இப்போதெல்லாம் அலுவலகத்தில் எப்படி நேரத்தைக் கடத்துவது என்றே தெரியவில்லை. அமெரிக்காவில் ஆன்ஸைட் கோ ஆர்டினேட்டராக இருப்பது அழகான பெண்களின் சகவாசம் மாதிரி! எல்லா வேலையையும் அவங்க தலையில கட்டிலாம்னு நினைக்கும் போது இனிக்கும்; ஆனா நம்ம ஒன்னு கேட்டு அவன் வேற ஏதோ செஞ்சு கொடுத்து வீட்டுக்குப் போய் தூங்கிடுவான்! அப்புறம் நம்ம தாலியை அறுப்பானுங்க! [இங்கிலீஷ் படத்துல தாலி சென்டிமண்ட் இல்லையே!!!] அதை நினைக்கும் போது கதி கலங்கும்! சரி இதுக்கும் அழகான பொண்ணுங்க சகவாசத்துக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டீங்கன்னா...பைக்ல பாதி ஏறி உங்க மேல பாதி ஏறி கட்டிப் புடிச்சிட்டு வரும்போது இனிக்கத் தான் செய்யும்! ஆனா, தம் அடிக்காதே, உன் ஃப்ரண்ட்ஸே சரியில்லை, இதை வாங்கிக் கொடு அதை வாங்கிக் கொடுன்னு போனை எடுத்து நச்சு நச்சுங்குமே அதை நினைச்சா கேரிங்கா இருக்குல்ல? அதே தான்! உவமை ஓக்கேவா?

சரி விஷயத்துக்கு வர்றேன். அலுவலகத்தில் நேரம் போகவில்லை. எவ்வளவு நேரம் தான் ஜீமெயில், ஆர்குட், தட்ஸ்தமிழ், தமிழ்மணம் கை கொடுக்கும் சொல்லுங்க! [அதோட நீங்க இப்படி வெட்டியா இருக்கும்போது மேயும் வலைதளங்களையும் சொல்லுங்க! என்னோட இலக்கிய ரசனை பத்தி உங்களுக்குத் தெரியாது. தட்ஸ்தமிழ்ல வர்ற சினிமா நியுஸ் ஒன்னு விடாம படிக்கிறவன் நான். அதுவும் ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழே அந்த 2 பேரோட கமெண்ட்ஸ்! சோ, என்னை சாதரணமா எடை போட்றாதீங்க! அந்த மாதிரி உலகத் தரமான வலைதளங்களை மட்டும் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!!!] சரி கழுதை ஏதாவது நாமளா எழுதிபுடலாம்னு பிழியிறதுக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டு உக்காந்தா இந்த மூளை....ஹிஹி...சரி ரைட்டர்ஸ் ப்ளாக் ஆயிடுச்சுன்னு கூகுள் பஸ்ஸும் போட்டாச்சு! அப்புறம்? சரி வேற வழியில்லாம தமிழ்மணத்தோட கால்ல சாஷ்டாங்கமா விழுந்து ஒவ்வொரு பதிவா படிக்க ஆரம்பிச்சுருக்கேன். முடியலை...முக்காவாசி மொக்கை தான்! ஒன்னு சினிமா, இல்லை புத்தகம், இல்லை யாரோ ஒரு மனுஷன்..எதையோ ஒன்னை விடாம விமர்சனம் பண்ணிட்டே இருக்காங்க..[இந்தப் பதிவையே பாருங்க, நான் இப்போ வலையுலகை விமர்சிக்கிறேன்! நான் சொல்றதை ஒத்துக்குறீங்களா?] புது விஷயங்களை சொல்ற சில பதிவுகள் இருக்கத் தான் செய்யது! அது என்னமோ தெரியலை எதை பத்தியாவது சொல்லிப் புரிய வைக்கிற ஒரு உருப்படியான பதிவுன்னாலே ஸ்கூல்ல லஞ் முடிஞ்சதும் வர்ற ஹிஸ்டரி பீரியட் ஞாபகம் வந்து தொலைஞ்சுடுது. ஒரு வேளை நம்ம வாத்தியார் மறுபடியும் பொறந்து வந்து ஒரு வலைப்பதிவை ஆரம்பிச்சி டிஜிடலுக்கும்/அனலாகுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் பாணியில் உணர்த்தினா தான் படிப்பேன்னு நெனைக்கிறேன்.

