இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2, இங்கே 3

ச‌மீப‌த்தில் கேள்விப்பட்ட செய்தி ஒன்று. காத‌லித்த‌ இருவ‌ர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திரும‌ண‌ம் செய்து கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ‍ஹிமாச்ச‌ல‌ப் பிர‌தேச‌த்திற்கு ஓடி விட்ட‌ன‌ர்! கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌ கால‌த்திற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோர் அலைந்து திரிந்து அவர்களை கண்டு பிடித்து ஏன் இப்படி அவசரப்பட்டீர்கள், நாங்களே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்! அந்தப் பெண்ணோ வாயும் வயிறுமாக இருந்திருக்கிறார். மாப்பிள்ளையை ஹாலில் உட்கார வைத்து விட்டு அவளின் தகப்பனும் அண்ணனும் அந்தப் பெண்ணை வீட்டின் அடுத்த அறைக்கு கூட்டிச் சென்று கடப்பாரையால் குத்தி கொன்று விட்டனர்! சத்தம் கேட்டு ஓடி வந்த மாப்பிள்ளையை பார்த்து "ஒழுங்கா ஓடிப் போயிடு, இல்லை உன்னையும் கொன்றுவோம்" என்று மிரட்டி உள்ளனர். அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையின்ட் கொடுத்து விட்டார். போலீஸ் அவரை பிடித்ததும் பத்திரிக்கைக்காரர்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு அந்தத் தகப்பன் [இவரை தகப்பன் என்று சொல்லலாமா?] "அவளால் நான் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா? இப்போது தான் என் சாதி மக்கள் என்னைப் பார்த்து பெருமைபடுகிறார்கள்! இனிமேல் என் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணும் இத்தகைய காரியத்தை செய்யத் துணிய மாட்டாள்!" என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்! இவர்களை ஒரே வரியில் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிவிடலாம்! ஆனால் அது காட்டிமிராண்டிகளை கேவலப்படுத்துவதாகும்! ஒரு காட்டுமிராண்டி கூட வாயும் வயிறுமாய் இருக்கும் தன் சொந்த மகளை இவ்வளவு கொடூரமாக கொல்ல மாட்டான் என்றே தோன்றுகிறது...

காதல் திருமணங்கள்/கலப்புத் திருமணங்களைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் புரிதலும் அதைத் எதிர்த்து அவர்கள் புரியும் வாதங்களும் வலுவற்றதாகவே இருக்கின்றன! [பெண்ணைப் பெற்றவர்கள் பையன் நல்லவனாய் இருக்க வேண்டுமே என்று அஞ்சி அழுவதைத் தவிர!]
ஒரு பையன் தன் காதலை பெற்றோரிடம் சொன்னவுடன் அவர்கள் எடுத்தாளும் முதல் விஷயம் பாசம்! அவர்களின் பாசம் அந்தப் பையனுக்குப் புரிகிறது என்றாலும் அவனுக்கு இப்போது கிடைத்திருப்பது காதல் என்னும் ஒரு புதிய அனுபவம். என்ன தான் ஒரு பெற்றோர் பாசத்தைக் கொட்டி தன் பிள்ளையை/பெண்ணை வளர்த்தாலும், காதல் என்ற உணர்ச்சியை அவர்களால் கொடுக்க முடியாது! அதனால் பாசத்தை காதலுடன் ஒப்பிடுவது செல்லாது!

பெற்றோர்: நம் சாதி சனம் நம்மை ஒதுக்கி வைத்து விடும், நாம் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று ஒரு வாதம்.

காதலிப்போர்: இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நாம் யாருக்காக வாழ்கிறோம்? என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமையில்லையா? நான் ஏன் எப்போதும் அந்த நான்கு பேர் என்ன சொல்வார்கள் என்று அஞ்சி அஞ்சி வாழ வேண்டும்? அந்த நான்கு பேருக்கு வேறு வேலையே இல்லையா? நான் வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று எப்போதும் பேசிக் கொண்டிருப்பது தான் வேலையா? அப்படியே கேட்டாலும் பெற்றவர்கள் என் பிள்ளையின் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என்றால் அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய முடியும்? பிழைப்பின் காரணமாக ஏற்கனவே ஊர் மாறி, பேர் மாறி ஒதுங்கிப் போய்த் தான் திரிகிறோம், இதில் இவர்கள் சாதியை விட்டு ஒதுக்கி வைப்பதில் என்ன பெரிய வித்தியாசம்?

பெற்றோர்: நீ இப்படியெல்லாம் செய்தால் உன் பின்னால் இருப்பவர்களுக்கு எப்படித் திருமணம் நடக்கும்? உன் தங்கைக்கும் தம்பிக்கும் வேற்று சாதியிலேயே பார்க்க முடியுமா?

காதலிப்போர்: ஓ! பேஷா!! ஏற்கனவே வேற்று சாதியில் காதலிக்கும் பையனிடமும், பெண்ணிடமும் இப்படி ஒரு கேள்வி கேட்பதே தவறு! அவர்கள் அப்படித் தான் பதில் சொல்வார்கள்!

பெற்றோர்: உனக்கு வயசு பத்தாது. நீ இப்போ ஆசைப்பட்டு கட்டிக்கிறே, இதெல்லாம் நிலைக்காது. இதெல்லாம் சரிப்படாது. உனக்கு ஒரு நல்ல பெண்ணா/பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!

