இந்தப் பாடலை பார்க்கும்போது ஏனோ ஒரு குதூகலம் தொற்றிக் கொள்கிறது. அருமையான இசை. குழந்தைகள் பாடும் பாடலை குழந்தைகளை கொண்டே பாட வைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். தமிழ் படங்களில் பெரும்பாலும் ஜானகியை பாட வைத்து கொல்வார்கள்.  மேலும் இந்தப் பாடலில் குழந்தைகள் மிக இயல்பாய் இருக்கிறார்கள். அக்ஷன், கட் சொல்லி நடிக்க வைத்ததை போல் எந்த இடத்திலும் தெரியவில்லை. ஒரு விடுமுறை நாளில் மதிய வேளையில் வீடுகளில் குழந்தைகள் எப்படி விளையாடுமோ அப்படி விளையாடுகின்றன. பாடலை பாருங்கள்.



பார்த்தீர்களா? அந்த பெரிய பெண் குழந்தையை அடையாளம் தெரிகிறதா? "ரங்கீலா ஊர்மிளா தெரியாம நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே?" என்று காதல் கோட்டையில் மணிவண்ணன் ஒரு வசனம் பேசுவார். அவருடைய குழந்தை பருவத்தில் வந்த படம் இது. மிஞ்சி போனால் பத்து வயது இருக்கும். அந்த வயதிலேயே ஒரு கதாநாயகிக்கு உரிய உடல்மொழி, நடனத்தில் நேர்த்தி, ஒரு நளினம், முகத்தில் எக்ஸ்ப்ரசன்ஸ் என்று பின்னி எடுத்திக்கிறார். 4:11, 4:15 கணங்களில் ரங்கீலா ஊர்மிளாவின் உடல்மொழியை அப்படியே பார்த்தேன். கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இவ்வளவு பெரிய ஆடையை வளர்ந்த பிறகு கூட இவர் போட்டதில்லை :-) மொத்தத்தில் அருமையான ஒரு பாட்டு!
0 Responses