சென்ற வாரம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஒரு ட்ரிப் அடித்து வந்தேன். 4 நாட்களில் 40 இடங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு சராசரி இந்திய மனப்பான்மையோடு!! வேலையை விட விடுமுறைகள் அதிக பளுவாகிவிடுகிறது இந்தியர்களுக்கு. யுனிவர்சல் ஸ்டூடியோஸ், டிஸ்னி லேண்ட், சீ வேர்ல்ட் 4 நாட்களில் கவர் பண்ண வேண்டும் என்பது ப்ளான். டிஸ்னி லேண்டிற்கு முழுதாய் இரண்டு நாட்கள் இருந்தாலும் பத்தாது! அத்தனை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் குழந்தைகளுக்குத் தான் என்று தோன்றுகிறது. எத்தனை ராட்டினங்களில் தான் ஏறுவது? அதிலும் அமேரிக்காவில் ராட்டினம் ஒவ்வொன்றும் ராட்டினமாகவா இருக்கிறது. எல்லாம் கொல வெறி பிடித்தவர்களைக் கொண்டு வடிவமைத்திருப்பார்கள் போலும். இங்கு குழந்தைகளும் அதே கொலை வெறியுடன் தான் பிறக்கிறார்கள். அத்தனை பெரிய ரோலர் கோஸ்டரைப் பார்த்தால் கொஞ்சமாவது பயம் வேண்டாம் கண்ணில்? சின்ன புள்ளத்தனமா இல்லையே....அவ்வ்வ்வ்!!

பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக்கவும். [நல்ல படங்கள், அவசியம் க்ளிக்கிப் பார்க்கவும்!]












அதுவுமில்லாமல் சீ வேர்ல்ட் என்னை அவ்வளவாய்க் கவரவில்லை. ஏதோ ஒரு மீன் விற்கும் கடைக்கு சென்ற மாதிரி இருந்தது. சின்ன சின்ன குட்டை மாதிரி கட்டி விட்டு ஷார்க் வகையறாக்களை விட்டிருந்தார்கள்! எல்லா குழந்தைகளும் நட்சத்திர மீனை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் சாவட்டும் என்று கொண்டு வந்து விட்டிருப்பார்களோ என்னமோ! கொடுமையாய் இருந்தது. ப்ளோரிடாவில் ஒரு வேல் (முருகரோடது இல்லை, திமிங்கலம்) பயிற்ச்சியாளரை இந்த வாரம் கொன்றதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! அந்த மாதிரி ஒரு ஷோ இங்கும் இருக்கிறது. என்ன தான் ஷோ நன்றாக இருந்ததாலும் அந்தப் பிராணிகளை நம் சுயநலத்திற்காக இப்படி படுத்துகிறோமே என்று குற்ற உணர்ச்சியே மேலோங்குகிறது.














சோ, இதையெல்லாம் சொல்லி ஒரு வழியாய் என் குடும்பத்தாரை கன்வீன்ஸ் செய்து 4வது நாள் மலிபு என்ற இடத்துக்குச் சென்றோம். அங்கே ஒரு வெங்கடேஷ பெருமாள் கோவில் இருக்கிறது. நான் கோவிலுக்குக் கூப்பிடுவதை என் மனைவியால் தாங்க முடியவில்லை. [அப்படி என்றால் ராட்டினங்கள் என்னை என்ன பாடு படுத்தி இருக்கும்!!] என்னைப் பொறுத்தவரை விடுமுறை என்பது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். 3 நாட்கள் ஒவ்வொரு ஷோவுக்கும் ஓடி ஓடி கால்கள் வலுவிழந்து விட்டன. எனக்கு கோவில் ஒரு சாக்கு தான், ஊரைப் பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை.












