மாத ஆரம்பத்தில் ஒரு பதிவு, மாதக் கடைசியில் ஒரு பதிவு! எத்தனையோ எழுத வேண்டும். நல்ல படக் காட்சிகளை பார்க்கும்போது அதை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது. நல்ல பாடல்களை கேட்கும்போது அது ஏன் பிடிக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம்.  விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் படிக்கும்போது, அப்படி எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல சிறுகதை ஒன்று எழுத வேண்டும். என் ஐ. டி. வாழ்க்கை பற்றி ஒரு நாவலே எழுதலாம்.  நான் எழுதாமல் இல்லை. எழுதியது எதுவும் திருப்தியாய் வரவில்லை. அதனால் அவைகளை பதிய முடியவில்லை. அதுவே உண்மை! கார்டூன் வரைந்து பழக ஒரு போர்டும், மார்க்கரும் வாங்கி வந்தேன். கார்டூன் தவிர எல்லாம் வரைந்து கொண்டிருக்கிறேன், இல்லை, வரைந்து கொண்டிருக்கிறோம்! [என் மனைவியும் சேர்த்து] அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு! ஒரு பதிவுக்காச்சு!

1  படத்திற்கு கீழே என் பெயர் இருப்பதால், SELF PORTRAIT ஆ என்று கேட்டு விடாதீர்கள்.  படத்தை வரைந்தது தான் நான்!

2 கீழுள்ள கண்கள் என் மனைவியின் கை வண்ணம்! பொன்னியின் செல்வன் எஃபெக்ட் !



3 Responses
  1. Anonymous Says:

    kaiyoppam miga arumai. kangal oru kaviyam.


  2. padathai vida, kaiyoppam nallaa irukka? :-)


  3. un mogam nallaa vanthurukku thambi!