வானம் மேகமூட்டமாய் இருக்கிறதென்று
நல்ல மழை பெய்கிறது என்று
சுடும் வெயிலில் ஒதுங்க மர நிழல் கிடைத்தது என்று
வேலைப் பளு அதிகம் என்று
பொழுதே போகவில்லை என்று
வீட்டில் பிரச்சனை என்று
வயிறு பசிக்கிறது என்று
பசிக்கவேயில்லை என்று
துக்கம் தாளவில்லை என்று
சந்தோஷம் சம்பவித்ததென்று
நண்பன் அழைத்தான் என்று
நல்ல அசைவச் சாப்பாடு என்று
மென்தொஸ் ஒன்று உபரி என்று
மனைவி வெளியூர் போய் விட்டாள் என்று,
புகை பிடிப்பவர்களுக்கு - எப்படியோ
கிடைத்து விடுகிறது புகை பிடிப்பதற்கான ஒரு தருணம்!

6 Responses

  1. Anonymous Says:

    இப்படி ஒரு கவிதை எழுத என்ன காரணமோ?

    -
    வெங்கடேஷ்



  2. Anonymous Says:

    niraiya eludhavum


  3. sekar Says:

    nandarga ullathu. melum eluthavum


  4. thanks for your comments sekar and anony. sure will write.