அலுவலகத்தில் க்ரிஸ்மம், க்ரிஸ்சைல்ட் விளையாடுகிறோம்! சீட்டு குலுக்கிப் போட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறதோ அவருக்கு நீங்கள் அம்மா. இதே போல் உங்கள் பெயரும் யாருக்கோ போயிருக்கும். அவர்கள் உங்களுக்கு அம்மா. ஆனால் தன் குழந்தையிடம் தான் தான் தாய் என்பதை கூறக் கூடாது! இயற்கைக்கு மாறுபட்டு இந்த ஆட்டத்தில், அம்மா சொல்வதை குழந்தை கேட்க வேண்டும்! இது தான் ஆட்டத்தின் நிபந்தனை...தினமும் அம்மா சொல்லும் செயல்களை குழந்தை தட்டாமல் செய்தால் ஆட்டத்தின் முடிவில் அம்மா குழந்தைக்கு ஒரு பரிசு கொடுப்பாள்! இது தான் ஆட்டம்!

சென்ற ஒரு வாரமாய் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம்! இதை பொதுவாக கிறிஸ்துமஸ் சமயங்களில் விளையாடி கிறுஸ்துமஸ் அன்று பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் நாங்கள் க்ரிஸ்மம்மை பொங்கல்மம் ஆக்கிவிட்டோம்! இதுவும் நன்றாய் தான் இருக்கிறது...என் க்ரிஸ் மம் என்னிடம் என் மனைவியை பற்றி ஒரு கவிதை சொல்லு என்று சொல்லிவிட்டது! கேட்கவா வேண்டும்....ஒரு சென்னை 28 மாதிரியான கவிதையை எடுத்து விட்டேன்! [லைஃவ் இஸ் ட்ராமா, ஐ லவ் யு பூமா] அதுவாய் பொங்கி விட்டது...கவிதை [இது, கவிதை?] கீழே...

குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குமரன் பிரதீப்புக்கு ஒரு நிஷா! [என் மனைவியின் பெயர்]

ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!
ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!

உன்னைய பாத்ததும் என் மனசு
போதும் ஸ்டாப்புன்னுச்சு!

உன்னைய நெனச்சாலே கவிதை கொட்டுது
சொன்னா நம்ப மாட்டே கனவுல கயித முட்டுது!
ஸ்வபா...இப்போவே கண்ண கட்டுது!!

உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன் ஒருத்திகிட்ட தான் என் ஹார்ட் ஃபாலிங்கு!

வானத்துல காயுது மூனு!
நான் தான் நீ தேடின மேனு!
உன் கண்ணு ரெண்டும் மீனு
ஜாக்ரதை, நான் வெஜ் நானு!!

நீயில்லின்னா நான் அவுட்டு
நீயில்லின்னா நான் அவுட்டு
லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், எனி டவுட்டு?

காந்தி போடச் சொன்னார் கதர்!
காந்தி போடச் சொன்னார் கதர்!
வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர்!!

கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசி வரை நீ தான் என் கண்ணு!

எப்படி கவிதை? அதான் ஒன்னுக்கு கீழே ஒன்னா வரியும், பல ஆச்சர்ய குறியும் இருக்குல்ல? [எப்படி ரைமிங்கு?] அப்போ அது கவிதை தானே...இப்போது இதை படித்த அத்தனை பேரும் கோரஸாய் வாஹ், வாஹ் என்று சொல்ல வேண்டும்! எங்கே பார்க்கலாம்...
3 Responses
  1. Unknown Says:

    பிரதீப்,

    நல்லா இருக்கு. போஸ்ட் T.R.Rajenderism?

    நா ஒரு கவித “மருதாணி’ தலப்புல
    எழுதிய்ருக்கேன். படிச்சு சொல்லுங்க.


  2. Sivakumar Says:

    "லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், என் டவுட்டு?"

    என் டவுட்டு அல்லது எனி டவுட்டு?

    எல்லா வரியும் ரெண்டு தடவ வர்றது சில எடத்தில சரியாப்படல. அடுத்த வரியும் ரெண்டு தடவ வந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது


  3. ரவி,

    உங்கள் மருதாணி கவிதையை படித்து பின்னூட்டம் இட்டிருக்கிறேன்! பாருங்கள். நன்றி!

    சிவா,

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய நின் தமிழ் புலமைக்கு எனது வாழ்த்து! [ஏன்? ஏன்? இதுக்கு போய் இவ்வளவு ஃபீல் பண்ற?]