நான் நினைத்ததை விட மலிபு அற்புதமாய் இருந்தது. சுற்றிலும் சிறு சிறு பச்சைப் பசேலென்ற குன்றுகள், ரம்மியமான க்ளைமேட் ஊட்டியை நினைவு படுத்தியது. கோவிலும் அருமையாய் இருந்தது. அதிலும் அங்கு வாழும் நம்மவாக்கள் கோவில் கட்டியதோடு நில்லாமல் அங்கு ஒரு மண்டபம் கட்டி புளியோதரை[$3], தயிர் சாதம்[3$] + பச்சடி, காப்பி[$1], டீ[$1] விற்கிறார்கள். பர்கர் கிங், சப் வே என்று செத்துப் போய் அடங்கிப் போயிருந்த நாக்கு ஏசுநாதரைப் போல் உயிர்த்து எழுந்தது! அந்த மண்டபத்தில் நடராஜர் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்! "அது சரி, நீங்க ஒத்தைக்கால்ல நிக்காதீங்க, ஸ்டேஷனுக்கு ஆகாதுல்ல?! என்ற நான் கடவுள் வசனம் ஞாபகம் வந்தது! அந்தக் கோயிலை ஒட்டி ஒரு பெரிய பார்க். பெரிய பெரிய வேன்களோடு ஆங்காங்கே கூடாரம் அமைத்துக் கொண்டு கேம்பிங். வாழப் பிறந்தவர்கள். ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆனால், சுற்றி இருக்கும் மலையில் ஏறுகிறார்கள். மலை மேல் ஒரு லேக்கும் இருக்கிறது. எங்களுக்கு நேரம் இல்லாததால் மலையேற முடியவில்லை. கடைசி நாள் ட்ரிப் மற்ற மூன்று நாட்களை விட அருமையாய் அமைந்தது!! கலிஃபோர்னியாவில் வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கடல் இருக்கிறது, பச்சைப் பசேலென்ற மலை இருக்கிறது, அருமையான சீதோஷ்ன நிலை!! ஆனால் இவை எல்லாமே மன் ஹேட்டன் பீச்சில் காரை பார்க்கிங் பண்ண ஒவ்வொரு தெருவாக அலையும் போது அடிப்பட்டுப் போகிறது!! (அதிலும் திங்கள் கிழமை மதியம் முன்று மணிக்கு!)

மறுநாள் ஆபிஸ் போனதும் என் மேனேஜர் [அவரும் இந்தியர்] என்னிடம் ஆர் யு டயர்ட்? என்று கேட்டார். எந்த வெள்ளை காரனாவது விடுமுறை கழித்து வரும் ஒருவனிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்பானா? பாம்பின் கால் பாம்பறியும்!

6 Responses
  1. //உலகத் தரமான வலைதளங்களை மட்டும் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்//
    வெட்டி சண்டைக்கு
    slashdot.org, www.engadget.com


    கொஞ்சம் உருப்படியாக வேண்டுமானால் இங்கே போய், ஷெர்லக் ஹோம்ஸ், ஈசாப் (Aesop) போன்ற புத்தகங்களை தரவிறக்கிக்கொள்ளலாம்.

    http://www.gutenberg.org/browse/scores/top



  2. nandri ulavu.

    kulavu,

    uralkaLukku nandri!


  3. ஏதோ சலிப்பு தெரியுது உன் பதிவுல. இப்ப எல்லாம் எப்பயாவது எழுதுற நல்லா எழுது!. உன்கிட்ட ரொம்ப எதிர் பார்க்கிறோம். தமிழ்ப்படம் ரேஞ்சுக்கு எதாவது யோசி?
    -
    வெங்கடேஷ்


  4. engada, mandayila onnum oda mattenguthu! try pandren...thanks for ur comments.


  5. Unknown Says:

    //engada, mandayila onnum oda mattenguthu! try pandren//

    எழு்ு்்க எழு்ு்்க. எழு்ிக்கிட்டே இரு்்க