சீரு கெட்ட சமூகமிது
சாதி கட்டி அழுவுது
கரி படிஞ்ச தன் முகத்தை
சேறு கொண்டு கழுவுது

அன்பு ஒன்ன விட்டுட்டு
அழிவு தேடி ஓடுது
வெட்டருவா கையுமா
வெறி கொண்டு அலையுது

நாகரீகம் வளந்து போச்சு
நாட்டில் பல வகையில
ஆயிரம் தான் படிச்சாலும்
அறிவு இன்னும் வளரல

சாதி வெறி தன்னாலே
நல்ல குடி கெட்டுது
இந்த நாட்டில் வாழ
மூச்சு எனக்கு முட்டுது

சட்ட திட்டம் வகுத்திருந்தும் 
சாதி வெறி போவல
கேடு கெட்ட சனங்களே
ஆதி மனுஷன் தேவல

* இளவரசனின் மரணம்!
2 Responses
  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...


  2. mikka nandri danabalan. valaicharam aasiriyarukkum en nandrigal!