இதற்கு விரிவாய் விமர்சனம் எழுதி என் பொழுதை வீணாக்க விரும்பவில்லை. [அப்படி ஒன்றும் உருப்படியாய் செய்யவில்லை என்றாலும்!]. சுருக்கமாய் ஆரம்பம் ஏன் "பாடாவதி" என்பதை சொல்லிவிடுகிறேன். இடைவேளைக்கு முன்: ஒரு கதாநாயகன் வில்லன் வேலைகளை செய்கிறார். இடைவேளைக்கு பின்: அவர் ஏன் அப்படி செய்கிறார்? அதற்கான விளக்கம். இதே மாதிரி படங்கள் பல இருக்கின்றன. தமிழில் என் மனதில் உடனே தோன்றுவது "சிகப்பு ரோஜாக்கள்". கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்த படம் வந்தது 1978 ல். அந்த காலத்துக்கு என்ன ஒரு புதுமையான கதைக்களம் அது. என்ன ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை. அவன் ஏன் கொலையாளி ஆனான் என்பதற்கு என்ன ஒரு அழுத்தமான பின்னணி. இன்று வரை, "இந்த பொண்ணுங்களே இப்படி தான்! குத்துங்க எஜமான் குத்துங்க" டயலாக்கை நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  "ஆரம்பம்" படம் வெளியாவது 2013 ல். அப்படி என்றால் இந்த மாதிரி ஒரு கதைக்கு எத்தனை சுவாரஸ்யத்தை கூட்டியிருக்க வேண்டும். அவன் அப்படி ஆனதற்கு எத்தகைய ஒரு அழுத்தமான பின்னணியை கொடுக்க வேண்டும்? படத்தோட டயலாக்ஸ், சுபா? ஷபா!!

முதல் காட்சியில் அஜீத் மும்பையில் குண்டு வைக்கிறார். அடுத்த காட்சியில் ஒரு வடநாட்டு [?] கோயிலில் பாட்டு பாடுகிறார். அடுத்த காட்சியில் சென்னை ஏர்போர்ட்டில் இருக்கிறார். என்ன ----------- சிச்சுவேஷன் சொல்லி இசையமைப்பாளரிடம் பாட்டு கேட்பார்கள் என்று தெரியவில்லை. ஹீரோ இன்ட்ரொடக்ஷன் சாங் அப்படி தான் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்லாதீர்கள். எனக்குத் தெரிந்து ரஜினி தான் ஹீரோ இன்ட்ரொடக்ஷன் சாங் ட்ரெண்டை ஆரம்பித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் ஏன் அந்த பாட்டு பாடுகிறார் என்று ஒரு மொக்கை காரணமாவது இருக்கும். உதாரணம், "வந்தேண்டா பால்காரன்" மாட்டுப் பொங்கல்! "நான் ஆட்டோக்காரன்" ஆயுத பூஜை. இப்போது அது கூட இல்லாமல் படம் எடுக்கிறார்கள்.

அதிலும் இந்த அஜீத் ரசிகர்கள் இருக்கிறார்களே! முடியலை...விஷயம் என்னவென்றால் இப்போதெல்லாம் யாரை கேட்டாலும் அவர் அஜீத் ரசிகராய் தான் இருக்கிறார். இவர்களுக்கு அவரின் மேல் உள்ள அளவிட முடியாத பக்தி என்னை புளகாங்கிதம் அடையச் செய்கிறது. ஒத்துக்குறேன். அஜீத் அழகா இருக்கார். நல்லா நடக்கிறார். அழகா சிரிக்கிறார். எல்லாம் சரி! ஒழுங்கா கதை கேக்க மாட்டேன்றாரே, அதானே என் கவலை!! கொத்து ஹீரோக்களை வைத்து சூப்பர் கமர்சியல் படம் எடுக்குறோம், இவரை வச்சி எப்படி எடுக்கணும்?! அஜீத்தின் நெருங்கிய நண்பர்கள் யாராவது இதை படிச்சா, அவர்கிட்ட சொல்லுங்க, அவரோட அடுத்த பட கதையை நான் தேர்ந்தெடுக்கிறேன்!

பாண்டிய நாடு. இது படம். என்ன ஒரு விறு விறு திரைக்கதை. என்ன ஒரு அழுத்தமான பாத்திரப்படைப்பு. பாரதிராஜாவா அது? "சிறு பொன்மணி" பாட்டில் அவர் நடிப்பதை பார்த்தால் எனக்கு பயமாய் இருக்கும். ஆனால் இந்த படத்தில்...அடடா...நான் பாரதிராஜாவை பாக்கலை, ஒரு பாதிக்கப்பட்ட தகப்பனைத் தான் பார்த்தேன்.! பின்னிட்டீங்க...அப்புறம் "ஃபை ஃபை ஃபை பாட்டு" சூப்பரோ சூப்பர். ரம்யா நம்பீசனா இப்படி பாடினது? லட்சுமி மேனன் - பத்தாவது பாஸ் பண்ண பொண்ணா இது? நான்  எல்லாம் பத்தாவது பாஸ் பண்ணும்போது "பால் குடிச்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்த பாலகன்" மாதிரி இருப்பேன்!! சோ, நான் சொல்ல வர்றது என்னன்னா சுசீந்திரன் எப்போதுமே எனக்கு விருப்பமான ஒரு கமர்சியல் டைரக்டர் [ராஜபாட்டை பட்ட பாட்டை தவிர்த்து சொன்னால்!]. Now Ajeeth sir, you should work with these kind of directors!! அம்புட்டு தான்!
 
3 Responses

  1. ஆகா, அஜீத்தும் சுசீந்திரனும் இணைந்தால்,,,


  2. Innumoru Rajapattai thaan varum
    :-)