சில நாட்களுக்கு முன் யுட்யுபில் ஒரு வீடியோ பார்த்தேன். அமெரிக்காவில் என்று நினைக்கிறேன், முன் பின் தெரியாத ஒரு இருபது பேரை அழைத்து [கவனிக்க, முன் பின் தெரியாதவர்கள்!] முத்தம் கொடுக்கச் சொல்லி அவர்களின் உணர்வுகளை பதிவு செய்தார்கள்! [எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க!] கம்பீரமான ஆண், அழகிய பெண், வயதான பாட்டி, ஓரினச் சேர்கையாளர்கள் ஆண்கள், பெண்கள் என்று ஒவ்வொரு ஜோடியும் முத்தம் கொடுக்கும் முன்னும், பின்னும் அவர்களின் மன ஓட்டங்களை, முக பாவனைகளை மிக அருமையாய் படம் பிடித்திருந்தார்கள். அதன் வீடியோ இங்கே...



அதை தொடர்ந்து இந்தியாவில் இப்படி ஒன்று நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை [கவனிக்க, கற்பனை மட்டும் தான்!] செய்து ஒரு குறும்படத்தை வடநாட்டினர் வெளியிட்டார்கள். நம் நாட்டில் கலாச்சாரம், கருமாந்திரம் என்று ஆயிரத்து எட்டு விஷயங்கள் இருக்கும்போது மென் உணர்வுகளை எங்கே பதிவு செய்வது? ரணகளமான ஒரு கற்பனை தான் அது! நீங்களே பாருங்கள்...


முதல் வீடியோ பார்த்ததும் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று ரசித்துவிட்டு அப்படியே மறந்து விட்டேன். அடுத்து நம் வடநாட்டினரின் வீடியோவை பார்த்ததும், "அட செமையா இருக்கு? இதே மாதிரி, நம் தமிழ்நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து ஒரு குறும்படத்தை எடுக்கலாமே!" என்று ஒரு விபரீத ஆசை எழுந்தது...கற்பனை செய்ய செய்ய இன்னும் ரணகளமாய் இருந்தது. துணிந்து   விட்டேன்...

கமல் ஸ்டைலில் சொல்வதென்றால் "மன நிறைவு பெரும் தருவாயில்..."
விஜய் ஸ்டைலில் சொல்வதென்றால் "even, i am w.a.i.t.i.n.g..."



1 Response
  1. Anonymous Says:

    I saw your movie before reading your blog...
    Good that I saw your's first...else, I would not have been able to give right feedback

    -- KRS