நதிகள் நம்மை கடந்து சென்று விட்டன
இன்று நாம் காண்பது, அதன் சுவடுகளை...
                       ---
பரந்த நீல வானம் - அதில்
கண் இமைத்தபடி கடக்கும் மேகங்கள்
எல்லையற்ற வானத்திலும்
வரிசையாய் பறக்கும் பறவைகளின் ஒழுங்கு
கண்ணுக்கெட்டிய தூரம் மலை முகடுகள்
பசுமை போர்த்திய புல்வெளி
தெளிந்த நீர் தளும்பும் கிணறுகள்
அதன் அருகே நீல நிறத்தில் ஒரு குறுங்குளம்
அதில் பூச்சூடிய குட்டி மஞ்சள் நிற வாத்துக்கள்
சிரித்துக் கொண்டே பால் கறக்கும் பசுமாடு
ஓடி விளையாடும் நாய் குட்டி
இவைகளின் மத்தியில் களைப்பே தெரியாத உழவன்...
நம் வாழ்க்கையும் - நம் குழந்தைகளின்
ரைம்ஸ்களை போல் இருக்கலாம்.
                       ---
இருக்க வேண்டிய நேரத்தில்
இல்லாமல் இருந்ததால்
இருக்கக் கூடாத நேரத்தில்
இருந்து தொலைக்க வேண்டி இருக்கிறது

1 Response

  1. ரைம்ஸ்களையும் ரசித்தேன்...

    முடிவில் 4 வரிகள் உண்மை...