ராமுவும் சோமுவும் நெருங்கிய நண்பர்கள்! திரை கடல் கடந்து திரவியம் தேடும் மென்பொருள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் இருவரும் வீக் என்ட் எப்படிக் கழிந்தது என்று பேச ஆரம்பித்து...

ராமு: சொல்லு சோமு, எப்படி போச்சு வீக் என்ட்?

சோமு: என்ன புதுசா, வால்மார்ட், இந்தியன் ஸ்டோர்ஸ் போய் தான்! உனக்கு?

ராமு: லைப்ரரியில இருந்து ரெண்டு படம் வாங்கிட்டு வந்தேன். இரண்டு படமும் எந்த த்ரில்லருக்கும் குரைஞ்சது இல்லை! அப்படி இருந்தது.

சோமு: அப்படியா? என்ன படம்?

ராமு: சிக்ஸ் டிக்ரீஸ், ஹோம், அப்புறம் இன்கன்வீனியன்ட் ட்ரூத்! வாழ்ற ஒவ்வொருத்தரும் பாத்தே ஆகணும்!சோமு: என்ன சைக்கோ பாத்தா?

ராமு: அப்படியும் சொல்லலாம், மனுஷங்க எல்லாம் ஒரு விதத்துல பாத்தா சைக்கோ தானே? இந்தப் படங்களைப் பத்தி சொல்லனும்னா, நம்ம சுயநலத்துக்காக நம்ம வாழ்ற பூமியை என்ன பாடு படுத்துறோம்ன்றதை அவ்வளவு துல்லியமா சொல்றாங்க! அதாவது இந்த 3 படமும் பூமி வெப்பமடையிறதைப் பத்தியும், அதனோட விளைவுகளைப் பத்தியும் அவ்வளவு த்ரில்லிங்கா சொல்லுதுப்பா!

சோமு: ஓ! க்ளோபல் வார்மிங்கா?

ராமு: பாத்ததுல இருந்து என் வயிறும் வார்மிங் ஆயிப் போச்சு! பாத்தாலே பயம்மா இருக்கு! இத்தனை கொலைவெறியோடவா நடந்துக்குறோம்னு இருக்கு! மனுஷன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு!

சோமு: அப்படி என்ன தான் சொல்றாங்க?

ராமு: சிக்ஸ் டிக்ரீஸ் படத்துல, பூமியோட வெப்பம் பயங்கர வேகத்துல ஏறிட்டு இருக்கு, இதே வேகத்துல போனா ரொம்ப நாள் தாங்காதுன்னு சொல்லி, ஒவ்வொரு டிக்ரியா ஏறும்போது என்ன என்ன விளைவுகள் வரும்னு விஞ்ஞானிகள் கணிச்சிருக்குறதை பாத்தா பத்து அவதார் ஒன்னா பாக்குற மாதிரி இருக்கு!



சோமு: நீங்க வேற, இந்த விஞ்ஞானிகளுக்கு வேற வேலையில்லை. எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, கடைசியில ஒரு சின்ன கேப்பாசிட்டார் தப்பா போட்டதால தப்பு நடந்துருச்சுன்னு பேச்சை மாத்திருவாங்க! அந்த அளவுக்கு இது சீரியஸான விஷயமான்னு எனக்குத் தெரியலை.

ராமு: என்ன சோமு இப்படி சொல்லிட்ட, விஞ்ஞானிகளை அரசியல்வாதிங்க ரேஞ்சுக்கு பேசிட்ட, அவங்ககிட்ட டேட்டா இருக்குப்பா, அவங்க சும்மா ஒன்னும் உளறல...அன்டார்டிக்கால 40 வருஷத்துல 40% பனி உருகிடுச்சாம். இதே வேகத்துல போனா இன்னும் 40% உருகுறதுக்கு 20 வருஷமே போதும்ன்றாங்க!

சோமு: சோ வாட் சே?

