என் மகள் "தரு" வுக்கு நான் எழுதிய தாலாட்டு...படித்து விட்டுச் சொல்லுங்கள்...

இது "தரு"வுக்கானதா தமிழுக்கானதா என்று !

-----------------------------------------------------------------

அத்திப் பூவே ஆராரோ
அல்லித் தண்டே ஆராரோ

ஆசை முகமே ஆராரோ
ஆணிவேரே ஆராரோ

இதயத் துடிப்பே ஆராரோ
இலவம் பஞ்சே ஆராரோ

உவகை தருவாய் ஆராரோ
உயிரில் கரைந்தாய் ஆராரோ

கவிதை மொழியே ஆராரோ
கருத்தில் நிறைந்தாய் ஆராரோ

சுத்தமான உயிரே ஆராரோ
சுடர் தரும் ஒளியே ஆராரோ

மழலை மொழியே ஆராரோ
மயக்கும் உயிரே ஆராரோ

பாடும் குயிலே ஆராரோ
பாடு பொருளே ஆராரோ

வம்ச விளக்கே ஆராரோ
வசியப் பொருளே ஆராரோ

வெள்ளை முகிலே ஆராரோ
வெண்பனித் துளியே ஆராரோ

இன்பத் தருவே ஆராரோ
கம்பன் தறியே ஆராரோ

தங்கத் தருவே ஆராரோ
எங்கும் நிறைவாய் ஆராரோ

------------------------------------------------------------------

அழுவாதே மகளே அழுவாதே

உன் அழுத முகம் பாக்கவா
ஏழு கடல் தாண்டி வந்தேன்

உன் கண்ணில் தண்ணி காணவா
காடு விட்டு நாடு வந்தேன்

உன் விசும்பல் சத்தம் கேக்கவா
வெயில்ல காய்ஞ்சு வந்தேன்

உன் கேவல் குரல் கேக்கவா
கேட்காத பேச்செல்லாம் கேட்டு வந்தேன்

உன் தங்க முகம் கருகவா
தறிகெட்டு ஓடி வந்தேன்

உன் தொண்டைக் குழி காயவா
தொல தூரம் ஓடி வந்தேன்

உன் வாடிப் போன முகத்துக்கா
வரிப்புலியா பாய்ஞ்சு வந்தேன்

உன் உப்பு நீரு சுவைக்கவா
உசுரோடு நானும் வந்தேன்

அழுவாதே மகளே அழுவாதே

அப்பன்காரன் வந்துப்புட்டேன்
அள்ளி வாரி உன்னை அணைக்க

சிரிச்ச முகம் நீ காட்டு
செறகு பெரும் என் சீவன்

4 Responses
  1. Thaalaattu nallaa irukka....Tharu Peru Kooda nallaa irukka....karpagaththaruvukku en vaazhththukkal!


  2. Hey Gayathri,

    Long time no see...hope u r doing good. thanks for still reading my blogs and commenting on it :-)


  3. Anonymous Says:

    good work Pradeep.
    இதயத் துடிப்பே ஆராரோ
    இலவம் பஞ்சே ஆராரோ

    The above lines seem not matching (personal opinion)..
    Idayam and Panju what is the relationship? do you mean both are soft?

    oru thaalatukku evalo artham pakkanuma ennu ketkaade... sollanum ennu thonichu...adaan

    --KRS


  4. i am not connecting between idhayam and panju...just ethukai monai thaan paathurukken.

    both starts with "E"

    thaalaatta irunthaalum, chumma vaarthai alangaarama irukkaama, konjam meaning irukkanum thaan, ilakkanathukku utpattu!!