அபிஷேக்கின் (அல்லது அவரது டூப்பின்) முதுகில்ஆரம்பிக்கிறது படம். உயரமான மலையிலிருந்து விழுகிறார். க்ளைமாக்சிலும் அதே போல் விழுகிறார். இந்த முறை முகத்தை காட்டிக் கொண்டே! முதுகில் ஆரம்பித்து முகத்தில் முடிகிறது படம். ஆரம்ப காட்சிகள் ராகினியை கடத்துவது தான் என்றால் அவர் பாட்டுக்கு தனியாய் ஒரு படகில் போய் கொண்டிருக்கிறார். அபிஷேக் தனி ஆளாய் போய் கடத்தியும் விடுகிறார்.. பிறகு ஏன் அந்த போலீஸ்காரர்களின் வாகங்களை வழி மறித்து தீ வைத்தார்கள்? ஏன் ஒரு பெண் போலீஸ்காரர்களை மயக்கி கூட்டிச் சென்றார்? ஏன் மூன்று போலீஸ்காரர்கள் கம்பில் கட்டி வைத்து தீ வைத்தார்கள்? ஒன்றும் புரியவில்லை...நான் தான் ஏதாவது கோட்டை விட்டு விட்டேனா? தெரிந்தால் சொல்லுங்கள்!

ராகினி மரணத்திற்கு பயப்படவில்லை, மலையிலிருந்து குதித்து விடுகிறாள். உடனே பீராவுக்கு காதல் வருகிறது, அப்போது ஒரு பாடல் என்று மணி சிச்சுவேஷன் சொல்லியிருப்பாரா? இத்தனை அபத்தமாகவா மணி யோசிக்கிறார்? குல்ஸாரும் வைரமுத்துவும் உருகி உருகி எழுதிய பாடலுக்கு இது தான் சிச்சுவேஷனா? இதனால் எப்படி காதல் வரும் என்று யாரும் மணியிடம் வாதாடி இருக்கா மாட்டார்களா? இதெல்லாம் தமிழ் படத்தில் சகஜம், இதெல்லாம் கேட்க கூடாது என்கிறீர்களா?

தமிழில் விக்ரம் அடிக்கடி சிரிக்கிறாரா தெரியவில்லை. அபிஷேக் எதெற்கெடுத்தாலும் கண்ணை உருட்டி உருட்டி சிரிக்கிறார். காமெடியாய் இருக்கிறது. பிளஃப் மாஸ்டரில் அபிஷேக்கின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி எந்த வித அலட்டலும் இல்லாத காரெக்டர் தான் இவருக்கு சரியாய் இருக்குமென்று நினைக்கிறேன். ராவணில் விக்ரமும் ப்ரியாமணியும் அழகாய் ஹிந்தி பேசியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் உருத்தவேயில்லை. விக்ரமின் அஜானபாகுவான உடல் அவரின் பாத்திரத்திற்கு மிகச் சரியாய் இருக்கிறது. மீசை கொஞ்சம் தூள் விக்ரமை நினைவு படுத்துகிறது. விக்ரமிற்கு பிரசாந்தின் ராசி அடித்து விட்டது என்று நின்னைக்கிறேன். பிரசாந்த் நடிக்காத பெரிய இயக்குனர்களே இல்லை. ஆனால் அவர் இன்னும் மேலே வரவேயில்லை. அதே போல் லிங்குசாமி, சுசி கணேசன், மணிரத்னம் என்று இவரும் என்னனமோ செய்து பார்க்கிறார். படம் தான் ஓட மாட்டேன் என்கிறது. ஆனால் படம் எப்படி இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று தன்னை நிரூபித்துக் கொள்ளத் தவறவுதே இல்லை. இவரின் "வெடி"யாவது சரியாய் வெடிக்கிறதா பார்க்கலாம்! ப்ரியாமணிக்கு அவரின் கட்டை குரலே ஒரு ப்ளஸ்! ஐஸ்வர்யாவைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதோ எனக்கு வயதாகப் போகிறது என்பது போல் இருக்கிறது அவரின் தோற்றம்.

பிரம்மாண்டமான விஷ்ணு சிலை, மலைகள், அருவிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் எல்லாம் இருக்கிறது ராவணில், இந்த கதை தான்.... திரைக்கதை! இப்படி ஒரு மொக்கை படம் எடுக்க ஏன் இத்தனை மெனக்கெடல் என்று புரியவில்லை. இத்தனை அமெச்சூர்த்தனமான ஒரு மணிரத்னம் படத்தை நான் இது வரை பார்த்ததில்லை. அவரே சொல்வது போல் பேசாமல் அவர் கோல்ப்ஃ விளையாட போய் விடலாம்!

"பத்து தலை ராவணன்" - விக்ரம்; "ஒரே தலை! தலைவலி!!" - பிரதீப்

கொசுறு:

"நான் உன்னை போல் அல்ல வளர்ந்து விட்டவன்" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், என் மனைவியின் வற்புறுத்தலால் நேற்று தான் டாய் ஸ்டோரி 3 பார்த்தேன். அதுவும் 3 டியில. அது கதை. அது படம். விருப்பமே இல்லாத ஒருவனையும் சுண்டி இழுத்து விடுகிறார்கள். எத்தனை அற்புதமான உழைப்பு. என்ன ஒரு கற்பனை வளம். கண்டிப்பாய் பாருங்கள்!
2 Responses
  1. is it good to watch or not? Rate it pls.




    appaada maattivittaachi!!

    hi hi!


  2. pakkave thevai illaindrathu ennoda abipraayam.!