ராமு: நமக்கு இனி வேட் ஐ சே!! சூரியன்ல இருந்து வர்ற கதிர்களை இந்த பனி மலைகள் எல்லாம் ஒரு கண்ணாடி மாதிரி நின்னு எதிரொலிச்சி மறுபடியும் பூமிக்கு வெளியே அனுப்பிட்டு இருக்கு. அதனால பூமியோட வெப்பம் மெயின்டைன் ஆகுது. இந்த பனி மலைகள் உருக, உருக, அதோட எதிரொலிக்கிற தன்மை குறைஞ்சு சூரியனோட கதிர்கள் வெளியே போகாம பூமியில தங்கிடும், அதனால பூமியோட வெப்பம் ஜாஸ்தியாகும். பனிமலைகள் உருகுறதால, அதையே சார்ந்து இருக்குற போலார் கரடிகள் அழிஞ்சிடும். அதோட கடல் மட்டம் அதிகமாகி நியுயார்க், பீஜிங், கல்கத்தா, கலிஃபோர்னியா போன்ற பல கடலோர நகரங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடும்! ஒரு பக்கம் பனி மலை உருகுது, நீர் மட்டம் அதிகரிக்குதுன்னு சொல்றாங்க, இன்னொரு பக்கம் இன்னொரு ஐஸ் ஏஜ் ரொம்ப தூரம் இல்லைன்னும் சொல்றாங்க! சோ, டிசைன் டிசைனா அழியிறதுக்கு பூமி ரெடியாட்டு இருக்கு! நான் சொல்றது வெறும் ட்ரைலர் தான்! மெயின் பிக்சர் பாத்தே இன்னும் அசந்து போயிடுவே! இப்போ கூட டைம் இருக்கு, முழிச்சுக்குங்க, இல்லைன்னா உங்க கொள்ளுப் பேரன், பேத்தி எல்லாம் உங்க பரம்பரையே கெட்ட வார்த்தையிலே திட்டுவான்னு சொல்றாங்க!



சோமு: என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு சுழற்சி தான்! வாழ்க்கை ஒரு வட்டம்டான்ன மாதிரி பூமி அழியிறதும், உருவாகுறதும் வரலாறு தானே! மனுஷன் இல்லைன்னாலும் பருவநிலை மாற்றங்கள் இருந்திருக்கும், கடல் கொந்தளிச்சிருக்கும், எரிமலை வெடிச்சிருக்கும். இன்னொரு ஐஸ் ஏஜ் வந்திருக்கும்! அப்படி இல்லைன்னா நம்ம டைனோசர்களை ஜுராசிக் பார்க்ல பாத்ததுக்கு பதிலா நாகேஸ்வர ராவ் பார்க்ல பாத்துருக்கலாம்!

ராமு: கண்டிப்பா, ஆனா இவ்வளவு சீக்கிரம் அது நடந்திருக்காது. இத்தனை மாற்றங்களுக்கும் அது இத்தனை வேகமா நடக்குறதுக்கும் நம்ம தான் முழுக்க முழுக்க காரணம்!! அதை மறுக்கவே முடியாது!

சோமு: நான் என்ன சொல்றேன்னா, இதுவும் ஒரு அரசியல் பிரச்சனை தான்! இப்போ ஓப்பன் ஹேகன்ல இதைப் பத்தி பேசினாங்களே, அது ஒன்னும் வேலைக்காவலையே!

ராமு: ஆமாம் ஏன், என்ன ஆச்சு?



சோமு: நீயே சொல்லு, அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் வளர்ற நாடுகளைப் பாத்து நீங்க எல்லாரும் முன்னேறின வரை போதும், உலகம் அழியுது, சுற்றுப்புறத்தை பாதுகாக்கணும், அதனால நீங்க இனிமே தொழிற்சாலைகளை உருவாக்குறதை எல்லாம் கம்மி பண்ணிக்குங்க.. இனிமே நியுக்ளியர் டெஸ்ட் பண்ணாதீங்க, அப்புறம் உலகம் அழிஞ்டும்னா மத்தவனுக்கு கோவம் வருமா இல்லையா? எவனாவது ஒத்துப்பானா? இவன் பூமிக்கு பண்ணாத நாசமா? மொதோ இவங்க திருந்தணும். இவனுங்க உலகம் பூரா கை குலுக்கிட்டே தன்னோட ஊருக்குப் போனவுடனே இன்னொரு நியுக்ளியர் டெஸ்ட் பண்றான். இதுவரைக்கும் அமேரிக்கா 200, 300 தடவை டெஸ்ட் பண்ணியிருப்பான், நம்ம 2, 3 தடவை பண்ணியிருப்போமா? ஹிரோஷிமா நாகாசாகியில போர்ல குண்டு போட்டு பாதிப்படைஞ்சாங்க! ஆனா, இவன் டெஸ்ட் பண்ணதுல அதனோட கதிரியக்கம் தாக்கி எத்தனை பேர் பாதிப்படைஞ்சிருக்காங்க தெரியுமா? அம்மணமா ஓடிச்சாம் எலி; அதுக்கு அண்டர்வேர் குடுத்துச்சாம் புலி!

