ஒரு பெஞ்சில் இரண்டு சிறுவர்களின் கால்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன! அவர்கள் இருவரும் ஏதோ ஒரு சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது...

சட்டென்று ஒருவனின் கால்கள் ஆடுவது நிற்கிறது! அதைத் தொடர்ந்து மற்றவனின் காலும் நிற்கிறது....

மணி: காட் ப்ராமிஸ்? [கையை நீட்டுகிறான்!]
சிபி: காட் ப்ராமிஸ் [கையில் அடிக்கிறான்]
மணி: உனக்கு எப்படி தெரியும்?
சிபி: எத்தனை சினிமா பாத்துருக்கேன்!
மணி: நான் நம்பலை...
சிபி: நாளைக்கு என் கூட வா, உன்னை இன்ட்ரொட்யுஸ் பண்ணி வைக்கிறேன்!
மணி: சரி

மறுபடியும் கால்கள் ஆடுகின்றன...

மணி: ஏதுடா இந்த ரோஸ்?
சிபி: எங்க தோட்டத்துல பறிச்சேன்...
மணி: எதுக்கு?
சிபி: அன்னைக்கு நான் கோயிலுக்கு பூ கொண்டு போகும்போது என்கிட்ட ஒரு பூ கேட்டாங்க, நானும் குடுத்தேன்! தலையில வச்சிகிட்டு நல்லா இருக்கான்னு கேட்டாங்க...ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னேன்! என் கன்னத்தை கிள்ளி சிரிச்சாங்க
மணி: நீ பொய் சொல்றே
சிபி: நீ தான் பாக்க போறியே...
விட்டுக்கு வெளியே நின்று...
சிபி: ரோஸி
மணி: இதான் அவங்க பேரா?
சிபி: ஆமா, நல்ல இருக்குல்ல! வாசனையா?
ரோஸி: ஹேய் சிபி! குட் மார்னிங்...
சிபி: இது உங்களுக்காக!
ரோஸி: சோ ஸ்வீட்! சார் யாரு?
சிபி: இவன் மணி, என் ஃப்ரண்ட்.
மணி: என் பேர் ஏ. ஐ. மணிகண்டன். நான் சிக்ஸ்த் ஏ செக்ஷன்.
ரோஸி: என் பேர் ரோஸிலினா, காலேஜ்ல பீ.காம் படிக்கிறேன்.
மணி: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, சிபியை நீங்க லவ் பண்றீங்களா?
ரோஸி: ஆமா அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
[மணி ஓடுகிறான். சிபி துரத்துகிறான், ரோஸி சிரித்துக் கொண்டே உள்ளே போகிறாள்]

சிபி: டேய் மணி, நில்ரா..டேய் நில்லு
இருவரும் நிற்கிறார்கள். மூச்சு வாங்குகிறது..
சிபி: எப்படி?
மணி: இந்த கல்யாணம் நடக்காதுடா
சிபி: ஏன்?
மணி: அவ எவ்வளவு ஹைட்! நீ இத்துனூன்டு இருக்கே...
சிபி: நானும் ஹைட் ஆயிடுவேன்டா
மணி: கிழிப்பே
சிபி: இப்போ என்னடா செய்றது?
மணி: நீ சீக்கிரம் ஹைட் ஆகனும்
சிபி: அதுக்கு என்ன செய்யனும்?
மணி: எங்க அண்ணன் செம ஹைட்டுடா..அவன்கிட்ட கேப்போம்
சிபி: சரிடா.

மறுநாள்...

மணி: ஹைட்டா வளரணும்னா நிறைய ஸ்கிப்பிங் ஆடனுமாம், நிறைய எக்ஸர்சைஸ் பண்ணனுமாம். நிறைய பால் குடிக்கனுமாம்!
சிபி: அது பால் இல்லைடா! காம்ப்ளான், நான் தான் டெய்லி டூ டைம்ஸ் குடிக்கிறேனே!
[சிபி ஒரு முடிவுக்கு வருகிறான்]

சிபியின் கையில் புது ஸ்கிப்பிங் ரோப்! சிபி குதிக்கிறான்..விழுகிறான், எழுகிறான்! மணி உதவி செய்கிறான்.இரண்டு முறை குதித்து விட்டு தன் உடலை ஜான் போட்டு அளக்கிறான். மணி இவனை விட நன்றாய் ஸ்கிப்பிங் ஆட சிபி அவனை தடுத்து நிறுத்துகிறான்! அவனையும் ஜான் போட்டு அளக்கிறான்!

