கிறுஸ்துமஸ் விடுமுறையை பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டாடினேன். இதப் பார்றா, எப்பவுமே பொலம்புற ஆளு கொண்டாடினதை பத்தி எல்லாம் சொல்றானேன்னு ஆச்சர்யமா இருக்குமே உங்களுக்கு!! எனக்கே இருக்கே...சரி கதைக்கு வருவோம்!! 2 வருஷத்துக்கு முன்னாடி நான் அமேரிக்கா வந்தப்போ பனிச்சறுக்கு முதல் முறையா விளையாடினேன். இது ரெண்டாவது தடவை...2 வருஷம் கழிச்சி விளையாடினா, அது மொதல் தடவை மாதிரி தான்!!

பனிச்சறுக்கு ஆரம்பத்தில் எல்லோருக்கும் பிடித்து விடாது. ஏனென்றால் அது விளையாட நாம் கொஞ்சம் அவஸ்தை பட வேண்டும். நான் இருக்கும் ஊரில் வீட்டை விட்டு வெளியில் வந்தால் போதும், ஒரு அழகான இளம் பெண்ணிடம் ஐ லவ் யு சொல்லி அவள் செருப்பை கழட்டி கன்னத்தில் ஒரு அரை அறைந்தால் எப்படி இருக்குமோ அதை விட மோசமாய் குளிர் அறையும்.!! [எனக்கு எதையும் சுத்தி வளைச்சி பேசத் தெரியாது பாருங்க!!! ஹிஹி] இதில் போக்கிரி விஜய் மாதிரி பல சட்டைகள் போட்டுக் கொண்டு [இந்த ஊர்ல போட்டா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு!!] அந்த பனி மலையின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி என் எடையில் பாதி எடை கொண்ட பூட்ஸ்களை மாட்டி விட்டு [அதை மாட்டி விட்டால் நிலாவில் நடப்பதைப் போலத் தான் நடக்க வேண்டும்!] என் உயரத்திற்கு காலில் இரு கட்டைகளை மாட்டி விட்டு, கையில் அதே சைசுக்கு இரு குச்சிகளை கொடுத்து இப்போ சறுக்கு பாப்போம்னா, நமக்கு பேட் வேர்ட்ஸ் வருமா? வராதா?

அவன் சொல்லிக் கொடுத்தான், தம்பி கால்ல இருக்குற ரெண்டு கட்டைகளையும் பிஸ்ஸா ஷேப்ல கொண்டு வந்தா போதும் அது நின்னுடும்னு....அது அவனுக்கு மட்டும் தான் நிக்கும்னு எனக்குத் தெரியாது...நானும் பிஸ்ஸா, பர்கர்னு என்னோட க்ரியேட்டிவிட்டி எல்லாம் யுஸ் பண்ணி நிப்பாட்டிப் பாத்தேன். ஒரு தடவை சருக்க ஆரம்பிச்சோம்னா பேதி மாதிரி அது பாட்டுக்கு நிக்காம போகும் பாருங்க...அப்புறம் நல்ல வெள்ளக்கார பொண்ணா பாத்து முட்டி மோதி நிப்பாட்ட வேண்டியது தான்! [ஸ்வபா....எவ்வளவு கஷ்டம் பாருங்க!!]

இத்தனைக்கும் கத்துக்குட்டிகளுக்காக தனியாய் ஒரு சின்ன ஸ்லோப் இருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதில் தான் கத்துக்கனும். மேலே ஏற்றி விடுவதற்கு ஒரு மெஷின். அலுங்காமல் குலுங்காமல் அந்த சின்ன ஸ்லோப்பின் மேலே சேர்ப்பித்து விடும், பிறகு சறுக்கி கீழே வர வேண்டியது தான். பெரிய மலை உச்சியில் செல்பவர்க்கு விஞ்ச், இரு சீட்டுகளுடன் அவர்களை ஏற்றிச் செல்லும், இரண்டு நிமிடத்தில் சல்லென்று சருக்கி கீழே வந்து விடுகிறார்கள். அந்த மலை உச்சியிலிருந்து அவர்கள் வருவதை பார்த்தாலே பயங்கரமாய் இருக்கிறது. இதில் பொடிசுகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அப்பாவுடன் சரிக்கு சமமாக அந்த மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கிக் கொண்டு வருகிறார்கள். பொறந்தவுடனே கத்துக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே என்று தோன்றுகிறது. இதனால் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கத் தெரியும் வரை, பனிச்சறுக்கை அவ்வளவாய் ரசிக்க முடியாது!!

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 இடியட்ஸ் பார்த்தேன். முன்னாபாய் அளவுக்கு ரசிக்க இயலவில்லை என்றாலும், பரவாயில்லை. இப்படி ஒரு கல்லூரிக் கதைக்கு அமீர்கான், மாதவன் எதற்கு என்று புரியவில்லை. அமீர்கான் இந்தப் படத்திலும் கல்வி முறையைப் பற்றி விமர்சிப்பது அலுப்புத் தட்டுகிறது. ஹிராணிக்கு தன்னுடையை பார்வையாளர்களை சந்தோஷக் கண்ணீர் விட வைப்பதில் அவ்வளவு பிரியம் என்று நினைக்கிறேன். மனிதர் எல்லா படங்களிலும் அதை பொறுப்பாய் செய்கிறார். சமீபத்தில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு நடிகர் பொமன் இரானி. எந்த காரெக்டர் என்றாலும் பிய்த்து உதறுகிறார். பேஜ் 3யில் எடிட்டர் காரெக்டரும், லகே ரஹோ முன்னாபாயில் சிங் காரெக்டரும், கோஸ்லா கா கோஸ்லாவில் வில்லன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திலும் ஒரு கடுமையான கல்லூரி முதல்வராக மிகச் சரியாய் செய்திருக்கிறார். மற்றபடி அமீர்கானுக்கு இந்தப் படமும் ஒரு வெற்றியே என்று தான் சொல்ல வேண்டும்.

7 Responses
  1. >>ஒரு தடவை சருக்க ஆரம்பிச்சோம்னா பேதி மாதிரி அது பாட்டுக்கு நிக்காம போகும் பாருங்க...

    Ha ha..Good One..

    Freeya iruppa pola...neraya ezuthu...aana title mattum nalla yosichu podu..naanum neeyum, paattum barathamum, naan muthalvar aanal rangukku irukku.


  2. dei venki,

    athukkulla kannu vachuttiyaa, inime avvalavu thaan! naanum neriyya ezhuthanumnu thaan pakkuren..enga?

    correct, since i categorize these posts under mazhaikku othungiya pakkangal i am not getting good titles. let me try for good titles here after...


  3. Swami Says:

    Unga ezhuthukkal romba suvarasiyam.Niraya ezhuthungal. All the best.


  4. swami,

    solliteengalla? ezhuthi thallidren!! vidunga...mikka nandri!!


  5. Sathish Says:

    பிரதீப்...வழக்கம் போல சுவாரசியமா இருக்கு உங்க வரிகள்...உங்க ப்ளாக் என்னை எழுத தூண்டுது என்பதற்கு இதுவும் ஒரு மைல் கல்


  6. satya,

    romba santhosham! yaam petra inbam peruga ivvaiyyagam! neraiyya ezhuthunga...


  7. Paul Says:

    நல்லா எழுதறிங்க.. தொடர்ந்து எழுதுங்க.. :-)