ராமு: சரியா சொன்னே, புவி வெப்பமடையிறதுக்கு அமேரிக்கர்கள் தான் 30% சதவிகிதக் காரணம்னு புள்ளி விவரம் சொல்லுதே! அம்மாக்கொன்னு, அப்பாக்கொன்னு, புள்ளைக்கொன்னுன்னு பேனா கணக்கா கார் வச்சிருந்தா...முதல்ல அதை இவங்க நிறுத்தனும்! ரோட்ல எவனைப் பாத்தாலும் அவ்வளவு பெரிய கார்ல ஒரே ஒருத்தன் தான் போறான்! நம்ம ஊர்லையே கார் பூல் பண்ணுங்கன்னு நம்ம சொல்லிட்டு இருக்கோம்! அதுவுமில்லாம எனர்ஜியை வேஸ்ட் பண்றதுன்னா அதை இவங்கிட்ட தான் கத்துக்கணும்! ஒரு கடை திறந்திருக்கும் போதும் ஜெகஜோதியா இருக்கு; மூடி இருந்தாலும் அதே மாதிரி தான் இருக்கு! ஆயுத பூஜை இருந்தாலாவது அன்னைக்கு ஒரு நாளாவது எல்லா விளக்கையும் அணைச்சி பொட்டு வைப்பாங்கன்னு சொல்லலாம், அதுவும் இல்லை!! ஊருக்கு உபதேசம், எனக்கு எபதேசம் கதை தான்!

சோமு: மனுஷங்க சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு!! இயற்கையை காக்கனும்னு நாமளே சொல்றோம், ஆனா காட்டுக்குள்ள போய் ஒரு மிருகத்தோட உடம்புல ட்ரான்ஸ்மிட்டரை நம்ம தானே பொருத்துறோம்? அது எப்படி சாப்பிடுது, எப்படித் தூங்குதுன்னு டீவியில பாக்கும்போது நல்லா தான் இருக்கு! ஆனா நம்ம இயற்கையை எங்க டிஸ்டர்ப் பண்ணாம இருக்கோம்? இதோ மார்ஸ் பாட்டுக்கு நிம்மதியா சுத்திட்டு இருக்கு, அங்கே போய் தண்ணியத் தேட்றேன், பெட்ரோலைத் தேட்றேன்னு எதையாவது நோண்ட வேண்டியது! அப்புறம் குத்துதே குடையுதேன்னு சொன்னா? நான் என்ன சொல்றேன்னா, உலகம் பூரா இத்தனை பிரிவினையா இருந்து இந்த பிரச்சனையை எதிர் கொள்ள முடியாது! அத்தனை நாடுகளும் ஒன்னா நின்னு போராடனும்! அது ரொம்ப ரொம்ப கஷ்டம்! நீ சொல்றதெல்லாம் வச்சி பாக்கும்போது டைனோசர் கதி தான் நமக்கும்னு நல்லா தெரியுது!



ராமு: இது வரைக்கும் வெளியே இருந்து நம்மளை அழிக்க யாரும் வர்லை..அதான் நம்மளை நம்மளே அடிச்சிட்டு இருந்தோம்; இப்போ தான் எல்லாரையும் அழிக்க ஒன்னு வந்துருச்சே! இனிமே ஒன்னு சேர்ந்து தான் ஆவனும்! இல்லைன்னா பூமி பொளக்கப் போகுது, எல்லாம் உள்ளே போக வேண்டியது தான்! கரெக்ட் தான்! ஆனா டைனோசர் கதி நமக்கும் ஆச்சுசுன்னா அப்புறம் நமக்கு ஆறு அறிவு இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு?

