பக்கத்து ஆத்து தேசிகாச்சாரி "சொன்னா நம்பமாட்டேள்னு" ஆரம்பிச்சா போதும் நேக்கு புரிஞ்சிரும், அவர் மாதவனைப் பத்தி ஏதோ சொல்லப் போறாருன்னு...அவனை பெத்தவா கூட இப்படி அவனை தலையில தூக்கி வச்சுண்டு ஆடியிருக்க மாட்டா, இந்த மனுஷர் அப்படி ஆடுவார்! என்ன பண்றது, நேக்கும் பொழுது போகனுமோன்னோ? இத்தனை காலமும் கவர்ன்மெண்ட்ல குப்பையை கொட்டி ரிடையர்மென்ட்ங்குற பேர்ல என்னையும் ஒரு குப்பையா எடுத்து வெளியே கொட்டிட்டா...நான் என்ன ப்ரஸ்டீஜ் பத்மநாபனா? அதையே நெனைச்சி ஓவர் ஆக்ட் பண்றதுக்கு? அவா வேலையை அவா செய்றா...

பாத்தேளா? இப்படித் தான் பேச வந்ததை விட்டுட்டு வேற ஏதேதோ பேச ஆரம்பிச்சிருவேன், என்ன சொல்லின்டிருந்தேன்? மாதவன்! அவன் எங்க அக்ரஹாரத்துக்கு வந்து ஒரு ஆறு மாசம் தான் ஆறது. சொந்த ஊர் ஸ்ரிரங்கம். வத்தலுக்கு சொக்காய் போட்டது போல ஒரு ஒடம்பு! சார்டர்ட் அக்கவுண்டட் ஆறது தான் அவன் கனவாம்! இங்கே வாடகைக்கு ஒரு அகத்தை எடுத்துண்டு ஏதோ கோச்சிங் சென்டர் போயின்ட்ருக்கான்! எங்க ஆத்துல சின்னது இருக்கே, அவனை ஃப்ரூட்னு தான் சொல்வா! வாண்டு! நாள் தவறாம சந்தியா வந்தனம் பண்றானாம், கீதை படிக்கிறானாம், வேதத்துக்கு அர்த்தம் சொல்றானாம்! பொறுக்கிகளைக் கூட நம்பிடலாம்! ஆனா இந்த மாதிரி ஊமைக் குசும்பன்களை நம்பவே கூடாது...என்ன பண்றது தேசிகாச்சாரி விட்டா அவனுக்கு தன் சொத்து பூராவும் எழுதி வச்சுருவார் போலிருக்கே? நீங்களே சொல்லுங்கோ? இந்த காலத்துல யாரை நம்ப முடியிறது?

அன்னைக்கு மத்தியானம் வானம் கொஞ்சம் மந்தமா இருந்தது! போஜனம் முடிச்சுண்டு வெத்தல பெட்டியை எடுத்துண்டு காத்தாட திண்ணைக்கு வந்தேன்! மணி ஒரு மூணு இருக்கும், தெருவுல ஆள் நடமாட்டம் இல்லை. அப்போதான் மாதவன் புத்தகம் கையுமா அவன் ஆத்துல நுழைஞ்சான். நான் எங்கேயோ பார்த்துண்டே, எதொ யோசனையில் வெத்தலையை கொதப்பின்டே திரும்பி பாத்தா பாரூ எம்பி எம்பி மாதவன் வாசக் கதவைத் தட்றா! வெளியே வந்த மாதவன் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பாத்துட்டு, அவளை உள்ளே அழைச்சுண்டான்! நான் திண்ணையில இருந்தது அவனுக்கு பார்வையில படாது!

பாரூ தேசிகாச்சாரியின் மகள். பாரூக்கு ஒரு இருபது வயதிருக்கும். மூன்று வயதில் மூளைக் காய்ச்சல் வந்து அவளை முடக்கி விட்டது. தத்தித் தத்தித் தான் நடப்பாள். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியிருந்தும், ஐந்து வயதுக்குறிய மூளை வளர்ச்சி தான்! இவ எதுக்கு அவன் ஆத்துக்கு இந்த சமயத்துல போறா? பட்டப் பகல்ல என்ன கர்மம் என்று என் நெஞ்சு அடித்துக் கொண்டது! விசுக்கென்று எழுந்து சென்று பார்க்கவும் திராணியில்லாமல், சத்த நேரம் பித்து பிடித்தாப்ல உக்காந்துட்டேன்! பிறகு கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திண்டு மெல்ல எழுந்து சத்தமில்லாமல் அவன் ஜன்னலின் இடுக்கில் நோக்கிய எனக்கு தூக்கி வாரிப் போட்டது!

அந்த எட்டுக்கு எட்டு அறையில் ஒரு ஓரத்தில கிழிஞ்ச பாய் போட்டுன்டு அவ நன்னா தூங்கின்டு இருக்கா!! இவன் இந்த ஓரத்தில் உக்காந்துண்டு படிச்சிண்டு இருக்கான்! அவன் மெல்ல எழுந்து டேபிள் ஃபேனை அவ பக்கமா திருப்பி வச்சுட்டு அவ தலைக்கு கீழே ஒரு தலைகாணியை போட்டுட்டு ஆறுதலா அவ தலையை தடவி விட்டுட்டு மறுபடியும் அவன் இடத்துக்கு வந்து படிக்க ஆரம்பிச்சுட்டான்! நேக்கு கண்ல ஜலமே வந்துடுத்து!

சொன்னா நம்பமாட்டேள்!
5 Responses
  1. Sivakumar Says:

    avan nallavannu solrathukku nee sonna oru vishayam pothuma? still way of scripting is excellent.


  2. siva,

    according to me, most of the men shall go wrong in such kind of situation. i don't think any other situation is required to prove him as a good fellow.

    tamil paiyan,

    mikka nandri...seithuttaa pochchu :)


  3. நல்லா இருக்கு ஸ்க்ரிப்ட்! படம் எப்போ ரீலீஸ் பன்றீங்க பிரதீப்!


  4. Udhayakumar Says:

    சொன்னா நம்பமாட்டேள்! கதை நல்லா இருந்தது....


  5. siva,

    release thaane pannittaa pochchu...

    udhay,

    intha nakkal thaane vendaangirathu :)