தேசப்பற்று என்றெல்லாம் ஒன்றும் பெரிதாய் இல்லை. சும்மா "கிம்ப்"பில் வரைந்து பழகிக் கொண்டிருந்தேன். எத்தனை நாள் தான் பெண்களையே வரைவது... ஒரு மாற்றத்துக்கு இன்றைய நாளை நினைத்து  வரைந்தது. சுதந்திர தினம் என்பது ஒரு நாள் விடுமுறையும், தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுடனும் இன்று நீர்த்து போயிருக்கலாம்! ஆனால், தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, குழந்தை குட்டிகளை பற்றி கவலைப்படாமல்  இன்று நாம் ஜம்பமாய் உட்கார்ந்து கொண்டு யாரை பற்றி வேண்டுமென்றாலும் முகநூலில் தைரியமாய் நிலைத்தகவல்களை அளிக்கக் காரணமாய் இருந்த அந்த வீரர்களை இன்று ஒரு கனம் நினைத்துக் கொள்ளலாம்! வாழ்க சுதந்திரம்.
0 Responses