சோமு: ஆறாவது அறிவு தானே? நமக்குத் தான் அது ஜாஸ்தியா இருக்கே. நம்ம மக்கள்ட உலகம் அழியுதுடான்னா போதும், உடனே எக்ஸ்ட்ரா ரெண்டு ஆட்டை அடிச்சி சாப்பிடுவான்! சாகுறதுக்கு முன்னாடி அனுபவிச்சிட்டு போவோம்பான்! அந்த சூ மேக்கர் லிவின்னு ஒன்னு வந்ததே, அப்போ உலகம் அழிஞ்சி நம்ம செத்தோமோ இல்லையோ நெறையா ஆடுங்க செத்துச்சு! நம்ம கைல ஒண்ணுமில்லை.

ராமு: அங்கே தான் நம்ம தப்பு பண்றோம். நம்ம கைல தான் எல்லாம் இருக்கு; உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்னு கூடி இதைப் பத்தி பேசி முடிவெடுக்குறதுக்குள்ள உலகம ஒரு தடவை அழிஞ்சி அதுவாவே சரியாயிடும்!! அதனால நம்மால இதுக்கு என்ன பண்ண முடியுமோ, அதை செய்யலாம். உதாரணமா வீட்டுக்கு வழக்கமான பல்ப் போடாம சீஃப்எல் பல்ப் போடலாம். பெட்டிக் கடையில போய் பாக்கு வாங்குறதுக்கு வண்டியில போகாம நடந்து போகலாம். அதனால கார்பன் எமிஷன் கம்மி ஆகும். மரத்தை நடுரோமோ இல்லையோ அதை வெட்டாம இருக்கலாம். ஹீட்டரை பொட்டு ரொம்ப சூடா குளிக்காம கொஞ்சமா சூடு பண்ணி குளிக்கலாம். எல்லாமே energy consumption தான். கொஞ்சம் பாத்து பண்ணா போதும். இப்படி நெறைய்ய இருக்கு நம்ம கையில!! இந்த மூணு படத்தையும் பாக்குறதும், அதைப் பத்தி நாலு பேருக்கு சொல்றதுமே நீ அதுக்கான தீர்வுல இறங்கிட்டேனு அர்த்தம்!! ஆன்லைன்ல தானே இருக்கே, ஹோம் படம் யு ட்யுப்ல இருக்கு. பாரு! http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU அட்டகாசமா எடுத்துருக்கான்! சரி சரி ரொம்ப நேரம் செல்லுல பேசினா க்ளோப் வார்ம் ஆயிடும்! போனை வைப்பா!

சோமு: அது சரி...

8 Responses
  1. Anonymous Says:

    இமயமலை க்ளசியர்ஸ் எல்லாமே 2035 உறிகிடும் இன்னு சொல்லி திகிலடிக்க வச்சத மறக்கமுடியுமா?

    எனக்கென்னோம்மோ இதுல பாதி தான் உண்மை இன்னு தோனுது; மத்ததெல்லாம் அவங்களோட PRODUCTS அடுத்த நாட்டுக்கு விக்க பண்ற மார்க்கெட்டிங் தான்!

    -
    வெங்கடேஷ்


  2. venki,

    video eduthu kaatraanda, glaceirs urugurathai...enna product vikkirathukkundra?


  3. Sivakumar Says:

    Excellent post! Nalla vishyangal solli irukke...


  4. thanks siva...this is the discussion happened between me and kasi! we had a good debate. half credit goes to him.


  5. Good post..

    U shd also see...

    storyofstuff.com..In case you have already nto seen it..

    Lot of info abt our consumerist attitudes..and how we are destroying ourselves..




  6. Sathish Says:

    பிரதீப்,

    ரொம்ப நல்ல பதிவு...நீங்க சொன்னா மாதிரி இப்போவாவது நாம முழிசிக்கணும்...இல்லனா டரியல் தான்...