காதலிப்போர்: நீங்கள் எனக்கு பார்த்து கட்டி வைக்கும் பெண்ணுடன் நான் சந்தோஷமாய் வாழ்வேன் என்று என்ன நிச்சயம்? அவள் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் குடும்பத்திற்கு அடங்கி ஒடுங்கி இருப்பாள் என்று உங்களால் உத்தரவாதம் தர முடியுமா? நீங்கள் சொல்வது போல் நாளை இவளாலும் எனக்குப் பிரச்சனை வரலாம், ஆனால் அது நான் எடுத்த முடிவு என்ற திருப்தியாவது எனக்கு மிஞ்சும்! யார் மேலும் பழியை சுமத்தாமல் நானாக என் தலை விதியை நொந்து கொள்வேன்! [இதில் என்ன பிரச்சனை? அவன் இஷ்டம்; அவன் பாடு!]

பெற்றோர்கள் : சரி நாளைக்கு உன் பிள்ளைகளை எந்த சாதிப்படி வளர்ப்பாய்? யாருக்குக் கட்டிக் கொடுப்பாய்?

காதலிப்போர்: என் பிள்ளை யாரை விரும்புகிறதோ அவருக்கு!

சாதி தோன்றி மதம் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த நெறி காதல்!


ஒரு பையனோ பெண்ணோ, காதலில் விழும் வரை தான் [ஏன் விழும் வரை...எழும் வரை என்று வைத்துக் கொள்ளலாமே] அவர்கள் அவர்களுக்கு பூரணமாய் சொந்தம்! பிறகு ஃபிப்டி ஃபிப்டி தான்! அந்தக் காதலுக்கு அத்தனை சக்தி இருக்கிறது! என்ன செய்வது? ஊர்ல என்ன வேணா நடக்கலாம் என் மகன்/மகள் அப்படியில்லை, நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான்/ள் என்று நினைப்பதை பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும்!

என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழன் என்று வெறும் வாய்ச்சொல்லுடன் நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். முக்கியமாக பெண்ணை பெற்றவர்கள்! வீட்டில் எத்தனை பெற்றோர் வயதுக்கு வந்த பெண்ணிடம் காதலைப் பற்றி ஆரோக்கியமான விவாதங்களை நடத்துகிறார்கள்? முதலில் உங்கள் மகள் உங்களிடம் எதையும் மறைக்காத வண்ணம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுப் பேர்வழிகளைப் பற்றி டீ.வியிலோ, செய்தியிலோ பார்த்தால் அதைக் காட்டி அவளை எச்சரிக்க வேண்டும். தகுந்த நேரத்தில் ஒரு நல்ல வரனை அவள் அழைத்து வந்தால் சாதி மதம் என்ற பேதங்களை தகர்த்தெறிந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும்!

ஒரு காலத்தில் பெண்கள் அடுப்படியை விட்டு வெளியே வர முடியாத நிலையில், அப்படி வந்த ஒரு பெண்ணை தூற்றியவர்கள் எண்ணற்ற பேராய் இருந்திருப்பார்கள்! பெண்கள் படிக்கக் கூடாது என்ற காலத்தில் புத்தகத்தைத் தூக்கிய பெண்கள் பல அவமானங்களை சந்திருத்திருப்பார்கள்! பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்ற காலத்தில் முதலில் வேலைக்குப் போன பெண்கள் கூனிக் குறுகித் தான் போயிருப்பார்கள்! முதன் முதலாய் தன் துணையை தானே தேடிக் கொண்ட பெண்ணை எல்லோரும் வேசி என்று தான் சொல்லியிருப்பார்கள்! இன்றும் அப்படிச் செய்யும் பெண்களை சில பெற்றோர் அப்படித் தான் சொல்கிறார்கள்! எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் உடைக்கப் பட வேண்டிய நேரத்தில் உடைபட்டே தீரும்!

"புதிய வார்ப்புகள்" என்ற கதையில் ஜெயகாந்தன் கதையின் முடிவில் இதை அருமையாகச் சொல்லி முடிக்கிறார்!

மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம் தான் அவனப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்.

வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா அல்லது இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா?

டாக்டர் வந்தபின் தெரியும்!

(போறும்!)
5 Responses
  1. Anonymous Says:

    i have argued with my parents with exactly same points.(believe me; just for fun :)) though)

    i just feel like, as if you were writing (stealing) my mind

    Guru


  2. guru,

    same blood! i have also argued with my parents.


  3. Pradeep, Good arguments. Have you convinced your parents?. I hope your parents are forward minded like you. Many parents (including me) are very forward minded.

    In our family we have good inter-caste, inter-religion, inter-state and inter-nations marriages.Those families are very happily living together.


  4. Anonymous Says:

    Dont blame only parents.kadhaluku kadhalargal thaan ethiri.kadhlikum pothu irukire guts,problems face panre pothu irupadhilai.enaku terindhe oru penn oruthrai manadhala kadhalithal,anru avaludhaiya petror aval kadhalai edhirtaar.avalveru yaraiyum kalyanam seithu kolla mathen enru inru varai orithiyodhu irukiraal.eppoluthu avuludhaiya parents aval kadhalai etrukolla tayar aagha irukirar,but her lover has got married with someother girl.eppo sollunghe yarai kutram solvadhu petroraiya alladhu kadhalargalaiya?


  5. siva,

    i am always trying to convience them. they are still in dilamma...50 valayurathu kashtam thaane?

    anony,

    athuvum samoogathin kutram thaan. annanukku kalyanam aana thaan tambikku kalyanam aaganumnu nenaikiraanga....antha nilai maaranum. antha mathiri dependency aala thaan intha mathiri ellam nadakkuthunnu naan nenaikiren....