இன்றைய வலைப்பதிவை பார்க்கும் முன், என் முந்தைய வலைப்பதிவை பற்றி ஒரு updated கருத்து:

தெய்வத்திருமகள் படத்தை நான் ஆஹா ஹோஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டேன். அது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி என்ற உண்மை தெரியாமல்! ராம் பின்னூட்டம்ல சொன்னதும் தான் வலையில் தேடி பார்த்தேன். விக்ரம் சிகை அலங்காரத்திலிருந்து அவர் சிரிப்பு வரை அப்படியே இருக்கிறது! ஏன் இதில் ஒரிஜினல் இல்லையா என்று நீங்கள் கேட்டால் இருக்கிறது, ஆனாலும் மூலம் நகல் தானே! வெறுத்து விட்டேன். படத்தில் ஒரு வரி கூட இதை போடவில்லை, தொலைக்காட்சியில் வண்டி வண்டியாய் படத்தை பற்றி பேசுகிறார்கள், இதைப் பற்றி சொல்லவில்லை! மிஷ்கினுக்கு அடுத்து இப்போது இயக்குனர் விஜய்! ஆங்கில படங்கள், உலக படங்கள் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும், மற்றவர்களுக்கு இது ஒரு புது படம் தானே என்று நினைப்பது எத்தனை திருட்டுத்தனம்?

திருட்டு வீசிடியில் படத்தை பார்க்காதீர்கள் என்று எனக்கு சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நிற்க [எந்திரிச்சி நிக்கத் தேவையில்லை!]

கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்! BACK TO THE STORY!! இன்று கொசுக்கடி தாங்க முடியாமல் அதைப் பற்றி நறுக்கென்று ஒரு கடியை பேஸ் புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாம் என்று ஆரம்பித்தேன். அது வலைபதிவு வரை வந்து விட்டது. எனக்கு சந்தோஷம், உங்களுக்கு (சங்கடம்?)

சங்ககாலத்தை போல் இன்றும் வீரனின் இடையில்
வாள் வைக்கும் வழக்கம் இருந்தால்
இடையின் மற்றொரு பாகத்தில் 
இன்னொரு உறை வைக்க வேண்டி இருக்கும்...
கொசு பேட் வைக்க!!

எனக்கும் சங்க கால வீரனுக்கும்
நிறைய வித்தியாசமில்லை!
இரவில் பேட் கொண்டு நான் 
கொசு அடிக்கும் அழகைப் பார்த்தால்
உங்களுக்கு புரியும்!!

பறக்கும் படையில் எதிரிகள்
காலாட்படையின் வீரன் நான்
வாள் வீசிப் பயன் என்ன?
சரண் அடைந்தேன் கொசுவே சரணம்!

எப்படியும் கொசுவை அழிக்க முடியப்போவதில்லை - பதிலாக 
எதாவது ஆராய்ச்சி செய்து அதன் எடையை கூட்டி விட்டால்
அது நம் கை காலில் கடிக்க அமரும் போது அதன் பாரம் தாங்காமல்
தள்ளி விடவாவது ஏதுவாய் இருக்கும்!!

பிள்ளையார் எறும்பும் அசைவமா என்ன?
இறந்த கொசுவை தூக்கிக் கொண்டு ஓடுகிறேதே!

படுக்கையின் மேல் கொசு வலை விரித்து 
விளக்கணைத்துப் படுத்தேன்...காலையில் 
அதிக ரத்தம் குடித்து மயங்கிய நிலையில் 
தப்பிக்க வழியில்லாமல் கொசுக்கள் 
அசந்து தூங்கி கொண்டிருந்தன!
15 Responses
  1. Popeye Says:

    idhu neenga yeludhuna kavithaya ?
    supera irukku !!! comedyavum irukku!!!


  2. Popeye,

    Naan, naane thaan ezhuthiyathu!! ennai pulavannu innum othukka matreengale...

    varugaikkum pathivirkum nandri!


  3. Anonymous Says:

    ஓகே டா! படிச்சிட்டேன்!

    -
    வெங்கடேஷ்


  4. un kadamai unarchiyai paaratren! athukkaaga, nee ippadi ellam comment poda tevai illai!!


  5. Popeye Says:

    anna neenga idha vikatan madiri magazine anuppi try pannungalen...
    apparam ungale ulagame kavigannu othukum :)


  6. ithaya, vikatanuka...enga neenga vera!


  7. Anonymous Says:

    நீ பிற்காலத்தில ஒரு ஜெயகாந்தனாவோ பாலகுமாரனாவோ வரும் போது சொல்லலாம் இல்ல நான் கமெண்ட் போட்டு தான் இவன் பெரிய ஆளா வந்தான் இன்னு?
    -
    வெங்கடேஷ்


  8. venky - swabaa...adanguda!!


  9. Unknown Says:

    அண்ணே கவிதை அருமையா இருக்கு


  10. ithu kavithainu kandupudicha ungalukku oru bokke :)


  11. rAM Says:

    Kosuve kolla ore vali than.. ask "Chitti Robot"..

    Oru kosukkaga kavithai eluthura ore aalu neenga thanna!! Bale!!!!


  12. Vishnu Says:

    Veetla kosu thola athigham ayiducho...


  13. ram - chitti robotaala kooda mudiyaatu! avvalavu irukku...

    vishnu - romba athigamda...ukkaara mudiyalai


  14. Vanila Says:

    Hey Pradeep, super-a eluthi irukke.

    inraikku copy adikiravanga yaarum athu copy-nnu othukirathillai. intha padathoda director mattum sollanumnu eppadi ethir paarkire?.


  15. Thanks vanila, avaraiyum mattum sollalai, yaarellam copy adikiraangalo ellarukkum sethu thaan ezhuthi irukken! oruthanavathu padichi thirunthuna sari :)