சிபி: வேணாம்! நீ பண்ணாதே
மணி: ஏன்டா?
சிபி: அப்புறம் நீ விட ஹைட் ஆயிட்டா?
[மணி பேயரைந்து நிற்கிறான்]

மறுநாள் ரோஜாவுடன் இருவரும் ரோஸி வீட்டுக்குச் செல்கின்றனர்! வாசலில் ரோஸி யாருடனோ பைக்கில் போகிறாள்! அவளுடைய அம்மா டாட்டா காட்டுகிறாள்!
சிபி: ரோஸி எங்க போறா?
அம்மா: அவ சினிமாக்கு போறா...சிபி, ரோஸி அக்காக்கு கல்யாணம்டா. உங்க அம்மாகிட்ட சொல்லு என்ன?
சிபி: யாரு கூட?
அம்மா: அந்த பைக்ல போறாரே அவர் கூட [உள்ளே போகிறார்]
மணியும் சிபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்!
மணி: நீ ஏன்டா அவங்க அம்மாகிட்ட சொல்லலை?
சிபி: என்னை பாக்கும் போது சிரிச்ச மாதிரி தான்டா அந்த பைக்ல போகும்போது சிரிச்சா!
மணி: இந்த பொண்ணுங்களே இப்படித் தான்டா! அவங்களை நம்பவே கூடாதாம்! எங்க அண்ணன் சொல்வான்!

சிபி கையிலிருக்கும் ரோஜாவை தூக்கி எறிகிறான்!
மணி ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டே வருகிறான். சிபி எதுவும் சொல்லாமல் நடக்கிறான்...
8 Responses
  1. Anonymous Says:

    inthe ponnughgale eppadhithaan da, avangalai nambhave koodhathaan,y u ppl always write against girls.Generally speaking, kadalpatri ezhudhina pengal thaan emathire madhiri oru image create panreenghe.. story is good,but it would have been excellent if the end was something in creative way...chinna vishayam ezhuthinaalum there should be some creativity appo thaan ppl mind ku reach aaghum..


  2. Sivakumar Says:

    Mmm yerkanave nee enakku padippatharkaga anupi iruntha (thirai) kathai. Keep writing!!!


  3. anony,

    achchco, ivvalavu seriousa eduthuteengale? eppavume vaaliba pasanga ponnungalai kurai soldrathe kettutu irukko, chumma oru subtle comedykaaga oru chinna payyan kaathal tholviyai unarra mathiri vachchen! mathapadi ponungalai kurai soldra ennam enakku illai!

    intha kathai ezhuthumbothu, chinna pasangalayum kaathal kathirikkainu kedukkuromenndra oru vishayam thaan enakku uruthiyathu...but i wanted to bring the innocence of child love. athaan ennai ezhutha thoondiyathu...

    //chinna vishayam ezhuthinaalum there should be some creativity appo thaan ppl mind ku reach aaghum//

    agreed....

    siva,

    ithai ellam comment pottiyila sollanuma? naane sarakku theernthu poi, thoosu thatti pazhasai ellam eduthuttu pottutu irukken! nee vera...chinna pulla thanama iruke...


  4. சின்னபசங்களோட கூத்தை வித்யாசமா காட்டிருக்கீங்க!

    நல்லாஇருக்கு!

    சொன்னா நம்பமாட்டேள்! ஒரு சின்னபையன் ஞாபகத்துல வந்துட்டான்! அவன் நானல்ல! (நான் அவனல்ல)


  5. siva,

    neriyya chinna pasanga vazhkayila intha mathiri nadakkalaamnu thaan thonuthu...


  6. Unknown Says:

    thalaiva...
    kadai nalla irruku... idhu unguloda valkhai varalaru illaye....


  7. Om Santhosh Says:

    காதல் சின்னபசங்களோட மனதில்தோன்ற ஆரம்பித்துவிட்டது இனி இந்த காதல் எல்லார் மனதில்லும் வியாதியாக வர போகிறது.
    நல்லா இருக்கு


  8. Thanks for your comments OM!