடியது. ஏய், போச்சுடீ, அது உனக்கு நடக்கும்
பாரு..என்று அவனுக்கு பூச்சி காட்டியது. ஐய்யய்யோ அதற்குள் நாம் ஏதாவது உறுப்படியாய் செய்தாக வேண்டுமே என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது! அது அவனுடைய நிழல் வரை வந்து விட்டதாயும், ஒரு சிறிய காலத்திற்குள் அது அவனைப் பிடித்து விடுவதாயும் அவனுக்குத் தோன்றியது.

இதை 2 வகையாக முடிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது!!

முடிவு 1:

இனி இதை நம்மால் ஜெயிக்க முடியாது, ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவது தான் சரி என்று அவனுக்குப் பட்டது. இதுவும் அந்த குரங்குக் கூட்டத்திலிருந்த ஒரு குரங்கு தான் அவனுக்குச் சொன்னது..அது நல்ல குரங்கு போலும்!! வழியெங்கும் அந்தக் குரங்குகள் கும்மாளம் போட்டுக் கொண்டே வந்தன!! அவன் அந்த
நல்ல குரங்கை அந்த கூட்டத்தில் விடாமல் தேடிக் கொண்டிருந்தான்! ஆனால் அது எப்போதேனும் ஒரு முறை "வழியில் இருக்கும் அழுக்குப் பிச்சைக்காரனைப் பார்த்தோ, சாலை கடக்கும் வயதான கிழவியைப் பார்த்தோ இவனிடம் அவர்களுக்காக பரிதாபப்பட வந்து போய்க் கொண்டிருந்தது!! அது என்ன செய்யும், பாவம் அந்த ஒரு நல்ல குரங்கின் எதிரிகளாய் ஒரு கூட்டமே இருக்கிறதே.. சில சமயங்களில் அவை போடும் இரைச்சலில் நல்ல குரங்கு என்ன சொல்கிறது என்றே அவனுக்குப் புரிவதில்லை!! அவனுக்கு நல்ல குரங்கிடம் பிடிக்காத ஒரு விஷயம் அது சீக்கிரமே தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது!! இப்படி எல்லாம் அசை போட்டுக் கொண்டே அங்கு போய் சேர்ந்தவனுக்கு ஒரு ஆச்சர்யாம் காத்திருந்தது...

உங்களுக்கே இன்னேரம் புரிந்திருக்கும்.....ஆம், அந்த மனோதத்துவ நிபுணருக்கும் அது நேர்ந்திருந்தது!!

முடிவு 2:

அவன் அதுகளிடம் பேசிப் பேசி ஓய்ந்து விட்டான்! குரங்குகள் என்றைக்கு மனிதன் பேச்சைக் கேட்டது என்று அவனுக்கும் புரியத் தான் செய்தது..

ஒருநாள் திடீரென்று, ஒரு வேளை நமக்கு பைத்தியம் பிடிக்கிறதோ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது! "இல்லை, இல்லை..இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கப் போவதில்லை, இதுவும் அந்த குரங்குகளின் வேலை தான்!!" என்று அவன் நினைத்துக் கொண்டான்! அப்படி அவன் மீறி யோசித்தால் அது அவனை உண்மையிலேயே பைத்தியம் ஆக்கி விடும் என்று அவன் உறுதியாக நம்பினான்! ஆகவே நீங்களும் அதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இப்பொழுதெல்லாம், அந்த நினைவு வந்தாலே அவன் மாறாக "சிம்ரனை" யோசித்துக் கொள்வதாய் கேள்வி!!


இன்னொரு மழை நாள்!

நள்ளிரவு!

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

வழக்கம் போல் இன்றும் late ஆகி விட்டது. ஒரு வழியாய் சாலையில் என் வண்டியில் வழுக்கிக் கொண்டு என் வீடு சேர்ந்தேன். வண்டியை நிறுத்தியவுடன் தான் அது துல்லியமாய் கேட்டது! நான் என் வீட்டு கேட் நோக்கிப் போகிறேன். அந்த சத்தம் மிக நெருங்கி விட்டதாக உணர்வு. யாரோ ஒரு ப்ரகஸ்பதி நள்ளிரவு 12:00 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறான். என் வீட்டில் தற்போது கட்டட வேலை நடப்பதால் watch man என் வீட்டின் veranda வில் குடித்தனம் நடத்துகிறார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருகாமையில் தான் அந்தச் சத்தம் கேட்கிறது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. நான் என் கையிலிருந்த tube light ஐ [அதாங்க 2100!!] போடுவதற்கும் என் நண்பன் கதவைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது. அவன் மிகவும் எரிச்சலுடன் "டேய் first அதை off பண்றா! அப்போ இருந்து தூங்க விடாம!" அவன் veranda light போட்டவுடன் அந்த குட்டி கடிகாரத்தைக் கண்டு பிடித்தோம். அவன் அதை கையில் எடுத்தவுடன் அது கப்சிப் ஆகி விட்டது. [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] அவன் வெறுப்புடன் "நல்ல அலாரம்!" என்று இருந்த இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தோம்.

அவன் போய் தூங்கப் போய் விட்டான். நான் என் நனைந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு அப்பாடா என்று தூங்கப் போனேன். தலை சாய்த்ததும், அது வரை காத்திருந்தது போல அந்த சத்தம் மறுபடியும் ஆரம்பித்தது..அடடா, இது நம்மை தூங்க விடாது போலிருக்கிறதே என்று நான் எழுந்தவுடன் என் நண்பனும் எழுந்து விட்டான். மறுபடியும் veranda light போட்டு, அதை இந்த முறை நான் கையில் எடுத்தேன். [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] கையில் எடுத்தவுடன் மறுபடியும் அதே போல் சமத்தாய் கப்சிப்!! "இது ஆவுரதில்லை" என்றான் என் நண்பன். நீ உள்ளே கொண்டு வா, என்று சொல்லி இருவரும் சேர்ந்து battery ஐ எடுத்து விட்டோம். ஏதோ ஒரு சாதனை செய்தது போல இருவரும் சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றோம்! இருட்டில் அந்த கடிகாரம் என்னைப் பார்த்து "என் சத்ததை நிறுத்திட்டே இப்போ இந்த சத்ததை என்ன செய்வே?" என்று கேட்பது போலிருந்தது!! என்ன சத்தமா?

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

இதை நான் எழுத முக்கியமான இரு காரணங்கள்!

1. பேய் மழை தரும் சத்தத்தில் கூட நம்மால் நிம்மதியாய் தூங்க முடிகிறது, ஆனால் ஒரு சின்ன அலாரம் உண்டாக்கும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது.
2. அலாரம் watch man க்கு மிக அருகில் இருந்தாலும் அவரால் நிம்மதியாய் தூங்க முடிகிறது! உள்ளே fan சத்தத்துக்கு நடுவே படுக்கும் நம்மால் தூங்க முடியவில்லையே! [Important Note: இந்த வாக்கியத்தை படிக்கும் போது கண்டிப்பாய் சிவாஜி தோரணையில் படிக்கக் கூடாது!!!
]